இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, January 12, 2014

தேசிய வருவாய்வழி திறன் தேர்வு விண்ணப்பிக்க ஜன. 20 வரை வாய்ப்பு

தேசிய வருவாய் வழி, திறன்படிப்பு தேர்வுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க, ஜன.,20 வரை வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது.எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன்படிப்பு உதவி தொகை திட்டத்தேர்வு பிப்.,22ல் நடக்க உள்ளது. தேர்வு கட்டணமாக ஒருவருக்கு ரூ.50 செலுத்த வேண்டும். வெற்றி பெறுபவர்களுக்கு, பிளஸ்2 வரை மாதந்தோறும் ரூ.500 உதவித்தொகை வழங்கப்படும்.தேர்வு எழுதுபவர்கள், ஜன.,10 வரை, www.tndge.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது. தற்போது, விண்ணப்பிக்கும் தேதி, ஜன.,20 வரை நீடிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பித்தபின், பதிவிறக்கம் செய்த விண்ணப்பம் மற்றும் தேர்வு கட்டணத்துடன், ஜன.,21, 22 ல் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலங்களிலும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்களிலும் ஒப்படைக்க வேண்டும்.

வாசிப்பு திறனை மேம்படுத்துங்கள் : ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு உத்தரவு

    மாணவர்களிடம் "வாசிப்பு திறன்' குறைந்து வருவதால், அதை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள, அனைவருக்கும் கல்வி திட்ட ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் அடிப்படை, கட்டட வசதிகள், மாணவர்களுக்கு தேவையான கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. இத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு நிறுத்தப்பட்ட நிலையில், வட்டார மேற்பார்வையாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

அவர்கள் பணியை, ஆசிரியர் பயிற்றுனர்களின், சீனியர் பொறுப்பில் இருப்பவர்கள், கூடுதலாக கவனித்து வருகின்றனர். இவர்களுக்கு முறையான பொறுப்புகள் வழங்கப்படாத நிலையில், தற்போது, பள்ளிகளின் மாணவர்களின் தரத்தை அறியும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது; பள்ளிகளில், மாணவர்களின் வாசிப்பு திறன் 50 சதவீதம் வரை தான் உள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் பணியாற்றும், ஆசிரிய பயிற்றுனர்கள், பள்ளிகள் வாரியாக சென்று, மாணவர்களின் வாசிப்பு திறன், எழுதும் திறனை பரி சோதித்து, 100 சதவீதம் வாசிப்பு, எழுதும் திறனை உருவாக்குமாறு, கூறியுள்ளனர். பொங்கல் முடிந்த பின், நிதி ஒதுக்கீடுபெறப்பட்டு, புதிய பணிகள் தொடங்க வாய்ப்புகள் உள்ளன, என்றார்.

டிஇடி சான்று சரிபார்க்கும் பணி வரும் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் நடைபெறுகிறது

. முதுநிலை பட்டதாரிகளை நியமிப்பதற்கான போட்டித் தேர்வின் இரண்டாவது தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் தாவரவியல், வரலாறு, வணிகவியல், வேதியியல், இயற்பியல் உட்பட 5  பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் டிஆர்பி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர, ஆசிரியர் தகுதி தேர்வில் தாள் ஒன்று தாள் இரண்டு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சாரிபார்க்கும் பணிகள் வரும் 20ம் தேதி முதல் 28 வரை  தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் நடக்கிறது. இதற்கான அழைப்பு கடிதங்கள், தேர்ச்சி பெற்றவர்களின் விபரங்கள் ஆசிரியர் தகுதி தேர்வு இணைய தளத்தில்  வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் 8 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு அதை விட 2400 கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Saturday, January 11, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு: இரண்டாம் தாளின் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியீட

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளின் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சனிக்கிழமை (ஜன.11) வெளியிட்டது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இரண்டாம் தாளில் 4 கேள்விகளுக்கான முக்கிய விடைகளை மாற்ற செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி, நான்கில் இரண்டு கேள்விகளை நீக்கி ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்தது. நீக்கப்பட்ட இரண்டு கேள்விகளுக்கும் தலா ஒரு மதிப்பெண் வழங்கப்பட்டதால், இரண்டாம் தாளில் 2 ஆயிரத்து 436 பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து, இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 16,932 ஆக உயர்ந்துள்ளது. முதல் தாள் தேர்வுக்கான முக்கிய விடைகளில் மாற்றம் இல்லாததால், அந்த தேர்வு முடிவுகளில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகள் ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் நடைபெற்றது. முதல் தாளை 2.62 லட்சம் பேரும் இரண்டாம் தாளை 4 லட்சம் பேரும் எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் 5-ஆம் தேதி வெளியிடப்பட்டன. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் 12 ஆயிரத்து 596 பேரும் இரண்டாம் தாளில் 14 ஆயிரத்து 496 பேரும் தேர்ச்சி பெற்றனர் இந்தத் தேர்வுக்கான முக்கிய விடைகளை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் இரண்டாம் தாளில் 4 முக்கிய விடைகளை மாற்றி உத்தரவிட்டது. அதனடிப்படையில், விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு, திருத்தப்பட்ட புதிய தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. ஜனவரி 20 முதல் 28 வரை சான்றிதழ் சரிபார்ப்பு: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜனவரி 20 முதல் 28 வரை நடைபெற உள்ளது. நீலகிரி, பெரம்பலூர் மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 30 மாவட்டங்களில் இந்த சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்ற தேர்வர்கள், ஜனவரி 27-ஆம் தேதி நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம். இவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மாவட்டங்களில் உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களுக்குச் செல்ல வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையில் 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 13 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

டிட்டோஜாக் அமைப்பில் இருந்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வெளியேற்றம


இன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கல்லூரி ஆசிரியர் சங்க கட்டடத்தில் டிட்டோஜாக் கூட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைமையில் நடைபெற்றது. அப்பொழுது நேற்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது, பின்பு அடுத்தகட்ட போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்ட போது பிப்ரவரியில் பேரணி மேற்கொள்வது என முடிவு எடுக்கப்பட்ட போது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஏற்கனவே எடுத்த தனது நிலைப்பாட்டில் மாறாமல் பிடிவாதம் பிடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது

. இதை குறித்து மற்ற 6 சங்கங்கள் ஆட்சேபம் தெரிவிக்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் அக்கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.
இதையடுத்து நடைபெற்ற கூட்டத்தில் மற்ற 6 சங்கங்கள் இணைந்து  பிப்ரவரி 2ஆம் தேதி மாவட்ட அளவில் பேரணி நடத்துவது என்றும், போஸ்டர், துண்டு பிரசுரம் மற்றும் செலவு ஆகியவை அனைத்து சங்கங்களும் ஏற்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதையடுத்து அனைத்து சங்கங்களும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை டிட்டோஜாக் அமைப்பில் இருந்து நீக்கி முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

TNTET 2013 - Certificate Verification Venue Center List

Tamil Nadu Teacher Eligibility Test 2013 - Click here for Paper - I - Certificate Verification Individual Query

Tamil Nadu Teacher Eligibility Test 2013 - Click here for Paper - I and Paper II - Certificate Verification Call Letter

Friday, January 10, 2014

Tamil Nadu Teacher Eligibility Test revised Result -2013

TNPSC அட்டவணை வெளியீடு

78 பணியிடங்களுக்கான கடந்த மாதம் வெளியிடப்பட்ட குரூப்–1 தேர்வு ஏப்ரல் 26–ந் தேதி முதல்நிலை தேர்வு நடத்தப்படும். மெயின் தேர்வு செப்டம்பர் 20–ந் தேதி நடத்தப்படும். இந்த வருடம் அறிவிக்கப்பட உள்ள தேர்வு விவரங்கள் வருமாறு:–

குரூப்–2 தேர்வு

1181 பணியிடங்களுக்கான குரூப்–2 (நேர்முக தேர்வு கிடையாது) தேர்வு மே 15–ந் தேதி நடத்தப்பட்டு ஆகஸ்டு 3–வது வாரத்தில் முடிவு வெளியிடப்படும்.

டிராப்ட்ஸ்மென் 3–வது கிரேடு பதவிக்கு 5 பணியிடங்களுக்கு மே 3–ந் தேதி தேர்வு நடத்தப்பட்டு, ஜூலை 2–வது வாரத்தில் முடிவு வெளியிடப்படும்.

குரூப்–6 தேர்வில் வன பயிற்சியாளர்கள் 26 பேரை தேர்வு செய்ய ஜூன் 1–ந் தேதி தேர்வு நடத்தப்பட்டு முடிவு செப்டம்பர் 2–வது வாரத்தில் வெளியிடப்படும்.

மாவட்ட கல்வி அதிகாரிகள்

11 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங்களுக்கு ஜூன் 8–ந் தேதி முதல்நிலை எழுத்துதேர்வு நடத்தப்பட்டு ஜூலை 3–வது வாரத்தில் முடிவு வெளியிடப்படும். மெயின் தேர்வு ஆகஸ்டு 9–ந் தேதி நடத்தப்பட்டு நேர்முகத்தேர்வு நவம்பர் 2–வது வாரம் நடக்கும்.

2,342 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு ஜூன் 15–ந் தேதி நடத்தப்படும்.

குரூப்–5 தமிழ்நாடு தலைமைச்செயலக அலுவலர் பணிக்காக 25 பேரை தேர்வு செய்ய ஜூன் 22–ந் தேதி தேர்வு நடத்தப்படும். முடிவு ஆகஸ்டு 2–வது வாரத்தில் வெளியிடப்பட்டு, நேர்முகத்தேர்வு ஆகஸ்டு 4–வது வாரத்தில் நடத்தப்படும்.

என்ஜினீயரிங் பணி

உதவி மேலாளர் பணிக்கான 4 பேரை தேர்வு செய்ய ஜூன் 28–ந் தேதி தேர்வு நடத்தப்பட்டு, முடிவு ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும். 4–வது வாரம் நேர்முகத்தேர்வு நடத்தப்படும். 98 என்ஜினீயரிங் பணிக்கான தேர்வு ஜூன் 29–ந் தேதி நடத்தப்பட்டு முடிவு ஜூலை முதல் வாரம் அறிவிக்கப்படும். ஜூலை 3–வது வாரத்தில் நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.

குரூப்–2 (நேர்முகத்தேர்வுடன் கூடியது) தேர்வுக்கு எத்தனை பணிகள் என்ற விவரம் பின்னர் அறிவிக்கப்படும். அந்த தேர்வு ஜூலை 6–ந் தேதி நடத்தப்படும். குரூப்–4 தேர்வு அக்டோபர் மாதம் 19–ந் தேதி நடத்தப்பட்டு, டிசம்பர் 2–வது வாரத்தில் முடிவு வெளியிடப்படும்.

மீண்டும் குரூப்–1 தேர்வு

குரூப்–1 முதல்நிலை தேர்வு 2015–ம் ஆண்டு ஏப்ரல் 3–வது வாரம் நடத்தப்பட்டு, ஜூன் 2–வது வாரம் முடிவு வெளியிடப்படும். மெயின் தேர்வு ஆகஸ்டு 2–வது வாரத்தில் நடத்தப்பட்டு, நவம்பர் முதல் வாரம் நேர்முகத்தேர்வு நடத்தப்படும். இவை உள்பட 29 வகையான தேர்வுகள் 2015–ம் ஆண்டு ஏப்ரல் வரை நடத்தப்பட உள்ளது.

தேர்வு எழுதுபவர்கள் அவர்கள் தமிழ் வழியில் படித்திருந்தால் அதற்கான சான்றிதழ்கள், சாதி சான்றிதழ்களை சரியாக சமர்ப்பிப்பதில்லை. இதுபோன்ற காரணத்தால் தான் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகிறது. 13 லட்சம் பேர் எழுதிய குரூப்–4 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும்.

இவ்வாறு நவநீதகிருஷ்ணன் கூறினார். ஆணையத்தின் செயலாளர் விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா ஆகியோர் உடன் இருந்தனர்.

நேற்றைய அறிவிப்பில் மொத்தம் 3 ஆயிரத்து 700 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

டியூஷனுக்குக் கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை: ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

   அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களை டியூஷனுக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு வியாழக்கிழமை (ஜன.9) அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்:

   அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உயர் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியரைக் கட்டாயப்படுத்தி சில ஆசிரியர்கள் டியூஷனுக்கு (தனி வகுப்பு) வரவழைத்து கட்டணம் வசூலிப்பதாக அரசுக்குப் புகார்கள் வந்துள்ளன. இந்த நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கவை. விழுப்புரம் மாவட்டத்தில் கட்டாய தனி வகுப்புகளால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக துறையின் கவனத்துக்கு எடுத்துவரப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் உடனடியாக தாற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களைக் கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலித்து டியூஷன் நடத்துவது போன்ற முறைகேடான செயல்களில் ஈடுபடுவதை ஆசிரியர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

இந்த அறிவுரைகளை மீறிச் செயல்படும் ஆசிரியர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கோரப்படுகிறார்கள்.

Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Revised Examination Results and Provisional Certificate Verification List (Physics, Chemistry, Botany, History & Commerce)

2,342 வி.ஏ.ஓ., பணிக்கு ஜூன் 15ல் தேர்வு

    கடந்த ஆண்டு ஜனவரி, 31ல் தான், தேர்வு அட்டவணை வெளியானது; 2012ல், பிப்ரவரி மாதம் வெளியானது. இந்த ஆண்டு, மிகவும் முன்னதாக, ஜனவரி, 10ம் தேதியே வெளியிட்டு உள்ளோம்.இந்த ஆண்டு, 23 வகையான தேர்வுகள் நடக்க உள்ளது. இதில், குரூப் 2 பிரிவில், 1,181 இடங்கள்; கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) பணிக்கு, 2,342 இடங்கள்; ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கு, 98 இடங்கள் நிரப்பபட உள்ளன.கடந்த ஆகஸ்ட்டில் நடந்த, குரூப் 4 தேர்வின் முடிவு, இம்மாத இறுதியிலோ அல்லது பிப்ரவரி, முதல் வாரத்திலோ வெளியிடப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

   அறிவிக்கப்பட்டதில், 3,700 காலி பணியிடங்கள் மட்டும் இடம் பெற்று உள்ளன. குரூப் 1, குரூப் 4 உட்பட, எட்டு வகையான தேர்வுகளுக்கு, காலி பணியிடங்கள் விவரம் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து, தேர்வாணைய செயலர் விஜயகுமார் கூறுகையில், ''அரசிடம் இருந்து பெற்ற காலி பணியிடங்களை தெரிவித்து உள்ளோம். மற்ற தேர்வுகளுக்கான பணியிடங்கள், அரசிடம் இருந்து வந்ததும், அறிவிக்கப்படும்,'' என, தெரிவித்தார்.அதிகமான தேர்வர் பங்கேற்கும், வி.ஏ.ஓ., தேர்வு அறிவிப்பு, மார்ச், இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என்றும், தேர்வு, ஜூன், 15ல் நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 1,181 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வு, மே, 18ல் நடக்கிறது.தேர்வு அட்டவணை, www.tnpsc.gov.in என்ற, தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

TNPSC 2014-15 Annual planner

தேசிய வருவாய்வழி மற்றும் திறன்படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) 2013 - தேர்வர்களின் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் - கால நீட்டிப்ப

   தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) 2013 சம்பந்தமான தேர்வர்களின் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தேதிக்குப் பதிலாக   11 .01.2014 முதல் 20.01.2014 வரை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய கால நீட்டிப்பு செய்யப்படுவதாக அரசுகள் தேர்வுகள் துறை அறிவிப்பு.

Thursday, January 09, 2014

தேர்வுத்துறை எச்சரிக்கை கேள்வித்தாள் வெளியானால் தலைமை ஆசிரியர்கள் பொறுப்பு

   தேர்வு நடக்கும் நாளில் ஒவ்வொரு பாடத் தேர்வின் போதும் அன்றைய தேர்வுக்குரிய கேள்வித்தாளை காலை 7 மணி முதல் 8 மணிக்குள் அந்தந்த தேர்வு மையங்களுக்கு எடுத்து சென்று சப்ளை செய்ய தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் கேள்வித்தாள் காப்பு மையங்கள் அமைக்கப்படுகின்றன. கேள்வித்தாள் காப்பு மையத்தில்  இருந்து வேன் அல்லது காரில் கேள்வித்தாள் எடுத்து செல்லப்பட்டு தேர்வு மையங்களில் ஒப்படைக்கப்படும். காலை 8 மணிக்குள் கேள்வித்தாள் வந்து சேரும். கடந்த ஆண்டுகளில் தேர்வு மையத்தில் இருந்து யாராவது ஒருவர் கேள்வித்தாள் காப்பு  மையங்களுக்கு சென்று கேள்வித்தாளை வாங்கி வர வேண்டிய நிலை இருந்தது.

     அதனால் பல சிரமங்கள் ஏற்பட்டன. அதனால் இந்த ஆண்டு காப்பு மையங்களில் இருந்தே அதிகாரிகள் கேள்வித்தாளை தேர்வு மையங்களுக்கு சப்ளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்வு மையங்களுக்கு வரும் கேள்வித்தாள் கட்டுகளை அந்த பள்ளியில் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படும் தலைமை ஆசிரியர்கள் தான் பிரிக்க வேண்டும். அந்த மையத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு அறைகளில் எழுத உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவரே கேள்வித்தாளை பிரித்து கொடுக்க வேண்டும். இதில் ஏதாவது தவறு நேர்ந்தால் கண்காணிப்பாளராக நியமிக்கப்படும் தலைமை ஆசிரியர்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

காப்பு மையங்களில் இருந்து கேள்வித்தாள் மையங்களுக்கே நேரடியாக சப்ளை செய்யும் முறை இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் கால விரயம் குறைகிறது. தேர்வு  முடிந்த பிறகு தேர்வு அறை மேற்பார்வையாளர்களே விடைத்தாள்களை பெற்று அதை ஒரு கவரில்  போட்டு சீல் வைக்க வேண்டும் என்றும் தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

பள்ளி செல்வதற்கு பஸ் வசதி இல்லாத 6 ஆயிரம் மாணவர்கள்

பஸ் வசதி இல்லாமல் தவிக்கும் 6 ஆயிரம் மாணவர்களுக்கு மாதம் ரூ.300 உதவித்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. புவி தகவல் முறைமை ஆய்வின் மூலம் தமிழகத்தில் 2013-14ம் கல்வியாண்டில் ஒரு கி.மீ, மூன்று கி.மீ தொலைவில் தொடக்க மற்றும் உயர் தொடக்க பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகளில் அரசு பஸ் வசதி இல்லாத குடியிருப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. கோவை, தர்மபுரி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை, தஞ்சாவூர், நீலகிரி, பெரம்பலூர், திருநெல்வேலி, திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய 11 மாவட்டங் களை சேர்ந்த பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகளில் உள்ள 6,145 மாணவர்களுக்கு பள்ளி வந்து செல்ல போக்குவரத்து வசதி இல்லாத நிலை உள்ளது.

    இதில் மலையோர பகுதிகள் மட்டுமின்றி இதர பகுதிகளிலும் குடியிருப்புகள் இருக்கின்ற பகுதியில் சுமார் 3 கி.மீ தூரத்திற்கு பள்ளி வசதியோ, அரசு பஸ் வசதியோ இல்லாத நிலை உள்ளது. இங்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்திட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்கம் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது. அந்த வகையில் ஒரு குழந்தைக்கு ஒரு கல்வியாண் டுக்கு ரூ.3000 என்ற அடிப்படையில் 6,145 குழந்தை களுக்கு ரூ.1 கோடி 84 லட்சத்து 350 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாதம் ரூ.300 வீதம் ஒரு குழந்தைக்கு வழங்கப்படும்.

    ஒவ்வொரு மாதமும் பள்ளி வந்து செல்ல போக்குவரத்து வசதி பெற்ற குழந்தையின் பெற்றோரிடம் இருந்து பயனீட்டு சான்று பெற்று சம்பந்தப்பட்ட கிராம கல்விக்குழு அல்லது பள்ளி மேலாண்மை குழு மூலம் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளருக்கு காசோலையாக வாகன பயண கட்டணத்தை வழங்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாணவ, மாணவியரின் 75 சதவீத வருகை இதில் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், ஒரு மாதத்திற்கு ஒரு குழந்தைக்கு ரூ.300க்கு மிகாமல் செலவிடப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு மாதமும் இந்த வசதி பெறும் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியர் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட பெற்றோருக்கு கூட்டம் நடத்த வேண்டும். இந்த கூட்டத்தில் வாகனத்தை தேர்வு செய்தல், சமுதாய பங்கேற்பு, இந்த வசதி எவ்வாறு அவர்களது குழந்தையை பள்ளி செல்ல ஊக்குவிக்கிறது என்பது போன்றவற்றை தெளிவுபடுத்த வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அரசு ரூ.277 கோடி ஒதுக்கீடு 4340 பள்ளிகளில் கம்ப்யூட்டர் லேப்

    பள்ளிகளுக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பம் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு சட்டப் பேரவையில் அறிவித்தது. அதை 2 பிரிவுகளாக பிரித்து செயல்படுத்தவும் அரசு திட்ட மிட்டது. முதல் பிரிவில் 1329 தொடக்க பள்ளிகளில் தனியார் கம்ப்யூட்டர்கள் அமைப்பதற்கும், கம்ப்யூட்டர் மற்றும் கருவிகள் பொருத்தவும் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவின் கீழ் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 95,470 மாணவர்கள் பயன்பெறுவார்கள். முதற்கட்டமாக இந்த பிரிவின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படுத்த உள்ளனர். 2வது பிரிவில் பள்ளிகளில் தவகல் தொழில்நுட்ப திட்டம்(ஐசிடி) செயல்படுத்தப்பட உள்ளது. அதில் மத்திய அரசின் பங்காக 75 சதவீதமும், மாநில அரசின் பங்காக 25 சதவீதமும் செலவிடப்பட உள்ளது.

இந்த தகவல் தொடர்பு திட்டம் 4,340 அரசு உயர்நிலை மேனிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும். அதாவது ‘உருவாக்கி, உரிமையாக்கி, இயக்கி மாற்றுதல்’ என்ற அடிப்படையில் இந்த திட்டம் செயல்படும். பள்ளிகளில் கம்ப்யூட்டர் லேப்கள் அமைக்க தனியாருக்கு டெண் டர் விடப்படுகிறது. அவர்களே   அந்த லேப்களில் தலா ஒரு ஆசிரியரை நியமித்துக் கொள்வார்கள். 5 ஆண்டு களுக்கு   அந்த  ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்திய பிறகு, அரசிடம் ஒப்படைத்துவிட்டு செல்வார்கள். இதற்கான டெண்டரை அரசு கடந்த வாரம் வெளியிட்டது.

ஒரு லேப் அமைக்க குறைந்தபட்ச தொகையாக ரூ.19 லட்சத்து 90 ஆயிரம் நிர்ணயம் செய்துள்ள னர். இதைத்தொடர்ந்து பல கம்ப்யூட்டர் நிறுவன ங்கள் டெண்டர் எடுக்க போட்டி போடுகின்றன.

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளுக்கான திருத்தப்பட்ட தேர்ச்சிப் பட்டியல் பொங்கலுக்குப் பிறகு வெளியிடப்படும்

   முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளில் முக்கிய விடைகளை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதில் முதல் தாளுக்கான விடைகளில் திருத்தம் ஏதுமில்லை எனத் தெரிகிறது. இரண்டாம் தாளுக்கான சில முக்கிய விடைகளை திருத்தி வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருத்தப்பட்ட விடைகளின் அடிப்படையில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, புதிய தேர்ச்சிப் பட்டியல் ஜனவரி மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்ச்சி பெற்ற அனைவரும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆகஸ்ட் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. முதல் தாளை 2 லட்சத்து 60 ஆயிரம் பேரும், இரண்டாம் தாளை 4 லட்சம் பேரும் எழுதினர். இந்தத் தேர்வுக்கான முடிவுகள் நவம்பர் 5-ம் தேதி வெளியிடப்பட்டன.

முதல் தாளில் 12 ஆயிரத்து 596 பேரும், இரண்டாம் தாளில் 14 ஆயிரத்து 496 பேரும் தேர்ச்சி பெற்றனர். ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய விடைகளை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. இதனால், சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவது தாமதமானது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும், 13 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பட்டியல்: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் திருத்தப்பட்ட தேர்வுப் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது. நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ள பாடங்களைத் தவிர்த்து மீதமுள்ள பாடங்களுக்கான திருத்தப்பட்ட புதிய தேர்வுப் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.

மொத்தம் 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. தமிழ்ப் பாடத்துக்கான வினாத்தாளில் எழுத்துப் பிழைகள் உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.