இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, November 14, 2014

பாலியல் கல்வி குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு பாலியல் கல்வியை பாடமாக சேர்ப்பது குறித்து 8 வாரங்களுக்குள் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தவும், அவற்றை பாடமாக புத்தகத்தில் சேர்க்கவும் கோரி, வழக்கறிஞர் சித்ராதேவி என்பவர் கடந்த ஆண்டு பள்ளிக் கல்வித்துறை செயலாளரிடம் மனு கொடுத்துள்ளார்.

ஓராண்டு கடந்தும் அந்த மனு மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக 8 வாரத்திற்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Wednesday, November 12, 2014

8 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக திருவள்ளூர், வேலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு, நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு இன்று (13.11.2014-வியாழக்கிழமை) விடுமுறை

பள்ளிகளை நிர்வகிப்பது தொடர்பாக பள்ளி மேலாண்மை, வளர்ச்சிக் குழுக்களைச் சேர்ந்த 1.65 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


அனைவருக்கும் கல்வித் திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் ஆகியவற்றின் சார்பில் இந்தப் பயிற்சி வழங்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளை நிர்வகிக்க ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி மேலாண்மை, வளர்ச்சிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கல்வியாளர்கள், உள்ளாட்சி மன்றத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், பெற்றோர்கள் என ஒவ்வொரு குழுவிலும் 22 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

பள்ளிகளின் தலைமை ஆசிரியரோடு இணைந்து பள்ளிகளை எவ்வாறு மேம்படுத்துவது, ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்வது, வகுப்பறை, கழிவறை வசதிகளை மேம்படுத்துவது, பள்ளிகளில் விழாக்களை நடத்துவது, கல்வித் தரத்தை அதிகரிக்க உள்ளூரில் உள்ள பட்டதாரிகளைக் கொண்டு சிறப்பு வகுப்புகள் எடுக்கச் செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் இவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாநில அளவில் முதல் கட்டமாக நவம்பர் 14-ஆம் தேதி மதுரையிலும், இரண்டாம் கட்டமாக சென்னையில் நவம்பர் 18-ஆம் தேதியிலும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

அதன் பிறகு, மாவட்டந்தோறும் இந்தக் குழுக்களைச் சேர்ந்த 1.65 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கப்படும். இந்தப் பயிற்சியின்போது பள்ளியை நிர்வகிப்பது தொடர்பான கையேடுகளும் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. வரும் ஆண்டுகளில் பள்ளி மேலாண்மை, வளர்ச்சிக் குழுக்களைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்தப் பயிற்சி வழங்கப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

How to missing credit Cps power point format

Click below

https://drive.google.com/file/d/0B69z3JTclPnxdWc1am4zcm44cTA/view?usp=sharing

TRB PG Syllabus

Click below

http://trb.tn.nic.in/PG2014/07112014/msg1.htm

How to Apply CPS Number in Online


1. The first thing you have to done is to print this 3 pages seperately then fill the details with black
ink, after that the photograph of the Govt. Employer should be pasted with his/her signature also
with the pay drawing officer's attestation. These 3 Pages must be scanned within 300 kb in PDF
Format.

2. After these procedures you can visit the below
website: http://218.248.44.123/auto_cps

3. A new page will be opened, in this page you can fill the user name(treasury number) and password (Pay Drawing Officer's code number)
For Ex: Treasury no: 123
Paydrawing Officer's Code No: 123
You can type like Username: 123 Password: 123
Then you click the submit button. After that the new page will be opened and you filled the required details then you click the check button.

4. The next page can be filled with proper details then you click the proceed button.
5. Again the next page will be filled and uploaded the scanned PDF file at last you click the save
button.
6. Before you press the forward button you must confirm the filled details are correct, if any corrections you can go to the draft and pick the particular person's file then you edit any needed corrections.
7. After the clicking the forward button the details of the file forwarded to the chennai data centre. The new CPS number will be alloted with in few days after the verification the person's details.
( For getting the new CPS alloted number you can click the S1 form and download the new CPS number allotment letter).

http://218.248.44.123/auto_cps/

ednesday, 12 November 2014 Alagappa University DDE results exam held on May 2014

Click below

http://alagappauniversity.ac.in/result/DistanceEducation_reval.php

EMIS ஆன்லைனில் பதிவு செய்யும் முறை 2/2

4c, அட்ரஸ்,பின்கோடு , நேட்டிவ் டிஸ்டிரிக்ட் , சரியானதை தேர்வு செய்யவும்.

4d, போட்டோ ஆன்லைனில் பதிவிட BROWSE என்ற பட்டனை அழுத்தி உங்கள் கணினியின் உரிய இடத்தில் உள்ள அந்த மாணவனின் புகைப்படத்தை 200 X 200 RESOLUTION, 50 KB க்கு குறைவாக உள்ள படத்தை பதிவேற்றவும்.
அப்லோடு ஆகிவிட்டால் சிறிய கட்டமும் (இந்த பிழை விரைவில் சரி செய்யப்படும் ) , அப்லோடு ஆகாவிட்டால் மாணவனை வரைந்தது போல் படமும் காணப்படும். இந்த 2 படங்களை வைத்து போட்டோ அப்லோடு ஆனதை உறுதி செய்யவும்.

4d, இதில் ரெகுலர் ப்ரசன்ட் , லாங் ஆப்சன்ட் இந்த இரண்டில் ஒன்றில் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும் (நாட் அப்ளிகபுள் கிளிக் செய்யவேண்டாம்)

4d, போன் நம்பர் (இருந்தால் ) இரத்தவகை (இருந்தால் அல்லது பின்னர் அப்டேட் செய்யலாம்), உயரம் , எடை இவற்றில் சரியானதை பதிவிடவும்.

4d, இது அரசு உதவி பெறும் அல்லது சுயநிதி பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் (அரசு பள்ளிகள் --------- அல்லது நாட் அப்ளிகபுள் என பதிவிடவும்).

4d, அட்மிசன் நம்பர் பள்ளி சேர்க்கை பதிவேட்டில் இருந்து பார்த்து பதிவிடவும்.

4d,4e, பேங்க் , பேங்க் அக்கவுண்ட் நம்பர் , பேங்க் ஐஎப் எஸ் சி கோடு , இவை எவற்றையும் தொடவேண்டாம்.

4e, ஆதார் அட்டை தனியாக இந்த 1,2 வகுப்பு மாணவர்களுக்கு இருக்காது (கைரேகை சரியாக இல்லாமல் இருப்பதால வழங்கப்பட்டிருக்காது) எனவே இதையும் தொடவேண்டாம்)

4e, ஸ்போர்ட்ஸ் ப்ளேயர் என்பதில் இல்லை என்றே பதிவிடவும் (ஒன்றிய அளவில் 1,2 மாணவர் செல்ல வாய்ப்பு மிக மிக குறைவு)

4e, அகடமிக் இயர் 2014 - 2015 என பதிவிடவும்.

4e, பேமிலி டீட்டெய்லில் சகோதரன் ,சகோதரி விபரம் மட்டும் பதிவிடவும்.(add row என கிளிக் செய்து, எத்தனை தேவையோ அத்தனை row மட்டும், தேவையற்ற rows டெலிட் செய்யவும்)

நிறைவாக CREATE பட்டனை கிளிக் செய்யவும். உடனே அது பதிவாகி EMPTY(காலி) FORM அடுத்த பதிவிற்கு தயாராக தோன்றும். மேற்கண்ட முறைப்படி அடுத்த மாணவன் விபரம் பதிவிடலாம்..

சில டிப்ஸ்

1, சில வேளைகளில் கிரியேட் பட்டனை கிளிக் செய்தால் கிளிக் ஆகாமல் அதே மாணவனின் விபரம் தோன்றும். அப்போது விழிப்புடன் லாக் அவுட் செய்துவிட்டு, நாம் பயன்படுத்தும் ப்ரௌசரை(எக்ஸ்புளோரர், மொசில்லா,கூகுள் கொரோம்) WEB HISTORY,COOKIES, CATCHES ஆகியவற்றை CLEAR செய்துவிட்டு மாற்று ப்ரௌசரை (எ.கா : மொசில்லா பயன்படுத்தியவர் கூகுள் குரோமை) பயன்படுத்தி லாக் இன் செய்யவும்.
              முக்கியமாக சைல்ட் டீடெய்லில் அந்த மாணவனின் விபரம் ஏறியிருக்கிறதா என உறுதி செய்துவிட்டு ,ஏறாவிட்டால் மட்டுமே திரும்ப பதிவிட வேண்டும்(இல்லையேல் டபுள் என்ட்ரி ஆகிவிடும்)

பெஸ்ட் ஆப் லக்!! ஆங்கிலத்தை தமிழில் மொழி பெயர்க்காமல் அப்படியே குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும்(ஏனெனில் படிவம் ஆங்கிலத்தில் இருப்பதால் தான் சாரி!!!)

2, அடுத்து 404 ERROR , 503 ERROR , WEB SERVICE ERROR போன்ற ERROR  MASSAGES வந்தால் நான் முன்பு குறிப்பிட்டது போல் நாம் பயன்படுத்தும் ப்ரௌசரை(எக்ஸ்புளோரர், மொசில்லா,கூகுள் கொரோம்) WEB HISTORY,COOKIES, CATCHES ஆகியவற்றை CLEAR செய்துவிட்டு மாற்று ப்ரௌசரை (எ.கா : மொசில்லா பயன்படுத்தியவர் கூகுள் குரோமை) பயன்படுத்தி லாக் இன் செய்யவும்.மீண்டும் மீண்டும்

Internal Server Error
  வந்தால் லாக் அவுட் பண்ணிவிட்டு ஒரு மணி நேரம் கழித்து லாக் இன் செய்யவும்!!!

EMIS ஆன்லைனில் பதிவிடும் முறை 1/2

emis online website address   :click here www.emis.tnschools.gov.in

1, முதலில் மேலே கண்ட படத்தின்படி லாக் இன் பக்கத்திற்கு வந்து உங்கள் யூசர் நேம் பாஸ்வேர்டு எண்டர் செய்து லாக்
இன் செய்யவும்.

2, மேலே கண்ட படத்தின்படி ஸ்டூடண்ட் (சிறுவன் படம்) லோகோவை கிளிக் செய்யவும்.

3, தற்போது உங்களுக்கு மேலே உள்ள படம் தோன்றும். அதில் கிரியேட் சைல்டு டீடெய்ல்ஸ் என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்.

4a, தற்போது மேலே உள்ள பக்கம் தோன்றும் (விளக்கம் தெரிவிக்க 4 ம் கலம்

( 4a,4b,4c,4d,4e) என பிரிக்கப்பட்டுள்ளது. 4a வில் தோன்றும் விபரங்களைக் கீழே காண்போம்.

            முதலில் மாணவனின் பெயரை ஆங்கிலத்தில் பதிவிடவும். இனிசியல் அடுத்து வரவேண்டும்.
எ.கா : MAHALINGAM . S

4அ1 அடுத்து மாணவனின் பெயரை தமிழில் பதிவிட யுனிகோட் எழுதியில் எழுதுவது போல் டைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்தவும். அது கீழே உள்ள படம் போல் பட்டியலிடும் அதில் சரியானதை கிளிக் செய்யவும்.

                  






4a, பிறந்த தேதி DD/MM/YYYY முறையில் பதிவிடவும்.

4a, ஆண் ,பெண் பதிவு செய்யவும்.

4a, வகுப்பு ஒன்று , இரண்டாம் வகுப்பு மட்டும் தோன்றும் அதில் சரியான வகுப்பை கிளிக் செய்யவும்.

4a, செக்சன்  இருந்தால் குறிப்பிடவும் இல்லாவிட்டால் தேவை இல்லை.
எ.கா : 1 A

4a, மீடியம் தமிழ், அல்லது ஆங்கிலம் சரியானதை தேர்ந்தெடுக்கவும்.

4a, குரூப் கோடு என்பது 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குரியது. எனவே -------- என குறிக்கவும்.
             4b, தேசியம் : இந்தியன், மற்றவை,விரும்பவில்லை , மதம் : இந்து , கிறிஸ்துவம்,முஸ்லீம் , விரும்பவில்லை. இவற்றில் சரியானதை தேர்ந்தெடுக்கவும்.

4b, கம்யூனிட்டி இதில் எம்,பி.சி , எஸ்.சி அதர்ஸ், எஸ்.சி அருந்ததியர், பி.சி அதர்ஸ் ,பி.சி முஸ்லீம் , விரும்பவில்லை,  இவற்றில் சரியான ஒன்றை பதிவிடவும்.

4b, கம்யூனிட்டி சர்டிபிகேட் அந்த மாணவனுக்கு தனியாக வருவாய் துறையால்  வழங்கப்பட்டிருந்தால் (பெரும்பாலும் 3 ஆம் வகுப்புக்கு மேல்தான் வழங்கப்பட்டிருக்கும்) ஆம் என குறியிடவும். இங்கு 1,2 வகுப்பு என்பதால் இல்லை என்பதே சரியாக வரும்.

4b, ஜாதி இதில் கம்யூனிட்டி எதை தேர்வு செய்தோமோ அதைப்பொறுத்து பட்டியல் டிஸ்ப்ளே ஆகும் அதில் சரியானதை பதிவிடவும்.
குறிப்பு : சில கம்யூனீட்டிக்கு சப் கேஸ்ட் பட்டியல் வராமலிருக்கும், அதை EMIS தலைமையகத்துக்கு தெரிவித்து விட்டோம் ,சரி செய்து விடுவார்கள். எ.கா : எம்.பி.சி கம்யூனிட்டி க்கு சப்கேஸ்ட் பட்டியல் விடுபட்டிருக்கும். அது விரைவில் சரி செய்யப்படும். இப்போதைக்கு சப் கேஸ்ட் பாக்ஸில் --------- என்று குறியிட்டுவிட்டு அந்த மாணவனின் படிவத்தில் (  DATA CAPTURE FORM   ) சப் கேஸ்ட் திருத்தப்படவேண்டும் என குறித்து வைக்கவும் (நினைவுக்காக).

4,b, தாய்மொழி சரியானதைத் தேர்வு செய்யவும்.

4b, தாயார் பெயர் ஆங்கிலத்தில் பதிவிடவும்.

4b, தாயார் வேலை விபரம் சரியானதை பதிவிடவும்.











4c, தாயார் மாத வருமானம் எவ்வளவோ அதைக்குறிப்பிடவும். ( வேலை விபரத்தில் ------ எனக்குறிபிட்டிருந்தால் கண்டிப்பாக மாத வருமானம் பகுதியில் 0 அல்லது -- எனப்பதியவும்)

4c, தந்தை/பாதுகாவலர் பெயர் குறிப்பிடவும்.

4c, தந்தை வேலை விபரம் , மாதவருமானம் குறிப்பிடவும் ( விளக்கம் தாயாருக்கு உள்ளதே இதற்கும் பொருந்தும்)

4c, மாற்று திறனாளி எனில் ஆம், இல்லாவிடில் இல்லை. என பதிவிடவும்.

4c, மாற்றுத் திறனாளி ஆம் எனில் புதிதாக ஒரு பாக்ஸ் தோன்றும். அதில் சரியானதை பதிவிடவும் (விளக்கம் அவனுடைய மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டையில் அறியவும்)

4c, DISADVANTAGED மாணவன் என்றால் ஆம் , இல்லையேல் இல்லை என பதிவிடவும். ஆம் எனில் ஒரு பாக்ஸ் தோன்றும் அதில்  எது சரியோ அதை பதிவிடவும் . மல்டி (பல) எனில் எ.கா : அனாதையான எய்ட்ஸ் நோய் மாணவன்) எனில் கண்ட்ரோல் கீயை அழுத்திக்கொண்டே மல்டி செலக்சன் செய்யவும்.

4c, STUDENT STATUS இதில் மூன்று  விபரம் இருக்கும் (--------- இட  தேவையில்லை ) முதலில் உள்ளது FORMAL SCHOOL , இது பெரும்பாலும் உள்ள மாணவனுக்கு உரியது. அடுத்து ENROLLED UNDER SPECIAL TRAINING , இது கட்டாய கல்வி சட்டப்படி அந்த பள்ளியில் அட்மிசன் ஆகி , HOME BASED ஆகவோ அல்லது SSA நடத்தும் சிறப்பு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாற்றுத் திறனாளி மாணவனுக்கு உரியது. மூன்றாவது MAINSTREAMED UNDER SPECIAL TRAINING , இது கட்டாயக்கல்வி சட்டப்படி அட்மிசன் நம்பர் அந்த பள்ளியில் இருந்து , SPECIAL TRAINING ல்  இருந்து நலம் பெற்று (இனி பயிற்சி தேவையில்லை) FORMAL SCHOOL ல் தொடர்ந்தால் மூன்றாவதை தேர்வு செய்யவும்(அரசு புள்ளி விபரத்திற்காகவே இந்த 3ம் பிரிவு)

Tuesday, November 11, 2014

பாரத சுகாதார திட்டம்: மாணவிகளுக்கான கழிப்பறை கட்ட ரூ.57 லட்சம் ஒதுக்கீடு


      பாரத சுகாதார திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் 163 பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிப்பறை கட்ட 57 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், பாரத சுகாதார திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும், ஊரக முகமை அதிகாரிகள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கொண்ட குழுவினர் ஒவ்வொரு பள்ளிகளாக ஆய்வு செய்து, தேவையான இடங்களில் மாணவிகளுக்கு தனி கழிவறை கட்டிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை ஆய்வு செய்ய நான்கு குழுக்குள் அமைக்கப்பட்டன. இக்குழுவினர் கடந்த மாதம் முழுவதும் மாவட்டத்தில் உள்ள 1,300 பள்ளிகளுக்கு நேரடியாக சென்று மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகளை ஆய்வு செய்தனர். அதில் பல பள்ளிகளில் ஒரே வளாகத்தில் கட்டியுள்ள கழிப்பறையில் நடுவில் தடுப்பு சுவர் அமைத்து ஒரு பகுதியை மாணவிகளும், மறு பகுதியை மாணவர்களும் பயன்படுத்தி வந்தனர். நான்கு குழுவின் ஆய்வு முடிவில் மாவட்டத்தில் 163 பள்ளிகளில் மாணவிகளுக்கு தனியாக கழிவறை கட்ட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி 163 பள்ளிகளிலும் மாணவிகளுக்கு தனி கழிப்பறை கட்டுவதற்காக ஊரக முகமை நிதியிலிருந்து ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 35 ஆயிரம் ரூபாய் வீதம் 57 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனையொட்டி விரைவில் கட்டுமானப் பணி துவங்கப்பட உள்ளது. மேலும் பள்ளிக் கழிவறைகளை பராமரிக்க ஊராட்சிகளில் நியமிக்கப்பட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள், கூடுதலாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் 22 ஆயிரம் பேர் தேர்ச்சி சான்றிதழ் பெற முடியாமல் தவிப்பு


    கடந்த 2013-ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டதனால், இடைநிலை ஆசிரியருக்கான தகுதித் தேர்வில் மட்டும் 72 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்கள் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை ஆன்-லைன் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை டிஆர்பி செய்திருந்தது. இதன் அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஐந்து நாட்களுக்குள் தேர்ச்சிக்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என டிஆர்பி அறிவிப்பு வெளியிட்டது.

இந்த அறிவிப்பை அறிந்த 50 ஆயிரம் பேர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ஆன்-லைன் மூலமாக பதிவிறக்கம் செய்து கொண்டனர். 22 ஆயிரம் பேர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்யவில்லை. டிஆர்பி அறிவிப்பு வெளி யிட்டதை அறியாத நிலையில், பலர் குறிப்பிட்ட காலக்கெடுவான ஐந்து நாட்களுக்குள் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை ஆன்-லைனில் இருந்து பதவிறக்கம் செய்யவில்லை. தகவல் அறிந்து சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய முயற்சி செய்தபோது, டைம்- அவுட் என வந்ததால், அவர்களால் தேர்ச்சி சான்றிதழை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சான்றிதழ் பெறாத சிலர் இது குறித்து டிஆர்பி அளித்துள்ள தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஒரு வாரத்தில் மீண்டும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வெளியிடப்படும் என்று கூறி யுள்ளனர்,

ஆனால், இரண்டு மாதம் கடந்தும், அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை எனத் தெரிய வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகா ரிகள் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் பெறாதவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Ignou M.ed entrance result

https://studentservices.ignou.ac.in/Openmat/MED/2014/MEd_Entrance_Res2014.asp

Monday, November 10, 2014

மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்க, விரைவில் தேசிய திறனறி திட்டம்!

அரசு பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில், விரைவில், தேசிய திறனறி திட்டம் துவங்கப்படுகிறது.

மைதானம், போதிய பயிற்சியின்மை, திறமை இருந்தும் தங்களுக்கான வாய்ப்பு கிடைக்காமல், பள்ளி மாணவர்கள் பலர், போட்டியின் ஆரம்ப நிலையிலேயே வெளியேறுகின்றனர். ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக், நர்சரி பள்ளிகளின் மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள், அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைப்பதில்லை.

அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கவும், இளம் வயதில் நல்ல போட்டியாளராக்கவும், தேசிய திறனறி திட்டம் என்ற புதிய திட்டத்தை, மத்திய அரசு கொண்டு வர உள்ளது. இத்திட்டத்தில், முதல் கட்டமாக, எட்டு முதல் 12 வயதுடைய 75 ஆயிரம் மாணவ, மாணவியர், நாடு முழுவதும் கண்டறியப்படுவர்.

அவர்களுக்கு பயிற்சி வழங்க, தேசிய அளவிலான மைதானம், அடிப்படை கட்டமைப்பு வசதி, மாவட்டந்தோறும் விளையாட்டுக்கென தனி பள்ளி, அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள், நான்கு ஆண்டுகளுக்குள் ஏற்படுத்தப்படுவர்.

அரசு பள்ளி விளையாட்டு ஆசிரியர் ஒருவர் கூறும்போது, "சிறு வயதிலேயே விளையாட்டில் ஆர்வம், விதிமுறை, குறிப்புகளை மனதில் பதிய வைத்து, நல்ல மைதானங்களில் அனுபவமிக்கவர்களை கொண்டு பயிற்சி வழங்கினால், கிராமப்புற மாணவர்கள் பலர், தேசிய அளவிலான போட்டிக்கு செல்ல வாய்ப்புள்ளது. அதற்கு, தேசிய திறனறி திட்டம் பெரிதும் உதவும்" என்றார்.

6 முதல் 10-ஆம் வகுப்பு வரை ஆங்கில துணைப் பாடப் புத்தகம்

சமச்சீர் கல்வியின் கீழ் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில துணைப் பாடப் புத்தகம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வியின் கீழ், தமிழகம் முழுவதும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பொதுப்பாடத் திட்டம் 2011-12-ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பாடத்திட்டத்தின் கீழ், ஆங்கிலப் பாடத்துக்கு ஒரு புத்தகம் மட்டுமே வழங்கப்படுகிறது.

ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக், மாநிலப் பாடத்திட்டங்களின் கீழ் மாணவர்களுக்கு ஆங்கில துணைப் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், பொதுப் பாடத் திட்டத்தின் கீழ், துணைப் பாடப் புத்தகம் வழங்கப்படவில்லை. மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் வாசிக்கும் திறனை ஊக்குவிப்பதற்காக மீண்டும் இந்த துணைப் பாடப் புத்தகத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 10 சிறிய கதைகள் கொண்ட புத்தகமும், 9, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரேயொரு கதை கொண்ட புத்தகமும் வழங்கப்பட உள்ளது. வாரத்தில் ஒரு நாள் இந்தப் புத்தகத்திலிருந்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வகுப்பு எடுப்பார்கள். இந்தப் புத்தகத்தின் மூலம் ஆங்கிலம் வாசிப்பதில் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தைத் தயாரிக்கும் பணிகள் இப்போது தொடங்கியுள்ளன.

இதுதொடர்பாக, அரசின் ஒப்புதல் பெறப்பட்டு பாடப்புத்தகங்கள் இறுதிசெய்யப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 2016-17-ஆம் கல்வியாண்டில் இந்தப் புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

LIST OF RESTRICTED. HOLIDAYS - LIST OF RESTRICTED. HOLIDAYS 2015

1. New Year's Day. January 1 Thursday

2. Makar Sankranti. January 14 Wednesday

3. Pongal. January 15 Thursday

4. Basant Panchami
/Sri Panchami
January 24 Saturday

5. Guru Ravidas's Birthday February o3 Tuesday

6. Swami Dayananda
Saraswati Jayanti
February 14 Saturday

7. Shivaji Jayanti. February 19 Thursday

8. Holika Dahan. March o5 Thursday

9. Chaitra Sukladi/Gudi
Padava/Ugadi/Cheti Chand
March 21 Saturday

10. Easter Sunday. April o5 Sunday

11.a Vaisakhi/Vishu/Masadi April 14 Tuesday

12. Vaisakhadi(Bengal)/ Bahag Bihu (Assam)
April 15 Wednesday

13. Hazarat Ali's Birthday. May o3 Sunday

14. Guru Rabindranath's
birthday
May o9 Saturday

15. Jamat-ul-Vida. July 17 Friday

16. Rath Yatra July 1 Saturday

17. Parsi New Year's day/Nauroz August 18 Tuesday

18. Onam August 28 Friday

19. Raksha Bandhan. August 29 Saturday

20. Vinayakar Chaturthi
September 17 Thursday

21. Dussehra (Maha Saptami)
(Additional)
October 20 Tuesday

22. Dussehra (Maha Ashtami)
(Additional)
October 21Wednesday

23. Dussehra (Maha Navmi) October 22 Thursday

24. Maharishi Valmiki's Birthday October 27 Tuesday

25. Karaka Chaturthi (Karva
Chouth)
October 3o Friday

26. Deepavali (South India) November 10 Tuesday

27. Naraka Chaturdasi November 10 Tuesday

28. Govardhan Puja November 12 Thursday

29. Bhai Duj November 13 Friday

3o. Pratihar Sashthi or Surya
Sashthi (Chhat Puja)
November 17 Tuesday

31. Guru Teg Bahadur's
Martyrdom Day
November 24 Tuesday

32. Christmas Eve. December 24 Thursday.

ஓய்வூதியதாரர்களுக்கு புது வசதி: ‘ஜீவன் பிரமாண்’ திட்டம் அறிமுகம்

  நாட்டிலுள்ள கோடிக்கணக்கான அரசு மற்றும் பொதுத் துறை நிறுவன ஓய்வூதியதாரர்களுக்கு உதவும் வகையில் ஜீவன் பிரமாண் என்ற திட்டத்தை பிரதமர் மோடி டெல்லியில் நேற்று அறிமுகப்படுத்தினார். இதன் படி ஓய்வூதியதாரர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதை மின்னணுச் சான்று வழியாக அரசுக்கு உறுதிப்படுத்தும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. தற்போது ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் அரசு அலுவலகங்களில் நேரில் ஆஜராகி தங்கள் இருப்பை பதிவு செய்வது கட்டாயமாக உள்ளது.

முதியவர்கள் இதனால் சிரமப்பட்ட நிலையில் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆதார் எண் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படும். மத்திய மின்னணு அமைச்சகம் உருவாக்கியுள்ள சிறப்பு மென்பொருள் ஓய்வூதியதாரர்களின் ஸ்மார்ட்ஃபோனுக்கு அனுப்பப்படும். இதில் ஓய்வூதியதாரர்களால் பயோமெட்ரிக் முறையில் பதியப்படும் கருவிழி அல்லது கை ரேகைகள் மத்திய அரசின் தகவல் தொகுப்புக்கு அனுப்பப்பட்டு அவரது இருப்பு உறுதி செய்யப்படும். இதற்கான மென்பொருள் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை ஓய்வூதியதாரர்களுக்கு இலவசமாக தரவும் அரசு திட்டமிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண்: 6 வாரத்திற்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு


   ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு 6 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 67 பேர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் தமிழக அரசின் இரண்டு அரசாணைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இட ஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்த அனைத்து தேர்வாளர்களுக்கும் அரசு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மனுதாரர்கள், வெயிட்டேஜ் மதிப்பெண்களால் பலரும் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு சாதகமாகவும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மனுதாரர்களுக்கு ஆதரவாகவும் தீர்ப்பு வழங்கியதும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் 6 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டே வருங்காலத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.