இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, October 12, 2015

வட்டார வளமையங்களுக்கு ஆள்தேடும் கல்வித்துறை: ஆசிரிய பயிற்றுனர்கள் எதிர்ப்பு


அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய காலிப்பணியிடங்களில் பணிபுரிய, பள்ளி ஆசிரியர்களிடம் கல்வித்துறை விருப்பம் கேட்டுள்ளது. இதற்கு ஆசிரிய பயிற்றுனர்கள் எதிரிப்பு தெரிவித்துள்ளனர்.கோயம்புத்துார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்ட வட்டார வளமையங்களில் தமிழ், ஆங்கிலம், அறிவியல் பாடங்களுக்கு, ஆசிரியர் பயிற்றுனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப வேண்டும்.

விருப்பம் உண்டா?: ஆனால் ஏற்கனவே பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை பணி மாறுதல் செய்ய, அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது. இதற்காக 2006 ஜன.,1 க்கு பின் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களிடம், கல்வித்துறை விருப்பம் கேட்டுள்ளது. 'இந்த பணியிடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.முரண்பாடு: ஏற்கனவே, ஆசிரியர் பயிற்றுனர்களாக பணிபுரிவோர், பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்ய போராடி வருகின்றனர்.

இந்நிலையில், கல்வித்துறையின் நடவடிக்கையால் ஆசிரிய பயிற்றுனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டத்தலைவர் ராஜ்குமார் கூறியதாவது: 'வட்டார வளமையங்களில் காலிப்பணியிடங்கள் இல்லை' என, எங்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை. தற்போது காலிப்பணியிடங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கல்வித்துறையின் முரண்பாட்டால் எங்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணிமாறுதல் கிடைக்காமல் போய்விடும், என்றார்.

வங்கிகளின் இணைய சேவைக்கு கட்டணம்


வங்கிகளின் இணைய சேவைக்கும், அக்., 1 முதல், கட்டணம் வசூலிப்பது அமலுக்கு வந்துள்ளது. வங்கிகளுக்கு சென்று, பண பரிவர்த்தனை செய்வதை குறைக்க, ஏ.டி.எம்., மற்றும் இணைய சேவைகள் உள்ளன. வங்கி கணக்கு வைத்துள்ள ஏ.டி.எம்., மூலம், ஐந்து முறை; பிற வங்கி ஏ.டி.எம்., மூலம், மூன்று முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம். இதற்கு மேல், ஏ.டி.எம்., சேவையை பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும், 20 ரூபாய் சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து, தற்போது இலவசமாக இருக்கும் வங்கிகளின் இணைய சேவைக்கும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அதன்படி, பணத்தின் அளவை கணக்கில் கொள்ளாமல், ஒவ்வொரு பண பரிமாற்றத்துக்கும், 2.50 ரூபாய் சேவை கட்டணமாக செலுத்த வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அக்., 1 முதல், வங்கி இணைய சேவைக்கு கட்டணம் வசூலிக்கும்படி, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது, பல வங்கிகளில் அமலுக்கு வந்து விட்டது' என்றார்.

அறிவிப்பு இல்லை: தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் சங்கத் தலைவர் சடகோபன் கூறியதாவது:வங்கி இணைய சேவைக்கு கட்டணம் வசூலிப்பது பற்றி, எந்த முன் அறிவிப்பும் இல்லை. வங்கியின் இணையதளங்களிலும் இது பற்றி குறிப்பிடவில்லை. வங்கிக்கு செல்வோரின் எண்ணிக்கையை குறைப்பதோடு, எந்த நேரத்திலும் பண பரிவர்த்தனையை செய்யும் நோக்கில், ஏ.டி.எம்., மற்றும் இணைய சேவையை, வங்கிகள் தான் அறிமுகம் செய்தன.தற்போது அவற்றுக்கு சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதனால், சேவை கட்டணத்தை தவிர்க்க, காசோலைகளுடன் மீண்டும் வங்கிக்கு செல்லும் நிலை ஏற்படும். வங்கிகளின் நவீன சேவைகள், வாடிக்கையாளர் மீது கட்டண சுமையை ஏற்படுத்துகின்றன. நான் கணக்கு வைத்துள்ள இந்தியன் வங்கியில், இணையம் மூலம் செய்யும் பண பரிமாற்றத்துக்கு, சேவை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

TNPSC group 2a பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேர்காணல் இல்லாமல் நிரப்படவுள்ள 1863 குரூப் 2A பணியிடங்களுக்கு எழுத்து தேர்வினை அறிவித்துள்ளது. இதற்கான விளம்பர அறிவிப்பை இன்று வெளியட்டுள்ளது.

நிதி, சட்டம், வருவாய், உள்பட பல்வேறு துறைகளில் 1863 காலிப்பணியிடங்கள் உள்ளன. வழக்கமான குரூப் 2 தேர்வைப் போல மூன்று கட்டமாக இல்லாமல், எழுத்துத் தேர்வின் மூலம் நேரடியாக ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
எழுத்துத் தேர்வு இரண்டு பிரிவுகளை உடையது. முதல் பிரிவில் பட்டப்படிப்பு கல்வித் தகுதி அடிப்படையிலான பொதுப் பாடங்கள் குறித்த வினாக்கள் கேட்கப்படும். இதில் பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், இந்திய வரலாறு மற்றும் பண்பாடு தொடர்பான வினாக்கள் இடம்பெறும்.
இரண்டாவது பிரிவில் பொதுத்தமிழ் அல்லது ஆங்கிலப் பாடத்திற்கான 100 வினாக்களை உள்ளடக்கியது. குரூப் 2-A தேர்வு குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpscexams.net அல்லது www.tnpsc.gov.in ஆகிய இணைய தளங்களை காணலாம்.

விண்ணப்பிக்கத் தேவையான அடிப்படைத் தகுதிகள்:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். தங்களது அடிப்படைக் கல்வி தகுதியை 10 +2 + 3 என்ற அடிப்படையில் பெற்றிருக்க வேண்டியதும் அவசியம்.
மேலும் பத்தாம் வகுப்பில் தமிழை கட்டாயம் படித்திருப்பது முக்கியம். மொத்தப் பணியிடங்களில் 20 சதவிகித இடங்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வயது வரம்பு:
அனைத்துப் பணிகளுக்கும் 1.07.2015ன் படி குறைந்தது 18 வயது நிரம்பியவராகவும், பொதுப்பிரிவினர் 30 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இதர பிரிவினருக்கு அதிக பட்ச வயது வரம்பு இல்லை.
கூடுதல் விவரங்களுக்கு www.tnpscexams.net அல்லது www.tnpsc.gov.in ஆகிய இணைய தளங்களை அணுகவும்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
இணைய தளம் வழியே மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க www.tnpscexams.net அல்லது www.tnpsc.gov.in இணைய தளங்களை அணுகவும்.
விண்ணப்பிக்கும் போது, புகைப்படம், கையெழுத்து ஆகியவற்றை முன்னதாகவே ஸ்கேன் செய்து வைத்திருப்பது அவசியம். பயன்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
தேர்வுக்கட்டணம் 75 ரூபாய் மற்றும் விண்ணப்பக் கட்டணம் 50 ரூபாய் சேர்த்து மொத்தம் 125 ரூபாய் செலுத்த வேண்டும். நிரந்தர பதிவெண் பெற்றவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
கட்டணத்தை இணைய தளம், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் செலுத்தலாம். இந்தியன் வங்கி மற்றும் அஞ்சல் அலுவலகங்களிலும் கட்டணத்தை செலுத்த முடியும். இணைய தளத்தில் பதிவு செய்த விண்ணப்ப விவரங்களை பிரதி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். விண்ணப்பக்கட்டணத்தை வங்கி மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் செலுத்த கடைசி நாள் நவம்பர் 13ம் தேதி ஆகும்.

இணைய தளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்ய நவம்பர் 11ம் தேதி கடைசி நாள். எழுத்துத் தேர்வு டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு நுழைவுச்சீட்டை தேர்வுக்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாக இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Sunday, October 11, 2015

உலக சிக்கன நாளை முன்னிட்டு போட்டிகள் நடத்த உத்தரவு


உலக சிக்கன நாளை முன்னிட்டு, நிதி சிக்கனத்தை வலியுறுத்தும் போட்டிகளை மாணவர்களிடம் நடத்த, அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது; இதில், பணத்தை சிக்கனப்படுத்துவது குறித்த அறிவுரைகள் வழங்கப்பட உள்ளன. சர்வதேச சிறுசேமிப்பு மற்றும் சிக்கன நாள் வரும், 30ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும், சிக்கனத்தை வலியுறுத்தும் போட்டிகள் நடத்த, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. நிதியை சிக்கனமாக பயன்படுத்துதல்; இந்திய ரூபாயின் உள்நாடு மற்றும் சர்வதேச மதிப்பு; வங்கிகளின் சிக்கன மற்றும் சேமிப்பு திட்டங்கள்; குடும்பங்களில் சிக்கனத்தை பேணுவது போன்ற பல தலைப்புகளில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்படும்.

பணத்தை வீணடிக்கா மல், அதை சேமிப்பது குறித்து விளக்கம் அளிக்கவும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

Saturday, October 10, 2015

ஜனவரி 19 முதல் 'ஸ்டிரைக்':அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு


கோரிக்கைகளை, அரசு நிறைவேற்றாவிட்டால், ஜன., 19ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கும்,'' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி தெரிவித்தார். நீலகிரி மாவட்டம், ஊட்டியில் அவர் அளித்த பேட்டி:தமிழக அரசு துறைகளில், இரண்டு லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்பாமல், அரசு மெத்தனம் காட்டி வருகிறது. பணிச்சுமை, மன அழுத்தம், அதிகாரிகளின் அச்சுறுத்தல் போன்றவை காரணமாக, ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர்.தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும், 3.5 லட்சம் ஊழியர்களிடம், அரசு, அடக்குமுறையை கையாள்கிறது. காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட, பல கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, டிச., 22ல், முதல்வரை சந்திக்க உள்ளோம். அதற்கு பிறகும் தீர்வு கிடைக்கவில்லை எனில், வரும், ஜன., 19ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்

பல்கலை பேராசிரியர்கள் மூலம் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி


மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பல்கலை பேராசிரியர்கள் மூலம், பயிற்சி அளிக்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், பள்ளிக் கல்வி துறையின் கீழ் உள்ள, அரசு பள்ளிகளில் மட்டும், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 42 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். சென்னை தவிர, மற்ற மாவட்டங்களில், தனியார் பள்ளிகளை விட, அரசு பள்ளிகளில் தான் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம். ஆனால், தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம், தனியார் பள்ளிகளை விட குறைவாக உள்ளது.

எனவே, தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பலவித பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதன்படி, பல்கலை பேராசிரியர்கள் மூலம், ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டம், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சென்னை பல்கலை பேராசிரியர்கள் மூலம், சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த, 300 ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். வரும், 12ம் முதல், 16ம் தேதி வரை; அதன்பின், 26ம் முதல், 30ம் தேதி வரை என, இரண்டு கட்டமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதையடுத்து, மற்ற பாட ஆசிரியர்களுக்கும், தொழில்நுட்ப பல்கலைகள் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.-

அரசு பள்ளிகளில் கை கழுவும் பயிற்சி


வரும் 15ம் தேதி, உலக கை கழுவும் தினத்தை ஒட்டி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 'ஹேண்ட் வாஷ்' பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி இயக்க, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:உலக கை கழுவும் தினம், வரும், 15ம் தேதி கடைபிடிக்கப்படுவதால், 'யுனிசெப்' நிறுவனத்துடன் இணைந்து, மாணவர்களுக்கு, 'ஹேண்ட் வாஷ்' பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில், 'துாய்மையான பாரதம், துாய்மையான பள்ளி' என்ற அடிப்படையில், கை கழுவும் முறை, பாதுகாப்பான குடிநீர் வசதி மற்றும் சுகாதாரம் போன்றவை குறித்து, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுத் தருவர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ரேஷன் கார்டுகளில் வருகிறது உள்தாள் மீண்டும் 'ஸ்மார்ட் கார்டு' இப்போதைக்கு இல்லை


ஸ்மார்ட் கார்டு'க்கு பதில், பழைய ரேஷன் கார்டுகளில் மீண்டும் உள்தாள் பயன்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், அரிசி வாங்கு வோர், சர்க்கரை வாங்குவோர், காவலர், எந்த பொருளும் வாங்காதோர் என, மொத்தம், 2.07 கோடி குடும்பங்களுக்கு ரேஷன் கார்டுகள் உள்ளன. உணவு வழங்கல் துறை சார்பில், 2005ல் வழங்கப்பட்ட ரேஷன் கார்டின் செல்லத்தக்க காலம், 2009ல் நிறைவடைந்தது. அரசின் சலுகை பின், ரேஷன் கார்டில், ஒவ்வொரு ஆண்டும் உள்தாள் ஒட்டப்பட்டு, அவற்றின் செல்லத்தக்க காலம், வரும் டிசம்பர் மாதம் வரை, நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மற்ற மாநிலங்களில், ரேஷன் கார்டு இல்லாத குடும்பங்களுக்கு, தமிழகத்தில் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. ஆனால், அரசின் சலுகைகளை பெற சிலர், பல முகவரியில், அதிக ரேஷன் கார்டுகளை வைத்துள்ளனர். இதனால், கூடுதல் செலவை தவிர்க்க, விழி, விரல் ரேகை பதிவுடன், 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, தமிழக அரசு முடிவு செய்தது. மத்திய அரசு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், தயாரிக்கப்பட்ட விவரங்களை கொண்டு விழி, விரல் ரேகை மற்றும் புகைப்படத்துடன், 'ஆதார்' அடையாள அட்டை வழங்கி வருகிறது.

இந்த விவரங்களை, மத்திய அரசிடம் பெற்று, அதை, 'ஸ்மார்ட் கார்டு'க்கு பயன்படுத்த, தமிழக அரசு முடிவு செய்தது. இதுதவிர, ரேஷன் கடை மூலமும், மக்களிடம் இருந்து, கூடுதல் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. தனியார் இதையடுத்து, 350 கோடி ரூபாய் செலவில், 'ஸ்மார்ட் கார்டு' ஒருங்கிணைப்பு பணிகளை, தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ள, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், 'டெண்டர்' கோரப்பட்டது. இதில் தேர்வான, 'ஆம்னி அகேட் சிஸ்டம்ஸ்' என்ற நிறுவனத்திடம், 'ஸ்மார்ட் கார்டு' தயாரிக்கும் பணி, ஜனவரி மாதம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது, அந்நிறுவனம், 'ஸ்மார்ட் கார்டு' மென்பொருளை தயாரித்து வருகிறது.

தமிழகத்தில், அடுத்த ஆண்டு, சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், 'ஸ்மார்ட் கார்டு' வழங்கினால், மக்களிடம், எதிர்ப்பு எழுவதற்கு வாய்ப்புள்ளதாக அரசு கருகிறது. இதனால், 2016ல், 'ஸ்மார்ட் கார்டு'க்கு பதில் வழக்கம் போல், ரேஷன் கார்டில் உள்தாள் பயன்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, சென்னை, தலைமை செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரியலுார், புதுக்கோட்டை மாவட்டங்களில், 90 சதவீதத்திற் கும் மேல், 'ஆதார்' அட்டை வழங்கப்பட்டு உள்ளன. இதனால், முதற்கட்டமாக, அம்மாவட்டங்களில், தற்போது, 'ஸ்மார்ட் கார்டு' வழங்கவும், பின், மற்ற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டது. ஆனால், சட்டசபை தேர்தலுக்கு பின், 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, அரசு அறிவுறுத்தி உள்ளது. எனவே, ரேஷன் கார்டில், கடந்த ஆண்டு ஒட்டப்பட்ட உள்தாளில், ஒரு பக்கம் காலியாக உள்ளது. அது, 2016ல் பயன்படுத்தி கொள்ளப்படும். இதற்கான, அரசாணை விரைவில் வெளியிட்டு, அந்த விவரம், உணவுத் துறை மூலம், பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். தற்போது, 'ஸ்மார்ட் கார்டு' திட்டத்தின் ஒரு பகுதியாக, ரேஷன் கடைகளில், 'பில்' போட, 'டேப்லெட்' கருவி வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டங்களில், 90 சதவீதத்திற்கும் மேல், 'ஆதார்' அட்டை வழங்கப்பட்டு உள்ளது. இதனால், முதற்கட்டமாக, அந்த மாவட்டங்களில், தற்போது, 'ஸ்மார்ட் கார்டு' வழங்கவும், பின், மற்ற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டது. ஆனால், சட்டசபை தேர்தலுக்கு பின், 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, அரசு அறிவுறுத்தி உள்ளது

நோபல் பரிசின் நடைமுறைகள்

நோபல் பரிசின் நடைமுறைகள்

ஒரு ஆண்டுக்கான நோபல் பரிசுக்குரியவர்களைத் தேர்வு செய்யும் நடைமுறை அதற்கு முந்தைய ஆண்டின் செப்டம்பர் மாதத்திலேயே தொடங்கிவிடும்.

உலகெங்கும் இருக்கும் சுமார் ஆயிரம் விஞ்ஞானிகள், தலைவர்கள் உள்ளிட்டோருக்கு நோபல் பரிசுக்கான பரிந்துரைப் படிவங்கள் அனுப்பி வைக்கப்படும். இந்தப் படிவங்கள் அனைத்தும் மறு ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதிக்குள் நோபல் தேர்வுக் குழுவுக்கு வந்து சேர வேண்டும்.

பிப்ரவரியில் பரிந்துரைப் படிவங்களின் பரிசீலனை நடைபெறும். அடுத்ததாக மார்ச் முதல் மே வரையிலான காலகட்டத்தில் நோபல் பரிசுக்குரியவரைத் தேர்வு செய்வது குறித்து நிபுணர்களுடன் தேர்வுக் குழுவினர் ஆலோசனை நடத்துவார்கள்.

ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் பரிசுக்கானவர் குறித்து தேர்வுக்குழு தன்னுடைய பரிந்துரைப் பட்டியலைத் தயார் செய்யும். செப்டெம்பர் மாதத்தில் பரிந்துரை குறித்தப் பட்டியில் நோபல் அகாதெமியிடம் சமர்ப்பிக்கப்படும்.

அக்டோபர் மாதத்தில் குறிப்பிட்ட நாள்களில் ஒவ்வொரு துறைக்கும் பரிசுக்குரியவர்கள் தேர்வுக்குழுவினரிடன் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்கள். டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி இவர்களுக்கான பரிசுகள் வழங்கப்படும்.

Friday, October 09, 2015

வாக்காளர் பட்டியல் திருத்தம் அக்.24 வரை நீட்டிப்பு: தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு


வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி வருகிற 24-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார். சென்னையில் தலைமைச் செயலகத்தில் அவர் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியது: செப். 20-ஆம் தேதியும், அக். 4-ஆம் தேதியும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. 11-ஆம் தேதியும் (ஞாயிற்றுக்கிழமை) முகாம் நடைபெறும். அன்றோடு நிறைவு பெற இருந்த, திருத்தப் பணிகள் இந்த மாதம் 24-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 14 லட்சத்து 45 ஆயிரத்து 295 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் பெயர் சேர்த்தலுக்காக 11 லட்சத்து 34 ஆயிரத்து 859 மனுக்களும், நீக்கலுக்காக 60 ஆயிரத்து 922 விண்ணப்பங்களும், திருத்தங்கள் செய்ய ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 285 மனுக்களும் அளிக்கப்பட்டுள்ளன.

வாக்காளர்கள் விவரங்கள் இணைப்பு: 32 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்களின் விவரங்கள் அனைத்தும் இப்போது இணைக்கப்பட்டுள்ளன. இதனால், கன்னியாகுமரியில் இருக்கும் ஒருவர் திருப்பூருக்கு மாற்றலாகி வரும்போது, பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்தால் ஏற்கெனவே இருக்கும் அவரது பெயர் தானாகவே நீக்கம் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 16 முதல் புதுப்பிக்கப்பட்ட இணையதளம் செயல்படும்: முற்றிலும் தவறுகள் இல்லாமல் பட்டியலைத் தயாரிக்கவும், இரட்டைப் பதிவு-இறந்த வாக்காளர் பெயர்களை நீக்கவும் தொழில்நுட்ப அடிப்படையிலான நான்கு புதிய வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்டு செயலி, தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளம் (www.elections.tn.gov.ineasy), செல்லிடப்பேசி குறுஞ்செய்தி (9444123456), குரல் அடிப்படையிலான தொலைபேசி (044-66498949) ஆகியவற்றின் மூலம் வாக்காளர்கள் தங்களது அடிப்படை விவரங்களை உறுதி செய்யலாம்.

இவ்வாறாகப் புதுப்பிக்கப்பட்ட இணையதளம் வரும் 16-ஆம் தேதி முதல் செயல்படும். தமிழ்-ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இருக்கும். இந்த இணையதளத்தில் விண்ணப்பத்தின் நிலையையும், எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் அறிய முடியும். ஒவ்வொரு நடவடிக்கையும் விண்ணப்பதாரரின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலமாகத் தகவல் தெரிவிக்கப்படும். அதிகாரிகளுக்குள் இணையவழித் தொடர்பு: பெயர் சேர்ப்புக்கு வாக்குச் சாவடி அதிகாரியும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமே பொறுப்பாவர். எனவே, அவர்களுக்குள் ஒரு தொடர்பு இணையவழியில் ஏற்படுத்தப்படுத்தப்பட்டு, அனைத்து மனுக்களும் ஸ்கேன் செய்யப்படும். போன் செய்தால் விண்ணப்பம் தயார்: குரல் வழி தொலைபேசியைப் பயன்படுத்தும் போது, பெயர் சேர்ப்பு, நீக்கல் ஆகிய விவரங்களை வரிசையாகத் தெரிவித்தால் போதும்.

இறுதியில் அந்த குரல் வழி தொலைபேசி அமைப்பே விண்ணப்பத்தை தயாரித்துக் கொள்ளும். பின்னர், செல்லிடப்பேசிக்கு வரும் இணையதள இணைப்பைக் கொண்டு விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் கையெழுத்திட்டு அளிக்கலாம். பெயர் சேர்க்க வரும் மனுவை வாக்குச் சாவடி அலுவலர் கள ஆய்வு மேற்கொள்வார். அதற்கு முன்பாக விண்ணப்பதாரர் குறித்த பழைய விவரங்கள் அடங்கிய பட்டியலை அவர் தன்னுடன் கொண்டு செல்வார். விசாரணைக்கு பின் மனுவை ஏற்றுக் கொள்ளலாம் என ஆய்வில் இருந்தே தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு குறுஞ்செய்தி அனுப்புவார். இதனால், தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருப்பது உறுதி செய்யப்படும். 15 நாள்களில் தீர்க்கப்படும்: திருத்தப் பணிகள் நிறைவடைந்த பிறகு, மனுக்கள் 15 நாள்களுக்குள் தீர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறைபாடுகள் அடங்கிய உத்தேசப் பட்டியல் தேர்தல் அலுவலர்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தகுதியானவர்களின் பெயர் நீக்கப்பட்டிருந்தால், அந்தக் குறைகள் சரி செய்யப்படும் என்றார்.

வாக்காளர் விண்ணப்பம் விவரம் அறியதேர்தல் கமிஷன் 'ஈசி' திட்டம் அறிமுகம்


வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பித்தவர்கள், தங்கள் விண்ணப்பத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிந்து கொள்ள, தேர்தல் கமிஷன், 'ஈசி' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது:வாக்காளர் பட்டியலில் உள்ள விவரம் தொடர்பாக, வாக்காளர்கள் பல சேவைகளை பெறுவதற்காக, நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில், 'ஈசி' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இத்திட்டம் மூலம், தமிழக மக்கள், வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் தொடர்பான சேவைகளை, இணையதளம் உட்பட பல அணுகுமுறைகளில் பெறலாம். இதை, 'கூகுள் பிளே ஸ்டோரில்' இருந்து, ஆண்ட்ராய்டு 'ஆப்ஸ்' மூலம், https:/play.google.com/store/apps/details?id=com.uniphore.easy -ல் பெறலாம். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இணையதளம் www.elections.tn.gov.in/easy மூலமாகவும் பெறலாம். எஸ்.எம்.எஸ்., மூலம் அறிய, 94441 23456 என்ற எண்ணுக்கு, 'EPIC epic number டைப் செய்து அனுப்ப வேண்டும்.ஈசி திட்டம் மூலம், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றல், விவரங்களை உறுதிப்படுத்துதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை விவரங்களையும், பொதுமக்கள் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.விண்ணப்ப எண்ணை பதிவு செய்தால், விண்ணப்பம் ஆய்வு செய்யப்பட்டுள்ளதா, இல்லையா; வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா, இல்லையா போன்ற விவரங்களை அறிய முடியும். வாக்குச்சாவடி அலுவலர், கள ஆய்வுக்கு வந்து சென்ற விவரம், வாக்காளருக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தெரியப்படுத்தப்படும். எனவே, வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடுகளுக்கு செல்லாமல், ஏமாற்ற முடியாது.இவ்வாறு சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.