இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909
Showing posts with label tnpsc. Show all posts
Showing posts with label tnpsc. Show all posts

Thursday, July 21, 2016

TNPSC Group I hall ticket

Click below

http://182.18.164.63/TnpscadmitCardMWE/frmLogin092015MWE.aspx

வி.ஏ.ஓ.: ஆகஸ்ட் 1 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு


கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு ஆகஸ்ட் 1 முதல் 8-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. இந்தப் பணிக்கான எழுத்து தேர்வுக்கான முடிவு ஜூலை 1-இல் வெளியிடப்பட்டது.

இதில், தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் ஆகஸ்ட் 1 முதல் 8 ஆம் தேதி வரை நடைபெறும். இதற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய தற்காலிகப் பட்டியல் (www.tnpsc.gov.in) என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தேதி-நேரம் குறிப்பிடப்பட்டு அழைப்பாணை விரைவு அஞ்சல், குறுஞ்செய்தி-மின்னஞ்சல் வாயிலாக விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது விண்ணப்பதாரர்கள் அளித்துள்ள தகவல்கள், தவறாக இருக்கும்பட்சத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்று டி.என்.பி.எஸ்.சி. வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

'குரூப் 1' தேர்வு: 'ஹால் டிக்கெட்' வெளியீடு


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் 1' தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு: துணை கலெக்டர், டி.எஸ்.பி., மற்றும் உதவி கமிஷனர், மாவட்ட பதிவாளர் ஆகிய பதவிகளில், 74 காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், பணியிடம் நிரப்ப, கடந்த ஆண்டு, ஜூலை, 10ம் தேதி அறிவிப்பு வெளியானது. இதற்கான முதன்மை எழுத்து தேர்வு, வரும், 29, 30 மற்றும், 31ம் தேதிகளில், சென்னையில், 38 தேர்வு மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வில் பங்கேற்க தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, தேர்வுக்கான ஹால் டிக்கெட், தேர்வாணைய இணையதளங்கள், www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.net ஆகியவற்றி-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் அல்லது பதிவு எண்ணை உள்ளீடு செய்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். இதுகுறித்த சந்தேகங்களுக்கு, 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது, contacttnpsc@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Thursday, September 27, 2012

வி.ஏ.ஓ., தேர்வு 150 மையங்கள் பதற்றம்

""வி.ஏ.ஓ., @தர்வுநடக்கும் மையங்களில், 150 மையங்கள், பதற்றம் மிகுந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த மையங்கள், "வெப்-கேமரா' மூலம் கண்காணிக்கப்படவுள்ளது,"" என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் தெரிவித்தார்.

தேர்வாணைய அலுவலகத்தை, முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்துவிட்டு சென்றபின், தேர்வாணைய அலுவலர்கள், பணியாளர்கள் மத்தியில், தலைவர் நடராஜ் பேசியதாவது:நீங்கள் விரும்பியபடி, உங்களுக்கு தேவையான வசதிகளை அளிக்கும் வகையில், புதியகட்டடம் கட்டப்பட்டுள்ளது. பணியாளர்கள், மகிழ்ச்சியான சூழலில் வேலைபார்த்தால் தான், பணிகள் சிறப்பாக இருக்கும். அந்தவகையில், புதியஅலுவலகம், உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.வரும் ஞாயிற்றுக் கிழமை நடக்கும், வி.ஏ.ஓ., தேர்வு, நம் முன் உள்ள சவால்.

Oஇந்த தேர்வை, வெற்றிகரமாக நடத்தி முடிக்கவேண்டும்; கண்டிப்பாக செய்வோம் என்ற நம்பிக்கைநம்மிடம் உள்ளது.இவ்வாறு நடராஜ் பேசினார். பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

வி.ஏ.ஓ., தேர்வு, 3,473 மையங்களில் நடக்கின்றன. 9.72 லட்சம் பேர், தேர்வுக்கு விண்ணப்பித்தனர். எவ்வளவு பேர் எழுது கின்றனர் என்பது, 30ம் தேதியன்று தெரியும். அனைத்து தேர்வு மையங்களிலும், தேர்வுப் பணிகளை, வீடியோ எடுக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.150 மையங்கள்,பதற்றம் மிகுந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த மையங்களில், "வெப்-கேமரா' மூலம், எனது அறையில் இருந்தபடியே, 150 மையங்களையும் கண்காணிக்க, ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

குரூப்-2 கலந்தாய்வு: ஏற்கனவே நடந்த குரூப்-2 தேர்வு தொடர்பாக, சென்னை, ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. இதனால், கலந்தாய்வு நடத்த முடியாத நிலை இருந்து வந்தது. இவ்வழக்கில், தேர்வாணையத்திற்கு சாதகமாக, நேற்று தீர்ப்பு வந்துள்ளது.தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, ஒரு வாரத்திற்குள், கலந்தாய்வு நடத்தப்படும். இதன்மூலம், 3,500 பணியிடங்கள் நிரப்பப்படும்.இவ்வாறு நடராஜ் தெரிவித்தார்.

Saturday, August 04, 2012

TNPSC GROUP II Exam conduct

எஸ்.சி குரூப்-2: கோவையில் 52.4% பேர் ஆப்சென்ட்-05-08-2012 எழுத்தின் அளவு : Print Email கோவை: கோவையில் நடந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வுக்கு அழைப்பு கொடுக்கப்பட்ட 4 ஆயிரத்து 820 பேரில் 2 ஆயிரத்து 296 பேர் மட்டுமே தேர்வுக்கு வந்தனர். நிலைய தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட 138 பதவிக்கான, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 (ஒருங்கிணைந்த சார்நிலை பணிகளுக்கான தேர்வு நிலை௨), எழுத்து தேர்வு, கோவை மாவட்டத்தில் 13 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த 19 மையங்களில் தேர்வு நேற்று நடந்தது. தேர்வுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டவர்களில் 47.6% பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். மீதமுள்ள (2,524 பேர்) 52.4% பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டி.என்.பி.எஸ்.சி., சேர்மன் நடராஜன் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் 138 பதவிகளுக்காக நடக்கும், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு, 66 ஆயிரம் பேருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவோரின் அடையாள அட்டை, ஹால் டிக்கெட் ஆய்வு செய்து அனுமதிக்கப்பட்டனர். மாநிலம் முழுவதும் அமைதியாக தேர்வு நடந்தது. தேர்வுக்கான அனைத்து நடைமுறைகளும், வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. பணி நியமனம் உண்மையான தகுதி அடிப்படையில் நடக்கும் என்றார்.

Tnpsc

டிஎன்பிஎஸ்சி குரூப்,4 தேர்வுக்கான முடிவுகள் இன்னும் 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் ஆர்.நட்ராஜ் அறிவிப்பு. › ஈரோட்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் (டிஎன்பிஎஸ்சி. ,) ஆர்.நட்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் சனிக்கிழமை ... http://www.kalvisolai.com/2012/08/4-10.html?m=1 (UC Browser)