இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, March 24, 2017

பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் 'ஜாக்பாட்' : ஊதிய உயர்வு வழங்க அரசு திட்டம்


பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஆசிரியர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து, 549 பேர், பகுதி நேர ஆசிரியர்களாக, 2012ல் நியமிக்கப்பட்டனர். தோட்டக்கலை, கணினி அறிவியல், தையல், ஓவியம், உடற்கல்வி, யோகா, இசை உள்ளிட்ட பாடங்களை, இந்த ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர். வாரத்துக்கு, இரு அரை நாட்கள் வகுப்பு எடுக்கும் வகையில், பாட வேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு மாதம், 7,000 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது.

விடுமுறை நாட்கள் மற்றும் தேர்வு விடுமுறை காலங்களில், சம்பளம் கிடையாது. இந்நிலையில், பணி நிரந்தரம், சம்பள உயர்வு கோரி, பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பினர், இரு வாரங்களுக்கு முன் போராட்டம் நடத்தினர். அப்போது, புதுக்கோட்டையைச் சேர்ந்த, சீனிவாசன் என்ற ஆசிரியர் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பினர், சமீபத்தில், பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் மற்றும் செயலர் உதயசந்திரன் ஆகியோருடன் பேச்சு நடத்தினர். அப்போது, பகுதி நேர ஆசிரியர்களின் சம்பளம் உயர்த்தப்படும்; ஆண்டுக்கு ஒருமுறை பொது மாறுதல் வழங்கப்படும் என, அரசு உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், அனைத்து மாவட்டங்களிலும், தொகுப்பூதிய ஆசிரியர்களின் சுய விபரங்களை, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் திரட்டி வருகின்றனர். விபரங்கள் சரிபார்க்கப்பட்ட பின், ஊதிய உயர்வுக்கான ஆசிரியர் பட்டியல் தயாரிக்கப்படும் என, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Thursday, March 23, 2017

Lab assistant 2015 results

Click below

http://dge1.tn.nic.in/

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு வெளியீடு


ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4400 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது. அந்த தேர்வில் 6 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் விடைதாள்களை திருத்தம் செய்து வெளியிட இருந்தது. ஆனால், கடந்தாண்டு தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. தற்போது 23ம் தேதி மாலை முடிவுகள் அரசு தேர்வு துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியோர் www.dge.tn.nic என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்களுக்கு இரும்புச்சத்து மாத்திரை நிறுத்தம்


ரத்தசோகையை தடுக்க பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இரும்புச்சத்து மாத்திரை 4 மாதங்களுக்கு மேலாக வழங்கவில்லை. தமிழகத்தில் பெண்களுக்கு ரத்தசோகையால் கர்ப்பக் காலத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில், அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் 6 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு இரும்புசத்து மாத்திரை வழங்கும் திட்டத்தை 2014 ல் சுகாதாரத்துறை துவங்கியது. வாரந்தோறும் வியாழக்கிழமை மதிய உணவிற்கு பின் மாணவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டன.

பத்து முதல் 19 வயதுள்ள பள்ளிச் செல்லா குழந்தைகளுக்காக அங்கன்வாடி மையங்களில் நர்சுகள் மூலம் மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேலும் 6 மாதங்களுக்கு ஒருமுறை குடற்புழு நீக்க மாத்திரையும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. எந்த அறிவிப்பும் இல்லாமல் 4 மாதங்களுக்கு மேலாக பள்ளி மாணவர்களுக்கு இரும்புச்சத்து மாத்திரை வழங்கவில்லை என, புகார் எழுந்துள்ளது.

சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இரும்புச்சத்து மாத்திரை பல மாதங்களாக வரவில்லை; இதனால் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதை நிறுத்தி விட்டோம். குடற்புழு மாத்திரை 6 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கி வருகிறோம்,' என்றார்.

ஐந்து பாடங்களுக்கு ஒரு ஆசிரியர் என்றால், அரசுப் பள்ளி மாணவர்களின் தரம் எப்படி உயரும்?!'' - கொதிக்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு

திருச்சியைச் சேர்ந்த ஒரு தனியார் கல்வியியல் கல்லூரியின் மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்கு விசாரணையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், ஒரு வேதனையான கருத்தை பதிவு செய்திருக்கிறார். 'தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் பி.எட்., எம்.எட்., படிப்புகளுக்காக, நாடு முழுக்க ஏராளமான கல்வியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குகிறது. ஆனால், அந்தக் கல்லூரிகள் பலவற்றிலும் அடிப்படை வசதிகள் இல்லை. அந்தக் கல்லூரிகளில் படித்த ஆசிரியர்களின் தரமும் மோசமாக இருக்கிறது. இதனால், மாணவர்கள் தங்கள் பெயரைக்கூட எழுதமுடியாத அளவுக்கு, அவர்களின் கல்வி நிலை மோசமாக இருக்கிறது' என வேதனையாகக் கூறியுள்ளார்.

நீதிபதியின் இந்தக் கருத்து மற்றும் தனியார் கல்வியியல் கல்லூரிகளின் நிலை குறித்து கல்வியாளரும், பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம்.

"நீதிபதி என்.கிருபாகரன் கூறியது முற்றிலும் உண்மையே. இன்றைக்கு கலை அறிவியல் கல்லூரிகளில் படித்த பெரும்பாலான மாணவர்கள், பின்னர் பி.எட்., எம்.எட். முடித்து, ஆசிரியர் பணிக்குச் செல்ல விரும்புகிறார்கள். தமிழ்நாட்டில் அரசு கல்வியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால், பணம் சம்பாதிக்கும் நோக்கில் பல தனியார் கல்வியியல் கல்லூரிகள் புற்றீசல் போல முளைத்துக்கொண்டே இருக்கின்றன. அதில் படிக்கும் மாணவர்கள் பலருக்கும் தரமான கல்வி சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை. மேலும், அந்தக் கல்லூரிகளில் பயிலும் பல மாணவர்கள், கல்லூரிக்குச் சரியாக செல்லாமல், பணம் கொடுத்து வருகைச் சான்றிதழை பெறுகிறார்கள். இப்படியான மாணவர்கள் ஆசிரியர்களானப் பின்னர், அவர்களிடம் படிக்கும் மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைப்பதில்லை. இதனால், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பலருக்கும் தங்கள் பெயரையே எழுதத் தெரிவதில்லை. இதுதான் நீதிபதியின் வேதனையும்கூட.

2012- 13-ம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சியான தகுதியுள்ள ஆசிரியர்கள்தான் அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டனர். விதிவிலக்காக, அரசுப் பள்ளிகளில் பணம் கொடுத்தும், மனப்பாட திறனால் தகுதியானதுமான ஆசிரியர்கள் சிலரைத் தவிர்த்து, மற்ற அனைவருமே திறமையான ஆசிரியர்கள்தான். ஒவ்வோர் ஆசிரியரும் தான் படித்த ஒரு துறை பாடத்தில்தான் திறமை மிக்கவராக இருப்பார். ஆனால், தமிழக அரசுதான் அரசுப் பள்ளிகளில் போதிய பணியிடங்களை நிரப்பாமல் இருக்கிறது. இதனால், ஐந்தாம் வகுப்புக்குட்பட்ட பள்ளிகளில் ஒரே ஆசிரியரே மாணவர்களுக்கு ஐந்து பாடங்களையும் எடுக்கும் நிலை இருக்கிறது. ஓர் ஆசிரியரால், எப்படி ஐந்து பாடங்களையும் நல்ல முறையில் கற்பித்து, திறமையான மாணவர்களை உருவாக்க முடியும்? இத்தகைய அரசு பள்ளிகளின் தரமும் எப்படி உயரும்? என ஆவேசமாக கேள்வியை எழுப்புவதுடன்  பிரின்ஸ் கஜேந்திரபாபு தனியார் பள்ளிகளில் இருக்கும் நிலையையும் கூறுகிறார்.

தனியார் பள்ளிகளிலோ குறைந்த ஊதியத்துக்குத் தகுதி குறைவான ஆசிரியர்கள் பலரை நியமிக்கிறார்கள். அத்தகைய ஆசிரியர்களுக்கு கடுமையான பணிச்சுமையும் கொடுக்கப்படுகிறது. மாணவர்களும் இத்தகைய தனியார் பள்ளிகளில் மனப்பாடம் செய்து படிப்பதற்கே தொடர்ந்து ஊக்கம் கொடுக்கப்படுகிறது. பெற்றோர்களும், தங்கள் பிள்ளை அதிக மார்க் எடுத்தால் போதும் என்றுதான் நினைக்கிறார்களே தவிர, பிள்ளையின் கற்றல் திறனைப் பார்ப்பதில்லை. சி.வி.ராமன், ராமானுஜம், அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை என எந்த அறிஞரையும் தனியார் பள்ளிகள் உருவாக்கவில்லை. இன்றைக்கும் சமூகத்துக்கு உதவும்படியாக பணியில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் அரசுப் பள்ளியில் படித்தவர்கள்தான் என்பதை நாம் உணர வேண்டும்.

ஒரு மாணவரைத் திறமையானவராகவும் எதிர்காலத்தின் நல்ல குடிமகனாகவும் மாற்றுவது, பள்ளி ஆசிரியர்களின் பணி. ஆனால், ஆசிரியர்களே வெறும் டிகிரி மட்டும் பெற்று, அந்த டிகிரிக்கு பொருத்தமான கல்வி அறிவுடன் இல்லாமல் இருப்பது வருத்தப்பட வேண்டிய நிலை. இதனால், ஏராளமான மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது. எனவே, நாடு முழுவதும் உள்ள கல்வியியல் கல்லூரிகளின் நிலையை உடனடியாக ஆராய்ந்து, அடிப்படை வசதிகள், கல்வி கற்கும் தகுதியில்லாத கல்வியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை நீக்க வேண்டும். தமிழக அரசும் தொடர்ச்சியாக ஆசிரியர் தகுதித் தேர்வினை நடத்தி, தகுதியுள்ள ஆசிரியர்களைத் தேர்வுசெய்ய வேண்டும்" என்கிறர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

- கு.ஆனந்தராஜ்

2017-SSA proceedings survey of dropout

Click below

https://app.box.com/s/0lbpcob8lkw42qi5upllurmxuecdieml

Health Insurance Scheme, 2016 for the employees of Government Departments and other Organisations - Empanelment of Accredited Hospitals - Approval of additional hospitals and inclusion of additional specialities based on the recommendations of the Accreditation Committee - Notified - Orders - Issued.

https://app.box.com/s/fbpl0ytqzhe9bunasb32nsmhlatwrn3w

Wednesday, March 22, 2017

வரும் கல்வி ஆண்டு முதல் திருக்குறள் நன்னெறி கல்வி பாடத்திட்டம் : ஐகோர்ட் உத்தரவால் அரசாணை வெளியீடு


வரும் கல்வி ஆண்டில் திருக்குறள் நன்னெறி பாடத்திட்டம் அமலாகும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. திருக்குறளில் உள்ள 1330 குறள்களையும் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டுமென ராஜரத்தினம் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் கடந்த 26.4.2016ல் உத்தரவிட்டார்.

அதில், கல்வியின் குறிக்கோள் நன்னெறி கருத்துக்களின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் சமூகம் என்பதால், திருக்குறளிலுள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பால் இரண்டையும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், பள்ளி கல்வித்துறை செயலர் த.உதயசந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில், ‘6 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களின் வயது மற்றும் வகுப்பை கணக்கீடு செய்து, நன்னெறி கல்விக்கான திருக்குறள் பாடத்திட்டத்தை வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த பள்ளி கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தப்பட்டார்.

அறத்துப்பால் மற்றும் பொருட்பாலிலுள்ள 105 அதிகாரங்களை கொண்ட நன்னெறி கல்வி பாடத்திட்டத்தை வரும் கல்வி ஆண்டு முதல் வகுப்பு வாரியாக அமல்படுத்தப்படும்’ என உத்தரவிட்டுள்ளார்.

டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி


ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (டெட்) பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை விண்ணப்பிக்க இன்று(மார்ச்.,23) கடைசி நாள். டெட் தேர்வுக்கான விண்ணப்ப படிவம் வழங்கும் பணி மார்ச் 6ம் தேதி துவங்கப்பட்டது. விண்ணப்பங்களை பெற கடைசி நாளான நேற்று வரை, 2 லட்சத்து 73 ஆயிரம் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கான விண்ணப்பங்களும், 5 லட்சத்து 60 ஆயிரம் பி.எட்., முடித்தவர்களுக்கான விண்ணப்பங்களும் விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பள்ளிக்கல்வி - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண்டிற்கு 15 அதிகாரங்கள் வீதம் திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பாலில் உள்ள 105 அதிகாரங்கள் நன்னெறி கல்வியாக பாடதிட்டத்தில் சேர்க்கப்பட்டு ஆணை வெளியிடப்படுகிறது | அரசாணை எண்: 51 நாள் : 21.03.2017*



5-ஆம் வகுப்பு மாணவன் தன் பெயரை கூட எழுத தெரியாத அளவிற்கு கல்வி உள்ளது: நீதிபதி கிருபாகரன்


5-ஆம் வகுப்பு மாணவன் தன் பெயரை கூட எழுத தெரியாத அளவிற்கு கல்வி இருப்பது வேதனையகவுள்ளது என்று நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார். ஆசிரியர்களின் தரம் மிக மோசமாக உள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் எத்தனை பி.எட், எம்.எட் பயிற்சிக் கல்லூரிகள் இருக்கின்றன என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். பயிற்சி பெற்ற மாணவர்கள் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சி எஸ்விஐ கல்லூரி தொடுத்த வழக்கில் நீதிபதி கிருபாகரன் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். வரும் 27 ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் ஆசிரியர் பயற்சி வகுப்பில் அதிக மாணவர்களைச் சேர்க்கக் கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லெட்டர் பாட் கல்வி நிறுவனங்கள் பெருக்கத்தால் தரமான ஆசிரியர்கள் உருவாவதில்லை என்றும் கல்வித் தரம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் நீதிபதி கிருபாகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

Tuesday, March 21, 2017

DEPARTMENTAL EXAM APPLY LAST DATE 31.3.17

மதிப்பெண் சான்றிதழில் தமிழில் மாணவர் பெயர்


பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் பட்டியலில், இந்த ஆண்டு முதல், மாணவர்கள் பெயர் தமிழில் இடம் பெற உள்ளது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில், பாடப்பிரிவு களின் பெயர்கள், தமிழ், ஆங்கில மொழிகளில் இடம் பெறும். மாணவர்களின் பெயர், ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும்.

இதனால், மாணவர்கள் உயர் கல்விக்கும், வேலைவாய்ப்புக்கும் செல்லும் நிலையில், பெயர் குழப்பம் ஏற்படுகிறது. எனவே, தமிழில் பெயர் இடம்பெற வேண்டும் என, நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்படி, பொது தேர்வு மதிப்பெண் பட்டியலில், இந்த ஆண்டு முதல் மாணவரின் பெயர் மற்றும் இனிஷியல், துாய தமிழில் இடம் பெற உள்ளது. அதேபோல், பள்ளியின் பெயரும், தமிழில் இடம் பெற உள்ளது.இதுதொடர்பாக, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி அனுப்பிய சுற்றறிக்கையில், 'மார்ச், 31க்குள், அனைத்து மாணவர்களின் பெயர்களும், தமிழ் இனிஷியலுடன், தேர்வுத் துறைக்கு பட்டியலாக அனுப்ப வேண்டும்' என்றார்.

வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் - மத்திய அரசு


மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆதார் எண் கொடுக்க வேண்டியது அவசியமாகி வருகிறது. பொது விநியோகதிட்டம், தேசிய சமூக உதவி திட்டங்கள், தீன் தயாள் அந்த்யோதயா யோஜனா வின் கீழ் திறன் வளர்ப்பு பயிற்சிகள், உள்ளிட்டவைகளுக்கு ஆதார் எண் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் -என்று மத்திய அரசு அறித்துள்ளது. மேலும் பான் எண் பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் எனவும் அறிவித்துள்ளது. அடுத்த நிதி ஆண்டுக்கான வருமான வரித் தாக்கலில் இது அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Monday, March 20, 2017

கல்வி கொள்கையை அறிவிக்க பார்லி., குழு வலியுறுத்தல்


பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில், புதிய தேசிய கல்விக் கொள்கையை விரைவில் அறிவிக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, பார்லிமென்ட் குழு வலியுறுத்தியுள்ளது.பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில், கல்விக் கொள்கையில் மாற்றம் கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இது தொடர்பாக, பல்வேறு ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இதற்கிடையில், லோக்சபா, பா.ஜ., - எம்.பி., பகவத் சிங் கோஷ்யாரி தலைமையிலான, பார்லிமென்ட் மனுக்கள் நிலைக் குழு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்துள்ளது; அதில் கூறியுள்ளதாவது: கல்வி தரத்தை உயர்த்தும் வகையில், மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம்; அதே நேரத்தில், தேசிய கல்வி கொள்கையை விரைவில் அறிவிக்க வேண்டும்.

மூன்று மாதங்களுக்குள் இது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.ஐந்தாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்ற முடிவை வரவேற்கிறோம். அதே நேரத்தில், மாணவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி குறித்து, அவ்வப்போது தேர்வு நடத்தி மதிப்பிட வேண்டும். அதேபோல், ஆசிரியர்களின் செயல்பாடுகள் குறித்தும் மதிப்பிட வேண்டும். கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள், அங்குள்ள வசதிகள் குறித்தும் கண்காணிக்க வேண்டும்.

ஆசிரியர்கள், கல்வி நிறுவனத்தின் செயல்பாட்டை கண்காணிக்கும் வகையில், பெற்றோர் மற்றும் பொதுமக்களின் கருத்தை அறியும் வகையில், புதிய முறையை அறிமுகம் செய்ய வேண்டும்.இவ்வாறு பார்லி., குழு பரிந்துரை அளித்துள்ளது.

அரசு பள்ளிகளில் யோகா கற்று கொடுக்க 13,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் : செங்கோட்டையன்


தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையின் போது முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும் அரசு பள்ளிகளில் யோகா வகுப்புகள் நடத்தப்படும் என்றும் இதற்காக 13,000 யோகா ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Sunday, March 19, 2017

31ல் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி


எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 31ம் தேதியும், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப். 5ம் தேதியும் தொடங்குகிறது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி, வருகிற 31ம் தேதி வரையும், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 8ம் தேதி தொடங்கி, 30ம் தேதி வரையும் நடைபெறுகிறது. பிளஸ் 2 மற்றும் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் தமிழ், ஆங்கில மொழிப்பாட தேர்வுகள் முடிந்துள்ளன. விடைத்தாள்கள் கல்வி மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள திருத்தும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு முகப்புத் தாள்கள் நீக்கப்பட்ட பின்னர், பிற மாவட்டங்களில் உள்ள திருத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

கல்வி மாவட்ட அளவில் 10ம் வகுப்பு தமிழ், ஆங்கில விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 31ம் தேதி தொடங்கும். மற்ற பாடங்களின் விடைத்தாள் திருத்தும் பணி ஏப். 4ல் தொடங்கும். பிளஸ் 2 தமிழ், ஆங்கிலம் விடைத்தாள் திருத்தும் பணி ஏப். 5ல் தொடங்கும். மற்ற பாடங்களின் விடைத்தாள் திருத்தும் பணி ஏப். 10ல் தொடங்கும். முதல்கட்டமாக தமிழ், ஆங்கிலம் விடைத்தாள்கள் திருத்தப்படும்.

டெட்' தேர்வு:விண்ணப்பிக்க மூன்று நாட்களே அவகாசம்


பள்ளி ஆசிரியர் பணி தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும் மூன்று நாட்களே அவகாசம் உள்ளது.மத்திய, மாநில அரசுகளின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 2011 முதல், தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, தமிழகத்தின், 'டெட்' தேர்வு அல்லது மத்திய அரசின், 'சிடெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 'டெட்' தேர்வுக்கான மதிப்பெண் நிர்ணயம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால், தமிழகத்தில், மூன்று ஆண்டுகளாக தேர்வு நடத்தப்படவில்லை. சில மாதங்களுக்கு முன், வழக்கு முடிவுக்கு வந்ததால், மீண்டும் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஏப்., 29; பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஏப்., 30ல், தேர்வு நடக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., இதற்கான அறிவிப்பை, பிப்., 24ல் வெளியிட்டது. விண்ணப்பங்கள் வழங்கும் பணி, மார்ச், 6ல் துவங்கி, வரும், 22ல் முடிகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும், 23, மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பான விபரங்களை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.-

Friday, March 17, 2017

தடுப்பூசிக்கு ஒத்துழைக்காத பள்ளிகள் சுகாதார சான்று பெறுவதில் சிக்கல்


மீசல்ஸ் ரூபெல்லா' தடுப்பூசிக்கு ஒத்துழைப்பு அளிக்காத பள்ளிகளின் சுகாதாரச் சான்று ரத்து செய்யப்படவுள்ளது.தமிழகத்தில், பிப்., 6 முதல் 28 வரை, மீசல்ஸ் ரூபெல்லா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. 'இந்த தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படும்' என, சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியால், பெற்றோர் பலரும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட எதிர்ப்பு தெரிவித்தனர்.

பெரும்பாலான தனியார் பள்ளிகளில், சுகாதாரத்துறையினர் அனுமதிக்கப்படவில்லை. பெற்றோர்களும், பள்ளி நிர்வாகத்தினரும் ஒருவரை ஒருவர் காரணம் காட்டி, தடுப்பூசி போட ஒத்துழைப்பும் அளிக்கவில்லை. இதனால், தமிழகத்தில், 1.77 கோடி பேருக்கு, தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்து, 44 சதவீதம் பேர் மட்டுமே, தடுப்பூசி போட்டனர். எனவே, தடுப்பூசிக்கு ஒத்துழைப்பு அளிக்காத பள்ளிகளின் சுகாதாரச் சான்றினை ரத்து செய்ய, சுகாதாரத் துறையினர் திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு சுகாதாரச்சான்று ரத்து செய்யப்பட்டால், நடப்பாண்டு, பள்ளி களுக்கான அங்கீகாரம் புதுப்பிக்க இயலாது.

சுகாதாரத் துறையினர் கூறுகையில், 'குழந்தைகளுக்கு, குறிப்பிட்ட காலகட்டங்களில், பல்வேறு தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். 'இது, 1939ன், பொது சுகாதார திட்டத்தின், பிரிவு, 76, சட்டப்படி, கட்டாயமாகும். எனவே, தட்டம்மை தடுப்பூசிக்கு ஒத்துழைப்பு அளிக்காத பள்ளிகளின் சுகாதாரச்சான்று ரத்து செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது' என்றனர்.

ரூ.10 பிளாஸ்டிக் நோட்டுமத்திய அரசு ஒப்புதல்


அதிக நாட்கள் பயன்படுத்தும் வகையில், 10 ரூபாய்நோட்டுகளை பிளாஸ்டிக்கில் தயாரிக்க, ரிசர்வ் வங்கிக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து, லோக்சபாவில் நேற்று, நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் கூறியதாவது:காகிதத்தில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகள், நாளடைவில், பாதிப்படைந்து, பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது.

எனவே, அதிக நாட்கள் பயன்படுத்தும் வகையில், பிளாஸ்டிக்கில் ரூபாய் நோட்டு தயாரிக்க, முடிவு செய்து உள்ளோம். முதல் கட்டமாக, அதிக அளவில் பயன்படுத்தும், 10 ரூபாய் நோட்டுகளை, பிளாஸ்டிக்கில் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து ஆய்வு செய்த குழுவின் பரிந்துரை அடிப்படையில், புதிய நோட்டுகள் உருவாக்கப்படுகிறது; நாட்டின் ஐந்து இடங்களில், இதுதொடர்பாக, கள ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. புதிய நோட்டுகள் அச்சடிக்க, ரிசர்வ் வங்கிக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

2017-18 புதிதாக பள்ளிகளில் தரம் உயர்த்த கருத்துரு சமர்ப்பித்தல் சார்பு


தரம் உயர்த்தப்பட்ட 19-உயர்நிலைப் பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப மற்றும் ஈர்த்து கொள்ளுவது சார்பான அறிவுரைகள் -