இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, March 21, 2014

ஆசிரியர் தகுதி தேர்வு: 2ம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஏப்., 7 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு


ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஏப்., 7 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ளது. டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி மதிப்பெண் அளவை, 60 சதவீதத்தில் இருந்து, 55 சதவீதமாக குறைத்து, கடந்த மாதம், முதல்வர் அறிவித்தார். இந்த சலுகை, கடந்த ஆண்டு, ஆகஸ்டில் நடந்த டி.இ.டி., தேர்வுக்கு பொருந்தும் எனவும் தெரிவித்தார். அதன்படி, டி.இ.டி., முதல் தாளில் (இடைநிலை ஆசிரியர்), தேர்ச்சி பெற்ற, 20 ஆயிரம் பேருக்கு, கடந்த, 12ம் தேதி முதல், ஐந்து மண்டலங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து வருகிறது.

இந்தப் பணி, 31ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து, டி.இ.டி., இரண்டாம் தாளில் (பட்டதாரி ஆசிரியர்) தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேருக்கு, ஏப்., 7 முதல், 25ம் தேதி வரை, சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) முடிவு செய்துள்ளது. முதல் தாளுக்கு நடந்ததைப் போல், ஐந்து மண்டலங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும் என, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்துள்ளது. 

12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே9ல் வெளியீடு


பிளஸ் 2 பொதுத் தேர்விற்கான தேர்வு முடிவுகள் வருகிற மே9ம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் துறை இயக்குனர் திரு.தேவராஜன்
தெரிவித்தார்.

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10-க்குள் வெளியாகும் என தகவல்.


பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 10ம் தேதிக்குள் வெளியாகும் என அரசுத் தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பொதுத் தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி வரும் திங்கட்கிழமை தொடங்க உள்ளது.சுமார் 15 நாட்களுக்குள் இந்தப் பணி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள்களை திருத்தும் பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுஏப்ரல் 24ம் தேதி நடைபெற உள்ளதால் தேர்வு முடிவுகள் குறித்து மாணவர்களிடையே குழப்பம் நிலவி வருகிறது.ஆனால், கடந்தாண்டு போன்றே மே 10ம் தேதிக்குள் முடிவுகள் வெளியாக வாய்ப்பிருப்பதாக தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த மூன்றாம் தேதி தொடங்கிய பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு வரும் 25-ம் தேதியுடன் முடிவடைகிறது.26-ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன.

என்ஜினீயரிங் விண்ணப்பம் மே முதல் வாரம் வினியோகம்

தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 570 கல்லூரிகள் உள்ளன. இதில் 2 லட்சம் பி.இ., பி.டெக் இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது. பிளஸ்–2 தேர்வு 25–ந் தேதியுடன் முடிகிறது. முக்கிய பாடப்பிரிவிற்கான தேர்வுகள் நேற்றுஉடன் நிறைவு பெற்றன. பிளஸ்–2 தேர்வு அடுத்த வாரம் முடிவடையும் நிலையில் பெற்றோர்கள் எண்ணம் உயர்கல்வியில் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதாகும். பெரும்பாலும் பொறியியல் படிப்பை அதிக பெற்றோர்கள், மாணவர்கள் தேர்வு செய்கிறார்கள்.

என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பம் எப்போது வினியோகம் செய்யப்படும் என்று மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள். என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு தேவையான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழகம் செய்து வருகிறது. இது குறித்து தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைப் பிரிவு செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:–

என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த வருடம் 2.3 லட்சம் விற்பனை ஆனது. இந்த ஆண்டு 2.5 லட்சம் விண்ணப்ப படிவங்கள் அச்சிட முடிவு செய்யப்பட்டது. தேவைப்பட்டால் கூடுதலாகவும் அச்சடிக்கப்படும். விண்ணப்ப படிவங்கள் மே மாதம் முதல் வாரத்தில் வழங்கப்படும் கலந்தாய்வு ஜூன் 3–வது வாரம் நடத்தவும் திட்டமிட்டு உள்ளோம். வழக்கம் போல் கலந்தாய்வு சென்னையில் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

குரூப் 2ஏ தேர்வு தேதி மாற்றம்: டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

குரூப் 2ஏ தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மே மாதம் 18ஆம் தேதி நடைபெற இருந்த குரூப் 2ஏ தேர்வு ஜூன் 29ஆம் தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி விளக்கம் அளித்துள்ளது.

Thursday, March 20, 2014

"4 நாள்களுக்குள் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க வேண்டும்'


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நான்கு நாள்களே உள்ளன. வரும் 25- ஆம் தேதி கடைசி நாளாகும். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. இதற்காக, கடந்த 9- ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அதில், 9.95 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க விண்ணப்பம் அளித்தனர். இப்போது, வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சிகளில் மண்டல அலுவலகங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.விண்ணப்பங்களை பெற்று அளிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 25 ஆகும்.

இதற்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் யாரும் பெயர்களைச் சேர்க்க முடியாது. மொபைல் போன் சேவை: வாக்குக்கு பணம் அளிப்பது தொடர்பான புகார்களை புகைப்படம் மற்றும் எழுத்துப்பூர்வமான ஆதாரங்களை மொபைல் போன் மூலமே அனுப்பும் புதிய வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்த உள்ளது. வரும் சனிக்கிழமை இந்தப் புதிய வசதியை தமிழக இணை தலைமைத் தேர்தல் அதிகாரி அஜய் யாதவ் அறிமுகப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி ஒரு மாதம் நடக்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாளில் தேர்ச்சி பெற்ற 18 ஆயிரம் பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி கடந்த 12-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம் ஆகிய 5 மையங்களில் தினமும் 1,250 பேர் கலந்துகொள்கிறார்கள். 31-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடியும். விடுபட்டவர்களுக்கு ஏப்ரல் 1-ல் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், தகுதித்தேர்வின் 2-வது தாளில் (பட்டதாரி ஆசிரியர்களுக்கானது) 28 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி ஒரு மாதம் நடக்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Wednesday, March 19, 2014

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத தட்கல் முறையில் விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட் இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு 26–ந் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வு எழுத தட்கல் முறையில் விண்ணப்பித்த தனி தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். www.tndge.in என்ற இணையதளத்தில் SSLC EXAM MARCH 2014 PRIVATE CANDIDATE / TATKAL HALL TICKET PRINT OUT என கிளிக் செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்கள் விண்ணப்ப எண் (அப்ளிகேசன் நம்பர்) மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால் ஹால்டிக்கெட் திரையில் தோன்றும், அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அறிவியல் பாட செய்முறை தேர்வு இன்று முதல் 22–ந் தேதி வரை சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பித்த தனி தேர்வர்களுக்கு அறிவியல் பாட செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. ‘‘சிறப்பு அனுமதி திட்டத்தில்’’ (தட்கல்) விண்ணப்பித்துள்ள தனி தேர்வர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்கள் தேர்வுக்கூட அனுமதி சீட்டு மற்றும் அறிவியல் செய்முறை பதிவேடு (ரெக்கார்டு நோட்டு) ஆகியவற்றுடன் தாங்கள் ஏற்கனவே அறிவியல் செய்முறை பயிற்சி பெற்ற பள்ளியிலேயே செய்முறை தேர்வுக்கு கலந்து கொள்ளுதல் வேண்டும். இத்திட்டத்தில் விண்ணப்பித்த தனி தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் மற்றும் செய்முறை தேர்வு குறித்து தனிப்பட்ட முறையில் அறிவிப்பு ஏதும் அனுப்ப இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.

TNPSC: Results of Departmental Examinations - DECEMBER 2013 (Updated on 18 March 2014) -

Tuesday, March 18, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பில் 8 ஆயிரம் பேர் பங்கேற்பு

  ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் இதுவரை 8 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 12-ஆம் தேதி தொடங்கியது. சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம் ஆகிய 5 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இப்போது நடைபெற்று வருகிறது.

ஒரு மையத்துக்கு 300 பேர் வீதம் 5 மையங்களில் நாளொன்றுக்கு 1,500 பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க அழைக்கப்படுகின்றனர். இதுவரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களில் 1 சதவீதத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளைப் பாதிக்காத வகையில் மாநிலம் முழுவதும் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீதம் (90 மதிப்பெண்) எடுத்து தேர்ச்சி பெற்ற 29 ஆயிரம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஏற்கெனவே நடைபெற்றுள்ளது. இந்தத் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தமிழக அரசு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டது. இதையடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் 46 ஆயிரம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 பாடப் புத்தகங்கள் தயார்

  வரும் கல்வியாண்டில் (2014-15) பிளஸ் 2 மாணவர்களுக்குத் தேவையான 94 லட்சம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வரும் மே மாதம் இந்தப் புத்தகங்கள் அனைத்தும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலமாக பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளன. அதேபோல், பிளஸ் 1 வகுப்புக்கான புத்தகங்கள் அச்சடிக்கும் பணி 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை முதல் பருவத்துக்காக 5 கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சடிக்கும் பணிகளும் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் புத்தகங்கள் அனைத்தும் வரும் மே மாதத்துக்குள் அச்சிடப்பட்டு, பள்ளி தொடங்குவதற்கு முன்னதாகவே அந்தந்த பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சுமார் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் அச்சிடும் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளதாகத் தெரிகிறது.

எஸ்.எம்.எஸ்., பண்ணுங்க ஓட்டுச்சாவடியை கண்டுபிடிங்க

:எஸ்.எம்.எஸ்., மூலம் ஓட்டுச்சாவடியை கண்டறியும் வசதியை, தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தியது.முதல்முறையாக ஓட்டளிக்க உள்ள, வாக்காளர்கள் மட்டுமின்றி, ஏற்கனவே ஓட்டளித்த பலருக்கும், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ள பாகம் எண், வரிசை எண் தெரிவதில்லை. எங்கு ஓட்டுப் பதிவு செய்ய வேண்டும் என்ற விபரமும் தெரிவதில்லை.வாக்காளர்களின் வசதிக்காக, மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., மூலம் ஓட்டுச்சாவடியை கண்டறியும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனில், ரைட் மெசேஜ் பகுதிக்குச் சென்று, திரையில், 'epic' என்று டைப் செய்து, சிறிது இடைவெளி விட்டு, வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின் அதனை, 94441 23456 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். செய்ய வேண்டும்.ஒரே நிமிடத்தில் உங்களுக்கு பதில் கிடைக்கும். அதில் உங்கள் பெயர், பூத் எண், அதன் முகவரி ஆகிய விபரங்கள் வெளியாகும். இந்த விபரம் இருந்தாலே போதும். பூத் சிலிப் கூட தேவையில்லை. இதில் உள்ள விபரம் மூலம் ஓட்டளிக்கலாம்.

பத்தாம் வகுப்பு தேர்வுஒரு வாரம் 'ஸ்டடி லீவு !'

    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, இன்னும், ஏழு நாட்களே உள்ள நிலையில், தேர்வுக்கு, மாணவ, மாணவியர், சிறப்பாக தயாராவதற்கு வசதியாக, பல தனியார் பள்ளிகள், ஒரு வாரம், விடுமுறை அறிவித்து உள்ளன.வரும், 25ம் தேதியுடன், பிளஸ் 2 தேர்வு முடிகிறது. மறுநாள், 26ம் தேதியில் இருந்து, பத்தாம் வகுப்பு பொது தேர்வு துவங்குகிறது. இதற்கு, இன்னும், ஒரு வாரம் மட்டுமே உள்ளது.அறிவியல் பாடத்தில், செய்முறை தேர்வை முடித்துவிட்ட மாணவ, மாணவியர், எழுத்து தேர்வுக்கு, ஆயத்தமாகி வருகின்றனர்; பள்ளிகளில், மாணவருக்கு, இறுதிகட்டமாக, தேர்வு நுணுக்கங்கள், ஆலோசனை வழங்கப்படுகின்றன. இந்நிலையில், தேர்வெழுத உள்ள, 10 லட்சம் மாணவ, மாணவியருக்கும், தேர்வுத்துறை இணையதளத்தில், ஓரிரு நாளில், 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட உள்ளன.

இதற்காக, தேர்வுத்துறை, ஒவ்வொரு பள்ளிக்கும், தனித்தனி, 'லிங்க்' வசதியை கொடுத்துள்ளது.தேர்வுத்துறை அறிவிக்கும் நாளில், ஒவ்வொரு பள்ளியும், தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து, தங்கள், பள்ளி மாணவ, மாணவியருக்கான, ஹால் டிக்கெட்டுகளை, பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு, வழங்குவர். வரும், 20 அல்லது, 21ம் தேதியில், ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையே, கடைசி நேரத்தில், மாணவர்கள், தேர்வுக்கு, நல்ல முறையில் தயாராவதற்கு வசதியாக, பல தனியார் பள்ளிகள், இன்று முதல், விடுமுறை அறிவித்து உள்ளன.-

10 சதவீத அகவிலைப்படியைஉடனடியாக வழங்க TETOJAC கோரிக்கை


   தேர்தல் கமிஷனிடம் அனுமதி பெற்று, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, 10 சதவீத அகவிலைப்படியை, உடனடியாக வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு தொடக்ககல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு,வலியுறுத்தி உள்ளது. இந்த அமைப்பின், மாநில பொதுக்குழு கூட்டம், சென்னையில், நேற்று நடந்தது. இதில், ஆறு ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், 'மத்திய அரசு, ஜன., 1 முதல், 10 சதவீத அகவிலைப்படி அறிவித்து உள்ளது. ஆனால், தமிழக அரசு, இன்னும், 10 சதவீத அகவிலைப்படியை வழங்கவில்லை. தமிழக முதல்வர், தேர்தல் கமிஷனிடம் அனுமதி பெற்று, 10 சதவீத அகவிலைப்படியை, உடனடியாக வழங்க வேண்டும்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தகுதித் தேர்வில் விலக்கு அறிவிப்புகுழப்பத்தில் 18 ஆயிரம் ஆசிரியர்கள்:திருப்பி அனுப்பப்படும் பதிவேடு

    
      ஆசிரியர் தகுதி தேர்வில், விலக்கு அறிவிக்கப்பட்டும், தகுதி காண் பருவத்திற்காக அனுப்பப்படும் ஆசிரியர்களின், பணிப் பதிவேடுகள் (எஸ்.ஆர்.,கள்) பரிசீலிக்கப்படுவதில்லை, என சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், 18 ஆயிரம் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். தமிழகத்தில், 2010 முதல் ஆசிரியர் தகுதி தேர்வு நடைமுறையில் உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 7.3.2012ல் அறிவிக்கப்பட்ட ஓர் உத்தரவில்(எண்:04/2012), 23.8.2010க்கு முன் ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக சான்றிதழ் சரிபார்ப்பு அல்லது அதுதொடர்பான நடவடிக்கைக்கு உட்பட்டிருந்தால், 23.8.2013க்கு பின் பணிநியமனம் செய்வதில், அந்த ஆசிரியருக்கு டி.இ.டி., தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதாக 25.5.2013ல், டி.ஆர்.பி., அறிவிப்பு வெளியிட்டது

. இதன்படி, மாநிலத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், 2010 முதல் 2012 வரை, 18 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள், டி.இ.டி., தேர்வு எழுத தேவையில்லை என அப்போது அறிவுறுத்தப்பட்டது.இந்நிலையில், பணியேற்று இரு ஆண்டுகள் நிறைவடைந்த ஆசிரியர்கள், தகுதி காண் பருவத்திற்காக, அவர்களது பணிப் பதிவேடுகளை, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்படி அனுப்பப்படும் பணிப் பதிவேடுகளை கல்வி அதிகாரிகள் பரிசீலித்து, 'உங்கள் பணிநியமன உத்தரவில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்தான், உங்களது தகுதி காண் பருவத்தை முடிக்க இயலும்,' என பதில் கூறி, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றன.பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறுகையில், "டி.இ.டி., தேர்வில், அரசு விலக்கு அளித்தும், அது நடைமுறைப்படுத்தவில்லை," என்றனர். பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் நாகசுப்பிரமணியன், செயலாளர் முருகன் கூறியதாவது:

இது 18 ஆயிரம் ஆசிரியர்களின் வாழ்வாதாரப் பிரச்னை. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்புப்படி, 23.8.2010க்கு முன் பணி நியமனம் செய்வதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு, டி.இ.டி., தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அதற்கான 'தவிர்ப்பாணை', பள்ளிக் கல்வி மூலம் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்,என்றனர்.

TNPSC: GR.-IV (2012-13) Counselling Schedule & Date-Wise vacancy position

மார்ச் 21-ல் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு- முதல் முறையாக ஆன்லைனில் விடைத்தாள்கள் வெளியீடு


மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு மார்ச் 21-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது. முதல்முறையாக, தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்ட பள்ளிகள் மற்றும் கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சி-டெட் என்று அழைக்கப்படும் இந்த தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி நடத்தப்பட்ட மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வை தமிழகம் உள்பட நாடு முழுவதும் 8 லட்சத்து 26 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் எழுதினர். இந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கபட்டபடி தேர்வு முடிவு வருகிற 21-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது.

தேர்வு முடிவை www.ctet.nic.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம். முதல்முறையாக ஆன்லைனில் விடைத்தாள் சி-டெட் தேர்வில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யவும், தேர்வின் மீது மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்களை (ஓ.எம்.ஆர். ஷீட்) முதல்முறையாக சி.பி.எஸ்.இ. ஆன்லைனில் வெளியிட்டு இருக்கிறது. தேர்வு ரோல் நம்பர் மற்றும் பிறந்த தேதியை மேற்கண்ட இணையதளத்தில் குறிப்பிட்டு, ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அதில் உள்ள விவரங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உடனடியாக இன்று (திங்கள்கிழமை) மாலை 5 மணிக்குள் ctet@cbse.gov.in என்ற இ-மெயில் முகவரிக்கு தகவல் தெரிவித்துவிட வேண்டும். அதேபோல், கீ ஆன்சரில் ஏதேனும் தவறு இருந்தால் அதுகுறித்து உரிய ஆவணங்களுடன் 19-ம் தேதி (புதன்கிழமை) மாலை 5 மணிக்குள் இ-மெயில் மூலம் தகவல் அனுப்பிட வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என அறிய type EPIC no space Voter ID no &msg to 9444123456 குறுஞ்செய்தி வந்துவிடுm

Monday, March 17, 2014

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி 21ல் துவக்கம்


பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி, வரும், 21ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில், கடந்த, 3ம் தேதி துவங்கிய, பிளஸ் 2 பொதுத் தேர்வு, 26ம் தேதியுடன் முடிகிறது. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், அந்தந்த தேர்வு முடிந்ததும், விடைத்தாள்கள், ஒரு மையத்தில் பாதுகாக்கப்படுகின்றன. அங்கிருந்து, பள்ளி கல்வி துறை அதிகாரிகள் அறிவிக்கும், மாவட்டத்தில் உள்ள, கல்வி மாவட்டத்துக்கு, விடைத்தாள் அனுப்பி வைக்கப்படுகிறது. இம்முறை, தனியார் பார்சல் வேன் மூலம், விடைத்தாள்கள் அனுப்பபடுகின்றன. விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும், 21ம் தேதி துவங்கும் நிலையில், அவற்றை திருத்தி முடிக்க, 10 முதல், 15 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ், ஆங்கிலம் என, மொழி பாடங்களில், முதல் மற்றும் இரண்டாம் விடைத்தாள்களை, வரும், 21ம் தேதி முதல் திருத்தி, மதிப்பெண் வழங்கும் பணியை, ஏப்., 5க்குள்ளும், பிற பாடங்களை, வரும், 1ம் தேதி துவங்கி, 10ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் முதல் தாள் திருத்தம் முடிந்த பின், இரண்டாம் தாள் திருத்தம் செய்ய, வழங்கப்படும். பெறப்பட்டுள்ள விடைத்தாள், ஆசிரியர்கள் எண்ணிக்கையை பொறுத்து, ஒவ்வொரு நாளும், எவ்வளவு விடைத்தாள் திருத்தி வழங்க வேண்டும் என, கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தவறான கேள்விக்கு 6 மதிப்பெண்: தேர்வுத்துறை அறிவிப்பு

''பிளஸ் 2, கணித தேர்வில், தவறாக கேட்கப்பட்ட, 47வது கேள்வியை, மாணவர்கள், 'தொட்டிருந்தால்' அதற்குரிய, ஆறு மதிப்பெண், முழுமையாக வழங்கப்படும்,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் தெரிவித்தார். பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த 14ல், மிகவும் முக்கியமான கணித தேர்வு நடந்தது. இதில், ஆறு மதிப்பெண் பகுதியில், 47வது கேள்வி, தவறாக கேட்கப்பட்டிருந்தது. 'இதற்குரிய ஆறு மதிப்பெண்ணை, முழுமையாக தேர்வுத்துறை வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஆய்வு செய்த தேர்வுத்துறை, 47வது கேள்வியை, 'தொட்டிருந்தால்' அதற்குரிய ஆறு மதிப்பெண்ணும், முழுமையாக வழங்கப்படும் என, அறிவித்துள்ளது.

இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன், நேற்று கூறுகையில், ''குறிப்பிட்ட கேள்வியின்படி விடை அளித்தால், சரியான விடை வருகிறது என, ஆசிரியர்கள் தெரிவித்தனர். எனினும், மாணவர்கள் குழப்பம் அடைந்ததாக, தகவல் வந்துள்ளது. எனவே, அந்த கேள்வியை, 'அட்டன்' செய்திருந்தால், அதற்குரிய மதிப்பெண், முழுமையாக வழங்கப்படும்,'' என்றார். அவர் மேலும் கூறியதாவது: பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, 24ல் துவங்கும். ஏப்ரல், 15ம் தேதிக்குள், விடைத்தாள் திருத்தும் பணியை முடிக்க வேண்டும் என, ஆசிரியர்களிடம் தெரிவித்து உள்ளோம். இந்த பணியில், 50 ஆயிரம் ஆசிரியர், இதர ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். 66 மையங்களில், விடைத்தாள் திருத்தும் பணி நடக்கும். ஏப்ரல், 15க்குள், இந்த பணி முடிந்தால், அதற்கு அடுத்த கட்ட பணிகள் முடிய, மேலும், 15 நாள் ஆகும்.

எனவே, கடந்த ஆண்டைப்போல், மே, முதல் வாரத்தில், தேர்வு முடிவை வெளியிட திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு, தேவராஜன் தெரிவித்தார். கடந்த ஆண்டு, மே, 9ல், தேர்வு முடிவு ?வளியானது. இந்த ஆண்டு, மிக விரைவாக, விடைத்தாள் திருத்தும் பணி முடியும்பட்சத்தில், ஒரு வாரம் முன்னதாக முடிவு ?வளியாகவும் வாய்ப்பு உள்ளது.