இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, September 27, 2017

நவ. 1 முதல் புதிய ரயில்வே கால அட்டவணை


ரயில்வேயின் புதிய கால அட்டவணை நவ. 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனவே, இப்போதுள்ள கால அட்டவணை அக். 31-ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ரயில்வே கால அட்டவணை ஜூலை 1-ஆம் தேதி முதல் மாற்றியமைக்கப்படுவது வழக்கமாக இருந்தது.

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த நடைமுறை மாற்றியமைக்கப்பட்டது. இதன்படி ஒவ்வோர் ஆண்டும் அக். மாதம் புதிய அட்டவணை வெளியிடப்பட்டு வந்தது. இவ்வாண்டுக்கான புதிய கால அட்டவணை வரும் அக்.1ஆம் தேதிக்குப் பதிலாக அக்.15 ஆம் தேதி வெளியாகும் என ரயில்வே துறை ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

இப்போது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு நவ.1-ஆம் தேதி புதிய அட்டவணை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை (அக்டோபர் 31) இப்போது உள்ள கால அட்டவணையே செயல்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்


பள்ளிக் கல்வி இயக்குநர் இளங்கோவன் நேற்று வெளியிட்ட உத்தரவு:

* பள்ளிகளில் வகுப்பறை மற்றும் கழிப்பறைகளை சுற்றித் தண்ணீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும். தண்ணீர் ்தேங்கி இருந்தால் அதை அகற்ற வேண்டும்.

* பள்ளி வளாகம் மற்றும் வீடுகளில் கொசுக்கள் முட்டையிட வசதியாக உள்ள தேங்காய் ஓடுகள், பழைய டயர்கள், பூந்தொட்டிகள், தட்டுகள், தண்ணீர் தொட்டிகள், பழைய கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் பள்ளி கட்டுமானப் பணிகள் நடக்கும் இடத்தில் உள்ள பொருட்கள் உட்பட தண்ணீர் தேங்கும் இடங்களை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும்.

* பள்ளி மாணவர்கள் சுகாதாரமான பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்த வேண்டும்.

சி.பி.எஸ்.இ.,க்கு மாற தமிழக அரசு பச்சைக்கொடி


தமிழக மெட்ரிக் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாற தடையில்லா சான்றிதழ் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் மெட்ரிக் என 58 ஆயிரம் பள்ளிகள் தமிழக பாடத்திட்டத்தில் செயல்படுகின்றன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் 600 பள்ளிகள் மட்டுமே இயங்கின.

இந்நிலையில் 'நீட்' தேர்வு, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு போன்றவற்றை சி.பி.எஸ்.இ., நடத்துவதால் பெரும்பாலான தனியார் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாற விரும்புகின்றன. அதற்கு தமிழக அரசிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.அதை வழங்குவதில் தமிழக அரசு தயக்கம் காட்டியது. அரசியல்வாதிகள் தலையீட்டில் பணம் கொடுத்து, இந்த சான்றிதழை பல பள்ளிகள் பெற்றன. தற்போது, 'நீட்' தேர்வுக்கு பின் நிலைமை மாறி விட்டது. சி.பி.எஸ்.இ.,க்கு மாறுதல் கேட்கும் பள்ளி நிர்வாகிகளை அழைத்து பேசி மிக வேகமாக சான்றிதழ் கொடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஐந்து மாதங்களில் 500க்கும் மேற்பட்ட பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாற சான்றிதழ் பெற்றுள்ளன. அவற்றுக்கு வரும் கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ., அந்தஸ்து கிடைக்கும். இன்னும், ஆயிரக்கணக்கான பள்ளிகள் தடையில்லா சான்றுக்கு விண்ணப்பித்து உள்ளன. கடந்த கல்வியாண்டில், 600ஆக இருந்த சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இந்த கல்வியாண்டில் 800ஐ தாண்டி உள்ளன.

ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு செயல்முறைகள்


2010ல் பி.இ படித்து பட்டம் பெற முடியாதவர்களுக்கு அரியர் எழுத மீண்டும் வாய்ப்பு: அமைச்சர் அன்பழகன்


2010-ல் பி.இ படித்து பட்டம் பெற முடியாதவர்களுக்கு படிப்பை முடிக்க மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். பி.இ பட்டத்தை 7 ஆண்டுகளுக்கு முடிக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தேர்வு எழுத பிப்ரவரி 2018 மற்றும் ஆகஸ்ட் 2018 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 2010 ல் பி.இ படித்தவர்களில் 40,000 பேர் அரியர் வைத்துள்ளதால் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தேர்வெழுதும் கால அட்டவணை, பாடங்களை தேர்வு செய்யும் முறை மற்றும் கட்டண தொகை செலுத்தும் தேதி உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு இடத்தில் மட்டும் தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவகாசம் அளிக்கப்பட்டும் பிஇ பட்டப்படிப்பை முடிக்காகதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

7ஆவது ஊதியக் குழு இறுதி அறிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்ப்பிப்பு


7ஆவது ஊதியக் குழு தொடர்பான இறுதி அறிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று வழங்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன், தமிழக அரசுப் பணியாளர்களுக்கும் ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் தலைமையில் அலுவலர் குழு அமைத்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டார்.

இந்நிலையில் 7ஆவது ஊதியக் குழு தொடர்பான இறுதி அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், அலுவலர் குழு இன்று வழங்கியது. இதனை நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் சமர்ப்பித்தார்.

Tuesday, September 26, 2017

இன்றைய தி இந்து மாயாபாஜார் பகுதியில் என் பள்ளி மாணவியின் ஓவியம்

ரயில்வே பி.என்.ஆர். நிலையை அறிய பயணிகளை சிரமப்படுத்தும் புதிய நடைமுறை!


இந்திய ரயில்வே இணையதளத்தில், பயணிகள் தாங்கள் முன்பதிவு செய்த பயணச்சீட்டின் பி.என்.ஆர். நிலையை அறிந்து கொள்வதற்கான புதிய நடைமுறையால் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். ரயிலில் பயணச் சீட்டை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு பி.என்.ஆர். எண் வழங்கப்படும்.

இந்த எண்ணைக் கொண்டு பயணி ரயிலில் தன்னுடைய இருக்கை அல்லது படுக்கை வசதி உறுதி செய்யப்படுகிறதா என்பதனை அறிந்துக்கொள்ள முடியும். பெரும்பாலும், இந்த விவரங்களை இணையதள வாயிலாக பயணிகள் தெரிந்துக்கொள்வர். எரிச்சல் ஏற்படுத்தும் கணக்குகள்: பயணிகள் பி.என்.ஆர் எண்ணை தெரிந்துக் கொள்ளவதற்காக www.indianrail.gov.in/enquiry/pnrenquiry. htm என்ற ரயில்வே இணையதளத்தின் மென்பொருள் நவீன வகையில் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பயணிகள் பிஎன்ஆர் தொடர்பான எந்தத் தகவலை தெரிந்து கொள்ள வேண்டுமானாலும் அவர்களுக்கு அடிப்படை கணிதம் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. இதற்கு முன்னர் கொடுக்கப்பட்டுள்ள எழுத்துக்களை டைப் செய்ய வேண்டும் என்பது போல் இருந்தது. தற்போது இரண்டு எண்களை கூட்டி அல்லது கழித்து விடை அளிக்கும் பட்சத்தில் நீங்கள் விரும்பும் தகவல் கிடைக்கப்பெறும்.

உதாரணமாக 544 - 68 = ? அல்லது 899+ 70 =? என்று கேள்விகள் கேட்கப்படுகிறது. சரியான பதில் அளித்தீர்கள் என்றால் தகவலைப் பெறலாம். கணக்கில் மிகவும் சுமாரானவர்கள் தற்போது பிஎன்ஆர் நிலையை அறிய கால்குலேட்டர்களையோ, மனக்கணக்கு போட்டோ சரியாகவோ, தவறாகவோ பதிலளித்து கொண்டிருக்கின்றனர். ஆனால், பொதுவாக இந்த நடைமுறையால் பயணிகள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். அவசரமாக ஊருக்கு செல்பவர்கள் தங்களது பயணச் சீட்டை உறுதி செய்வார்களா? அல்லது கூட்டல், கழித்தல் கணக்குகளை போட்டுக்கொண்டு இருப்பார்களா ? இதுகுறித்து புகார்கள் அனுப்பப்பட்டும் இந்த நடைமுறை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

இந்திய ரயில்வே இணையதளத்தில் சர்வரின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் ரயில்கள் புறப்பாடு, நடப்பில் காலியாகவுள்ள இடங்கள், எஸ்எம்எஸ் மூலம் தகவல் பெறுவது, ரயில்கள் வந்தடையும் நேரம், கட்டண விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை விரைவாகப் பெற முடியும். இப்போதைய நிலவரப்படி, பயணிகளின் பிஎன்ஆர் எண் மூலம், ரயில் பெட்டி எண் மற்றும் படுக்கை வசதி அல்லது இருக்கை நிலவரங்களை மட்டுமே பார்க்க முடியும். இனி பிஎன்ஆர் எண் மூலம், அன்றைய தினம் ரயில் புறப்படும் நேரத்தைத் துல்லியமாக பார்க்கும் வசதியை கொண்டுவர உள்ளோம்.

இதற்கான மென்பொருள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிஎன்ஆர் நிலையை அறிய கொண்டு வரப்பட்டுள்ள புதிய நடைமுறை மேம்படுத்தப்பட்ட மென்பொருளால் வந்ததுதான். பெரும்பாலான பயணிகளுக்கு கூட்டல், கழித்தல் என்ற அடிப்படை கணக்குகள் தெரியும். அதிவிரைவான தகவல்களை பெற்று வரும் நாம், இந்தக் கூட்டல், கழித்தலில் 30 நொடிகள் செலவிடுவது தவறில்லை என்றனர் அவர்கள்.

பி.எட்., பயிற்சிக்கு பள்ளியில் அனுமதி


தொலைநிலை கல்வியில், பி.எட்., படிக்கும் இடைநிலை ஆசிரியர்கள், பணிபுரியும் பள்ளிகளிலேயே பயிற்சி எடுக்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் பல ஆசிரியர்கள், 'டிப்ளமா' ஆசிரியர் கல்வியியல் படிப்பு மட்டும் படித்துள்ளனர். இவர்கள், தங்களின் பதவி உயர்வுக்காக, பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., படிக்கின்றனர்.

பணியில் உள்ள ஆசிரியர்கள் மட்டும், பல்கலை தொலைநிலை கல்வியில், பி.எட்., படிக்க, அனுமதி வழங்கப்படுகிறது. இந்த ஆசிரியர்கள், அவரவர் பணியாற்றும் பள்ளியிலேயே கள பயிற்சி பெற, கல்வித்துறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.

அக்டோபர், 3ல் வரைவு வாக்காளர் பட்டியல்


அனைத்து மாவட்டங்களிலும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்காக, அக்., 3ல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. சமீபத்தில், இளவயது வாக்காளர் சேர்ப்பு முகாம் நடந்தது. அதில், 18 முதல், 20 வயது வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். அடுத்த கட்டமாக, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, அடுத்த மாதம் துவக்கப்பட உள்ளது. அதற்காக, அனைத்து மாவட்டங்களிலும், வரைவு வாக்காளர் பட்டியல், அக்., 3ல், வெளியிடப்பட உள்ளது. அதன்பின், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பிக்க, அவகாசம் வழங்கப்படும்.

PGT - 1660 கூடுதல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பாடவாரியாக அனுமதித்து பள்ளிகளின் பெயர் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியீடு.*


மத்திய அரசு ஆறாவது ஊதியக்குழு ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு 1.7.2017 முதல் 3% (136% to 139%) அகவிலைப்படி உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது*

Monday, September 25, 2017

பள்ளி திறக்கும் நாளில் மாணவர் கையில் புத்தகம் : இயக்குனர் எச்சரிக்கை


தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் நாளிலேயே இரண்டாம் பருவ புத்தகம் மற்றும் நோட்டுக்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதில் தாமதம் ஏற்படக் கூடாது," என தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் தெரிவித்தார்.

மதுரை மாவட்ட தொடக்க கல்வித்துறை சார்பில் 1 - 8 வகுப்புகளை சேர்ந்த 1,28,436 மாணவ, மாணவிகளுக்கு 2,71,697 புத்தகங்கள், 5,49,504 நோட்டுக்கள் வழங்கப்படும் பணிகளை கார்மேகம் ஆய்வு செய்தார்.

தொடக்க கல்வி அலுவலர் தியாகராஜன் உடன் இருந்தார். கார்மேகம் கூறுகையில், "மாநிலம் முழுவதும் செப்., 27க்குள் நோடல் மையங்களில் இருந்து சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு புத்தகம், நோட்டுக்கள் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். வினியோக பணியில் தாமதமோ, புகார்களோ எழாமல் தொடக்க கல்வி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்," என்றார்.

இலவச மாணவர் சேர்க்கை காலக்கெடு நீட்டிப்பு


இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில், நுழைவு நிலை வகுப்பில், 25 சதவீத ஒதுக்கீட்டில், ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர். இதுவரை, 82 ஆயிரத்து, 909 குழந்தைகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். மேலும், காலியாக உள்ள, 41 ஆயிரத்து, 832 இடங்களில், குழந்தைகளைச் சேர்க்க, இணைய வழியாக விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, அக்., 10 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.

தொலைந்த சான்றிதழ் பெற ஆதார் போதும்'


தொலைந்த படிப்பு சான்றிதழ்களின் நகல்களை பெற, ஆதார், வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமத்தில் ஏதேனும் ஒன்றை இணைத்தால் போதும்,'' என, தமிழக உயர்கல்வி துறை அமைச்சர், அன்பழகன் தெரிவித்தார். தமிழக அரசு சார்பில், 2012 - 2014 வரையிலான, அறிவியல் அறிஞர் விருதுகள் வழங்கும் விழா, சென்னை, அண்ணா பல்கலையில், நேற்று நடந்தது.

இதில், 29 அறிவியல் அறிஞர்களுக்கு, விருதுகள் வழங்கி, உயர்கல்வித் துறை அமைச்சர், அன்பழகன் பேசினார். பின், நிருபர்களிடம் கூறியதாவது: பொறியியல் கலந்தாய்வு, 'ஆன் - லைன் 'முறையில் நடத்தப்படும். பொறியியல் படிப்பில், 'நீட்' தேர்வு வந்தால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். பல்கலை மாணவர்கள், தங்களின் சான்றிதழ்கள் தொலைந்தால், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமத்தில் ஏதேனும் ஒன்றை இணைத்து விண்ணப்பிக்கலாம். இரண்டு நாட்களில், நகல் சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த நடைமுறை, இன்று அமலுக்கு வருகிறது. ஒரு பல்கலையில் இருந்து, பிற பல்கலையில் சேர இடப்பெயர்வு சான்றிதழ் பெற தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய மாவட்ட கல்வி அலுவலர் பட்டியல்

சேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச தொகை ரூ.3000 ஆக குறைப்பு: பாரத ஸ்டேட் வங்கி


பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கான குறைந்தபட்ச தொகை 5000 ரூபாயில் இருந்து ரூ.3000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள், 18 வயதுக்கு உட்பட்டோருக்கும் ஓய்வூதியதார்களுக்கும் குறைந்த பட்ச தொகை வைத்திருப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பணியுரியும் பள்ளியிலே ( தொடக்க / நடுநிலைப்பள்ளி) கற்பித்தல் பயிற்சி அல்லது அருகாமை பள்ளியில் முன் அனுமதியுடன் ஒரு பாடவேளை ( பி.எட்) மேற்கொள்ள தெளிவுரை ஆணை



Sunday, September 24, 2017

மாணவர்களுக்கு விரைவில் விபத்து காப்பீடு திட்டம்


தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கோபியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக இந்த ஆண்டு முதல் கூடுதலாக 1000 தேர்வு மையங்கள் அமைக்கப்படும். நீட் தேர்வு உள்பட மத்திய அரசு கொண்டு வரும் எந்தவொரு போட்டித்தேர்வையும் சந்திக்கும் வகையில் ஏற்கனவே 412 மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

தற்போது கூடுதலாக மையங்கள் அமைக்கப்படும். கற்றலில் குறைபாடு உள்ள 10 சதவீத மாணவர்களுக்காக அடுத்த மாதம் முதல் வகுப்பறையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். அரசு மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். அதைத்தொடர்ந்து விபத்து காப்பீடு திட்டமும் செயல்படுத்தப்படும். அரசின் இலவச பொருட்களை கொண்டு செல்ல வாகன வாடகை அரசே வழங்குகிறது. அதில் ஏதேனும் தவறு ஏற்பட்டு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த மாதம் 32 இடங்களில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பயிற்சி மையம் தொடங்கப்படும். அதற்கான பயிற்சியாளர் தேர்வு நடந்து வருகிறது.

அதன்பின் புத்தங்கள் வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். இதற்காக 2.17 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மாணவர்களுக்கு தமிழ் பாடபுத்தகங்கள் வழங்குவது குறித்து இலங்கை அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அனுமதி கிடைத்தவுடன் ஒரு லட்சம் பிரதிகள் இலங்கைக்கு அனுப்பப்படும். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

பொதுத்தேர்வுக்கு கூடுதலாக ஆயிரம் மையங்கள்'


பொதுத்தேர்வுக்கு கூடுதலாக, 1,000 தேர்வு மையங்கள் அமைக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபியில், அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, கூடுதல் மையங்கள் அமைக்கப்படும்; ௧௦ கி.மீ.,க்குள் மையங்கள் இருக்கும்.

அதன்படி, நடப்பாண்டில், 1,000 தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்படும். இதனால், தேர்வு சமயத்தில், மன உளைச்சல் இருக்காது. 'நீட்' தேர்வை பொருத்தவரை, தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்பது தான், மாநில அரசின் கொள்கையாக உள்ளது. மத்திய அரசின், எந்த பொதுத்தேர்வையும் சந்திக்கும் அளவுக்கு, மாணாக்கர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அடுத்த மாதம் முதல் வாரத்தில், இதற்கான பணி துவங்கும். தமிழகத்தில் கற்றல் குறைபாடு, மாணவர்களின் அச்சத்தை போக்கும் வகையில், அக்.,௧௫ முதல் வகுப்பறைகளில், பயிற்சி அளிக்கப்படும். ஐ.ஏ.எஸ்., பயிலும் மாணாக்கர்களுக்கு, தமிழகத்தில் உள்ள, 32 நுாலகங்களில், பயிற்சி அளிக்கப்படும். தற்போது, இதற்காக பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதற்காக, 2.17 கோடி ரூபாய் நிதி, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஐஏஎஸ் பயிற்சி

Saturday, September 23, 2017

Depatment exam time table

திறந்தநிலை பல்கலையில்பி.எட்., 'அட்மிஷன்'


தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.எட்., படிப்பிற்கு மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது.பல்கலையின் பதிவாளர், எஸ்.விஜயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில்,2018-க்கான பி.எட்., பொது; பி.எட்., சிறப்பு கல்வி பட்ட படிப்புக்கான விளக்க கையேடு வெளியிடப்பட்டு உள்ளது. பி.எட்., பொது படிப்பில் சேர, டிப்ளமா ஆசிரியர் படிப்புடன், இளநிலை பட்டம் பெற்று, தற்போது, ஆசிரியராக பணியாற்ற வேண்டும். பி.எட்., சிறப்பு கல்வியில் சேர, இந்திய மறுவாழ்வு கழக நெறிமுறைகள் - ௨௦௧௫ன் படி, தகுதி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்ப நகல் மற்றும் விளக்க கையேட்டை, பல்கலையின், www.tnou.ac.in என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். கூடுதல்விபரங்களுக்கு, 044 - -2430 6600, 2430 6617 என்ற, எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

இனி ரெயில் டிக்கெட்டுள் முன்பதிவு செய்ய புதிய விதிகள்


இனி குறிப்பிட்ட வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்துள்ளது. தற்போது பெரும்பாலானோர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் வீட்டில் இருந்து கொண்டே ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.

இதுவரை இந்த முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்து வங்கி டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலமாகவும் எடுக்கப்பட்டு வந்தன. அதற்கு சேவை கட்டணம் என பயணிகளின் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டது. உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நேரத்தில் ரூ.20 என பிடித்தம் செய்யப்பட்ட சேவை கட்டணத்தை ஐ.ஆர்.சி.டி.சி. தள்ளுபடி செய்தது.

இதனால் தங்களுக்கு இழப்பு ஏற்படுவதாக சில வங்கிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்துக்கும், வங்கிகளுக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டன இதையடுத்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, யுனைட்டைட் பாங்க் ஆப் இந்தியா, சென்டிரல் வங்கி, ஹெச்.டி.எப்.சி., ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றின் கார்டுகள் மூலமே இனி டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் அறிவித்துள்ள்ளது.

Friday, September 22, 2017

25 லட்சம் மாணவர்களுக்கு விடுப்பு கால சிறப்பு வகுப்பு


தமிழக பாடத்திட்டத்தில், நேற்றுடன் காலாண்டு தேர்வு முடிந்தது. இன்று, அரசு பள்ளிகள் மட்டும் இயங்குகின்றன. நாளை முதல் அக்., 2௨ வரை, காலாண்டு மற்றும் சரஸ்வதி, ஆயுத பூஜை நாட்களுக்கான விடுமுறை விடப்படுகிறது. இந்நிலையில், அனைத்து பள்ளிகளிலும், ௧௦ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், சிறப்பு வகுப்புகள் நடத்த, பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இந்த வகையில், தமிழகம் முழுவதும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 25 லட்சம் மாணவர்களுக்கு தினமும் அரை நாள் மட்டும், சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள், 'ஸ்டிரைக்' போராட்டம் நடத்தியதால், வகுப்புகள் நடத்தாமல் பாதிக்கப்பட்டன. இந்த பாதிப்பை, சிறப்பு வகுப்புகள் மூலம் ஈடுகட்ட ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.