இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, April 21, 2014

கோடை கால பயிற்சி முகாம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

   சென்னை உள்பட தமிழகத்தில் நடைபெறும் கோடை கால பயிற்சி முகாம்களுக்கு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், பல்நோக்கு நேரு உள்விளையாட்டு அரங்கம், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கம், நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கம், நேரு பூங்கா விளையாட்டு வளாகம், அசோக் நகர் புதூர் கிரிக்கெட் அகாதெமி மற்றும் வேளச்சேரி நீச்சல் குள வளாகம் ஆகிய நவீன விளையாட்டு அரங்குகளில் ஆண்டுதோறும் கோடை கால பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இந்த விளையாட்டு அரங்குகளில் ஏப்ரல் 25 முதல் மே 9-ஆம் தேதி வரையிலும், மே 12 முதல் மே 26-ஆம் தேதி வரை என இரண்டு கட்டங்களாக பயிற்சி முகாம்கள் நடைபெறும். தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச் சண்டை, கிரிக்கெட், வாள்சண்டை, கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, ஹாக்கி, ஜுடோ, கோ-கோ, கபடி, டென்னிஸ், டேக்வோண்டோ மற்றும் மேசைப்பந்து ஆகிய விளையாட்டுகளில் 15 நாள்களுக்கு சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும். மேலும் அண்ணா நீச்சல் குளம், அண்ணா சதுக்கம், மெரீனா கடற்கரை, செனாய்நகர் நீச்சல் குளம், வேளச்சேரி நீச்சல் குள வளாகம் ஆகிய மூன்று நீச்சல் குளங்களிலும் நீச்சல் பழகும் திட்டத்தில் நீச்சல் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்த கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளி மாணவர்கள் விளையாட்டு அரங்குகளின் அதிகாரிகள் அல்லது சம்பந்தப்பட்ட பயிற்றுநர்களை காலை, மாலை நேரங்களில் அணுகி விவரங்களை பெறலாம். மாவட்ட அளவில்... இதுபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் கோடை கால பயிற்சிகளுக்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமே பெற்று, பூர்த்தி செய்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 முடிக்காமல் நுழைவுத் தேர்வு மூலம் முதுநிலைப் பட்டம்: அரசுப் பணியில் அமர்த்த உயர்நீதிமன்றம் உத்தரவு

  பிளஸ் 2 முடிக்காமல் நுழைவுத் தேர்வு (Preparative Exam) எழுதி எம்.ஏ. பட்டம் பயின்றவர்களை அரசுப் பணியில் அமர்த்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் நுழைவுத் தேர்வு எழுதாமல் பட்டம் பெற்றவர்களை நிராகரித்தது சரிதான் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2008-ஆம் ஆண்டு குரூப் 2 வுக்கான அறிவிப்பு வெளியிட்டு தேர்வு நடத்தியது. அதில் பங்கேற்ற, பிளஸ் 2 படிக்காமல் நேரடியாக முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் மற்றும் பிளஸ் 2 முடிக்காமல் நுழைவுத் தேர்வு எழுதி முதுநிலைப் பட்டம் பெற்ற சிலரின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.

அவர்களை நிகராகரித்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டது. அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், தங்களை அரசுப் பணியில் நியமனம் செய்ய அரசுக்கு உத்தரவிடக் கோரியும் பி.ராமன் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, பிளஸ் 2 முடிக்காமல், திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றது செல்லாது என உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவில் தெரிவித்துள்ளது.  மேலும், கடந்த 2009-ஆம் ஆண்டு அரசு பிறப்பித்த ஒரு ஆணையில், பிளஸ் 2 முடிக்காமல் பட்டம் பெற்றது செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், பிளஸ் 2 முடிக்காமல் குரூப் 2 தேர்வு எழுதியவர்கள் நிராகரிக்கப்பட்டனர் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பிளஸ் 2 முடிக்காமல் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நேரடியாக முதுநிலைப் பட்டம் பெற்று குரூப் 2 தேர்வு எழுதியவர்களை உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நிராகரித்தது சரிதான். ஆனால், அரசாணை அடிப்படையில் பட்டப்படிப்பு செல்லாது என்பதை முடிவு செய்ய முடியாது. பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின் அடிப்படையில்தான் பட்டப்படிப்பு செல்லுமா செல்லாதா என்பதை முடிவு செய்ய வேண்டும். பிளஸ் 2 முடிக்காமல் நுழைவுத் தேர்வு எழுதி அதன் அடிப்படையில் பட்டப்படிப்பில் சேரலாம் என யுஜிசி விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நுழைவுத் தேர்வு எழுதி பட்டம் பெற்றது செல்லும். எனவே நுழைவுத் தேர்வு எழுதி அதன் மூலம் முதுநிலைப் பட்டம் பெற்று, குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணியில் அமர்த்த வேண்டும். மேலும், மனுதாரர்களில் சிலர் நுழைவுத் தேர்வின் உண்மைச் சான்றிதழை சமர்ப்பிக்காமல், அதன் நகலை இணைத்துள்ளனர். அவ்வாறு நகல் இணைத்த மனுதாரர்கள் ஒரு மாதத்துக்குள் உண்மைச் சான்றிதழை தேர்வாணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் சான்றிதழைச் சரிபார்த்து அவர்களைப் பணியில் நியமனம் செய்ய வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நெட்' தேர்வு அறிவிப்பு: விண்ணப்பிக்க மே 5 கடைசி

கல்லூரி பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மே 5 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்லூரி பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கும், இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெறுவதற்குமான -நெட்- தேர்வை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தி வருகிறது. இந்தத் தேர்வில் தகுதி பெறுபவர்கள், நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்து சேர முடியும். 2014 ஜூன் மாதத்துக்கான தேர்வு இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

   29-6-2014 அன்று இந்தத் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு, www.ugcnetonline.in, www.ugc.ac.in ஆகிய இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். முக்கியத் தேதிகள்: ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கவும், வங்கி சலானை பதிவிறக்கம் செய்யவும் மே 5 ஆம் தேதி கடைசியாகும். சலான் மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்.பி.ஐ.) கட்டணம் செலுத்த மே 7 ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பம் மற்றும் வருகை படிவத்தை பதிவிறக்கம் செய்ய மே 10 ஆம் தேதியும், ஒருங்கிணைப்பு பல்கலை.யில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க மே 15 ஆம் தேதியும் கடைசி நாளாகும்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் மே 12 தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மையங்களில் நடைபெற உள்ளது.இதில் 25333 நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க உள்ளனர். 

1.KANYAKUMARI SLB Govt Hr Sec School Nagercoil -629 001 

2.TIRUNELVELI Sara Tucker Girls Hr Sec School, Palayamkottai, Thirunelveli-627 002 

3.THOOTHUKUDI Victoria Girls Hr Sec School, Thoothukudi- 628 002 

4.VIRUDHUNAGAR KVS(B) Hr Sec School, Virudhunagar-626 003  

5.RAMANATHAPURAM Municipal Girls Hr. Sec. School, Ramanathpuram-623501 

6.SIVAGANGAI Maruthu Pandiyar Nagar Govt Hr Sec School, Sivagangai-630 302 

7.THENI Nadar Saraswathi (B) Hr Sec School, Forest Rd, Theni - 625 531 

8 MADURAI O.C.P.M. Girls Hr. Sec. School, Thallakulam Madurai - 2 

9 DINDIGUL Our Lady Hr Sec School, Madurai Rd, Dindigul- 624 001 

10 KARUR Govt. Hr Sec School, Thanthonimalai, Karur - 639 007 

11 ERODE Govt (G) Hr Sec School, Near Paneer Selvam Park, Erode -638 001. 

12 NAMAKKAL Govt.Hr Sec School, Namakkal South, Auditorium, Moganur Rd, Namakkal - 637 001. 

13 TIRUPPUR Jaivai Girls Corporation Hr Sec School, Tiruppur - 641 602 

14 COIMBATORE & THE NILGIRIS Mani Hr Sec School, No 88 Netaji Rd, Papanaiken Palayam, Coimbatore - 641 037 

15 SALEM Saradha Balamandir Matric. Hr. Sec. School, Rajaji Road, Salem -7 

16 KRISHNAGIRI Govt (B) Hr Sec School, Gandhi Rd,Near Apsara Theatre, Krishnagiri -635 001 

17 DHARMAPURI Adhiyaman Govt (B) Hr Sec School, Dharmapuri - 636 701 

18 PUDUKKOTTAI Sri Bragadambal Govt. Hr Sec School Campus, Pudukottai-622 001. 

19 TRICHY ATMRCM Vasavi Vidyalaya Matric. Hr. Sec. School, No.11 Birds Road, Contonment, Trichy-620001

20 THANJAVUR & TIRUVARUR Sri Madha Matric. Hr. Sec. School, Near Kumbakkonam Bus Stand Kumbakkonam 

21 ARIYALUR & PERAMBALUR CSI Hr Sec School, Market St, Ariyalur- 621 704. 

22 NAGAPATTINAM Natarajan Damayandhi Hr Sec School, Velipalayam, Nagapattinum- 610 001 

23 VILLUPURAM Govt (G) Hr Sec School, Thir.Vi.Ka St, Villupuram-605 602 

24 CUDDALORE Sri Varatham Govt Girls Hr. Sec. School, Venugopalapuram Cuddalore-607001 

25 TIRUVANNAMALAI Gandhi Nagar Matric Hr Sec School, Kizhnachipattu, Thiruvannamalai-606 611 

26 VELLORE Govt. Muslim Hr Sec School, Annasalai, Vellore-632 001 

27 KANCHEEPURAM St.Mary's Girls Hr Sec School, Natham Post, Near Old Bus Stand, Chengalpattu- 603 002 

28 THIRUVALLUR Perunthalaivar Kamarajar Govt. (G) Hr Sec School, Venkatapuram, Ambattur-600 053 

29 CHENNAI Govt. Girls Hr. Sec. School, Ashok Nagar, Chennai - 83

தேர்தல் - 2014 சில முக்கிய குறிப்புகள்

Saturday, April 19, 2014

சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருது: தமிழகத்தில் இருந்து 22 பேர் தேர்வு

   சிறந்த ஆசிரியருக்கான, தேசிய விருதுக்கு, தமிழகத்தில் இருந்து, 22 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி, ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்., 5, தேசிய அளவில், ஆசிரியர் தின நாளாக கொண்டாடப்படுகிறது. அந்நாளை ஒட்டி, ஆசிரியர் பணியை சிறப்பாக செய்பவர்கள், தேசிய மற்றும் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு, செப்., 5ல், விருது வழங்கப்படுகிறது

. தேசிய விருதுக்கு உரிய ஆசிரியரை தேர்வு செய்ய, மத்திய அரசு சார்பில், மாநிலத்திற்கு ஒரு கல்வியாளர் நியமிக்கப்படுகிறார். இவர், மாநில குழுவுடன் சேர்ந்து, சிறந்த ஆசிரியரை தேர்வு செய்து, மத்திய அரசுக்கு பட்டியல் அனுப்புவார். பட்டியல் இறுதியானதும் பெயர் அறிவிக்கப்படும். கடந்த 2013ம் ஆண்டுக்கான விருது, வரும், செப்., 5ல் வழங்கப்பட உள்ளது. உத்தரகண்ட், ராஜஸ்தான், டில்லி உள்ளிட்ட, பல மாநிலங்களில், தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர் பட்டியலை, மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. தமிழகத்திற்கான பட்டியல், இன்னும் வெளியாகவில்லை. கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், 'தமிழகத்திற்கு, 22 விருதுகள் வழங்கப்படுகின்றன. சிறந்த ஆசிரியர் பட்டியலை இறுதி செய்து, மத்திய அரசுக்கு அனுப்பி விட்டோம்.

மத்திய அரசு ஒப்புதல் அளித்ததும், விரைவில், பட்டியல் வெளியாகும். தமிழக அரசு வழங்கும் விருதுக்கான தேர்வுப் பணி, ஜூனில் துவங்கும்' என, தெரிவித்தது.

எஸ்.எம்.எஸ்., வந்தால் ஆசிரியர்களை அனுப்ப வேண்டும்'

     'தேர்தல் பயிற்சிக்கு வரும்படி, ஆசிரியர்களுக்கு எஸ்.எம்.எஸ்., வந்தாலே, அவர்களை அனுப்ப வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், தேர்தல் பணியில், மூன்று லட்சம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆசிரியர்கள். அவர்களில் சிலர், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்கு செல்கின்றனர். அவர்களுக்கு, தேர்தல் பணி பயிற்சி வகுப்பிற்கு வரும்படி, தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் இருந்து, எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படுகிறது.

ஆனால், விடைத்தாள் திருத்தும் மைய பொறுப்பாளர்கள், 'எழுத்து பூர்வமாக, கடிதம் வந்தால் மட்டும் அனுப்புவோம்; பணிக்கு வராவிட்டால், 'மெமோ' கொடுப்போம்' என, கூறுகின்றனர். 'தேர்தல் பயிற்சி வகுப்புக்கு வராவிட்டால், நடவடிக்கை எடுப்போம்' என, தேர்தல் அலுவலர்கள் கூறுகின்றனர். இதனால், ஆசிரியர்கள் செய்வதறியாமல் தவித்தனர். இதுகுறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறும் போது,''எழுத்து பூர்வமான கடிதம் அனுப்ப தாமதமாகும் என்பதால் தான், எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படுகிறது. எஸ்.எம்.எஸ்., வந்தவர்கள், தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு வர வேண்டும். எஸ்.எம்.எஸ்., தகவலை ஆதாரமாக எடுத்துக் கொண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என, பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பயிற்சி முழு நாள் நடைபெறுவதாக இருந்தால், மதிய உணவு ஏற்பாடு செய்யப்படும்,'' என்றார்.

Wednesday, April 16, 2014

ஜூன் 16-ஆம் தேதி முதல் பிளஸ் 1 வகுப்பு தொடக்கம

     வரும் கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்புகள் ஜூன் 16-ஆம் தேதி தொடங்கப்படும்; மீதமுள்ள வகுப்புகளுக்கு ஜூன் 2-ஆம் தேதி பள்ளி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. 10-ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 26 முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது. தேர்வுகள் நிறைவடைந்தன: பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 6, 7, 8, 9 ஆகிய வகுப்புகளுக்கான தேர்வுகள் புதன்கிழமையோடு நிறைவடைந்தன. ஓரிரு மாவட்டங்களில் ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சித் தேதிகளும், தேர்வு தேதிகளும் குறுக்கிட்டுள்ளன

. இதனால், இந்த மாவட்டங்களில் மட்டும் வியாழக்கிழமையும் தேர்வு நடைபெறும். தேர்வுகள் முடிவடைந்தாலும், பள்ளிகள் ஏப்ரல் 22-ஆம் தேதி வரை செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து, வழக்கமாக ஏப்ரல் இறுதி வாரத்தில் நடைபெறும் பள்ளி ஆண்டுத் தேர்வுகள் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே முடிக்க பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் ஏப்ரல் 3-ஆம் தேதி முதல் ஏப்ரல் 16-ஆம் தேதி தேர்வுகள் நடைபெற்றன. இந்தப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 23 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. தொடக்கக் கல்வித் துறை:

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை செயல்பட உள்ளன. இந்தப் பள்ளிகளில் தேர்வுகள் அடுத்த வாரத்தில் தொடங்குகின்றன. வாக்குப்பதிவு தினத்தையடுத்து, ஏப்ரல் 23, 24, 25 ஆகிய தினங்கள் இந்தப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் 5 முதல் 8-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவத் தேர்வுகள் ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்குகின்றன. ஏப்ரல் 22, 26, 28, 29 ஆகிய தேதிகளில் இந்தத் தேர்வுகள் நடைபெறுகின்றன.

1 முதல் 4-ஆம் வகுப்பு வரை செயல்வழிக் கற்றல் முறை அமலில் உள்ளதால் அந்த மாணவர்கள் மூன்றாம் பருவத் தேர்வை எழுதுவது அவசியம் இல்லை. இந்தப் பள்ளிகளுக்கு மே 1 முதல் கோடைகால விடுமுறை விடப்படுகிறது.

அறிவியலில் தவறான கேள்வி : 3 மதிப்பெண் வழங்க உத்தரவு

    பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில், இரு கேள்விகள், தவறாக கேட்கப்பட்டதற்காக, அதற்குரிய மூன்று மதிப்பெண் வழங்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 7ல், பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு நடந்தது. இதில், ஒரு மதிப்பெண் பகுதி, கேள்வி எண் 14ல், "ஆடியில் உருவாகும் உருப்பெருக்கம், 1/3 எனில், அந்த ஆடியின் வகை என்ன...' என, கேட்கப்பட்டது. இதற்கு, "குவிலென்ஸ்' என்பது விடை. ஆனால், "குழிலென்ஸ்' என்ற வேறொரு விடையும் உள்ளது. இந்த கேள்விக்கு, எந்த பதிலை எழுதி இருந்தாலும், அதற்கு, ஒரு மதிப்பெண் வழங்க, விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு, தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது.

இரு மதிப்பெண் பகுதி, தமிழ் வழி கேள்வி எண் 29ல், "வாகனங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் யாவை...' என்ற கேள்விக்கு, ஆங்கில வழி கேள்வித்தாளில், "பயோ - பியூல்' என, கேட்டு, தமிழ்வழி கேள்வித்தாளில், "உயிரி எரிபொருள்' என, கேட்காமல் பொதுவாக கேட்டுவிட்டனர். இதனால், மாணவர்கள், "பெட்ரோல், டீசல்' என, விடை எழுதினர். இதனால், மதிப்பெண் கிடைப்பது கேள்விக்குறியானது. இந்நிலையில், இந்த கேள்விக்கு இரண்டு மதிப்பெண் வழங்க, தேர்வுத்துறை உத்தரவு விட்டுள்ளதாக, பாட ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

Monday, April 14, 2014

வி.ஏ.ஓ. தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்


தமிழகத்தில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 342 கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை (ஏப். 15) கடைசி நாளாகும். தமிழகத்தில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 342 வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த மாதம் வெளியிட்டது.வரும் ஜூன் 14-ம் தேதி இதற்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் என்றும், தேர்வு எழுத விரும்புவோர் ஏப்ரல் 15-ம் தேதி வரை www.tnpscexams.net என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேர்வுக்கு விண்ணப்பிக்க  நாளை (ஏப். 15) கடைசி நாளாகும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், வங்கி மற்றும் அஞ்சலகங்கள் மூலம் கட்டணம் செலுத்துவதற்க்கு ஏப்ரல் 17ம் தேதி கடைசி நாள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, April 13, 2014

இலவசக் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் உள்ள இடங்கள் குறித்து அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு

இந்த மனுவுக்கு மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த வி.ஈஸ்வரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்: கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009-ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டத்தின் நோக்கம் 6 வயது முதல் 14 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாய கல்வி வழங்க வேண்டும் என்பதாகும

். இந்தச் சட்டத்தின் படி, பயனடையாத மற்றும் ஏழைக் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் நுழைவு வகுப்புகளில் (எல்.கே.ஜி., முதல் வகுப்பு, ஆறாம் வகுப்பு) 25 சதவீத இடம் ஒதுக்க வேண்டும். ஆனால், இந்தச் சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படாத காரணத்தால் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் ஏழைக் குழந்தைகள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆந்திர மாநிலத்தில் 5 சதவீத இடம் பயனடையாதவர்களுக்கும், 10 சதவீதம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும், 4 சதவீதம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கும், 6 சதவீதம் ஏழைக் குழந்தைகளுக்கும் என தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் எத்தனை இடங்கள் உள்ளன என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு தனியார் பள்ளியிலும் உள்ள 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்கள் குறித்து வெளியிட அரசுக்கு உத்தரவிட வேண்டும். கலந்தாய்வு முறையில் மாவட்ட பள்ளிகளில் காலியாக இருக்கும் அந்த இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ்குமார் அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் என்.பொன்ராஜ் ஆஜரானார். மனுவுக்கு மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்

தமிழகத்தில் 24.4.2014- அன்று நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அரசு பொது விடுமுறை அளித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

துவக்க பள்ளி தேர்வு அட்டவணை மாற்றம்

தொடக்கக் கல்வித்துறை, தேர்வுக்கான கால அட்டவனையை கடந்த சில மாதங்களுக்கு முன்வெளியிட்டது. அதில், நாடாளுமன்ற தேர்தல் நாளான ஏப்ரல் 24ம் தேதியும் தேர்வு நாளாக வெளியிடப்பட்டது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் ஆண்டு தேர்வுக்கான புதிய கால அட்டவணையை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஏப்ரல் 21ம் தேதி தமிழ், 22ம் தேதி ஆங்கிலம், 26ம் தேதி கணிதம், 28ம் தேதி அறிவியல், 29ம் தேதி சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது.கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், துவக்கப்பள்ளிக்கு தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. தற்போது, தேர்தல் தேதி, அட்டவணை நாளுக்குள் வருவதால் அதில் மாற்றம் செய்யப்பட்டு புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல், 21 முதல், 29ம் தேதியுடன் தேர்வு முடிந்து, 30ம் தேதி பள்ளி வழக்கம்போல் செயல் பட்டு, மே 1ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என்றார்.

மதுரை காமராஜ் பல்கலைகழகத்தில் 2014-2016 ஆம் கல்வியாண்டுக்கான B.Ed விண்ணப்பபடிவங்கள் வரவேற்கின்றன

Saturday, April 12, 2014

மே முதல் வாரத்தில் பொறியியல் விண்ணப்பம் : அறிவித்தது அண்ணா பல்கலை

"பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பம், மே முதல் வாரத்தில் இருந்து வழங்கப்படும்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. மாணவர் சேர்க்கைக்கான விதிமுறைகள், தகுதிகள் குறித்து, பல்வேறு அறிவிப்புகளை, அண்ணா பல்கலை வெளியிட்டு உள்ளது. "மே, 9ம் தேதி, பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்படும்' என, ஏற்கனவே, தேர்வுத்துறை அறிவித்துவிட்டது. இதையடுத்து, பொறியியல் சேர்க்கை பணிகளை, அண்ணா பல்கலை துவக்கி உள்ளது

. www.annauniv.edu என்ற, பல்கலை இணையதளத்தில், "டிஎன்இஏ - 2014' என, தனி பகுதியை, பல்கலை துவக்கி உள்ளது. அதில், பொறியியல் விண்ணப்பம், மே முதல் வாரத்தில் வெளியிடப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், பொறியியல் படிப்பில் சேர உள்ள மாணவர்கள், எப்படி தயாராக வேண்டும் என்பதையும் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில், எட்டாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்காத மாணவர்கள், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான, இருப்பிட சான்றிதழ், முதல் பட்டதாரி மாணவராக இருந்தால், அரசிடம் இருந்து, அதற்கான கட்டண சலுகையை பெற, தாசில்தாரிடம் இருந்து சான்றிதழ் ஆகியவற்றை பெற வேண்டும். இதற்கான படிவங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

விண்ணப்பம் வழங்கப்படும் இடங்கள், தகுதிகள் உள்ளிட்ட மேலும் பல விவரங்கள், விரைவில் வெளியிடப்படும் என, அண்ணா பல்கலை அறிவித்து உள்ளது.

Friday, April 11, 2014

அரசின் எச்சரிக்கையை மீறி பள்ளி மாணவர்களை கொண்டு வகுப்பறை மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வி செயலர் உத்தரவு

பி.இ. கலந்தாய்வு: படிவங்கள் இணையதளத்தில் வெளியீடு

  பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்களுக்கான படிவங்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஏற்படும் கடைசி நேர திண்டாட்டத்தைப் போக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் இந்த சிறப்பு ஏற்பாட்டைச் செய்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள பொறியியல் இடங்கள் மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலான இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இம்முறை தமிழகம் முழுவதும் 570 கல்லூரிகளில் உள்ள 1.75 லட்சம் இடங்களுக்கு இந்த கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் சில சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்தச் சான்றிதழ்களுக்கான படிவங்கள் அண்ணா பல்கலைக்கழத்தின் www.annauniv.edu/tnea இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து தமிழ்நாடு மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது: பி.இ. கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், விண்ணப்பத்துடன் சில சான்றிதழ்களை இணைத்து அனுப்ப வேண்டும். அதாவது 8-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை வெளி மாநிலத்தில் படித்த தமிழக மாணவர்கள், இருப்பிடச் சான்றிதழ் அளிக்க வேண்டும். முதல் தலைமுறை மாணவர்களாக இருந்தால், அதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும்

. இதுபோல் முன்னாள் ராணுவ வீரர் அல்லது சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குழந்தைகளாக இருந்தால் அதற்கான சான்றிதழ், மாற்றுத் திறனாளி மாணவராக இருந்தால் அதற்கான சான்றிதழ்களை இணைக்க வேண்டும். இந்தச் சான்றிதழ்களை முன்கூட்டியே பெற்று வைத்துக் கொள்ளாமல், கடைசி நேரத்தில் அவற்றை பெற முயற்சிப்பதால் பல்வேறு சிக்கல்களை மாணவர்கள் சந்தித்து வருகின்றனர். மாணவர்களுக்கு ஏற்படும் இந்தச் சிக்கலைப் போக்கும் வகையில், இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்களுக்கான படிவங்கள் இப்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து, உரிய அதிகாரியிடம் சான்றிதழை பெற்று வைத்துக் கொண்டால் கடைசி நேர திண்டாட்டத்தைப் போக்கிக்கொள்ள முடியும் என்றார்.