இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, December 17, 2013

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் தொடர்பான வழக்கு இரண்டு வாரம் ஒத்திவைப்பு-Teachertn news

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் தொடர்பான TATA பொதுச்செயலாளர் திரு.கிப்சன் அவர்கள் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 11ஆம் எண் நீதிமன்றத்தில் நீதியரசர் சுப்பையா அவர்கள் முன்னிலையில் விசாராணைக்கு வந்த போது அரசு தரப்பு  வழக்கறிஞ்சர்   இரண்டு வார கால அவகாசம் கேட்டதை தொடர்ந்து வழக்கு 2 வாரம் ஒத்திவைத்து நீதிபதி  உத்தரவிட்டார்.

Chess game video

NMMS exam instructions 2014

Monday, December 16, 2013

ஒன்பதாம் வகுப்பு, மூன்றாம் பருவ பாட புத்தகங்களுக்கு, கல்வி வாரியத்தின் ஒப்புதலை பெற, 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, தனியார் பதிப்பகங்களுக்கு, அழைப்பு

  மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியத்தின் உறுப்பினர் - செயலர், பழனிசாமி அறிவிப்பு: ஒன்பதாம் வகுப்பிற்கு, இறுதி செய்யப்பட்ட மூன்றாம் பருவ பாட திட்டம், பொதுமக்கள் பார்வைக்காக, www.dse.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ் பாடம் தவிர்த்து, இதர பாட புத்தகங்களுக்கு ஒப்புதல் பெற, புத்தகங்களின், இரு நகல்களுடன், உறுப்பினர் - செயலர், மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியம் மற்றும் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (இடைநிலைக்கல்வி), கல்லூரி சாலை, சென்னை-6 என்ற முகவரிக்கு, 27ம் தேதி, மாலை, 5:00 மணிக்குள், நேரிலோ, அஞ்சல் வழியாகவோ விண்ணப்பிக்கலாம்.

உத்தேச விலை அவசியம் : ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையில், தமிழ் பாடம் தவிர்த்து, இதர பாடங்களுக்கு, ஒப்புதல் பெறவும் விண்ணப்பிக்கலாம். பாட புத்தகத்தின், உத்தேச விலையை, குறிப்பிட வேண்டும். பாட புத்தகங்களுக்கு, ஒப்புதல் அளிப்பது, மாநில கல்வி வாரியத்தின் இறுதி முடிவுக்கு உட்பட்டது. இவ்வாறு, பழனிசாமி அறிவித்து உள்ளார். தனியாரை கண்டுகொள்வதில்லை

: மாநில கல்வி வாரியத்தின் ஒப்புதலை பெறும் பதிப்பகங்கள், தாங்கள் அச்சிட்ட பாட புத்தகங்களை, பள்ளிகளுக்கு, விற்பனை செய்யலாம். பெரும்பாலான பள்ளிகள், அரசு பாட புத்தகங்களையே வாங்கி விடுவதால், தனியார் பதிப்பகங்களிடம் இருந்து, அதிகளவில், தனியார் பள்ளிகள், புத்தகங்களை கொள்முதல் செய்வதில்லை. இதனால், விண்ணப்பிக்கும் பதிப்பகங்களின் எண்ணிக்கை, ஒற்றை இலக்கத்தை தாண்டுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கி ஊழியர்கள் நாளை ஸ்டிரைக்

   சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள், நாளை ஸ்டிரைக்கில் குதிக்கின்றனர். இதனால், நாடு முழுவதும், பொதுத்துறை வங்கிகளின் பணிகள், பாதிப்புக்கு உள்ளாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் ஊழியர்களின் தொழிற்சங்கங்களுக்கு இடையே, முதன்மை தொழிலாளர் கமிஷனர் முன் நடந்த பேச்சுவார்த்தையில், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

ஸ்டிரைக் குறித்து, வாடிக்கையாளர்களுக்கு, வங்கிகள் ஏற்கனவே தகவல் தெரிவித்துள்ளன. நாடு முழுவதும், 27 பொதுத்துறை வங்கிகளின் கிளைகளில், 8 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

இ.பி.எப்., முதலீடு 8.5 சதவீத வட்டி?

   தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட, சந்தாதாரர்களின் கணக்கில் உள்ள டிபாசிட்டுக்கு, 8.5 சதவீத வட்டி வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், சேர்ந்து கணக்கு வைத்துள்ளவர்களுக்கு, அவர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் தொகைக்கு, ஆண்டுதோறும், வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி, எவ்வளவு சதவீதம் என்பதை, இ.பி.எப்.ஓ., என்ற, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் கீழ் செயல்படும், டிரஸ்டிகளின் மத்திய போர்டு கூடி முடிவு செய்யப்படும

்.இந்த வகையில், 2013 14ம் ஆண்டுக்கான, வட்டியை முடிவு செய்வதற்காக, நேற்று, டிரஸ்டிகளின் மத்திய போர்டு கூடுவதாக இருந்தது. போர்டின் தலைவரும், மத்திய தொழிலாளர் நல அமைச்சராக இருந்த சிஸ்ராம் ஓலா மறைவையடுத்து, நேற்றைய கூட்டம் ரத்து செய்யப்பட்டது.தற்போது, தொழிலாளர் துறை அமைச்சராக, ஆஸ்கர் பெர்னாண்டசுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. விரைவில், இவர் தலைமையில் வாரிய கூட்டம் நடைபெறும். கடந்தாண்டு, இ.பி.எப்., டிபாசிட்டுக்கு, 8.5 சதவீத வட்டி அளிக்கப்பட்டது. இதுவே, 2013 14ம் ஆண்டிற்கு வழங்கப்படும் என தெரிகிறது.

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் : கவுன்சலிங் மூலம் 400 பேர் நியமனம

் உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக இரண்டு நாட்களாக நடந்த கவுன்சலிங்கில் 409 பேர் நியமனம் பெற்றனர். உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 400 தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான கவுன்சலிங் 14ம் தேதி ஆன்லைன் மூலம் நடந்தது.   அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் ஆன்லைன் கவுன்சலிங் நடத்த பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்திருந்தது.

சில மாவட்டங்களில் இந்த கவுன்சலிங் குறித்த தகவல் தாமதமாக ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டதால் கவுன்சலிங் நடப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் ஒரே நாளில் நடந்து முடிய வேண்டிய கவுன்சலிங் இரண்டு நாட்கள் நடந்தது.  இந்த கவுன்சலிங்கில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் வட்டார வள மைய மேற்பார்வையாளர்களை அரசு மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக மாறுதல் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி 278 வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் கவுன்சலிங்கில் கலந்து கொண்டு பணி நியமன ஆணை பெற்றனர்.தவிரவும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலம் வழங்கப்படும் கவுன்சலிங்கில் 131 பட்டதாரி ஆசிரியர்கள், உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி பெற்றனர

Sunday, December 15, 2013

NMMS Application form 2014 for VIII th std

மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படி அதிகரிப்பு

மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படி மாதம் ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். சென்னைத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில், நிறைவுரை ஆற்றிய முதல்வர் ஜெயலலிதா 312 அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் சில:

* மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படித்தொகை மாதம் ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிப்பு.

* அரசு ஊழியர்களுக்கான குளிர்காலபடி மாதம் 500 ரூபாயாக உயர்த்தப்படும்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தாள் 1,தாள2-ல் உச்சநீதிமன்ற நிபுணர் குழுவின் பரிந்துரையின் படி கீ ஆன்சரில் மாற்றம் செய்து உத்தரவிட்ட விபரம- tnkalvi


தாள்-1 ( TNTET PAPER 1) 

ஆசிரியர் தகுதித்தேர்வு, கீ ஆன்சரில் தவறான விடைகள் இடம்பெற்றன. சரியான விடைக்கு மதிப்பெண் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகள் தொடுக்கப்பட்டன அவற்றை நிபுணர் குழுஅமைத்து பரிசீலிக்க உத்தரவிட்ட நீதியரசர் நாகமுத்து குழுவின் பரிந்துரை மற்றும் மனுதாரர்கள் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் தாள் 1 இல்( TNTET PAPER 1) கீழ்கண்ட கேள்விக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

------------------
Question series D
------------------
Question no 122: Non conventional source of energy...

Judgement : A , C,D All the three key answers are correct.(wind,solar,bio-mass)

என விடைக்குறிப்பில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் மேற்கண்ட வினா தவிர்த்த மனுதரர்கள் கோரிய மற்ற வினாக்களுக்கு டிஆர்பி யின் விடைகள் சரி எனவும் நீதியரசர் நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.

தாள்-2 ( TNTET PAPER 2) 

ஆசிரியர் தகுதித்தேர்வு, கீ ஆன்சரில் தவறான விடைகள் இடம்பெற்றன. சரியான விடைக்கு மதிப்பெண் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றமதுரை கிளையில் வழக்குகள் தொடுக்கப்பட்டன அவற்றை நிபுணர் குழுஅமைத்து பரிசீலிக்க உத்தரவிட்ட நீதியரசர் நாகமுத்து குழுவின் பரிந்துரை மற்றும் மனுதாரர்கள் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் தாள் இரண்டில் ( TNTET PAPER 2 ) கீழ்கண்ட கேள்விகளுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Question Series C

Question no 25: the number of types of counseling
Judgement : deleted the question

Question no 08 :if we track the proficiency....
Judgement : A -positive curve, B- s type curve
Both answer correct

Question Series D

Question no 49: the winds blow from particular direction.......

Judgement : A , B,C. All the three key answers are correct.

என விடைக்குறிப்பில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்
மேற்கண்ட வினாக்களைத் தவிர்த்த மனுதரர்கள் மற்ற வினாக்களுக்கு டிஆர்பி யின் விடைகள் சரி எனவும் நீதியரசர் நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.

Saturday, December 14, 2013

கவுன்சிலிங்கை ரத்து செய்ய ஆசிரியர்கள் வலியுறுத்தல் dinamalar

"தலைமை ஆசிரியர் பணிக்கான கவுன்சிலிங்கை ரத்து செய்து, முறைப்படி நடத்த வேண்டும்,' என பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தமிழகத்தில் வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கு இடமாறுதலாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வாகவும் நேற்று கவுன்சிலிங் நடந்தது.அவசரமாக நடந்த இக்கவுன்சிலிங் குறித்து பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் இளங்கோவன் கூறியதாவது: ஆசிரியர் கவுன்சிலிங்கை முறைப்படி முன்னுரிமை பட்டியல் வெளியிட்டு, 15 நாட்கள் கழித்து நடத்த வேண்டும். ஆனால் முன்தினம் இரவு 7 மணிக்கு இமெயில் மூலம் கூட தெரிவிக்காமல், சம்பந்தப்பட்டோருக்கு மட்டும் "திடீரென' அறிவித்து கவுன்சிலிங் நடத்தி இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இப்படி அவசரமாக நடத்துவதற்கான பின்னணி என்ன?248 பேருக்கு பதவி உயர்வு மூலம் வழங்குவதாக அறிவித்தும் மாலை 5 மணி வரை யாருக்கும் வழங்கவில்லை. கல்வித்துறையில் இதுபோல ஒருபோதும் நடந்ததில்லை. முறைகேடான இக்கவுன்சிலிங்கை ரத்து செய்ய வேண்டும், என்றார்.

புதிய குரூப் 1 தேர்வு அறிவிப்பு 17ம் தேதி வெளியாகிறது

  துணை கலெக்டர், வணிக வரித்துறை அலுவலர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, குரூப் 1 தேர்வு அறிவிப்பு, 17ம் தேதி வெளியாகிறது.துணை கலெக்டர், 3; வணிக வரித்துறை அலுவலர், 30; ஊரக வளர்ச்சித் துறையில், 30 பணியிடம் உட்பட பல்வேறு துறைகளில், 70 முதல் 80 பணியிடங்கள் வரை, அறிவிப்பில் இடம்பெறும் என, தெரிகிறது. 17ம் தேதிக்குள், மேலும் கூடுதல் காலி பணியிடங்கள், அரசு துறைகளில் இருந்து, தேர்வாணையத்திற்கு வரும் பட்சத்தில், காலி பணியிடங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.

கூடுதலாக 3,500 ஆசிரியர்களை நியமிக்க அரசு அனுமதி: நடப்பாண்டில் புது ஆசிரியர்கள் 18,500 ஆக உயர்வு

   நடப்பு கல்வி ஆண்டில், 3,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வில் இருந்து, தேர்வு செய்யப்பட உள்ள, 15 ஆயிரம் பேர் நியமனத்துடன் சேர்த்து, இந்த, 3,500 பேரும் தேர்வு செய்யப்படுவர் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், ஒட்டுமொத்தமாக, 18,500 ஆசிரியர், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். கடந்த கல்வி ஆண்டுக்கான காலி பணியிடங்கள் மற்றும் நிரப்பப்படாத பணியிடங்கள் என, 15 ஆயிரம் பேர், டி.இ.டி., தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வு மூலம், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இதற்கான பணிகள், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் (டி.ஆர்.பி.,), மும்முரமாக நடந்து வருகிறது.இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான காலி பணியிடங்கள் குறித்த பட்டியலை, பள்ளி கல்வித்துறையும், தொடக்க கல்வித்துறையும், தமிழக அரசுக்கு அனுப்பியது. பள்ளி கல்வி இயக்குனர், 3,487 பணியிடங்களுக்கும், தொடக்க கல்வி இயக்குனர், 694 இடங்களுக்கும், அரசின் அனுமதி கோரி, பட்டியலை அனுப்பினர். இதை, அரசு ஆய்வு செய்து, 3,525 இடங்களை நிரப்ப அனுமதி அளித்து, அரசாணை பிறப்பித்துள்ளது. கல்வித்துறை செயலர், சபிதா, 10ம் தேதி வெளியிட்ட அரசாணை விவரம்:

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், 314; ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர், 380 பணியிடங்களை, பதவி உயர்வு மூலம் நிரப்ப, அரசு அனுமதி அளிக்கிறது. மேலும், முதுகலை ஆசிரியர், 809; பட்டதாரி ஆசிரியர், 979; இடைநிலை ஆசிரியர், 887; சிறப்பு ஆசிரியர் (ஓவியம், இசை, தையல்), 156 பணியிடங்கள் என, 3,525 பணியிடங்களை, நடப்பு கல்வி ஆண்டில் நிரப்ப, சம்பந்தப்பட்ட துறைகள், நடவடிக்கை எடுக்கலாம்.இவ்வாறு, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணியாற்றும், வட்டார வள மைய மேற்பார்வையாளர்களில், 71 பேர், முதுகலை ஆசிரியராகவும், 115 வட்டார வள மைய பயிற்றுனர், பட்டதாரி ஆசிரியராகவும், பணிமாற்றம் செய்யப்படுவர் எனவும், அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், "2012 13ம் ஆண்டுக்காக, 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடம், 2,800 முதுகலை ஆசிரியர் பணியிடம் உட்பட, 15 ஆயிரம் பணியிடங்களை, டி.இ.டி., மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளனர். இவர்களுடன் சேர்த்து, 3,500 பணியிடங்களை நிரப்பவும் வாய்ப்பு உள்ளது' என, தெரிவித்தன. மொத்தத்தில், பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறையில், 18,500 பேர் நிரப்பப்பட உள்ளனர்.

இன்றைய டிட்டோஜாக் கூட்டத்தில் எந்தவித முடிவும் எட்டப்படாமல் ஒத்திவைப்பு,

் இன்று சென்னையில் திரு.மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடைபெற்ற டிட்டோஜாக் கூட்டம் மாலை 4.00மணி வரை நீடித்தது எனவும், அனால் இன்றைய கூட்டத்தில் பங்குபெற்ற சங்கங்களுக்கு இடையே முடிவு எட்டப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் ஒரு மாபெரும் பேரணி நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது, அந்த கருத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதால் முடிவு எட்டப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கடுத்தப்படியாக தமிழகம் முழுவதும் ஒரே நாளில் மாவட்ட அளவில் போராட்டம் நடத்தி அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கலாம் எனவும்,  இதற்கு அரசு செவி சாய்க்கவில்லையெனில் உடனடியாக டிட்டோஜாக் கூடி வேலை  நிறுத்தம் அல்லது அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கலாம் என்று பெரும்பாலான சங்கங்கள் கருத்து தெரிவித்தன. ஆனால் முன்னணி சங்கம் ஒன்று மட்டும் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக வேலை நிறுத்தம் செய்வோம் என்றும், நாங்கள் ஏற்கெனவே போராட்டம் நடத்திவிட்டோம் என்றும், இனி நடத்தமாட்டோம் என்றும் கருத்து தெரிவித்தது.

இதையடுத்து இந்த கூட்டத்தில் எந்தவித முடிவும் எட்டப்படாமல் வருகிற 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் இனி வரும் கூட்டத்தில் சுழற்சி முறையில் அனைத்து சங்க கட்டடத்தில் நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டது. 

Friday, December 13, 2013

Ignou M.ED Entrance Result 2013

பதவி உயர்வு எண்ணிக்கை முழு விவரம்

* உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலி பணியிடங்கள் எண்ணிக்கை : 416

*உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு மாறுதல் நிரப்படவுள்ளவை மொத்தம் : 196

*வட்டார மேற்பார்வையாளர் பதவியிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு பணி மாறுதல் எண்ணிக்கை : 196

*உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு பதவி உயர்வு  மூலம் நிரப்படவுள்ளவை மொத்தம் : 220

*பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு எண்ணிக்கை : 214

*முன்னுரிமைப்பட்டியல் 1 முதல் 248 வரை உள்ளவர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

ஏழு பேர் AEEO to உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு AEEO பதவி உயர்வ

உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு.... அவர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாளை ....14/12/2013 அன்று நடைபெறுகிறது ..... உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்த உ.தொ.க.அ பட்டியல் விவரம் உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்த உ.தொ.க.அ பட்டியல் ஏழு பேர் கொண்ட அந்த பட்டியல் பட்டியலில் இடம் பிடித்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள்

1.SUTHATHIRAM K         -  THENI 2.THAMOTHARAN R       -   VIRUDHANAGAR
3.NAGARAJAN R             -   VIRUDHANAGAR
4.JAYALATHA E               -  TIRUNELVELI
5.AROCKIASAMY A         -  RAMANATHAPURAM
6.JEYARAJU S                 -   RAMANATHAPURAM
7.RAJAMAREES S          - 

இவ்வாறு    உதவி தொடக்க கல்வி அலுவலர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நன்றி :- திரு கணேசன்.

பணியிடங்களில் பாலியல் தொல்லை தந்தால் கடும் நடவடிக்கை: அமலுக்கு வந்தது சட்டம்

    பணியிடங்களில் பாலியல் தொந்தரவுகளி"ல ஈடுபடுவோருக்கு எதிராக கடும் தண்டனை அளிக்க வகை செய்யும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. டில்லியில்,ஓடும் பஸ்சில் மருத்துவ கல்லூரி மாணவி ,பாலியல் பலாத்காரத்திற்கு பலியான சம்பவத்தை அடுத்து, பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டன. குறிப்பாக, பணி புரியும் இடங்களில், பெண்களுக்கு எதிராக நடக்கும் தொந்தரவுகள், பாலியல் வன்முறையை தடுக்க வகை செய்யும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு, பார்லிமென்ட்டிலும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த சட்டத்தை அமல்படுத்துவதில், தாமதம் காட்டப்படுவதாக கூறி, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மீது எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இதற்கு, பதிலளித்து பேசிய, மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கிருஷ்ணா திராத் கூறியதாவது: இந்த சட்டம் அமல்படுத்துவது குறித்த முறையான அறிவிப்பு, கடந்த 9ம் தேதியே வெளியிடப்பட்டுள்ளது. 10ம், அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் வேலைபார்க்கும் அனைத்து அலுவலகங்களிலும் இந்த சட்டம் கட்டாயமாக்கப்படும். புகார்களை விசாரிக்க, கமிட்டி ஒன்றை அமைக்க வேண்டும். புகார்களை, 90 நாட்களுக்கு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், அபராதம் விதிக்கப்படும். புகார் நிருபிக்கப்பட்டு, பாலியல் தொந்தரவில் தெரியவந்தால், பணி நீக்கம், பதவி உயர்வு ரத்து, சம்பள உயர்வு நிறுத்தம், அபராதம் ஆகிய தண்டனைகளை சந்திக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

கல்வி உதவித்தொகை பெற தேர்வு: 16ல் இருந்து விண்ணப்பிக்கலாம்

எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியர், மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேர்வில் பங்கேற்க, 16ல் இருந்து, 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இயக்குனர், தேவராஜன் அறிவிப்பு: வட்டார அளவில், பிப்., 22ம் தேதி, தேர்வு நடக்கும். தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில், நடப்பு ஆண்டில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

பெற்றோரின், ஆண்டு வருமானம், 1.5 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். மாணவர், ஏழாம் வகுப்பு, முழு ஆண்டு தேர்வில், 55 சதவீத மதிப்பெண்; எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாணவர், 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பள்ளி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தலைமை ஆசிரியர், www.tndge.in என்ற இணைய தளத்தில் இருந்து, வெற்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு வழங்க வேண்டும். தேர்வு கட்டணமாக, 50 ரூபாயை, 28ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்ப விவரங்களை, 23ம் தேதி முதல், 31ம் தேதிக்குள், தேர்வுத் துறை இணைய தளத்தில், பதிவேற்றம் (அப்லோட்) செய்ய, தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ்.ஏ.,ஆசிரியர்களுக்கு முன்னுரிமை

தமிழகத்தில் 455 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலியிடங்களை நிரப்பும் போது, எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க, பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில், 385 வட்டாரங்கள் செயல்படுகிறது. ஒவ்வொரு வட்டாரத்திலும், முதுகலை அல்லது பட்டதாரி ஆசிரியர் தகுதி பெற்றவர்களை மேற்பார்வையாளர்களாக நியமித்துள்ளது.

இதில், 25 சதவீதம் பேர் முதுகலை ஆசிரியர்கள். கடந்த 2000ல் துவங்கிய எஸ்.எஸ்.ஏ., திட்ட காலம் 2010ல் முடிந்த நிலையில், 3 ஆண்டு நீடிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை கலைத்து, அனைவருக்கும் இடை நிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்துடன் இணைக்கும் யோசனையில், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை செயல்படுகிறது. ஒரு திட்டம் துவங்கி 10 ஆண்டுக்குள் முடிய வேண்டும். சில காரணத்திற்காக எஸ்.எஸ்.ஏ., ஓரிரு ஆண்டு நீடிக்கலாம். தமிழகத்தில் இத்திட்டம் 3 ஆண்டு நீடித்த நிலையில், இனிமேலும், நீடிக்க வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக,கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதிகாரி ஒருவர் கூறுகையில், "" எஸ்.எஸ்.ஏ.,வை, ஆர்.எம்.எஸ்.ஏ.,வுடன் இணைக்கும் பட்சத்தில், தமிழகத்தில் 455 உயர்நிலைப்பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர் காலியிடங்களை நிரப்பும் போது எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர்களுக்கு ( பி.டி., தகுதி ஆசிரியர்) முக்கியத்துவம் அளிக்கப்படும்.இத்திட்டத்தில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களை அரசு மேல்நிலைப்பள்ளி காலியிடங்களில் நியமிக்க, பள்ளிக்கல்வித்துறை முடிவெடுக்கும்,'' என்றார்.

NMMS student List. NEW FORMAT

முதுகலைப் படிப்பு இறுதி ஆண்டில் ‘ஸ்லெட்’, ‘நெட்’ தகுதித் தேர்வு களுக்கான பாடத்திட்டத்தை சேர்க்க தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் திட்டமிட்டு வருகிறது.

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு ஸ்லெட் அல்லது நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.எச்டி. பட்டதாரிகளுக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. மாநில அளவில் நடத்தப்படும் ஸ்லெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அந்த மாநிலத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மட்டும் உதவி பேராசிரியர் பணியில் சேரலாம். அதேநேரத்தில், பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) நடத்தும் நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால், இந்தியா முழுவதும் எந்த கல்லூரியிலும், எந்த பல்கலைக்கழகத்திலும் பணிபுரிய முடியும்.

படிக்கும்போதே தயார்படுத்த முடிவு தற்போது ஸ்லெட், நெட் தேர்வுகளில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி மிகவும் குறைவாக உள்ளது. முதுகலை பட்டப் படிப்பு முடித்து ஒருசில ஆண்டுகள் கழித்த பின்னரே இத்தகைய தகுதித்தேர்வுக்கு தயாராகிறார்கள். இந்த நிலையில், முதுகலை படிப்பு மாணவர்கள் படிக்கும்போதே அவர்களை ஸ்லெட், நெட் தகுதித்தேர்வுகளுக்கு தயார்படுத்த உயர்கல்வித்துறை முடிவுசெய்துள்ளது. இதைத்தொடர்ந்து, முதுகலை படிப்பில் ஸ்லெட், நெட் தேர்வு பாடத்திட்டங்களை சேர்க்க தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் திட்டமிட்டு வருகிறது.

பாடத்திட்டத்தில் சேர்ப்பு ஏற்கெனவே, தமிழகம் முழுவதும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத்திட்டத்தை கொண்டுவர உயர்கல்வி கவுன்சில் முடிவுசெய்துள்ள நிலையில், முதுகலை படிப்பில் ஸ்லெட், நெட் தேர்வுக்கான பாடத்திட்டத்தை சேர்ப்பதில் எவ்விதமான பிரச்சினையும் எழாது. மேற்கண்ட தகுதித்தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை முதுகலைப் படிப்பின் இறுதி ஆண்டு செமஸ்டர் பாடத்திட்டத்தில் சேர்க்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு பி.எட். மாணவர்களை தயார்படுத்தும் பொருட்டு கடந்த ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் பி.எட். பாடத்தில் தகுதித்தேர்வு குறித்த பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.