இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, August 23, 2016

பள்ளிக்கல்வியை முழுவதுமாக தனியார்மயமாக்க முயற்சி: ஜி.ஆர் குற்றச்சாட்டு

பள்ளிக்கல்வியை முழுவதுமாக தனியார்மயமாக்க முயற்சி: தமிழக அரசு மீது ஜி.ரா. குற்றச்சாட்டு
90 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்கல்வி தனியார்மயமாகிவிட்ட சூழலில், பள்ளிக் கல்வியையும் முழுவதுமாக தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் ஆட்சியாளர்கள் இறங்கிவிட்டனர் எனக் குற்றம்சாட்டினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்
செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.

இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் ‘அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் ஞாயிற்றுக்கிழமையன்று புதுக்கோட்டையில் கருத்துரங்கம் நடைபெற்றது.

இதில் உரையாற்றிய அவர்,


அரசுப்பள்ளிகளைப் பாதுகாக்கும் பிரதான கடமை அரசுக்கே உண்டு. ஆனால், அரசு தன்னுடைய பணியைச் செய்யாததால் ஆண்டுதோறும் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துகொண்டே வருகிறது. கடந்த 9-ம் தேதி நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறைக்கான மானியக் கோரிக்கையில் ஒரு அரசுப்பள்ளிகூட மூடப்படவில்லை என்கிறார் அமைச்சர். தர்மபுரி மாவட்டம் பாப்பம்பாடி கிராமத்தில் உள்ள அரசுத்தொடக்கப்பள்ளி கடந்த ஆண்டு ஐந்தாம் வகுப்பில் மட்டும் 4 பேர் படித்தனர். இந்த ஆண்டு அந்த 4 பேரும் உயர்நிலைப்பள்ளிக்குச் சென்றுவிட்டதால் அந்தப் பள்ளிக்கூடம் பூட்டுப்போட்டு மூடப்பட்டுக் கிடக்கிறது. இதற்கு அமைச்சரின் பதில் என்ன? மூடப்பட்டது என்பதற்குப் பதிலாக இன்னொரு பள்ளியோரு இணைக்கப்பட்டுள்ளது என்ற வார்த்தை ஜாலத்தால் ஆட்சியாளர்கள் உண்மையை மறைக்கின்றனர்.

2011-12-ம் ஆண்டுகளில் 25.55 லட்சமாக இருந்த தனியார் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, 2015-16-ம் ஆண்டுகளில் 38.05 லட்சமாக அதிகரித்துள்ளதாக அரசு புள்ளி விபரம் சொல்கிறது. ஆனால், அரசுப்பள்ளி குறித்த விபரம் ஏதும் தரப்படவில்லை. தென் மாவட்டங்களில் இயங்கி வந்த 200-க்கும் மேற்பட்ட கள்ளர் பள்ளிகளில் பல தற்பொரு ஒரு இலக்கத்திலேயே மாணவர்கள் இருக்கின்றனர். 2007-ம் ஆண்டு 2.44 லட்சமாக இருந்த ஆதிதிராவிடர் பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை 1.54 லட்சமாக சுருங்கிவிட்டது. தலைநகர் சென்னையில் 54 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

90 சதவிகிதம் உயர்கல்வி தனியார்மயமாகிவிட்ட சூழலில் பள்ளிக்கல்வியையும் முழுவதும் தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் ஆட்சியாளர்கள் இறங்கிவிட்டனர். முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கல்விநிறுவனங்களை நடத்துவதே இதற்குக் காரணம்.

இந்தச் சூழலில்தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பல அரசுப்பள்ளிகள் செயல்படுகின்றன. தனியார் பள்ளிகளை விஞ்சும் அளவிற்கு அனைத்து வசதிகளுடன் அழகான இயற்கை சூழலோடு மாங்குடி அரசு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. அந்த ஊரிலிருந்து ஒரு குழந்தைகூட தனியார் பள்ளிகளுக்குச் செல்லவில்லை. வெறும் 11 மாணவர்கள் மட்டுமே இருந்த வல்லம்பக்காடு அரசுத் தொடக்கப்பள்ளியில் தற்பொழுது 89 மாணவர்கள் படிக்கின்றனர். 72 மாணவர்களாக இருந்த புதுக்கோட்டை காந்தி நகர் உயர்நிலைப்பள்ளில் தற்பொழுது 144 பேர் படிக்கின்றனர். இதில் 142 பேர் தலித் மாணவர்களாக உள்ள இப்பள்ளி கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்று வருகிறது. 3 மாணவர்கள் மட்டுமே இருந்த பெரியசெங்கீரை தொடக்கப்பள்ளியில் தற்பொழுது 54 பேர் படிக்கின்றனர். 7 மாணவர்கள் மட்டுமே இருந்த புதுக்கோட்டை தர்மாஜ்பிள்ளை தொடக்கப்பள்ளியில் வாலிபர் சங்கத்தினரின் தீவிர முயற்சியால் தற்பொழுது 59 பேர் படிக்கின்றனர். உடையாளிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் இருந்து தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தேர்வுக்கு கடந்த ஆண்டு மட்டும் 25 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர்.

இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் சிறப்பாகச் செயல்பட்ட 22 பள்ளிகளை தேர்வு செய்து இங்கு விருது வழங்கப்படுகிறது. இத்தகைய சாதனைக்கு பள்ளி ஆசிரியர்களின் தீவிரமான உழைப்பும், ஊர்பொதுமக்களின் ஒத்துழைப்புமே காரணம். சிறப்பாக செயல்பட்ட சில பள்ளிகள் விடுபட்டு இருக்கலாம். இத்தகைய சாதனைகள் அடுத்தடுத்த பள்ளிகளுக்கும் தொடர வேண்டும் என்றார்.

Directorate of Government Examinations - HSE September 2016 - Examination Time Table

Middle schools Upgraded as high schools name list

விதி 110ன் கீழ் முதல்வர் அறிவிப்பு: கல்வித்துறை

Click below

https://app.box.com/s/j4hlilibykouzgc5lp1r4sr827wgpuqy

Monday, August 22, 2016

பி.எட்., கவுன்சிலிங்கில் இன்ஜி., பட்டதாரிகளுக்கு சலுகை


பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நேற்று துவங்கியது. இதில், இன்ஜி., மாணவர்களுக்கு, உயிரியல் பாடத்தில் பி.எட்., படிக்க அனுமதி வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசுஉதவி பெறும் பி.எட்., கல்லுாரி களில் உள்ள, 1,777 இடங்களுக்கு, சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரியில் நேற்று, பி.எட்., கவுன்சிலிங் துவங்கியது.

முதல் நாளில், மாற்றுத்திறனாளிகளுக்கான சேர்க்கை நடந்தது. மற்ற பாடங்களுக்கு, இன்று துவங்கி, 30ம் தேதி முடிகிறது. இந்த ஆண்டு, பி.இ., - பி.டெக்., படித்த இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு, 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் பாடங்களில் ஏதாவது ஒன்றை இன்ஜினியரிங்கில் பிரதான பாடமாக படித்திருக்க வேண்டும்.

இந்த ஆண்டு விலங்கியல் மற்றும் தாவரவியல் பிரிவுகளில், 100க்கும் குறைவானவர்களே விண்ணப்பித்துள்ளதால், இன்ஜி., பட்டதாரிகளுக்கும் உயிரியல் பி.எட்., படிப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

70 வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் விதமாக ஆகஸ்ட் 23 செவ்வாய்க்கிழமை அன்று அனைத்து பள்ளியிலும் காலை 11 மணிக்கு தேசியகீதம் பாட வேண்டும்

Sunday, August 21, 2016

பிளஸ்-2 பாடத்திட்டத்தை மாற்றாவிட்டால் ‘நீட்’ தேர்வில் வெற்றிபெறுவது சிரமம் கல்வியாளர்கள் ஆதங்கம்


சென்னை, பிளஸ்-2 பாடத்திட்டத்தை மாற்றாவிட்டால் ‘நீட்’ தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறுவது சிரமம். இதற்காக சிறப்பு வகுப்புகள் நடத்துவதால் எந்தவித மாற்றமும் வராது என்று கல்வியாளர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.மருத்துவ நுழைவுத்தேர்வுசமீபத்தில் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு, ‘நீட்’ எனப்படும் அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத்தேர்வு ஆகியவை நடத்தப்பட்டன.

இந்ததேர்வுகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களில் சி.பி.எஸ்.இ. படித்தவர்கள் ஓரளவு பங்கேற்றனர். மாநில கல்வி திட்டத்தில் படித்தவர்களில் வெகுசிலர் மட்டுமே கலந்துகொண்டனர்.ஆனால் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அந்த மாநில அரசு பின்பற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டங்களில் படித்த மாணவ-மாணவிகள் அதிக எண்ணிக்கையில் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழக மாநில கல்வி திட்டத்தில் படித்த மாணவர்களும் ‘நீட்’ தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு என்ன செய்யவேண்டும்? என்று கேட்டதற்கு தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில தலைவர் சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது:-பாடத்திட்டத்தை மாற்றவேண்டும்தமிழகத்தில் இப்போது நடைமுறையில் உள்ள பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டம் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு தயாரித்தது.

இன்றைய சூழ்நிலை, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப உடனடியாக புதிய பாடத்திட்டத்தை தயாரிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பிளஸ்-1 பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதே இல்லை. ஆனால் ‘நீட்’ தேர்வில் பிளஸ்-1 வகுப்பில் இருந்துதான் அதிக கேள்விகள் கேட்கப்படுகின்றன.தமிழ்நாட்டில் பெயர் அளவில் தான் பிளஸ்-1 வகுப்புகள் நடத்தப்பட்டு, தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. எனவே பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டத்தை உடனே மாற்றவேண்டும். பாடத்திட்டத்தை மாற்றாதவரை ‘நீட்’ தேர்விலும், ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்விலும் தமிழகத்தை சேர்ந்த மாநில கல்விமுறையில் படித்த மாணவ-மாணவிகள் வெற்றிபெறுவது சிரமம்.

சிறப்பு வகுப்புகள்பள்ளிக்கல்வி இயக்குனரகம் ‘நீட்’ தேர்வுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தினாலும் வெற்றிபெறுவது சிரமம். சிறப்பு வகுப்புகளால் எந்த மாற்றமும் வராது.இவ்வாறு சாமி சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதே கருத்தை தமிழக கல்வியாளர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு இன்று கவுன்சலிங்

தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சலிங் இன்று நடக்கிறது. இந்நிலையில் பணி நிரவல் என்ற பெயரில் கடந்த மாதம் 27ம் தேதி வரை முக்கிய பணியிடங்களை அதிகாரிகள் நிரப்பிவிட்டதால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில், இன்று தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் வழங்கும் கவுன்சலிங்கை தொடக்க கல்வித்துறை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது

பி.எட்., கவுன்சிலிங் இன்று துவக்கம்


பி.எட்., படிப்புக்கான கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பிலுள்ள, ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 1,777 இடங்களுக்கு, கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

இந்த ஆண்டு, 3,736 பேர் பி.எட்., படிக்க விண்ணப்பித்துள்ளனர். சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரி நடத்தும் இந்த கவுன்சிலிங், இன்று காலை, 9:00 மணிக்கு துவங்குகிறது. மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான இட ஒதுக்கீட்டில், மாணவர் சேர்க்கை நடக்கிறது.நாளை, தமிழ் மற்றும் ஆங்கிலம்; நாளை மறுநாள், வரலாறு பாடம் மற்றும் பி.இ., - பி.டெக்., முடித்தவர்களுக்கான, 20 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங் நடக்கிறது;

25ம் தேதி அரசு விடுமுறை. பின், 26ம் தேதி தாவரவியல் மற்றும் விலங்கியல்; 27ல், இயற்பியல், மனை அறிவியல், பொருளியல், வணிகவியல்; 28ல் வேதியியல், புவியியல், கணினி அறிவியல்; 30ல் கணித பாடங்களுக்கு கவுன்சிலிங் நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது

தொடக்கக்கல்வி சுற்றறிக்கை எண் 20- பணிவிடுவிப்பு சார்பு--ஈராசிரியர் பள்ளிகளில் மாறுதல் பெற்றவர்களை பதிலி ஆசிரியர் வந்த பின்தான் விடுவிக்கவேண்டும் இயக்குநர் செயல்முறைகள்- நாள்:21/8/16

Saturday, August 20, 2016

கற்பித்தல் தவிர வேறு பணி கூடாது : ஆசிரியர்களுக்கு தடை


'பாடம் நடத்துவதை தவிர வேறு பணிகளில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கற்பித்தல் பணி தவிர, நிர்வாகம் சார்ந்த பல பணிகளிலும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் வாக்காளர் கணக்கெடுப்பு, ஜாதி வாரி கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துதல், மாணவர்களுக்கு அரசின் இலவசங்களைப் பெற்று வழங்குதல் போன்ற பணிகளையும் செய்கின்றனர்.

'தேர்தல் சார்ந்த பணிகள், மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணிகள் தவிர, கற்பித்தல் அல்லாத பணிகளில் ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது' என, கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 'இதை, பள்ளிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும்' என, மனிதவள மேம்பாட்டு துறை இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா, பார்லிமென்டில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

Friday, August 19, 2016

மனஉளைச்சலில் ஒரு லட்சம் ஆசிரியர் பட்டதாரிகள்: டி.இ.டி தேர்வு நடக்காத பின்னணி என்ன


தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடக்காதததால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பட்டதாரிகள் மனஉளைச்சலில் உள்ளனர்.

தமிழகத்தில் 2011ல் தகுதித்தேர்வு அடிப்படையில், ஆசிரியர் நியமனம் நடக்கும் என உத்தரவிடப்பட்டது. 2012 மற்றும் 2013ல் டி.இ.டி., தேர்வுகள் நடத்தப்பட்டன. 2013 தேர்வில் தேர்ச்சி எண்ணிக்கை அதிகம் இருந்ததால், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அமல்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.

மேலும் '90 சதவீதம் மதிப்பெண் என்பதில் இருந்து ஐந்து சதவீதம் மதிப்பெண் சலுகை அளித்து, 85 சதவீதம் (அதாவது 82 மதிப்பெண்) பெற்றாலே தேர்ச்சி,' எனவும் அரசு அறிவித்தது. இதன் அடிப்படையில் 40 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். பலர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்றனர். ஆனால் இதற்கும் எதிரான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

சலுகை மதிப்பெண் அறிவிப்பு அரசின் கொள்கை முடிவு. ஆனால் அதற்கு எதிராக தாக்கலான வழக்குகளில் கூட கவனம் செலுத்தி விரைவில் தீர்வுகாண, கல்வி அதிகாரிகள் நவடிக்கை எடுக்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் தான் டி.இ.டி., தேர்வையே மூன்று ஆண்டுகளாக நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

அச்சத்தில் 3 ஆயிரம் ஆசிரியர்: 23.8.2010க்கு பின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு அரசு, உதவிபெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்ற 3100 ஆசிரியர்களுக்கு வரும் நவம்பருக்குள் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்

என நிபந்தனை உள்ளது. ஆனால் டி.இ.டி., தேர்வு நடத்தாததால் அவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

'அரசு சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு டி.இ.டி., கட்டாயமில்லை,' என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியும் இதுவரை அரசாணை பிறப்பிக்காததாலும் குழப்பம் நீடிக்கிறது.

சிக்கலுக்கு தீர்வு என்ன: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் முருகன் கூறியதாவது:

சலுகை மதிப்பெண் என்பது அரசின் கொள்கை முடிவு. இதற்கு எதிரான வழக்குகளை கையாள்வதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டாததால் தான் தேர்வு நடக்கவில்லை. ஆசிரியருக்கான 'வெயிட்டேஜ்' முறையை ரத்து செய்ய வேண்டும்.

23.8.2010க்கு பின் பணியில் சேர்ந்த 3100 பேருக்கும் டி.இ.டி., தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும். நீதிமன்ற அறிவுறுத்தல்படி சிறுபான்மையினர் பள்ளிகளுக்கான அரசாணை பிறப்பிக்க வேண்டும், என்றார்.

32 ஆயிரம் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி : ரூ.60 லட்சம் ஒதுக்கீடு


தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஆயிரம் மாணவிகள் வீதம், 32 ஆயிரம் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சியளிக்க 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி கூறியிருப்பதாவது:பெண் குழந்தைகளின் தற்காப்பிற்கு கராத்தே போன்ற கலைகள் அவசியமாகிறது. அதனால் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அரசுப்பள்ளிகளில் 6, 7, 8ம் வகுப்புகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வரும் செப்டம்பர் முதல் ஜனவரி முடிய பயிற்சி அளிக்கப்படும்.

இதற்காக மாவட்டத்திற்கு 50 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு தலா ஆயிரம் மாணவிகள் வீதம் 32 மாவட்டங்களிலும் 32 ஆயிரம் மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இதற்கென பெண் பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பள்ளி நாட்களில் தினமும் காலையில் ஒன்றரை மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

2016 - DISTRICT TRANSFER COUNSELLING - BT / SGT / PET SENIORITY LIST

Click below

http://www.deetn.com/

Wednesday, August 17, 2016

தேசிய திறனறி தேர்வு: இன்று முதல் விண்ணப்பம்


பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை உதவி தொகை வழங்கும், 'தேசிய திறனறி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., சார்பில், தேசிய திறனறி தேர்வு, இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது; மாநில தேர்வில் தேர்ச்சி பெறுவோர், தேசிய தேர்வில் பங்கேற்கலாம். தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் போது, மாதம், 1,250 ரூபாயும், பட்டப்படிப்பு படிக்கும் போது மாதம், 2,000 ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படும்.

'தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில் நவ., 6ல், இந்த தேர்வு நடக்க உள்ளது; அதற்கான விண்ணப்பங்களை, இன்று முதல் சமர்ப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார். 'விண்ணப்பங்களை, www.tngdc.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, தேர்வுக் கட்டணம், 50 ரூபாயுடன், ஆக., 31க்குள் தலைமை ஆசிரியர்களிடம் வழங்க வேண்டும்' எனவும் தெரிவித்துள்ளார்.

பி.எட்., 'கட் - ஆப்' வெளியீடு


பி.எட்., படிப்பில் சேர்வதற்கான, 'கட் - ஆப்' மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்திலுள்ள, ஏழு அரசு பி.எட்., கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 1,777 இடங்களுக்கு, தமிழக அரசு சார்பில், சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரியில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

கவுன்சிலிங்கில் பங்கேற்க, 3,736 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான, கட் - ஆப் மதிப்பெண் பட்டியல், லேடி வெலிங்டன் கல்லுாரி இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. வரும், 22ம் தேதி முதல், கவுன்சிலிங் நடக்கிறது. முதல் நாளில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர் மற்றும் பழங்குடியினர் இடஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங் நடக்கும். 23 முதல், 30ம் தேதி வரை, பல்வேறு பாடப் பிரிவுகளுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.

இதற்கான பட்டியலை, http://www.ladywillingdoniase.com என்ற, லேடி வெலிங்டன் கல்லுாரி இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

செப்.,1 ல் வாக்காளர் பெயர் சேர்ப்பு


செப்.,1 முதல் 30 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட பணிகள் நடக்க உள்ளன. செப்.,10 மற்றும் 24ல் வாக்காளர் பட்டியல் கிராம சபை கூட்டங்களில் வைக்கப்பட்டு விவாதிக்கப்படும். இதே போல், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்ய ஓட்டுச்சாவடிகள் அளவில் செப்.,11, 25ல் சிறப்பு முகாம் நடக்கிறது. நவ., 11ல் புதிய பட்டியல் சரிபார்க்கப்பட்டு ஜன.,5ல் இறுதி சுருக்க திருத்தப் பட்டியல் வெளியிடப்படும்.

புதிய கல்விக்கொள்கை - பி ரத்தினசபாபதி

Click below

https://app.box.com/s/2k3cqwv3yek8w7sljhiyn7uwj1hxoxys

Tuesday, August 16, 2016

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் பணிக்கான விண்ணப்பங்கள் விநியோகம்


தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. அவற்றை பூர்த்தி செய்து பிடிஓக்களிடம் சமர்ப்பிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகளில் வழக்கம்போல் அரசு பள்ளி ஆசிரியர்கள் அமர்த்தப்பட உள்ளனர். அவர்கள் தேர்தல் பணியில் பங்கேற்க வசதியாக முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து அந்தந்த பள்ளிகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு உள்ளது. அவற்றை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் பெற்று பூர்த்தி செய்து தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

அவற்றை தலைமையாசிரியர் சரிபார்த்து ஆசிரியர் பெயர், வசிக்கும் இடம் உள்ளிட்ட பிற விவரங்களை இணைத்து அந்தந்த பிடிஓ அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் அனுப்பும் பணி தற்போது தொடங்கியுள்ளது. மேலும் விவரங்களை முதன்மை கல்வி அலுவலக வெப்சைட்டில் பார்க்கலாம்.

உள்ளாட்சி வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் பிரிக்கும் பணி ஆக. 31ம் தேதிக்குள் முடிக்கப்படும்

சட்டமன்ற தேர்தல் வாக்காளர் பட்டியலை, வார்டு வாரியாக பிரிக்கும் பணியை வரும் 31ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் சீதாராமன் தெரிவித்தார். தமிழக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடக்கிறது. இதற்கான ஆயத்தப்பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சம்பத் தலைமை வகித்தார். இதில், மாநில தேர்தல் ஆணையர் சீதாராமன் கலந்து கொண்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் தேர்தல் ஆணையர் சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், தேர்தல் நடத்த தேவையான நிதி, சட்டம்-ஒழுங்கு பிரச்னையின்போது போலீசார் எடுக்க வேண்டிய நடவடிக்கை உள்ளிட்ட 5 முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, வாக்கு எண்ணும் மையங்கள், பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. தேர்தலுக்கு சேலம் மாவட்டத்திற்கு நிதி கோரப்பட்டுள்ளது. சிக்கனமாக செலவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை, கடந்த தேர்தலை காட்டிலும் 10 சதவீதம் வரை உயர்த்திக்கொள்ளலாம். சேலம் மாவட்டத்தில் 4,119 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. குடிநீர், மின்சாரம் மற்றும் மழைநீர் உள்ளே புகாத வகையில் வசதிகள் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சட்டசபை தேர்தலுக்காக கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு, உள்ளாட்சித் தேர்தலுக்கு தகுந்தவாறு, வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலை பிரிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதிக்குள் அப்பணிகள் நிறைவு பெறும். பெண்களுக்கான 50 சதவீத ஒதுக்கீட்டு இடங்கள் குறித்து மாநில அரசு முடிவுசெய்யும். தேர்தல் தேதி குறித்து தற்போது கூற முடியாது. இவ்வாறு தேர்தல் ஆணையர் சீதாராமன் தெரிவித்தார்.

உள்ளாட்சி வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் பிரிக்கும் பணி ஆக. 31ம் தேதிக்குள் முடிக்கப்படும்


சட்டமன்ற தேர்தல் வாக்காளர் பட்டியலை, வார்டு வாரியாக பிரிக்கும் பணியை வரும் 31ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் சீதாராமன் தெரிவித்தார். தமிழக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடக்கிறது.

இதற்கான ஆயத்தப்பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சம்பத் தலைமை வகித்தார். இதில், மாநில தேர்தல் ஆணையர் சீதாராமன் கலந்து கொண்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் தேர்தல் ஆணையர் சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், தேர்தல் நடத்த தேவையான நிதி, சட்டம்-ஒழுங்கு பிரச்னையின்போது போலீசார் எடுக்க வேண்டிய நடவடிக்கை உள்ளிட்ட 5 முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, வாக்கு எண்ணும் மையங்கள், பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. தேர்தலுக்கு சேலம் மாவட்டத்திற்கு நிதி கோரப்பட்டுள்ளது. சிக்கனமாக செலவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை, கடந்த தேர்தலை காட்டிலும் 10 சதவீதம் வரை உயர்த்திக்கொள்ளலாம். சேலம் மாவட்டத்தில் 4,119 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. குடிநீர், மின்சாரம் மற்றும் மழைநீர் உள்ளே புகாத வகையில் வசதிகள் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சட்டசபை தேர்தலுக்காக கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு, உள்ளாட்சித் தேர்தலுக்கு தகுந்தவாறு, வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலை பிரிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதிக்குள் அப்பணிகள் நிறைவு பெறும். பெண்களுக்கான 50 சதவீத ஒதுக்கீட்டு இடங்கள் குறித்து மாநில அரசு முடிவுசெய்யும். தேர்தல் தேதி குறித்து தற்போது கூற முடியாது. இவ்வாறு தேர்தல் ஆணையர் சீதாராமன் தெரிவித்தார்.

ரத்தாகிறது சமூக அறிவியல் பணியிடம் : வரலாறு ஆசிரியர்கள் எதிர்ப்பு-பள்ளிக்கல்வித் துறை


உபரி ஆசிரியர்கள் பெயரில் சமூகஅறிவியல் பணியிடங்களை ரத்து செய்வதற்கு வரலாறு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயிக்க வேண்டும். அதன்படி உபரி ஆசிரியர்களை கணக்கிட்டு பணிநிரவல் செய்ய வேண்டும். இந்த ஆண்டு பெரும்பாலான அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள் உபரியாக இருப்பது கண்டறியப்பட்டு உள்ளன.

இதில் சமூகஅறிவியல் ஆசிரியர் பணியிடங்களை கல்வித்துறை உபரியாக கணக்கிட்டுள்ளது. அவர்கள் ஆக., 27 முதல் 29 வரை நடக்கும் கவுன்சிலிங் மூலம் பணிநிரவல் செய்யப்பட உள்ளனர். இதற்கு வரலாறு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு வரலாறு ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் பழனியப்பன் கூறியதாவது: அரசாணைப்படி முதலில் அறிவியல், தொடர்ந்து கணிதம், சமூகஅறிவியல், ஆங்கிலம், தமிழ் என்ற அடிப்படையில் தான் ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய வேண்டும்.

ஆனால் சமூகஅறிவியல் ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது அரசாணைக்கு எதிரானது. மேலும் 5 பாட வேளைகள் மட்டுமே சமூக அறிவியல் உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக அறிவியல் பாடத்தில் உள்ள பொருளாதாரம் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால் சமூக அறிவியல் ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய கூடாது. இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குனருக்கு மனு அனுப்பியுள்ளோம், என்றார்.