இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, February 25, 2015

சுற்றுலா செல்வது குறித்து செயல்முறைகள்

ரயில்வே பட்ஜெட்

பயணிகள் கட்டணம் உயரவில்லை; ரயில்வே பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

2015 - 16 ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை நாடாளுமன்ற மக்களவையில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தற்போது தாக்கல் செய்து, புதிய ரயில், பயணிகளுக்கான புதிய வசதிகள், திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றி வருகிறார்.

பட்ஜெட்டில் பயணிகள் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்:

* நாட்டின் சமூக - பொருளாதார வளர்ச்சியில் ரயில்வே மிகப்பெரிய பங்காற்றுகிறது. ரயில்வே துறையில் செய்யப்படும் முதலீடுகள் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும்.

*  ரயில் பாதை அகலமாக்கல் மின்மயமாக்கல் அதிகரிக்கப்படும்

*  ரயில்வே துறையில் கட்டுமானம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக கட்டுமானப் பணிகள் பல முடங்கிக் கிடக்கின்றன .

* ஏற்கெனவே உள்ள வழித் தடங்களில் கூடுதல் ரயில்கள்  இயக்கப்படும்.

* ராஜ்தானி சதாப்தி போன்ற விரைவு ரயில்கள்  அதிகம் தேவை.

* சரக்கு ரயில் போக்குவரத்தை அதிகரிக்க நடவடிக்கை.

கட்டண உயர்வில்லை

* பயணிகள் கட்டணத்தில் மாற்றமில்லை.

* அடுத்த 5 ஆண்டுகளுக்கு 4 அம்ச இலக்குகள்.

* கூடுதல் முதலீடுகளால் வேலை வாய்ப்புகள் பெருகும்.

* 8.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெற திட்டம்.

பசுமை கழிவறைகள்

* ரயில் மற்றும் ரயில் நிலையங்களின் தூய்மைக்கென தனி துறை உருவாக்கம்.

* 650 ரயில் நிலையங்களில் புதிய பசுமை கழிவறைகள்.

* 17 ஆயிரம் கழிப்பறைகள் சீரமைப்பு

குறைகளை தீர்க்க மொபைல் அப்ளிகேசன்ஸ்

* 24 மணிநேரமும் செயல்படும் குறை தீர் மையங்கள்.

*  நாடு முழுமைக்கும் ரயில்வே உதவி எண் 138

* மார்ச்-1 முதல் குறைகளை தீர்க்க மொபைல் அப்ளிகேசன்ஸ்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியீடு

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 1,700-க்கும் அதிகமானோர் அடங்கிய தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்டது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

. 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு கடந்த ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 1,90,922 பேர் எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் பிப்ரவரி 6-ஆம் தேதி வெளியிடப்பட்டன. போட்டித் தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 1:1 என்ற அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு விழுப்புரம், சேலம், மதுரை ஆகிய இடங்களில் பிப்ரவரி 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

போட்டித் தேர்வு மதிப்பெண், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு மதிப்பெண், பணி அனுபவத்துக்கான மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகியிருந்தால் அதிகபட்சமாக 4 மதிப்பெண்ணும், 5 ஆண்டுகளுக்கு அதிகமாக பணி அனுபவம் இருந்தால் அதிகபட்சமாக 3 மதிப்பெண்ணும் வழங்கப்பட்டது. இதில் உடற்கல்வி இயக்குநர் அளவிலான 27 பணியிடங்களுக்கு மட்டும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.

தமிழகத்தில் 500 பள்ளிகளில் ரோபாடிக்ஸ் கல்வி

மத்திய அரசு நிறுவனமான இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் சென்னையைச் சேர்ந்த டெக் விஸார்ட் நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தில் 500 பள்ளிகளில் ரோபாடிக்ஸ் கல்வியை 2015-16-ஆம் கல்வியாண்டில் அறிமுகம் செய்ய உள்ளது.

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நிறுவனங்களிடையே மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சிக்குப் பின்னர் டெக் விஸார்ட் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி பால் வின்ஸ்டன் கூறியதாவது: வளர்ந்து வரும் ரோபாடிக்ஸ் துறையில் இந்திய இளைஞர்களும் சிறந்த விளங்கும் வகையில், இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள 500 பள்ளிகளில் ரோபாடிக்ஸ் கல்வி வரும் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான பாடத் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 20 தலைப்புகள் வீதம் 6 ஆண்டுகள் படிக்கக் கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

6 முதல் 16 வயது வரை உள்ள மாணவர்களுக்கு ஏற்றதாக இது இருக்கும். இந்தப் பயிற்சியில் முதல் 4 ஆண்டுகள் முடிவில் இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற இளநிலை டிப்ளமோ சான்றிதழ் வழங்கப்படும். மேலும், 6 ஆண்டுகள் முடிவில் பயிற்சியில் சிறந்த முறையில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு முதுநிலை டிப்ளமோ சான்றிதழ் வழங்கப்படும். இதற்காக திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதோடு, மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சியும், புதிய கண்டுபிடிப்புகளுக்கான முயற்சிக்கும் ஊக்கம் அளிக்கப்படும். இந்தத் திட்டம் மாணவர்களிடையே தொழில்நுட்ப அறிவைத் தூண்டுவதோடு, அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வித்திடுவதாக அமையும் என்றார்.

ஜாக்டோ ஆசிரியர் குழுவுடன் முதல்வர் பேச மறுப்பு

பள்ளி ஆசிரியர்களின், 15 ஆண்டுகால கோரிக்கை குறித்து, பேச்சு நடத்த அழைக்கப்பட்ட, 'ஜாக்டோ' ஆசிரியர் குழு, முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், நான்கு மணி நேரம் காத்திருந்த ஆசிரியர் குழுவினர், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

15 கோரிக்கைகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, ஆறாவது சம்பளக் கமிஷன் படி ஆசிரியர்களுக்கு ஊதியம்; 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை ஊதியத்துடன் வழங்குதல்; தன் பங்களிப்பு ஓய்வூதியம் ரத்து; தமிழை முதல் பாடமாக்க அரசாணை உள்ளிட்ட, 15 கோரிக்கைகள், ஆசிரியர் சங்கங்கள் சார்பில் எழுப்பப்பட்டுள்ளன. இதற்காக, 28 ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, 'ஜாக்டோ' கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு சார்பில் மார்ச், 8ம் தேதி மாவட்டங்களில் பேரணி, தொடர் போராட்டத்துக்கு முடிவானது. இதையறிந்து, முதல்வருடன் பேச்சு நடத்த வருமாறு, 'ஜாக்டோ' குழுவுக்கு அரசு அழைப்பு விடுத்தது. நேற்று காலை, 10:30 மணிக்கு முதல்வரை சந்திக்க, 'ஜாக்டோ' குழுவினர் தலைமைச் செயலகம் வந்தனர்.

முதலில், போலீசார் அவர்களை அனுமதிக்கவில்லை. பின், தனித்தனியாக பெயர் மற்றும் மொபைல் போன் எண்ணைப் பதிவு செய்து, தலைமைச் செயலகத்திற்குள் அனுமதித்தனர். முதல்வர் அறைக்கு அருகில், 15 பேர் கொண்ட குழு காத்து நின்றது. அவர்களின் மொபைல் போன்கள் தனியாக வாங்கி வைக்கப்பட்டன. ஆனாலும், நீண்ட நேரமாக முதல்வர் அலுவலகத்தில் இருந்து ஆசிரியர்களுக்கு அழைப்பு வரவில்லை; அமர இருக்கைகளும் இல்லை.

தகவல் இல்லை: ஒரே ஒரு நாற்காலி மட்டும் இருந்தது. அதில், மூத்த நிர்வாகி மட்டும் காத்திருந்தார்; மற்றவர்கள் நின்றனர். மூன்று மணி நேரம் கடந்த பின்னும், முதல்வர் அலுவலகத்தில் இருந்து எந்த தகவலும் வராததால், ஆசிரியர் சங்கத்தினர் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பினர். பின்னர், 'ஜாக்டோ' குழுவினர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் கூடி, ஆலோசனை நடத்தினர். அரசே அழைத்துவிட்டு, நீண்ட காத்திருப்புக்குப் பின், திருப்பி அனுப்பியது, ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டம் திட்டமிட்டபடி தொடரவும், மார்ச் 8ம் தேதி, மாவட்ட வாரியாக பேரணி நடத்தவும் முடிவெடுத்துள்ளோம் சத்தியமூர்த்தி, மாநிலப் பொதுச் செயலர், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் அரசு அழைப்பு விடுத்தது. ஆனால், பேச்சு நடக்கவில்லை. திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும். மீண்டும், அரசு அழைத்தால் பேச்சு நடத்த வருவோம்.

மொழிப்பாடத் தேர்வில் முதல் இரு பக்கங்கள் எழுதப்பட கூடாது

வரும் மார்ச், 5ம் தேதியில் இருந்து, பிளஸ் 2 தேர்வும், மார்ச், 19ம் தேதியில் இருந்து, பத்தாம் வகுப்பு தேர்வும் நடக்கிறது. இதையொட்டி, மாணவ, மாணவியரும், ஆசிரியர்களும் கடைபிடிக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்து, தேர்வுத்துறை, அவ்வப்போது சுற்றறிக்கை அனுப்புகிறது. அதன்படி சமீபத்திய சுற்றறிக்கை:

பத்தாம் வகுப்பு தமிழ் முதல்தாள், ஆங்கிலம் முதல் தாள் தேர்வுகளின்போது, முதல் இரண்டு பக்கங்களை பயன்படுத்தாமல் தவிர்க்க வேண்டும். விடைத்தாளின் எந்தவொரு பகுதியிலும், தேர்வு எண்ணையோ, பெயரையோ கண்டிப்பாக எழுதக்கூடாது. தேர்வின்போது, 'ரப் வொர்க்' செய்வதற்கு, விடைத்தாளின் அடிப்பகுதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். விடைத்தாளின் வலது பக்க ஓர பகுதியை பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், வலது ஓரப் பகுதி, மதிப்பெண் குறிப்பிட ஒதுக்கப்பட்டுள்ளது. விடைகளை எழுதி, அவற்றை கோடிட்டு, அடிக்க நேர்ந்தால், 'மேற்படி விடை என்னால் அடிக்கப்பட்டது' என்ற குறிப்புரையை எழுத வேண்டும்.

பயன்படுத்தாத பக்கங்களை கோடிட்டு அடித்து, 'பயன்படுத்தப்படாத பக்கம் என்னால் அடிக்கப்பட்டது' என, குறிப்பிட வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்குப் பின், மாணவர் கள் உடனடியாக உயர் கல்விக்குச் செல்ல வசதியாக, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க, தமிழக பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. நாட்டி லேயே முதல் முறையாக, தமிழகத்தில்தான் இத்திட்டம் அமலுக்கு வருகிறது.

ஆலோசனை கூட்டம்: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் மாதம் நடக்க உள்ளது. பள்ளிக் கல்வித் துறை சார்பில், தேர்வு ஏற்பாடு குறித்து, நேற்று, சென்னையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அமைச்சர் வீரமணி, முதன்மை செயலர் சபிதா, தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் மற்றும் துறை இயக்குனர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். பின், முதன்மை செயலர் சபிதா அளித்த பேட்டி: பொதுத்தேர்வு ஏற்பாடு கள் குறித்து, கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தேர்வு மையம், தேர்வு அறை கண்காணிப்பாளர், விடைத்தாள் திருத்துனர்களுக்கான அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

பொதுத்தேர்வு முடிவு கள் வெளியானதும், 10 நாட்களுக்குள் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். இதனால், மாணவர்கள் உயர் கல்வியில் சேர்வதற்கான ஏற்பாடுகளில் காலதாமதம் ஏற்படுகிறது. இதைத் தடுக்க, தேர்வு முடிவு வெளியான இரண்டு நாட்களில், முதல் கட்டமாக, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், இந்த ஆண்டு முதல் வழங்கப்படும். மாணவர்கள், ஆன்-லைனில் இந்த சான்றிதழை பதிவிறக்கம் செய்து, பள்ளித் தலைமை ஆசிரியரிடம் சான்றொப்பம் பெற்று, உயர் கல்விக்கு விண்ணப்பிக்கலாம். இச்சான்றிதழ் தேர்வு முடிவு வெளியானதில் இருந்து, 90 நாட்கள் செல்லத்தக்கது.

தேர்வு முடிவுகள் வெளியான பின், 10 நாட்களில், அசல் சான்றிதழை பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார். பொதுவாக, பல்கலைக் கழகங்களில் கல்லூரிப் படிப்புகளுக்கு மட்டும், தேர்வு முடிவுகள் வந்ததும், 'புரொபஷனல் சர்ட்டிபிகேட்' என்ற, தற்காலிக சான்றி தழ் வழங்கப்படும். பின், பட்டமளிப்பு விழா நடத்தி, பட்ட சான்றிதழ் வழங்கப்படும். ஆனால், வேறெந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில், முதன்முறையாக தமிழகத்தில் தான் பள்ளிப் படிப்புகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் முறை அறிமுகமாகிறது.

ஒரு மாதத்திற்குள்...: சி.பி.எஸ்.இ., பள்ளி களில், மதிப்பெண் பட்டியல் நகல் மட்டும் உடனே கிடைக்கும். தேர்வு முடிவு வெளியான ஒரு மாதத்துக்குள், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என, சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மதிப்பெண் நகலையே உயர் கல்விக்கு முதற்கட்ட சான்றிதழாக எடுத்துக் கொள்ளுமாறு, பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், அதிகாரிகள் தகவல் அனுப்பி உள்ளனர்.

மொபைல் எண்ணை மாற்றாமல் தொலை தொடர்பு நிறுவனங்களை மாற்றி கொள்ளும் வசதி நாடு முழுதும் அமல்

மொபைல் போன் எண்ணை மாற்றாமல், தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களை மாற்றிக் கொள்ளும் வசதி, வரும் மே மாதம் முதல், நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் வசதிக்கேற்ப, மொபைல் போன் எண்களை மாற்றாமல், சேவை வழங்கும் நிறுவனங்களை மாற்றிக் கொள்ளும் வசதி, சில ஆண்டுகளுக்கு முன் அமலுக்கு வந்தது.

ஆனால், அதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஒரு குறிப்பிட்ட தொலை தொடர்பு எல்லை அல்லது குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே, இந்த வசதியை வாடிக்கையாளர்கள் தற்போது பெற முடிகிறது. இதில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த, மத்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, 'டிராய்' முன்வந்துள்ளது. இதன்படி, நாட்டின் எந்த பகுதிக்கு சென்றாலும், மொபைல் போன் எண்ணை மாற்றாமல், சேவை வழங்கும் நிறுவனங்களை வாடிக்கையாளர்கள், தங்கள் விருப்பப்படி மாற்றிக் கொள்ளலாம். வரும் மே 3 முதல், நாடு முழுவதும் இந்த புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது; இதற்காக, டிராய் விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

PG TRB final list released

Click below

http://www.trb.tn.nic.in/PG2014/25022015/msg2.htm

Tuesday, February 24, 2015

என் ஜினியரிங் தேர்வில் புதிய நடைமுறை

என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள மாணவர்களின் தேர்வு முறை மற்றும் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் முறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர அண்ணாபல்கலைக்கழகம் பரிசீலித்து வருகிறது.

539 என்ஜினீயரிங் கல்லூரிகள்
தமிழ்நாட்டில் அண்ணாபல்கலைக்கழகக கட்டுப்பாட்டில் பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் உள்பட 539 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன.

இந்த கல்லூரிகளில் செமஸ்டர் முறையில் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றன. தேர்வுமுறையில் சீர்திருத்தம், விடைத்தாள் மதிப்பீடுசெய்வதில் சீர்திருத்தம் ஆகியவற்றை கொண்டுவர அண்ணாபல்கலைக்கழகம் பரிசீலித்தது. அதைத்தொடர்ந்து பல்வேறு நிபுணர்கள் அடங்கிய கமிட்டி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையை பல்கலைக்கழக அதிகாரிகள் ஆராய்ந்து பார்த்தனர்.

அந்த கமிட்டி பரிந்துரைத்த தகவல் வருமாறு:–

தேர்வு முறையில் மாற்றம்
*என்ஜினீயரிங் செமஸ்டர் தேர்வுமுறையில் மாற்றம் கொண்டுவருதல். தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் முறையில் மாற்றம் கொண்டுவருதல்.

* விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் சீர்திருத்தம் கொண்டுவருதல்.

*விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்யும் முறையில் சீர்திருத்தம்.

*தேர்வின் போது ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோருக்கு தண்டணை வழங்குதல்.

மேற்கண்ட தேர்வு மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டில் சீர்திருத்தம் கொண்டுவருவது தொடர்பாக அண்ணாபல்கலைக்கழகம் பரிசீலித்து வருகிறது.

இந்த பொருள்கள் வரக்கூடிய சிண்டிகேட் கூட்டத்தில் வைக்கப்பட்டு விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று அண்ணாபல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜாக்டோவுக்கு பணிந்தது அரசு.இன்று அரசுடன் பேச்சுவார்த்தை

ஆசிரியர்களின், 15 ஆண்டு கால கோரிக்கைகளை வலியுறுத்தி, 'ஜாக்டோ' என்ற ஆசிரியர் சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினர், முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை இன்று சந்தித்துப் பேசுகின்றனர்.

கடந்த, 2003ல், மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்திய ஆசிரியர் சங்கங்கள், 12 ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் போராட்ட முடிவுகளுடன், ஒன்றாக இணைந்துள்ளன. தொடக்கப்பள்ளி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, கழகம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், அனைத்து ஆசிரியர் நலச்சங்கம் உள்ளிட்ட, 28 சங்கங்கள், 'ஜாக்டோ' கூட்டு நடவடிக்கைக் குழுவில் இணைந்துள்ளன.

இந்த குழு கூட்டம், கடந்த வாரம் சென்னையில் கூடி, தீவிரப் போராட்டம் நடத்த முடிவெடுத்தது. இதை அறிந்த, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், 'ஜாக்டோ' குழுவினரை அழைத்துப் பேச்சு நடத்தினர். ஆசிரியர் சங்கங்களின் தொடர் வலியுறுத்தலுக்கு அரசு செவி சாய்த்து, முதல்வரை, ஜாக்டோ குழு இன்று சந்தித்துப் பேச அனுமதி தரப்பட்டுள்ளது. கூட்டு நடவடிக்கைக் குழுவில், 22 பேர் உள்ள நிலையில், 15 பேர் மட்டும், இன்று காலை 10:00 மணியிலிருந்து, 10:30 மணிக்குள் முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை ப்ரீமியம்

வாகன காப்பீட்டில், மூன்று ஆண்டுக்கு, ஒரு முறை பிரீமியம் வசூலிக்கும் திட்டத்தை துவக்க, காப்பீட்டு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இந்தியாவில், பொதுத்துறை, நான்கு; தனியார் துறை 21, என மொத்தம், 25 பொது காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. புதிய வாகனம் வாங்கும்போது, காப்பீட்டு நிறுவனங்களிடம், மூன்றாவது நபர் மற்றும் உரிமையாளர் என, இரண்டு காப்பீடுகள் செய்யப்படுகின்றன.

பணமாக பெறலாம்: விபத்து, தீ, திருடு என, ஏதேனும் ஒரு காரணத்தினால், வாகனம் மற்றும் அதில் பயணம் செய்தவருக்கு பாதிப்பு ஏற்பட்டால், காப்பீட்டு நிறுவனங்களிடம், இழப்பீட்டை பணமாக பெற்று கொள்ளலாம். இதற்கு ஆண்டுதோறும், பிரீமியம் செலுத்தி, காப்பீட்டை புதுப்பித்து கொள்ள வேண்டும். ஆனால் பலர், மறதி காரணமாக, ஆண்டு பிரீமியம் செலுத்த தவறி விடுகின்றனர். இதனால், விபத்து ஏற்படும்போது, இழப்பீடு பெற முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, புதிய வாகனம் வாங்கும்போது, ஆயுட்கால சாலை வரி வசூலிப்பது போல், வாகன ஆயுள் காப்பீட்டு திட்டத்தையும் அறிமுகம் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள், மத்திய அரசிடம், கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, மூன்று ஆண்டுக்குமாக சேர்த்து, ஒரே பிரீமியம் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த, காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம், கடந்த டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. இதை, விரைவில் செயல்படுத்த, காப்பீட்டு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதால், வாகன ஓட்டிகள், ஆண்டுதோறும், பிரீமியம் செலுத்த சிரமப்பட வேண்டியதில்லை. இதுகுறித்து, தென் மண்டல பொது காப்பீட்டு ஊழியர் சங்க பொது செயலர், ஆனந்த் கூறியதாவது:

பொது காப்பீட்டில், கட்டடங்களில், தீ விபத்திற்கு, 10 ஆண்டுக்கு, ஒரே பிரீமியம் செலுத்தும் வசதி உள்ளது. தற்போது, வாகனத்திற்கு, மூன்று ஆண்டுக்கு, ஒரே பிரீமியம் செலுத்தும் திட்டத்தை துவக்க, காப்பீடு நிறுவனங்கள் முடிவு செய்து உள்ளன. பிரச்னை இல்லை: இதனால், ஆண்டு தோறும், பிரீமியம் செலுத்த மறந்தாலும், பிரச்னை இல்லை. ஆனால், அதற்கு மேல், பிரீமிய காலம் நீட்டிக்கப்பட்டால், வாகன விலையை, பிரீமியமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு, அவர் கூறினார். இந்த நடைமுறை, ஏப்ரல், 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

அழகப்பா பல்கலை தேர்வு முடிவு வெளியீடு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்விக்கான டிசம்பர் -2014 ல் நடந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www. alagappauniversity.ac.in  என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இம்முடிவுகள் வெளியான 10 தினங்களுக்குள் (5.3.2015 தேதிக்குள்) மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீட்டிற்கான விண்ணப்பம் பல்கலைக்கழக இணையதளத் தின் மூலம்பதிவிறக்கம் செய்யப்பட்டு மறுமதிப்பீட்டுக்கட்டணமாக பாடம் ஒன்றுக்கு ரூ. 500 வீதம் பதிவாளர்,அழகப்பாபல்கலைக்கழகம் என்ற பெயரில் வரைவோலை செலுத்தி தேர்வுப்பிரிவுக்கு விண்ணப்பிக்குமாறு பல்கலைக்கழகத்தின் தேர்வாணையர் கா. உதய சூரியன் தெரிவித்துள்ளார்.

தினம் ஒரு அரசாணை

தினம் ஒரு அரசாணை29
------------------------------------------
  ஆசிரியர் வருங்கால  வைப்புநிதியில் (TPF) இருந்து முன்பணம் வேண்டி விண்ணப்பித்தால் எத்தனை நாட்களில்  முன்பணம் வழங்க வேண்டும்???????
அரசாணை நிலை  எண்.687,  பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை  நாள்.16.7.82ன்படி ஆசிரியர் வருங்கால வைப்புநிதியிலிருந்து முன்பணம் வேண்டி விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பித்த ஒரு மாதத்திற்குள் முன்பணம் வழங்க வேண்டும்.

Monday, February 23, 2015

சென்னை மாநகராட்சி பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்க விடமாட்டோம்.அமைச்சர்

சென்னை மாநகராட்சி பள்ளிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் அ.சவுந்தரராஜன் பேசும்போது, சென்னை மாநகராட்சி பள்ளிகள் மூடப்படக் கூடிய நிலை இருப்பதாகக் கூறினார்.

அப்போது குறுக்கிட்டு அமைச்சர் வேலுமணி கூறியது: சென்னை மாநகராட்சி பள்ளிகள் மூடப்படுவதாக வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை. அது போல, சென்னை பள்ளிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கப் போவதாக வரும் செய்திகளும் தவறானவை. சென்னைப் பள்ளிகள் ஒரு நாளும் தனியாரிடம் ஒப்படைக்கப் படாது. இந்தப் பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.