இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, July 28, 2015

ஜாக்டோ அமைப்பை தடை செய்ய கோரிக்கை

ஜாக்டோ' ஆசிரியர் அமைப்பை, தடை செய்ய வேண்டும் என, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை, கோரிக்கை விடுத்துள்ளது.இதன் மாநிலத் தலைவர் ஆரோக்கியதாஸ், முதல்வர் அலுவலகத்தில், கொடுத்துள்ள மனு:அரசுப் பணியில் இல்லாதவர்கள், அரசுப் பணியில் இருப்பவர்களின் சங்க விவகாரங்களில், தொடர்பு வைத்திருக்கக் கூடாது.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலர் மீனாட்சி சுந்தரம், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் முத்துச்சாமி மற்றும் கவுரவ பொதுச்செயலர் அணணாமலை ஆகியோர், ஆசிரியர் சங்கங்களின் தலைமை நிர்வாகிகளாக, செயல்படுகின்றனர். மேலும், அவர்கள் தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினராகவும், தி.மு.க.,வின் அறிவிக்கப்படாத கொள்கை பரப்பு செயலர்களாகவும் இருக்கின்றனர்.மூன்றுபேரும், தி.மு.க.,வினரின் துாண்டுதல்பேரில், அரசுப் பள்ளி ஆசிரியர்களை, தமிழக அரசுக்கு எதிராக, போராடத் துாண்டி விடுகின்றனர்.கடந்த, நான்கு ஆண்டு களில் தமிழக அரசு, ஆசிரியர்களுக்கு சலுகைகள் வழங்கியதற்கு, மூன்று பேரும், நன்றி தெரிவிக்கவில்லை.

இப்போது, மூன்று பேரும், சில ஆசிரியர் சங்கங்களை ஒருங்கிணைத்து, 'ஜாக்டோ' என்னும் அமைப்பை உருவாக்கி, தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த, ஆசிரியர்களை துாண்டி வருகின்றனர். பள்ளிக்குச் சென்று, அழைப்பு விடுக்கின்றனர்.எனவே, அரசுப் பணியில் இல்லாதவர்கள் தலைமையில் செயல்படும், ஆசிரியர்கள் சங்கங்களின், அங்கீகாரத்தை, உடனே ரத்து செய்ய வேண்டும். இவர்கள் தலைமையில் செயல்படும், 'ஜாக்டோ' அமைப்பை, தடை செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

பொது விடுமுறை.30-7-15 அரசாணை

CTET exam 2015

��TNPTF MANI��

CENTRAL TEACHER ELIGIBILITY TEST (CTET) – SEPT 2015

The Central Board of Secondary Education, Delhi will be conducting the 8th Edition of Central Teacher Eligibility Test (CTET) on 20.09.2015 (Sunday) for a candidate to be eligible for appointment as a teacher for classes I to VIII.
Candidates can apply only On-line for CTET-SEPT 2015 on CTET website - www.ctet.nic.in
IMPORTANT DATES:
Submission of On-line application 30.07.2015 to 19.08.2015
Last date for Online Submission of application 19-08-2015
Last date for payment of fees Through E-Challan or Debit/Credit Card by the candidate 20-08-2015 (before 03:30 PM)
Period for On-line Corrections in Particulars (No correction will be allowed in any particulars after this date) 21.08.2015 to 25.08.2015
Download Admit Card from CTET website 04.09.2015
Schedule of Examination
DATE OF EXAMINATION PAPER TIMING DURATION
20.09.2015 PAPER - II 09.30 TO 12.00 HOURS 2.30 HOURS
20.09.2015 PAPER - I 14.00 TO 16.30 HOURS 2.30 HOURS

தகுதித்தேர்வை எதிர்நோக்கும் பட்டதாரிகள்

ஆசிரியர் தகுதித் தேர்வை எதிர்நோக்கி காத்திருக்கும் பி.எட். பட்டதாரிகள்

மத்திய அரசின் கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்ட தாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அதன்படி இலவச மற்றும் கட்டாய கல்வி சட்ட விதிமுறைகளை, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்.சி.டி.இ.) கொண்டு வந்தது. 2009-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சட்டம், தமிழகத்தில், 2010-ல் அமல் படுத்தப்பட்டு, 2011-ல் விதி முறைகள் வெளியிடப்பட்டன.

மேற்கண்ட விதிமுறைகளின்படி ஆண்டுக்கு ஒருமுறையாவது ஆசிரி யர் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் 2012-ல் ஜூலை மற்றும் அக்டோபரி லும், 2013-ல் ஆகஸ்டிலும் தேர்வு நடத்தப்பட்டது. இதன் மூலமாக அரசு பள்ளிகளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. நடப்பு ஆண்டு முடிய இன்னும் 5 மாதங்களே உள்ளன. எனவே, இந்த ஆண்டு தகுதித் தேர்வு நடத்தப்படுமா? என்று ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும், பிஎட் பட்டதாரிகளும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தினரை தொடர்பு கொண்டு கேட்டபோது, “ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சியில் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அளிக்கப்பட்ட 5 சதவீத மதிப்பெண் தளர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு ஜூலை 21-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது ஒத்திவைக்கப்பட்டது. எனவே, தேர்வு எப்போது நடைபெறும் எனத் தெரியவில்லை” என்று தெரிவித்தனர்.

Monday, July 27, 2015

தொடக்க கல்வியில் 50:50 முறை மீண்டும் வருமா: ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

தமிழக அரசு நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு எற்கெனவே நடைமுறையில் இருந்த '50 சதவீதம் பதவி உயர்வு; 50 சதவீதம் நேரடி நியமனம்' முறை பின்பற்ற வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் (2001- 2006) அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் 6 முதல் 10ம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்வது எனவும், தொடக்க கல்வியில் அரசு, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளிலும் மாணவர் விகிதாசாரம் கணக்கில் கொள்ளாமல் வகுப்பிற்கு ஒரு பட்டதாரி ஆசிரியர் வீதம் பணியிடங்கள் உருவாக்கவும் முடிவானது. ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் நேரடியாகவும், பதவி உயர்வு மூலமாகவும் அந்த இடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டன.

இதன் அடிப்படையில் ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் கடந்த தி.மு.க., ஆட்சியல் '50 சதவீதம் பதவி உயர்வு; 50 சதவீதம் நேரடி நியமனம்' என்ற விதியை மாற்றி 100 சதவீதம் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களையும் தகுதியான இடைநிலை ஆசிரியர்களை கொண்டு பதவி உயர்வு மூலம் நிரப்ப (எண்:239, 240) உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து மீண்டும் பழைய உத்தரவை பின்பற்ற வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மாணவர்கள் டாப் ரேங்க்குக்கு திட்டம்

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், அதிக மதிப்பெண் மற்றும் அதிக தேர்ச்சி பெற, கண்காணிப்பு குழு அமைப்பது உட்பட, பல புதிய திட்டங்களை செயல்படுத்த, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழக அரசின் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், பள்ளிக்கல்வித் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மீன்வளத் துறை, வனத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை உட்பட, பல துறைகளின் கட்டுப்பாட்டில்செயல்படுகின்றன.

ஆனாலும், மாவட்டங்களில், முதன்மை கல்வி அதிகாரிகளின் வழிகாட்டுதலில், இந்தப் பள்ளிகளில் கற்பித்தல் முறை மேற்கொள்ளப்படுகிறது. இருந்தாலும், மாணவ, மாணவியரின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மிக மோசமாக உள்ளன. மொத்த தேர்ச்சி விகிதம், மாநில, 'ரேங்க்' பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தரத்துடன் ஒப்பிடும்போது, அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் கல்வித் தரம், சராசரி நிலைக்கும் கீழே செல்கிறது. பல கோடி ரூபாய் செலவில், 14 இலவச திட்டங்கள் அளித்தும், கல்வித்தரம் மோசமாக இருப்பதால், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, தமிழகம் முழுவதும், குறைந்த மதிப்பெண் பெற்ற தலைமை ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதனடிப்படையில், நடப்பு கல்வியாண்டில், புதிய அதிரடி திட்டங்களை வகுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம்:

* தேர்ச்சி மற்றும் மதிப்பெண் குறைவான பள்ளிகளில், சிறந்த ஆசிரியர்களை நியமித்தல் அல்லது சிறப்பு பயிற்சி அளித்தல்.

* அனைத்து அரசு பள்ளிகளிலும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் மாதாந்திர முன்னேற்றம், ஆசிரியர்களின் முயற்சிகளைக் கண்காணிக்க, மாவட்ட அளவில் குழு அமைத்தல்.

* மாணவ, மாணவியருக்கு, பெற்றோர் -ஆசிரியர் கழக வினா வங்கிகள் மற்றும், 'பயிற்சி கட்டகம்' என்ற சிறப்பு பயிற்சி புத்தகங்கள் வழங்குதல்.

* வகுப்பில் முன் இருக்கை மற்றும் பின் இருக்கையில் அமரும், அனைத்து மாணவ, மாணவியருக்கும் சமமான கற்பித்தல் வாய்ப்புக் கிடைக்கும் வகையில், மாணவர்கள் வரிசையை மாற்றி பாடம் கற்பித்தல்; அடிக்கடி திருப்புதல் தேர்வு நடத்துதல்; புத்தகத்தின் பின்பக்கமுள்ள வினாக்களை கண்டிப்பாக படிக்க வைத்து, அவற்றுக்கு வகுப்பறை தேர்வு நடத்துதல்.

* சராசரி மற்றும் கற்றல் குறைந்த மாணவர்களை கண்டுபிடித்து, அவர்களின் பெற்றோருடன் ஆலோசித்து, சிறப்புப் பயிற்சி அளித்தல். இப்படி பல புதிய திட்டங்களை, இந்த ஆண்டு முதல் செயல்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் இடமாறுதல் விதிமுறைகளை மாற்ற திட்டம் 'கவுன்சிலிங்' தேதி அறிவிப்பு திடீரென தள்ளிவைப்பு

இடமாறுதல், 'கவுன்சிலிங்' விதிமுறை களுக்கு, ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், கவுன்சிலிங் தேதி அறிவிப்பது, திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும், மே மாதம் இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கும். இந்த முறை, கவுன்சிலிங் குறித்து, தமிழக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதனால், பள்ளி ஆசிரியர் சங்கங்கள் சார்பில், தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. இதையடுத்து, கவுன்சிலிங்குக்கான புதிய விதிமுறைகளை, 10 நாட்களுக்கு முன், தமிழக அரசு வெளியிட்டது.

அதில், 'ஒரே இடத்தில், மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்தவர்களுக்கு மட்டுமே, இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும்; அதற்கு முன் நிர்வாக நலன் அடிப்படையில் மட்டுமே இடமாற்றம் நடக்கும்' என, தெரிவிக்கப்பட்டது. 'இந்த விதிமுறைகள் ஊழலுக்கு வழிவகுக்கும்' என, ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. 'விதிமுறைகளை மாற்ற வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறைக்கு மனுக்கள் அனுப்பின. சில சங்கங்கள் சார்பில், போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்நிலையில், கவுன்சிலிங் விதிமுறைகளில், சில மாற்றங்கள் செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கவுன்சிலிங் குறித்த தேதி அறிவிப்பு, நேற்று வெளியாக இருந்தது. ஆனால், அந்த அறிவிப்பு திடீரென தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. கவுன்சிலிங் விதி முறைகளில், மாற்றங்கள் இருக்கும் என, எதிர்பார்க்கிறோம்.

பள்ளிகளின் காலியிட விவரங்கள் இன்னும் முழுமையாக சேகரிக்கப்படவில்லை. மூன்று ஆண்டுகளுக்கும் மேல், ஒரே இடத்தில் பணிபுரிவோருக்கு, கட்டாய மாறுதல் இருக்காது என்ற விதி இடம் பெற வாய்ப்புள்ளது கல்வித்துறை அதிகாரிகள்.. ஆதிதிராவிடர் பள்ளி பொதுமாறுதல் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளி ஆசிரியர்களுக்கான, பொது மாறுதல் கவுன்சிலிங், நாளை துவங்குகிறது.துறை அதிகாரிகள் கூறியதாவது:ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்; முதுகலை பட்டதாரி ஆசிரியர்; கணினி ஆசிரியர்; உடற்கல்வி இயக்குனர் ஆகிய பதவிகளுக்கு, இந்த கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கவுன்சிலிங், நாளை காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. அதேபோல, பட்டதாரி ஆசிரியர், தமிழாசிரியர், இடை நிலை ஆசிரியர், உயர் கல்வி ஆசிரியர் ஆகிய பதவிகளுக்கான பொது மாறுதல் கவுன்சிலிங், வரும், 30ம் தேதி காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.

அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்திடம், இடமாறுதல் கோரி, 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பித்தவர்கள் மட்டும், கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தமிழக பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை: அரசு அறிவிப்பு

தமிழக பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை: அரசு அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் மறைவையட்டி, தமிழகம் முழுவதும் பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) விடுமுறை என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்  மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங் எனும் இடத்தில் உள்ள ஐ.ஐ.எம். நிறுவனத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றார். அப்போது மேடையில் இருந்த அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு சரிந்தார்.

உடனடியாக அவர் ஷில்லாங்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அப்துல்கலாம் இறந்துவிட்டார் என்பதை உறுதிசெய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மாணவர்கள் மேல் மிகுந்த பாசமுள்ளவர். அதிகமாக மாணவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க விரும்புவார். இந்தநிலையில் அவரது மறைவு மாணவர்கள் சமுதாயத்திடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் அவரது மறைவுக்கு தமிழக அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும், நாளை (செவ்வாய்க்கிழமை) மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நேற்றிரவு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Sunday, July 26, 2015

Inspire award register

Click below

http://www.inspireawards-dst.gov.in/UserC/login.aspx?to=1

INSPIRE award registeration

Click below

http://www.inspireawards-dst.gov.in/UserP/school-authority.aspx

தனியார் பள்ளி வாகங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி.பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

தனியார் பள்ளி வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகில் 1,101 சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதையடுத்து, பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:

தனியார் பள்ளி வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட வேண்டும். முழுத் தகுதி பெற்ற, அனுபவம் வாய்ந்த ஓட்டுநர், நடத்துநர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். ஓட்டுநர் விடுப்பில் செல்லும்போது, ஓட்டுநர் உரிமம் இல்லாத நபர் அல்லது கிளீனர் போன்றவர்களை பள்ளி வாகனத்தை ஓட்ட அனுமதிக்கக் கூடாது. போக்குவரத்துத் துறையின் உத்தரவுப்படி, பள்ளி வாகனப் பராமரிப்பு 100 சதவீதம் உறுதி செய்யப்பட வேண்டும். பள்ளி வாகனத்தை இயக்கும்போது ஓட்டுநர் செல்லிடப்பேசியில் பேசுவது, தண்ணீர் அருந்துவது, குழந்தைகளுடன் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

போக்குவரத்து விதிகளை மீறி பள்ளி வாகனத்தை இயக்கினால் புகார் தெரிவிக்க வசதியாக, பள்ளி முதல்வர், பள்ளி நிர்வாக அலுவலர் ஆகியோரின் செல்லிடப்பேசி எண்களை பள்ளி வாகனத்தில் எழுதிவைக்க வேண்டும். பாலம், நீர்நிலைகளைக் கடந்து செல்லும்போதும், பிற வாகனங்களை முந்திச் செல்லும்போதும் ஓட்டுநர் மிகவும் கவனத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்த வேண்டும். இந்த அறிவுரைகளை அனைத்து தனியார் பள்ளி, சுயநிதிப் பள்ளிகளுக்கும் அனுப்ப வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் 37500 பேர்

தமிழகத்தில் 37,500 குழந்தைகள் பள்ளி செல்லாமல் உள்ளது தெரியவந்துள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டம் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி செல்லாத குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் 37,500 பள்ளி செல்லாக் குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்தக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் பணிகள் இப்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக அதிகாரிகள் மேலும் கூறியது:

தமிழகத்தில் தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள் நடைபெறும் மாவட்டங்களில்தான் பள்ளி செல்லாத குழந்தைகள் அதிகமாக உள்ளனர். குறிப்பாக, சென்னையைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. மாநிலத்துக்குள்ளேயே இடம்பெயரும் தொழிலாளர்கள் காரணமாக விழுப்புரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சென்னை மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளின் பெற்றோர், பெரும்பாலும் வட மாநிலங்களிலிருந்து இங்கு குடிபெயர்ந்தவர்களாக உள்ளனர்.

இவர்களுக்காக ஹிந்தி, ஒரியா உள்ளிட்ட மொழிகளில் பாடங்களை நடத்துவதற்கான ஆசிரியர்களும் தன்னார்வ அமைப்புகளின் மூலம் நியமிக்கப்பட உள்ளனர். ஆந்திரப் பிரதேசத்திலிருந்தும் ஏராளமான இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் இங்கு பணியாற்றுகின்றனர். அவர்களின் குழந்தைகளுக்காக தெலுங்கு மொழியிலும் பாடங்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலிருந்து சேலம், ஈரோடு பகுதிக்கு இடம்பெயரும் தொழிலாளர்களின் குழந்தைகளும் பள்ளிகளுக்குச் செல்லாமல் உள்ளனர். இவர்கள் பருத்தி சீசனில் ஆண்டுக்கு 3 அல்லது 4 மாதங்கள் தங்களது குழந்தைகளுடன் சென்றுவிடுவதால், அவர்களால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. சென்னை மாவட்டத்தில் பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 1,250-ஆக உள்ளது. கட்டுமானப் பணிகள், சாலையோரங்களில் வசிப்பவர்களின் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படவில்லை. இந்தக் குழந்தைகளில் 33,000 பேரை பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அனைத்துக் குழந்தைகளும் பள்ளிகளில் மீண்டும் சேர்க்கப்படுவர் என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஆதார் அட்டையில் பிழையிருந்தால் தபாலில் விண்ணப்பிக்கலாம்

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை தபால் மூலமாக அனுப்பி, திருத்தம் செய்யலாம். ஆதார் அட்டையில் உள்ள முகவரி தவறாக அச்சாகி இருந்தாலோ பெயர், வயது போன்றவை பிழையாக இருந்தாலோ 'ஆன்-லைன்' மூலம் திருத்தம் செய்ய வழிவகை செய்யப்பட்டது. அலைபேசி எண் தவறாக இருந்தால் திருத்தம் செய்ய இயலாது.uidai.gov.in/update&your &aadhaar.data.html என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி இப்பணியை மேற்கொள்ளலாம்.

அனைத்து வகையான திருத்தங்களுக்கும் அலைபேசி எண் முக்கியம். 'ஆன்---லைன்' மூலமாக பதிவு செய்ய, அலைபேசி எண்ணுக்கு வரும் ரகசிய குறியீட்டு எண்ணை பதிவு செய்தால் மட்டுமே ஒருவரது ஆதார் விவரங்களை திருத்த முடியும். பெயர், முகவரி திருத்தம் செய்ய, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், 'பான்' கார்டு, ரேஷன் கார்டு, உள்ளிட்ட ஆவண நகல்களை பயன்படுத்தலாம்.

பிறந்த தேதியை திருத்தம் செய்ய:பிறப்பு சான்று, கல்விச்சான்று, பாஸ்போர்ட், 'குரூப்- ஏ' நிலையில் உள்ள அரசு அதிகாரிகளிடம் பெற்ற கடிதம் என ஏதாவது ஒரு நகலை சமர்ப்பிக்க வேண்டும். தபால் மூலம் விண்ணப்பித்து சரி செய்யவும், வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் கூறியதாவது: ஆதாரங்களுடன்அதற்கான படிவத்தில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவங்களை, UIDAI, Post Box No.99, Banjara Hills, Hyderabad - 500 034, India என்ற முகவரிக்கு அனுப்பினால், விவரங்கள் திருத்தம் செய்யப்பட்டு, அலைபேசி எண்ணுக்கு தகவல் அனுப்பப்படும். கம்ப்யூட்டர் மையங்களில் படிவம் பெற்று, ஆங்கிலம், தமிழில் பூர்த்தி செய்து அனுப்பலாம்,' என்றார்.ழக்கு பதிவு செய்தனர்.

மதுவின் தீமைகளை மாணவர்களுக்கு அறிவுறுத்த கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் பரவும் மது குடிக்கும் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த பள்ளி கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், பள்ளி மாணவர்கள், மாணவிகள் பள்ளி வளாகம் மற்றும் பொது இடங்களில் மது அருந்துவது ரகளை செய்வது போன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த நிகழ்வு கல்வி துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

இத்தகைய செயல்பாடுகளால் மாணவர்களின் உடல்நலம், கல்வி பாதிக்கும். எனவே, பள்ளி, வகுப்பறைகளில் நடத்தப்படும் காலை இறைவணக்க கூட்டத்தின் போதும், நீதிபோதனை கல்வி பாட வேளையின் போதும் மாணவர்களிடம் மதுவால் ஏற்படும் தீமைகள் பற்றி விளக்கி கூறி நல்வழிப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த தலைமை ஆசிரியர்கள் வகுப்பு ஆசிரியர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

TNPSC GROUP II tentative answer key

Click below

http://www.tnpsctricks.com/2015/07/tnpsc-group-2-exam-answer-key-2015.html?m=1

Saturday, July 25, 2015

காமராஜர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய அரசுப்பள்ளிகளுக்கு பரிசு

காமராஜர் பிறந்த நாள் விழாவை சிறப்பாகவும், வித்தியாசமாகவும் கொண்டாடிய அரசு பள்ளிகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு செய்து பள்ளிக் கல்வித்துறை மூலம் பரிசுத் தொகை வழங்கப்பட இருப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

மாநில அளவில் கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் இவ்விழா கடந்த 15-ம் தேதி அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரால் வெகு சிறப்பாக கொண்டாடபட்டது. இதில், ஒவ்வொரு பள்ளியிலும் இவ்விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் வைத்தல், தூய்மை பணிகளை மேற்கொள்ளுதல், மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பயன்படுத்த வளாகம் ஏற்படுத்த சூளுரைத்தல், மாணவ மாணவிகளுக்கு காமராஜர் பற்றிய பேச்சுபோட்டிகள் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தபட்டன.

எனவே இவ்விழாவை மாநில அளவில் சிறப்பாகவும், வித்தியாசமாகவும் கொண்டாடிய பள்ளிகளை தேர்வு செய்து ஆகஸ்டு முதல் வாரத்திற்குள் அனுப்பி வைக்க அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் தலைமையாசிரியர்கள் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்ட நிகழ்ச்சியை முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில், வித்தியாசமான முறையில் கொண்டாடிய பள்ளிகளை கல்வித்துறை அலுவலர் குழுவினர் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் தேர்வு செய்யப்படும் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1 லட்சமும், உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.75 ஆயிரமும், நடுநிலைப்பள்ளிக்கு ரூ.50 ஆயிரமும், தொடக்கப்பள்ளிக்கு ரூ.25 ஆயிரமும் ரொக்க பரிசாகவும், பாராட்டு சான்றிதழ் ஆகியவையும் பள்ளிக் கல்வித்துறை மூலம் வழங்கப்பட இருக்கிறது. இத்தொகையை பள்ளியின் வளர்ச்சி பணிகளுக்கு தலைமையாசிரியர்கள் உபயோகப்படுத்தி கொள்ளலாம் என அலுவலர்கள் தெரிவித்தனர்.