இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, February 21, 2017

ஊதியக்குழு அமல்படுத்த குழு

👉👉👉👉 *Flash News:7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்த 5 பேர் கொண்ட குழு அமைத்தது தமிழகஅரசு.*

7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்தை மாற்றியமைக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

முதல்வர் பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 

இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி மு பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், அரசுப் பணியாளர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டவுடன், தமிழக அரசுப் பணியாளர்களுக்கும் ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்கள். அவருடைய அறிவிப்பை செயல்முறைபடுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து எனது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று இன்று நடத்தப்பட்டது. 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர்  திண்டுக்கல் சி. சீனிவாசன், பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். 

இந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க “அலுவலர் குழு” ஒன்றை உடனடியாக அமைக்க உத்திரவிட்டுள்ளேன். இக்குழுவில் கீழ்கண்ட அலுவலர்கள் உறுப்பினர்களாக இருப்பர் : 

1. கூடுதல் தலைமை செயலாளர், நிதித்துறை 
2. முதன்மை செயலாளர், உள்துறை 
3. முதன்மை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை 
4. செயலாளர், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை 
5. Dr. பி.உமாநாத், – உறுப்பினர் செயலாளர். 

2) இந்த “அலுவலர் குழு” மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை ஆராய்ந்து, அவற்றை தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இக்குழு மத்திய அரசு பரிந்துரைத்துள்ள திருத்திய ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் மற்றும் திருத்திய ஓய்வுக் கால பயன்கள் குறித்து ஆராய்ந்து அவற்றை தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விரிவுபடுத்துவது குறித்தும் தக்க பரிந்துரைகள் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இக்குழு, இதர படிகள் தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழு அளிக்கும் அறிக்கையினையும் ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை வழங்கும். 

3) அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் மற்றும் ஏனைய சங்கங்கள் இவ்வலுவலர் குழுவிற்கு ஊதிய விகிதம் / ஓய்வூதிய திருத்தம் குறித்த தங்கள் கோரிக்கையை அனுப்பி வைக்கவும், அவற்றை உரியவாறு ஆராய்ந்து பரிந்துரைக்கவும் இக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

4) இக்குழு தனது அறிக்கையை நான்கு மாத காலத்திற்குள், அதாவது 30.06.2017க்குள் அரசிற்கு அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

See in browser

வெளிநாடு செல்ல ஆசிரியர்கள் தடையின்மை கோருதல் சார்பு


Department exam -may 2017

பிளஸ் 2 தேர்வுக்கு 38 பக்கம் கொண்ட விடைத்தாள் : தேர்வுத் துறை அறிவிப்பு


பிளஸ் 2 தேர்வுக்கான விடைத்தாளில் 30 பக்கம் முதல் 38 பக்கம் வரை இருக்கும். அதற்குள் மாணவர்கள் விடை எழுத வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்குகிறது. தேர்வு எழுதும் மாணவர்கள் பாடத்துக்கு ஏற்ப விடைத்தாள்களில் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. இதன்படி குறிப்பிட்ட பக்கங்களில் மட்டுமே மாணவர்கள் விடை எழுதி முடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

மொழிப்பாடத்தை பொறுத்தவரையில் 30 பக்கம் கோடிட்ட தாள் வழங்கப்படும். கூடுதல் தாள் தேவைப்பட்டால் கோடிட்ட தாள்தான் வழங்கப்படும். உயிரியல் மற்றும் உயிரி-உயிரியல் பாடங்களை பொறுத்தவரையில் தனித்தனியாக விடை எழுதும் வகையில் விடைத்தாள் தயாரிக்கப்படுகிறது. உயிரியலுக்கு 22 பக்கம் ஒதுக்கப்படுகிறது, உயிரி-உயிரியல் பாடத்துக்கு 22 பக்கம் மற்றும் 4 பக்கம் என 26 பக்கம் ஒதுக்கப்படுகிறது.

இவை ஒரே புத்தகமாக தைக்கப்பட்டு வழங்கப்படும். அந்தந்த பாடப்பிரிவு எடுத்துள்ள மாணவர்கள் தனித்தனியாக விடை எழுத வேண்டும். கணினி அறிவியல் பாடத்துக்கு ஓஎம்ஆர் தாள் வழங்கப்படும். அதில் 30 பக்கம் இடம் பெறும். கணக்குப் பதிவியல் பாடத்திற்கு 14 பக்கங்கள் வெள்ளைத்தாளும், 15ம் பக்கத்தில் இருந்து 46 பக்கம் வரை கோடிட்டும் வழங்கப்படும். இதர பாடங்களுக்கு 38 பக்கம் கொண்ட விடைத்தாள் வழங்கப்படும். புவியியல் பாடத்துக்கு 36 பக்கம் ஒதுக்கப்படுகிறது. வணிக கணித பாடத்துக்கு 37 பக்கங்கள் ஒதுக்கப்படுகிறது. இதற்குள் தான் மாணவர்கள் விடை எழுத வேண்டும்.

எழுத்துகள் பெரிதாக எழுதும் போது கூடுதல் தாள் தேவைப்பட்டால் வழங்கப்படும். தேர்வில் முறைகேடுகள் மற்றும் காப்பி அடித்தலை தடுக்கும் வகையில் கேள்வித்தாள் A, B என இரண்டு வரிசைகளில் தயாரிக்கப்பட்டுள்ளது

குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு: மார்ச் 20 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்


குரூப் 4 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது. தேர்ச்சி பெற்றோருக்கு மார்ச் 20-முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. குரூப் 4 தொகுதியில் இளநிலை உதவியாளர், வரித்தண்டலர் நிலை, நில அளவர், தட்டச்சர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை ஆகிய பதவிகளுக்கான 5,451 காலிப் பணியிடங்களுக்கான நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு 2016-ஆம் ஆண்டு நவம்பரில் நடந்தது. இதில் பங்கேற்ற 12,51,291 விண்ணப்பதாரர்களில் 11,50,396 பேரின் மதிப்பெண், தரவரிசை நிலை ஆகியன தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்களோடு, பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பொது தரவரிசை நிலை, வகுப்பு வாரியான தரவரிசை நிலை, சிறப்புப் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கான தனி தரவரிசை நிலை ஆகியனவெளியிடப்பட்டுள்ளன. இவற்றை தங்களது பதிவு எண்ணை உள்ளீடு செய்து தெரிந்துகொள்ளலாம். சான்றிதழ் சரிபார்ப்பு: இதையடுத்து, மார்ச் 20-ஆம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். விண்ணப்பதாரர்களின் தரவரிசை, காலியிட நிலை, இடஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு பின்னர் அழைக்கப்படுவர்.

சான்றிதழ் சரிபார்ப்பின்போது, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல் தவறானது எனத் தெரிய வந்தால், அவர்கள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவோரின் பட்டியல் விரைவில் தேர்வாணைய இணையதளத்தில்(www.tnpsc.gov.in) வெளியிடப்படும். மேலும், அறிவிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறாதவர்களின் மதிப்பெண்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வி.சோபனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அரவைக்கு செல்லும் 7 லட்சம் டி.இ.டி., விண்ணப்பம்


மாநிலத்தில் மூன்று ஆண்டுகளாக, ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடத்தப்படவில்லை. கல்வி அமைச்சராக பாண்டியராஜன் நியமிக்கப்பட்ட பின், பலராலும் எதிர்பார்க்கப்பட்ட டி.இ.டி., தேர்வு, மார்ச் இறுதியில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். அவரது அறிவிப்பிற்கு பின் சுறுசுறுப்படைந்த டி.ஆர்.பி., தேர்வுக்காக, முதற்கட்டமாக 7 லட்சம் புதிய விண்ணப்பங்களை அச்சிட்டு, பிப்., முதல் வாரத்தில் அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும், குறைந்தபட்சம் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் விண்ணப்பங்கள் வரை அனுப்பி வைத்தது.

வினியோகம் துவங்கி பிப்.,28க்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, அந்தந்த கல்வி மாவட்டங்களில் ஒப்படைக்க வேண்டும் எனவும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு (சி.இ.ஓ.,க்கள்) டி.ஆர்.பி., உத்தரவிட்டது. இந்நிலையில் டி.இ.டி., தேர்வு குறித்து சி.இ.ஓ.,க்களுக்கான ஆலோசனை கூட்டம் நடத்த டி.ஆர்.பி., ஏற்பாடு செய்தது. அப்போது டி.ஆர்.பி., தலைவர் விபுநாயருக்கும், கல்வி செயலர் சபிதாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடால் அக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து விபுநாயரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

புதிய உத்தரவு: இந்நிலையில், டி.இ.டி., விண்ணப்பங்களில் இணைக்கப்பட்ட விபரப் பக்கங்களில் பிழை இருப்பதால், அதை வினியோகிக்க வேண்டாம் என டி.ஆர்.பி., திடீர் உத்தரவு பிறப்பித்தது.இதையடுத்து இரு நாட்களுக்கு முன் டி.இ.டி., விண்ணப்பங்களை, அரவைக்கு கொண்டு செல்வதற்காக கரூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதம் நிறுவனத்திடம் (டி.என்.பி.எல்.,) ஒப்படைக்க அனைத்து சி.இ.ஓ.,க் களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. டி.ஆர்.பி.,யின் கவனக்குறைவால் அரசுக்கு நிதி விரையம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து டி.ஆர்.பி., அதிகாரி ஒருவர் கூறியதாவது: விண்ணப்பத்தில் சில பிழைகள் இருந்தன.

நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, விபரப் பகுதியில் விதிமுறை குறிப்பிடப்படவில்லை. இதை ளியிட்டால் சிலர் நீதிமன்றம் சென்று வழக்கு தொடர வாய்ப்புள்ளது. இதனால் அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்ப கட்டுக்களை பிரித்து பார்க்காமலே அவற்றை அரவைக்கு அனுப்பி வைக்க அதிகாரிகளுக்கு டி.ஆர்.பி., உத்தரவிட்டது. புதிய விண்ணப்பம் அச்சடிக்கும் பணி விரைவில் துவங்கும், என்றார்.

புதிய ரூ.1,000 நோட்டு வெளியிட அரசு திட்டம்


மீண்டும், 1,000 ரூபாய் நோட்டுகளை புதிய வடிவில் அறிமுகப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், கடந்தாண்டு நவம்பரில், செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. செல்லாததாக அறிவிக்கப்பட்ட, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில், 'டிபாசிட்' செய்யவும், மாற்றவும் அவகாசம் தரப்பட்டது.

செல்லாத நோட்டுகளுக்கு பதில், புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது; 1,000 ரூபாய் நோட்டுகள் வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டது.ரொக்கத்திற்கு பதில், இணைய வழியிலும், கார்டுகள் மூலமும், மொபைல், 'ஆப்' மூலமும் பணப்பரிமாற்றம் செய்ய, மத்திய அரசு ஊக்குவித்து வந்தது. இந்நிலையில், மீண்டும், 1,000 ரூபாய் நோட்டுகளை புதிய வடிவில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புதிய வடிவில், 1,000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணிகள், ஏற்கனவே துவங்கி விட்டதாக, தகவல்கள் வந்துள்ளன. புதிய, 1,000 ரூபாய் நோட்டுகளின் படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. ஆனால், இவை, உண்மையில், ரிசர்வ் வங்கி வெளியிட திட்டமிட்டுள்ள, 1,000 ரூபாய் நோட்டுகள் தானா என்பது, உறுதி செய்யப்படவில்லை.

TNPTF மாவட்ட வாரியான விளக்க கூட்டங்கள்

TNPTF மாநில செயற்குழு முடிவுகள்


அரசாணை; மானிய விலையில் இரு சக்கர வாகனம் வாங்குதல் சார்பு


TNPSC group iv result released

Click below

http://www.tnpsc.gov.in/ResultGet-g42017rank.html

மார்ச் 31 க்குப் பிறகு ஜியோ இலவசம் கிடையாது


மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு ஜியோவில் இணையத்திற்கான 4ஜி சேவையும், அழைப்புகளும் இலவசமாகத் தரப்படாது என்று ரிலையன்ஸ் நிறுவன உரிமையாளர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். ஜியோ குறித்துப் பேசிய முகேஷ் அம்பானி, ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜியோ கட்டணச் சேவைதான் வழங்கும்.

ஆனால், அனைவரும் பயன்படுத்தும் வகையில் குறைந்த விலையில் இருக்கும் என்றும் தெரிவித்தார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 100 கோடி ஜிகா பைட் அளவுக்கு டேட்டா பயன்படுத்தப்பட்டுள்ளது. உலகில் டேட்டா பயன்படுத்துபவர்களில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது என்றும் தெரிவித்தார்.

ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஆண்டுக்கு 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்பவர்கள், ஜியோ முதன்மை உறுப்பினர்களாக எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் அவர்கள் மாதத்துக்கு 303 ரூபாய் கொடுத்து ரீசார்ஜ் செய்யும்போது, தற்போது ஜியோவால் அளிக்கப்பட்டு வரும் அதே சேவையைப் பெற முடியும் என்றும் தெரிவித்தார். ஜியோ இதுவரையில் 100 மில்லியன் பயனாளர்களைக் கொண்டுள்ளது.

Monday, February 20, 2017

குழந்தைகளுக்கான முதலீட்டுத்திட்டம்

செல்லக் குழந்தைகளுக்குச் செல்வம் சேர்க்க, சிறப்பான முதலீட்டுத் திட்டங்கள்!

ஞா.சக்திவேல் முருகன்

நல்லா படிக்க வைக்கணும்... நல்லபடியா கல்யாணம் பண்ணி வைக்கணும்... ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகளைப் பற்றிய அடிப்படைக் கனவு இதுவாகத்தான் இருக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் இத்தகைய எதிர்காலத் தேவைகளுக்கு ஆரம்பத்தில் இருந்தே திட்டமிட்டு முதலீடு செய்தால், எதிர்காலத்தில் சிரமம் இல்லாமல் சமாளிக்கலாம். உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு எப்படி நிதித் திட்டமிடுவது என்பது குறித்து நிதி ஆலோசகர் அபுபக்கர் சித்திக் விளக்கிச் சொன்னார்.     

‘‘பொதுவாக, ஒவ்வொரு குடும்பத்துக்கும்  எமர்ஜென்சி ஃபண்ட் அவசியம் வேண்டும். அதற்குமுன், வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியும் கட்டாயம் இருக்க வேண்டும். இதன்பிறகே  எதிர்காலத் திட்டமிடலுக்குச் செல்ல வேண்டும்.

குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளுக்கு முதலீடு செய்யும்போது, முதலில் கல்வி, அடுத்து, தொழில் தொடங்குவதற்கான தேவை, அதற்கு அடுத்து, திருமணம் என்ற வகையில் பிரித்துக்கொள்ள வேண்டும்.

   பள்ளிக் கட்டணத்துக்கான முதலீடு

தற்போதுள்ள நிலையில், பள்ளிக் கட்டணமாக ஆண்டுக்கு 30,000 ரூபாயிலிருந்து 1,25,000 ரூபாய் தேவைப்படுகிறது. இது ஒவ்வொரு வருடமும் தேவைப்படும் என்பதால், எமர்ஜென்சி தொகையைத் தயார் நிலையில் வைத்திருப்பது நல்லது. இதற்கு உங்களுக்குக் கிடைக்கும் போனஸ் போன்ற சிறப்பு வருமானத்தை எடுத்துத் தனியே  வைத்துக்கொள்ள வேண்டும்.   

கல்லூரியில் படிப்பதற்குத்தான் கல்விக் கடன்தான் எளிதாகக் கிடைக்கிறதே, எதற்காக இப்போது குழந்தைகளின் எதிர்காலப் படிப்புக்குப் பணம் சேர்க்க வேண்டும் எனச் சில பெற்றோர்கள் நினைக்கலாம். ஆனால், குழந்தை படித்துமுடித்து, வேலைக்குச் சென்றதும் முதல் சம்பளமே கடனைத் திரும்பிச் செலுத்துவதற்குத்தான் செல்லும்.  ஆகையால், கடன் இல்லாத வாழ்க்கையை உங்கள் குழந்தைக்கு நீங்கள் தர விரும்பினால், கல்விக் கடன் வாங்க மாட்டேன் என்ற கொள்கையோடு இருக்க வேண்டும்.

சில பெற்றோர், ‘என் பிள்ளை இப்போது நன்றாகப் படிக்கிறான். ஆகையால் ப்ளஸ் டூ- வில் நல்ல மதிப்பெண் எடுப்பான். ஆகையால், கல்லூரிப் படிப்புக்கு அதிகம் செலவாகாது. எனவே, நிறையப் பணம் சேர்க்கத் தேவை யில்லை’ என்று நினைக்கிறார்கள். ஆனால், தற்போது எல்லா மாணவர்களும் போட்டி போட்டுக்கொண்டு மார்க் எடுக்கிறார்கள். ஆகையால், தற்போது நன்றாகப் படிக்கிறான், எதிர்காலத்தில் நன்றாகப் படித்து மெரிட்டில் சீட் வாங்கிவிடுவான்  என்கிற எண்ணத்தில் கல்விச் செலவுக்காக முதலீடு செய்யாமல் இருந்துவிட வேண்டாம். ஒருவேளை மெரிட்டில் வந்து அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைத்தால், நீங்கள் திட்டமிட்டுச் சேமித்துவைத்த பணத்தை இதர விஷயங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதுபோல, உங்கள் குழந்தைகளின் திருமணம், தொழில் தொடங்குவதற்கான முதலீட்டுத் தொகையையும் திட்டமிட்டுச் சேர்க்கலாம்.

   எதில் முதலீடு செய்வது?

குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளுக்கு எதில் முதலீடு செய்வது என்ற கேள்வி வருகிறது. இதனை வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், ரெக்கரிங் டெபாசிட் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். இவ்வாறு முதலீடு செய்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின் வரிக்குப் பிந்தைய நிலையில், உங்களுக்கு மிகக் குறைந்த வருமானமே கிடைக்கும். அதாவது, நிகர வருமானம் 6 சதவிகிதமே கிடைக்கும்.

ஒழுங்கு முறைப்படுத்தப்படாத சேமிப்பான சீட்டில் பணம் போட் டாலும் அதிகபட்சம் பணவீக்க விகித அளவுக்கே வருமானம் கிடைக்கும். அதாவது, ரூ.10 லட்சம் வேண்டும் என்றால், நாமே கொஞ்சம் கொஞ்சமாக சேர்ப்பது போல்தான். எனவே, நீண்டகாலத் தேவைக்கு இதைத் தேர்வுசெய்வது கூடாது.

  எண்டோமென்ட் இன்ஷூரன்ஸ் கூடாது

பெரும்பாலான பெற்றோர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு, இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் முதலீடு செய்வதுதான். இன்ஷூரன்ஸையும், முதலீட்டையும் ஒன்றாகப் பார்க்க வேண்டாம். நம்மவர்கள் எடுக்கும் காப்பீட்டுத் திட்டங்கள் பெரும்பாலும் பாரம்பர்ய திட்டங்கள்தான். இவை குறைந்த வருமானத்தையே தரும்.

இன்ஷூரன்ஸில் குழந்தைப் பாதுகாப்புத் திட்டம், கல்வித் திட்டம் என்றெல்லாம் வைத்திருப்பார்கள். இந்தத் திட்டங்கள் மூலம் நாம் பணம் சேர்த்தால், இறுதியில் நமக்கு எவ்வளவு கிடைக்கும் என்று பார்த்தால், கடன் சார்ந்த திட்டங்களைவிட, குறைந்த அளவு வருமானத்தையே தரும். இவற்றில் சிறப்பாகச் செயல்படும் திட்டங்கள்கூட மிகக் குறைந்த வருமானத்தையே தந்து வருகின்றன. இந்தத் திட்டங்களைத் தேர்ந்தெடுத்தால்,  உங்கள் எதிர்கால நிதித் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது.

   பெயருக்கு முக்கியத்துவம் தராதீர்கள்

இதைப்போலவே, வங்கிகளிலும் குழந்தைகளின் கல்வி, திருமணம் எனப் பல திட்டங்களை வைத்திருக்கிறார்கள். இவற்றாலும் உங்களுக்கான இலக்கை அடைய முடியாது. குழந்தை என்ற பெயர் இருப்பதால், அவை உங்களைக் கவர்ந்து இழுத்துவிடும். எனவே, திட்டங்களின் பெயர்களுக்கு முக்கியத்துவம் தருவதை விட, அந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கவனியுங்கள்.

   யூலிப்புக்கு நோ

யூலிப் திட்டங்கள் தற்போது நிர்வாகக் கட்டணங்களைக் குறைத்திருந்தாலும், வேறு பெயரில் கட்டணங்களை வசூலிக்கின்றன. உங்களுடைய  யூனிட்கள்  இந்தக் கட்டணங்களுக்காக எடுத்துக்கொள்ளப்படும். ஆகையால், அந்தத் திட்டங்களும் உகந்தவையாக இருக்காது.

   காலி மனை காப்பாற்றுமா?   

இப்போது நிறைய பேர் காலி மனையிலும், வீட்டுமனை மாதந்திரத் திட்டத்திலும் முதலீடு செய்து வருகிறார்கள். இப்படி முதலீடு செய்வது சில நேரங்களில் அவசரத்துக்கு உதவாமல் போய் விடும். மதிப்புக் குறைந்துவிடும். ஆகையால், இதனை உங்களுடைய நிதித் திட்டமிடலுக்குக் கொண்டுவர வேண்டாம்.

   எதில் முதலீடு செய்யலாம்?

குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளுக்கு நீண்ட கால அடிப்படையில் (பத்து முதல் பன்னிரண்டு வருடத்தில்) சிறந்த திட்டங்கள் என்றால், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்தான். இவற்றிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் என்றாலும், நீண்டகால அடிப்படையில் 10-12% வரை வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இதற்கு எந்த வருமான வரியும் இல்லை என்பது சிறப்பு.
   
உங்களுக்கு ஏற்கெனவே மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்த அனுபவம் இல்லையெனில், டைவர்சிஃபைடு ஃபண்டிலும், இண்டெக்ஸ் ஃபண்டிலும் முதலீடு செய்யலாம். இவ்வாறு முதலீடு செய்வதை ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யும் வகையில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வது நல்ல வருமானத்துக்கு வழி வகுக்கும்.

   குழந்தைகளுக்கானத் திட்டங்கள்

சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் கள் குழந்தைகள் சார்ந்த திட்டங் களையும் வழங்கி வருகின்றன. இந்தத் திட்டங்கள் நல்ல வருமானத்தைத் தருகின்றன. இவற்றிலும் முதலீடு செய்யலாம்.

இவற்றில் குறிப்பிட்ட காலம் வரைக்கும் பணம் எடுக்க முடியாது. உதாரணமாக, 18 வருடங்கள் வரை என்றால், 18  வருடங்களுக்குப் பின்பே பணம்  எடுக்க முடியும். இதில் பங்கு சார்ந்த திட்டங்களும், கடன் சார்ந்த திட்டங்களும் இருக்கின்றன. நீங்கள் எந்தளவுக்கு ரிஸ்க்  எடுக்கிறீர்கள் என்கிற அடிப்படையில் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கலாம். 70% பங்கிலும், 30% கடன் சார்ந்த திட்டங்களிலும் முதலீடு இருக்கும் வகையில் அமைந்துள்ள திட்டங்களைத் தேர்ந்தெடுக்கலாம். 

   குழந்தைகளின் பெயரிலும் தொடங்கலாம்   

இந்தத் திட்டங்களை குழந்தை களின் பெயரில் தொடங்கலாம். இப்படி ஆரம்பிக்கும்போது, ‘அண்டர் கார்டியன்ஷிப்’ கணக்கின் கீழ் தொடங்குவது நல்லது.

இந்தக் கணக்கில் 18 வருடங்கள் பூர்த்தி அடைந்தவுடன் பணம் கிடைக்கும் வகையில் அமைத்து இருக்கிறார்கள். இவ்வாறு குழந்தைகளின் பெயரில் கணக்கு ஆரம்பிக்கும்போது, ‘இது என் சேமிப்புக் கணக்கு’ என்று சொல்லிக்  குழந்தைகள்  பெருமிதப் படுவார்கள்.  குழந்தைகளின் ஒப்புதல் இல்லாமல் தந்தையும், தாயும் பணத்தை எடுக்க முடியாது. குழந்தைகளும் பெற்றோர்களின் அனுமதியில்லாமல் பணம் எடுக்க முடியாது.

   வெளிநாட்டில் படிக்கவைக்க...   

குழந்தைகளுக்கென்று உள்ள திட்டங்களில் சிலவற்றில் எதிர்பாராத விதமாக பெற்றோர்கள் காலமானாலும் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட தொகை வழங்கும் வகையில் இருக்கின்றன. சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டில் படிக்க  வைக்க நினைப்பார்கள். அப்படி நினைத்தால், எந்த நாட்டில் படிக்கவைக்கப் போகிறார்கள் என்பதை முடிவுசெய்து, அந்த நாட்டின் கரன்சி மதிப்பிலும் அல்லது இதற்கென்று உள்ள சேமிப்புத் திட்டங்களிலும் முதலீடு செய்யலாம். என்ஆர்ஐ-யாக இருந்தால், அவர் உள்ள நாட்டிலேயே சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்து சேமிக்க ஆரம்பிக்க வேண்டும்.

   தொகையை உயர்த்துங்கள்   

ஒரே அளவு தொகையைத் தொடர்ந்து சேமிக்காமல், ஒவ்வோர் ஆண்டும் சேமிப்புத் தொகையை அதிகரிக்க வேண்டும். இந்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் ரூ.2,000   சேமிப்பதாக இருந்தால், அடுத்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் ரூ.2,500 என்ற வகையில் உயர்த்திக்கொள்ள வேண்டும்.

சில சமயம், எதிர்பாராத விதமாக அதிகத் தொகை கிடைத்தால், அதனையும் மியூச்சுவல் ஃபண்டில் டாப் அப் செய்யும் வசதியைப் பயன்படுத்தி முதலீட்டை அதிகரிக்க வேண்டும்.