இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, October 11, 2014

இனி சான்றிதழ்களில் Gazetted officers ரிடம் கையொப்பம் பெற தேவை இல்லை,சான்றிதழ்களில் சுய கையொப்பமே போதுமானது-தமிழக அரசு உத்தரவு

அரசு பள்ளிகளில் எஸ்.டி., மாணவியருக்கு கராத்தே பயிற்சி


அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும், எஸ்.டி., மாணவியருக்கு கராத்தே பயிற்சியளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் நீலகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். பழங்குடியின மாணவியரின் பாதுகாப்பு கருதி, அவர்களுக்கு கராத்தே பயிற்சியளிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தர்மபுரி மாவட்டத்தில், 90 பள்ளிகளும், நாமக்கல் மாவட்டத்தில், 69 பள்ளிகள், சேலம் மாவட்டத்தில், 105 பள்ளிகள், நீலகிரி மாவட்டத்தில், 33 பள்ளிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில், 185 பள்ளிகளும் சேர்த்து மொத்தம், 482 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கூறியதாவது: இன்றைய சூழலில் பெண்களுக்கு பல இடங்களில் பல சூழ்நிலைகளில், பாதுகாப்பற்ற நிலை உள்ளது. பெரு நகரங்களில் மட்டுமின்றி, கிராமங்களிலும், பெண்கள் பல இடர்பாடுகளை சந்திக்க வேண்டியுள்ளது. இதற்காக மாணவியருக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு உருவாகியுள்ளது. மாணவியர் மன தைரியத்துடன் சமுதாயத்தை எதிர்கொள்ள கராத்தே பயிற்சி அவசியமாகிவிட்டது. அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரை, 3 மாதங்களுக்கு, தகுதி வாய்ந்த கராத்தே பயிற்சியாளர்களை கொண்டு, மாணவியருக்கு பயிற்சியளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி மாலைவேலையில், வாரத்துக்கு இரண்டு நாட்கள், ஒரு மணி நேரம் வீதம் நடத்தப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 3 ஆயிரம் ரூபாய் நிதியை, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி ஒதுக்கீடு செய்து உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Sastra University b.ed prospectus

Friday, October 10, 2014

Bharathiar University : Results of M.Ed. Entrance Exam – July 2014.

வாக்காளர் பட்டியல் திருத்தம் : 10 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமனம்

2015 ஜன.,1ஐ தகுதி நாளாகக்கொண்டு 18 வயது நிரம்பியவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம் அக்.,15ல் துவங்கி நவ.,10 வரை நடக்கிறது. இதை கண்காணிக்க சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பூஜா குல்கர்னி; விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூருக்கு சுகந்தி; தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலத்திற்கு சுதீப்ஜெயின்; அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூருக்கு முகமது அஸ்லாம்; நாகை, தஞ்சை, திருவாரூருக்கு அண்ணாமலை; நாமக்கல், கரூர், திண்டுக்கல்லுக்கு சித்திக்;

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோட்டிற்கு பாலச்சந்திரன்; மதுரை, தேனி, விருதுநகருக்கு வெங்கடேஷ்; ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டைக்கு மணி வாசகம்; தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரிக்கு சமயமூர்த்தி ஆகிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் உத்தரவிட்டு உள்ளார்.

அரசு பள்ளிகளில் கல்வித்தரம் : மத்திய குழுவினர் நேரில் ஆய்வு

  மத்திய அரசு சார்பில், பல்வேறு கல்வி வளர்ச்சிப் பணிகள், தமிழக அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளி படிப்பை பாதியில் விட்ட மாணவர்களுக்கு, பயிற்சி அளித்து, பின், முறையான பள்ளிகளில் சேர்ப்பது, தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி உட்பட, பல திட்டங்கள், மத்திய அரசு நிதியில் செயல்படுத்தப்படுகின்றன. இதை, மூவர் குழு, ஆய்வு செய்து வருகிறது. குஜராத் மாநில அரசின், முன்னாள் தலைமை செயலர், மான்காட், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தைச் சேர்ந்த, ரங்கராஜன், உலக வங்கி சார்பில், அமெரிக்காவைச் சேர்ந்த, மூனா ஆகியோர், அரசு பள்ளிகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சில அரசு பள்ளிகளில், மத்திய குழு ஆய்வு செய்தது. நேற்று, விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனம் அருகில் உள்ள, ஓங்கூர் தொடக்கப் பள்ளி, சாரம் அரசு மேல்நிலைப்பள்ளி, மயிலத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி, சாரத்தில் உள்ள, வட்டார வள மைய பயிற்சி மையம் உட்பட பல இடங்களை, மத்திய குழுவினர் பார்வையிட்டனர். அனைவருக்கும் கல்வி இயக்குனரக மாநில திட்ட இயக்குனர், பூஜா குல்கர்னி, இணை இயக்குனர், நாகராஜ முருகன் உள்ளிட்ட அதிகாரிகள், மத்திய குழுவுடன் பார்வையிட்டு வருகின்றனர். இன்றும், விழுப்புரம் மாவட்டத்தில், பல அரசு பள்ளிகளில், திடீர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். ரங்கராஜன் கூறுகையில்,

''பள்ளிகளை பார்வையிட்டுக் கொண்டிருக்கிறோம்; தற்போதைக்கு, எதுவும் கூற முடியாது,'' என்றார். இணை இயக்குனர், நாகராஜ முருகன் கூறுகையில், ''மாணவர்களின் வாசிப்புத் திறன், ஒட்டுமொத்த கல்வித்தரம், பள்ளிகளில் உள்ள வசதிகள், ஆசிரியரின் கற்பித்தல் திறன் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும், மத்திய குழுவினர் பார்வையிடுகின்றனர். இதுவரை பார்வையிட்ட பள்ளிகளில், மத்திய குழுவினர், எவ்வித குறையையும் தெரிவிக்கவில்லை,'' என்றார்.

7 % அகவிலைப்படி உயர்த்தி அறிவித்தது தமிழக அரசு -தீபாவளிக்கு முன்னர் ARREAR பணமாக பெற்றுக் கொள்ளலாம

் அனைத்து அரசு பணியாளர்களுக்கும் 7% அகவிலைப்படி உயர்த்தி அறிவித்தது தமிழக அரசு ஜூலை ஒன்றாம் தேதி முதல் முன்தேதி இட்டு வழங்க உத்தரவு. இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையை கொண்டாட இருக்கும் வேலையில் இது பெரிய உதவியாக இருக்கும் என அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.... தீபாவளிக்கு முன்னர் ARREAR பணமாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி கடந்த ஜூலை மாதம் முதல் தேதியிலிருந்து கணக்கிட்டு வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

அகவிலைப்படி உயர்வு மூலம் ஓய்வூதியதாரர்கள் உள்பட 18 லட்சம் பேர் பயனடைவார்கள் என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்

அகவிலைப்படி - 01.07.2014 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியீடு

Thursday, October 09, 2014

அக்டோபர் 16 முதல் மீண்டும் "கிஸான் விகாஸ்' திட்டம்


"கிஸான் விகாஸ்' பத்திர சேமிப்புத் திட்டம் அக்டோபர் 16-ஆம் தேதி முதல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தமிழக தலைமை தபால் துறைத் தலைவர் டி.மூர்த்தி தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியது: உலக தபால் தினத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவில் தேசிய தபால் வாரம் அக்டோபர் 9 முதல் 15-ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

. விரைவு தபால் சேவையில் அன்றைய தினம் அனுப்பும் தபாலை அன்றைய தினமே பட்டுவாடா செய்யும் திட்டம், சென்னை அண்ணாசாலை, வால்டாக்ஸ் சாலை ஆகிய இரண்டு தபால் நிலையங்களில் 24 மணி நேர விரைவு தபால் சேவை மையம், தாம்பரம் ரயில் நிலையத்தில் விரைவு தபால், பார்சல் பதிவு மையங்கள் ஆகிய புதிய திட்டங்கள் அக்டோபர் 11-ஆம் தேதி தொடங்கப்படுகின்றன. மேலும், சென்னையில் தெரிவு செய்யப்பட்ட தபால் நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமையும் விரைவு தபால்களுக்கு சிறப்பு பட்டுவாடா செய்யும் சேவை தொடங்கப்படுகிறது. அக்டோபர் 14-ஆம் தேதி, தமிழகத்தில் தெரிவு செய்யப்பட்ட தபால் அலுவலகங்களில் தனியார் "டி.டி.ஹெச்' சேவைக்கான சந்தா வசூல் செய்தல், டி.வி.எஸ். நிறுவனத்தில் கடன் மூலம் வாங்கிய இரண்டு சக்கர வாகனங்களுக்கான மாதத் தவணை செலுத்தும் சேவை ஆகியவை தொடங்கப்படுகின்றன.

கடந்த நிதியாண்டில் வணிக நடவடிக்கைகள் வாயிலாக தமிழக தபால் துறைக்கு ரூ.1,041 கோடி வருவாய் கிடைத்துள்ளது. நிகழாண்டு ஆகஸ்ட் வரை, ரூ.440 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தனி நபர் கடிதப் போக்குவரத்து, 15 முதல் 20 சதவீதம் வரை குறைந்துள்ளது. அதே நேரத்தில், வணிகக் கடிதங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கடந்தாண்டில், தமிழக தபால் வட்டம், 2.5 லட்சம் பார்சல்களை கையாண்டுள்ளது. இது நிகழாண்டு ஆகஸ்ட் வரை 3.35 லட்சமாகும். இந்த எண்ணிக்கை 7 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கிறோம். தமிழகத்தில் மொத்தமுள்ள 11,888 தபால் நிலையங்கள், 2,506 துணை தபால் நிலையங்கள், 94 தலைமை தபால் நிலையங்களில் கணினி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 2 ஆயிரம் கிராமப்புறத் தபால் நிலையங்களில் இன்னும் 6 மாதங்களுக்குள் கணினி வசதி ஏற்படுத்தப்படும். தற்போது 9,288 கிராமிய தபால் நிலையங்கள் செயல்படுகின்றன.

மின் கட்டணம் வசூல் சேவையில், தமிழக தபால் துறைக்கு ரூ.1 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் 4 கிராமப்புற, 4 துணை தபால் நிலையங்கள் திறக்கத் திட்டமிட்டுள்ளோம். கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பரில் "கிஸான் விகாஸ்' பத்திர சேமிப்புத் திட்டம் நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தத் திட்டம் மீண்டும் அறிமுகம் செய்யப்படுகிறது. அக்டோபர் 16-ஆம் தேதி முதல் "கிஸான் விகாஸ்' பத்திர சேமிப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது என்றார் டி.மூர்த்தி.

அரசு பள்ளிகளில் 'தூய்மை' : ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு

"பள்ளி அலுவலகம், வகுப்பறைகளில் ஒட்டடை அடித்து, தூய்மையாக வைத்திருக்க வேண்டும்,” என, பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் உத்தரவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, அக்.2ல் 'கிளீன் இந்தியா' திட்டத்தை துவக்கி வைத்தார். மோடியின் இத்திட்டம் நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திட்டத்தை அனைத்து மாநிலங்களும் கடைபிடிக்க வேண்டும் என, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளத

ு. 'தூய்மை பள்ளி' திட்டம்: இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, உதவி பெறும் பள்ளிகளில், அக்.,9 முதல் 2015 ஆக.,15 வரை 'தூய்மை பள்ளி' திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என, பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார். அதில், பள்ளி வளாகம், விளையாட்டு மைதானத்தை சுத்தமாக வைக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் முட்புதர்களை அகற்ற வேண்டும். பள்ளி குடிநீர் தொட்டியில் 'குளோரினேஷன்' செய்ய வேண்டும். சத்துணவு மையத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திடல் வேண்டும். தலைமை ஆசிரியர் அறை, வகுப்பறை, நூலகம், அறிவியல் ஆய்வுக்கூடம் ஆகியவற்றில் ஒட்டடை அடித்து தூய்மையாக வைக்க வேண்டும். பள்ளி வளாக கதவுகள், ஜன்னல்கள், பேன், நாற்காலிகள், மாணவர் இருக்கைகள், அலமாரி, கம்ப்யூட்டர், டிவி.,க்கள், லேப்-டாப் போன்றவற்றில் படிகிற தூசிகளை அன்றாடம் துடைத்து, தூய்மையாக வைத்திடல் வேண்டும்.

பள்ளி கட்டடங்களை பழுதுபார்த்து, வெள்ளை அடிக்கவேண்டும். விழிப்புணர்வு: மாணவர்களுக்கு சுத்தம், சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு தர வேண்டும். தினமும் நடக்கும் காலை வழிபாட்டில் மகாத்மா காந்தியின் சுத்தம், சுகாதாரம் சார்ந்த கூற்றுக்களை பேச வைக்க வேண்டும். பேச்சு, கட்டுரை, ஓவியம், தனிநடிப்பு போட்டிகள் நடத்தி, 'தூய்மையான பள்ளி' என, அறிய செய்தல் வேண்டும். மேலும், தினமும் மாணவர்கள் பல் துலக்குதல், குளித்தல், நகம் வெட்டுதல், சுத்தமான உடை அணிதல், சாப்பிடுவதற்கு முன் சோப்பால் கை கழுவுதல் குறித்து பயிற்சி அளிக்கவேண்டும். இது போன்ற செயல்பாடுகள் மூலம், அந்தந்த பள்ளிகளை, 'தூய்மை பள்ளி'களாக வைத்திருக்கவேண்டும், என, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு


இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பெறும் அறிஞர்களை நோபல் பரிசுக்குழுவினர் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயற்பியல், வேதியியல் ஆகிய பிரிவுகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பிரெஞ்சு எழுத்தாளர் பேட்ரிக் மோடியானோவுக்கு இந்த ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு வழங்கப்படுகிறது.  இரண்டாம் உலகப்போரின்போது, பிரான்ஸ் நாட்டை ஜெர்மனியின் நாஜிப் படைகள் ஆக்கிரமித்த காலக்கட்டத்தின் நிகழ்வுகளை தனது படைப்பாற்றல் மூலம் தன் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியதற்காக இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கபடுகிறது” என்று நோபல் பரிசுக்குழு தெரிவித்துள்ளது. 

வரைவு வாக்காளர் பட்டியல் 15ல் வெளியீடு: வரும் 19 மற்றும் நவம்பர் 2 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள


   இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தில் அடங்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 2015 ஐ மைய நாளாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல்கள் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் அனைத்து நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வரும் 15ம் தேதி வெளியிடப்படும். பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்பத்தார்களது பெயர்கள் குறித்த விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா என்பது குறித்து சரிபார்த்து கொள்ளலாம்.

மேலும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள், வரும் ஜன. 2015 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், அதாவது ஜன. 1997க்கு முன் பிறந்துள்ளவர்கள் படிவம் 6ஐ பூர்த்தி செய்து சேர்க்கலாம். பெயர்கள் நீக்கம் தொடர்பாக, படிவம் 7ஐ பூர்த்தி செய்து நீக்கலாம். பதிவுகளில் திருத்தம் தொடர்பாகவும், மற்றும் சட்டமன்ற தொகுதிக்குள் இடம் பெயர்ந்துள்ளவர்கள், புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 8ஐ பூர்த்தி செய்து அதற்கான ஆவண ஆதார நகலினை சேர்த்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்திலோ அல்லது வாக்குச்சாவடி மையங்களிலோ வரும் 15 முதல் நவம்பர் 10 முடிய உள்ள காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம்.மேலும் வரும் 19 மற்றும் நவம்பர் 2 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் உரிய படிவங்களை பெறவும், பூர்த்தி செய்த படிவங்களையும் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்களில் சேர்ப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர வலைதளம் மூலமாகவும் பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் தொடர்பாகவும் விண்ணப்பிக்கலாம். ஜனநாயகத்தை வலுப்படுத்த, தகுதியுள்ள அனைத்து பொதுமக்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற ஏதுவாக, வரைவு வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு, வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு சுருக்க திருத்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

ஓய்வூதியம் - சலுகையா, உரிமையா? “- theekkathir


   நீங்கள் வேலை செய்த காலத்தில் உங் களுக்குச் சம்பளம் வழங்கப்பட்டது. ஓய்வுபெற்ற பிறகு இப்போது எந்த வேலையும் செய்வதில்லை. பிறகு ஏன் உங்களுக்கு இப்போதும் சம்பளம் (ஓய்வூதியம்) கொடுக்க வேண்டும்?”இப்படி ஒரு கேள்வி ஒரு சிலரால் அவ்வப்போது எழுப்பப்பட்டு வருகிறது.முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசும், அதற்குமுந்தைய பாஜக 2 அரசும், தற்போதைய பாஜகஅரசும், ஓய்வூதியத் திட்டத்தைச் சீரழிப்பதற் குச் சொல்லிவரும் புள்ளுகளைக் கேட்டுக்கேட்டுத் தான் ஒரு சிலர் இப்படிப் பேசி வருகிறார்கள்.“ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் அர சுக்கு நிதிச்சுமை அதிகரித்துக் கொண்டே போகிறது. எனவே, எதிர்காலத்தில் ஓய்வூதியர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்“ என்று முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் நிதியமைச்சர் ப.சிதம்பரம் திருவாய் மலர்ந் தருளினார்.இதே காரணங்களைச் சொல்லி, இதற்கு முந்தைய பாஜக 2 அரசின் நிதியமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹாவும் ஜஸ்வந்த் சிங்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்தனர்.

தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள பாஜகவின் மோடி அரசு, ஓய்வூதியச் சட்டத்தில் பல்வேறு நாசகரமான திருத்தங்களைச் செய்து முடிக்கத் துடித்துக் கொண்டிருக்கிறது.தங்களின் செயல்களை நியாயப்படுத்துவதற் காக, இவர்கள் அவிழ்த்துவிடும் பொய்யுரைகளை ஊடகங்கள் வழியாக அறியும் பொதுமக்களுக்கு - ஏன், நமக்கே கூட, ஓய்வூதியம் என்பது அரசின் கருணையால் தரப்படும் சலுகைதானோ என்றுசந்தேகத்தை ஏற்படுத்தி விடுகிறது. அந்த அள வுக்கு, ஓய்வூதியம் என்பது சலுகையாகவே சித்தரிக்கப்பட்டு வருகிறது.ஓய்வூதியம் என்பது உழைப்பாளிகளின் உரி மையே, சலுகையல்ல என்பதுதான் உண்மை.எப்படி? ஓய்வூதியம் பிறந்த கதை ஓய்வூதியம் என்பது போராட்ட நெருப்பில் விளைந்த உழைப்பாளர்களின் உரிமையாகும். 200 ஆண்டுகளுக்கு முன்னால், 1789-99களில் நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சியின் போது, அந்நாட்டுத் தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் முதன்மை யானது ஓய்வூதியக் கோரிக்கை. உலகில் ஓய்வூதி யத்திற்காக எழுப்பப்பட்ட முதல் குரல். எனினும், அந்த வேளையில் இந்தக் கோரிக்கை வெற்றி பெறவில்லை.

தொழிற்சங்கங்கள் மீண்டும் இக்கோரிக்கையை 1890ல் முன்வைத்துப் போரா டியதன் விளைவாக 1908ல் ஓய்வூதியக் கோரிக்கை யை வென்றெடுத்தார்கள்.மேலும், ஜெர்மனியில் ரகசியமாகச் செயல்பட்டு வந்த சோஷலிஸ்ட்டுகளின் (கம்யூனிஸ்ட்டு களின்) தொடர்ந்த நிர்ப்பந்தங்களின் விளைவாக, ஓய்வூதியம் வழங்குவதற்கான சட்டத்தை ஜெர்மனி அரசு 1889ல் நிறைவேற்றியது. உலகில் முதன்முதலாக ஓய்வூதியத்திற்கென சட்டம் இயற்றிய நிகழ்ச்சி இதுதான்.இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, பிரிட்டனிலும், மெல்ல மெல்ல ஏனைய பிற நாடு களிலும் ஓய்வூதியம் சட்டமாக்கப்பட்டது.நமது இந்தியாவில், பிரிட்டிஸ்ஷார் ஆட்சிக்காலத்தில் 1881ல் முதன்முறையாக அரசு ஊழியர் களுக்கு ஓய்வூதியம் அறிமுகப்படுத்தப்பட்டது.இப்போதைக்கு இந்த வரலாறு போதும். விஷயத்திற்கு வருவோமா! கொடுத்ததைத் திரும்பப் பெறுவதே ஓய்வூதியம் எடுத்துக்காட்டாக, நமது இந்திய நாட்டை எடுத்துக் கொள்வோம். நீர், நிலம், காற்று ஆகியவை தவிர, ஏனைய அனைத்துச் செல்வங்களையும் உருவாக்கியது நமது நாட்டின் அனைத்து உழைப்பாளி மக்கள்தான்.செல்வங்கள் என்றால்...

இதோ, மார்க்ஸ் கூறுகிறார்.“முதலாளித்துவப் பொருள் உற்பத்தி முறை நிலவுகிற சமுதாயங்களின் செல்வம், `சரக்குகளின் பெருந்திரட்டலாகக் காட்சியளிக்கிறது’....”அதாவது, உழைப்பாளி மக்கள் உற்பத்தி செய்து குவித்த சரக்குகள்தான் நமது நாட்டின் செல்வங்கள் ஆகும். விற்பனைக்காக உற்பத்தி செய்யப் படும் பொருட்களே சரக்குகள் எனப்படும். உணவுப் பொருட்கள், ஆடை அணிகலன் உள்ளிட்ட மக்கள் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களுமே சரக்குகள் தான். இவைதான் இந்திய நாட்டின் செல்வங்கள். இவற்றின் பண மதிப்பு, பல லட்சம் கோடி ரூபாய் ஆகும்.இந்தச் செல்வங்களை உற்பத்தி செய்வ தில், உழைப்பாளி மக்கள் நேரடியாகவும், மறைமுக மாகவும் ஈடுபடுகிறார்கள். ஆலைகளில், தொழிற் சாலைகளில், விளைநிலங்களில் உழைப்பாளிகள் நேரடியாக உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள். சுமைப்பணித் தொழிலாளர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், அரசு ஊழியர், ஆசிரியர் உள் ளிட்ட ஏனைய உழைப்பாளிகள் மறைமுகமாக ஈடுபடுகிறார்கள்.உற்பத்தியில் ஈடுபடும் இவர்கள், தங்களின் உழைப்புக்காக ஊதியம் பெறுகிறார்கள்.

ஆனால், உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடு படாத - உழைக்க இயலாத ஒரு பகுதியினரும் மக்கள் திரளில் உண்டு. நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகளே அந்தப் பகுதியினர்.உழைக்க இயலாத, ஊதியம் பெற வாய்ப்பு இல்லாத இவர்களைப் பராமரித்து வருவது யார்?உழைக்கும் மக்கள் உருவாக்கித் தந்த ஒட்டு மொத்தச் செல்வத்தின் ஒரு பகுதிதான், உழைக்க இயலாத இந்த மக்களை பராமரித்து வருகிறது. அதாவது, ஒவ்வொரு உழைப்பாளியும் தனக்காக உழைப்பதோடு, உழைக்க இயலாத பகுதி யினரின் பராமரிப்புக்காகவும் அன்றாடம் உழைத்து வருகிறார்.உழைப்பாளிகள் தாங்கள் உழைத்த காலத்தில், உழைக்க இயலாத பகுதியினருக்குக் கொடுத்த பங்கை, தங்களின் வயோதிக காலத்தில், அடுத்ததலைமுறை உழைப்பாளிகளிடமிருந்து (பண மதிப்பாக) திரும்பப் பெறுகிறார்கள். இதுதான் ஓய்வூதியம்.இப்போது சொல்லுங்கள்,கொடுத்ததைத் திரும்பப் பெறுவது சலுகையா, உரிமையா?உரிமைதானே!

Wednesday, October 08, 2014

Toilet Facility Format

cleaniliness pledge


வாகன விபத்தை தவிர்க்கும் தொழில் நுட்ப கருவி: ஊட்டி அரசு பள்ளி மாணவன் கண்டுபிடிப்பு

டில்லியில் நடந்த தேசிய அறிவியல் கண்காட்சியில், தென் மாநில அளவில், இரண்டாம் இடம் பிடித்து, ஊட்டி அரசுப்பள்ளி மாணவன் சாதனை படைத்துள்ளார். நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் கோகுல்; அவர் 7ம் வகுப்பு வரை, ஊட்டி அருகே ஆர்.கே.,புரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் படித்தார். தற்போது, ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வருகிறார்.இவர், பள்ளி தலைமையாசிரியை பிரமிளா, அறிவியல் ஆசிரியர் சுந்தரம் ஆகியோரின் வழி காட்டுதலுடன், டில்லியில் நேற்று நடந்த '4வது தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சி 2014' போட்டியில் தென் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து, சாதனை படைத்துள்ளார்.

தற்போது டில்லியில் உள்ள மாணவனின் வழிகாட்டியான ஆசிரியர் சுந்தரம் 'நமது நிருபரிடம்' தொலைபேசியின் மூலம் கூறியதாவது: மாணவன் கோகுல், வாகன விபத்தை தவிர்க்கும் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார். வாகன ஓட்டிகள், 2 வினாடி கண் அயர்ந்து துாங்கிவிட்டால், சென்சார் தொழில்நுட்பத்தில், அவரது இருக்கை அதிர்ந்து, அவரது துாக்கத்கை கலைத்து விடும்.வேகத்தடையால் ஏற்படும் வாகன விபத்தை தவிர்க்க, ரேடியோ அலைவரிசை மூலம், வேகத்தடை வருவதற்கு, 10 அடிக்கு முன்பே, டிரைவரை 'அலர்ட்' செய்யும் தொழில்நுட்பம், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க 'ஆல்கஹால் சென்சார்', மொபைல் போன் சென்சார் தொழில்நுட்பங்களும், இந்த கருவியில் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த படைப்புக்கு, தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் பாண்டிச்சேரி என, 6 மாநிலங்களை உள்ளடக்கிய, தென் மாநில அளவில், 2ம் இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த மாணவன் கோகுலின் அம்மாவின் பெயர் தங்கமணி, தந்தை மணி, காபி துாள் கடையில் வேலை செய்கிறார் என்பது குறிப்பிடதக்கது.