இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, June 23, 2017

நீட் நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு முதல் 25 பேரில் ஒரு தமிழக மாணவர்கூட இல்லை


நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் நுழைவுத்தேர்வு கட்டாயம் என கடந்த ஏப்ரல் 29ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்தது. தமிழக அரசு இளநிலை, முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் நுழைவுத்தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட மசோதாக்களை குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமாக்க மத்திய உள்துறைக்கு அனுப்பியது.

குடியரசு தலைவரிடம் ஒப்புதல் பெற்று தரவில்லை. இந்நிலையில், மே 7ம் தேதி நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு நடந்தது. ஜூன் 8ம் தேதி நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அறிவித்தது. தேர்வில் குளறுபடி உள்ளதாக மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், முடிவை வெளியிட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தது. அதில் ஜூன் 26ம் தேதிக்குள் சிபிஎஸ்இ நீட் தேர்வு முடிவை வெளியிடலாம் என உத்தரவிட்டது. அதன்படி, சிபிஎஸ்இ நீட் தேர்வு முடிவுகளை நேற்று காலை சிபிஎஸ்இ வெளியிட்டது. www.cbseneet.nic.in, www.cbse.nic.in, www.cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் பதிவு எண், பிறந்த தேதியை அளித்து நீட் தேர்வு முடிவை தெரிந்துகொள்ளலாம். நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக நீட் தேர்வுக்கான சிபிஎஸ்இ இணை செயலாளர் வெளியிட்ட அறிக்கை: நீட் தேர்வு எழுத, இந்த ஆண்டு 11,38,890 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

அதில் 4,97,043 பேர் மாணவர்கள், 6,41,839 பேர் மாணவிகள், 8 பேர் மூன்றாம் பாலினத்தவர். நாடு முழுவதும் 103 நகரங்களில், 1,921 மையங்களில் மே 7ம் தேதி நீட் தேர்வு நடந்தது. அதிகபட்சமாக 9,13,033 பேர் ஆங்கிலத்திலும் குறைந்தபட்சமாக 452 ஒரியா மொழியிலும் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். தமிழில் நீட் தேர்வு எழுத 15,206 பேர் விண்ணப்பித்திருந்தனர். 10 மொழிகளில் 10,90,085 மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் 6,11,739 பேர் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பல் மருத்துவ கவுன்சில் அளித்த தகவலின்படி நாடு முழுவதும் 470 மருத்துவ கல்லூரிகளும், 308 பல் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. அதில் உத்தேசமாக 65,170 எம்பிபிஎஸ் இடங்களும், 25,730 பிடிஎஸ் இடங்களும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மாநில மருத்துவ கல்வி இயக்ககங்கள் தரவரிசை பட்டியலை பதிவிறக்கம் செய்து, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையுடன் வௌியிடப்பட்டுள்ள முதல் 25 ரேங்க் பெற்ற மாணவர்கள் பட்டியலில் ஒரு தமிழக மாணவர் கூட இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதியார் பல்கலை அறிவிப்பு

Thursday, June 22, 2017

பாடத்திட்ட மாற்றம் பதிவு செய்ய ஜூலை 2 வரை கால அவகாசம் நீட்டிப்பு


பாடத்திட்ட மாற்றம் குறித்த பணிக்குப் பதிவு செய்ய ஜூலை 2 -ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் வகையிலும், பிளஸ் 1 வகுப்பில் பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாகவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களைத் தயாரித்து வடிவமைக்கும் பணிகளை மேற்கொள்ளவுள்ளது.

இப்பணிகளை அனுபவமிக்க கல்வியாளர்கள், திறமையான பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கொண்டு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதில் பங்கு பெற ஆர்வமுள்ள பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த நிறுவனத்தின் இணையதள முகவரியான ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ஸ்ரீங்ழ்ற்.ர்ழ்ஞ் -இல் அல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ர்ய் ஊர்ழ் தங்ள்ர்ன்ழ்ஸ்ரீங் டங்ழ்ள்ர்ய் ஊர்ழ் பங்ஷ்ற் ஆர்ர்ந் ரழ்ண்ற்ண்ய்ஞ் என்ற படிவத்தில் தங்களது விவரங்களை வெள்ளிக்கிழமை (ஜூன் 23) மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. தற்போது இந்தப் பதிவுக்கான காலம் ஜூலை 2 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் உள்ளூர் சுற்றுலா

பள்ளி மாணவர்களுக்கு, சுற்றுலா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, மாவட்ட அளவிலான உள்ளூர் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்படும்,'' என, சுற்றுலா துறை அமைச்சர் நடராஜன் தெரிவித்தார்.

சட்டசபையில், சுற்றுலா துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து, அமைச்சர் நடராஜன் கூறியதாவது:

* கன்னியாகுமரி, தஞ்சை, திருச்சி, திருச்செந்துார், ஏற்காடு, ஒகேனக்கல், காஞ்சிபுரம், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும், ஓட்டல் தமிழ்நாடு வளாகங்களில், 'வை - பை' சேவை, 25 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்

* சுற்றுலா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பள்ளி மாணவர்களுக்கு, அந்தந்த மாவட்டத்தில் அமைந்துள்ள ஏதேனும், ஒரு சுற்றுலா தலத்திற்கு, ஒரு நாள் சுற்றுலா சென்று வர ஏற்பாடு செய்யப்படும். மாவட்டத்துக்கு, தலா, இரண்டு லட்சம் ரூபாய் வீதம் மொத்தம், 64 லட்சம் ரூபாய் செலவிடப்படும்

* இந்த ஆண்டு, உலக சுற்றுலா தின விழாவை, மாநில அளவில், திருச்சியில் கொண்டாட, 25 லட்சம் ரூபாய் நிதி தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்


புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம்,' என, தகவல் உரிமை சட்டத்தில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் பதிலளித்துள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இதுவரை 26 மாநிலங்களைச் சேர்ந்த 33.33 லட்சம் ஊழியர்கள், 17.89 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் சேர்ந்துள்ளனர்.

அவர்களிடம் பிடித்த சந்தா மற்றும் அரசு பங்கு தொகையை சேர்த்து 1.51 லட்சம் கோடி ரூபாய் ஆணையத்திடம் உள்ளது. இந்த திட்டத்தில் மேற்குவங்கம், திரிபுரா மாநிலங்கள் இணையவில்லை. தமிழகம் 2003 ஏப்., 1ல் செயல்படுத்தினாலும், இதுவரை அரசு ஊழியர்களிடம் பிடித்த சந்தா மற்றும் அரசு பங்குத் தொகை 16 ஆயிரம் கோடி ரூபாயை ஆணையத்திடம் செலுத்தவில்லை.

இதனால் ஓய்வூதிய பணப்பலன்களை பெற முடியாமல் ஓய்வூதியர்கள் மற்றும் இறந்தோரின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இதுவரை 4,152 பேர் விண்ணப்பித்ததில் 1,752 பேருக்கு மட்டுமே பணப்பலன் கிடைத்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ், ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில கேள்விகளை கேட்டிருந்தார். அதற்கு, 'புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேருவது குறித்து இதுவரை எந்த ஒப்பந்தமும் தமிழக அரசு செய்யவில்லை; மேலும் அந்த திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம்தான்,' என ஆணையம் பதிலளித்துள்ளது.

இதனால் ஏற்கனவே இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை; இதனை செயல்படுத்த வேண்டுமென, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடக்கக் கல்வித்துறை-எஸ்.எஸ்.ஏ.,க்கு 'லடாய்'


தொடக்க கல்வித் துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) இடையே ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்துவதில் மோதல் ஏற்பட்டுள்ளது.தொடக்க கல்வித் துறை சார்பில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆண்டு செயல்திட்டம் வெளியிடப்பட்டது.

இதில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் பணி நாள்கள் 210 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. மேலும், ஆக., 5, செப்., 16, அக்., 7 ஆகிய 3 சனிக்கிழமைகளும், ஆண்டுத் தேர்வு முடிந்து ஏப்., 20, ஏப்., 23 முதல் ஏப்., 27, ஏப்., 30 ஆகிய 7 சனிக்கிழமைகளில் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுஉள்ளது. இதனால் கடந்த காலங்களில் பயிற்சிக்காக அளிக்கப்பட்டு வந்த ஈடுசெய் விடுப்பும் ஆசிரியர்களுக்கு ரத்து செய்யப்பட்டது.தொடக்க கல்வித்துறையின் இந்த அறிவிப்பை அனைவருக்கும் கல்வி இயக்கம் ஏற்கவில்லை. தேர்வுக்கு முன்பே பயிற்சிகளை முடிக்க வேண்டுமென, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஜூன் 24ல் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களும், ஜூலை 1ல் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களும் பயிற்சியில் பங்கேற்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துஉள்ளனர்.இதுதொடர்பாக ஆசிரியர்கள் கூறியதாவது: தொடக்க கல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகளுக்கு இடையே 'ஈகோ' உள்ளதால், தொடர்ந்து இருவேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். இதனால் சிரமப்படுகிறோம் என்றனர்.

2,645 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமனம்


தமிழகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் 2,645 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,645 முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் நலன் கருதி பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பத்தாயிரம் ரூபாய் தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முறைப்படி நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கும் வரை அல்லது நான்கு மாதங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் பணியாற்றுவார்கள். இதற்காக அரசுக்கு 10 கோடியே 14 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவாகும், என கூறப்பட்டுள்ளது. பள்ளி கல்வித் துறை அரசு செயலர் உதயசந்திரன் இதற்கான அரசாணையை பிறப்பித்துள்ளார்.

Wednesday, June 21, 2017

ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3ம் தேதி பொது மாறுதல் கவுன்சலிங்


ஆதிதிராவிடர் நலத்துறையில் பணியாற்றும் பல்வேறு பிரிவு ஆசிரியர்களுக்கு ஜூலை 3, 4ம் தேதிகளில் பொதுமாறுதல் கவுன்சலிங் நடக்கிறது. ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல மேனிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோருக்கு ஜூலை 3ம் தேதி ஆன்லைன் மூலம் மாறுதல் கவுன்சலிங் நடக்கிறது.

அதேபோல பட்டதாரி ஆசிரியர், தமிழாசிரியர், இடைநிலை ஆசிரியர் ஆகியோருக்கு மாவட்டத்துக்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் வழங்கும் கவுன்சலிங் ஜூலை 4ம் தேதி நடக்கும். பொது மாறுதல் கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் மாறுதல் கவுன்சலிங் ஆன்லைன் மூலம் நடக்கும்.

பிளஸ் 1க்கான கேள்வித்தாள் ஜூலையில் வெளியாகும்


பிளஸ் 1 வகுப்புக்கான மாதிரி கேள்வித்தாள் ஜூலை முதல் வாரத்தில் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுக்குரிய கேள்வித்தாளை வடிவமைக்க புதிய குழுவை பள்ளிக் கல்வித்துறை அமைத்துள்ளது. முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குநர் தேவராஜன் இந்த குழுவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முதற்கட்டமாக இந்த குழு நேற்று டிபிஐ வளாகத்தில் கூடி கேள்வித்தாள் பற்றி ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவில் மாணவர்களின் அறிவு மற்றும் திறன்களை வெளிக் கொண்டு வரும் வகையில் கேள்வித்தாள் அமைக்கப்பட உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அந்த குழுவின் தலைவர் தேவராஜன் கூறியதாவது: பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் அறிவு மற்றும் திறன்களை வெளிக் கொண்டு வரும் வகையில் கேள்வித்தாள் வடிவமைக்கப்பட உள்ளன.

இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த வகுப்பு மாணவர்கள் போட்டித் தேர்வை எதிர் கொள்ளும் வகையில் கேள்வித்தாள் இருக்கும். பாடங்களை முழுமையாக படித்தால் தான் அதிக மதிப்பெண் பெற முடியும். சராசரி மாணவர்களும் தேர்ச்சி பெறும் வகையில் கேள்விகள் இடம் பெறும். மாதிரி கேள்வித்தாள் ஜூலை முதல் வாரத்தில் தயாராகிவிடும். பின்னர் அவை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைப்பார்கள். அதேபோலவே மற்ற பொதுத்தேர்வுக்கும் கேள்வித்தாள் வடிவமைக்கப்படும். இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. வல்லுநர்களுடன் ஆய்வு செய்து விரைவில் கேள்வித்தாள் வெளியாகும். இவ்வாறு தேவராஜன் தெரிவித்தார்

டி.டி.எட்.,டுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு


தொடக்க கல்வி பட்ட யப் படிப்பில் (D.T.Ed) இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 28ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடக் கல்வி பட்டயப் படிப்பில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கு மே 31ம் தேதி முதல் ஜூன் 21ம் தேதி வரை விண்ணப்பிக்க ஏற்ற வகையில் www.tnscert.org என்ற இணைய தளத்தில் விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டது. மாணவர்கள் இணைய தளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், மேலும் அவகாசம் வழங்கும் வகையில் 28ம் தேதி வரை விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து விவரங்களும் மேற்கண்ட இணைய தளத்தில் பார்க்கலாம் என்று மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.

பி.எட்., விண்ணப்பம் வினியோகம்


தமிழகம் முழுவதும், ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பி.எட்., படிப்புக்கு, 1,777 இடங்கள் உள்ளன. மாணவர் சேர்க்கைக்கான, அரசின் ஒற்றைச்சாளர கவுன்சிலிங், சென்னை, லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரி மூலம் நடத்தப்படுகிறது. இதற்காக, பேராசிரியர் கலை செல்வனை, உறுப்பினர் செயலராக கொண்டு, கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கமிட்டி சார்பில், பி.எட்., விண்ணப்ப வினியோகம், நேற்று துவங்கியது; வரும், 30ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். ஏழு அரசு கல்வியியல் கல்லுாரிகளிலும், திண்டுக்கல் லட்சுமி கல்லுாரி; சேலம் சாரதா கல்லுாரி; மதுரை தியாகராஜர் பர்செப்டார் கல்லுாரி; துாத்துக்குடி வி.ஓ.சி., கல்லுாரி; பாளையங்கோட்டை செயின்ட் இக்னேசியஸ் மற்றும் திருவட்டாறு எஸ்.வி.கே.எஸ்.டி., கல்லுாரியில் விண்ணப்பங்களை பெறலாம். நேற்று மட்டும், ௧,௮௮௮ பேர் விண்ணப்பங்கள் பெற்றனர்

2017-18 நடுநிலைப்பள்ளிக்கான செயல்பாடுகள்

SIMPLE ENGLISH




Tuesday, June 20, 2017

2,536 ஆசிரியர்கள் நியமனம்


பள்ளி கல்வித்துறை செயலாளர் பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2,536 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நாடுநர்களை தேர்வு செய்து நிரப்பப்படும் வரை வரும் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் வாயிலாக நியமனம் செய்துகொள்ள அனுமதிக்கப்படுகிறது. அவர்களுக்கு மாதம் ரூ.7500 தொகுப்பூதியம் வழங்கப்படும்.

Monday, June 19, 2017

முதல்வர் அறிவிப்பு

ரூ.437 கோடியே 78 லட்சம் செலவில் தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 110 விதியில் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

* ரூ.437 கோடியே 78 லட்சம் செலவில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் (ஹைடெக் லேப்) ஏற்படுத்தப்படும்.  இதன்படி, 3,090 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா 10 கணினிகளும், 2,939 மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா 20 கணினிகளும், அதனுடன் தொடர்புடைய இதர சாதனங்களும் வழங்கப்படும்.
* ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 2 லட்சம் ரூபாய் வீதம் ரூ.60 கோடி செலவில்  3,000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத் திறன் வகுப்பறை, அதாவது ஸ்மார்ட் கிளாஸ் ரூம் ஏற்படுத்தப்படும்.
* பள்ளிக் கல்வி இயக்ககம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக டி.பி.ஐ. வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது. இந்த இயக்ககத்தில் இயங்கும் பல்வேறு பிரிவுகளுக்காக கூடுதல் இடவசதி தேவைப்படுகிறது.  இதற்காக, ஒரு லட்சம் சதுர அடியில் ரூ.33 கோடி செலவில் பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படும். இந்த கட்டிடம் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினைக் குறிக்கும் வகையில் ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டிடம்’ என்ற பெயரில் அழைக்கப்படும்.
* ரூ.39.1 கோடி செலவில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேவைப்படும் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், அறிவியல் உபகரணங்கள், கலை மற்றும் கைவினை அறைகள், கணினி அறைகள், நூலகம், கழிவறைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.

3,000 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறை


தமிழகத்தில் முதல் கட்டமாக 3,000 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத்திறன் வகுப்பறை (ஸ்மார்ட் கிளாஸ்) ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:

வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில், அரசுப் பள்ளி மாணவர்கள் போதிய கணினித் திறன்களை அடைவது அவசியம். அந்த வகையில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். 3,090 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா 10 கணினிகளும், 2 ஆயிரத்து 939 மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா 20 கணினிகளும் அதனுடன் தொடர்புடைய இதர சாதனங்களும் அளிக்கப்படும். இதற்கென அரசுக்கு ரூ.437.78 கோடி செலவு ஏற்படும்.

இயக்ககத்துக்கு புதிய கட்டடம்: அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு கணினி மூலமாக பாடங்களைப் பயிற்றுவிக்கும் வகையில் முதல் கட்டமாக 3,000 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத்திறன் வகுப்பறை ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.60 கோடி செலவிடப்படும். பள்ளிக் கல்வி இயக்ககம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்தக் கட்டடம் மிகவும் பழைமை வாய்ந்தது. பள்ளிக் கல்வி இயக்ககத்தில் இயங்கும் பல்வேறு பிரிவுகளுக்காக கூடுதல் இடவசதி தேவைப்படுகிறது.

இதற்காக ஒரு லட்சம் சதுர அடியில் ரூ.33 கோடியில் பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு புதிய கட்டடம் கட்டப்படும். இந்தக் கட்டடம் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கட்டடம் என்ற பெயரில் அழைக்கப்படும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்குத் தேவைப்படும் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.39 கோடியில் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்

பிளஸ் 1 பொதுத்தேர்வு குழு அமைப்பு


பிளஸ் 1 பொது தேர்வுக்கான விதிமுறைகளை உருவாக்க, வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களில், விதிகளை இறுதி செய்ய, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், சமச்சீர் கல்வி மாணவர்களால், நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவுத்தேர்வுகளில், போதிய அளவு தேர்ச்சி பெற முடியவில்லை. மற்ற மாநில மாணவர்களை விட, தமிழக மாணவர்கள் பின்தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை நடத்திய ஆய்வில், மேல்நிலை பள்ளி மாணவர்கள், பிளஸ் 1 பாடங்களை சரியாக படிப்பதில்லை என, தெரிய வந்தது. இதையடுத்து, இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கு, பொது தேர்வு கட்டாயம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிளஸ் 1 பொது தேர்வை எப்படி நடத்துவது; அதற்கான விதிகள் என்ன; எந்த பாடங்களில், எத்தனை கேள்விகள் இடம் பெற வேண்டும்; எந்தெந்த பாடங்களில், எத்தனை மதிப்பெண்ணுக்கான கேள்விகள் இடம் பெற வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை சார்பில் விதிகள் வகுக்கப்பட உள்ளன.

இதற்காக, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர், அறிவொளியை, ஒருங்கிணைப்பாளராக்கி, கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இதில், அரசு தேர்வுத்துறையின் முன்னாள் இயக்குனர், தேவராஜன் தலைமையில், தேர்வுத்துறை மேல்நிலை இணை இயக்குனர், சேதுராமவர்மா; ஓய்வு பெற்ற இணை இயக்குனர், ராமராஜ்; துணை இயக்குனர்கள், வாசு, பூபதி மற்றும் ஷமீம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு துணை இயக்குனர்களின் கீழும், ஆறு பாடங்களிலும், திறமையான வினாத்தாள் தயாரிப்பில் அனுபவம் பெற்ற ஆசிரியர்கள் அடங்கிய துணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வல்லுனர் குழுவின் முதல் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. முதல் கட்டமாக, பொதுத்தேர்வு மற்றும் அரசின் கொள்கைகள் குறித்து, ஆலோசனை நடந்தது. இன்றும், நாளையும் கூட்டம் தொடர்ந்து நடக்கிறது. மூன்று நாட்களில், விதிமுறைகள் இறுதி செய்யப்பட உள்ளது. பின், துணை குழுக்கள் மூலம், மாதிரி வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு, அவை, எஸ்.சி.இ.ஆர்.டி., மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம், வினா வங்கியாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது