இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, May 04, 2013

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 32 பேருக்கு ஆசிரியர் பணி வழங்க உத்தரவு

் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாமல் 32 பேர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உறுதி செய்தது. விருதுநகர் மாவட்டம், சாட்சியாபுரத்தைச் சேர்ந்த ஜெயசாந்தி உள்ளிட்ட 32 பேர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஹரிபரந்தாமன் இந்த உத்தரவை பிறப்பித்தார். பள்ளி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறையை மத்திய அரசு 2010 ஏப். 1-இல் கொண்டு வந்தது. அதற்கு முன்பே எங்களை ஆசிரியர்களாக பணிகளில் நியமிக்க மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஒப்பதல் அளித்தனர். இருப்பினும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்தால், எங்கள் பணி நியமனத்துக்கான ஒப்புதலை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ஏற்க மறுத்துள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போதுமான அளவில் இல்லாத நிலை ஏற்பட்டால், ஓராண்டு காலத்தில் மத்திய அரசை, மாநில அரசு அணுகி தகுதியில் இருந்து விதிவிலக்கு பெறவேண்டும். ஆனால், தமிழக அரசு அவ்வாறு கோரவில்லை. இதனால், பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு பணி வழங்க உத்தரவிடவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி டி. ஹரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: மத்திய அரசின் சட்ட விதிப்படி படி, ஆசிரியர்களை பணியில் நியமிக்கமுடியாத நிலை ஏற்பட்டால், மாநில அரசு அதற்கான காலக்கெடுவுக்குள் விதிவிலக்கு கோரி விண்ணப்பித்து இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்கள் இல்லாத நிலை ஏற்பட்ட போதும் அரசு அதற்காக மத்திய அரசை அணுகவில்லை. இந்தச் சூழ்நிலையில்  32 மனுதாரர்களையும் ஆசிரியர்களாக பணியில் நியமிக்க மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஒப்புதல் அளித்ததில் தவறு காணமுடியவில்லை. எனவே, 32 பேருக்கும் அதிகாரிகள் தாற்காலிக ஒப்புதல் அளிக்க வேண்டும். மேலும், அதற்கான ஊதியம் பெறுவதற்கும் அனுமதி வழங்க வேண்டும். இந்த 32 பேரும் 2015 மார்ச் 31-க்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

அவ்வாறு தேர்ச்சி பெறாவிட்டால் அவர்களை நீக்கம் செய்து தகுதியானவர்களை நியமிக்கலாம். மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு அவ்வப்போது தகுதித் தேர்வுகளை நடத்த வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை ஜூன் 6-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை ரத்து

  தமிழகத்தில், அனைத்து வகை பள்ளிகளுக்கும், ஏப்ரல் 21ம் தேதி முதல், ஜூன் 2ம் தேதி வரை, கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் கோடை விடுமுறைக்கு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கும் விடுமுறையில் இருப்பர். தேவைப்படும் நேரத்தில் மட்டும் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் நிலை இருந்தது. ஆனால், நடப்பாண்டில், அனைத்து வேலைநாட்களிலும், தலைமை ஆசிரியர்கள் அல்லது பொறுப்பு தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசின் நலத்திட்டங்கள் குறித்தான அறிக்கை சமர்பித்தல் மற்றும் அனைத்து ஆய்வு அலுவலகத்திலிருந்து கிடைக்கப்பெறும் கடிதங்களுக்கு உடன் தகவல்கள் அளித்தல், 10 மற்றும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்ட மாணவர்களின் விவரங்களை இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்ளல், பள்ளி மாணவர் சேர்க்கை, மாற்றுச்சான்றிதழ் வழங்குதல், தேர்ச்சி விவரம் அளித்தல், பள்ளிகளில் நடந்து வரும் கட்டுமான பணிகளை மேற்பார்வையிடல், பள்ளி வளர்ச்சிக்கு தேவை குறித்து பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்துதல் போன்ற அலுவலர்களை தடையின்றி, மேற்கொள்ள வேண்டும். இதற்காக தலைமை ஆசிரியர் அல்லது பொறுப்பு தலைமை ஆசிரியர் மற்றும் தேவையான அலுவலக பணியாளர்கள் முழு நேரமும் பள்ளியில் இருந்து மேற்கண்ட செயல்களை செய்ய வேண்டும். இவர்கள் விடுப்பு எடுக்கும் பட்சத்தில் முதன்மைக்கல்வி அலுவலரின் முன் அனுமதி பெற வேண்டும். அலுவலர்கள் ஆய்வுக்கு வரும் போது, பள்ளி மூடப்பட்டிருப்பின், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொருளாதார கணக்கெடுப்பு 15ம் தேதி ஆரம்பம் பட்டதாரிகள், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அழைப்பு

தமிழகத்தில் 6வது பொருளாதார கணக்கெடுப்பு 15ம் தேதி முதல் ஆரம்பமாகிறது. இப்பணியில் ஈடுபட பட்டதாரிகள், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் பொருளாதார கணக்கெடுப்பு 1977ம் ஆண்டிலும், 5வது கணக்கெடுப்பு 2005ம் ஆண்டிலும் நடந்தது. தற்போது 15ம் தேதி முதல் வரும் ஜூலை மாதம் 15ம் தேதி வரை 6வது பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களையும் கணக்கெடுப்பதே இக்கணக்கெடுப்பின் முக்கிய நோக்கமாகும். அனைத்து துறைகளிலும் பொருள் உற்பத்தி, பொருட்களின் பகிர்ந்தளிப்பு, சேவை தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களையும் கணக்கெடுப்பு செய்யப்படுகிறது.

இந்த கணக்கெடுப்பு பணிக்கு மாநில அளவில் தலைமை செயலாளர் முதன்மை கணக்கெடுப்பு ஆணையராகவும், மாவட்ட அளவில் கலெக்டர் துணை கணக்கெடுப்பு ஆணையராகவும், மாவட்ட புள்ளியியல் துணை இயக்குனர் உதவி கணக்கெடுப்பு ஆணையர் மற்றும் அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி ஆணையரும், நகராட்சி பகுதிகளில் ஆணையர்கள், டவுன் பஞ்., பகுதிகளில் தாசில்தார்களாகவும் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து நிலைகளிலும் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை அலுவலர்கள் பொறுப்பு அலுவலர்களுடன் இணைந்து செயல்படுவர்.

ஒவ்வொரு பொறுப்பு அலுவலர்களுக்கு" 4 ஆயிரம் ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படுகிறது.கணக்கெடுப்பு பணியில் 3 கணக்கெடுப்பு பகுதிக்கு ஒருவரும், இரண்டு கணக்கெடுப்பாளர்களுக்கு ஒரு மேற்பார்வையாளரும் நியமனம் செய்யப்படுகின்றனர். கிராமப்புற கணக்கெடுப்பு பகுதி ஒன்றுக்கு 1,500 ரூபாய், நகர்ப்புற கணக்கெடுப்பு பகுதி ஒன்றுக்கு 2,100 ரூபாய், மேற்பார்வையாளர்களுக்கு 6 கணக்கெடுப்பு பகுதிக்கு 2,200 ரூபாய் மதிப்பூதியமாக வழங்கப்படுகிறது.பட்டதாரிகள், விருப்பமுள்ள ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுகின்றனர். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நிறுவனங்களின் கணக்கெடுப்பு வராததால் உரிய விபரங்களை சம்பந்தபட்டவர்கள் தெரிவிக்கலாம் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Friday, May 03, 2013

ஏழை மாணவர்களுக்கு 25% இடஒதுக்கீடு: தனியார் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை

  இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டிற்கான விண்ணப்பப்படிவங்களை வழங்காத தனியார் பள்ளிகள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அறிமுக வகுப்புகளில் 25 சதவீத ஏழை மற்றும் சமூக ரீதியாக நலிந்த பிரிவு மாணவர்களைச் சேர்க்க வேண்டும். இந்த ஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்களை மே 2-ஆம் தேதி முதல் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இந்த ஒதுக்கீடு தொடர்பாக, எந்தவித அறிவிப்பும் செய்யப்படவில்லை.

விண்ணப்பப் படிவங்களும் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக, அரசுக்குப் புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் பிறப்பித்துள்ள உத்தரவின் விவரம்: தனியார் பள்ளிகளில் ஏழை, நலிந்த பிரிவு மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்காமல் உள்ளது சட்டத்தையும், அரசாணையையும் மீறும் செயலாகும். இந்த மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்காத பள்ளிகள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, ஏழை மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை பள்ளிகள், பொதுமக்கள் பார்வையில் படும் வண்ணம் தகவல் பலகைகளில் ஒட்ட வேண்டும். இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கையை கோரும் மாணவர்களுக்கான விண்ணப்பப் படிவம் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இந்த விண்ணப்பம் மூலம் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் தமிழகத்திலிருந்து 97 பேர் வெற்றி

  ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் தமிழகத்திலிருந்து 97 பேர் வெற்றி பெற்றுள்ளனர். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்டப் பணிகளுக்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 3) வெளியிடப்பட்டன. நாடு முழுவதும் 998 பேர் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றனர். கேரளத்தைச் சேர்ந்த ஹரிதா வி. குமார் அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். வெற்றி பெற்றவர்களில் சுமார் 10 சதவீதம் (97 பேர்) தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். தமிழ் வழியில் எழுதிய 2 பேர் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 29 பேர் இந்த ஆண்டு கூடுதலாக சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

தமிழக அளவில் ஏ.அருண் தம்புராஜ் 6-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் தற்போது ஐ.பி.எஸ். அதிகாரியாக கர்நாடகத்தில் பணியாற்றி வருகிறார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் டாக்டர் டி. பிரபு ஷங்கர் (29) அகில இந்திய அளவில் 7-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தத் தேர்வில் வெற்றி பெற்றது தொடர்பாக அவர் கூறியது: நான் எம்.பி.பி.எஸ்., எம்.டி. முடித்துள்ளேன். சமூக நல மருத்துவத்தில் எம்.டி. பட்டம் பெற்றுள்ளேன். சிறிய வயதிலிருந்தே ஐ.ஏ.எஸ்.-ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இப்போது 2-ஆவது முயற்சியிலேயே அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களுக்குள் தேர்ச்சியடைந்துள்ளேன் என்றார் அவர். ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற மொழி முக்கியமல்ல: ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழ் வழியில் எழுதி 91-ஆவது ரேங்க் பெற்றுள்ளார் காஞ்சிபுரம் மாவட்டம், அனகாபுத்தூரைச் சேர்ந்த கங்காதரன் (30).

சிஇஓ அலுவலகம் வர தேவையில்லை வினாத்தாள் மையங்கள் மூலம் பிளஸ் 2 மார்க் சீட் விநியோகம்

பள்ளிகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் வினாத்தாள் மையங்களில் வழங்கப்படும் என்பதால் தலைமையாசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு வர தேவையில்லை என பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 9ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகிறது. கடந்த ஆண்டு வரை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலை பெற்றுச் சென்றனர்.

இந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.அதன்படி, மாவட்டங்களில் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் உதவி தொடக்க கல்வி அலுலர்களுக்கான கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. இதில் பள்ளிகளின் தலைமையாசியர்கள், முதல்வர்களிடம் இருந்து பள்ளிகள் குறித்த விவரங்கள் சேகரித்து கணினியில் பதிவு செய்து அரசு தகவல் மையத்திற்கு அனுப்பப்பட்டது.மே 9ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்படும் நேரத்திற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். உரிய நேரம் வரை பட்டியலை பிரிக்க கூடாது.

6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வு வினாத்தாள் விநியோகம் செய்யப்பட்ட மையங்களின் (குறிப்பிட்ட பள்ளிகள்) பொறுப்பாளர்களுக்கு மதிப்பெண் பட்டியல்கள் அனுப்பி வைக்கப்படும். அந்தந்த பள்ளிகளின் பெயரில் சீலிடப்பட்ட கவர்களில் மதிப்பெண்கள் பட்டியல் வைக்கப்பட்டி ருக்கும். வினாத்தாள் மையங்களில் இருந்து மதிப்பெண்கள் பட்டியலை தலைமையாசிரியர்கள் காலை 9 மணிக்கு முன்பாக வந்து பெற்றுச் செல்ல வேண்டும். இதனால் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், முதல்வர்கள் அனைவரும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லை. தலைமையாசிரியர்கள் தங்களது பள்ளிகளில் மே 9ம் தேதி காலை 10 மணிக்கு மதிப்பெண் பட்டியலை ஒட்ட வேண்டும். இந்த மதிப்பெண் பட்டியலை, இணையதளங்களில் வெளியாகும் மதிப்பெண் பட்டியலுடன் ஒப்பிட்டு பார்த்து கொள்வதற்காக, அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் பிராட்பேண்ட் இணைப்பு வசதி ஏற்படுத்த முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்த வேண்டும். அரசு மேல்நிலைப்பள்ளிகள் அனைத்திலும் பிராட்பேண்ட் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இந்த இணைப்புகளுக்கான கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் இருந்தால், பள்ளி வசதி கட்டணத்தில் செலுத்தி பிராட்பேண்ட் இணைப்பை உபயோகத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என பள்ளி கல்வி இயக்குநர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.

10, 12–ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. முடித்த மாணவர்களுக்கு நேரடி இரண்டாமாண்டு பட்டய படிப்பு விண்ணப்ப படிவங்கள் 6–ந்தேதி முதல் 24–ந்தேதி வரை வழங்கப்படுகிறது

  தமிழக அரசு இன்றிரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– 2013–14–ம் கல்வியாண்டிற்கான, 12–ம் வகுப்பு மற்றும் 10–ம் வகுப்பு, 2 வருட ஐ.டி.ஐ. பயின்ற மாணவர்களுக்கு நேரடி 2–ம் ஆண்டு பட்டய படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் 6–ந்தேதி(திங்கட்கிழமை) முதல் 24–ந்தேதி வரை வழங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  

Thursday, May 02, 2013

அரசு ஆணை எண்.145 அகவிலைப்படி உயர்வு May 2, 2013

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் அரசு இணையதளங்கள்

  பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் அரசு இணையதள முகவரிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in, http://dge3. tn.nic.in ஆகிய இணையதளங்களில் மே 9-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் http://dge3.tn.nic.in என்ற இணையதள முகவரியில் ஜி.பி.ஆர்.எஸ். வசதியுடன் செல்போனிலும் தேர்வு முடிவுகளைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் உடனடியாக அறிந்துகொள்ளும் வகையில் தேசிய தகவல் மையத்தில் 16 சர்வர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தனியார் இணையதளங்களில் வெளியிடப்படாது என்று அரசு அறிவித்துள்ளது.

எனவே, அரசு இணையதளங்களின் வேகம் குறையாமல் இருக்க 16 சர்வர்கள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டணமில்லை: மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், மாநிலத்தில் உள்ள அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் மாணவ, மாணவியர் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செல்போன், எஸ்.எம்.எஸ். மூலமும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவுகளைப் பெறுவதற்கான நடைமுறைகள் மே 8-ஆம் தேதி அறிவிக்கப்படும். மாணவர்கள் தங்களது பள்ளிகளில் மதிப்பெண்களைத் தெரிந்துகொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி திறந்து முதல் வாரத்திலேயே இலவச பொருட்களை வழங்க கல்வித்துறை உத்தரவு

் அரசு மற்றும் அரசு உதவி சார்ந்த பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி திறந்து முதல் வாரத்திலேயே அரசின் இலவச பொருட்களை வழங்க வேண்டுமென்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள், சீருடை, காலணி, புத்தக பை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஒவ்வொரு வருடமும் அரசு வழங்கி வருகின்றன. அந்த வகையில் வரும் கல்வியாண்டில் அரசின் இலவச பொருட்களை பள்ளி திறந்து முதல் வாரத்திலேயே வழங்குமாறு அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. அரசு உத்தரவின் படி இந்தாண்டு முதல் மாணவர்களுக்கு உலக வரைபடம் வழங்கப்பட உள்ளன.

GO.72 Equal of varous subjects

தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் அரசுப் பள்ளிகளில் சேர மாணவ-மாணவிகள் ஆர்வம் தமிழகத்தில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், அரசுப் பள்ளிகளில் சேர மாணவ-மாணவிகள் இடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அரசு, பள்ளிக் கல்வித்துறையை மேம்படுத்த பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி நியமனம், பள்ளிக் கல்வித் துறைக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா புத்தகப் பை, சீருடை மற்றும் கற்றலுக்குத் தேவையான கணித உபகரணப் பெட்டி, வண்ணப் பென்சில்கள், புவியியல் வரைபடங்கள், நோட்டுப் புத்தகங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. கல்வி மட்டுமின்றி, மாணவர்களிடையே விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு சதுரங்கம், கைப்பந்து, கேரம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொடர் நடவடிக்கைகளால் அரசுப் பள்ளிகளில் சேர மாணவ-மாணவியர்கள் பெரும் ஆர்வம்காட்டி வருகின்றனர். அரசின் இந்த நடவடிக்கை, அனைத்து மாணவ-மாணவிகளும் சிறந்த கல்வி அறிவு பெறுவதோடு, ஆங்கில அறிவும் பெற வழிவகை செய்யும் என பள்ளித் தாளாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ஆசிரியர் பணி நியமனத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு போதிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதற்கு, இப்பிரிவினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுதவிர, முப்பருவத் தேர்வு முறை மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன், பாடச்சுமையும் குறைந்து அதிக மதிப்பெண் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதாக மாணவ-மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமின்றி, சாதிச்சான்றிதழ்களை பள்ளியிலேயே வழங்கும் நடைமுறை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளுக்கு மாணவர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழக கல்வித்துறையில் நிகழ்த்தப்பட்டுவரும் முன்னேற்றப் பாதையிலான மாற்றங்கள் மற்றும் அளிக்கப்பட்டு வரும் சலுகைகளுக்கு ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளதுடன், முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதாவுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளனர். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற மகாகவி பாரதியின் வாக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சீர்மிகு நடவடிக்கைகளால் மெய்யாகி வருகிறது என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.

புதிய ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் துவங்க தமிழக அரசு தடை

தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, தமிழகத்தில், வரும் கல்வி ஆண்டில், புதிய ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் துவங்க அனுமதி கிடையாது என, ஆசிரியர் கல்விக்கான தேசிய குழு அறிவித்துள்ளது. ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கு, போதிய அளவிற்கு வேலை வாய்ப்பு இல்லாத நிலையை கருத்தில் கொண்டு, தமிழக அரசு, இந்த முடிவை எடுத்துள்ளது. தமிழகத்தில், ஏற்கனவே தேவைக்கும் அதிகமான எண்ணிக்கையில், ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் இயங்கி வருவதையும், குறிப்பாக, இரண்டு ஆண்டு பட்டயப் படிப்பை வழங்கும் ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களுக்கு, மாணவர் மத்தியில், போதிய வரவேற்பு இல்லாத நிலையையும், ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலிடம், தமிழக அரசு சுட்டிக் காட்டியது. இதனால், "வரும் கல்வி ஆண்டில் (2013-14), புதிய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டாம்" என தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், வரும் கல்வி ஆண்டில், தமிழகத்தில், புதிய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்கள் துவங்க, அனுமதி கிடையாது என, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (என்.சி.டி.இ.,) அறிவித்துள்ளது. 

அதே நேரத்தில், புதிதாக, பி.எட்., கல்லூரிகள் துவங்க, எவ்வித தடையும் இல்லை. எட்டு ஆண்டுகளுக்கு முன் வரை, ஆசிரியர் கல்வி பட்டய பயிற்சிக்கு, நல்ல வரவேற்பு இருந்தது. அப்போது, அரசுப் பள்ளிகளில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையான வகுப்புகளில், ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு படித்தவர்கள், நியமனம் செய்யப்பட்டனர்.  அதன்பின், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே, நியமனம் செய்யப்படுகின்றனர். ஆறாம் வகுப்பில் இருந்து, பி.எட்., படித்தவர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.இதனால், ஆசிரியர் கல்வி பயிற்சி பெற்றவர்களுக்கு, வேலை வாய்ப்பு, 90 சதவீதம் அளவிற்கு குறைந்துவிட்டது.  இதனால், இந்த பயிற்சியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. ஏற்கனவே இந்த பயிற்சியை முடித்துவிட்டு, 1.5 லட்சம் பேர், ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எட்டு ஆண்டுகளுக்கு முன், 750 ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்கள் இருந்தன.

தற்போது, 500ஆக குறைந்துவிட்டது.  ஒவ்வொரு ஆண்டும், 50 முதல், 100 கல்வி நிறுவனங்கள் வரை மூடப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு, அரசு ஒதுக்கீட்டின் கீழ், 20 ஆயிரம் இடங்கள் இருந்த போதும், வெறும், 8,000 இடங்கள் மட்டுமே நிரம்பின என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற காரணங்களினால், புதிய ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் துவங்க, தமிழக அரசு தடை விதித்துள்ளது. 

தமிழக அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு : முதல்வர்

தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி 8% உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் இன்று அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி 8% உயர்த்தப்படும். இது கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்பட உள்ளது. இது குறித்து முதல்வர் விதி எண் 110ன் கீழ் அறிவித்தது..

. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 1.1.2013 முதல் அவர்களுடைய அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் எட்டு விழுக்காடு உயர்த்தி, தற்போதுள்ள 72 விழுக்காடிலிருந்து 80 விழுக்காடாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது போல், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியையும், அவர்களது அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் எட்டு விழுக்காடு உயர்த்திட உத்தரவிட்டுள்ளேன். இந்த அகவிலைப்படி உயர்வு உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள்; ஆசிரியர்கள்; வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள்; அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள்; ஊராட்சி உதவியாளர்; எழுத்தர்; ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் பொருந்தும்.

இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் என சுமார் 18 லட்சம் பேர் பயனடைவார்கள். இந்த அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி 1.1.2013 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1,639 கோடியே 93 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் - என்று கூறியுள்ளார்.