இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, August 08, 2019

ஏ.டி.எம்.,மில் இரவு நேர பரிவர்த்தனை நிறுத்தம்


ஏ.டி.எம். மோசடி அதிகளவில் இரவு நேரங்களில் நடப்பதால் இரவு 11:00 முதல் காலை 6:00 மணி வரை 'கார்டு' பண பரிவர்த்தனையை நிறுத்தி எஸ்.பி.ஐ. எனும் பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வங்கி கிளைகளுக்கு எஸ்.பி.ஐ. அனுப்பிய சுற்றறிக்கை:

ஏ.டி.எம். கார்டு வாயிலாக 40 ஆயிரம் ரூபாய் வரை பண பரிமாற்றம் செய்ய முடியும். வங்கி வேலை நேரங்களில் மட்டுமல்லாமல் எந்த நேரத்திலும் இந்த சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும்.ஏ.டி.எம். இயந்திரங்களில் 'ஸ்கிம்மர்' இயந்திரம் பயன்படுத்தி இரவு நேரங்களில் கார்டுக்கும் வங்கி கணக்கிற்கும் பண பரிமாற்றம் செய்து சிலர் மோசடியில் ஈடுபடுகின்றனர்.

இதனால் வாடிக்கையாளர்களுக்கும் வங்கிக்கும் அதிக இழப்பு ஏற்படுகிறது.இதுபோன்ற மோசடியை தவிர்க்க ஏ.டி.எம். கார்டிலிருந்து பணம் எடுக்கும் அளவு 40 ஆயிரம் ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் இரவு நேரங்களில் நடக்கும் மோசடியை தவிர்ப்பதற்காக இரவு 11:00 மணி முதல் காலை 6:00 மணி வரை ஏ.டி.எம். மையத்தில் கார்டிலிருந்து மற்றொரு கார்டுக்கும் வங்கி கணக்கிற்கும் பண பரிமாற்றம் செய்வதை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு ஏ.டி.எம். மைய திரையில் வெளியாகும். மேலும் அனைத்து வங்கி கிளைகளும் வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment