இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, September 23, 2014

ஆய்வக உதவியாளர்கள் விரைவில் நியமனம்

தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மாவட்ட வாரியாக காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு, இடஒதுக்கீடு அடிப்படையில் நிரப்ப பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தற்போது அதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்வதற்கு மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் தலைமையில், மாவட்ட கல்வி அதிகாரி, அரசு மேல்நிலைப்பள்ளி மூத்த தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் ஆகியோரைக் கொண்ட குழுவை செப்.,30க்குள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.மாவட்ட கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் சராசரியாக 80 முதல் 100 வரை ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அரசு ஒப்புதலுக்குப்பின் நியமிக்கப்படுவர்' என்றார்.

C.P.S-கணக்குத்தாள்கள்-2009-10-முதல் 2012-2013 வரை தயார்-விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு

உராட்சிஒன்றிய /நிதியுதவி/நகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் C.P.S-கணக்குத்தாள்கள்-2009-10-முதல் 2012-2013 வரை மாவட்ட கருவூல அலுவலர்  அவர்களுக்கும் ,சென்னை தொடக்கக்கல்வி இயக்ககத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளன
விரைவில் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் பெற்று சம்மந்தப்பட்ட பணியாளர்களுக்கு வழங்கப்படும்-

https://app.box.com/s/eau5hhktrjiatzomy2ds

28-09-2014 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெறவுள்ள ஊரக திறனாய்வுத் தேர்விற்கு மாணவர்களின் தேர்வு நுழைவுச் சீட்டினை உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு ஊரக திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பித்த தலைமை ஆசிரியர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Monday, September 22, 2014

தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) முறையின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


    இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2010-ஆம் ஆண்டு ஏப்ரலில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர்களாகப் பணி நியமனம் கோருவோர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் இடைநிலை ஆசிரியர்களுக்காக முதல் தாள் தேர்வும், பட்டதாரி ஆசிரியர்களுக்காக இரண்டாம் தாள் தேர்வும் நடத்தப்படுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைத் தகுதிகாண் மதிப்பெண் முறையில் அடிப்படையில் பணி நியமனம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டது. அதாவது, இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு பிளஸ் 2 (15), ஆசிரியர் பட்டயப் படிப்பு (25), ஆசிரியர் தகுதித் தேர்வு (60) ஆகிய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தகுதிகாண் மதிப்பெண் வழங்கப்பட்டது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2 (10), பட்டப் படிப்பு (15), பி.எட். (15), ஆசிரியர் தகுதித் தேர்வு (60) மதிப்பெண்களுக்கு தகுதிகாண் மதிப்பெண் வழங்கப்பட்டது. மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு தேர்வர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக, இந்த தகுதிகாண் மதிப்பீடுகளைக் கணக்கிடும்போது -ஸ்லாப்- முறை பின்பற்றப்பட்டது இதை மாற்றி ஒவ்வொரு மதிப்பெண் சதவீதத்துக்கும் தகுதிகாண் மதிப்பெண் முறையை கணக்கிடும் வகையில் இந்த முறையை மாற்ற வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார்.  அதைப் பின்பற்றி கடந்த மே மாதம், தமிழக அரசு புதிய அரசாணையும் வெளியிட்டது. இந்தப் புதிய தகுதிகாண் மதிப்பெண் முறையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் 10 ஆயிரம் பேர், இடைநிலை ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், தகுதிகாண் மதிப்பெண் முறை தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவு, தமிழக அரசின் அரசாணை ஆகியவற்றை எதிர்த்து ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 90-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த தகுதிகாண் மதிப்பெண் முறை காரணமாக தாங்கள் பாதிக்கப்படுவதாகவும், இந்த முறையை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரினர். இந்த வழக்குகள் நீதிபதிகள் சதீஷ் கே.அக்னிஹோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு: தகுதிகாண் மதிப்பெண் முறை தொடர்பாக தனி நீதிபதி பரிந்துரை செய்த முறையில் எந்தக் குறைபாட்டையும் இந்த நீதிமன்றம் கண்டறியவில்லை. மேலும், வேறு முறையையும் தமிழக அரசு பின்பற்றலாம் என தனி நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். தன்னிச்சையாகவும், நியாயமில்லாமலும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது என்பதற்கான எந்த ஆதாரங்களையும் மனுதாரர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.

மேலும், வழக்கு விசாரணையின்போது, ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டதை எதிர்த்தும் வாதிடப்பட்டது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் விதிமுறைப்படியே, தமிழக அரசு இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஐந்து சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளது. இது அரசின் கொள்கை முடிவு. இந்த உத்தரவு தன்னிச்சையாகவோ, உரிய காரணங்கள் இன்றியோ பிறப்பிக்கப்பட்டால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். இந்த வழக்குகளின் ஆவணங்களைப் பார்த்த பிறகு, அரசின் முடிவில் தலையிடுவதற்கான எந்தக் காரணங்களும் நீதிமன்றத்துக்கு இல்லை. எனவே, இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்

காலாண்டு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் மாற்றம

:பிளஸ் 2 மற்றும் ௧௦ம் வகுப்பு காலாண்டுத் தேர்வு விடைத்தாள்களை, பொதுத்தேர்வு பாணியில், வெவ்வேறு பள்ளிகளுக்கு அனுப்பி, மதிப்பீடு செய்ய வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து, அரசுப் பள்ளி ஆசிரியர் சிலர் கூறியதாவது:வழக்கமாக, காலாண்டுத் தேர்வு, பொதுத்தேர்வு பாணியில் நடக்கும். ஆனால், விடைத்தாள் திருத்தும் பணி, அந்தந்த பள்ளியிலேயே நடக்கும். இந்த ஆண்டு, ஒரு பள்ளியின் விடைத்தாளை, அருகில் உள்ள வேறொரு பள்ளிக்கு அனுப்பி, மதிப்பீடு செய்ய வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது

.அனைத்துப் பள்ளிகளின் விடைத்தாள்களும், மாவட்டத்திற்குள் உள்ள, வெவ்வேறு பள்ளிகளுக்கு அனுப்பப்படும். இதனால், மதிப்பீடு, சரியான முறையில் இருக்கும் என, கல்வித் துறை கருதுகிறது.இதற்கு, வெவ்வேறு பள்ளி ஆசிரியரை, தேர்வுப் பணியில் ஈடுபடுத்தி இருக்க வேண்டும். பொதுத்தேர்வில், ஒரு பள்ளியின் ஆசிரியர், அதே பள்ளியில், பணியில் இருக்க மாட்டார். வேறொரு பள்ளிக்கு அனுப்பப்படுவார். தற்போது, அதுபோல் நடக்கவில்லை.

இதனால், 'தம் பள்ளி மாணவரின் விடைத்தாளை, வேறொரு பள்ளி ஆசிரியர், கடுமையான முறையில் திருத்தி, மதிப்பெண்ணை குறைத்துவிட்டால், அதிகாரிகள் 'அர்ச்சனைக்கு' ஆளாவோம்' என, ஒரு பள்ளியின் ஆசிரியர் நினைக்கலாம். இதனால், ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு, ஆசிரியரே, விடையை கூறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.இதுபோன்ற பிரச்னைகளையும் சரி செய்தால், அனைத்துப் பணிகளும், பொதுத்தேர்வு போன்று நடக்கும். இதனால், தேர்ச்சி எந்த அளவிற்கு இருக்கும் என்பதையும், ஓரளவு அறிய முடியும். இவ்வாறு, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.இரு வகுப்பு தேர்வுகளும், ஏற்கனவே துவங்கி, பல தேர்வுகள் முடிந்து விட்டன. மீதமுள்ள சில தேர்வுகள், வரும் 26ம் தேதி வரை நடக்கிறது என்பது, குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்களுக்கான முக்கிய படிவங்கள்

TNTET - நிபந்தனை ஏற்று தேர்வு எழுதிவிட்டு தற்போது வழக்கு தொடர்வது ஏற்றுக்கொள்ள முடியாது - உயர்நீதிமன்றம்

TNTET - நிபந்தனை ஏற்று தேர்வு எழுதிவிட்டு தற்போது வழக்கு தொடர்வது ஏற்றுக்கொள்ள முடியாது - உயர்நீதிமன்றம் - TET பணிநியம தடை நீங்கியது TET வெயிட்டேஜ் தொடர்பாக தொடாரப்பட்ட 45க்கும் மேற்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது.நிபந்தனை ஏற்று தேர்வு எழுதிவிட்டு தற்போது வழக்கு தொடர்வது ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் பணிநியமனத்திற்கு ஏற்பட்ட தடையும் விலகுகிறது.விரைவில் அனைவரும் பணியில் சேர்வதற்கான ஆணையினை அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Annamalai University May 2014 results

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகள் தள்ளுபடி

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. தகுதித்தேர்வு மூலம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண்ணுடன் அவர்கள் பிளஸ்-2, பட்டப்படிப்பு, பி.எட், ஆசிரியர் பயிற்சி படிப்பு போன்றவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தற்போது பணி நியமனம் நடைபெறுகிறது.

இந்த வெயிட்டேஜ் முறைக்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வெயிட்டேஜ் முறையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் வெயிட்டேஜ் முறை, 5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் போது சென்னை ஐகோர்ட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது. 45- க்கும் மேற்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்யப்பட்டது.

நிபந்தனைகளை ஏற்று தகுதித்தேர்வு எழுதிவிட்டு தற்போது எதிர்ப்பதை ஏற்க முடியாது என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் மூலம் ஆசிரியர் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீங்குகிறது

பயனுள்ள இணையதள முகவரிகள்!!!


1. ஆன்லைன் -ல் புகைப்படங்களை அழகாக வெட்டித்தரும் பயனுள்ள தளம். HTTP://WWW.CUTMYPIC.COM/
2. வீடியோ விளக்கத்தோடு அசத்தும் இணைய அகராதி.
HTTP://WWW.WORDIA.COM/
3. தமிழில் கணினி செய்திகள்
HTTP://TAMILCOMPUTERTIPS.BLOGSPOT.COM/
4. உங்கள் போடோவை ஓவியமாக மாற்ற ஒரு இலவச மென்பொருள்
HTTP://WWW.FOTOSKETCHER.COM/PORTABLEFOTOSKETCHER.EXE
5. அனைத்து அரிய வீடியோக்களையும் கொடுக்கும் பயனுள்ள தளம்.
http://yttm.tv/
6. ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளம்.
http://classbites.com/
7. தேடல் முடிவுகளை வகை வாரியாக பிரித்து கொடுக்கும் மிகவும் பயனுள்ள தளம்.
http://www.helioid.com
8. தொலைக்காட்சியில் இருந்து வீடியோ பயனுள்ள தளம்.
HTTP://WWW.8ON.TV
9. குழந்தைகள் விரும்பும் கார்டூன் முதல் அத்தனை டி.வி நிகழ்சிகளும் ஒரே இடத்தில் பார்க்க
HTTP://VIDEO.KIDZUI.COM
10. வீடியோ எடிட்டிங் செய்ய உதவும் இலவச மென்பொருள்.
HTTP://WWW.LIGHTWORKSBETA.COM
11. பிறந்தநாள் வாழ்த்து செய்திகளை கொடுக்கும் பிரத்யேகமான தளம்.
HTTP://WWW.FREEBIRTHDAYMESSAGES.COM
12. வலைப்பூவுக்கு அழகான பேக்ரவுண்ட் வடிவமைக்க.
HTTP://BGMAKER.VENTDAVAL.COM
13. வீடியோ மெயில்ஆன்லைன் மூலம் இலவசமாக அனுப்ப.
HTTP://MAILVU.COM
via http://vienarcud.blogspot.com/2011/09/blog-post_5975.html

Sunday, September 21, 2014

ஜி.பி.எப்., கணக்கு எண் இல்லைநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல

     தமிழகத்தில், நகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கான ஜி.பி.எப்., கணக்கு எண்கள் வழங்கப்படாததால், அவர்கள் சம்பளம் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நகராட்சிகளின் கீழ் 65 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் 650க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, டீச்சர்ஸ் பிராவிடண்ட் பண்ட் (டி.பி.எப்.,) பிடித்தம் செய்யப்படுகிறது. இப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு, ஆசிரியர்கள் தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில், அரசு உயர்நிலை பள்ளிகளுக்கு பணிமாற்றம் செய்யப்படுகின்றனர். அப்போது, அவர்களுக்கு ஜி.பி.எப்., கணக்கு துவங்கி, சம்பளத்தில் பணம் பிடித்தம் செய்ய வேண்டும்.இவ்வாறு, நகராட்சி பள்ளிகளில் இருந்து அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு பணிமாற்றம் பெற்ற ஆசிரியர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக ஜி.பி.எப்., கணக்கு எண்கள் துவங்கப்படவில்லை.

இதுகுறித்து மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு எழுதி கேட்டால், அரசுப்பள்ளி என குறிப்பிட்டால் தான் 'ஜி.பி.எப்., கணக்கு எண்' துவக்க முடியும், என தெரிவித்துத்துள்ளது. ஆசிரியர்கள் தற்போது கருவூலம் மூலம் சம்பளம் பெறவும், ஜி.பி.எப்., கணக்கு எண் முக்கியம் என வலியுறுத்தப்படுகிறது. 'அந்த கணக்கு எண் இல்லை என்றால் சம்பளம் வழங்க முடியாது' என கருவூலங்களும் கைவிரித்துவிட்டன. இதனால், இனி வரும் மாதங்களில் நகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு பயன்களை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்க மதுரை செயலாளர் பிரபாகரன், சட்ட செயலாளர் வெங்கடேசன் கூறுகையில், 'அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான நடைமுறைகளை நகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கும் நீடிக்க வேண்டும்.

நான்கு ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள ஜி.பி.எப்., வங்கி கணக்குகளை நகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கும் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

பிளஸ் 2 தேர்வில் மீண்டும் ‘ஜம்ப்ளிங்’ வினா முறை: காப்பி அடிப்பதை தடுக்க நடவடிக்கை


மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் பிளஸ் 2 தேர்வில் மீண்டும் ‘ஜம்ப்ளிங்’ வினா முறையை கொண்டுவர அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல்,தாவரவியல், விலங்கியல், கணிதம் ஆகிய 6 பாடங் களுக்கான தேர்வில் ஒரு மதிப் பெண் வினாக்கள் இடம்பெறும். கணித பாடத்தில் 40 ஒரு மதிப்பெண் வினாக்களும், மற்ற 5 பாடங்களில் தலா 30 வினாக்களும் கேட்கப்படும். மாணவர்கள் காப்பி அடிப் பதை தடுக்கும் வகையில் இப்பாடங்களுக்கான ஒரு மதிப்பெண் வினாக்களில் ‘ஜம்ப்ளிங்’ என்ற முறை கடந்த ஆண்டு வரை பின்பற்றப்பட்டு வந்தது. இந்த முறையில், எல்லா வினாக்களும் ஒன்று தான் என்றாலும், அவை மாறி மாறி இடம்பெற்றிருக்கும். உதாரணத்துக்கு குறிப்பிட்ட ஒரு வினா, ஒரு மாணவ ருக்கு 7-வதாகவும் இன்னொரு வருக்கு 20-வது இடத்திலும் இருக்கலாம்.

கேள்விகள் இடம் மாறி இருப்பதால் மாணவர்கள் காப்பி அடிக்க இயலாது. ‘ஜம்ப்ளிங்’ முறையில் ஏ, பி என இரண்டு வகையான வினா தொகுப்புகள் அச்சிடப்பட்டன. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வின்போது, விடைத்தாளில் ரகசிய குறியீடு (பார்கோடு), மாணவரின் பதிவு எண்ணுடன் கூடிய விடைத்தாள் கட்டு, ஒவ்வொரு தேர்வுக் கூடத்துக் கும் தனித்தனி வினா கட்டு என தேர்வுத்துறை பல புதிய நடைமுறைகளை அறிமுகப் படுத்தியது. அதனால், ஜம்ப்ளிங் முறையில் ஏ, பி என இரண்டு வகையான வினாக்கள் வழங்கும் முறை கைவிடப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப் பட்டது. இதற்கிடையே, ஒருசில இடங்களில் அறிவியல், கணிததேர்வுகளின்போது ஒரு மதிப்பெண் வினாக்களை சில மாணவர்கள் காப்பி அடித்த தாக புகார் எழுந்தது

. இதையடுத்து, ஏற்கெனவே இருந்ததைப்போல பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங் கியல், கணிதம் ஆகிய 6 பாடங்களில் ஒரு மதிப்பெண் வினாக்களில் மீண்டும் ஜம்ப்ளிங் முறையை கொண்டுவர அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இந்த மாதம் நடக்கவுள்ள தனித்தேர்வர்களுக்கான பிளஸ் 2 தேர்வில் இருந்தே இந்த முறையை நடைமுறைப்படுத்த தேர்வுத்துறை திட்டமிட் டுள்ளது.

Friday, September 19, 2014

நற்பண்புகளை வளர்ப்பதற்காக அனைத்து பள்ளிக்கூடங்களிலும் மகிழ்ச்சி கொடுக்கும் வாரம்: அக்டோபர் 2-ந் தேதி முதல் ஒருவாரம் கொண்டாட பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

நற்பண்புகளை வளர்ப்பதற்காக அனைத்து பள்ளிக் கூடங்களிலும் மகிழ்ச்சி கொடுக்கும் வாரம் கொண்டாட பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

மகிழ்ச்சி கொடுக்கும் வாரம்

பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மாணவர்களிடையே ஈகை மனப்பான்மையினை உருவாக்குவதற்கும் மாணவர்கள் அன்புடனும், ஆதரவுடனும் கொடுத்து உதவும் மனப்பாங்குடன் சமூக ஏற்றத்தாழ்வுகளை மறந்து ஒருவருக்கொருவர் கைகோர்த்து பரிசுகளையும், கருத்துக்களையும் பரிமாறிக்கொள்வதற்கும், ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையிலும் அக்டோபர் 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் ‘ மகிழ்ச்சி கொடுக்கும் வாரம் ‘ கீழ்கண்ட வகைகளில் கொண்டாடுமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எழுத படிக்கத்தெரியாதவர்களுக்கு உதவலாம்

1. மாணவர்கள் தங்களின் மனதை கவர்ந்த ஆசிரியர்களின் பணியினை பாராட்டி நன்றி பெருக்கோடு சிறு கட்டுரை வரையலாம்.

2. மாணவர்கள் வசிப்பிடத்திற்கு அருகாமையில் வாழும் இயலாதோர்களுக்கு இயன்ற பரிசுப் பொருட்களை கொடுத்து உதவலாம்.

3. எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு கற்றிட உதவலாம்.

5. பயன்தரும் செய்திகளை, படித்தவர்கள் அதனை படிக்காத நண்பர்களும் படித்திட செய்திடலாம்.

6. மாணவர்கள், அரிய நிகழ்ச்சிகள் குறித்து பெற்றோர்கள், தாத்தா, பாட்டிகளுக்கு கடிதம் எழுதிடச் செய்திடலாம்.

7. மாணவர்கள் தனது சுய முயற்சியில் ஏதாவது ஒரு கைவினைப்பொருட்களை உருவாக்கி மற்றவர்களுக்கு வழங்கிட செய்யலாம்.

8. பயணத்தின் போது மற்றவர்களுக்கு தாம் அமர்ந்து இருக்கும் இருக்கையினை கொடுத்து உதவிடலாம்.

9. பெரியோர்களிடம் தங்களது எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும் விஷயங்களை கலந்துரையாடலாம்.

சாலையை கடக்க உதவவேண்டும்

10. போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளில் சாலையினை கடப்பதற்கு உதவி செய்யலாம். உதவி செய்வது நல்லது.

11. அருகாமையில் உள்ள முதியோர் இல்லம் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று அவர்களோடு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மேற்கொள்ளலாம்.

12. போக்குவரத்து காவலர்களுக்கு பூங்கொத்து கொடுத்து பாராட்டலாம்.

பாலிதீன் பைகளுக்கு பதிலாக காகித உறை

13. பாலிதீன் பைகளின் பயன்பாட்டினை குறைப்பதற்கு பழைய காகிதங்களை கொண்டு உறைகள் (கவர்கள்) செய்யலாம்.

14. சின்ன சின்ன பரிசுப் பொருட்களை அருகாமை வீட்டார்களுக்கு கொடுத்து மகிழலாம்.

15. சிறந்த பத்து பொன்மொழிகளை எழுதி பொது இடங்களில் பார்வைக்கு வைக்கலாம்

16. தங்களுக்கு தெரியாத புதிய ஐந்து நபர்களுக்கு புன்னகையுடன் வாழ்த்துச் சொல்லலாம்.

17. முதியவர்களுக்கு தினசரி நாளிதழ்களை வாசித்துக் காட்டலாம்.

18. தங்களது பெற்றோர்களுக்கு அன்றாட வேலைகளில் உதவலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்: 10 ஆயிரம் பேர் இன்னும் பதிவிறக்கம் செய்யவில்லை


ஆசிரியர் தகுதிச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்ய இன்னும் 6 நாள்களே கால அவகாசம் உள்ள நிலையில், 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இன்னும் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 72 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் தகுதிச் சான்றிதழ்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி பதிவேற்றம் செய்யப் பட்டன. இந்தச் சான்றிதழ்களை செப்டம்பர் 25-ஆம் தேதி வரை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், இரண்டு வாரங்கள் முடிவடைந்த நிலையில் 62 ஆயிரம் பேர் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்னமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்ய வில்லை. இவர்கள் அனைவரும் வரும் 25-ஆம் தேதிக்குள் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்ய கால நீட்டிப்பு வழங்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அக்.,15ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு:புதிதாக பெயர் சேர்க்கவும் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பெயர் பட்டியல் அக்.,15ல் வெளியிடப்படுகிறது. அன்று முதல் புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் விண்ணப்பிக்கும் வாக்காளர் சுருக்கத்திருத்தப்பணிகளும் துவங்குகின்றன.இந்தாண்டு ஜன.,10ல் புதிய வாக்காளர் பெயர்பட்டியல், லோக்சபா தேர்தலையொட்டி ஏப்.,5ல் வாக்காளர் துணைப்பட்டியல் வெளியிடப்பட்டன.

அதன்பின் தொடர் பெயர் சேர்ப்பு, திருத்தப்பணிகள் நடந்து வருகின்றன. அக்.,10ல் அப்பணி முடிகிறது. இம்மூன்று பட்டியல்களும் ஒன்றாக தொகுக்கப்பட்டு அக்.,15ல் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதில் பெயர் இடம்பெறாதவர்கள் அன்று துவங்கி 20 நாட்கள் வரை நடக்கும் வாக்காளர் சுருக்கத்திருத்த பட்டியல் பணிகளில் பெயர் சேர்க்க உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதும் 2015 ஜன.,1ஐ தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பியோர் தங்களை பட்டியலில் புதிய வாக்காளராக பெயர் சேர்க்கவும், ஏற்கனவே உள்ள பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றிக்கான மனுக்களை தாலுகா, நகராட்சி அலுவலகங்களில் தரலாம். ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.

கல்லுாரி மாணவர்களை இப்பட்டியலில் சேர்க்க மாணவ பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பெயர் சேர்ப்பு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்,என்றார்.

வாசிப்பு திறனை அதிகரிக்க தினமும் 2 மணி நேரம் கூடுதல் வகுப்பு:பள்ளிக்கல்வி துறை அதிரடி உத்தரவு


'அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி களில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையான மாணவ, மாணவியரிடையே, வாசிப்புத் திறனை அதிகரிப்பதற்காக, தினமும், 2 மணி நேரம், கூடுதலாக சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. 'இது, கிராமப்புற மாணவர்களுக்கு, பல சிக்கல்களை ஏற்படுத்தும்' என, ஆசிரியர் கூறுகின்றனர். திருப்தியில்லை:அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரகம் (எஸ்.எஸ்.ஏ.,), ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையான மாணவ, மாணவியரின் கல்வித்தரம் குறித்து, ஆய்வு நடத்தியது.

இதன் முடிவு, கல்வித் துறை அதிகாரிகளுக்கு, திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. இதையடுத்து, 'மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த, ஆசிரியர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஏற்கனவே, தொடக்கக் கல்வி இயக்குனர், இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார். இந்நிலையில், 'அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, காலை ஒரு மணி நேரமும், மாலையில், ஒரு மணி நேரமும், கூடுதலாக, சிறப்பு வகுப்பு எடுக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறை, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.துறையின் உத்தரவு அடிப்படையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், சாந்தி அனுப்பிய சுற்றறிக்கையில், 'ஆசிரியர்கள், சுழற்சி அடிப்படையில், தினமும், கூடுதலாக 2 மணி நேரம் சிறப்பு வகுப்பை நடத்தி, மாணவர்களின் வாசிப்புத் திறனை, குறிப்பாக, ஆங்கில வாசிப்புத் திறனை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்து உள்ளார். முதன்மைக் கல்வி அலுவலர்களின், இந்த நடவடிக்கைக்கு, ஆசிரியர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். ஆனால், நடைமுறை ரீதியாக, கிராமப்புற மாணவர்களுக்கு, பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் எனவும், ஆசிரியர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழக தலைவர், தியாகராஜன் கூறியதாவது: கூடுதல் வகுப்பு எடுக்க, நாங்கள் தயார். தற்போது, கிராமப்புறங்களில், காலை 9:30 மணிக்கு, பள்ளி துவங்கி, மாலை 4:30க்கு முடிகிறது. தற்போதைய உத்தரவால், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர், காலை 8:30 மணிக்கே, பள்ளிக்கு வர வேண்டும்.

மாலையில், 5:30 மணி வரை, வகுப்பில் இருக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில், ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் தான் படிக்கின்றனர். பெரும்பாலான மாணவர், காலையில் சாப்பிடாமல் கூட, பள்ளிக்கு வருகின்றனர். நீண்ட தொலைவில் இருந்து, பஸ்கள் மூலமாக வருகின்றனர்.இருட்டிவிடும்:எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள், மிகவும் சிறியவர்கள். இவர்களை, காலை 8:30 மணி முதல், மாலை 5:30 மணி வரை, பள்ளியில் இருந்தால், சோர்வடைவர். மேலும், காலை 7:00 மணிக்கு, கிளம்பினால் தான், 8:30 மணிக்கு, பள்ளிக்கு வர முடியும். அதேபோல், மாலையில் வீட்டுக்குச் செல்ல இருட்டிவிடும். இதுபோன்ற நடைமுறை சிக்கல்கள் தெரியாமல், முதன்மைக் கல்வி அலுவலர்கள் உத்தரவு பிறப்பிக்கின்றனர். கூடுதல் வகுப்பு, நடத்தியே தீர வேண்டும் எனில், இரு வேலைகளிலும், மாணவர்களுக்கு, சிற்றுண்டி தர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தியாகராஜன் தெரிவித்தார்.-