இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, January 05, 2014

ஆசிரியர் பயிற்றுனர் எண்ணிக்கை குறைப்பு: பள்ளிக்கல்வித்துறை திட்டம்

   அனைவருக்கும் கல்வி திட்ட மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுனர்களை குறைக்க, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், அனைவருக்கும் (எஸ்.எஸ்.ஏ.,) கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றிய, வட்டார மேற்பார்வையாளர்கள், அரசு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து, முதுநிலையில் உள்ள ஆசிரியர் பயிற்றுனர்கள் 115 பேரும், அரசுப் பள்ளி ஆசிரியராக மாறுதல் செய்யப்பட்டனர். இதில், எஞ்சிய ஆசிரியர் பயிற்றுனர்கள் 500 பேரை விரைவில், அரசு பள்ளி ஆசிரியராக மாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

தற்போதுள்ள ஆசிரியர் பயிற்றுனர்களை கொண்டே, இத்திட்டத்தை செயல்படுத்த, அரசு திட்டமிட்டுள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: 10 ஆண்டுகளை கடந்த, இத்திட்டம், இடைநிலைக் கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்துடன் இணைக்கப்பட உள்ளது; இதற்கான, நிதி ஒதுக்கீடும் குறைந்துவிட்டது. மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுனர்கள் பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நான்காயிரம் பயிற்றுனர்களை, 10 பள்ளிகளுக்கு ஒரு பயிற்றுனர், மேற்பார்வையாளர் என, நியமித்து, திட்டம் நிறைவு செய்யப்படும். இவ்வாறு கூறினார்.

NMMS Examination Online Application

Saturday, January 04, 2014

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ்:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் போனஸ் அறிவிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சி, டி பிரிவி ஊழியர்களுக்கு அதிகப்பட்சமாக ரூபாய் 3 ஆயிரத்திற்கு உட்பட்டு ஒரு மாத ஊதியம் போனஸாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். ஏ, பி ஊழியர்களுக்கு ரூபாய் 1000 போனஸ் வழங்கப்படும் எனவும், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், முன்னாள் விஏஒ-க்களுக்கு ரூபாய் 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

10 ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க ஜன.7ல், மண்டல ஆய்வுக்கூட்டம்

10 ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில், தேர்ச்சி விகிதம் அதிகரிப்பது குறித்து, மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம், மதுரையில், ஜன.,7 ல் நடக்கிறது. பள்ளி கல்வித் துறை சார்பில், மதுரையில் ஜன.,7ல், மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம், அமைச்சர் வீரமணி தலைமையில் நடக்கிறது. துறை செயலாளர் சபீதா உள்ளிட்ட இயக்குநர்கள் பங்கேற்கின்றனர். மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்ட முதன்மை, மாவட்ட, தொடக்க, கல்வி அலுவலர்கள். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் 70 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில், 10 ம் வகுப்பு, பிளஸ் 2 .தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பது, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் விவரம், அடுத்த கல்வி ஆண்டில் துவக்கப்பட உள்ள ஆங்கில வழிக்கல்வி வகுப்புகள், முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பபட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இதே போல், ஜன.,6 ல் திருநெல்வேலியிலும், 8 ல் திருச்சியிலும், 10 ல் ஈரோட்டிலும், 11 ல் வேலூரிலும், ஜன., 27 ல் சென்னையிலும் ஆய்வு கூட்டம் நடக்கிறது.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் 'டேட்டா சென்டருக்கு' மாற்றம்

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கணக்கு நடைமுறைகள், மாநில கணக்காயரிடம் (அக்கவுண்ட் ஜெனரல்) இருந்து, 'டேட்டா சென்டருக்கு' மாற்றப்பட்டது. 1.4.2003க்குப் பிறகு தமிழக அரசு பணியில் சேர்ந்தவர்கள், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ளனர். இந்த ஊழியர்களிடம் மாதந்தோறும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் 10 சதவீதத் தொகைக்கு, கணக்கு எண் ஒதுக்கீடு செய்து, அதை மாநில கணக்காயரே இதுவரை பராமரித்து வந்தார். இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசு உத்தரவில், 31.12.2013 வரை ஊழியர்களுக்கு புதிய கணக்கு எண் கேட்டு, சம்பந்தப்பட்ட துறையின் அலுலவக அதிகாரிகள், மாநில கணக்காயருக்கு தகவல் அனுப்பினர்.

அதன்படி கணக்கு எண் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 1.1.2014 முதல் அரசு கருவூல கணக்குத்துறை கமிஷனருக்கே அனுப்ப வேண்டும். இந்த அலுவலர்களின் கணக்குகளும் மாநில டேட்டா சென்டருக்கு மாற்றப்படும். 2013-சு 14ம் ஆண்டுக்கான பிடித்தம் செய்த தொகைக்கான 'ஸ்லிப்' டேட்டா சென்டரில் இருந்து அனுப்பப்படும்.இனி கணக்குத் தொடர்பான எந்தக் கடிதப் போக்குவரத்தும் (விடுபட்ட உறவுத்தொகை) 31.12.2013 வரை மாநில கணக்காயரிடமும், அதன்பிறகு உள்ளவை அந்தந்த துறைக்கும் அனுப்பப்படும்.

குரூப்-4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும்: நவநீத கிருஷ்ணன் தகவல் -

, 13 லட்சம் பேர் எழுதிய குரூப்-4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று மதுரையில் செய்தியாளர்களிடம் டிஎன்பிஎஸ்சி தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.மேலும், குரூப்-1 தேர்வுக்கான முதல் கட்ட தேர்வு ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் 10-ந்தேதி வெளியாகிறது

  தமிழகத்தில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் 6-ந்தேதி வெளியாகும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கான  பணிகள் முழுமையடையாததால் பட்டியல் வெளியிடுவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வருகிற 10-ந்தேதி வாக்காளர் பட்டியல் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  பிரவீண்குமார் கூறினார்.

Friday, January 03, 2014

அரையாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது

தலைமை ஆசிரியர்கள் கூட்டம் கடந்த வருடம் மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்–2 தேர்வுகளில் எந்த அரசு பள்ளிகளில் 70 சதவீதத்திற்கு குறைவாக தேர்ச்சி சதவீதம் உள்ளதோ அப்படிப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை அழைத்து கூட்டம் நடத்த திட்டமிட்டோம். அதன்படி நேற்று கோவையில் முதல் கட்டமாக தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடந்தது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, பள்ளிகல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உள்பட அனைவரும் கலந்து கொண்டோம். சிறப்பு பயிற்சி 70 சதவீத தேர்ச்சிக்கு குறைவான தேர்ச்சி உடைய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தக்க அறிவுரை வழங்கப்பட்டது. அரையாண்டு தேர்வில் குறைவாக மதிப்பெண் பெற்ற எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தவேண்டும் என்று கூறி உள்ளோம்.

எந்த மாணவர் எந்த பாடத்தில் தேர்வு பெறவில்லை என்பதை கண்டுபிடித்து அந்த பாடத்தில் நன்றாக விளக்கி பயிற்சி அளிக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளோம். எப்படியும் 100 சதவீத தேர்ச்சியை எட்டவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளோம். நெல்லையில் 6–ந்தேதி கூட்டம் இது போன்ற கூட்டம் நெல்லையில் 6–ந்தேதி நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் 70 சதவீதத்துக்கு குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்வார்கள். இப்படியாக தமிழ்நாடு முழுவதும் உடனடியாக கூட்டம் நடத்தி தலைமை ஆசிரியர்களுக்கு தக்க அறிவுரை வழங்க உள்ளோம்.

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கு 605 பேரை ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்து அறிவித்துள்ளது.

ஆசிரியர்கள் தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து எழுத்து தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. அதன் காரணமாக போட்டித்தேர்வு தமிழ்நாடு முழுவதும் கடந்த வருடம் ஜூலை மாதம் 21–ந் தேதி நடத்தப்பட்டது. 421 மையங்களில் 1 லட்சத்து 59 ஆயிரம் பேர் எழுதினார்கள். இதில் தமிழ் பாடத்துக்கு உரிய தேர்வில் 44 கேள்விகளில் அச்சுப்பிழை இருப்பதாக பிரச்சினை எழுந்தது. அந்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றதால் தமிழ்பாடம் தவிர மற்ற பாடங்களுக்கு உரிய தேர்வு முடிவு முதலில் வெளியிடப்பட்டது.

அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. தமிழ் ஆசிரியர்கள் தேர்வு தமிழ் பாடத்திற்கு உரிய தேர்வு முடிவு வெளியிடப்பட்டு கடந்த 30 மற்றும் 31 தேதிகளில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. நேற்று ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வுவாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 3 நாட்கள் தான் ஆகிறது. மொத்தம் 605 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர் விவரம் அனைத்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கான ஆணையை பள்ளி கல்வித்துறை வழங்க உள்ளது.

10ம் வகுப்பு மாணவர்களுக்கு முப்பருவ முறை கல்வி: பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தகவல்

எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு, முப்பருவ முறை அமல்படுத்துவது குறித்து, தீவிரமாக ஆலோசித்து வருவதாக, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் வீரமணி தெரிவித்தார். தமிழகத்தில், முப்பருவ முறை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது. சமச்சீர் பாடத்திட்டத்தை, மூன்றாக பிரித்து, ஒவ்வொரு பருவத்திற்கும் தனித்தனியாக, அக, புற மதிப்பீட்டின் படி தேர்ச்சி கணக்கிடப்படுகிறது. அக மதிப்பீட்டின் படி மாணவர்களின் தனித்திறனுக்கு 40 மதிப்பெண்களும், எழுத்து தேர்வுக்கு 60 மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது.

மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் "கிரேடு' மதிப்பிடப்படுகிறது. அரசாணையின் படி, 2013- 14 கல்வியாண்டில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும், 2014- 15ம் கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கும் முப்பருவ முறை அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுகுறித்த இறுதியான தகவல்களை பள்ளிக்கல்வித்துறை இதுவரை வெளியிடவில்லை. இதுகுறித்து, பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின் அரசு ஒப்புதலுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது. மேலும், முப்பருவ முறை அமல்படுத்தப்பட்டாலும், எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தற்போதைய முறையிலேயே, நடத்தப்பட வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அமைச்சர் வீரமணி கூறுகையில், "" எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு முப்பருவமுறை அமல்படுத்துவது குறித்து தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டில் அமல்படுத்தப்படுமா என்ற இறுதி முடிவு மேற்கொள்ளப்படவில்லை, '' என்றார்.

மார்ச் இறுதியில் பள்ளிகளில் அடிப்படை வசதி: பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் உத்தரவு

மார்ச் இறுதிக்குள் அனைத்துப்பள்ளிகளிலும் அடிப்படை வசதி மேம்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். கோவை, கரூர், திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு ஆய்வுக்கூட்டம் கோவை ஜி.டி., அரங்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி தலைமையில், நேற்று நடந்தது

  இக்கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில், 347 பள்ளிகளில் குடிநீர் வசதிகளும், 27 பள்ளிகளில் முழுமையான கழிப்பறை வசதி, திருப்பூர் மாவட்டத்தில் 235 பள்ளிகளில் குடிநீர் வசதிகளும், 113 பள்ளிகளில் போதுமான கழிவறை வசதிகளும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் உச்சநீதிமன்ற உத்தரவின் படி வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களையே இதன் முழு பொறுப்பும் சேரும். வரும் கல்வியாண்டில், கரூர், கோவை, திண்டுக்கல், திருப்பூர், ஊட்டி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மட்டும் 70 நர்சரி பிரைமரி பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட உள்ளது. இப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை தவிர்க்க முன்நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

நடக்கவுள்ள பொதுத்தேர்வுகளில் 95 சதவீத இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் செயல்பாடுகளை அமைத்துக்கொள்வது அவசியம். இவ்வாறு, சபிதா பேசினார். இக்கூட்டத்தில் 100 சதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள், ஆசிரியர்களுக்கு கேடயங்களும், பாராட்டு சான்றிதழ்களையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி வழங்கினார்.

Thursday, January 02, 2014

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பல துறைகளில் காலியாக உள்ள பேராசிரியர், மூத்த விரிவுரையாளர் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 21

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

01. Superintendent (Legal) - 01

02. Professor of Political Theory & Constitutional Law - 01

03. Senior Lecturer (Biochemistry) - 03

04. Senior Lecturer (Dentistry) - 01

05. Senior Lecturer (Tuberculosis and Respiratory Diseases) - 01

06. Professor in Civil Engineering (Technical) - 01

07. Associate Professor in Civil Engineering (Technical) - 05

08. Associate Professor in Information Technology (Technical) - 05

09. Associate Professor in Mechanical Engineering (Technical) - 01

10. Assistant Professor in Information Technology (Technical) - 02

வயதுவரம்பு: 55 வயதிற்குள் இருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் M.D, MBBS, BDS, M.Sc, B.E., B.Tech , M.E, M.Tech, Ph.D முடித்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25. இதனை Net banking ,master credit,debit card போன்ற முறைகளில் செலுத்தலாம். தாழத்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.01.2014

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட நகல் சென்று சேர கடைசி தேதி: 17.01.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை 2015 வரை ஓய்வுபெறும் முதுகலை ஆசிரியர் விபரம் மீண்டும் சேகரிப்பு

காலி பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையாக வரும் இரண்டாண்டுகளில் ஓய்வு பெறும் முதுகலை ஆசிரியர் விபரங்களை வரும் 2015ம் ஆண்டுவரை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்வித்துறையில் ஆசிரியர்கள் நிலையில் ஆயிரக்கணக் கில் காலியிடங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனை நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்த கல்வியாண்டில் ஏற்படும் முதுகலை ஆசிரியர் காலி பணியிடங் களை நிரப்பிட காலி பணியிடங்கள் பற்றிய உத்தேச மதிப்பீட்டை அரசின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டி கடந்த நவம்பர் மாதம் சேகரிக்கப்பட்டது.

அதில், முதுகலை ஆசிரியர்களில் 2014 மே மாதம் 31ம் தேதி ஓய்வு பெறுகின்றவர்கள், 2015ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி ஓய்வுபெறுகின்றவர்கள் விபரத்தை சேகரித்து அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இதில் தற்போது முதுகலை சிறுபான்மை மொழி மற்றும் சிறுபான்மை மொழிவழி முதுகலை பாடங்களில் காலியாக உள்ள பணியிடங்க ளின் விபரங்களையும், மொழிவாரியாக பாடவாரியாக தனித்தனியே சேகரித்து உடனே அனுப்ப வேண்டும் என்றும் புதிதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளியின் பெயர், ஓய்வுபெறும் ஆசிரியர், பாடம், மொழி, எந்த தேதி முதல் காலியாக உள்ளது, காலியேற்பட காரணம், யாரால், எதனால் பணி ஓய்வு, பணியிடம் அனுமதிக்கப்பட்டுள்ள அரசாணை எண் மற்றும் நாள், உபரி பணியிடம் நிரப்ப தகுதியில்லை எனில் அது தொடர்பான விபரம் போன்றவற்றையும் முழுமையாக சேகரித்து அனுப்ப வேண்டும் என பள்ளி கல்வி இணை இயக்குநர் (மேல்நிலை கல்வி) பாலமுருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

பொது தேர்வில் தேர்ச்சி பெற வினா விடை கையேடு

    பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களில், தேர்ச்சியில் பின் தங்கிய மாணவர்களுக்கு, பாட வல்லுனர் குழுவினர் 'சிறப்பு வினா விடை கையேடு' தயாரித்துள்ளனர். இதைகொண்டு, காலை, மாலை வேளைகளில், மாணவர்களுக்கு படம் நடத்தி, அரசு பொது தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி அடைய செய்யும் முயற்சியில், ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச்., 26, பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 3 ல் அரசு பொது தேர்வு துவங்க உள்ளது. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற, வினா விடை கையேடு தயாரிக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுரைப்படி, பள்ளிகளில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்து, 100 சதவீத தேர்ச்சி பெற செய்த ஆசிரியர்கள், ஒவ்வொரு பாடத்திற்கும் வினா விடை கையேடு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதை, தமிழ், ஆங்கிலம் என,இரண்டு மொழிகளில் தயாரித்து, புத்தகமாக வெளியிட்டுள்ளனர். இதன் மூலம், தேர்ச்சியில் பின் தங்கிய மாணவர்களுக்கு, காலை, மாலை வேளைகளில், சிறப்பு வகுப்பு எடுக்க உள்ளனர். 'இதன்படி மாணவர்கள், அரசு பொது தேர்வில், 100 சதவீத தேர்ச்சி அடைய முடியும்,' என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரட்டைப்பட்ட வழக்கு மீண்டும் வழக்கம் போல வாய்த்த வாங்கியதால் 7.1.2014-க்கு ஒத்திவைப்பு


  இன்று (2.1.2014) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கு நீதிமன்றத்திற்கு முதல் வேலை நாள் என்பதால் வழக்கு தன் நிலையை காலையிலேயே எட்டிப்பிடித்தது. ஒரு வருட வழக்கறிஞர் வழக்கம் போல வாய்த்த வாங்கியதால் வருகிற 7.1.2014, செவ்வாய் கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Wednesday, January 01, 2014

மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வு பிப்ரவரி 16–ந்தேதி நடக்கிறது

மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர்களாக சேருவதற்கு மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வை சி.பி.எஸ்.இ. நிறுவனம் நடத்துகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 16–ந்தேதி நாடு தழுவிய அளவில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் அதே தேதியில் தேர்வு நடத்தப்பட உள்ளது. 1–வது வகுப்பு முதல் 5–வது வகுப்புவரை பாடம் சொல்லிக்கொடுக்க தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர்கள் தாள்–1 எழுதவேண்டும். 6–வது வகுப்பு முதல் 8–வது வகுப்புவரை பாடம் நடத்த தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர்கள் தாள்–2 எழுதவேண்டும். இரு தாள்களும் எழுத விரும்புவோர் இரு தாள்களையும் எழுதலாம்.

2014 ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வு 10% முதல் 11% வரை உயரக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

நவம்பர் 2013 மாதத்திற்கான விலைவாசி உயர்வு குறியீட்டு எண் நேற்று (31.12.2013) வெளியிடப்பட்டது. இதன்படி அகவிலைப்படி  உயர்வு 99.12 சதவீதமாக உள்ளது. அதேபோல் வருகிற டிசம்பர் மாதத்திற்கான விலைவாசி குறியீட்டு எண் 100 சதவீதத்திற்கு மேல் உயரக்கூடும்....

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மீண்டும் இன்று (2.1.2014 ) விசாரணைக்கு வருகிறது

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று (2.1.2014 ) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வு முன் வரிசை எண் 50 ல்  வழக்கு விசாரணைக்கு வருகிறது. மேலும் ஏற்கனவே அரசு சார்பில் மூன்று வருட பட்டப்படிப்பே சிறந்தது என பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.இனி வருங்காலங்களில்  மூன்று வருட பட்டப்படிப்பு  வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வுக்கு எடுத்துகொள்ளப்படும் என்று அரசு முடிவு எடுத்துள்ளதால் நாளை வழக்கு முடிவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.!

இணையத்தில் எழுத்துருக்கள்: முக்கிய உத்தரவு

'அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், இணையதளங்களில், ஐந்து வகை தமிழ் எழுத்துருக்களை மட்டுமே, பயன்படுத்த வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், 30க்கும் மேற்பட்ட எழுத்துருக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில், 5 வகை எழுத்துக்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என, தகவல் தொழில்நுட்பத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ் பாரதி, தமிழ் கபிலர், தமிழ் கம்பர், தமிழ் வள்ளுவர், தமிழ் காவேரி ஆகியவை இந்த எழுத்துருக்கள் ஆகும். இவ் எழுத்துருக்களை, http://tamilvu.orgல், 'டவுன்லோடு' செய்து பயன்படுத்தலாம். நிதித்துறை செயலர் உதயச்சந்திரன், இதுகுறித்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

கிறுக்கல் நோட்டுகளை வங்கிகள் ஏற்கும்: வதந்திகளை மறுத்து ஆர்.பி.ஐ., அறிவிப்பு

'ரூபாய் நோட்டுகளில், ஏதேனும் எழுதப்பட்டிருந்தாலோ அல்லது கிறுக்கியிருந்தாலோ, அந்த நோட்டுகள், ஜனவரி, 1ம் தேதி முதல் செல்லாது; அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளும் ஏற்காது' என, சில மாதங்களுக்கு முன், தவறான செய்தி, சிலரால் பரப்பப்பட்டது. இதையடுத்து, ஏராளமான பொதுமக்கள், புத்தாண்டிற்கு முன், தங்களிடம் இருந்த கிறுக்கல் ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் கொடுத்து, புதிய நோட்டுகளை பெற்று வந்தனர். 'நீட் அண்டு கிளீன் பாலிசி': மக்களிடையே ஏற்பட்ட பீதியை தணிக்கும் விதத்தில், ரிசர்வ் வங்கி, நேற்று விளக்கம் அளித்துள்ளது. அறிக்கையில், ரிசர்வ் வங்கி தெரிவித்ததாவது:

ரூபாய் நோட்டுகளை சுத்தமாகவும், அழுக்குபடாமலும் பாதுகாக்க, கடந்த ஆகஸ்ட் மாதம், ஆர்.பி.ஐ., அனைத்து வங்கிகளுக்கும், 'நீட் அண்டு கிளீன் பாலிசி' சுற்றறிக்கை அனுப்பியது. அதில், வங்கி ஊழியர்களுக்கு சில குறிப்புகள் சொல்லப்பட்டிருந்தன. ரூபாய் நோட்டுகளை சுத்தமாக வைத்திருக்கவும், அசிங்கப்படுத்தாமலும் இருக்க, 'வாடிக்கையாளர்களை அதில் எவ்வித எழுத்துக்களையும் எழுத வேண்டாம்' என, அறிவுறுத்துமாறு ஆர்.பி.ஐ., கூறியிருந்தது. மேலும், சில வங்கி ஊழியர்களிடம், ரூபாய் நோட்டுகளில் எழுதும் பழக்கம் உள்ளது. அவர்களை இனி, அவ்வாறு எழுத வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டடனர். நம்ப வேண்டாம்: இந்த நடவடிக்கைகளின் மூலம், எதிர்காலத்தில் அழுக்கற்ற ரூபாய் நோட்டுகளை பராமரிக்க முடியும். எழுதப்பட்ட ரூபாய் நோட்டுகள், வங்கிகளில் வாங்கப்படாது என்ற வதந்தியை, பொதுமக்கள் நம்ப வேண்டாம். அனைத்து வங்கிகளும், அவ்வகை நோட்டுகளை பெற்றுக் கொள்ளும். இவ்வாறு, ஆர்.பி.ஐ., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளும் இன்று திறப்பு

   ஒன்பது நாள் விடுமுறைக்குப்பின், மாநிலம் முழுவதும், பள்ளிகள், இன்று திறக்கப்படுகின்றன. அரையாண்டு தேர்வுக்குப்பின், பள்ளிகளுக்கு, கடந்த, 24ம் தேதி முதல், நேற்று வரை, ஒன்பது நாள், விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று, அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில், செய்முறை தேர்வு குரூப் கொண்ட மாணவர்களுக்கு, இம்மாத இறுதிக்குள், தேர்வு பதிவு எண் வழங்கப்பட உள்ளது. பிப்ரவரி, முதல் வாரத்தில் இருந்து, செய்முறைத் தேர்வு துவங்கிவிடும் என்பதால், இந்த ஒரு மாதம் வரை மட்டுமே, பள்ளிகள், முழுமையான அளவில் செயல்படும்.