இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, May 27, 2013

அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு 1,093 உதவிப் பேராசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஜூன் 19-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படுகிறது. விண்ணப்பங்களை வாங்கவும், பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும் கடைசி தேதி ஜூலை 10 ஆகும். ஆசிரியர் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத்தில் சமர்ப்பிக்கும் சான்றிதழ்களுக்கு மதிப்பெண்ணும், அடுத்தக் கட்டமாக நேர்முகத் தேர்வுக்கு மதிப்பெண்ணும் வழங்கப்படும். மொத்தம் 34 மதிப்பெண் அடிப்படையில் உதவிப் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணி அனுபவத்துக்கு 15 மதிப்பெண்: உதவிப் பேராசிரியர் நியமனத்தில் ஆசிரியர் பணி அனுபவத்துக்கு 15 மதிப்பெண் வழங்கப்படும். பல்கலைக்கழகங்கள், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், சம்பந்தப்பட்ட பாடங்களில் தனியார் மருத்துவ கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் (அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள்) கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். கல்வித் தகுதிக்கு 9 மதிப்பெண்: கல்வித் தகுதிக்கு அதிகபட்சமாக 9 மதிப்பெண் வழங்கப்படும். அந்தந்தப் பாடத்தில் பிஎச்.டி. பெற்றவர்களுக்கு 9 மதிப்பெண்ணும், எம்.பில். பட்டமும் ஸ்லெட், நெட் தேர்ச்சியும் பெற்றவர்களுக்கு 6 மதிப்பெண்ணும், பட்டமேற்படிப்புப் பட்டமும் ஸ்லெட், நெட் தேர்ச்சியும் பெற்றவர்களுக்கு 5 மதிப்பெண்ணும் வழங்கப்படும்.

நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண்: நேர்முகத் தேர்வுக்கு அதிகபட்சம் 10 மதிப்பெண் வழங்கப்படும். நேர்முகத் தேர்வு இல்லாமல் 24 மதிப்பெண்ணுக்கு விண்ணப்பதாரர் பெறும் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் பாடவாரியாக ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். இந்த ரேங்க் பட்டியலில் இருந்து 1:5 என்ற அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.  இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி:  பொதுப்பிரிவினராக இருந்தால் 55 சதவீத மதிப்பெண்ணுடன் பட்டமேற்படிப்புப் பட்டம் மற்றும் யு.ஜி.சி., சி.எஸ்.ஐ.ஆர். அமைப்புகள் நடத்தும் நெட், ஸ்லெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பட்ட மேற்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்ணுடன் பி.எச்.டி. பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் என்றால் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்ணுடன் பட்ட மேற்படிப்பு மற்றும் நெட், ஸ்லெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 50 சதவீத மதிப்பெண்ணுடன் பி.எச்.டி. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: ஜூலை 1-ம் தேதியுடன் 57 வயது நிரம்பாதவராக இருக்க வேண்டும். மாவட்டத்துக்கு ஒரு கல்லூரி வீதம் 32 மையங்களிலும், சென்னையில் இரண்டு கல்லூரிகளிலும் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும். விண்ணப்பத்தை ரூ.100 செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். பரிசீலனைக் கட்டணமாக விண்ணப்பத்துடன் ரூ.500 செலுத்த வேண்டும். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மையங்களிலேயே சமர்ப்பிக்கலாம்.

பிளஸ் 2 வேதியியல் விடைத்தாள் நகல்: இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

பிளஸ் 2 வேதியியல் விடைத்தாள் நகலை செவ்வாய்க்கிழமை (மே 28) காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியானது. தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கப் பெறாத 75 ஆயிரம் மாணவர்கள் பல்வேறு பாடங்களின் விடைத்தாள் நகல்கள் கோரி விண்ணப்பித்தனர். அவர்களின் விடைத்தாள்கள் ஸ்கேன் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், விடைத்தாள் நகல்கள் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் திங்கள்கிழமை இரவு வெளியிட்ட செய்தி:

வேதியியல் பாட விடைத்தாள் நகல் கோரியவர்கள், விடைத்தாளை ஆன்-லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த நகலை பதிவிறக்கம் செய்ய ங்ஷ்ஹம்ள்ர்ய்ப்ண்ய்ங்.ஸ்ரீர்.ண்ய் என்ற இணையதள முகவரிக்குச் சென்று கீழ்க்காணும் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். 1. விடைத்தாள் நகல் கோரி ஆன்-லைனில் விண்ணப்பித்த பத்து இலக்க விண்ணப்ப எண் அல்லது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சலானில் குறிப்பிட்டுள்ள பத்து இலக்க ழ்ங்ச்ங்ழ்ங்ய்ஸ்ரீங் ய்ன்ம்க்ஷங்ழ். 2. பதிவெண் 3. பிறந்த தேதி 4. மதிப்பெண் சான்றிதழில் குறிப்பிட்டுள்ள டிஎம்ஆர் கோட் விவரம்

மறுகூட்டலுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது? வேதியியல் பாட விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு, அந்தப் பாடத்தில் மறுமதிப்பீட்டுக்கோ அல்லது மறுகூட்டலுக்கோ விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் examsonline.co.in என்ற இணையதளத்துக்குச் சென்று, அங்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி மே 29 முதல் 31-ஆம் தேதி பிற்பகல் 1 மணி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பித்த பிறகு பதிவிறக்கம் செய்யப்படும் ஸ்டேட் ஆஃப் இந்தியா சலானில் குறிப்பிட்டுள்ள தொகையை எஸ்.பி.ஐ. வங்கியின் ஏதேனும் ஒரு கிளையில் மே 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மற்ற பாடங்களுக்கான விடைத்தாளின் நகல்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் நாள்கள் விரைவில் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் முன் எச்சரிக்கை தேவை

் கடந்த சில ஆண்டுகளாகவே விடைத்தாள் நகல் கோரியும், மறுகூட்டல் கோரியும் விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு 75 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவரகள் விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். பி.இ., எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் ஒரேயொரு மதிப்பெண்கூட ரேங்க் பட்டியலில் பல இடங்கள் பின்னுக்குத் தள்ளிவிடும் என்பதால் விடைத்தாள் நகலைப் பார்க்கவும், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கவும் மாணவர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

இவர்களில் விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விடைத்தாள் நகல் கிடைத்தவுடன் பள்ளி ஆசிரியர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதிக மதிப்பெண் பெற்ற பல மாணவர்களுக்கும் விடைத்தாள் மறுமதிப்பீட்டின்போது மதிப்பெண் குறைந்துள்ளது. மறுமதிப்பீட்டில் மதிப்பெண் குறைந்தாலோ, அதிகரித்தாலோ அந்த மதிப்பெண்தான் இறுதி மதிப்பெண்ணாகக் கருதப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, விடைத்தாள் நகலைப் பெற்றவுடன் அந்தந்தப் பாட ஆசிரியர்களைக் கொண்டு ஒவ்வொரு பகுதியையும் முழுமையாக ஆய்வுசெய்ய வேண்டும். விடைத்தாள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படும் என்பதால், மதிப்பெண் வழங்கப்படாத அல்லது தவறாக மதிப்பீடு செய்யப்பட்ட ஒரு கேள்வியை கருத்தில்கொண்டு மட்டும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளில் உள்ள பிற கேள்விகளுக்கான விடைகள், அவற்றுக்கான மதிப்பீடுகளையும் பாட ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்கள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.அவ்வாறு ஆய்வு செய்த பிறகு மதிப்பெண் குறைய வாய்ப்பில்லை என்பதை உறுதி செய்துகொண்ட பிறகே மறுமதிப்பீட்டுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாட்டிலும் பள்ளிக்கூடங்கள் திறப்பது தள்ளிப்போகுமா? என்று கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–

இதுவரை முடிவு எடுக்கவில்லை புதுச்சேரியில் பள்ளிக்கூடங்கள் திறப்பது தள்ளிவைக்கப்பட்டுள்ளது தெரியும். தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்துவருகிறது.

சென்னையிலும் மற்ற இடங்களிலும் வெயில் அளவு நிறையவே குறைந்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) வெயில் குறைகிறதா என்று பார்க்கப்படும். இருப்பினும் பள்ளிக்கூடங்கள் திறப்பு தள்ளிப்போடுவது பற்றி எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

Sunday, May 26, 2013

சிபிஎஸ்சி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: 98.87 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி

  எதிர்பார்த்து காத்திருந்த சி.பி.எஸ்.சி. 12ம் வகுப்பு முடிவுகள் ஒருவழியாக இன்று வெளியிடப்பட்டது. தென்மண்டலத்தில் தேர்வு எழுதியவர்களில் 98.87 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.சி. 12ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி நடந்தது. முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.results.nic.in, www.cbseresults.nic.in, and www.cbse.nic.in என்ற இணைய தளத்தில் காணலாம். இந்தியா முழுவதும் 9 லட்சம் மாணவர்கள் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் இந்த ஆண்டு தேர்வு எழுதியுள்ளனர்.

ப்ளஸ் 2 "மார்க்ஷீட்' இன்று வழங்கல்

ப்ளஸ் 2 "மார்க் ஷீட்' இன்று முதல், அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படுகிறது. 2012-13ம் ஆண்டிற்கான ப்ளஸ் 2 பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச், 1ம் தேதி முதல், 27ம் தேதி வரை நடந்தது. இதன் முடிவுகள் கடந்த, 9ம் தேதி வெளியிடப்பட்டது. ப்ளஸ் 2 "மார்க் ஷீட்' இன்று முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், இன்று காலை முதல், திருச்சி மாவட்டத்தில் அந்தந்த பள்ளிகளில் "மார்க் ஷீட்' வினியோகம் செய்யப்படுகிறது.

ப்ளஸ் 2 தேர்ச்சியை பதிவு செய்து கொள்ள ஏதுவாக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த பள்ளிகளிலேயே ஆன்லைன் மூலம் பதிவு செய்யம் பணி நடக்கவுள்ளது. வரும் ஜூன், 10ம் தேதி வரை, பதிவு செய்யும் மாணவ, மாணவிகளுக்கு, மே 27ம் தேதி முதல் சீனியாரிட்டி வழங்கப்படும் என, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

CBSE Exam Results 2013 .Results Link

பள்ளிக்கல்வி துறைக்கு மாறிய 4000 பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு கனவு பலிக்குமா?

  தமிழகம் முழுவதும், தொடக்கக் கல்வித்துறையில் இருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு அலகு மாறுதலில் (யூனிட் டிரான்ஸ்பர்) சென்ற 4 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்தனர். தொடக்கக் கல்வியை உயர்த்தும் நோக்கில், கடந்த 2004ம் ஆண்டு 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் முதன்முதலாக நியமிக்கப்பட்டனர்.

இவ்வாறு தொடக்கப்பள்ளிகளில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளி கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணியாற்றினால் மட்டுமே முதுகலை ஆசிரியர், உயர் மற்றும் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், சி.இ.ஓ., வரை பதவி உயர்வு பெற முடியும். இதனால், தொடக்கக் கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்கள் பலர், பள்ளிக்கல்வித்துறைக்கு இடமாற்றம் பெற்றனர். ஆனாலும், யூனிட் டிரான்ஸ்பரில் வந்தவர்களுக்கு, புதிதாக பணியில் சேர்ந்த இடத்தில் பழைய சீனியாரிட்டி கணக்கில் கொள்ளப்படாது என்பதால், பதவி உயர்வு கனவு பலிக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அரசுப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கூறியது: கடந்த 2004ம் ஆண்டு நடந்த டிஆர்பி தேர்வின்போது, தொடக்கப்பள்ளிக்கா? உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிக்கா? என கூறவில்லை. ஆனால், போட்டித்தேர்வு மூலம் அதிகை ரேங்க் பெற்று தொடக்கப்பள்ளிகளில் பணியில் சேர்ந்த எங்களை காட்டிலும், பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும், ரேங்க் குறைவாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் சீக்கிரத்தில் பதவி உயர்வு பெற்று விடுகின்றனர். யூனிட் டிரான்ஸ்பரில் செல்லும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமே, புதிதாக எந்த இடத்தில் பணியில் சேர்கிறாரோ அந்த இடத்தில் கடைநிலை சீனியாரிட்டியில் வைக்கப்படுவர். அதே விதிகளை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பின்பற்றுவது வேதனை அளிக்கிறது. இதனால், யூனிட் டிரான்ஸ்பரில் சென்றுள்ள 4 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாங்கள் பணியில் சேர்ந்த தேதியை சீனியாரிட்டியாக கணக்கிட்டு, எங்களுக்கு பதவி உயர்வு வழங்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு பட்டதாரி ஆசிரியர்கள் கூறினர்.

கல்லூரிகளில் மாணவர்கள் தேர்வை தமிழில் எழுதக்கூடாது என்று உத்தரவு வந்ததா? கல்லூரி கல்வி இயக்குனர் விளக்கம் -

   கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் தேர்வை தமிழில் எழுதக்கூடாது என்றும், ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்றும் எந்த உத்தரவும் இதுவரை அரசிடம் இருந்து கல்லூரி கல்வி இயக்குனரகத்திற்கு வரவில்லை என்று கல்லூரி கல்வி இயக்குனர் பேராசிரியை டி.செந்தமிழ்ச்செல்வி தெரிவித்தார். கலை, அறிவியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், நெல்லை மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள் உள்ளன.

இந்த பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. மொத்தம் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 133 அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளும், 438 சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளும் உள்ளன. மொத்தத்தில் 633 கலை, அறிவியல் கல்லூரிகள் இருக்கின்றன. இந்த கல்லூரிகள் அனைத்தும் கல்லூரி கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. கல்லூரி கல்வி இயக்குனரகம் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. 633 கலை அறிவியல் கல்லூரிகளில் 3 லட்சத்து 40 ஆயிரம் மாணவ–மாணவிகள் கலை, அறிவியல் படிப்பை படிக்கிறார்கள். ஆங்கில வழியில் தேர்வு இந்த மாணவர்கள் பட்டப்படிப்பை ஆங்கில வழியில் படித்தாலும் தேர்வை ஆங்கில வழியிலும் எழுதலாம். தமிழ் வழியிலும் எழுதலாம் என்ற நடைமுறை இருந்து வருகிறது. ஆனால் ஆங்கில பேச்சாற்றல் இல்லாததால் வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது.

இதன் காரணமாக ஆங்கில வழியில் மட்டுமே மாணவர்கள் தேர்வை எழுத வேண்டும் என்றும், அவர்களுக்கு கொடுக்கப்படும் அசைன்மென்ட்டையும் ஆங்கிலத்தில்தான் எழுதவேண்டும் என்றும், அதை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது உண்மையா? என்று தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குனர் பேராசிரியை டி.செந்தமிழ்ச்செல்வியிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–

அரசு உத்தரவு எதுவும் வரவில்லை கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் தமிழில் தேர்வு எழுதக்கூடாது என்றோ ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும் என்றோ இதுவரை கல்லூரி கல்வி இயக்குனரகத்திற்கு அரசிடம் இருந்து உத்தரவு எதுவும் வரவில்லை. ஆங்கில பேச்சாற்றல் இருந்தால் எளிதில் மாணவர்களுக்கு வேலை கிடைக்கிறது என்பது குறித்த கருத்து திட்டக்குழு கூட்டத்தில் பேசப்பட்டது. இவ்வாறு கல்லூரி கல்வி இயக்குனர் டி.செந்தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.

Saturday, May 25, 2013

பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு ; 28, 29ம்தேதிகளில் நடக்கிறது

பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு, வரும், 28, 29ம்தேதிகளில் நடக்கும் என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது. வரும், 28ம்தேதி, மாவட்டங்களுக்குள், பணியிட மாறுதல் பெறுபவர்களுக்கு, கலந்தாய்வு நடக்கிறது. மறுநாள், 29ம்தேதி, மாவட்டத்தில் இருந்து,வேறு மாவட்டங்களுக்கு, பணியிட மாறுதல் பெறுபவர்களுக்கு, கலந்தாய்வு நடக்கும

். இரு நாட்களிலும், 10 ஆயிரத்திற்கும்மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.மேலும், உடற்கல்வி ஆசிரியர், ஓவிய ஆசிரியர், இசை ஆசிரியர் ஆகி@யாருக்கும், இ@ததேதிகளில், பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது. "ஆன்-லைன்' வழியில், இந்த கலந்தாய்வில் பங்@கற்க, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு செல்லவேண்டும் எனவும், கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.

நாடு முழுவதும் ஐஏஎஸ் முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது

யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் ஐஏஎஸ், ஐபிஎஸ் முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது. நாடு முழுவதும் 7.5 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழகத்தில் 30 ஆயிரத் துக்கும் மேற்பட்டவர்கள் முதல்நிலை தேர்வை எழுத உள்ளனர். மத்திய அரசு பணியா ளர் தேர்வாணை யம் (யுபிஎஸ்சி) ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் போன்ற உயர் பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.

முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்க்காணல் தேர்வு என 3 கட்ட தேர்வு நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின் றனர். இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு அறிவிப்பை கடந்த மார்ச் 5ம் தேதி யுபிஎஸ்சி வெளியிட்டது. ஆன், லைன் மூலமாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு ஏப்ரல் 4ம் தேதி கடைசி நாள் என்று அறிவித்திருந்தது. நாடு முழுவதும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு 7.5 லட்சம் பேரும், தமிழகத்தில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களும் விண் ணப்பித்துள்ளனர்.

இந் நிலையில், சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் 45 முக்கிய நகரங்களில் 2,500க்கும் மேற்பட்ட மையங்களிலும், தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் 96 மையத்திலும் இன்று நடைபெறுகிறது. யுபிஎஸ்சி வழக்கமாக ஐஏஎஸ், ஐபிஎஸ் காலி பணியிடங்களுக்கு சிவில் சர்வீஸ் தேர்வை நடத்து கிறது. ஆனால், இந்த ஆண்டு முதல் முறையாக யுபிஎஸ்சி ஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் சர்வீஸ் தேர்வுடன், ஐஎப்எஸ் எனப்படும் இந்திய வனப்பணி தேர்வையும் நடத்துகிறது.

ஜூன் 12ம் தேதி கடைசி நாள் தொடக்க கல்வி பட்டய படிப்புக்கு நாளை விண்ணப்பம் விநியோகம்

  தொடக்க கல்வி பட்டய படிப்புக்கு நாளை (27ம் தேதி) முதல் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தொடக்க கல்வி பட்டய படிப்புக்கு 2013,14ம் கல்வி ஆண்டில் ஒற்றை சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலும் நாளை  முதல் ஜூன் மாதம் 12ம் தேதி வரை விநியோகம் செய்யப்படும்.

விண்ணப்ப கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவுக்கான கட்டணம் ரூ.250. இணையதளம் மூலம் ஒற்றைசாளர முறையில் கலந்தாய்வு நடத்தப்படும். கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பதாரர் எந்த மாவட்டத்தில் விண்ணப்பித்தாரோ அந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலோ அல்லது முதன்மை கல்வி அலுவலகத்தால் தேர்வு செய்யப்பட்ட மையத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். அப்போது தமிழகத்தில் எந்த ஒரு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தையும் தேர்ந்தெடுக்கலாம். கல்வி தகுதி மேல்நிலை தேர்வில் குறைந்தபட்சம் 1200க்கு 540 மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்.

ஆதி திராவிடர், பழங்குடி பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். விண்ணப்பதாரர் தொடக்க கல்வி பட்டய படிப்பில் எந்த மொழி பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்கின்றாரோ அம்மொழியை பிளஸ் 2 வரை மொழிபாடத்தில் ஒன்றிலோ அல்லது இரண்டிலோ பயின்றிருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விண்ணப்பம் வாங்கிய மையத்தில் ஒப்படைக்க வரும் ஜூன் மாதம் 12ம் தேதி கடைசி நாள் ஆகும்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு : 2013-14ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர், உடற்கல்வி ஆசிரியர், சிறப்பாசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 28.05.2013 மற்றும் 29.05.2013 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

2013-14ஆம் ஆண்டிற்கான பட்டதாரி/ஆசிரியர் பயிற்றுநர்/உடற்கல்வி ஆசிரியர்/சிறப்பாசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 28.05.2013 அன்று மாவட்டத்திற்குள் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நடைபெறும். 29.05.2013 அன்று மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கோரும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இணையதளம் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் காலை 9.00 மணி முதல் நடைபெறும். மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் அனைவரும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.்

Friday, May 24, 2013

தொடக்கக்கல்வி பட்டயபடிப்பு சாளர முறை சேர்க்கை 2013-14

#விண்ணப்பங்கள்  DIET&ALL CEO Office 27-5-13 காலை 10 மணி முதல் 12-6-13 மாலை 5மணி வரை. ஞாயிற்று கிழமை தவிர

#விண்ணப்பகட்டணம் 500,, எஸ்.சி,எஸ்.டி 250
#குறைந்தபட்சம் 540/1200
மதிப்பெண்கள்

#வயது:31-7-2013 அதிகபட்சம் 30 வயது
#விண்ணப்பிக்க கடைசி நாள் 12-6-13மாலை 5 மணிக்குள்

பிளஸ் 2 மாணவர்கள் கல்வி தகுதி பள்ளியிலேயே பதிய ஏற்பாடு

தமிழகம் முழுவதும், பிளஸ் 2 மாணவர்கள், தங்கள் கல்வித் தகுதியை, பள்ளி வளாகங்களிலேயே, இணைய தளம் மூலம், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய, பள்ளி கல்வித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.தமிழகத்தில், இந்த ஆண்டு, 8.53 லட்சம், மாணவ, மாணவியர், பிளஸ் 2 தேர்வு எழுதினர். பள்ளி மூலமாக தேர்வு எழுதியவர்களில், 7.4 லட்சம் மாணவ, மாணவியர், தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள், தங்கள் மதிப்பெண் சான்றிதழ் பெறும் நாளில், தங்களின் கல்வித்தகுதியை, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய, பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவ, மாணவியர், தங்கள் கல்வித் தகுதியை, வேலை வாய்ப்பக இணைய தளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.மாணவ, மாணவியர், மதிப்பெண் சான்றிதழ் பெற, பள்ளிக்கு செல்லும்போது, தங்களது குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ் ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும். பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியை, ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பதிவு செய்துள்ளவர்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை, உடன் எடுத்து செல்ல வேண்டும்.புதிதாக பதிவு செய்வோருக்கு, புதிய பதிவு எண்ணுடன் கூடிய அடையாள அட்டை, பதிவு செய்யும் நாளிலேயே, உடனுக்குடன் வழங்கப்படும்.

மாணவ, மாணவியர், மாற்றுத் திறனாளிகளாக இருந்தால், தங்களுடைய கல்வித் தகுதியை, பள்ளிகளில் பதிவு செய்த பின், தங்களுடைய முன்னுரிமையை, வேறு ஒரு வேலைநாளில், அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களுக்கு, நேரில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும்.பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், 27ம் தேதி, பள்ளிக் கல்வித் துறையினரால் வழங்கப்பட உள்ளது. எனவே, மாணவ, மாணவியர், 27ம் தேதியிலிருந்து, அடுத்த மாதம், 10ம் தேதிக்குள், அந்தந்த பள்ளிகளிலேயே பதிவு செய்து, வேலைவாய்ப்பு அடை யாள அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு பதிவு செய்யப்படும், மாணவ, மாணவியருக்கு, பிளஸ் 2 கல்வித் தகுதிக்கு, 27ம் தேதியிட்ட பதிவு மூப்பு வழங்கப்படும்