இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, November 25, 2016

10ம் வகுப்பிலும் புது வினாத்தாள் மாதிரி தேர்வு


பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ள, போட்டித் தேர்வு வகை வினாத்தாள்படி, 10ம் வகுப்புக்கும், மாதிரி தேர்வு வைக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்கள், 'நீட், ஜே.இ.இ.,' போன்ற நுழைவுத் தேர்வுகளிலும், தங்கள் திறனை காட்டும் வகையில், அவர்களுக்கு புதிய வினாத்தாள் முறையை, கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.

தமிழக அரசின் குழந்தைகள் தின விழாவில், இதற்கான அறிவிப்பை, பள்ளிக்கல்வி செயலர் சபிதா வெளியிட்டார். இதன்படி, எட்டாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களுக்கும், புதிய, 'அப்ஜெக்டிவ்' வகை வினாத்தாள் மூலம், பாட வாரியாக மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. வினாத்தாளில் உள்ள நான்கு விடைகளில், சரியானதை தேர்வு செய்வது, மாணவர்களின் தேர்வு பயத்தை போக்குவதோடு, குழப்பமான வினாவுக்கும், விடை கண்டுபிடிக்கும் பக்குவத்தையும் ஏற்படுத்துவது தெரிய வந்துள்ளது. எனவே, இந்த வினாத்தாள் முறைப்படி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களுக்கும், மாதிரி தேர்வு வைக்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வரும் ஆண்டுகளில், பிளஸ் 2 வரையிலும், இந்த முறை தேர்வு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தேசிய திறனாய்வு தேர்வு:நவ., 28ல் விடைக்குறிப்பு


தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைக்குறிப்பு, வரும், 28ல் வெளியாகும்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.நாடு முழுவதும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மாநில மற்றும் தேசிய அளவில், இரு கட்ட திறனாய்வு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு, மாநில அளவிலான தேர்வு, நவ., 5ல் நடந்தது.'தேர்வு வினாத்தாளுக்கு, தற்காலிக விடைக்குறிப்புகள், வரும், 28ல், வெளியாகும். அவற்றை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். சந்தேகங்கள் இருந்தால், இயக்குனரின், directordge.tn@nic.in என்ற முகவரிக்கு, வரும், 30க்குள் தகவல் அனுப்பலாம்' என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

TNPTF RALLY TOWARDS PARLIMENT on 29-11-16


posted from Bloggeroid

மதநல்லிணக்க நாள் உறுதிமொழி

Click below

https://app.box.com/s/th69lq7shfvqzar90qusnlf1vmcka4xs

Constitution day celebration

Click below

https://app.box.com/s/n0aygamt6a5qdyd2c3gybu2qat1kv9k5

அம்பேத்கர் பிறந்தநாள் விநாடி வினா: மாதிரி வினாத்தாள்



posted from Bloggeroid

Thursday, November 24, 2016

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டிய TNPTF பொதுச்செயலாளர் அளித்த மனுவிற்கு தமிழக அரசின் பதில்


posted from Bloggeroid

பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவர்கள் விவரம்: இணையதளத்தில் பதிய முடியாமல் தலைமை ஆசிரியர்கள் திணறல்


பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் எழுத உள்ள மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய முடியாமல் பள்ளி தலைமை ஆசிரியர்கள் திணறி வருகின்றனர். இதற்காக கல்வித்துறை கால அவகாசம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

2017 மார்ச், ஏப்ரலில் நடைபெறவுள்ள எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் (நாமினல் ரோல்) சென்ற ஆண்டு போலவே உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாகவே தயார் செய்து வைத்திருந்தனர். இந்நிலையில் எமிஸ் இணையதளத்தில் மாணவர்களின் பெயர், தந்தை பெயர், ஜாதி, பாலினம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை நெம்பர், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட 15 வகையான விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

இதற்காக திருவள்ளூர் மாவட்டத்தின் அனைவருக்கும் கல்வி திட்ட இணை இயக்குநர் தலைமையில் கடந்த திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் கலந்து கொண்டனர். இதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களின் பெயர் பட்டியல் விவரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவுசெய்தல் தொடர்பான அறிவுரைகள் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கி இப்பணிக்கு 23ஆம் தேதி (புதன்கிழமை) கடைசி நாள் என மாவட்ட கல்வித்துறை கூறியிருந்தது.

இதில் எமிஸ் இணையதள சேவை சர்வர் பழுதால் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இப்பணிகள் 40 சதவீதம் கூட முழுமையாக முடிக்க இயலவில்லை. இதனால் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கூடுதல் அவகாசம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: கல்வித்துறை உத்தரவின் பேரில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் பெயர் பட்டியல் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாகவே தயார் செய்துவிட்டோம். இந்நிலையில் திங்கள்கிழமை புதிதாக எமிஸ் இணையதளத்தில் மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் மறுபடியும் பதிவு செய்ய வேண்டும் என்றால் அதற்கு கால அவகாசம் வேண்டும். ஏற்கெனவே ஒருசில பள்ளிகளில் இதுவரை கணினி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் தலைமை ஆசிரியர்கள் நகரங்களில் இருக்கும் பிரவுசிங் சென்டர்களுக்கு சென்று மாணவர்கள் விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் பதிவு செய்தும், பதிவிறக்கம் செய்கின்றனர்.

மேலும் குக்கிராமங்களில் இருக்கும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இன்டர்நெட் வசதிகள் இல்லாமல் நகரங்களைத் தேடிச் சென்று இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனர். தற்போது எல்லா பள்ளிகளிலும் எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்ய முயல்வதால் கடந்த 3 நாள்களாக சர்வர் டவுன் ஆனது. இதனால் மாணவர்கள் விவரங்களை எங்களால் பதிவு செய்ய முடியவில்லை. எனவே இதற்கு கால அவகாசம் கொடுக்க கல்வித்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர். எனவே அனைத்துப் பள்ளிகளிலும் கணினி ஆசிரியர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும் அனைத்து பள்ளிகளிலும் இணையதள சேவைகளை அரசே இலவசமாக வழங்க வேண்டும். இவ்வாறு இருந்தால் மட்டுமே அரசின் நலத் திட்டங்களை இணைய தளத்தில் பதிவு செய்து குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க முடியும்.

அரசு ஊழியர் பாஸ்போர்ட் : மத்திய அரசு புது உத்தரவு


'அரசு ஊழியர்கள், புதிய பாஸ்போர்ட் பெறவோ, புதுப்பிக்கவோ விரும்பினால், அரசுக்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள், புதிய பாஸ்போர்ட் பெறவோ, புதுப்பிக்கவோ, அரசிடம் இருந்து, தடையில்லா சான்றிதழ் மற்றும் அடையாள சான்றிதழ் பெற வேண்டும். அதற்காக, விண்ணப்பிக்கும் முறை உள்ளது. சமீபத்தில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது. அதில், அரசு ஊழியர்கள், அரசிடம் இதற்கான அனுமதி பெறுவதற்கு முன், எதற்காக வெளிநாடு செல்கிறோம் என்பதற்கான முழு விபர கடிதம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும், அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பிப்பதற்கான படிவ மாதிரியையும், மத்திய அரசு அளித்துள்ளது. எனவே, அரசு ஊழியர்கள், இதுபோன்ற விண்ணப்பத்துடன், தகவல் கடிதத்தையும் சேர்த்து வழங்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tamil Nadu 10th All Public Questions April 2012-september 2016 15 Questions 30

Click below

http://www.kalvikural.com/2016/11/tamil-nadu-10th-all-public-questions.html?m=1

Employment Exchange Statistics - Community-wise break up of Job Seekers waiting on the rolls of Employment Exchanges in Tamilnadu as on 30th September 2016



posted from Bloggeroid

பள்ளிக் கல்வி - அனைத்து வகை மாணவர்களுக்கு நன்னெறி போதனை வழங்கவும் ஒவ்வொரு பள்ளியிலும் ஆலோசனைப் பெட்டி வைக்கவும் உத்தரவு - செயல்முறைகள்


posted from Bloggeroid

3rd week worksheets all subjects

Click below

https://app.box.com/s/dvih07pofrh7vre4dh9cp2nv5ae3lkkq

Wednesday, November 23, 2016

அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு விநாடி வினா நடத்த தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


posted from Bloggeroid

புதிய தொடக்க பள்ளிகள் : அரசு உத்தரவு


திண்டுக்கல் உட்பட ஐந்து மாவட்டங்களில், தலா ஒரு புதிய தொடக்கப்பள்ளிகள் துவங்க அரசு உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல்லில் சின்ன மலையூர்; தர்மபுரியில் கடத்திக்குட்டை; ஈரோடில் ெகாமாரபாளையம்; திருவண்ணாமலையில் பூமாட்டு காலனி; விழுப்புரம் மாவட்டத்தில் கானிமேடு ஆகிய இடங்களில், தலா ஒன்று என ஐந்து தொடக்க பள்ளி துவங்க பள்ளிக்கல்வி செயலர் சபிதா உத்தரவிட்டுள்ளார்.

மீண்டும் போராட்டத்தில் ஆசிரியர் சங்கங்கள்


புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி, ஆசிரியர் சங்கத்தினர் போராட்டங்களை துவங்கியுள்ளதால், பள்ளி கல்வித்துறைக்கு, மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கோரிக்கை : புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து, அகவிலைப்படி உயர்வு, ஆசிரியர்கள் பணியிடத்தை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஆண்டு, ஆசிரியர்கள் நடத்திய தொடர் போராட்டம், தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. சங்கங்களுடன் அரசு பேச்சு நடத்தி, பிரச்னையை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வந்தது. இந்நிலையில், ஆசிரியர் சங்கங்கள் மீண்டும் போராட்டத்தை துவங்கியுள்ளன.

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், இரு வாரங்களுக்கு முன், போராட்டத்தை துவக்கியது. தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, 20ம் தேதி, மாவட்ட தலை நகரங்களில், ஆர்ப்பாட்டம் நடத்தியது.

ஆலோசனை : தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், வரும், 25ம் தேதியும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், வரும், 27ம் தேதியும், போராட்டங்களை அறிவித்துள்ளன. பிற ஆசிரியர் சங்கங்களும் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றன.

பள்ளிகளில், அரையாண்டு தேர்வு துவங்க உள்ளது. இறுதி மற்றும் பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் நிலையில், ஆசிரியர் சங்கங்கள் மீண்டும், போராட்டத்தில் குதித்துள்ளது, கல்வி அதிகாரிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு, எப்படி தீர்வு காண்பது என, அவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

முதுநிலை ஆசிரியர் நியமனம்: ஒரு வாரத்தில் அறிவிப்பு


தமிழ்நாடு ஆசிரியர் கல்வி வாரியமான, டி.ஆர்.பி., மூலம், 1,500 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு, ஒரு வாரத்தில் வெளியாக உள்ளது. தமிழகத்தில், அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு, பாடம் எடுக்கும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களில், 1,500 இடங்கள் காலியாக உள்ளன.

'விரைவில் நேரடி நியமனம் நடக்கும்' என, மார்ச்சில், டி.ஆர்.பி., அறிவித்தது. ஆனால், இதுவரை நியமன பணிகள் துவங்கவில்லை. இதுகுறித்து, பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகளிடமிருந்து, டி.ஆர்.பி.,க்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனால், முதுநிலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை, டி.ஆர்.பி., ஒரு வாரத்தில் வெளியிடும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன

IGNOU HALL TICKET DOWNLOAD DEC-2016 EXAM

Click below

https://avserver.ignou.ac.in/HallTicket/Hall_1216/Hall1216.asp

சிறப்பாக செயல்படாத மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடையாது

சிறப்பாக செயல்படாத மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடையாது என்று மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

இது குறித்து பாராளுமன்றத்தில்  ஜிதேந்திர சிங் கூறியதாவது:

சிறப்பான செயல்பாடுக்கான வரையறையை எட்டிப்பிடிக்காத மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு கிடையாது.  7–வது சம்பள கமிஷன் சிபாரிசு செய்திருந்தது. அந்த சிபாரிசை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

NGC-ECO club activities for 2016-17 fund released



posted from Bloggeroid

Tuesday, November 22, 2016

5 new elementary school will start G.O




posted from Bloggeroid

CCE-II WEEK - SOCIAL SCIENCE- ENGLISH MEDIUM -QUESTION SHEET-

Click below

https://m.box.com/shared_item/https%3A%2F%2Fapp.box.com%2Fs%2Fxw5dsp9dj0lhnhfodqvhpchs2b8vmpt3

☝☝☝☝☝☝பணிப்பதிவேட்டை கருவூலங்களில் ஸ்கேன் செய்வதற்கு முன்பாக சரிபார்க்கப்படவேண்டிய பதிவுகள் சார்பான இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 22. 11. 2016


posted from Bloggeroid

வங்கியில் பணம் எடுக்கும் வரம்பு: இன்று கடைசி


வங்கிகளில் அதிகபட்சம் ரூ.24,000 பணம் எடுப்பதற்கான இந்த வார வரம்பு கெடு புதன்கிழமை (நவ.23) நிறைவடைகிறது. பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது முதல் வங்கி, ஏடிஎம் பண பரிவர்த்தனையில் பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு செய்து வருகிறது.

அதன்படி வங்கி சேமிப்புக் கணக்கில் வாரத்துக்கு அதிகபட்சம் ரூ.24,000, ஏடிஎம் மையங்களில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.4,500 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இந்த வரம்பு ரூ.2,000 என குறைக்கப்பட்டது. இந்நிலையில், வங்கி சேமிப்புக் கணக்கில் ஒருவர் கடந்த வியாழக்கிழமை தொடங்கி ஒரு வாரத்தில் இதுவரை ரூ.20,000 வரை எடுத்திருந்தால், புதன்கிழமையன்று (நவ.23) மீதித் தொகை ரூ.4,000 மட்டுமே எடுக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒருவரது வங்கி சேமிப்புக் கணக்கைப் பொருத்தவரை, அவர் ஏடிஎம் மையத்தில் எடுக்கும் பணத்தையும் கணக்கில் கொண்டே மீதித் தொகை மட்டுமே காசோலைக்கு அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வங்கிகளில் தொடரும் பண பற்றாக்குறை: வங்கிகளுக்கு போதிய பணத்தை ரிசர்வ் வங்கி தராமல் இருப்பதால், நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச தொகையை (ரூ.24,000) அளிக்க முடியாமல் வங்கிகள் திணறி வருகின்றன. இந்த வாரம் தொடங்கிய திங்கள்கிழமையன்று (நவ.21) ஒரு வாடிக்கையாளருக்கு அதிகபட்சம் ரூ.5,000-மும் செவ்வாய்க்கிழமையன்று (நவ.22) அதிகபட்சம் ரூ.10,000 மட்டுமே வங்கிகள் அளித்தது குறிப்பிடத்தக்கது

பள்ளிகள் விளையாட்டு போட்டிக்கு ரூ.10 கோடி


பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு ரூ.10 கோடியை பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கியுள்ளது. மாநிலத்திலுள்ள 67 கல்வி மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளிலும் ஆண்டுதோறும் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

பின் கல்வி மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும் விளையாட்டு போட்டிகள் நடக்கும். அதில் பங்கேற்று வெற்றி பெரும் மாணவ - மாணவிகள் மாநில அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்கின்றனர். நிதிஒதுக்கீடு: குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு ரூ.2 கோடியே 64 லட்சத்து 9 ஆயிரத்து 300ம், கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு ரூ.79 லட்சத்து 83 ஆயிரத்து 50 ஒதுக்கப்பட்டுள்ளது. மண்டல அளவிலான போட்டிகளை நடத்துவதற்கு ரூ.2 கோடியே 58 லட்சத்து 12 ஆயிரத்து 600 ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மாவட்ட குடியரசுதின, பாரதியார் தின குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்த ரூ.2 கோடி 16 லட்சத்து 4 ஆயிரத்து 300 ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் நடத்தும் போட்டிகளில் பங்கேற்கும் செலவினங்களுக்காக ரூ.ஒரு கோடியே 96 லட்சத்து 30 ஆயிரத்து 690 என மொத்தம் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.