இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, November 03, 2017

EMIS - அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அடையாள அட்டை முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முரைக்கடிதம்.


படைப்புகள்

💐💐💐💐💐💐💐💐💐💐
*படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.*
💐💐💐💐💐💐💐💐💐💐
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்
*இருமாத கல்வி இதழ் : புது விழுது*

அன்புமிக்க நண்பர்களுக்கு வணக்கம்..

புது விழுது (நவ.-டிச.) இதழுக்கு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன..

👉🏼நீங்கள் வாசித்த.. உங்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்திய..
வகுப்பறை செயல்பாடுகளில் மாற்றத்தை உருவாக்க உந்து சக்தியாக இருந்த கல்வி சார்ந்த நூல்களை அறிமுகம் செய்யலாம்..

👉🏼உங்கள் வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்..

👉🏼கற்பித்தலில் புதிய உத்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..

👉🏼நீங்கள் பார்த்து ரசித்த கல்வி சார்ந்த குறும்படங்கள் குறித்து எழுதலாம்..

👉🏼தங்கள் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட புதிய முயற்சிகள் குறித்து பகிர்ந்து கொள்ளுங்கள்..

👉🏼வகுப்பறை செயல்பாடுகளில் உதவக் கூடிய ஆண்டிராய்டு செயலிகளின் பயன்பாடு குறித்து பகிர்ந்து கொள்ளுங்கள்..

உங்களது சிறந்த அனுபவங்கள் ஆசிரிய சமூகம் முழுமைக்கும் பயன்பட வேண்டும்..👍🏽

🎤எனவே தான்
ஆசியர்களாகிய
உங்கள் படைப்புகளுக்கு ஒரு மேடை அமைத்து தருகிறது தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

உங்கள் படைப்புகள்..

*""ஏ4 தாளில் இரண்டு பக்கங்களுக்குள் இருக்க வேண்டும்..""*

*புதியதாகவும் தங்களது சொந்த படைப்பாகவும் இருப்பது அவசியம்..*

*அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்*
tnsf.vizhuthu@gmail.com
வாட்ஸ்அப்: 9047140584

*படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்* நவம்பர், 15

*இதழ் வெளியாகும் நாள்*
டிசம்பர் 3

அன்புடன்
✍🏼 தேனி சுந்தர்
இதழாசிரியர்
*புது விழுது*
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
9047140584

ஒத்திவைப்ப்பு

Thursday, November 02, 2017

வி.ஏ.ஓ., பதவிக்கு தனி தேர்வு இல்லை : டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு


'வி.ஏ.ஓ., எனப்படும் கிராம நிர்வாக அதிகாரி பதவிக்கான தேர்வு, குரூப் - ௪ தேர்விலேயே இணைத்து நடத்தப்படும்' என, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயகுமார் அறிவிப்பு:

டி.என்.பி.எஸ்.சி.,யால் நடத்தப்படும், குரூப் - ௪ல் அடங்கிய பதவிகளுக்கும், வி.ஏ.ஓ., பதவிக்கும், பத்தாம் வகுப்பு தான் கல்வித் தகுதி.இரண்டு பதவிகளுக்கும், தனியாக தேர்வு நடத்தும்போது, குரூப் - 4 பணிகளுக்கு, 15லட்சம் பேரும், வி.ஏ.ஓ., பதவிக்கு 12 லட்சம் பேரும் விண்ணப்பிக்கின்றனர். வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பிக்கும், 60 சதவீதம் பேர், குரூப் - ௪ தேர்வுக்கும் விண்ணப்பிக்கின்றனர். தனியாக நடத்தும்போது, ஒவ்வொரு தேர்வுக்கும், 15 கோடி ரூபாய் செலவாகிறது. இரண்டு தேர்வுக்கும், தனித்தனியே கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க, அதிக செலவாகிறது. இதுவரை நடந்த தேர்வுகளை ஆய்வு செய்ததில், ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், 20 சதவீதம் பேர், மறு பதவிக்கு, மற்றொரு தேர்வு எழுதுவது தெரிகிறது. எனவே, குரூப் - ௪ல் அடங்கிய பதவிகளில், வி.ஏ.ஓ., தேர்வையும் இணைத்து.

ஒரே தேர்வாக நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. குரூப் - 4ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அந்தந்த பதவிக்கு, தனியாக பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல், வி.ஏ.ஓ., தேர்விலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.எனவே, பயிற்சி குறித்த பகுதி, தேர்வுக்கான பாடத் திட்டத்தில் தேவை இல்லை என, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்து உள்ளது.

தேசிய திறனாய்வு தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்' பெற வசதி


பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், வரும் ஆண்டுகளில் கல்வியை தொடர, மத்திய அரசு உதவித்தொகை வழங்குகிறது. இதை பெறுவதற்கான, தேசிய திறனாய்வு தேர்வு, நாளை நடக்கிறது. தமிழகத்தில், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், தேர்வை எழுத உள்ளனர். இதற்கான ஹால் டிக்கெட்டை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்யலாம் என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் கல்வி செலவு படி அதிகரிப்பு


மத்திய அரசு ஊழியர்களின், மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்விக்காக வழங்கப்படும் படியை உயர்த்தி, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின், குழந்தைகளின் கல்வி செலவுக்காக, ஒரு குறிப்பிட்ட தொகை, சிறப்பு படியாக வழங்கப்படுகிறது.

அரசு ஊழியர்களின் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்வி செலவுக்காக, ஆண்டுக்கு, 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், அந்த தொகையை, 54 ஆயிரம் ரூபாயாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது; இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்கள், தங்கள் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்த தொகையில், 54 ஆயிரம் ரூபாய் வரை திரும்ப பெற முடியும். மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர் இருவரும், மத்திய அரசு ஊழியராக இருந்தால், அவர்களில் யாரேனும் ஒருவர் மட்டுமே இந்த தொகை கோரி விண்ணப்பிக்க முடியும்.

தேர்வு முறைகளில் மாற்றம் – டி.என்.பி.எஸ்.சி


குரூப்-4 ,மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வை ஒன்றிணைத்து நடத்த டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது. தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கிறது.

இதன்படி தமிழக அரசின் பல்வேறு வகையான பதவிகளுக்கும் தனித்தனியாக கிரேடு வாரியாக தேர்வு நடத்தப்படுகிறது. இந்த வகையில், குரூப்-4 , விஏஓ ஆகிய பணியிடங்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டு வந்த எழுத்து தேர்வை வரும் காலங்களில் ஒன்றிணைத்து நடத்த டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் விரும்பும் பணியினை கலந்தாய்வு மூலம் தேர்ந்தெடுத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி, தனித்தனியாக தேர்வு நடத்துவதால் ஒவ்வொரு தேர்வுக்கும் ரூ.15 கோடி வரை செலவு ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதேபோல் விஏஓ தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களில் 60 சதவீதம் பேர் குரூப்-4க்கும் விண்ணப்பிக்கின்றனர் எனவும், 10-ம் வகுப்பு கல்வித் தகுதியில் பணியிடங்களை நிரப்புவதால், இரு தேர்வுகளும் இனி ஒன்றாகவே நடத்தப்படும் என்று தெரிவித்துள்ள டி.என்.பி.எஸ் இனி .சி.சி.எஸ்.இ – 4 (CCSE-IV) என்ற பெயரில் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

யுவகிருஷ்ணா

என்றும் கன்னி
-யுவகிருஷ்ணா

'அ’, ‘ஆ’, ‘இ’, ‘ஈ’ கற்றுக் கொண்டதே ‘தினத்தந்தி’யில்தான்.

 

நினைவு தெரிந்த நாளிலிருந்தே ‘தினத்தந்தி’ வாசகன். ‘கன்னித்தீவு’, ‘ஆண்டியார் பாடுகிறார்’, ‘சாணக்கியன் சொல்’, ‘குருவியார் பதில்கள்’ பகுதிகளில் தொடங்கியது என் வாசிப்பு.

தமிழர்கள் மட்டுமின்றி தமிழரல்லாதவர்களும் தமிழ் வாசிக்க, ‘தந்தி’யே நல்ல ஆசான். ஒரு தமிழ்ப் பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய கடினமான பணியை, just like that ஆக 75 ஆண்டுகளாக செய்துவருகிறது ‘தினத்தந்தி’.

‘நூறாவது நாள்’ படம் பார்த்து பதினான்கு பேரை கொலை செய்த பிரகாஷ், சென்னை நகரில் தலையில்லா முண்டம் வீதியுலா, ஆட்டோ சங்கர், ‘மாயாவி’ வீரப்பனில் தொடங்கி இன்றைய எடப்பாடி, ‘தெர்மாக்கோல்’ ராஜூ வரையிலும் ‘தினத்தந்தி’யின் வாயிலாகவே என் மூளைக்குள் திணிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்று வரையிலும் ‘தினத்தந்தி’ இல்லாமல், காலை காஃபி கழுத்துக்குக் கீழே இறங்குவதில்லை.

இரண்டாம் உலகப் போரின் விளைவாக இந்தியாவின் தலையெழுத்தே மாறப்போகிறது என்று கணித்தார் அய்யா ஆதித்தனார் அவர்கள். அந்தப் போரின் செய்திகளை தமிழர்கள் உடனுக்குடன் அறிந்துக் கொள்வது அவசியம் என்கிற உந்துதலாலேயே ‘தினத்தந்தி’, இதே நவம்பர் 1ஆம் தேதி, 1942ல் மதுரையில் பிறந்தது.

போர்ச்செய்திகளை பெரும் பணம் செலவு செய்து, சர்வதேச செய்தி நிறுவனங்களிடம் பெற்று சிறப்பாக வெளியிட்டார். தமிழ் வாசிக்கத் தெரியாதவர்கள்கூட ‘தினத்தந்தி’ வெளியிடும் படங்களை பார்ப்பதற்காகவே, அந்த செய்தித்தாளை வாங்கத் தொடங்கினார்கள். சுருட்டப்பட்ட ‘தினத்தந்தி’யை கக்கத்தில் செருகியிருப்பவர்கள், அறிவுஜீவிகளாக அடையாளம் காணப்பட்ட காலம் ஒன்று உண்டு.

செய்திகளை செய்திகளாகவே தருவதுதான் அன்றிலிருந்து இன்றுவரை ‘தினத்தந்தி’யின் சிறப்பு. தமிழர் உரிமை என்கிற பாதையில் இதுவரை எப்போதுமே தடம் புரண்டதில்லை என்பது பெரும் சிறப்பு.

‘தினத்தந்தி’யை ஆளுங்கட்சி ஜால்ரா என்று ஏராளமானோர் விமர்சிப்பது உண்டு.

ஊடக உலகில் இருபெரும் பாணிகள்தான் உண்டு. ஒன்று, பிபிசி பாணி. மற்றொன்று, சிஎன்என் பாணி.

அரசாங்கத்தின் கொள்கை நடைமுறைகளை மக்களிடம் எளிமையாக பிரச்சாரம் செய்வது பிபிசி பாணி. அரசுடைய கொள்கைகளில் குறைகளை தேடிக்கண்டுபிடித்து, விமர்சிப்பது சிஎன்என் பாணி. முந்தையது அமைதியாக ஓடும் ஆறு என்றால், பிந்தையது சலசலத்து கரைகளை உடைத்து மீறும் காட்டாறு.

‘தினத்தந்தி’, பிபிசி பாணியை பின்பற்றும் ஊடகம் என்பதால், அது ஆளுங்கட்சிக்கு அனுசரணையாகவே செய்திகளை வெளியிடும் என்று அந்தந்த சமகாலத்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் விமர்சிக்கிறார்கள். உண்மையில் பிபிசி பண்புகளோடு செயல்படும் ஊடகங்களே, மிக நீண்ட காலக்கட்டத்துக்கு செயல்படக்கூடியவை என்பது நிரூபிக்கப்பட்ட வரலாறு. இன்று, இந்தியாவிலேயே நம்பர் ஒன் தனியார் தொலைக்காட்சியாக 25 வருடங்களாக கோலோச்சும் ‘சன் டிவி’யும் பிபிசி பண்புகளுடனேயே செயல்படுகிறது. ‘சன் டிவி’யை உற்றுக் கவனிப்பவர்கள், அது தூர்தர்ஷனின் நவீனவடிவ நீட்சியாகவே தன்னை கட்டமைத்துக் கொண்டிருப்பதை கவனிக்கலாம்.

சரி, சிஎன்என் பாணி ஊடகங்கள் தமிழில் எவை?

எவையெல்லாம் ‘தினத்தந்தி’, ‘சன் டிவி’க்கு போட்டி ஊடகங்களோ, அவை பெரும்பாலும் சிஎன்என் பண்புகளோடு செயல்படுபவை என்று யூகித்துக் கொள்ளலாம். இன்றைய ‘தினகரன்’ விதிவிலக்கு. அது பாதி பிபிசி, பாதி சிஎன்என்.

75 ஆண்டுகளாகவே ஆள்வோரோடு பகைத்துக் கொள்ளாமல் ‘தினத்தந்தி’ நடந்துக் கொண்டிருக்கிறது என்கிற விமர்சனம் ஒரு பக்கம் இருந்தாலும், 1977 முதல் 1987 வரையிலான பத்தாண்டுகள் ‘தினத்தந்தி’க்கு மிகக்கடுமையான சோதனைக்காலம் என்றே சொல்லலாம். சினிமா ஹீரோவாக இருந்த காலத்திலிருந்தே எம்.ஜி.ஆருக்கு ‘தினத்தந்தி’ மீது சந்தேகம் உண்டு. அது தனக்கு எதிராக செயல்படக்கூடிய ஊடகம் என்றே கருதி வந்தார். ‘தினத்தந்தி’ குடும்பத்தார், கலைஞருக்கு விசுவாசமானவர்கள் என்கிற எண்ணமும் அவருக்கு இருந்தது. எனவேதான் ‘தினத்தந்தி’க்கு மாற்று இருந்தே தீரவேண்டும் என்கிற எண்ணத்தில் ‘தந்தி’க்கு போட்டியாக அப்போது களத்தில் இருந்த ஊடகங்களை பெரியளவில் ஊக்குவித்தார்.

முதல்வருக்கு அத்தகைய உள்நோக்கங்கள் இருந்திருந்தாலும், ‘தினத்தந்தி’ எப்போதும் போலவே அரசு செய்திகளுக்கும், ஆள்வோருக்கும் முக்கியத்துவம் தந்தே நடந்துக் கொண்டது. எல்லையில்லா அதன் வாசகப் பரப்பு, எத்தகைய சோதனைகளையும் வெல்லக்கூடிய வலிமையைப் பெற்றதாகவே இருந்தது.

எனினும்,

‘தினத்தந்தி’யின் அந்த பண்புகள், அதன் கிளை நிறுவனங்களிடம் - குறிப்பாக தந்தி டிவி - இருப்பதாக தெரியவில்லை. சிஎன்என் பாணி பரபரப்புச் செய்திகளுக்கு, அவர்களது காட்சி ஊடகம் முக்கியத்துவம் கொடுப்பதாகதான் தோன்றுகிறது.

என்னதான் ‘தினத்தந்தி’யின் வாசகனாக, உபாசகனாக, ரசிகனாக இருந்தாலும், இன்று அந்த நாளிதழுக்கு பெரும் போட்டியாக உருவெடுத்திருக்கும் ‘தினகரன்’ நாளிதழின் வெள்ளி, ஞாயிறு இணைப்பிதழ்களுக்கு ஆசிரியர் பொறுப்பில் இருப்பதால் ‘தினத்தந்தி’, எனக்கும் தொழில்ரீதியான எதிரிதான். வாசகனாக இல்லாமல், போட்டியாளர் என்கிற முறையில் அவர்களுடைய சினிமா செய்திகள், ஞாயிறு இணைப்பிதழ் தயாரிப்புகளை இப்போது மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். மற்ற போட்டி ஊடகங்களை காட்டிலும், ‘தினத்தந்தி’ என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே என்னுடைய இரத்த அழுத்தத்தை எகிறவைக்கக்கூடிய காரணியாக இருக்கிறது. எங்களுக்கு மட்டுமல்ல, செய்தி ஊடகங்கள் அத்தனைக்குமே ‘தினத்தந்தி’தான் ஸ்போர்ட்டிவ்வான ஒரே போட்டியாளர்.

அதனால்தான் முன்பை காட்டிலும் ‘தினத்தந்தி’யை வெகுநெருக்கமாக இப்போது உணரமுடிகிறது. சினிமா புளோஅப்புகளுக்கு, ‘தினத்தந்தி’யின் சினிமா எடிட்டர் தரக்கூடிய ஃபுட்நோட் ஓர் இதழியல் அற்புதம். அதற்கு ஒரு வரியில் அவர்கள் தரக்கூடிய தலைப்பும் அபாரம். சனிக்கிழமைகளில் அவர்கள் வெளியிடும் பிரபலங்களின் தொடர் (இப்போது ஏவிஎம் சரவணன் பிரமாதமாக எழுதுகிறார்), உலகசினிமா குறிப்புகள், ஞாயிறுகளில் வெளியிடும் வட இந்திய நடிகை பேட்டி, தொடர்கதை, சிறுகதை, அழகுக் குறிப்புகள், சாமானியர்களின் சிறப்புப் பேட்டி என்று எதையுமே தவறவிடுவதில்லை.

குறிப்பாக ‘தினத்தந்தி’ சிறுகதைகளுக்கு நானும், ‘குங்குமம்’ ஆசிரியர் சிவராமனும் பெரும் ரசிகர்கள். திங்கள் காலையிலேயே, முந்தைய நாள் சிறுகதை பற்றிதான் பேசிக்கொள்வோம். பெரும்பாலும் புத்திசாலி மருமகள், பாசமான மாமியார் ரக சிறுகதைகள்தான். எனினும், இலக்கியம் படைக்கக் கூடிய எழுத்தாளர்களிடம் தென்படக்கூடிய நரித்தந்திரமான எழுத்து பாணி, ‘தினத்தந்தி’யில் சிறுகதை எழுதக்கூடிய வாசக எழுத்தாளர்களிடம் கொஞ்சம்கூட இருக்காது. ரஜினியின் மொழியில் சொல்வதென்றால் சமூகத்துடைய நிஜமான 'imporant topic addressed' என்பது ‘தினத்தந்தி’யின் 250, 300 வரி சிறுகதைகளில்தான் வெளிப்படுகிறது.

யோசித்துப் பார்த்தால் ‘தினத்தந்தி’யிடம் வெளிப்படும் வெள்ளந்தித் தனமே அதன் பலம். இதற்காக தந்தியை தயாரிப்பவர்கள் அறிவுரீதியாக எளிமையானவர்கள் என்று அர்த்தமல்ல. மிக ஆழ்ந்த வாசிப்பும், சமூகம் குறித்த பரவலான அவதானிப்பும் மிகுந்தவர்களே இவ்வளவு அப்பாவித்தனமான எழுத்தை வெளிப்படுத்த முடியும்.

இவை மட்டுமல்ல. ‘தினத்தந்தி’யின் மகத்தான வெற்றிக்கு காரணம். அதனுடைய சாதுர்யமான நிர்வாகம். மேனேஜ்மேண்ட் புத்தகம் எழுதுமளவுக்கு நிறைய இருக்கிறது என்றாலும், அவை அவ்வளவாக வெளியில் பேசப்படுவதில்லை. ஏனோ, ஊடக உலகத்தில் இரும்புத்திரை நாளிதழாக, மற்றவர்களிடமிருந்து ‘தினத்தந்தி’ தன்னை எப்போதுமே தனிமைப்படுத்திக் கொள்கிறது என்பதால் இருக்கும்.

1963ல் இதே நவம்பர் மாதத்தில் ஒரு நாள்.

அய்யா ஆதித்தனார் அவர்கள், கோவைக்கு செல்ல வேண்டிய அவசரத்தில் இருந்தார். மறுநாள் வெளியாக வேண்டிய ‘தினத்தந்தி’யின் தலைப்புச் செய்தியை சரிபார்த்துவிட்டு, செய்தி ஆசிரியர் நாதன் அவர்களிடம் பார்க்கச் சொல்லிவிட்டு இரவு ரயில் ஏறிவிட்டார்.

எந்த ஊருக்கு சென்று இறங்கினாலும் அங்கே ‘தினத்தந்தி’யை வாங்கிப் புரட்டுவது அய்யாவின் வழக்கம். கோவையில் காலை இறங்கியதுமே ‘தந்தி’ வாங்கி புரட்டுகிறார். இவர் குறிப்பிட்ட தலைப்புச் செய்தி இல்லை. மாறாக அமெரிக்க அதிபர் ஜான் எஃப்.கென்னடி சுடப்பட்ட செய்தி, தலைப்பில் வந்திருக்கிறது.

சென்னை திரும்பிய அய்யா, ஒரு விசாரணைக் கமிஷன் நடத்துகிறார். அவர் குறிப்பிட்ட தலைப்பு வராதது குறித்து, மிகவும் கோபமாக இருக்கிறார் என்றே ஆசிரியர் குழுவினர் நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.

எல்லாப் பழியையும், அப்போது நிர்வாகத்துக்கு வந்திருந்த இளைஞரான சிவந்தி ஆதித்தன் அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்.

நடந்தது இதுதான்.

நாளிதழ் அச்சாகி, வெளியூர்களுக்கு அனுப்பப்பட்டு விட்ட நிலையில் டெலக்ஸில் ஒரு செய்தி, சர்வதேச செய்தி நிறுவனத்தால் அனுப்பப்பட்டு நள்ளிரவில் கிடைக்கிறது. அதை நாதன் அவர்கள் கவனித்து, உடனடியாக சிவந்தி ஆதித்தனுக்கு தகவல் தெரிவிக்கிறார். வெளியூர்களுக்கு அனுப்பப்பட்ட வண்டிகளை வழியில் மடக்கி, அந்த பேப்பரையெல்லாம் திரும்பப் பெறுகிறார்கள். கென்னடி சுடப்பட்ட செய்தி, நாதன் அவர்களால் அவசர அவசரமாக எழுதப்பட்டு தலைப்புச் செய்தியாக மாற்றப்பட்டு மீண்டும் ‘தினத்தந்தி’ அச்சாகிறது. வெளியூர் பதிப்புகளுக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்படுகிறது. ரயிலில் பயணம் செய்துக் கொண்டிருந்தார் என்பதால், அய்யா ஆதித்தனாருக்கு சொல்ல முடியவில்லை.

என்னவெல்லாம் நடந்தது என்பதை முழுமையாக விசாரித்து அறிந்த ஆதித்தனார், அன்று இரவில் பணியாற்றிய அத்தனை பேருக்கும் ஊக்கத்தொகை கொடுத்தார்.

அன்று ‘தினத்தந்தி’ செய்த சாதனை மிகப்பெரியது. ஏனெனில், கென்னடி சுடப்பட்ட செய்தியை முதன்முதலாக வெளியிட்ட ஒரே இந்திய செய்தித்தாளாக ‘தினத்தந்தி’ மட்டுமே இருந்தது.

‘தினத்தந்தி’யின் மகத்தான பவளவிழா வெற்றிக்குப் பின்னால், இதுபோல நாம் அறியாத கதைகள் ஆயிரம் உண்டு. நாதன், சிவந்தி ஆதித்தன் போல பல நூறு பேரின் சமயோசிதமான, தைரியமான நடவடிக்கைகள் ஏராளம்.

என் வயதில் இருமடங்கான பிரியமான எதிரிக்கு பவளவிழா பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

Wednesday, November 01, 2017

ஆசிரியர் பயிற்சி தேசிய கவுன்சிலின் அங்கீகாரமற்ற பிஎட் நிறுவனங்களில் படித்தவர்களுக்கு அனுமதி: மத்திய அமைச்சரவை முடிவு


அங்கீகாரம் பெறாத ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனத்தில் படித்த மாணவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் மசோதாவுக்கு அனுமதி வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஓராண்டு அல்லது இரண்டாண்டுகளுக்கு என்று குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும், சில வரையறைகளுக்கு உட்பட்டு அனுமதி பெற்ற ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படுவதற்கும், பிற படிப்புகளை தொடங்குவதற்கும் ஆசிரியர் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலின் அனுமதியை பெறவேண்டும்.

ஆனால், கவுன்சிலின் அனுமதியை முறைப்படி பெறாமல் சில ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மாணவர்களை சேர்ப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களில் படித்து முடித்து வெளியே வரும் மாணவர்களுக்கு ஆசிரியர் பணியாற்ற அனுமதி அளிக்கப்படுவதில்லை.

இந்த பிரச்னையை தீர்க்கவும் 1993ல் கொண்டு வரப்பட்ட தேசிய ஆசிரியர் கவுன்சில் சட்டத்தை மாற்றி அமைக்கவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு எடுத்தது. இந்நிலையில், மாணவர்களின் தொடர் கோரிக்கையின் அடிப்படையில் அங்கீகாரம் பெறாத ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் படித்தவர்களுக்கு குறிப்பிட்ட தேதி வரையில் அங்கீகாரம் வழங்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இதன் மூலம் தேசிய கவுன்சிலின் அங்கீகாரமற்ற நிறுவனங்களில் படித்தவர்கள் அரசு வேலைவாய்ப்புகளில் சேர வழி ஏற்பட்டுள்ளது.

முன் அரையாண்டு தேர்வு நடத்த அரசு பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு


அரசு பள்ளிகளில், பொதுத் தேர்வு மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள, முன் அரையாண்டு தேர்வை மாற்றி அமைக்க, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளிலும், மெட்ரிக் பள்ளிகளிலும், ஒன்பதாம் வகுப்பு வரை, மூன்று பருவத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

பொதுத் தேர்வு எழுதும், ௧௦ம் வகுப்பு முதல், பிளஸ் ௨ வரையிலான மாணவர்களுக்கு, காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அரசு பொதுத் தேர்வுகளில், தனியார் பள்ளி மாணவர்களை விட, அரசு பள்ளி மாணவர்கள், அதிக மதிப்பெண் பெறும் வகையில், அவர்களுக்கு கூடுதலாக தேர்வுகள் வைத்து, பொதுத் தேர்வுக்கு தயார்படுத்த, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, ௧௦ முதல், பிளஸ் ௨ வரையிலான மாணவர்களுக்கு, இடைத்தேர்வுக்கு பதில், முன் அரையாண்டு தேர்வு நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. இத்தேர்வுக்கு, அரசு பள்ளி ஆசிரியர்களில் ஒரு தரப்பினர், அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: காலாண்டுக்கு பின் நடத்தப்படும் பாடங்களுக்கு மட்டும், இடைத்தேர்வில் வினாத்தாள் இடம்பெறும். தற்போது, முன் அரையாண்டு தேர்வு நடத்துவதால், இதுவரை நடத்தப்பட்ட அனைத்து பாடங்களையும், மாணவர்கள் படிக்க வேண்டிய நிலை உள்ளது. அதற்கு, போதிய அவகாசம் இல்லை. எனவே, முன் அரையாண்டு தேர்வை மாற்றி, இடைத்தேர்வு மட்டும் நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். மெட்ரிக் பள்ளிகளில் அதிக தேர்வுகள் வைத்து, பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தயார்படுத்தப்படுகின்றனர். அதே போல், அரசு பள்ளி மாணவர்களும் அதிக மதிப்பெண்களை பெற, முன் அரையாண்டு தேர்வு நடத்தப்படுவதாக, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

GPF rate of interest

CPS rate of interest