இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, January 09, 2017

TNPTF கண்டன அறிக்கை

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் ச.மோசஸ்,பொதுச்செயலாளர் செ.பாலசந்தர்,பொருளாளர் ச.ஜீவானந்தம் ஆகியோர் விடுத்துள்ள கண்டன அறிக்கை:"தமிழர் திருநாள்"என்று உலகெங்கும் வாழும் 10கோடி தமிழர்களால் உவகையுடன் கொண்டாடப்படும் தைப்பொங்கல் திருநாளுக்கு கட்டாய விடுமுறை இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் தமிழக மக்களுக்கு மிகுந்த மனத்துயரை ஏற் படுத்தியுள்ளது.தமிழக மக்களால் சாதி,மத,இன பேதமின்றி கொண்டாடப்படும் மகத்தான திருநாள் பொங்கல் திருநாள்.இது தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழா.உலகிற்கே நாகரிகத்தைப் போதித்த தமிழர்களின் உணர்வுத் திருவிழா.தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தது தமிழக மக்களிடம் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு உள்நோக்கம் கொண்டதாக அமைந்துள்ளது.தமிழக மக்கள் அறுவடைத் திருநாளாகவும்,கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும் திருநாளாகவும்,உழவர்களுக்கு உறுதுணையாக
விளங்கும் கால்நடைகளைப் போற்றி வணங்கும் திருவிழாவாகவும் ஆயிரக்கணக்கன ஆண்டுகளாக தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் விழாவிற்கு விடுமுறை மறுத்துள்ள மத்திய அரசின் இச்செயலை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வன்மையாகக் கண்டிக்கிறது.மத்திய அரசு இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.(செ.பாலசந்தர்,பொதுச்செயலாளர்)

CBSE public exam date anounce

2017-ம் ஆண்டுக்கான 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொது தேர்வு தேதிகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.

இது தொடர்பாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளதாவது, 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வுகள் மார்ச் 9-ம் தேதி துவங்கி, ஏப்ரல் 10-ம் தேதி முடிகிறது. இதில் 16,67,673 பேர் எழுதுகின்றனர். 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வுகள் மார்ச் 9-ம் தேதி துவங்கி, ஏப்ரல் 29-ம் தேதி முடிகிறது. இதனை 10, 98, 420 பேர் எழுதுகின்றனர்.

Sunday, January 08, 2017

பான் எண் கட்டாயம்


வங்கிகள், சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அனைவரின், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணான, 'பான்' விபரத்தை, கட்டாயம் பெற வேண்டும்' என, வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.



உத்தரவு:

இதுகுறித்து, வங்கிகளுக்கு, வருமான வரித்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றிக்கை விபரம்: கடந்த, 2016, ஏப்ரல், 1ல் இருந்து, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வெளியான, நவம்பர், 8 வரையில், வங்கி சேமிப்பு கணக்குகளில், 'டிபாசிட்' செய்யப்பட்ட, ரூபாய் குறித்த விபரங்களை தெரிவிக்க வேண்டும்.



வங்கிகளில், சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களில், பான் எண் குறித்த தகவல்கள் தராதவர்களிடம், அதை, பிப்ரவரி இறுதிக்குள் பெற்று, அனுப்ப வேண்டும். வங்கிகள் மட்டுமின்றி, தபால் நிலையங்கள், கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். இவ்வாறு வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.



செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பின், வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்ட, 2.50 லட்சம் ரூபாய்க்கு அதிகமான தொகை குறித்த விபரங்களை தெரிவிக்க வேண்டும் என, வங்கிகளுக்கு, ஏற்கனவே உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.



இந்தியாவில், 2020ல், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, பி.ஓ.எஸ்., எனப்படும், 'பாயின்ட் ஆப் சேல்' இயந்திரங்கள் தேவையற்றதாகி விடும். ஒவ்வொரு பண பரிவர்த்தனையும், கட்டை விரல் ரேகையை பதிவு செய்வதுடன், 30 வினாடிகளில் முடிந்து விடும். உலகில், 100 கோடி மொபைல் போன்கள், 100 கோடி, 'பயோ மெட்ரிக்' இயந்திரங்கள் உடைய ஒரே நாடு, இந்தியா.

- அமிதாப் காந்த், தலைமை செயல் அதிகாரி, 'நிடி ஆயோக்'

Saturday, January 07, 2017

மாம்பழ வாசனையடிக்கும் உள்ளங்கை-மணிகண்டபிரபு

#இந்தவாரவண்ணக்கதிரில்

மாம்பழ வாசனையடிக்கும் உள்ளங்கை
-மணிகண்டபிரபு

புத்தகம் படிக்கும் பழக்கமுள்ள அனைவருக்கும் இவரை தெரிந்திருக்கும்.படிக்க படிக்க மனம் தெளிவடையும்.நுட்பமான எழுத்துக்களை படிக்கும்போது மட்டும் அறிவு விரிவடைகிறது.

கரடு முரடான எழுத்துக்களின் மூலம் கதை சொன்ன மேதாவிகளிலிருந்து விடுபட்டு.., மயிலிறகால் மனதை வருடி ரசிப்பு நிலையின் உச்சத்தை காணச் செய்தவர் வண்ணதாசன்.அகநிகழ்வை புகைப்படம் பிடித்துக்காட்டும் அற்புத கலைஞன்.

மனதை தொட்ட வரிகளை எழுதிவைக்கும் டைரி முழுவதையும் மனம் கமழச் செய்யும் இவரின் எழுத்துக்களை பகிர்கிறேன்

நெல்லையில் பிறக்கவில்லையே என ஏக்க பெருமூச்சு வரும்.இவரின்
முதல்கதை 1962 ல் ஏழையின் கண்ணீர்.1976ல் முதல் கதைத்தொகுப்பு கலைக்க முடியாத ஒப்பனைகள்.இவரின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு புத்தகமாகவே வந்துள்ளது.

சாரல் மழை பெய்யும் சூழலையும்,
மழைக்கு இதமாக பருகும் தேநீர் போன்ற இவரின் விவரிப்புகள்,கவனிக்க தவறிய முகங்களை பதிவு செய்யும் இவரின் சாதனைக்கு இன்னொரு மகுடம் இந்த ஆண்டு சாகித்திய அகாதமி விருது.

மகிழ்ச்சியையும் சோகத்தையும் எளிதில் கடத்தும் இவரின் எழுத்துக்கள்.இவரின் உரைநடை தெருவில் காற்றில் பட்டு உருண்டோடும் பூக்களை போல மனம் லயிக்கும்.இதோ ஒரு உதாரணம்

"இடது உள்ளங்கையை வட்டமாகக் குவித்து,அதன் மேல் தாள் பூ இலையை வைத்து,வலது கையை அகல விரித்து அடிப்போம்.'டொப்' என்று சத்தம் வரும்.அது ஒரு விளையாட்டு.அது எல்லாவற்றையும் ஒரு விளையாட்டாக ஏற்றுக்கொள்கிற மனம் இப்போது இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்

மற்றொரு முறை மழையை பற்றி கூறும்போது..

மழை தான் பெய்கிற நேரத்தை அழகாகத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறது.
சிலசமயம் இரவு முழுவதும் விடியவிடிய.
சிலசமயம் விடியும்போது அதிகாலையில்.

ஒரு சிறுகதையோ கட்டுரையோ அதன் முதல் வரி முக்கியமானது.அந்த வகையில் வண்ணதாசன் எழுத்தை படிக்கும்போதே ஈர்ப்பு வரும்.அவ்வாறான அவரின் துவக்க வரிகள்..

"இப்போதெல்லாம் கனவுகள் அதிகம் வருவதில்லை.
நனவுகள் இப்படித்தான் இருக்கும் என கிட்டதட்ட யூகித்து விட முடியும் தினங்களில்,கனவுகள் தன் கண்ணாமூச்சி விளையாட்டை நிறுத்திவிடும் போல.

"மாம்பழ வாசனையடிக்கிற என் உள்ளங்கையை யாருடைய நாசியில் சற்றிப் பொத்தலாம்?

*மனம் வனமிருகங்களைப் போல நுட்பமானது

அதே போல் அவரின் எழுத்துக்கள் வாசகனின் கண்களிலிருந்து இன்னும் கொஞ்சம் படிக்கலாம் என கெஞ்சும்

அவரின் இறுதி வரிகள் இவ்வாறெல்லாம் முடிந்திருக்கும்

*விடை பெறுவதற்கும் விடை கொடுப்பதற்கும் போதுமானதாக இருந்தது.

*மழை பாருங்கள்..
மழையும் உங்களைப் பார்க்க விரும்புகிறது.

*அருவியும் ஒரு வேளை மெலிந்து இருக்குமோ?

*அகம் புறம் தொடரின் இறுதியில்

"இந்த நதி ஓடும்போது,இந்தப் படித்துறையில் குளிக்கிற நேரத்தில்,இந்தக் கல்மண்டபத்தில் அமர்ந்து இருக்கையில்,நான் அழகாக இருக்கிறேன்.உள்ளும் வெளியும் அழகு.உள்தான் வெளி.அகம்தான் புறம்.நான்தான் நீங்கள்! என்று
என்ன கவித்துவமான வரிகள்.

பார்த்தாலே இன்பம்.படித்தாலே பரவசம்.அவ்வாறாக மனம் தொட்ட இவரின் வரிகள்

*சிறுவயது தான் நம் கையை பிடித்துப் பெரிய வயதுக்குள் கூட்டிப்போகிறது

*உயிரையே அசைத்த கவிதை...👇🏿

பழைய சேலை கேட்டு ஒருத்தி
வாசலுக்கு வெளியே நிற்கிறாள்.
கூடுதல் அனுதாபத்திற்காக
எல்லாம் வெள்ளத்தில் போய்விட்டதாக
ஒரு பொய் சொல்கிறாள்.
வாசலுக்கு உட்புறம் இருப்பவர்கள்
இன்னொரு தடவை வந்தால்
தருவதாகச் சொல்கிறார்கள்.
தங்கள் கருணையை மெய்ப்பிக்க
இப்போதுதான் அனாதை விடுதிக்குக்
கொடுத்தோம் என்று
ஒரு பொய் சொல்கிறார்கள்
அந்தப் பக்கம் ஒரு பொய்யும்
இந்தப் பக்கம் ஒரு பொய்யுமாக
அசையாமல் இருக்கிறது வாசல் கதவு
உண்மையின் துருப்பிடித்த மௌனத்துடன்"!

*வேலைக்கு போக ஆரம்பித்த பிறகு
வேலைதான் வாழ்க்கையாகி விடுகிறது

*தூக்கம் வந்தவருக்கு இரவு சுகமாகிறது.வராதவருக்கு சுமையாகிறது என்பதுபோல் விளக்கும்..

*சில இரவுகளை கழிக்கிறோம்
சில இரவுகள் வாழ்கிறோம்

*கெட்டிக்காரத்தனம் என்பது
உப்பு மாதிரி
கொஞ்சம் கூடினால்
ரொம்ப கரிக்கும்
ருசி கெட்டுவிடும்

*முகங்களை விட
கால்களையே அதிகம்
உற்றுப்பார்க்க வேண்டும்.
அதுவும் சிரித்துக்கொண்டே
-செருப்புகடை சேல்ஸ்மேன்

*சிக்கல்களின் நெரிசல்களுக்கு
இடையில் மனிதர்கள் சதா
நோன்பிருப்பது அன்பெனும்
சிறுவரத்துக்கு மட்டும்

*எளிய தீர்மானங்கள் என்பது நாமே
மணல்வீடு கட்டிக்கொள்வது போல
நாமே கட்டி நாமே
சிதைத்துவிடுகிறோம்

*பண்டம் சுடுகிற அடுக்களை மண்
அடுப்பின் உட்பக்கத்து தணலும்
தணலின் சிவப்பில் ஜொலிக்கிற
அம்மா முகமும்
எவ்வளவு ஜீவன் நிரம்பியது

*என்ன செய்ய முடியும்
உங்களால்?
ஒதுக்கி தள்ளுவீர்கள்
என்ன செய்ய முடியும் என்னால்
ஒதுங்கி கொள்ளுவேன்

*மழையின் திருவிழாவில்
குழந்தைகள் உட்னடியாகவும்
நாம் சற்று தாமதமாகவும்
தொலைந்து போவேன்

*சிரிப்பது செளகரியமான பதிலாக இருக்கிறது

*ஓய்வு சிலசமயம்
அழகு தருகிறது
இயக்கம் சில சமயங்களில்
இன்னும் அழகு தருகிறது

*தலையில் உதிர்ந்து கிடக்கும்
வேப்பம் பூக்களை அப்படியே
விட்டுவிடுங்கள்

*வெளிப்படுத்துதலை விட
சிரம்மானது எளிமையாக
வெளிப்படுத்தல்

*திரும்ப திரும்ப பார்க்க வைக்கிறது அழகா? இரண்டாம் தடவை
பார்க்க முடியாம இப்படியே திகைக்க வைத்துவிட வேண்டும்.
அதுதான் அழகு

*எரிகிறபோது பார்க்காமல்
எப்போதும் அணைந்தபிறகுதான்
அதை சற்று அதிகம் பார்க்கிறோம்

இந்த கடைசி வரியினை படித்தால் அனைவருக்கும் உற்சாகம் கிளம்பும்

*எதுவும் தாமதமாகிவிடவில்லை
இந்த இடத்தில் ஆரம்பித்தால் கூட
இன்னும் எவ்வளவோ
உயரங்களுக்கு போய்விட முடியும்

எழுத்துக்களை போலவே எளிமையான மனிதராய் விளங்கும் வண்ணதாசனுக்கு இந்த ஆண்டு விருது கிடைப்பதில் அவருக்கு இருக்கும் மகிழ்ச்சியை விட இரு மடங்கு மகிழ்ச்சி எங்களுக்கு உண்டு

-மணிகண்டபிரபு

EPF பென்ஷன் திட்டத்துக்கு ஆதார் கட்டாயம்!


மத்திய அரசு 1995-ம் ஆண்டுக்குக் கீழே வரும் அனைத்து இ.பி.எஃப் பென்ஷன் தாரர்களுக்கும் ஆதார் எண் கட்டாயம் என்று கூறி இருக்கிறது. இதன் மூலம் 2.5 கோடி பேர் தங்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 'இ.பி.எஃப் திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

அப்படி ஆதார் எண் இல்லாதவர்கள் இம்மாதம் 31-ம் தேதிக்குள் அதற்கு விண்ணப்பித்து அதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்' என தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது. குறைந்த கால அவகாசத்தில் அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தப் பார்க்கிறது. அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் புகார் அளிக்கின்றன.

பிறந்து ஓராண்டாகியும் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பெறாதவர்களுக்கு புது வாய்ப்பு : தமிழக அரசு புது உத்தரவு


தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தான் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1990க்கு பின் பிறந்தவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால் தற்போது பிறப்பு சான்றிதழ் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று, இறந்தவரிடம் இருந்து சொத்துக்களை மாற்றி கொள்வதற்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இறப்பு சான்றிதழ் பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுவாக, பிறந்தோ அல்லது இறந்தோ 1 வருடத்திற்குள் கிராம நிர்வாக அலுவலரிடம் பிறப்பு அல்லது இறப்பை பதிவு செய்யா விட்டால் நீதிமன்றத்தை நாடி அதற்கான ஆணை பெற்ற பிறகுதான் வருவாய் கோட்டாட்சியர் நிலையிலான அதிகாரிகள் பிறப்பு சான்றிதழ் பதிவு செய்கின்றனர். இதனால், பொதுமக்கள் நீதிமன்றத்திற்கு நடையாய் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு வீண் அலைச்சலும், கால விரயமும் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பொதுமக்களிடம் இருந்து அரசுக்கு ஏராளமான புகார்கள் சென்றது. இதை தொடர்ந்து பொது சுகாதாரத்துறை தலைமை பதிவாளர் அனைத்து நகராட்சி நிர்வாக ஆணையர், டவுன் பஞ்சாயத்து இயக்குனர், கலெக்டர்கள், மாவட்ட வருவாய் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், சட்ட விதி 3ன் கீழ் பிறப்பு, இறப்பு 1 ஆண்டுக்குள் பதிவு செய்யாமல் விடப்பட்டாலும், வருவாய் கோட்டாட்சியர் நிலையிலான அதிகாரிகள் பதிவு செய்ய அதிகாரம் வழங்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இனி வருங்காலங்களில் 1 ஆண்டிற்கு பிறகு பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற பொதுமக்கள் அலைய வேண்டியதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத வருவாய்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ஒரு வருடத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு செய்யப்பட்டு, அந்த ஆவணங்கள் பதிவுத்துறைக்கு அனுப்ப வேண்டும். எங்களால் இந்த ஆவணங்களை பாதுகாக்க முடியுமே தவிர திருத்தம் மேற்கொள்ள கூடாது. ஒரு வருடத்தில் பதியாதவர்கள் நீதிமன்றத்தை அணுகி அதன்பிறகு வட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்கின்றனர். பொதுமக்கள் 3 மாதங்கள் வரை நடையாய், நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது சட்ட திருத்தத்தில் கொண்டு வந்ததன் மூலம் பொதுமக்கள் அலைய வேண்டிய தேவையில்லை. வட்டாட்சியர் அலுவலகத்திலேயே இனி பதிவு செய்யமுடியும். இதற்கான ஆவணங்களை அவர்கள் வட்டாட்சியர் முன்பு சமர்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை வட்டாட்சியர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்’ என்றார்

கிராமப்புற மாணவர்களின் அறிவியல் திறன் வளர்க்க வடிவமைப்பு போட்டி


தமிழகம் முழுவதும் கிராமப்புற மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தவும், அவர்களுக்குள் புதைந்து கிடக்கும் வித்தியாசமான கண்ணோட்டத்தை செயல்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் மூலம் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

இதில் ஒவ்வொரு அரசு பள்ளியில் இருந்தும் 2 மாணவர்கள் கலந்து கொள்ளலாம். எளிய பொருட்களை வைத்து அறிவியல் உருவாக்கங்களை செய்து காண்பிக்க வேண்டும். முதல் 3 இடங்களை பெறும் அணிக்கு தலா 1,500, 1,000, 500 பரிசு வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் தயாரிப்பு தீவிரம்


அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 100க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள், வரும் கல்வி ஆண்டில் காலியாக உள்ளன. இவற்றை பதவி உயர்வு மூலம் நிரப்புவதற்கு, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, நேரடி நியமனத்தில் வந்த ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் என, இரண்டு பட்டியல் தயாரிக்கப்படுகிறது. எனவே, விதிகளின்படி பணிமூப்பு விபரங்களை, வரும், 30க்குள், பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்ப, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

பட்டியல் தயாரிப்பு பணியில் விதிமீறல்கள், பிழைகள் ஏற்படக் கூடாது எனவும், சி.இ.ஓ.,க்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டங்களில் இருந்து வரும் பெயர் விபரங்களை, தலைமை அலுவலக ஆவணங்களுடன் ஒப்பிட்டு, பதவி உயர்வுக்கான தோராய பட்டியல், மூன்று மாதங்களில் இறுதி செய்யப்படும். மார்ச் இறுதியில், இறுதி பட்டியல் தயாராகும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாணவர் ஊக்கத்தொகை அரசாணை வெளியீடு


தமிழகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகள் உள்ளன. இவற்றில், தங்கி படிக்கும், மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், ஒவ்வொரு பாடப்பிரிவிலும், 100 மதிப்பெண்கள் எடுத்தால், அவர்களுக்கு, 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என, சட்டசபையில் அமைச்சர் அறிவித்தார்.அதன்படி, ஒவ்வொரு பாடப்பிரிவிலும், 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவ, மாணவியருக்கு, 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க, அரசு உத்தரவிட்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாய்ப்பை மாணவ, மாணவியர், பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வருமானவரி படிவம் தமிழில்





posted from Bloggeroid

அரசுக்கு எதிராகத் திரளும் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள்

அரசுக்கு எதிராகத் திரளும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்!

தமிழக அரசுக்கு எதிராக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் விரைவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காகவே தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாடு இந்த மாதம் 6-ம் தேதி முதல் 8-ம் வரை திருவண்ணாமலையில் நடக்கிறது. மாநாட்டுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். மாநாட்டை முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் ஸ்ரீகுமார் வாழ்த்துரை வழங்கினார்.

மாநாட்டில் இதுவரை 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வரும் 8-ம் தேதி ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்கும் பேரணி நடைபெற உள்ளது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைவர் மோசஸ், வணிகவரித்துறை சங்கத்தின் தலைவர் ஜனார்த்தனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநாடு குறித்து தமிழ்செல்வி கூறுகையில், "அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்ப்பதில்லை. புதிய பென்சன் திட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டோம். இதற்கிடையில் சட்டசபையில் 110 விதிகளின் கீழ் தொகுதிப்பூதியம், மதிப்பூதியம் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும். பென்சன் திட்டத்துக்கு வல்லுநர்குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. அதில் 8 அறிவிப்புக்கு அரசாணை வெளியிடப்பட்டு விட்டது. ஆனால் அதிகாரிகளின் அலட்சியப் போக்குகாரணமாக சில அரசாணைகள் நிறைவேற்றப்படவில்லை.

தற்போது சங்கத்தின் 12-வது மாநில மாநாடு திருவண்ணாமலையில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். புதிய ஊதியக்குழுவை அமைக்க வேண்டும். அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்குரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (JACTO-GEO) என்ற அமைப்பு மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
அரசு ஊழியர்கள் வட்டாரங்கள் கூறுகையில், "ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து அ.தி.மு.க அரசு இருந்து வருகிறது. அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும், புதிய பென்சன் திட்டம் ரத்து செய்யப்படும், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் ஏற்படும் போது தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஊதிய மாற்றம் ஏற்படுத்தப்படும். சத்துணவு, அங்கன்வாடியில் கடந்த 25 ஆண்டுகளாக தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும். கருணை அடிப்படையில் பணியில் சேருபவர்களுக்காக விதிகள் தளர்த்தப்படும். அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகளிடம் அவ்வப்போது கலந்து ஆலோசிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால்தான் கடந்த பிப்ரவரியில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தோம். அப்போது நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், சங்க நிர்வாகிகளிடம் 9.2.2016ல் 2 மணி நேரம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஜெயலலிதாவிடம் சொல்லி அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் அதை நிறைவேற்றவில்லை. தற்போது ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருக்கிறார். இப்போது அவர் யாரிடமும் கேட்க வேண்டிய அவசியமில்லை. புதிய பென்சன் திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட வல்லுநர் குழு சங்க நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்தப் பிறகும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. முதல்வரையும், அமைச்சர்களையும் குறைச் சொல்வதைவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சியமாக இருக்கின்றனர். குறிப்பாக நிதித்துறை, நிர்வாகம், பணியாளர் சீர்திருத்தத்துறையில் உள்ள அதிகாரிகளின் அலட்சியத்தால் அறிவிக்கப்பட்ட அரசாணைகள் செயல்படுத்தப்படாமல் உள்ளன.

குறிப்பாக நிதித்துறையை சாராத பதவி உயர்வு, சீனியாரிட்டி, பணிவரன்முறை உள்ளிட்ட கோரிக்கைகள் கூட நிறைவேற்றப்படவில்லை. இதனால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிறைவேற்றவில்லை என்றால் மீண்டும் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு போராட்ட காலங்களில் ஏற்படுத்தப்படும். அந்த அமைப்பு இப்போதும் ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்றனர்.

எஸ்.மகேஷ்