இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, October 21, 2014

அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு வாரம் B

 
    ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை அரசு அலுவலங்களில் கடைப்பிடிக்க வேண்டும் என்று அனைத்துத் துறை தலைவர்கள், செயலாளர்களுக்கு தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத் உத்தரவிட்டுள்ளார். இதற்கான சுற்றறிக்கையை மத்திய கண்காணிப்பு ஆணையம் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது.

ஊழலை ஒழிக்கும் வகையிலும், அதுதொடர்பான விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி முதல் நவம்பர் 1-ஆம் தேதி வரை ஒரு வார காலத்துக்கு அனைத்து அரசுத் துறைகளிலும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை கடைப்பிடிக்க மத்திய கண்காணிப்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத்துக்கு அந்த ஆணையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

"ஊழலை எதிர்ப்போம்-தொழில்நுட்பத்தை ஊக்குவிப்போம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரசாரம் இந்த ஆண்டு மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, அரசு அலுவலகங்களை நேரடியாக நாடாமல், மின்ஆளுமை முறையின் மூலம் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி அரசின் சேவைகளைப் பெறலாம் என்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு இந்த ஆண்டுக்கான ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட உள்ளது. ஊழல் என்பது நாட்டின் பொருளாதார மேம்பாட்டையும், இலக்குகளை அடைவதிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என ஊழல் கண்காணிப்பு ஆணையம் தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. செயல் திட்டங்கள்: சுற்றறிக்கையின் அடிப்படையில், அனைத்துத் துறை செயலாளர்கள், தலைவர்களுக்கு மோகன் வர்கீஸ் சுங்கத் பிறப்பித்துள்ள உத்தரவு விவரம்:

வரும் 27-ஆம் தேதி முதல் நவம்பர் 1-ஆம் தேதி வரை ஒரு வார காலத்துக்கு அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு வாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஊழல் எதிர்க்கும் வாசகங்கள் அடங்கிய பேனர்கள், சுவரொட்டிகளை அரசு அலுவலகங்களின் பிரதான பகுதிகளில் அனைவரும் பார்க்கும் வகையில் வைக்க வேண்டும். ஊழல் தடுப்பு குறித்த கருத்தரங்குகள், பயிலரங்குகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகளிடையே ஊழல் எதிர்ப்பு பற்றிய விவாதங்களையும், கட்டுரைப் போட்டிகளையும் நடத்தி பரிசுகளை அளிக்க வேண்டும். ஊழல் எதிர்ப்பு தொடர்பாக சிறப்பு மலர்களை வெளியிட ஊக்குவிக்கலாம். உள்ளூர் பகுதிகளில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான நிகழ்வுகளில் தன்னார்வ அமைப்புகளையும், சேவை மனப்பான்மை கொண்ட கூட்டமைப்புகளையும் இணைத்து நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் தெரிவித்துள்ளார்.

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை ஒட்டி, அரசு அலுவலகங்களில் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழியும் எடுக்கப்பட உள்ளன.

"நெட்' தேர்வு அறிவிப்பு: விண்ணப்பிக்க நவ.15 கடைசி

கல்லூரி, பல்கலை உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கு தேசிய அளவில் நடத்தப்படும் "நெட்' (தேசிய தகுதித் தேர்வு) தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்துள்ளது. இதுவரை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) நடத்தி வந்த இந்தத் தேர்வை, முதல்முறையாக 2014 டிசம்பரில் சி.பி.எஸ்.இ. நடத்துகிறது.

இனி ஆண்டுக்கு இரு முறை இந்தத் தேர்வை சி.பி.எஸ்.இ.தான் நடத்தவுள்ளது. http://cbsenet.nic.in/cbsenet/Welcome.aspx என்ற இணையதளத்தில் துறைகள் என்ற பிரிவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பத்தை ஆன்-லைனில் சமர்ப்பிக்க நவம்பர் 15 கடைசித் தேதியாகும். அறிவிக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த நவம்பர் 18 கடைசித் தேதியாகும். "ஆன்-லைன்' விண்ணப்பத்தை நவம்பர் 19-ஆம் தேதிக்குள் பிரதி எடுத்துக் கொள்ள வேண்டும். பிரதி எடுத்த விண்ணப்பத்தைச் சம்பந்தப்பட்ட ஒருங்கிணைப்பு மையத்தில் சமர்ப்பிக்க நவம்பர் 25 கடைசித் தேதியாகும்.

பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றங்களுக்கு பரிசு : பரிந்துரை அறிக்கை வழங்க உத்தரவு

கல்வி மாவட்ட வாரியாக சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளின் தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றங்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளதால், அதற்கான பரிந்துரை அறிக்கையை நவ.,15க்குள் வழங்க, சுற்றுச்சூழல்துறை இயக்குனர் மல்லேசப்பா உத்தரவு பிறப்பித்துள்ளார்.பள்ளிகளின் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்களுக்கு, அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கை:

கல்வி மாவட்ட வாரியாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்தும் பள்ளிகளில் உள்ள தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றங்களுக்கு, 10,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை பரிசு வழங்கப்படும், என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி கல்வி மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 10 முதல் 15 தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றங்களை கண்டறிந்து, அதுகுறித்து அப்பள்ளிகளின் செயல்பாட்டு அறிக்கையை, அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளின் பரிந்துரைகளுடன் தலைமையாசிரியர்கள், நவ.,15க்குள் சென்னையில் உள்ள எங்கள் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தேர்வு பெற்ற பள்ளிகளுக்கு, பின்னர் பரிசு வழங்கப்பட உள்ளது.

பதவி உயர்வு உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அக்.25 ல் கலந்தாய்வு


ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உதவி தொடக்க கல்வி அலுவலராக பதவி உயர்வு பெறுவதற்குரிய முன்னுரிமை பட்டியல், கடந்த ஜூலையில் வெளியிடப்பட்டது. 2008 ம் ஆண்டு, டிச., 31யை தகுதி நாளாக கொண்டு இப்பட்டியலில் 195 பேர் இடம் பெற்றனர்.

இதில், ஒன்று முதல் 30 வரை உள்ள தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலராக பணி மாறுதல் வழங்கப்பட்டது. மீதம் உள்ளோருக்கு எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், தற்போது முன்னுரிமை பட்டியலில் 31 முதல் 160 முடிய உள்ள தகுதி வாய்ந்த நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பணி மாறுதல் மூலம், உதவி தொடக்க கல்வி அலுவலர், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலராக பணி மாறுதல் வழங்கப்பட உள்ளது. கலந்தாய்வு, அக்.,25ல், சென்னை தொடக்க கல்வி இயக்க கூட்டரங்கில், காலை 10க்கு நடக்கிறது, என தொடக்க கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

உண்மைத் தன்மை சான்றிதழ் தபாலில் அனுப்ப தடை : தேர்வுத்துறை அறிவிப்பு

'ஆசிரியர், பணியாளர்களின், உண்மை தன்மை அறிதல் கோருதல் சார்பான கடிதங்களை அஞ்சல் வழி அனுப்பக்கூடாது' என தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பயின்ற மாணவர்களிடமிருந்து, மேல்நிலை, இடைநிலை தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் கோருதல், மதிப்பெண் சான்றிதழ்களை தொலைத்து விட்டு 'டூப்ளிகேட்' சான்றிதழ் கேட்கும் விண்ணப்பங்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மை தன்மை அறிதல், ஆகிய அனைத்தையும், ஒருங்கிணைத்து நிலுவை விபரங்களை பெறும் வகையில், மண்டல துணை இயக்குனர்கள், ஒவ்வொரு மாதமும், இரண்டாம் வெள்ளிக்கிழமை தங்களது மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களின் நேர் முக உதவியாளர்கள் மற்றும் தேர்வு பணியாளர்களுடன் கூட்டம் நடத்தி அறிக்கை அனுப்பிட வேண்டும்.

கூட்டம் நடத்தும் ஓரிரு நாட்களுக்கு முன்பு, மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் கோருதல், 'டூப்ளிகேட்' மதிப்பெண் சான்றிதழ் கோருதல் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மை தன்மை அறிதல் போன்ற விண்ணப்பங்களை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் தொகுத்து, சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களின் நேர்முக உதவி அலுவலர்கள், தேர்வு பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும். மதிப்பெண் சான்றிதழ் உண்மை தன்மை கோரி பெறப்படும் விண்ணப்பங்களை, அனைத்து உதவி தொடக்க கல்வி அலுவலர்களும் தொகுத்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் நேர்முக உதவி அலுவலரிடம் வழங்க வேண்டும்.

இனி வருங்காலங்களில், எக்காரணத்தை கொண்டும் உண்மை தன்மை அறிதல் சார்ந்த கடிதங்களை, பள்ளி தலைமை ஆசிரியர்களோ, உதவி தொடக்க கல்வி அலுவலர்களோ, மாவட்ட கல்வி அலுவலர்களோ, அஞ்சல் வழியே அனுப்புதல் கூடாது. அவ்வாறு அஞ்சல் வழியாக பெறப்படும் கடிதங்கள் நிராகரிக்கப்படும். பழைய முறையிலேயே நேரில் சமர்ப்பிக்க வேண்டும், என்றார். உண்மை தன்மைக்கு சான்றிதழ்களை அனுப்பிய ஆசிரியர்கள் பல மாதங்களாக, சான்றிதழ் திரும்ப கிடைக்காமல் இன்றளவும் உள்ளனர். இதனால், அவர்கள் தகுதிகாண் பருவம் பெற முடியாமல் தவிக்கின்றனர் என்பது

ஆன்லைனில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்க

http://www.elections.tn.gov.in/eregistration/

Sunday, October 19, 2014

கனமழை: 15 மாவட்டங்களுக்கு விடுமுறை

கனமழை காரணமாக 15 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவை, நாகை, கடலூர், அரியலூர், கரூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், திருச்சி, ஈரோடு, திருப்பூர், கடலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக தருமபுரி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், நாகை, திருவாரூர், தூத்துக்குடி, சென்னை, திருச்சி, திருப்பூர், கடலூர், தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கு, திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, ஈரோடு, நெல்லை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு,புதுச்சேரி,காரைக்கால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, இன்று (20.10.2014)விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக தருமபுரி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், நாகை, திருவாரூர், தூத்துக்குடி, சென்னை, திருச்சி, திருப்பூர், கடலூர், தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கு, திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, ஈரோடு, நெல்லை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு,புதுச்சேரி,காரைக்கால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, இன்று (20.10.2014)விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் மழை காரணமாக நெல்லை, கோவை, கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்து உள்ளனர்.

பள்ளிகல்வித் துறை புதிய மாதிரி படிவங்கள் - உயர் நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணி வரன் முறை படிவம் / தகுதிகாண் பருவம் படிவம் /தேர்வு நிலை படிவம் /சிறப்பு நிலை படிவம் / மற்றும் அதனுடன் இணைக்க வேண்டிய படிவங்கள் -

https://app.box.com/s/bkwotjqqwn1jqbqo2g3l

Some Teacher s Form

http://sankarranga.blogspot.in/2012/11/forms-for-teachers.html?m=1

Saturday, October 18, 2014

Central Teachers Eligibility Test (CTET) -September 2014 Results Published

http://cbseresults.nic.in/ctet/ctet14_oct.htm

2010, ஆகஸ்ட் 23-க்கு முன்னதாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு "டெட்' தேர்ச்சி அவசியம் இல்லை

ஆகஸ்ட் 23-க்கு முன்னதாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று, 2011-ஆம் ஆண்டில் பணி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை என பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் பிறப்பித்துள்ள உத்தரவு: ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்பட்ட பிறகு, பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமன ஆணை வழங்கப்பட்டவர்களுக்கு, நியமனம் பெற்ற 5 ஆண்டுகளுக்குள் கண்டிப்பாக ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனடிப்படையில், 2010-11-ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி (தமிழ்) ஆசிரியர்களாகத் தேர்வு செய்யப்பட்டு, நியமன ஆணைகள் வழங்கப்பட்டாலும், நியமனம் பெற்ற 5 ஆண்டுகளுக்குள் கண்டிப்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் இதுதொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்ட 23.08.2010-ஆம் தேதிக்கு முன் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடிவுற்ற பணி நாடுநர்களுக்கு, அந்தத் தேதிக்குப் பிறகு பணி நியமனம் வழங்கப்பட்டு இருந்தாலும், அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 2011-ஆம் ஆண்டில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமன ஆணை வழங்கப்பட்டவர்களில், ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்கு முன்னர் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடித்தவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், அவர்களுக்கு தகுதிகாண் பருவத்தை முடித்து ஆணை வழங்குவதில் காலதாமதம் ஏதுமின்றி செயல்பட வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெல்ல கற்கும் பொதுத்தேர்வர்களுக்கு சிறப்பு புத்தகம்: குழு அமைத்து தயாரிப்பு

பொதுத்தேர்வு எழுதவுள்ள, எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 மாணவர்களில், மெல்ல கற்போருக்கு சிறப்பு வகுப்பு மற்றும் கைடு தயாரித்து வழங்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால், அதற்கான பணியில், தனி ஆசிரியர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அரசுப் பள்ளிகளில், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களில், மெல்ல கற்கும் (ஸ்லோ லேனர்) மாணவர்களை அடையாளம் கண்டு, சிறப்பு வகுப்பு (ஸ்பெஷல் கிளாஸ்) எடுக்கப்படுகிறது. மேலும், ஸ்லோ லேனர்களுக்காக, சிறப்பு கையேடு தயாரிக்க, மாவட்டம் வாரியாக, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கல்வி அதிகாரிகள் கூறியதாவது: அரசு பள்ளியில், வழக்கம்போல், பள்ளி வேலை நாட்களில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். மாலை, 4.30க்கு பள்ளியின் வேலை நேரம் முடிந்தவுடன், அடையாளம் காணப்பட்ட, 'ஸ்லோ லேனர்' மாணவர்களுக்கு, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், கூடுதல் வகுப்பு எடுக்க வேண்டும். அந்த ஸ்பெஷல் கிளாஸில், வகுப்பு தேர்வு, புரியாத பாடங்களை திரும்ப நடத்துதல், மாணவர்களின் சந்தேகங்களை தெளிவுப்படுத்துதல் ஆகிய பணிகளை, ஆசிரியர்கள் செய்ய வேண்டும். அதேபோல், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள், 'ஸ்லோ லேனர்'களின் கல்வித்தரம் மேம்படுத்த, சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தேர்ச்சி சதவீதத்தை கூட்ட, கல்வித்துறை அனைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

மாணவர்களுக்கு, பாடப்புத்தகம் மட்டுமின்றி, 'ஸ்லோ லேனர்'களுக்காக சிறப்பு கைடுகள் மூலம், பாடம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. எளிய முறையில் பாடங்கள் நடத்தி, அதிக தேர்ச்சி சதவீதம் எடுக்க, அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட அளவில், பொதுத்தேர்வு மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் திறமையான ஆசிரியரை கொண்டு, சிறப்பு கைடு தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், கைடு தயாரிக்கும் பணியில், தனி ஆசிரியர் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். தனி புத்தகமாக அச்சடித்து, அனைத்து அரசு பள்ளிகளுக்கும் வழங்கப்படும். இதிலுள்ள குறிப்புகளை கற்றாலே, முழு தேர்ச்சியை காட்ட முடியும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Income Tax Slabs & Rates for Assessment Year 2015-16 Income Slabs Tax Rates-tnkalvi

i. Where the total income does not exceed Rs. 2,50,000/-. NIL

ii. Where the total income exceeds Rs. 2,50,000/- but does not exceed Rs. 5,00,000/-. 10% of amount by which the total income exceeds Rs. 2,50,000/-.Less ( in case of Resident Individuals only ) : Tax Credit u/s 87A - 10% of taxable income upto a maximum of Rs. 2000/-.

iii. Where the total income exceeds Rs. 5,00,000/- but does not exceed Rs. 10,00,000/-. Rs. 25,000/- + 20% of the amount by which the total income exceeds Rs. 5,00,000/-.

iv. Where the total income exceeds Rs. 10,00,000/-. Rs. 125,000/- + 30% of the amount by which the total income exceeds Rs. 10,00,000/-.

2014-15 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், வருமான வரி விகிதங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக (ரூ.50,000) உயர்த்தப்பட்டது.

வருமான வரிச் சட்டப்பிரிவு 80(சி)-ன் கீழ் முதலீட்டிற்கான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.

சொந்த வீட்டில் குடியிருப்பவர் பெறும் வீட்டுக்கடன் மீதான வட்டிக்கு அளிக்கப்படும் விலக்கு வரம்பு ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டது.

Friday, October 17, 2014

10, பிளஸ் 2 காலாண்டுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு பயிற்சி : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

காலாண்டுத்தேர்வில் 10ம்வகுப்பு, பிளஸ் 2 வில் பாடவாரியாக தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சியளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பொதுத்தேர்வில் பள்ளிவாரியாக தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பள்ளிகல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒருபகுதியாக சமீபத்தில் முடிந்த அவ்வகுப்புகளுக்கான காலாண்டுத்தேர்வுகளில் பாடவாரியாக தேர்ச்சி பெறாத அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் சிறப்பு பயிற்சியளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,"எந்தெந்த பாடங்களில் அதிக மாணவர்கள் தோல்வியடைந்தனர். அதற்கான காரணம் என்ன என கண்டறிந்து, அவர்களை அடுத்துவரும் அரையாண்டுத்தேர்வு, பின்னர் இறுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற வைப்பதற்கான வழிமுறைகளை வகுக்க மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி முக்கிய வினா விடை அடங்கிய கையேடு தயாரித்து வழங்கப்பட்டு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் அம்மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதுபோல் பாட ஆசிரியர்களுக்கும் பயிற்சியளிக்கப்படும்,”என்றார்.

டி.இ.டி., 'விலக்கு'க்கு கிடைத்தது 'விளக்கம்' :


    தமிழகத்தில் 23.8.2010க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, அதன் பின் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு (டி.இ.டி.,) தேர்ச்சியில் விலக்கு அளிக்க வேண்டும்,' என, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மீண்டும் இயக்குனர் அலுவலகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 18 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது. 'கடந்த 2010 ஆக., 23க்கு முன் ஆசிரியர் பணி நியமன சான்றிதழ் சரிபார்ப்பு அல்லது அதுதொடர்பான நடவடிக்கைக்கு உட்பட்டிருந்தால் 2013 ஆக., 23க்கு பிறகும் பணி நியமனம் செய்யப்பட்ட அந்த ஆசிரியர்களுக்கு தகுதி (டி.இ.டி.,) தேர்வில் விலக்கு அளிக்கப்படும்' என ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவித்தது. இதன் அடிப்படையில், 2010 முதல் 2013 வரை அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் 18 ஆயிரம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தனர்.

இவர்கள் தகுதி காண் பருவத்திற்கு விண்ணப்பித்தனர். அதை கல்வி அதிகாரிகள் ஏற்காமல், 'ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின் தான் தகுதி காண் பருவத்தை முடிக்க இயலும்' என விண்ணப்பங்களை திருப்பி அனுப்பினர். இதனால், ஊதிய உயர்வு, ஊக்க ஊதியம், பண்டிகை கால முன்பணம், வங்கி கடன் வாய்ப்பு உட்பட எவ்வித பலனும் கிடைக்காமல் 18 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக 'தினமலர்' நாளிதழில் அக்.,11ல் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, கல்வி இயக்குனர் அலுவலகம் மூலம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் 'இமெயில்' தகவல் அனுப்பப்பட்டது. இதில் '2010 ஆக., க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, பின் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு டி.இ.டி., தேர்ச்சியில் விலக்கு அளிக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது. இதனால், தகுதிகாண் பருவம் உட்பட அனைத்து பலன்களும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் நாகசுப்பிரமணியன், செயலாளர் முருகன் கூறுகையில்,

'டி.ஆர்.பி.,யின் டி.இ.டி., தேர்ச்சி விலக்கை கல்வி அதிகாரிகள் நடைமுறைப்படுத்தவில்லை. இதனால் தகுதி காண் பருவத்தை அவர்கள் முடிக்கமுடியவில்லை. இதை 'தினமலர்' நாளிதழ் சுட்டிக்காட்டியது. இதன்பின் இயக்குனர் அலுவலகம் வெளியிட்ட தெளிவான அறிவிப்பால் குழப்பத்திற்கு விளக்கம் கிடைத்துள்ளது' என்றனர்.

Thursday, October 16, 2014

புதிதாக சேரும் வாக்காளர்களுக்கு ஜனவரியில் அடையாள அட்டை

வாக்காளர் பட்டியலில், புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பிப்போருக்கு, ஜனவரியில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, நேற்று முன்தினம் துவங்கியது. அடுத்த மாதம், 10ம் தேதி நிறைவு பெற உள்ளது. இந்நாட்களில், அடுத்த ஆண்டு ஜனவரி, 1ம் தேதி, 18 வயது பூர்த்தி அடைவோரும், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான நபர்களின் பெயர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். இறுதி வாக்காளர் பட்டியல், ஜனவரி, 5ம் தேதி வெளியிடப்படும்.

இப்பட்டியலில் இடம் பெறும் புதிய வாக்காளர்களுக்கு, தேசிய வாக்காளர் தினமான, ஜனவரி, 25ம் தேதி, வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

Wednesday, October 15, 2014

இ.சி.எஸ். ஆன்லைனில் சம்பள பட்டியலை சமர்பிக்க தேவையான ஆசிரியர்களின் அடிப்படை விவரங்கள் உள்ள படிவம்

Https://docs.google.com/file/d/0ByAIJo2ODgwFLWk4ZmtMMk43S0E/edit

தொலைந்து போன ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் கண்டு பிடிப்பது மற்றும் ஒரு கையடக்க தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி?

இந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில் முண்ணணி வகிப்பது சாம்சங் ஆகும். உங்கள் விலை உயர்ந்த சாம்சங் கையடக்க தொலைபேசி தொலைந்து போகும்பொது உங்கள் மனநிலய் எவ்வாறு இருக்கும்.. அத்தோடு சேர்ந்து உங்கள் விலை மதிப்பற்ற தகவல்களும் சேர்ந்து தொலைந்து போவதை பற்றி கற்பனை செய்து பார்த்ததுண்டா? இதற்கு ஒரே வழி வருமுன் காப்பதே ஆகும். இந்த கட்டுரையில் நாங்கள் பார்க்க இருப்பது உங்கள் சாம்சங் கையடக்க தொலைபேசி தொலைந்து போனால் அதை எவ்வாறு கண்டு பிடிப்பது அல்லது அதை தொலைவில் இருந்து செயற்படுத்துவது.

இதற்கு உங்கள் கையடக்க தொலைபேசி ஒரு ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்னாக இருக்க வேண்டும். முதலில் உங்கள் புதிய அல்லது பாவணை செய்கின்ற தொலைபேசியை எதிர்கால நன்மை கருதி முன்னேற்பாடக தயார்படுத்த வேண்டும். அதற்கு பின்வரும் படிமுறைகளை பின்பற்றவும்

1. Settings-> Location & Settings ->அங்கே Remote Controls என்பதில் Tick செய்யவும்.

2. அப்போது உங்கள் Samsung Account Username & Password என்பவற்றை உட்செலுத்த கேட்கும். ஏற்கனவே உங்களுக்குSamsung பயனர் கணக்கு இல்லை எனில் புதிதாக ஒன்றை ஆரம்பிக்கவும்.

3.இப்போது விதிமுறைகள் (Conditions Agreement) பற்றிய பக்கம் காண்பிக்கப்படும். அதில் I agree என்பதை சொடுக்கவும். அவ்வளவு தான் இப்போது உங்கள் கையடக்க தொலைபேசி தயாராகி விட்டது. இப்போது உங்கள் தொலைபேசி தொலைந்தாலோ அல்லது உங்கள் வாழ்க்கை துணை,காதலர்,பிள்ளைகள் பாவித்தாலோ அது இருக்கும் இடம். பயணம் செய்த பாதை, அதன் அழைப்பு விபர பட்டியல்(call Logs) மற்றும் ஏராளமான விடயங்களை Track செய்ய முடியும். இந்த முகவரிக்கு செல்லவும். அங்கே உங்கள் Samsung Account பயனர் பெயர் மர்றும் கடவுச்சொல் என்பவற்றை கொடுக்கவும். நீங்கள் உங்கள் கையடக்க தொலைபேசியில் கொடுத்த அதே தகவல்களை உட்செலுத்த வேண்டும். Click Here To Track Your Mobile.

அங்கே இவ்வாறனான ஒரு முகப்பு பக்கம் உங்களுக்கு தோன்றும். அங்கே உங்கள் கையடக்க தொலைபேசி மாடல் காண்பிக்கப்படும். இந்த பக்கத்தில் உங்களுக்கு தேவையான கட்டுபடுத்தும் மற்றும் Track செய்யும் வேலைகளை செய்து கொள்ளமுடியும் 1. Locate My Mobile - இதை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் கையடக்க தொலைபேசியின் தற்போதைய இருப்பிடம் மற்றும் இறுதி 12 மணி நேரத்தில் உங்கள் தொலைபேசி எங்கெல்லாம் பயணித்த விபரங்கல்ளை வரைபடத்தில் பார்க்கலாம் 2.Lock My Mobile- இதன் மூலம் உங்கள் தொலைபேசியை பயன்படுத்த முடியாதவாறு Lock செய்து கொள்ள முடியும். 3.Ring My Mobile -உங்கள் மொபைல் சைலன்ட் மோடில் இருந்தால் கூட ரிங் ஆகும். 4.Call Logs -இறுதி ஒரு வாரம் உங்கள் தொலைபேசியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட மற்றும் உள்வந்த அழைப்புகளின் தகவல்களை பெறலாம் 5. Wipe My Mobile- உங்கள் செமித்து வைக்கப்பட்ட தரவுகள் மற்றும் இலக்கங்கள் என்வற்றை அழிக்க கூடிய Factory Reset / Wipe Delete என்று அழைக்கப்படும் நிரலாக்கலை செய்ய முடியும்.