இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, March 06, 2015

ஜாக்டோவுக்கு போட்டியாக ஜாக்டா

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, 'ஜாக்டோ' ஆசிரியர் அமைப்பினர், அறிவித்துள்ள நிலையில், 'ஜாக்டா' அமைப்பினர், முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில், மனு கொடுத்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, ஆறாவது சம்பளக் கமிஷன்படி, ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட, 15 கோரிக்கைகளை, நிறைவேற்றக்கோரி, 8ம் தேதி முதல் போராட்டம் நடத்தப் போவதாக, 'ஜாக்டோ' அமைப்பு அறிவித்துள்ளது.

'ஜாக்டோ' அமைப்பு, 28 ஆசிரியர் சங்கங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக, அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்நிலையில், 18 ஆசிரியர் சங்கங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும், தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான - ஜாக்டா அமைப்பு சார்பில், முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில், தனியே மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, மத்திய அரசில் பணிபுரியும், இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் போல், தமிழக அரசின் கீழ் பணிபுரியும், இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை, நடைமுறைப்படுத்திட வேண்டும். தொகுப்பூதிய அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்ட, அனைத்து நிலை ஆசிரியர்களையும், பணிவரன்முறை செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட, ஐந்து அம்ச கோரிக்கைகளை, மனுவில் குறிப்பிட்டுள்ளனர். 'கோரிக்கை தொடர்பாக, நல்ல முடிவை அரசிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். எங்கள் அமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கைக்கான கூட்டம், வரும் 22ம் தேதி, சென்னையில் நடைபெறும்' என, அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Department exam december 2014 results


Click below

http://tnpsc.gov.in/Resultget-dec2k14.html

Wednesday, March 04, 2015

மாணவர்கள் ஆதார் எண் சேகரிப்பு

கல்வி உதவித்தொகை, சீருடை, லேப் - டாப் போன்ற அரசின் நலத்திட்டங்கள் வழங்குவதில் ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்க, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின், ஆதார் எண்ணை சேகரிக்கும் பணியை, பள்ளிக்கல்வித் துறை துவங்கி உள்ளது.
மத்திய, மாநில அரசு கள் மூலம், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் இலவச பொருட்கள் வழங்கப்படுகின்றன.

ஆனால், மாணவர்களின் மொத்த எண்ணிக்கையும், நலத்திட்டங்கள் பெறுபவர்களின் எண்ணிக்கையும், பல நேரங்களில் முரண்படுகின்றன. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் வந்தபின், எட்டாம் வகுப்பு வரை, மாணவர் மாற்றுச் சான்றிதழ் இல்லாமல், வேறு பள்ளி களில் சேரும் நிலை உள்ளது. இதனால், கிராமப்புறப் பள்ளி மாணவர்களில் பலர், வேறு ஊருக்கு குடும்பத்துடன் செல்லும் போது, அவர்கள் ஏற்கனவே படித்த பள்ளிக்கு தகவல் தெரிவிக்காமல், வேறு பள்ளியில் சேர்ந்து விடுகின்றனர். முந்தைய பள்ளியில், அந்த மாணவரின் பெயர் நீக்கப்படாமல், 'ஆப்சென்ட்' அல்லது இடைநிற்றலாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால், அரசின் திட்டங்களைத் திட்டமிடுவதில், பள்ளிக்கல்வித் துறைக்கு பல குழப்பங்கள் ஏற்பட்டு உள்ளன. இதை கருத்தில் கொண்டு, பள்ளிக்கல்வித் துறை சார்பில், மாணவர்களின் ஆதார் எண்களை, பள்ளி யின் பதிவேடுகளில் இணைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த திட்டம், உலக வங்கி நிதியுதவியுடன், 'கல்வி மேலாண்மை மற்றும் தகவல் அமைப்பு' என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில், மாணவர் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, ஊர், தாலுகா, மாவட்டம், தொடக்கக் கல்வி அல்லது ஏற்கனவே படித்த பள்ளி, தற்போது படிக்கும் பள்ளி, வகுப்பு ஆகிய விவரங்களுடன், மாணவனின் ஆதார் எண்ணும் இணைத்து, கணினியில் பதிவு செய்யப்படுகிறது. இதன் மூலம், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் மாணவர் பெயர் இருப்பதை, தனி மென்பொருள் மூலம் கண்டுபிடித்து நீக்கி விட முடியும்.

மாணவர் நலத்திட்டங்கள் என்ன?

* 1 - 10ம் வகுப்பு வரை சத்துணவு, இலவச காலணி

* ஒன்றாம் வகுப்புக்கு இலவச சிலேட்

* பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்

* சத்துணவுத் திட்ட மாணவர்களுக்கு, 1 - 8ம் வகுப்பு வரை இலவச புத்தகம்

* எட்டாம் வகுப்பு வரை இலவச சீருடை

* பிளஸ் 1, பிளஸ் 2 பட்டியலின மாணவியருக்கு இலவச சைக்கிள்

* இடைநிற்றல் மாணவர்களுக்கு, பள்ளிமுறை இல்லாக் கல்வி

* பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கு இலவச லேப் - டாப்

* பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை

* மலைப் பகுதி மாணவர்களுக்கு ஸ்வெட்டர்

* 1 - 10ம் வகுப்பு வரை இலவச நோட்டுப் புத்தகம்

* பிளஸ் 2 வரை புத்தகப்பை, ஜாமெட்ரி பெட்டி, கலர் பென்சில், மெழுகு பென்சில், உலக வரைபடப் புத்தகம்.

குரூப் -2 மெயின் தேர்வு முடிவுகள் அடுத்த வாரம் வெளியீடு

குரூப்–2 மெயின்தேர்வு முடிவு குருப்–2 (நேர்முகத்தேர்வு கொண்டது) தேர்வு வணிகவரி துணை அதிகாரி, சப்–ரிஜிஸ்டர் –நிலை 2, உதவி தொழிலாளர் நல உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, உதவி பிரிவு அதிகாரி, சிறப்பு உதவியாளர், ஆடிட் ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய்த்துறை உதவியாளர் உள்ளிட்ட 18 வகையான பதவிகளில் காலியாக உள்ள 1064 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டது.

அதன் முடிவு வெளியிடப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின்தேர்வை கடந்த நவம்பர் மாதம் எழுதினார்கள். மெயின்தேர்வு முடிவுவெளியிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன எப்படியும் ஒருவாரம் அல்லது அடுத்த வாரத்திற்குள் முடிவு வெளியிடப்படும். பிறகு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

45 நாட்களில் வெளியீடு குரூப் 4– தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 22–ந்தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 10 லட்சத்து 50ஆயிரம் பேர் எழுதினார்கள்.

தற்போது விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி நடந்துவருகிறது. முடிவு வெளியிட 45 நாட்கள் ஆகும். இவ்வாறு சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

SSLC&ப்ளஸ் 2 தேர்வுகள் குறித்து புகார் தெரிவிக்க

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வுகள் குறித்து புகார் மற்றும் கருத்துக்களை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்க காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை 12 மணிநேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது என்று அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:– தேர்வுக் கட்டுப்பாட்டு அறை இன்று (வியாழக்கிழமை) முதல் நடைபெறவுள்ள பிளஸ்–2 தேர்வுகள் மற்றும் 19–ந் தேதி முதல் நடைபெறவுள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடர்பாக பொதுமக்கள், மாணவர்கள் தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும் சந்தேகங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்கத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வுக் காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறை செயல்படுமென தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. 4 செல்போன் நம்பர்கள் பொதுமக்கள், மாணவர்கள் தங்களது புகார்கள் மற்றும் கருத்துக்களை, அரசுத் தேர்வுகள் துறை கட்டுப்பாட்டு அறையினை கீழ்க்காணும் தொலைபேசி எண்களில் தெரிவித்து, தொடர்பு கொண்டு பயன்பெறலாம். தேர்வுக் கட்டுப்பாட்டு அறை – தொடர்பு கொள்ள செல்போன் நம்பர்கள் 8012594101, 8012594116, 8012594120, 8012594125 இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NRDW&SW campaign form

Click below

https://app.box.com/s/bpogoef0x30gae0qj27495q0pdo797jl

NRDW&SW campaign corporation form

Click below

https://app.box.com/s/2kfewz6o1p2vm7vdx6urwhzquwhvwc4i

Tuesday, March 03, 2015

ஆதார் விபரத்தை தெரிவிக்க

ஆதார் விவரத்தைத் தெரிவிக்க... ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பதற்கு வசதியாக, ஆதார் எண்ணைத் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.

அதேசமயம், ஆதார் எண் இருந்தால்தான் வாக்களிக்க முடியும் என்பது கட்டாயமில்லை. ஆதார் எண்ணை தேர்தல் ஆணைய இணையதளத்தின் மூலமும், 51969 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும், மின்னஞ்சல், செல்லிடப்பேசி அப்ளிகேஷன், 1950 என்ற எண்ணுக்கு தொலைபேசி வழியாகவும் தெரிவிக்கலாம். மேலும், சிறப்பு முகாம்களில் அளிக்கப்படும் தனியான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தும் கொடுக்கலாம் என சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

ஆதார் இல்லாவிட்டால்... வாக்காளர் பட்டியலை பிழையின்றி செம்மைப்படுத்தவே ஆதார் விவரங்களைப் பெற்று வாக்காளர் பட்டியலில் இணைக்கும் முயற்சியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அதேசமயம், ஆதார் எண் இருந்தால்தான் வாக்களிக்க முடியும் என்று கட்டாயப்படுத்தவில்லை எனவும் விளக்கமளித்துள்ளது. வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி, விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டத்தின் கீழ், வாக்காளர்கள் அனைவரும் ஆதார் எண்ணைக் குறிப்பிட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது:

தமிழகத்தில் 50 சதவீதம் பேர் ஆதார் எண்ணைப் பெற்றுள்ளனர். எனவே, அந்த விவரங்களை தேர்தல் ஆணையம் பெற்று அப்படியே சேர்த்துக் கொள்ளும். அதேசமயம், மற்றவர்களும் ஆதார் எண்ணைப் பெறுவதற்கு ஊக்குவிக்கப்படுவர். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியுடன் இந்தப் பணியையும் ஒருங்கிணைத்துச் செயல்பட மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஆதார் இல்லாவிட்டாலும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பெரும்பாலான மக்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த விவரங்களைப் பெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.

VOTERS camp

பிழையில்லாத வாக்காளர் பட்டியல் திட்டம்: 4 நாட்கள் முகாம் நடைபெறுகிறது

பிழையில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் திட்டத்திற்கான முகாம்கள் ஏப்ரல் 12 மற்றும் 26, மே 10 மற்றும் 24 ஆகிய 4 தேதிகளில் நடைபெறும் என மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

இந்த பணிகள் தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் குறிப்பிடப்பட்ட 4 ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் எனவும் அவர் கூறினார்.

Monday, March 02, 2015

மார்ச் மாத குறுவள மையப்பயிற்சி 14-3-2015

ஆங்கில வழிக்கல்வி முடங்கும் அபாயம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை தொடந்தால், வரும் கல்வியாண்டில், ஆங்கில வழிக்கல்வி முறை முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தல்; பள்ளிகள் மீது பெற்றோருக்கு ஆர்வம் உண்டாக்குதல்; கல்வித்தரத்தை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, ஆங்கில வழிக்கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்துக்கு, துவக்கப்பள்ளிகளில் நல்ல வரவேற்பு கிடைத்தது.கடந்தாண்டு, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனால், மாணவர் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால், இம்முறையை வெற்றிகரமாக செயல்படுத்த, ஆசிரியர்கள் கூடுதலாக தேவை என்ற கோரிக்கைக்கு கல்வித்துறை தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், இக்கல்வி முறையை செயல்படுத்துவதில் ஆசிரியர்கள் மத்தியில் ஆர்வம் குறையும் நிலை உருவாகியுள்ளது.

ஆங்கில வழியில் பாடம் நடத்த, ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இருப்பினும், அனைத்து பாடங்களையும், இரண்டு மொழிகளிலும் எடுக்க வேண்டிய கட்டாயத்தால் குழப்பம் அடைகின்றனர். தவிர, சில பள்ளிகளில், ஆங்கில வழி பாடத்தையும் தமிழில் நடத்தி விடுகின்றனர். இதனால், பெயரளவில் மட்டுமே ஆங்கில வழி கல்வி கற்பிக்கப்படுவதாக கூறப்படுகிறது.ஆங்கில வழிக்கல்வியை சிறப்பாக செயல்படுத்தும் பல பள்ளிகளும், ஆசிரியர் பற்றாக்குறையால், பாதிக்கப்பட்டு வரு கின்றன. அதனால், வரும் கல்வியாண்டில், ஆங்கில கல்வி முறையை செயல்படுத்த, திட்டமிட்ட பள்ளி நிர்வாகத்தினர், தற்போது தயக்கம் காட்டுகின்றனர்.

கல்வி ஆர்வலர்கள் கூறுகையில், "அரசு பள்ளி மாணவர்கள் பயனடைய வேண்டும் என்ற எண்ணத்தால், ஆங்கில கல்வி முறை வரவேற்கப்பட்டது. அளிக்கப்பட்ட சிறப்பு பயிற்சியை மட்டுமே கொண்டு, ஆசிரியர்கள் பாடம் நடத்துவதால், மாணவர்களுக்கு முழுமையான ஆங்கிலத்திறன் கிடைப்பதில்லை. வரும் கல்வியாண்டிலும், ஆங்கில வழி கல்விக்கு கூடுதல் ஆசிரியர் நியமிக்காவிட்டால், அத்திட்டம் முடங்குவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது,' என்றனர்.

TNPSC department exam.may 2015

Click below

http://tnpsconline.tn.nic.in/

Sunday, March 01, 2015

ப்ளஸ் 2 தேர்வு அறைகளில் நாற்காலி கிடையாது

'பிளஸ் 2 பொதுத் தேர்வில், கண்காணிப்பில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வு நடக்கும், மூன்று மணி நேரமும், உட்காராமல் நின்று கொண்டே இருக்க வேண்டும்; தேர்வு அறையில், நாற்காலி போடக்கூடாது' என, தேர்வுத் துறை இயக்குனரகம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

5ம் தேதி:பிளஸ் 2 பொதுத் தேர்வு வரும், 5ம் தேதி துவங்குகிறது. காலை, 10:00 மணிக்குத் தேர்வு துவங்கி, பிற்பகல், 1:15 மணிக்கு முடிகிறது.

* முதல், 10 நிமிடங்கள் வினாத்தாளை வாசித்து பார்க்கலாம்.

* அடுத்த, ஐந்து நிமிடங்கள் மாணவர் தேர்வு எண் உள்ளிட்ட விவரங்களை கண்காணிப்பாளர் சரிபார்க்கலாம்.

* காலை, 10:15 மணி முதல் 1:15 மணி வரை தேர்வு நடக்கும்.

* மாணவர்களுக்கு சாதகமாக, தேர்வு அறை கண்காணிப்பாளர் அவர்களை காப்பிஅடிக்கவோ, 'பிட்' அடிக்கவோ உதவாத வகையில், பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் படி,

* இந்த ஆண்டு தேர்வு அறைக் கண்காணிப்பாளருக்கு தேர்வு அறையில், நாற்காலி போடக் கூடாது.

* தேர்வு அறையில், மாணவர்களின், 'பெஞ்சில்' கூட கண்காணிப்பாளர் அமரக் கூடாது.

* தேர்வு துவங்கும், 10:00 மணி முதல் தேர்வு முடியும், 1:15 மணி வரை கண்காணிப் பாளர் நின்று கொண்டோ, தேர்வு அறையில் நடமாடிக் கொண்டோ, விழிப்புடன் இருக்க வேண்டும்.

* மாணவரிடமோ, அரு கில் உள்ள தேர்வு அறைக் கண்காணிப்பாளரிடமோ அனாவசியமாக பேசவோ, கலந்துரையாடவோ கூடாது.

* மொபைல் போன் உள்ளிட்ட எந்தவித மின்னணு சாதனத்தை யும் தேர்வு அறைக்குள் கொண்டு வரக் கூடாது.

* மாணவர்களிடம் தேவை யின்றி பேசுவதோ, வாக்குவாதம் செய்வதோ கூடாது.

* கண்காணிப்பாளராக பணி யாற்றும் ஆசிரியர் தன் மொபைல் போனை, தலைமை ஆசிரியர் அல்லது தேர்வு மையத் தலைமைக் கண்காணிப்பாளரிடம் கொடுத்து விட்டுத்தான் தேர்வு அறைக்குள் வர வேண்டும்.

* தேர்வு மையம் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர், அந்தப் பள்ளி யில், தேர்வு நாளில் பணியாற்றக் கூடாது. அதிரடி மாற்றம்:இவ்வாறு, தேர்வுத் துறை இயக்குனரகம் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்துள்ளது. பள்ளித் தலைமை ஆசிரியர்கள், தேர்வுத் துறை இயக்குனரக உத்தரவுப்படி, வேறு மண்டலத்துக்கோ, மாவட்டங்களுக்கோ தேர்வுப் பணிக்கு அனுப்பப்பட உள்ளனர் என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

துறைத்தேர்வு அறிவிக்கை

தமிழக அரசு துறைத்தேர்வுகள் மே-2015 க்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசுப் பணியாளர்களுக்கான மே 2015 துறைத் தேர்வுகளுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.

அறிவிக்கை நாள் : 1.03.2015

விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.3.2015.

மேலும் விவரங்களுக்கு :
www.tnpsc.gov.in
இணைய தளத்தைப் பார்க்கவும். www. tnpsc.gov.in

Saturday, February 28, 2015

பட்ஜெட்டில் வரி விலக்கு

4,44,200 ரூபாய்க்கு வருமான வரி சலுகை பெறுவது எப்படி?


சேமிப்பு மற்றும் மருத்துவ காப்பீட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்த பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு பல வித வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. மருத்துவ காப்பீடு பிரிமீயத்துக்கான வரி விலக்கு வரம்பு ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மருத்துவ காப்பீடு எடுக்க அனுமதி இல்லை. ஆனால், அவர்களின் மருத்துவ செலவுக்கு ரூ.30 ஆயிரம் வரை வரிவிலக்கு பெற அனுமதிக்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு சில குறிப்பிட்ட நோய்களின் மருத்துவ செலவுக்கான வரி விலக்கு ரூ.60 ஆயிரத்திலிருந்து ரூ.80 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சுகன்ய சம்ரிதி திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் வரி செலுத்தத் தேவையில்லை. பென்ஷன் நிதி திட்டம், புது பென்ஷன் திட்டம் ஆகியவற்றில் 80சிசிடி பிரிவின் கீழ் வரிவிலக்குக்கான வரம்பு ஸி1 லட்சத்திலிருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

வரிவிலக்கு விவரங்கள்:
80சி பிரிவின் கீழ் விலக்கு
(காப்பீடு, மியூச்சுவல் பண்ட் மற்றும் பிஎப் முதலீடுகள்)  ரூ.1,50,000
   
80சிசிடி பிரிவின் கீழ் விலக்கு
(பென்ஷன் திட்ட முதலீடு)    ரூ.50,000

வீட்டு கடன் வட்டிக்கான விலக்கு    ரூ.2,00,000

மருத்துவ காப்பீடு பிரீமியத்துக்கு
80டி பிரிவின் கீழ் விலக்கு    ரூ.25,000

போக்குவரத்து படிக்கான விலக்கு    ரூ.19,200

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள்

வாக்காளர்கள் தங்களது கூடுதல் விவரங்களைச் சேர்க்கவும், சரிசெய்யவும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி:

இந்திய தேர்தல் ஆணையம் தேசிய அளவில் "போலிகளே இல்லாத வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் திட்டத்தை' வரும் மார்ச் 3-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன்படி வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர்கள் இடம்பெற்றுள்ளவர்கள் தானாக முன்வந்து அதை நீக்கவும், வாக்காளரின் விவரங்களில் திருத்தம் செய்யவும், ஆதார் எண், செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவற்றைப் பெறுவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக வரும் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை ஒவ்வொரு மாதமும் ஒரு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் உள்ள வாக்காளர்கள் தங்கள் பெயரை நீக்க படிவம் 7-யும், வாக்காளர் விவரங்களில் திருத்தம், ஆதார் எண் உள்ளிட்டவற்றைச் சேர்க்க படிவம் 8-யும் சமர்ப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணியை மேற்கொள்ளும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் ஆகியோர் இந்த படிவங்களைப் பெற்று, கள ஆய்வு செய்தபின் 15 நாள்களுக்குள் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும். எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களது சரியான விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கற்றல் அடைவுத்தேர்வில் 35% பேர் தேர்ச்சி

கற்றல் அடைவுத்திறன் தேர்வில், வெறும் 35 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என, அரசு நிர்பந்தம் செய்வது, நடைமுறை ரீதியாக சாத்தியமானதா என, கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2012ல், அடிப்படை திறன்களான எழுதுதல், படித்தல் ஆகிய அறிவை சோதிக்கும் வகையில், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு (தற்போது 10ம் வகுப்பு) நடத்திய அடைவுத்திறன் தேர்வில், வெறும், 35 சதவீத மாணவ, மாணவியர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்த மாணவர்கள், விரைவில் துவங்க உள்ள பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என அரசும், அதிகாரிகளும் கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை. இதுகுறித்து, அரசுப்பள்ளி ஆசிரியர் கூறியதாவது:

அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில், 2012ம் ஆண்டில், 8ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, மாநில அளவிலான கற்றல் அடைவுத் தேர்வு நடத்தப்பட்டது. ஒன்றியத்துக்கு, 10 பள்ளிகள் வீதம், 'ரேண்டம்' முறையில், தேர்வு செய்யப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டது.

* இதில், தமிழ் பாடத்தில், 61 சதவீதம், ஆங்கில பாடத்தில், 39 சதவீதம், கணிதப்பாடத்தில், 35 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

* அடிப்படை திறன்களான எழுதுதல், படித்தல், அடிப்படை கணிதத்திறன் ஆகியவை கூட தெரியாமல், கிட்டத்தட்ட, 65 சதவீத மாணவர்கள் இருந்துள்ளதை, அரசே ஒப்புக்கொண்டுள்ளது.

* எட்டாம் வகுப்பு வரை எழுதப்படிக்கக்கூட தெரியாமல், பள்ளிக்கு வந்த மாணவர்கள் தான், தற்போது, 10ம் வகுப்பு தேர்வை எதிர்கொள்ள உள்ளனர்.

* இதில் உள்ள நடைமுறை சிக்கல்களை அரசும், அதிகாரிகளும் உணர்வதில்லை.

* இன்று அரசு பள்ளிகளில், மாணவர்கள் தான், ஆசிரியர்களை மிரட்டும் நிலையில் உள்ளனர். இந்த நிலையில், அவர்களை தேர்வுக்கு தயார்படுத்துவதில், சிறிது பிசகினாலும், அவர்கள் பள்ளியிலிருந்து நின்றுவிட வாய்ப்புள்ளது.

* எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்பித்தும், அவர்களுக்கு, தமிழ், ஆங்கிலம், கணிதப் பாடங்களில், அடிப்படை திறன்களை கற்றுக்கொடுக்காத, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு எவ்வித கெடுபிடியும் இல்லை.

* ஆனால், அடுத்த இரண்டு ஆண்டுகளில், நாங்கள் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என கூறுகின்றனர். தவறினால், ஆசிரியர் மீது நடவடிக்கை பாய்கிறது.

* இதனால், மாணவர்களுக்கு புரியும் வகையில், பாடம் நடத்த வேண்டும் என்ற நிலை மாறி, மனப்பாடம் செய்ய வைத்து, தேர்ச்சி பெற்றுவிட்டால் போதும் என்ற போக்கில், பாடம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. * தேர்ச்சி சதவீதம் அதிகரித்தால் தான், கல்வித்தரம் அதிகரிக்கும் என்ற மனப்போக்கை, அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அதிகாரிகளும் பின்பற்ற ஆரம்பித்திருப்பது வேதனையாக உள்ளது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.