இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, April 05, 2015

135 ஆண்டு மணி ஆர்டர் சேவைக்கு முடிவு?

135 ஆண்டு கால வரலாறு முடிவுக்கு வருகிறது: தந்தியை தொடர்ந்து மணி ஆர்டருக்கும் மூடுவிழா

தந்தியைத் தொடர்ந்து மணி ஆர்டருக்கும் மூடுவிழா நடத்த அஞ்சல்துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 135 ஆண்டு கால மணி ஆர்டர்  வரலாறு முடிவுக்கு வருகிறது. நாடு முழுவதும் முன்பு மோர்ஸ் முறையில் இருந்த தந்தி முறை, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக படிப்படியாக  வழக்கொழிந்தது. தற்போது மக்கள் தகவல் தொடர்புக்காக  எஸ்எம்எஸ், இமெயில், செல்போன் என வளர்ச்சி அடைந்து விட்டதால் தந்தி முறையை  கைவிட்டனர். இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனைத்து தபால் நிலையங்களிலும்  பயன்பாட்டில் இருந்த தந்தி முறை முடிவுக்கு வந்தது.
தற்போது தபால் நிலையங்களை பணம் வினியோகிக்கும் மையங்களாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் தற்போது நடைமுறையில் உள்ள எலெக்டரானிக் மணி ஆர்டர்  முறை கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது  தந்தியைத் தொடர்ந்து படிவத்தை நிரப்பி பணம் அனுப்பும் முறையான மணி ஆர்டர் முறையை  முடிவுக்கு கொண்டு வர அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது.  இதுகுறித்து தபால்துறை துணை தலைவர் ஷிகா மாத்தூர் குமார் கூறுகையில், தற்போது உடனடியாக பணத்தை பெறும்  வகையிலான எலெக்ட்ரானிக்  மணியார்டர் முறை புழக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

எனவே 135 ஆண்டு கால பழமையான படிவத்தை நிரப்பி தபால் மூலம் பணம் அனுப்பும்  மணியார்டர் முறைக்கு மூடுவிழா நடத்த அஞ்சல் துறை ஆலோசித்து  வருகிறது என்றார். நாடு முழுவதும் உள்ள சுமார் 1 லட்சத்து 55 ஆயிரத்திற்கும் அதிகமான தபால் நிலையங்கள் மூலமாக நேரடி பணம் பட்டுவாடா செய்யும்  நடைமுறை செயல்பட்டு வருகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.

Saturday, April 04, 2015

2016-17 ல் ப்ளஸ் 1 பாடத்திட்டத்தில் மாற்றம்

பிளஸ் 1 பாடத்திட்டம் 2016-17ம் கல்வி ஆண்டிலும் பிளஸ் 2 பாடத்திட்டம் அதற்கு அடுத்த கல்வி ஆண்டிலும் மாற்றி அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் 10ம் வகுப்பிற்கு பின்னர் பியூசியும் அதைத் தொடர்ந்து பட்டப்படிப்பு என்ற முறையும் கடந்த 1979ம் ஆண்டு வரை அமலில் இருந்தது. இந்தக் கல்வி முறை 1980ல் மாற்றம் செய்யப்பட்டு பியூசி கல்வி அகற்றப்பட்டது.

அதற்குப் பதிலாக எஸ்எஸ்எல்சியை தொடர்ந்து பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டம் மேல்நிலைக்கல்வி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்தே உயர்கல்வி பயில முடியும். இந்த கல்வித்திட்டம் அறிமுகமான கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் 38 ஆக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து தற்போது தேர்ச்சி 90 சதவீதத்தை எட்டியுள்ளது. ஆயினும் பிளஸ் 2வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து மருத்துவம், இன்ஜினியரிங் போன்ற உயர் கல்வியை தேர்வு செய்யும் மாணவர்கள் திறமையற்றவர்களாக விளங்குகின்றனர்.

குறிப்பாக பொறியியல் கல்வி பயிலும் பல மாணவர்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் அரியர்ஸ் வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2வில் நன்றாக பயின்று அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் கூட உயர் கல்வியில் திணறும் நிலை நிலவுகிறது. இதுகுறித்த ஆய்வில் மாணவர்கள் உயர் கல்வி பயில ஏற்ற அளவில் அவர்களது மேல்நிலைக் கல்வி பாடத்திட்டங்கள் போதுமானதாக இல்லை என்பது தெரியவந்தது. நவீன உயர்கல்வி பாடங்களை சிரமமின்றி கற்பதற்கும் எதிர்கால வேலைவாய்ப்பிற்கு ஏற்ற வகையிலும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கவேண்டிய அவசியம் உணரப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் மாற்றப்படாமல் இருப்பதும் மாணவர்களின் உயர்கல்வியில் தடுமாற்றத்திற்கு காரணமாக இருக்கிறது. இதையடுத்து பேராசிரியர்கள், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வியாளர்கள் கொண்ட உயர்மட்ட குழு முழுமையாக ஆய்வு செய்து பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது குறித்த விபரங்களை தயார் செய்தனர்.

பின்னர் அதை கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் பார்வைக்கும் வழங்கி பல்வேறு திருத்தங்களுக்குப் பின்னர் இறுதி வடிவம் கொடுத்து கடந்த ஆண்டே கல்வித்துறைக்கு சமர்ப்பித்தனர். இதை இறுதி ஆய்வு செய்த கல்வித்துறை அரசின் அனுமதி பெற்று பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளது. அனேகமாக வரும் 2016-17ம் கல்வி ஆண்டில் பிளஸ் 1 கல்விக்கும், அதற்கு அடுத்த கல்வியாண்டான 201718ல் பிளஸ் 2 கல்விக்கும் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்ய வாய்ப்பு உள்ளது. இதை முறைப்படி அரசு அறிவிக்கும் என ஆசிரியர்கள் கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். அரசு அறிவித்ததும் புதிய பாடத்திட்டங்களுடன் கூடிய பாடப்புத்தகங்களை அச்சடிக்கும் பணி நடப்பு கல்வி ஆண்டிலேயே தொடங்க வாய்ப்பு உள்ளது.

தமிழக பாடப்புத்தகங்கள் விலை உயர்வு

தமிழக பாடநூல் கழகம் சார்பில், வரும் கல்வியாண்டில் விநியோகம் செய்யப்படவுள்ள 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களின் விலை 25 முதல் 250 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் சபிதாவின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான 8-ம் வகுப்பு தமிழ் புத்தகத்தின் விலை 65 லிருந்து 110 ரூபாயாகவும், 9-ம் வகுப்பு தமிழ் புத்தகத்தின் விலை 70 ரூபாயிலிருந்து 140 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பிற்கான கணிதப் பாடப்புத்தகம் 85-லிருந்து 160 ஆகவும், அறிவியல் புத்தகம் 85 லிருந்து 170 ரூபாயாகவும், சமூக அறிவியல் புத்தகம் 85 லிருந்து 130 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

11-ம் வகுப்பிற்கான கணிதப் பாடத்தின் முதல் தொகுதியின் விலை 25-லிருந்து 80 ரூபாயாகவும், இயற்பியல் பாடத்தின் முதல் தொகுதி 23 ரூபாய் 50 பைசாவிலிருந்து 80 ரூபாயாகவும், வேதியியல் முதல் மற்றும் இரண்டாம் தொகுதிகள் 23 ரூபாய் 50 பைசாவிலிருந்து 70 ரூபாயாகவும், உயர்த்தப்பட்டுள்ளது. தாவரவியல் முதல் தொகுதி 25 ரூபாயிலிருந்து 70 ரூபாயாகவும், விலங்கியல் 17 ரூபாயிலிருந்து 80 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

12-ம் வகுப்பிற்கான கணிதம் முதல் மற்றும் இரண்டாம் தொகுதி 27 ரூபாயிலிருந்து 80 ரூபாயாகவும், இயற்பியல் முதல் தொகுதி 24 ரூபாயிலிருந்து 70 ரூபாயாகவும், வேதியியல் இரண்டாம் தொகுதி 35 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், விலங்கியல் 24 ரூபாயிலிருந்து 90 ரூபாயாகவும், நுண்ணுயிரியல் புத்தகம் 26 ரூபாயிலிருந்து 60 ரூபாயாகவும், கலாச்சாரம் தொடர்பான பாடப்புத்தகம் 21 ரூபாயிலிருந்து 60 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இம்முறை தரம் உயர்த்தப்பட்ட காகிதங்களில் பாடங்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும், பாடப்புத்தகங்கள் 3 தொகுதிகளாகப் பிரித்து அச்சிடப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமான அட்டைகளுடனும், கணினி மூலம் பிழையின்றியும் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதனாலேயே புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

Friday, April 03, 2015

மாணவிகளுக்கு தற்காப்பு கலையை கற்பிக்க வேண்டும்.சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்பிக்கவேண்டும் என்றும் பள்ளிக்கூடங்களில் முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தவேண்டும் என்றும் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. நிறுவனம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. நிறுவனம் இந்தியாவில் உள்ள அனைத்து சி.பி.எஸ்.இ. நிர்வாகங்களுக்கும், பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

பாதுகாப்பான சூழ்நிலை

அனைத்து குழந்தைகளுக்கும் படிப்பதற்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கவேண்டும் என்று உரிமை உள்ளது. அவர்கள் அனைத்து துறையிலும் வளர்ச்சி அடையவேண்டும். பள்ளிக்கூடங்களில் ஆண், பெண் சமம் என்ற நிலையை உருவாக்கவேண்டும். ஈவ்டீசிங், பாலியல் கொடுமை ஆகியவற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவேண்டும். இந்த விழிப்புணர்வை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் ஏற்படுத்தவேண்டும்.

குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வை பள்ளிக்கூட நிர்வாகிகளும், அனைத்து ஆசிரியர்களும், பள்ளிக்கூட ஊழியர்களும் அறியவேண்டும். பள்ளி வகுப்பறைகளில் மாணவ-மாணவிகள் படிப்பதற்கு நல்ல சூழ்நிலையை பள்ளி நிர்வாகம் உருவாக்கவேண்டும்.

வளர் பருவத்தில் உள்ள மாணவ-மாணவிகளிடம் ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது பற்றி பயிற்சி அளிக்கவேண்டும்.

மாணவிகளுக்கு கராத்தே

மாணவிகளுக்கு கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்பிக்கவேண்டும். மேலும் ஆண்-பெண் சமம் என்பது குறித்த கண்காட்சி, வினா-விடை போட்டியை பள்ளிகளில் நடத்தவேண்டும். விடுதிகளில் மன ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கவேண்டும். அவர்கள் மீது தனிப்பட்ட அக்கறை செலுத்தி அவர்களுக்கு உரிய சவால்களை சந்திக்கும் திறனை உருவாக்கவேண்டும்.

மாணவ-மாணவிகளுக்கு மேற்கண்டவாறு பிரச்சினை ஏற்பட்டால் புகார் செய்வதற்கு ஒவ்வொரு பள்ளியிலும் கமிட்டி அமைக்கப்படவேண்டும். அந்த கமிட்டியில் பள்ளியின் முதல்வர் அல்லது துணை முதல்வர், ஒரு ஆண் ஆசிரியர், ஒரு பெண் ஆசிரியர், ஒரு மாணவி, ஒரு மாணவர், ஒரு ஆசிரியர் அல்லாத ஊழியர் ஆகியோர் இடம் பெறவேண்டும். அந்த கமிட்டியிடம் மாணவர்கள் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

புகார் பெட்டி- சி.சி.டி.வி. கேமரா

மேலும் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் புகார் செய்ய, புகார் பெட்டி இருக்கவேண்டும். அந்த பெட்டியில் பாலியல் கொடுமை பற்றி மாணவ-மாணவிகள் ஏதாவது எழுத்துப்பூர்வமாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். பள்ளிக்கூட வளாகங்களில் முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படவேண்டும். மாணவர்களை உளவியல் ரீதியாக கவனிக்கவேண்டும். அவர்கள் ஆர்வம் இல்லாமல் இருப்பது, மன அழுத்ததில் இருந்தால் அவர்களுக்கு முறையான உளவியல் ரீதியான கலந்தாய்வு அளிக்கவேண்டும். மேற்கண்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் வகுப்பறைகளிலும், விடுதிகளிலும், விளையாடும் இடங்களிலும் இருக்கவேண்டும்.

குழந்தைகளுக்கானஹெல்ப் லைன்

குழந்தைகளுக்கான ஹெல்ப் லைன் போன் நம்பர் நோட்டீசு போர்டு உள்பட முக்கிய இடங்களில் எழுதி போடவேண்டும். குறிப்பாக 1098 என்ற நம்பர் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் தெரியவேண்டும். பள்ளிக்கூட நிர்வாகம், ஊழியர்கள் மாணவ-மாணவிகளுக்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆன் லைனில் விடைத்தாள் நகல்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், திருத்தப்பட்ட விடைத்தாள் நகல்களை, 'ஆன் - லைன்' மூலம் பார்க்கும் வசதியை ஏற்படுத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்து உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 5ல் துவங்கி, 31ம் தேதி முடிந்தது; 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 19ம் தேதி துவங்கி நடந்து வருகிறது; வரும் 10ம் தேதி முடிய உள்ளது. இந்த ஆண்டு பொதுத்தேர்வில், பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

தேர்வு முடிவு வெளியானதும், மேற்படிப்புக்காக, கல்லூரிகளுக்கு உடனே விண்ணப்பிக்கும் வகையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. இதனால், மாணவ, மாணவியர் மதிப்பெண் சான்றிதழுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. இன்னும் கூடுதல் வசதியாக, மாணவ, மாணவியர் மறுகூட்டல் மற்றும் மறு ஆய்வுக்காக, விடைத்தாள்களின் நகல் கேட்டு விண்ணப்பிக்கும் போதும், அவர்களுக்கு தாமதமின்றி நகல் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதன்படி, இந்த ஆண்டு, 'ஆன் - லைன்' மூலம், விடைத்தாள் நகல் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்கான முயற்சிகளை, தேர்வுத் துறை மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகம் இணைந்து மேற்கொண்டு வருவதாக, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Annamalai university May 2015 exam time table&instructions

Click below

http://www.annamalaiuniversity.ac.in/dde/exam_timetable.php

Thursday, April 02, 2015

இனி வங்கிகளுக்கு 2&4 சனிக்கிழமைகளில் விடுமுறை

இனி மாதத்தில் 2 சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை.. நிதியமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

வங்கி ஊழியர்களின் பல கட்ட வேலைநிறுத்தப் போராட்டங்களுக்குப் பின் வங்கிகளுக்கு மாதத்தில் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த ஒரு வருடமாக வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், ஊதிய உயர்வு, வாரத்தில் 5 வேலைநாட்கள் போன்ற காரணங்களுக்காக வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வந்தனர்.

இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் 15 சதவீத ஊதிய உயர்வும், வாரத்தில் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகள் விடுமுறை அளிப்பதாக வங்கி அமைப்புகளுக்கு நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வியாழக்கிழமை வெளியிட்டது..இதர சனிக்கிழமை முழு வேலைநாளாக செயல்படும்

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பதற்கு புதிய முறை

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை எண் இணைப்பதற்கான ஐசிஆர் எனும் புதிய முறை இந்தியாவிலேயே முன் மாதிரியாக பொள்ளாச்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண் பதிவு செய்யும் பணி தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இதற்கு தேவையான தகவல்கள் பணியாளர்கள் மூலமாக கணினியில் பதிவு செய்யப்படுகிறது. இதற்குப் பதிலாக, இந்தியாவிலேயே முன் மாதிரியாக பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர்கள் தகவல்களைப் பதிவு செய்ய ஐசிஆர் என்ற புதிய முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென கொடுக்கப்படும் படிவத்தில் வாக்காளர் பெயர், முகவரி, செல்லிடப்பேசி எண், ஆதார் எண், வாக்காளர் எண் உள்ளிட்ட தகவல்களைப் பதிவு செய்து அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டும். அந்தப் படிவம் ஸ்கேன் செய்யப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இதன் மூலம் பிழை, காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். இதற்கான மென்பொருளை தமிழகத் தேர்தல் ஆணையம் வடிவமைத்துள்ளது. இதனால், 1 மணி நேரத்தில் 1,000 படிவங்கள் வரை கணினியில் பதிவேற்றலாம். இதன்படி, பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் இந்தத் திட்டம் புதன்கிழமை முதல் செயல்படுத்தப்படுகிறது. முதல் நாளில் 700 பேரின் தகவல்கள் ஐசிஆர் முறையில் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

ப்ளஸ் 2 தேர்வுக்கு முன் ஜாதி சான்று வழங்க ஏற்பாடு

பிளஸ் 2 தேர்வு முடிவுக்கு முன் மாணவர்களுக்கு ஜாதி, இருப்பிடம், வருமானம், முதல் பட்டதாரி சான்றுகளை வழங்க வருவாய்த்துறை ஏற்பாடு செய்துள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிட்டபின்பே ஜாதி, இருப்பிடம் போன்ற சான்றுகளை கேட்டு மாணவர்கள் தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பிக்கின்றனர்.

ஒரே சமயத்தில் அதிகமான விண்ணப்பங்கள் வருவதால் சான்றுகள் வழங்க தாமதம் ஏற்பட்டது. இதனை தவிர்க்க தேர்வு முடிவுக்கு முன் தாலுகா அலுவலகங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் செயல்படும் பொதுசேவை மையம் மூலம் 'ஆன்-லைனில்' சான்றுகளை வழங்க வருவாய்த்துறை ஏற்பாடு செய்துள்ளது.இதில் ஜாதி, இருப்பிடம், வருமானம், முதல் பட்டதாரி சான்றுகளை பெற்று கொள்ளலாம். ஏற்கனவே சான்று பெற்றோர் அதன் நகல்களை பெறலாம். மேலும் மெய்த்தன்மை குறித்து சந்தேகம் ஏற்படாத வகையில் சான்றுகளில் ரகசிய குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிபார்த்து கொள்ளலாம் என, வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

Wednesday, April 01, 2015

பி.எப். நிதி 5%லிருந்து 15% வரை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு

பி.எப். நிதி பங்குச் சந்தைக்கா?
ஏ.கே.பத்மநாபன் கடும் எதிர்ப்பு

தொழிலாளர்களின் பி.எப். பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய சிஐடியு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிஐடியு அகில இந்திய தலைவர் ஏ.கே.பத்ம நாபன் விடுத்துள்ள அறிக்கையில், தொழிலாளர் களின் பி.எப். நிதியிலிருந்து 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்று மத்திய பாஜக கூட்டணி அரசு எடுத்துள்ள முடிவை வன்மையாக கண்டித்துள்ளார்.
பாஜக அரசு கடைப்பிடித்து வரும் தாராளமய மாக்கல் கொள்கையின் ஒரு பகுதியாக இந்தமுடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு முன் இருந்த மத்திய தொழிலாளர் துறை அமைச்சர்கள், இதுதொடர்பாக தொழிற்சங்கங் களுடன் ஆலோசனை நடத்த வேண்டுமென்ற நிலையை எடுத் திருந்தனர்.

ஆனால் தற்போதைய தொழிலாளர் துறை அமைச்சர் பி.எப். நிதியை பங்குச் சந்தை ஊகவணிகத்தில் ஈடுபடுத்த முழு ஆதரவு தெரிவித்துள்ளார் என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் இ.பி.எப். சட்டம் மற்றும் இதர வகை சட்டம் 1952ல் திருத்தம் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இத்தகைய சட்டத்திருத்தங்களால் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு தகர்க்கப்படும் என சிஐடியு குற்றம் சாட்டுகிறது.

பி.எப் சந்தாதாரர்கள் தேசிய ஓய்வூதிய நிதிய திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் சந்தாதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களின் சமூக பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது என்று ஏ.கே.பத்மநாபன் குற்றம்சாட்டியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் பி.எப். நிதியை சூறையாடுவதைக் கண்டித்தும், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத்திருத்தங்களை கண்டித்தும் ஓரணியில் திரள வேண்டும். பாஜக கூட்டணி அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

பாட புத்தக விலை உயர்வு

முப்பருவ முறையின் கீழ் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான

பாடப் புத்தகங்களின் விலை விவரம்

பழைய விலை புதிய விலை

முதல் வகுப்பு தொகுதி -1 ரூ. 30 ரூ. 40

தொகுதி-2 ரூ. 30 ரூ. 50

இரண்டாம் வகுப்பு தொகுதி-1 ரூ. 30 ரூ. 50

தொகுதி-2 ரூ. 35 ரூ. 50

மூன்றாம் வகுப்பு தொகுதி-1 ரூ. 30 ரூ. 40

தொகுதி-2 ரூ. 60 ரூ. 90

நான்காம் வகுப்பு தொகுதி-1 ரூ. 30 ரூ. 50

தொகுதி-2 ரூ. 60 ரூ. 90

ஐந்தாம் வகுப்பு தொகுதி -1 ரூ. 35 ரூ. 50

தொகுதி-2 ரூ. 65 ரூ. 90

ஆறாம் வகுப்பு தொகுதி-1 ரூ. 40 ரூ. 60

தொகுதி-2 ரூ. 65 ரூ. 100

ஏழாம் வகுப்பு தொகுதி-1 ரூ. 45 ரூ. 70

தொகுதி-2 ரூ. 95 ரூ. 140

எட்டாம் வகுப்பு தொகுதி-1 ரூ. 55 ரூ. 90

தொகுதி-2 ரூ. 110 ரூ. 160

ஒன்பதாம் வகுப்பு தொகுதி-1 ரூ. 60 ரூ. 80

தொகுதி-2 ரூ. 50 ரூ. 70

தொகுதி-3 ரூ. 90 ரூ. 120

பத்தாம் வகுப்பு

தமிழ் ரூ. 85 ரூ. 110

ஆங்கிலம் ரூ. 85 ரூ. 90

கணிதம் ரூ. 85 ரூ. 160

அறிவியல் ரூ. 85 ரூ. 170

சமூக அறிவியல் ரூ. 85 ரூ.130

சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான தமிழ்ப் புத்தகங்களின் விலை

1 முதல் 4-ஆம் வகுப்பு வரையிலான புத்தகங்களின் விலை

ரூ. 60 என்பதில் மாற்றமில்லை.

5-ஆம் வகுப்பு ரூ. 60 ரூ. 70

6-ஆம் வகுப்பு ரூ. 65 ரூ. 90

7-ஆம் வகுப்பு ரூ. 65 ரூ. 100

8-ஆம் வகுப்பு ரூ. 65 ரூ. 110

9-ஆம் வகுப்பு ரூ. 70 ரூ. 140

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களின் விலை 250 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கணினி பயிற்றுநர்களுக்கு ஏப் 4ல் நியமனம்

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 652 கணினிப் பயிற்றுநர்களுக்கு சனிக்கிழமை (ஏப். 4) பணி நியமனக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 652 கணினிப் பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்கள், தங்கள் முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டத்தில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். கலந்தாய்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக வருகை தர வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ், அசல் கல்விச் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ் உள்ளிட்டவற்றுடன் அன்றைய தினம் காலை 9 மணிக்கு வந்து கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப் 6 முதல் புத்தகங்கள்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 படிக்க உள்ள மாணவர்களுக்கு வரும் திங்கள்கிழமை (ஏப்.6) முதல் புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் கோடை விடுமுறையிலும் படிக்கும் வகையில், அவர்களுக்கு முன்கூட்டியே புத்தகங்களை விநியோகிக்க அரசு முடிவு எடுத்தது. அதன்படி, பிளஸ் 1 மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்துள்ளன. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் இந்த மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்காக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் ஒரு கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

இதில் பிளஸ் 2 புத்தகங்கள் 100 சதவீதம் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு விட்டன. பத்தாம் வகுப்புக்கான புத்தகங்களும் மாவட்டங்களுக்கு பெரும்பாலும் அனுப்பப்பட்டு விட்டன. 9-ஆம் வகுப்புத் தேர்வுகள் நிறைவடைந்ததும் இந்த மாணவர்களுக்கான புத்தகங்களும் விநியோகிக்கப்பட உள்ளன. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை வரும் கல்வியாண்டுக்காக மொத்தம் 4.52 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. இதில் 3.17 கோடி புத்தகங்கள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவசப் புத்தகங்கள் ஆகும். 1.35 கோடி புத்தகங்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கானது. இந்தப் புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்கு நேரடியாக விற்பனை செய்யப்படும்.