இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, November 07, 2016

திருத்திய அறிவுரை இணையதளத்தில் வெளியீடு தேர்வு கூடத்தில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டால் தேர்வு எழுத நிரந்தர தடை


டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கான திருத்திய அறிவுரைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) விண்ணப்பதாரர்களுக்கான திருத்தியமைக்கப்பட்ட அறிவுரைகளை தேர்வாணைய இணையதளத்தில்(www.tnpsc.gov.in,www.tnpscexams.net, www.tnpscexams.in) வெளியிட்டுள்ளது.

தமிழ், ஆங்கிலத்தில் அறிவுரைகள் உள்ளன. மொத்தம் 27 அறிவுரைகள் அதில் இடம் பெற்றுள்ளன. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவுரைகள் வருமாறு:

* அரசு பணிகள் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் தேர்வாணைய இணையதளத்திலும், செய்தித்தாள்களிலும் வெளியிடப்படுகிறது. அவ்வாறு வெளியிடப்படும் காலிப்பணியிடங்களுக்கான எண்ணிக்கை தோராயமானதாகும். தேர்வு பணிகள் இறுதியாகும் வரை அவை எந்த நேரத்திலும் மாறுதலுக்கு உட்பட்டதாகும்.

* தேர்வுக்கு www.tnpsc.gov.in,www.tnpscexams.net, www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

* எந்த ஒரு பதவிக்கும் விண்ணப்பிக்கும் முன்பு ஒருமுறைப்பதிவு எனப்படும் நிரந்தரப்பதிவு மற்றும் தன் விவரப்பக்கம் ஆகியன கட்டாயமாகும். ஒருமுறைப்பதிவு, பதிவு செய்த நாள் முதல் 5 ஆண்டுகள் நடை முறையில் இருக்கும். ஒரு முறைப்பதிவு செய்வதற்கு பயன்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் செல்போன் எண் ஆகியவை கட்டாயமாகும். மின்னஞ்சல், செல்போன் எண் ஆகியவற்றை தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும். தேர்வு தொடர்பான செய்திகள் அனைத்தும் விண்ணப்பதாரர் பதிவு செய்துள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் செல்போன் எண்ணுக்கு மட்டுமே அனுப்பப்படும்.

* கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது தாமதமோ அல்லது தொழில்நுட்ப சிக்கலோ எழ வாய்ப்புள்ளது. இது போன்ற காரணங்களால் கடைசி கட்ட நாளில் சமர்ப்பிக்க இயலாது போனால் அதற்கு தேர்வாணையம் பொறுப்பாகாது. 18 வயதை நிறைவு செய்யாதவர், கருணை அடிப்படையிலான நியமனம் உள்ளிட்ட யாதொரு பணி தொகுதிக்கும் நேரடி நியமனம் மூலமாக நியமனம் செய்ய தகுதியற்றவராவார்கள்.

* தேர்வாணையத்தின் தலைவர், உறுப்பினர்களிடம் ஆதரவை பெற கடிதத்தின் மூலமாகவோ அல்லது ஏவரேனும் உறவினர், நண்பர், காப்பாளர், அலுவலர் அல்லது வேறொருவர் மூலமாக செல்வாக்கை செலுத்த முயற்சித்தால் விண்ணப்பதாரர்கள் அத்தேர்வுக்கு தகுதியற்றவராக ஆக்கப்படுவர்.

* விண்ணப்பதாரர்கள் தேர்வு கூடத்தில் ஏதாவது ஒழுங்கீனச் செயலில் ஈடுபடுதல், அதாவது மற்ற விண்ணப்பதாரர்களுடன் கலந்தாலோசிப்பது, மற்றவர்களின் விடைத்தாள்களை பார்த்து எழுதுவது, குறிப்புகள் கொண்டுவருவது, தேர்வுக்கூட கண்காணிப்பாளர் அல்லது மற்றவர்கள் உதவியை நாடுவது போன்றவை தடை செய்யப்படுகிறது. இதனை மீறுபவர்கள் தேர்வு கூடத்தை விட்டு வெளியேற்றப்படுவர். அது மட்டுமல்லாமல் அவர்களது விடைத்தாள் செல்லாததாக்கப்படும். அந்த தேர்வு மற்றும் எதிர்வரும் காலங்களில் நடத்தப்படும் தேர்வுகளில் கலந்து கொள்ளவும் தகுதியற்றவராக்கப்படுவர்.

* தேர்வு கூடத்துக்கு ஹால் டிக்கெட்டை எடுத்து செல்ல தவறுவது இரண்டு மதிப்பெண் குறைத்தல் அல்லது விடைத்தாளை செல்லாததாக்குதல் போன்றவற்றிற்கு வழிகோலும். அவ்வாறான ஒவ்வொரு நேர்விலும் தேர்வாணையம் தகுதியின் அடிப்படையில் எது சரியெனப்படுகிறதோ அவ்வாறு முடிவு எடுக்கும் உள்ளிட்ட அறிவுரைகள் இடம் பெற்றுள்ளன.

அரசு பெண் ஊழியர் மகப்பேறு விடுப்பு 270 நாள்களாக உயர்வு: அரசாணை வெளியீடு: 110 விதி அறிவிப்பு அமல்


அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 6 மாதங்களில் இருந்து (180 நாள்கள்) ஒன்பது மாதங்களாக (270) அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசு உத்தரவை பணியாளர்-நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் எஸ்.சுவர்ணா திங்கள்கிழமை வெளியிட்டார்.

இதையடுத்து, சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இரண்டு குழந்தைகளுக்குக் குறைவாக இருக்கும் அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 90 நாள்களில் இருந்து 180 நாள்களாக ஏற்கெனவே அதிகரிக்கப்பட்டிருந்தது. இந்த விடுப்பு காலத்தில் அரசு ஊழியர்களுக்கு முழு ஊதியத்துடன் விடுப்பு அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 1 -ஆம் தேதி, சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா படித்தளித்த அறிக்கையில், அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 6 மாதங்களில் இருந்து (180 நாள்கள்) 9 மாதங்களாக (270 நாள்கள்) உயர்த்தப்படும் எனத் தெரிவித்தார். அதன்படி, கருவுற்றல் தொடங்கி குழந்தை பிறக்கும் வரையில், எந்தக் காலத்தில் 9 மாதங்களுக்கு விடுப்பு தேவைப்படுகிறதோ அதனை பெண் ஊழியர்கள் எடுத்துக் கொள்ளலாம். விடுப்பை எந்தக் காலத்தில் இருந்து எடுக்க வேண்டுமென்பதை அந்தந்த அரசு ஊழியர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.

விடுப்பில் உள்ளோர்: மகப்பேறு விடுப்பினை நீட்டித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ள காலத்துக்கு முன்னதாக, விடுப்பினை எடுத்து ஓய்வில் இருக்கும் அரசு பெண் ஊழியர்களும் மகப்பேறு விடுப்பினை நீட்டித்துக் கொள்ளத் தகுதி படைத்தவர்கள் என்று தனது உத்தரவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Sunday, November 06, 2016

List of communities

Click below

https://app.box.com/s/qcdyvny2xv20mopf14iv1utual82mp1s

10 தேர்வுகளுக்கான முடிவுகள் விரைவில் வெளியீடு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தப்பட்ட 10 தேர்வுகளுக்கான முடிவுகளை விரைவில் வெளியிடப்படும் என்று அதன் தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார். தமிழக அரசு துறைகளில் இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் ஆகிய பிரிவுகளில் காலியாகவுள்ள 5,451 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வை டி.என்.பி.எஸ்.சி. ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. இதில், தமிழகம் முழுவதும் 5,296 மைங்களில் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வெழுதினர். இந்த நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள என்.கே.டி. மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைந்திருந்த தேர்வு மையத்தை அருள்மொழி ஆய்வு செய்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டி:- இந்தத் தேர்வை எழுத, முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு 15 லட்சத்து 64 ஆயிரத்து 471 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இவர்களில் 2,291 பேர் மாற்றுத்திறனாளிகள். விண்ணப்பித்தவர்களில் 80 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்றனர். முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், 5,296 தலைமை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 78,216 கண்காணிப்பாளர்கள், 566 பறக்கும்படை ஆகியோர் மேற்பார்வையில் தேர்வு நடத்தப்பட்டது. இந்த வாரத்தில் டி.இ.ஒ. தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி. சார்பில் கடந்த 12 மாதங்களில் மட்டும் 15 எழுத்துத் தேர்வுகளும், 13 நேர்முகத் தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. 2009, 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் அறிவிக்கை செய்யப்பட்டு, பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்த உடற்கல்வி இயக்குநர், மோட்டார் வாகன ஆய்வாளர், நூலகர் ஆகிய மூன்று போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகள் மாதங்களில் வெளியிடப்பட்டிருக்கின்றன.

2014-இல் அறிவிக்கை செய்யப்பட்ட 11 காலிப் பணியிடங்களுக்கான மாவட்ட கல்வி அலுவலர் பணியிடத்துக்கானத் தேர்வு முடிவு மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த வாரத்துக்குள் இந்த முடிவும் அறிவிக்கப்பட்டுவிடும். 10 தேர்வுகளுக்கான முடிவு:மேலும், 2016 ஜூன் மாதம் வரை நடந்து முடிந்த மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான தேர்வைத் தவிர, மற்ற அனைத்துத் தேர்வுகளுக்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. இன்னும் 10 தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இவை அனைத்தும் 2016 ஜூன் மாதத்துக்குப் பிறகு நடத்தப்பட்டவையாகும். இந்த 10 தேர்வுகளுக்கான முடிவுகளை விரைவில் வெளியிடுவதற்கான பணிகளும், தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே, உயர்நீதிமன்ற பணியாளர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டு, முடிவுகளும் வெளியிடப்பட்டுவிட்டன. வரும் 14, 15 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. திருத்திய வரையறை இன்று வெளியீடு: டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு சில வரையறைகள் வகுக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன. இதில் இப்போது திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் திருத்திய வரையறை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் திங்கள்கிழமை (நவ.7) பதிவேற்றம் செய்யப்படும். இவற்றைத் தேர்வர்கள் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

இனி அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும், இந்த திருத்திய வரையறையே பின்பற்றப்படும். நவம்பர் 9-இல் குரூப்-1 தேர்வு அறிவிக்கை: துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணிகளில் 81 காலி இடங்களுக்காக 2016 ஆம் ஆண்டுக்கான குரூப்-1 தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிக்கை நவம்பர் 9-இல் வெளியிடப்பட உள்ளது என்றார் அவர்.

TNPSC GROUP IV Vidiyal Answer Keys (GK) Tentative

https://vidiyalarni.files.wordpress.com/2016/11/group-4-general-knowledge-06-11-2016.pdf

TNPSC GROUP IV Vidiyal Answer Keys (General Tamil) Tentative

https://vidiyalarni.files.wordpress.com/2016/11/group-4-general-tamil-06-11-2016.pdf

TNPSC- GROUP IV - 06.11.2016 KEY AND EXPLANATIONS

Click below

https://drive.google.com/file/d/0BzuERztD6lAcYnlZMXo5U0Z6STA/view?usp=sharing

Saturday, November 05, 2016

ஆங்கில பெயர்கள்

ஜாதிக்காய் – Nutmeg – நட்மெக்
ஜாதிபத்திரி – Mace – மெக்
இஞ்சி – Ginger – ஜின்ஜர்
சுக்கு – Dry Ginger – டிரை ஜின்ஜர்
பூண்டு – Garlic – கார்லிக்
வெங்காயம் – Onion – ஆனியன்
புளி – Tamarind – டாமரிண்ட்
மிளகாய் – Chillies – சில்லிஸ்
மிளகு – Pepper – பெப்பர்
காய்ந்த மிளகாய் / சிவப்பு மிளகாய் – Red chillies
பச்சை மிளகாய் – Green chillies
குடை மிளகாய் – Capsicum
கல் உப்பு – Salt – ஸால்ட்
தூள் உப்பு – Table salt
வெல்லம்/கருப்பட்டி – Jaggery – ஜாக்கரீ
சர்க்கரை/சீனி – Sugar – ஸுகர்
கற்கண்டு – Sugar Candy
ஏலக்காய்/ஏலம் – Cardamom – கார்டாமாம்
பாதாம் பருப்பு/வாதுமை கொட்டை – Almonds
முந்திரி பருப்பு/அண்டிப்பருப்பு – Cashew nuts
கிஸ்மிஸ் – Dry Grapes
லவங்கம்,கிராம்பு – Cloves – க்லெளவ்ஸ்
கசகசா – Poppy – பாப்பி
உளுந்து – Black Gram – பிளாக் கிராம்
கடலைப் பருப்பு – Bengal Gram – பெங்கால் கிராம்
பச்சைப்பயறு/பயித்தம் பருப்பு / பாசிப் பயறு – Moong Dhal/ Green Gram – மூனிங் தால்/கீரின் கிராம்
பாசிப்பருப்பு – Moong Dal
கடலைப்பருப்பு – Gram Dal – கிராம் தால்
உழுத்தம் பருப்பு – Urid Dhal
துவரம் பருப்பு – Red gram / Toor Dhal- ரெட்கிராம்
கம்பு – Millet – மில்லட்
கேழ்வரகு – Ragi – ராகி
கொள்ளு – Horse Gram – ஹார்ஸ் கிராம்
கோதுமை – Wheat – வீட்
கோதுமை ரவை – Cracked Wheat
சோளம் – Corn
சோளப்பொறி – Popcorn
எள்ளு – Sesame seeds / Gingelly seeds
நெல் – Paddy – பாடி
அரிசி – Rice – ரய்ஸ்
அவல் – Rice flakes
பச்சை அரிசி – Raw Rice
புளுங்கல் அரிசி – Par boiled rice
கடலை மா – Gram Flour
மக்காச்சோளம் – Maize – மெய்ஸ்
வாற்கோதுமை – Barley – பார்லி
பச்சை பட்டாணி – Green peas
சேமியா – Vermicelli
சவ்வரிசி – Sago
ரவை – Semolina
கொண்டை/கொண்டல் கடலை – Chickpeas/Channa
கடுகு – Mustard – முஸ்டார்ட்
சீரகம் – Cumin – குமின்
வெந்தயம் – Fenugreek
சோம்பு,பெருஞ்சீரகம் – Anise seeds
பெருங்காயம் – Asafoetida – அசஃபோய்டைடா
மஞ்சள் – Turmeric – டர்மரிக்
ஓமம் – Ajwain / Ajowan
தனியா – Coriander – கோரியண்டர்
கொத்தமல்லி தழை – Coriander Leaf -கோரியண்டர் லீப்
கறிவேப்பிலை – Curry Leaves
கஸ்தூரி – Musk – மஸ்க்
குங்குமப்பூ – Saffron – சஃப்ரான்
பன்னீர் – Rose Water – ரோஸ் வாட்டர்
கற்பூரம் – Camphor – கேம்ஃபர்
மருதாணி – Henna – ஹென்னா
துளசி – Tulsi
எலுமிச்சை துளசி – Basil
எண்ணெய் – Oil – ஆயில்
கடலை எண்ணெய் – Gram Oil – கிராம் ஆயில்
தேங்காய் எண்ணெய் – Cocoanut Oil – கோக்கநட் ஆயில்
நல்லெண்ணெய் – Gingili Oil/Sesame oil – ஜின்ஜிலி ஆயில்
வேப்ப எண்ணெய் – Neem Oil – நீம் ஆயில்
பாமாயில் – Palm Oil
ஆலிவ் ஆயில் – Olive Oil
பால் – Milk – மில்க்
பால்கட்டி – Cheese – ச்சீஸ்
நெய் – Ghee – கீ
வெண்ணெய் – Butter – பட்டர்
தயிர் – Curd/Yoghurt – க்கார்ட்
மோர் – Butter Milk – பட்டர் மில்க்
கீரை – Spinach – ஸ்பீனச்
அவரை – Beans – பீன்ஸ்
கர்பூரவள்ளி – Oregano
நார்த்தங்காய் – Citron – சிட்ரான்
திருநீர்பச்சை – Ocimum-basilicum
சீத்தாப்பழம் – Custard-apple
மாதுளை – Pomegranate
பரங்கிக்காய்/பூசனிக்காய் – Pumpkin
கருங்காலி மரம் – Cutch-tree
அதிமதுரம்-Liquorice
அருகம்புல் – Bermuda Grass
வல்லாரை கீரை – Pennywort (Centella asiatica)
புதினா இலை – Mint leaves
வெற்றிலை – Betel leaves
நொச்சி இலை – Vitexnegundo (Chaste Tree)
அத்தி – Fig
கீழாநெல்லி – Phyllanthus nururi
தாழை மரம் – Pandanus Odoratissimus,Fragrant Screwpine
தூதுவளை – Purple-fruited pea eggplant
துத்திக்கீரை – Abutilon indicum
பிரமத்தண்டு – Argemone mexicana Linn,(Ghamoya) Papaveraceae
கோவைக்காய் – Coccinia grandis
முடக்கத்தான் கீரை – Cardiospermum halicacabum
குப்பைமேனி – Acalypha indica; linn; Euphor biaceae
நத்தைச்சூரி – Rubiaceae,Spermacoce hispida; Linn;
சோற்றுக்கற்றாழை – Aloe Vera
நாவல் பழம் – Naval fruit (Syzygium jambolana)
பேய் மிரட்டி செடி – Anisomeles malabarica, R.br, Lamiaceae
தேள்கொடுக்கு செடி – Heliotropium
நிலக்குமிழஞ் செடி – Gmelina Asiatica
நெல்லிக்காய் – Amla,Indian Gooseberries
சதகுப்பை (சோயிக்கீரை,மதுரிகை) – Peucedanum grande; Umbelliferae
சிறு குறிஞ்சான் – Gymnema Sylvestre; R.Br.Anclepiadaceqe
அரிவாள்மனை பூண்டு – Sida caprinifolia
அகத்திக்கீரை – Sesbania grandiflora
செண்பகப் பூ – Sonchafa (champa)
சுண்டைக்காய் – Solanum torvum(Turkey Berry)
செம்பருத்தி – Hibiscus(Shoe Flower)
கரும்பு – Sugar cane
நீர்முள்ளி – Long leaved Barleria (Hygrophila auriculata)
அன்னாசிப் பூ – Star Anise
பூவரசு – Portia tree (Thespesia populnea)
ஊசிப்பாலை – Oxystelma Secamone
அமுக்கரா சூரணம்,அசுவகந்தி – Indian winter cherry
கத்தரிக்காய் – Egg plant / Aubergine / Brinjal
கொய்யாப் பழம் – Guava
மரவள்ளிக் கிழங்கு – Tapioca
சர்க்கரை வள்ளி கிழங்கு/சீனி கிழங்கு – Sweet Potato
சேனைக்கிழங்கு/கருணைக்கிழங்கு – Yam
விளாம் பழம் – Wood apple
முள்ளங்கி – Radish / parsnip
புடலங்காய் – Snake gourd
பாகற்காய் – Bitter gourd
வெண்டைக்காய் – Ladies Finger/ Okra
வேர்கடலை/நிலக்கடலை – Peanut
வாழைக்காய் – Ash Plantain
வாழைப்பழம் – Banana
ஊறுகாய் – Pickle
உருளைக் கிழங்கு – Potato
தேங்காய் – Coconut
இளந்தேங்காய் – Tender Coconut
இளநீர் – Tender Coconut water
பதநீர்/பயினி – Neera /Palmyra juice
கள்ளு – Palm wine/Palm Toddy
சுண்ணாம்பு – Lime
ஆப்பச் சோடா – Baking Soda
தீப்பெட்டி – Match Box
ஊதுபத்தி/ஊதுவர்த்தி – Incence Stick

'குரூப் - 4' தேர்வில் 'ஸ்மார்ட் வாட்ச்' அணிய தடை


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., இன்று நடத்தும், குரூப் - 4 தேர்வில், 'ஸ்மார்ட் வாட்ச்' அணிய தடை விதிக்கப்பட்டு உள்ளது. அரசு துறையில், 5,451 காலியிடங்களுக்கு, குரூப் - 4 தேர்வு, இன்று நடத்தப்படுகிறது.

தமிழகம் முழுவதும், 1,500க்கும் மேற்பட்ட மையங்களில், 15 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். காலை, 10:00 மணி முதல், பிற்பகல், 1:00 மணி வரை நடக்கும் தேர்வுக்கு, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

அதன் விபரம்:
● மாணவர்களை தவிர, அவர்களின் உறவினர், பெற்றோர் என, வேறு யாருக்கும் தேர்வு வளாகத்திற்குள் அனுமதி இல்லை
● மொபைல் போன், கணினி சாதனங்கள், 'கால்குலேட்டர், ஸ்மார்ட் நோட் புக்ஸ், ஸ்மார்ட் வாட்ச்' மற்றும் மோதிரம், கைப்பை உள்ளிட்ட பொருட்கள், தேர்வறையில் அனுமதிக்கப்படாது. இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புக்களான அரையாண்டுத் தேர்வுத் தேதி அறிவிப்பு

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புக்களான அரையாண்டுத் தேர்வுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 9 முதல் 23ம் தேதி வரை நடைபெறும். 12ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7 முதல் 23ம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு நடைபெறும்.

TNPTF North news dinamani

பாஸ்வேர்டு வைக்கும்போது செய்யக்கூடாத 7 விஷயங்கள்!



பாஸ்வேர்டு.. மொபைல், கணினி, மின்னஞ்சல், ஷாப்பிங் என நமது ஆல் இன் ஆல் டிஜிட்டல் உலகத்தின் காவலன். நமது இணையதள கணக்குகளை பாதுகாப்பதில் முக்கியப்பங்கு வகிப்பவை இவைதான். ஆனாலும் நாம் பாஸ்வேர்டுகள் வைக்கும்போது, கவனக்குறைவாக சில தவறுகளை செய்து விடுகிறோம். சில விஷயங்களை மட்டும் கவனத்தில் வைத்திருந்தாலே போதும். பாஸ்வேர்டுகளை பாதுகாப்பாக உருவாக்கலாம்.

1. எளிதான பாஸ்வேர்டுகள் வேண்டவே வேண்டாம்!

மிகவும் சிறிய அல்லது எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளக் கூடியது போன்ற கடவுச்சொற்கள் உங்களுக்கு எப்படி கையாள எளிதாக இருக்கிறதோ, அதைப் போலவே ஹேக்கர்களுக்கும் கண்டுபிடிக்க எளிதாக இருக்கும். எனவே 12345, Qwerty போன்ற எளிதில் யூகிக்கக்கூடிய பாஸ்வேர்டுகள் வேண்டவே வேண்டாம்.

உலகில் அதிகம் பேர் வைக்கும் மோசமான டாப் 10 பாஸ்வேர்டுகள் இவைதான்.

1.  123456   
2.  password   
3.  12345678   
4.  qwerty   
5.  12345   
6.  123456789   
7.  football   
8.  1234   
9.  1234567   
10. baseball

2. ஒரு பாஸ்வேர்டு.. ஒரு கணக்கு:

ஒரே ஒரு கடினமான பாஸ்வேர்டை மட்டும் வைத்துக் கொண்டு, அதையே அனைத்து கணக்குகளுக்கும் பயன்படுத்தக்கூடாது. உங்களின் பாதுகாப்பு குறைந்த ஏதாவது ஒரு கணக்கு ஹேக் செய்யப்பட்டால் கூட, மற்ற அனைத்துக்கும் ஆபத்து. முக்கியமான கணக்குகளுக்கு நீண்ட நாட்கள் ஒரே பாஸ்வேர்டு வைத்திருப்பதும் பாதுகாப்பானது கிடையாது.

3. பாஸ்வேர்டு மீட்டர் முக்கியம்:

ஒருசில சேவைகளில் நீங்கள் பாஸ்வேர்டு வைக்கும்போதே, அது எந்தளவுக்கு பாதுகாப்பானது என்பதைக் காட்ட அளவீடுகள் இருக்கும். உங்கள் பாஸ்வேர்டு எந்தளவுக்கு வலிமையாக இருக்கிறது என்பதனை அறிய அந்த அளவீடுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

4. பப்ளிக் வைஃபை வேண்டாம்:

உங்களது வங்கிக் கணக்குகள், ஷாப்பிங் கணக்குகள், மின்னஞ்சல் போன்ற முக்கியமான கணக்குகளின் பாஸ்வேர்டுகளை, பொது இடங்களில் இருக்கும் வைஃபைகளில் கொடுத்து லாக்-இன் செய்யாதீர்கள். எளிதாக திருடப்பட அதிக வாய்ப்பிருக்கிறது. அதேபோல அடுத்தவர்களின் மொபைல், கணினி போன்றவற்றில் லாக்-இன் செய்யும் போதும், பாஸ்வேர்டை சேமித்து வைக்க வேண்டாம்.

5. நீளம் மற்றும் தன்மை:

உங்களது பாஸ்வேர்டு பொதுவாக 10 கேரக்டர்களுக்கு மேல் செல்லும்போதுதான் வலிமையாக அமையும். எனவே சிறிய பாஸ்வேர்டுகளை தவிர்த்து விடுங்கள். அதேபோல மொபைல் எண்கள், பிறந்த தேதி போன்றவை உங்கள் பாஸ்வேர்டில் இல்லாமல் இருப்பது நலம். இவற்றை எளிதாக உங்களுக்கு தெரிந்தவர்கள் கண்டுபிடித்துவிட முடியும் என்பதால், இதனைத் தவிர்க்கலாம்.

6. எண் விளையாட்டு:

எண்கள், குறியீடுகள், எழுத்துகள் என அனைத்தையும் கலந்து உருவாக்கும் பாஸ்வேர்டுகளே, சிறந்ததாக இருக்க முடியும். இது இல்லாமல் எந்தவொரு பாஸ்வேர்டையும் அமைக்காதீர்கள். எனவே உங்கள் பாஸ்வேர்டின் இடையே குறியீடுகளை பயன்படுத்தலாம். ஏதேனும் ஒரு லாஜிக்குடன் (உங்கள் கல்லூரி எண், அலுவலக ரோல் நம்பர், திருமண நாள், பின்கோடு) என ஏதேனும் ஒரு லாஜிக்குடன் கூடிய, எண்களை இணைத்துக் கொள்ளலாம். குறியீடுகளை பயன்படுத்தும்போது, @, # போன்ற எளிதான குறியீடுகளை பயன்படுத்தாமல், மற்றவற்றை பயன்படுத்தலாம். எல்லா பாஸ்வேர்டுகளிலும் ஏதேனும் ஒரு குறியீட்டை, வேறுவேறு இடங்களில் ரிப்பீட் செய்வதன் மூலமாக, பாஸ்வேர்டு எளிதில் மறக்காது.

7. கடினமான லாஜிக்:

முதல் எழுத்து Capital letters, பாஸ்வேர்டு இறுதியில் பிறந்த தேதி, password என்பதை Pa$$w0rd, கீபோர்டில் அருகருகே இருக்கும் எழுத்துகள் என ஈஸியான லாஜிக்குகளும் உங்கள் பாஸ்வேர்டில் இருக்க வேண்டாம்.

- ஞா.சுதாகர்.

Friday, November 04, 2016

TNPTF tirupur north arpattam

திருப்பூர் ஆர்ப்பாட்ட செய்தி

நாளை குரூப்-4 தேர்வு : 15 லட்சம் பேர் பங்கேற்பு


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் (டிஎன்பிஎஸ்சி) தொகுதி 4ல் (குரூப்-4) அடங்கிய 5 ஆயிரத்து 451 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நாளை மாநிலம் முழுவதும் உள்ள 301 தாலுகா மையங்களில் நடக்கிறது. இத்தேர்விற்காக விண்ணப்பித்துள்ள 15 லட்சத்திற்கும் கூடுதலான தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவு சீட்டு தேர்வாணைய இணையதளமான www.tnpscல் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள ஏதுவாக வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தேர்வர்கள் தங்களின் விண்ணப்ப எண், பயனாளர் குறியீடு மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை இணையதள பக்கத்தில் உள்ளீடு செய்து, பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் அதற்கான காரணத்தையும் அதே இணையதள பக்கத்தில் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது கணினியில் பதிவிறக்கம் செய்யும் முன் பாப் அப் ப்ளாக் நிலையை உபயோகப்படுத்தும்பட்சத்தில் அந்நிலையை மாற்றி தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பதாரர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை கண்டிப்பாக உடன் எடுத்துவரவேண்டும். தேர்வுக்கூடத்திற்குள் நுழையும் போதும், அறை கண்காணிப்பாளர் கேட்கும்போதும் காண்பிக்கவேண்டும். தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுடன் வரும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே தேர்வுக்கூட வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். உடன் வரும் பெற்றோர் உள்ளிட்ட மற்றவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது. அகவி, செல்லிடத் தொலைபேசி, கால்குலேட்டர் உள்ளிட்ட எந்தவித மின்னணு சாதனங்களையும் விண்ணப்பதாரர் தேர்வுக்கூடத்திற்குள் எடுத்து வரவோ, வைத்திருக்கவோ கண்டிப்பாக அனுமதி கிடையாது. மீறி தேர்வுக்கூடத்தினுள் எந்த தேர்வரேனும் வைத்திருப்பது தெரியவரும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். தேர்வு மையத்தை மாற்றவோ, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் அச்சிடப்பட்டுள்ள விருப்பப் பாடத்தை மாற்றி எழுதவோ கண்டிப்பாக அனுமதியில்லை.

விண்ணப்பதாரர்களுக்கான தேர்வாணைய அறிவுரைகளை தேர்விற்கு வரும் முன் கவனமாகப் படித்துவிட்டு வரும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வாணைய அறிவுரைகளை மீறும் விண்ணப்பதாரர்கள் மீது தேர்வாணைய அறிவுரைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறார்கள் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாடு அலுவலர் ஷோபனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

பெஸ்ட்' திட்டம் பள்ளிகளில் அறிமுகம்


அரசு பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற, 'பெஸ்ட்' என்ற பெயரில், புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, பொதுத்தேர்வுகளில், அரசு பள்ளிகள், மாநில அளவில், 'ரேங்க்' பெறவில்லை. அதனால், சென்னை அரசு பள்ளி மாணவர்களையாவது, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக, சிறப்பு திட்டம் கொண்டு வர, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.

அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'போர்டு எக்ஸாம் ஸ்கோர் டிப்ஸ் - பெஸ்ட்' என்ற பெயரில், புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில், சராசரி மாணவர்கள், சராசரிக்கு மேற்பட்டவர், 70 சதவீத மதிப்பெண் பெறுவோர் மற்றும் மாவட்ட அளவில், 'ரேங்க்' பெறும் மாணவர்கள் என, பிரிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு வகை மாணவர்களும், எந்தெந்த மதிப்பெண்ணில், எத்தனை வினாக்களை, எந்த பாடங்களில் படிக்கலாம் என, கூறப்பட்டு உள்ளது. 'இந்த திட்டத்தை முறையாக அமல்படுத்தினால், தனியார் பள்ளிகளை விட, அரசு பள்ளி மாணவர்கள், அதிக மதிப்பெண் பெறலாம்' என, ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

பிளஸ் 2, 10ம் வகுப்பு: 14 முதல் முன் அரையாண்டு


'பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும், 14 முதல், முன் அரையாண்டு தேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வுக்கு இடையே, பருவத் தேர்வு நடத்தப்படும்.

அரசு பள்ளிகளில், இந்த ஆண்டு முதல், பருவத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, முன் அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான வினாத்தாளில், அனைத்து பாடங்களிலிருந்தும் கேள்விகள் இடம் பெறும். அரசு பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வை சமாளிக்கும் வண்ணம், இந்த தேர்வு நடத்தப்படுகிறது. 'இந்த ஆண்டுக்கான முன் அரையாண்டு தேர்வு, வரும், 14ல் துவங்கி, 25 வரை நடத்தப்படும்' என, பள்ளிகளுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.