இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909
Showing posts with label Information. Show all posts
Showing posts with label Information. Show all posts

Tuesday, November 15, 2016

வந்துவிட்டது வாட்ஸ்அப்பின் வீடியோ கால்! எப்படி இருக்கிறது?#WhatsappVideoCall


வாட்ஸ்அப் தனது புதிய வீடியோ காலிங் சேவையை சில நாட்களுக்கு முன்பு பீட்டா பயனாளிகளுக்கு அறிமுகப்படுத்தியது. சோதனை ஓட்டமாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த வசதி இன்று அனைத்து பயனாளர்களுக்கும் மொத்தம் 180 நாடுகளில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் மற்றும் விண்டோஸ் ஆகிய மூன்று இயங்குதளங்களிலும் இந்த வீடியோ கால் வசதி இயங்கும். உங்கள் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்துவிட்டால் போதும். இந்த வசதியை நீங்கள் பயன்படுத்த முடியும். ஆண்ட்ராய்டு 4.1 வெர்ஷன் முதலே இது இயங்கும்.

Thursday, November 10, 2016

வாவ்... இனி ஆன்ட்ராய்ட் ஆப், 3D மூலம் பாடம் படிக்கலாம்..!-சக்கரராஜன்


"இளமையில் கல்வி, பசுமரத்தாணி" என்று கூறுவார்கள். அதற்கு ஏற்றார் போல்தான் குழந்தைகளை சிறு வயதிலேயே பள்ளிக்கூடத்தில் சேர்த்து படிக்க வைக்கிறார்கள். ஆனால், அவ்வாறு செய்தல், குழந்தைகளுக்கு ஒரு நல்ல அனுபவமாக அமைகிறதா என்பது கேள்விக் குறிதான். மாணவர்கள், கல்வியை சுகமாக பார்ப்பதை விட, சுமையாக பார்ப்பதுதான் அதிகம் என்பது சோகமான உண்மை.

இதனை தவிர்க்க ஒரு "இன்டராக்டிவ்" கல்வி முறையை அமைக்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் பரிந்துரை. அதன் முதல்படியாக 3D படங்களைக் கொண்ட ஒரு ஆண்ட்ராய்ட் ஆப்பை பள்ளி கல்வித் துறையின் தகவல் மற்றும் தொடர்பு பிரிவு வெளியிட்டுள்ளது.
என்ன செய்யும் இந்த ஆப்?
பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மன அழுத்தம் அதிகம். அந்த வருட தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் தான் வாழ்வில் அடுத்தக் கட்டத்திற்கு செல்ல முடியும் என்ற கட்டாயம்.

என்னதான் முழு புத்தகத்தையும் மனப்பாடம் செய்து அப்படியே தேர்வில் எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற்றாலும், படிக்கும் பாடங்களை புரிந்து படிப்பதால் வரும் சுவையான அனுபவம் தனி சுகம்தான். இதனை ஊக்குவிக்கதான் இந்த ஆப் வெளியிடப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித் துறை கூறியுள்ளது.
தகவல் அடையாள தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆப், கேமராவை பயன்படுத்தி புத்தகத்தை ஸ்கேன் செய்து கொள்ளும். புத்தகத்தில் என்ன தகவல் இருக்கின்றதோ அதன் 3D அல்லது 2D படம் உடனே ஆப்பில் காண்பிக்கப்படும்.

தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவர்கள் இந்த ஆப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
"கிட்டத்தட்ட 141 பாடங்களை நாங்கள் இந்த ஆப்பில் காண்பிக்க வழி வகுத்துள்ளோம். இந்த ஆப்பை எந்த ஆண்ட்ராய்ட் போனிலும் பயன்படுத்தலாம். எங்கள் வசம் உள்ள அனைத்து தொழில்நுட்பத்தையும் வைத்து, தமிழ்நாடு கல்வி ஆராய்ச்சி மையம் இந்த ஆப்பை வடிவமைத்துள்ளது. தகவல் அடையாள தொழில்நுட்பம் முதன் முறையாக இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. அது தமிழ் புத்தகங்களில் பயன்படுத்தப்படுவது மிகவும் பெருமையாக உள்ளது.
முழுக் கவனம் செலுத்துவதற்காக ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கின்றோம். 1600 ஆசிரியர்களுக்கு ஆப்பில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 240 ஆசிரியர்கள் சேர்ந்துதான் பாடங்களில் எது தேவையானப் பிரிவு என்று முடிவு செய்து கொடுத்தார்கள்.", என்றார் பள்ளி கல்வத் துறையின் செயலாளர் சபீதா.

"அனைத்து மாணவர்களிடமும் ஆன்ட்ராய்ட் போன் இருக்க வாய்ப்பு குறைவு என்பதால் பள்ளிகளில் இருக்கும் கணினிகளில் பயன்படுத்தும் வகையில் சி.டிகளை அளிக்கப்போகிறோம்.", என்றார் தமிழ்நாடு கல்வி ஆராய்ச்சி மைய துணை பேராசிரியர் அசிர் சூலியஸ்.
எப்படி பயன் படுத்துவது?
ஆன்ட்ராய்ட் ப்லே ஸ்டோரில் "TN SCHOOLS LIVE" என்ற ஆப்பை டவ்ன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்.
அப்பை ஓபன் செய்ததும் பத்தாம் வகுப்பா பன்னிரெண்டாம் வகுப்பா என்று செலக்ட் செய்து விட்டு, புத்தகத்திற்கு நேராக கேமராவை காண்பிக்க வேண்டும்.
அந்த ஆப் புத்தகத்தில் இருக்கும் தகவலை அடையாளம் கண்டு, அதற்கேற்ற 3D புகைப்படங்களை காண்பிக்கும்.
கூடிய விரைவில் இந்த ஆப் ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் மொத்த பாடத்திட்டத்தையும் கவர் செய்யும்

Monday, November 07, 2016

IGNOU term end exam

IGNOU- DATE SHEET FOR TERM END EXAMINATION DECEMBER - 2016
FIRST & SECOND YEAR
.16-   FRI-   ES-332
10.12.16-   SAT-  ES-333
12.12.16-  MON- ES-341
14.12.16-  WED-  ES-342
15.12.16-   THU-  ES-343
16.12.16-    FRI-   ES-344
19.12.16-   MON- ES-345
2012.16-    TUE-   ES- 334
22.12.16-   THU-   ES-335
23.12.16-    FRI-    BESE-065

Tuesday, November 01, 2016

TNPSC குரூப் 1 தேர்வு விரைவில் அறிவிப்பு

TNPSC குரூப் 1 தேர்வு விரைவில்

85 பணியிடங்களை நிரப்ப குரூப்–1 தேர்வு நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விரைவில் வெளியிட உள்ளது.

குரூப்–4 தேர்வு

தமிழ்நாட்டில் அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்து தேர்வு நடத்தி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது.

வருகிற 6–ந்தேதி குரூப்–4 தேர்வு நடத்தப்பட உள்ளது. 5 ஆயிரத்து 451 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வை அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. இந்த தேர்வுக்கு 12 லட்சத்து 75 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிப்பதற்கு எஸ்.எஸ்.எல்.சி. படித்து இருந்தாலே போதும். ஆனால் விண்ணப்பித்தவர்களில் ஏராளமானவர்கள் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

குரூப்–1

இந்த நிலையில் 85 பணியிடங்களை நிரப்ப குரூப்–1 தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த 85 பணியிடங்களில் 30 பணியிடங்கள் துணை கலெக்டர்கள், 33 பணியிடங்கள் துணை சூப்பிரண்டு ஆகும். மீதம் உள்ள 22 பணியிடங்கள் வணிக வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆவார்கள்.

இந்த குரூப்–1 பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய முதல் நிலை தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின்தேர்வை எழுதுவார்கள். அந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்வார்கள். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் இறுதியாக பணிக்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

பிப்ரவரியில் தேர்தல்

85 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு அடுத்த ஆண்டு (2017) பிப்ரவரி மாதம் நடைபெறும் என்றும், இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வருகிற 9–ந்தேதி வெளியிடும் என்று கூறப்படுகிறது.

Saturday, October 08, 2016

அஞ்சலகப் பணி

பட்டதாரிகளுக்கு இந்திய அஞ்சல் துறை வங்கியில் 650 உதவி மேலாளர் பணி

இந்திய அஞ்சல் பண அளிப்பு வங்கியில் (IPPB) நிரப்பப்பட உள்ள 650 உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Assistant Manager (JMGSI-I) - 650

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.09.2016 தேதியின்படி 20 - 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையம்: சென்னை, கோவை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், பெரம்பலூர், சேலம், திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.700, மற்ற பிரிவினருக்கு ரூ.150.

விண்ணப்பிக்கும் முறை: http://www.indiapost.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.10.2016

எழுத்துத் தேர்வு: டிசம்பர் 2016, ஜனவரி 2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://govtjobsdisk.com/wp-content/uploads/2016/10/IPPB-650-Assistant-Manager-Officer-Scale-Notification-PDF.pdf என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.