இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, October 04, 2017

டோட்டோ ஸ்கூலுக்குப் போனபோது...


டோட்டோ - சானை உங்களுக்குத் தெரியுமா? தெரியாவிட்டாலும் பரவாயில்லை, டோட்டோவின் கதையைக் கேட்டால் நிச்சயம் உங்களுக்கு அவளைப் பிடிக்கும். ஏனென்றால், உங்களைப் போல என்னைப் போல நிறைய குறும்புகளைச் செய்த சேட்டைக்காரக் குழந்தை அவள்.

சுட்டிப்பெண் டோட்டோ - சான் ஒரு பள்ளியிலிருந்து விலக்கப்பட்டு சமீபத்தில்தான் புதிய பள்ளியில் சேர்ந்திருந்தாள், ஆனால் அந்த புதிய பள்ளியிலிருந்தும் அவளை வெளியேறச் சொல்லிவிட்டார்கள். இது அவள் அம்மாவுக்கு வருத்தம் தந்தது. முதல் வகுப்பிலேயே அவள் பல முறை வெளியேற்றப்பட்டுவிட்டாள். ஒரு வாரத்துக்கு முன் டோட்டோவின் கிளாஸ் டீச்சர், டோட்டோவின் அம்மாவை அழைத்திருந்தார். டோட்டோவின் அம்மாவிடம் டீச்சர் சொன்ன முதல் வாக்கியமே, "உங்கள் மகள் மொத்த கிளாஸையும் கெடுக்கிறாள். தயவுசெய்து அவளை வேறு பள்ளியில் சேர்த்துவிடுங்கள். இனிமேல் எதையும் பொறுத்துக்கொள்ள முடியாது" என்று டீச்சர் பெருமூச்சு விட்டுக்கொண்டே சொன்னாள். டோட்டோவின் அம்மா இதைக் கேட்டு திடுக்கிட்டாள். மொத்த கிளாஸையே இடையூறு செய்யும் அளவுக்கு டோட்டோ அப்படி என்ன செய்தாள் என்ற கேள்வி அவளுக்குள் எழுந்தது.

"தன் டெஸ்க்கை பல நூறு முறை அவள் திறந்து மூடுகிறாள். எதையாவது வைக்க வேண்டும், அல்லது எடுக்க வேண்டும் என்றால்தான் டெஸ்க் டிராவைத் திறக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். உங்கள் மகள் இதை நன்றாகப் பிடித்துக் கொண்டுவிட்டாள். அவளது நோட்டுப்புத்தகம், பென்சில் பாக்ஸ், பாடப்புத்தகம், அப்புறம் டெஸ்கில் வேறு என்ன இருக்கின்றனவோ, அவற்றை வெளியே எடுக்கிறாள். அல்லது எதையாவது உள்ளே வைக்கிறாள். ஒரு எழுத்தை எழுதி முடிப்பதற்குள் மேற்கண்ட பொருள்களை ஒவ்வொன்றாக உள்ளே வைத்துவிட்டு, அடுத்த எழுத்தை எழுவதற்கு மீண்டும் எல்லாவற்றையும் வெளியே எடுப்பாள். இவை எல்லாவற்றையும் நாம் நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் அவள் செய்வாள். இதெல்லாமே தலையைச் சுற்ற வைக்கும். ஆனால், இதற்காக அவளை நான் திட்ட முடியாது. ஏனென்றால், ஒவ்வொரு முறை டெஸ்க் மேற்பகுதியை அவள் திறப்பதற்கும் மூடுவதற்கும் காரணம் இருக்கும்." இதைச் சொன்னபோது அந்த டீச்சரின் கண் இமைகள் படபடவென இமைத்தன.

இதைக் கேட்டவுடன் டோட்டோவின் அம்மாவுக்கு, டோட்டோ ஏன் டெஸ்க் மேற்பகுதியை அடிக்கடி திறந்து மூடுகிறாள் என்பதற்கான காரணம் கொஞ்சம்கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது. இந்த புதிய பள்ளியில் இருந்து டோட்டோ முதல் நாள் வீடு திரும்பியதும் எவ்வளவு குதூகலமாக இருந்தாள் தெரியுமா? "இந்த ஸ்கூல் ரொம்ப நல்லாயிருக்கு. வீட்டில் உள்ள உன் மேஜை டிராயரை நீ இழுப்பியே, அதில் வெறும் டிராயர் மட்டும்தான் இருக்கு. ஆனா... ஸ்கூலில் உள்ள டெஸ்க்கின் மேல் பகுதியை அப்படியே தூக்கிவிடலாம்... அந்த டெஸ்க் ஒரு பெட்டி மாதிரி இருக்கும். அதில் எல்லா பொருளையும் வைத்துக்கொள்ள முடியும். அது எவ்வளவு சூப்பரா இருக்கு தெரியுமா?" என்று டோட்டோ சொன்னது அவள் அம்மாவுக்கு ஞாபகம் வந்தது. புதிய டெஸ்கின் மேல் பகுதியை டோட்டோ சந்தோஷமாகத் திறந்து மூடிய காட்சி அம்மாவின் மனதுக்குள் ஓடியது. டெஸ்கின் மேற்பகுதியைத் திறந்து மூடுவது அப்படியொன்றும் பெரிய குறும்புத்தனமாக அம்மாவுக்குத் தோன்றவில்லை. அப்படிச் செய்து பார்ப்பதில் உள்ள புதுமை சலித்துப் போனவுடன், இப்படிச் செய்வதை டோட்டோ விட்டுவிடலாம் என்றே அம்மாவுக்குத் தோன்றியது.

அதே நேரம், "இது மட்டும் என்றால்கூட, நான் இவ்வளவு பெரிசு படுத்தியிருக்க மாட்டேன். டெஸ்கை மூடித் திறக்கும் நேரம் போக, கிளாஸ் நடக்கும் மற்ற எல்லா நேரமும் டோட்டோ நின்றுகொண்டே இருப்பாள்," என்றாள் அந்த டீச்சர். "எழுந்து நிற்கிறாளா, எங்கே?" என்று அம்மா ஆச்சரியத்துடன் கேட்டாள். "ஜன்னலில்தான். அப்பொழுதுதானே தெருவில் இருக்கும் இசைக்கலைஞர்களைக் கூப்பிட முடியும்?" - அந்த டீச்சர் கிட்டத்தட்ட அலறினாள். அதன் பிறகு டீச்சர் சொன்ன கதை இதுதான்: கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு டெஸ்கின் மேல் பகுதியைத் திறந்து மூடிய பிறகு, டோட்டோ ஜன்னலருகே நின்று தெருவை வேடிக்கை பார்ப்பாள். சரி, டெஸ்கைத் திறந்து மூடி சத்தம் போடாதவரை நல்லது என்று நான் நினைக்கும்போது, வெளியே அலங்காரமாக ஆடை அணிந்து நடந்து செல்லும் தெரு இசைக்கலைஞர்களை டோட்டோ திடீரெனக் கத்திக் கூப்பிடுவாள். எங்களது கிளாஸ் தெருவுக்குப் பக்கத்தில் இருப்பதால், தெருவில் போகிறவர்களிடம் ஜன்னல் வழியே பேச முடியும். டோட்டோ கூப்பிட்டவுடன் இசைக்கலைஞர்கள் ஜன்னலுக்கு அருகே நின்றுவிடுவார்கள்.

"அதோ அவர்கள் வந்துவிட்டார்கள்," என்று டோட்டோ சப்தமாகக் கத்துவாள். உடனே, கிளாஸில் இருக்கும் எல்லாக் குழந்தைகளும் ஜன்னலருகே குழுமிவிடுவார்கள். "எங்களுக்கு வாசித்துக் காட்டுங்கள்" என்று டோட்டோ சொன்னவுடன், ஒரு கச்சேரி நடக்கும். அது முடியும்வரை நான் கிளாஸ் எடுப்பதை நிறுத்திவிட்டு பேசாமல் நிற்பேன். அவர்கள் போன பின், எல்லாக் குழந்தைகளும் தங்கள் டெஸ்குக்குத் திரும்பிவிடுவார்கள். ஆனால், டோட்டோ மட்டும் ஜன்னல் அருகேயே நின்றுகொண்டு, "இன்னொரு இசைக்குழு இந்த வழியே வரலாம். அவர்களை நாம் கவனிக்கத் தவறிவிட்டால், அவமானம் இல்லையா?" என்று டோட்டோ பதில் சொல்லுவாள். "இப்போது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். இது கிளாஸுக்கு எவ்வளவு பெரிய தொந்தரவு" என்று டீச்சர் உணர்ச்சி பொங்கச் சொல்லிக்கொண்டிருந்தாள். "டோட்டோ வேறு என்ன செய்தாள்?" என்று அம்மா கேட்க, "வேறு என்ன செய்யவில்லை?" என்று டீச்சர் உரக்கக் கத்தினாள். இப்படியாக டோட்டோ, அந்தப் பள்ளியில் இருந்தும் வெளியேற்றப்பட்டாள். இது போன்ற சம்பவங்கள் காரணமாக டோட்டோவுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுவிடக் கூடாது என்று அவளுடைய அம்மா நினைத்தாள். அது மட்டுமில்லாமல், தனது சின்னக் குழந்தையைப் புரிந்துகொள்ளும் பள்ளியை டோட்டோவின் அம்மா தேடிக் கண்டுபிடித்தார். அந்தப் பள்ளிதான் டோமாயி. அந்தப் பள்ளியை நடத்தியவர் கோபயாஷி.

டோமாயி பள்ளியில் காலி ரயில் பெட்டிகள்தான் கிளாஸ் ரூம். கிளாஸ்ரூமே இவ்வளவு சுவாரசியமாக இருக்கும் அந்த ஸ்கூலில் பாடங்களோ, பரீட்சைகளோ, அடியோ, திட்டோ கிடையாது. ஒவ்வொரு குழந்தையும் எந்த விஷயத்தைக் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறதோ, அதை அவர்களுக்கு உரிய வேகத்தில் கற்றுத் தரும் பள்ளிதான் டோமாயி. டோட்டோவின் உண்மைப் பெயர் டெட்சுகோ குரோயாநாகி. அவள் பெரியவள் ஆனவுடன் உலகப் புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் யுனிசெப் அமைப்பின் நல்லெண்ணத் தூதராகவும் ஆனார். அதற்கு டோமாயி பள்ளியும், அதை நடத்திய கோபயாஷியும்தான் முக்கியக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விஷயங்கள் அனைத்தையும் "டோட்டோ சான் - ஜன்னலில் ஒரு சிறுமி" என்ற பெயரில் அவர் புத்தகமாக எழுதியுள்ளார். அது வெளியான இரண்டு வருடத்தில் ஜப்பானிய மொழியில் 50 லட்சம் பிரதிகள் விற்றது. உலகப் புகழ்பெற்ற இந்தப் புத்தகம் பல்வேறு உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. டோட்டோ படித்த டோமாயி பள்ளியைப் போன்ற ஒரு ஸ்கூல் நமக்கும் இருந்தால், நிச்சயம் ஜாலியாக இருக்கும், இல்லையா?

நிதி உதவி பெறும் பள்ளி - உபரி ஆசிரியர்கள் - ஊ.ஒ.பள்ளிகளுக்கு மாவட்டத்திற்குள் / மாவட்டம் விட்டு மாவட்டம் தற்காலிக அடிப்படையில் மாற்றுப்பணி - 2017- 2018 ஆண்டிற்கு மட்டும் சார்ந்த ஆசிரியரின் விருப்பம் சார்ந்து மாற்றுப் பணிபுரிய ஆணை வழங்குதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறை


Tuesday, October 03, 2017

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பேச்சு போட்டி


தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டுதமிழ் வளர்ச்சி துறையின் தமிழ் மன்றம் சார்பில் மாநிலம் முழுவதும் நாளை மறுதினம் (6ம் தேதி) 11, 12ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட உள்ளன. போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் பயிலும் பள்ளி தலைமையாசிரியரிடம் உரிய படிவத்தில் பரிந்துரையை பெற்று, போட்டி நாளன்று மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை அல்லது உதவி இயக்குநர்களிடம் நேரில் அளிக்க வேண்டும்.

போட்டி விதிமுறைகள், விண்ணப்ப படிவம் தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.org என்ற வலைதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். போட்டிக்கான தலைப்புகள் போட்டி தொடங்கும்போது அறிவிக்கப்படும். போட்டி முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும். போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.

போட்டி தேர்வுகளுக்கு தமிழக மாணவர்களை தயார்படுத்த கல்வித்துறை இணை இயக்குநர்கள் 10 பேர் வெளிமாநிலங்களில் ஆய்வு

போட்டித் தேர்வுகளுக்கு தமிழக மாணவர்களை தயார்படுத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர்கள் 10 பேர் கொண்ட குழுவினர் வெளி மாநிலங்களில் ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்துள்ளனர். மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு அவசியம் என்பதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், நீட் மற்றும் ஐஐடி, ஜேஇஇ, ஐஐஎம் உட்பட நுழைவுத்தேர்வு மற்றும் வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை தமிழக மாணவர்கள் எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இதற்காக சிபிஎஸ்இ, என்சிஇஆர்டி பாடத்திட்டங்களுக்கு ஏற்ப தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களை மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. மேலும், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஆந்திரா போன்ற மாநிலங்கள் பிளஸ்-1 வகுப்பிலேயே நீட், ஐஐடி, ஐஐஎம், ஜேஇஇ தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தி வருகின்றன. அதேபோல் தமிழக மாணவர்களை தயார்படுத்தும் வகையில் தமிழக கல்வித்துறையை சேர்ந்த இணை இயக்குநர்கள் 10 பேர் டெல்லி, கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, தெலங்கானா போன்ற பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன்படி, இணை இயக்குநர் நாகராஜமுருகன் டெல்லிக்கும், பொன்குமார் மகாராஷ்டிராவுக்கும், செல்வகுமார் குஜராத்துக்கும், குப்புசாமி ராஜஸ்தானுக்கும், குமார் தெலங்கானாவுக்கும், ரமேஷ் ஆந்திராவுக்கும், பாஸ்கர சேதுபதி கேரளாவுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இவர்கள் அங்குள்ள பாடத்திட்டங்கள் குறித்தும், போட்டித்தேர்வுகளுக்கு அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் அங்கு சிறப்பாக செயல்பட்டு வரும் தனியார் போட்டித்தேர்வு பயிற்சி மையங்களையும் ஆய்வு செய்தனர். இவர்கள் தங்களது ஆய்வு அறிக்கையை தமிழக அரசிடம் கடந்த வாரம் தாக்கல் செய்துள்ளனர். இதன் அடிப்படையில் தமிழக மாணவர்களை நீட் உட்பட போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் செயல்முறைகள் உருவாக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாக்காளர் பட்டியல் வெளியீடு


தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

2018–ம் ஆண்டு ஜனவரி 1–ந்தேதியை தகுதி நாளாக கொண்டு சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தினை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் (பெரும்பாலும் பள்ளிக்கட்டிடங்களில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகள்) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திருத்தத்தின்போது வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதோடு, இறந்த, இடம்பெயர்ந்த வாக்காளர் பெயர்களை நீக்குவதற்கும் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

நேற்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் தற்போது 5 கோடியே 95 லட்சத்து 88 ஆயிரத்து 2 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2 கோடியே 94 லட்சத்து 84 ஆயிரத்து 492 ஆண்களும், 3 கோடியே 98 ஆயிரத்து 268 பெண்களும், 5 ஆயிரத்து 242 மூன்றாம் பாலினத்தவர்களும் அடங்கும். மொத்த மக்கள் தொகையில் 75.07 சதவீதம் பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
வருகிற 7 மற்றும் 21–ந்தேதிகளில் கிராமசபை, உள்ளாட்சி மன்றம் மற்றும் குடியிருப்போர் நலச்சங்க கூட்டங்களில், வாக்காளர் பட்டியலின் தொடர்புடைய பாகம், பிரிவு ஆகியன படிக்கப்பட்டு பெயர்கள் சரிபார்க்கப்படும். வருகிற 8 மற்றும் 22 ஆகிய ஞாயிற்றுக்கிழமை நாட்களில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல், இடமாற்றுதல் ஆகியவற்றுக்கான படிவங்கள் அங்கே கிடைக்கும். பூர்த்தி செய்த படிவங்களை அங்கேயே சமர்ப்பிக்கலாம்.

வருகிற ஜனவரி 1–ந்தேதி 18 வயது நிறைவடைபவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். முதன்முறையாக விண்ணப்பிப்போரைத்தவிர (அதாவது 18–25 வயதில் உள்ள மனுதாரர்கள்), ஏனைய மனுதாரர்கள் அனைவரும் அவர்களுடைய முந்தைய முகவரியையும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்ணையும் படிவத்தில் குறிப்பிடவேண்டும்.
இருப்பிட மாற்றம் செய்யாமலிருந்தாலும் கூட, தற்போதைய முகவரியில் வசித்துவரும் காலஅளவையும், முன்னர் பெயர் சேர்க்கப்பட விண்ணப்பிக்க இயலவில்லை எனவும் அல்லது தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளது எனவும் குறிப்பிடவேண்டும். பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்து, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தொலைந்திருந்தால், வட்டாட்சியர், மண்டல அலுவலகத்தில் படிவம் 1–ல் எப்போதும் விண்ணப்பிக்கலாம்.

வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட, சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6ஏ நேரில் அளிக்கப்பட வேண்டும் அல்லது வாக்காளர் பதிவு அதிகாரிக்கு தபாலிலும் படிவத்தை அனுப்பலாம்.
விண்ணப்பதாரரின் புகைப்படம், ஏனைய பிற விவரங்களுடன் விசாவின் செயல்திறன் பற்றிய மேற்குறிப்பு அடங்கிய பாஸ்போர்ட்டின் தொடர்புடைய பக்கங்களின் ஒளி நகலையும் சேர்த்து அளிக்க வேண்டும். தபாலில் அனுப்பப்படும்போது பாஸ்போர்ட்டின் ஒளிநகல்கள் சுய சான்றொப்பமிட்டு இணைக்கப்பட வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஜாக்டோ -ஜியோ சார்பில் அக்.8ல் விளக்க கூட்டம்


ஜாக்டோ -ஜியோ உயர்மட்ட குழு முடிவின்படி அக்.8ல் மாவட்ட தலைநகரங்களில் போராட்ட விளக்க கூட்டம் நடத்தப்படுகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பான 'ஜாக்டோ- ஜியோ' சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.7 ம்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.

மாநிலம் முழுவதும் பல லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர். அரசு நிர்வாகம் ஸ்தம்பித்தது.இதற்கிடையே நீதிமன்றம் தலையிட்டதால் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு அனைவரும் வேலைக்கு திரும்பினர். தமிழக அரசின் தலைமை செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராகி சில உறுதிமொழிகளை வழங்கினார். தொடர்ந்து ஜாக்டோ - ஜியோ கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஏழாவது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல் செய்தும், இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

நீதிமன்ற உத்தரவின்படி அக்.13ம் தேதி ஊதிய மாற்றம் குறித்து அறிவிக்க வேண்டும் என, ஜாக்டோ -ஜியோ உயர்மட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்.8ல் விளக்க கூட்டம்இந்நிலையில் ஜாக்டோ -ஜியோ வேலை நிறுத்தமும், நீதிமன்ற நடவடிக்கைகளும் என்ற தலைப்பில் அனைத்து மாவட்டங்களிலும் அக்.8ம் தேதி விளக்க கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 32 மாவட்டங்களிலும் யார், யார் பங்கேற்பது என்ற பட்டியலை வெளியிட்டுள்ளனர். ஒரு அரசு ஊழியர், இரண்டு ஆசிரியர்கள் வீதம் மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் கூட்டத்திற்கு தலைமை வகித்து நடத்த உள்ளனர். இதில், வேலைநிறுத்தம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும்

கோவை முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

விரைவில் ஆதார் எண்ணுடன் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு! - செங்கோட்டையன் தகவல்


தமிழகத்தில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு ப்ளஸ் டூ பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. அதற்கான முன்வரைவு வரும் நவம்பர் 15-க் தேதி வெளியிடப்பட உள்ளது. முன்வரைவுக்கு வைக்கப்படும் பாடத்திட்டங்கள் குறித்து 15 நாள்கள் பெற்றோர்கள், கல்வியாளர்களிடம் கருத்துக் கேட்கப்படும். இந்தக் கருத்துகளின் அடிப்படையில் அடுத்தாண்டு பாடத்திட்டம் திருத்தப்படும்.

சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு இணையாக அனைத்துப் போட்டித் தேர்வுகளை எதிர்க்கொள்ளும் வகையில் இந்தப் பாடத்திட்டங்கள் இருக்கும். மேலும், அடுத்த மாத இறுதிக்குள் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். அதில் மாணவர்களின் ஆதார் எண், ரத்த வகை குறிப்பிடப்படும். பள்ளி மாணவர்கள், டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்படாமல் இருக்க பள்ளியின் சுற்றுப்புறங்களை சுகாதாரமாக வைத்துக்கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

Monday, October 02, 2017

ஆசிரியர் நியமனம்-தகுதிகாண் மதிப்பெண் குறித்து ஆய்வு செய்ய குழு: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்


அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்துக்குப் பயன்படுத்தப்படும் தகுதிகாண் மதிப்பெண் முறை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். பள்ளிக் கல்வித் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குநர் செ.கார்மேகம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியது:- அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் தகுதிகாண் முறையில் உள்ள பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்யக் குழு நியமிக்கப்படவுள்ளது.

இந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் முடிவுகள் மேற்கொள்ளப்படும். மாணவர்களின் மேம்பாட்டுக்கான புதிய திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

புதிய ஓய்வூதிய திட்டம் நிறைவேறும்போது கட்சிகளின் நிலைப்பாடு. கானலாகும் ஓய்வூதியம் புத்தகத்தில்




TNPTF மாநில பொதுக்குழு முடிவுகள்


Sunday, October 01, 2017

டெங்கு விழிப்புணர்வு

மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனரகம் வேண்டுகோள் விடுத்து உள்ளது.

பள்ளிக்கல்வி இயக்குனரகம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

1. பள்ளியின் வகுப்பறை மற்றும் கழிவறைகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பராமரிக்கப்படவேண்டும். அவ்வாறு தண்ணீர் தேங்கியிருப்பின் உடனடியாக தேங்கிய நீரை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. குடிநீர்பானை மற்றும் தண்ணீர் தொட்டிகள் மூடி வைக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகளின் மூலம் கொசுக்களின் பெருக்கம் தடுக்கப்படுமென்பதை அறிவுறுத்தல் வேண்டும்.

3. பள்ளி வளாகம் மற்றும் வீடுகளில் கொசுக்கள் முட்டையிட ஏதுவாக உள்ள தேங்காய் ஓடுகள், பழைய டயர்கள், பூந்தொட்டிகள், தட்டுகள், தண்ணீர் தொட்டிகள், பழைய கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள், வடிகால்கள், பள்ளி கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடங்களில் உள்ள பொருட்கள் போன்ற தண்ணீர் தேங்கும் இடங்களை தொடர்ச்சியாக கண்காணித்து, தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்குதல்.

4. பருவகால மாற்றங்களால் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து (குறிப்பாக டெங்கு, சிக்குன் குனியா) அறிவுரைகளை பின்பற்றி பாதுகாத்து கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல். மேலும், காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் காலதாமதம் இல்லாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தவேண்டும். எந்த சூழ் நிலையிலும் சுயமாக மருத்துவம் செய்து கொள்வதை தவிர்த்தல் நன்று.

5. மருத்துவரின் உதவியுடன் டெங்கு, சிக்குன் குனியா காய்ச்சல் குறித்த அறிகுறிகள் பற்றிய விழிப்புணர்வினை மாணவர்களிடையே ஏற்படுத்துதல் வேண்டும்.

6.அவ்வப்போது மாணவர்கள் கைகளை சுத்தப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். குறிப்பாக உணவு உண்பதற்கு முன்பும், பின்பும் கைகளை கழுவுதல் அவசியம். மாணவர்கள் காய்ச்சி வடிகட்டிய பாதுகாப்பான குடிநீரை அருந்த வேண்டுமென அறிவுறுத்த வேண்டும். பாதுகாப்பான முறையில் தயார் செய்யப்பட்ட உணவுகளை மட்டுமே உட்கொள்ள அறிவுரை வழங்குதல் வேண்டும்.

7. பள்ளிகளில் நடைபெறும் காலை வணக்க கூட்டத்தின் போது மாணவ, மாணவியர்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கப்படவேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.