இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, May 16, 2015

மத்திய பாடத்திட்டத்தின் படி தமிழக பாடத்திட்டத்தை உயர்த்த நடவடிக்கை

மத்திய பாடத்திட்டத்தின் படி, தமிழக பாடத்திட்டத்தை தரம் உயர்த்த தமிழக பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த முதற்கட்ட ஆய்வுப்பணி துவங்கி உள்ளது.

முதற்கட்ட பணி...: தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அமலாகியுள்ளது. இப்பாடத்திட்டப்படி, முப்பருவ முறை கற்பித்தல் மற்றும் தேர்வு முறை அமலில் உள்ளது. இதேபோன்று, 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, பாடத்திட்டத்தை மத்திய அரசின் பாடத்திட்டத்துக்கு ஈடாக மாற்றியமைக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட பணி துவங்கி உள்ளது. தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலான என்.சி.இ.ஆர்.டி., மற்றும் தேசிய திறந்தவெளி பள்ளியான என்.ஐ.ஓ.எஸ்., ஆகிய பாட புத்தகங்களுக்கு ஈடாக, தமிழக பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட உள்ளது. தேசிய திறந்தவெளி பள்ளி பாட புத்தகங்களுடன், தமிழக பாடப்புத்தகங்களை ஒப்பிட்டு, புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் முதற்கட்ட பணி நடந்து வருகிறது.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான எஸ்.சி.இ.ஆர்.டி., சார்பில், தமிழகம் முழுவதும், 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ், ஆங்கிலம், மலையாளம், உருது, தெலுங்கு, கணிதம், வேதியியல், இயற்பியல் போன்ற பல பாடப்புத்தகங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. நிறை, குறைகள்: எஸ்.சி.இ.ஆர்.டி.,யின், 10க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள், இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, என்.சி.இ.ஆர்.டி.,யின் பாட புத்தகங்களும், தமிழக பாடப்புத்தகங்களுடன் ஒப்பிடப்படும். பின், தமிழக பாடப்புத்தகங்களின் நிறை, குறைகள் குறித்து விரிவான அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்ய, எஸ்.சி.இ.ஆர்.டி., முடிவு செய்துள்ளது.

ரேசன் கார்டுதாரர்களிடம் மொபைல் எண் சேகரிக்க உத்தரவு

ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தில், கார்டுதாரர் மொபைல் எண் மற்றும் தற்போதைய வயது விவரங்களை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கமான ரேஷன் கார்டுக்கு மாற்றாக, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. உடற்கூறு பதிவுகளை உள்ளடக்கிய ஆதார் பதிவு பணி நிறைவு பெற்றதும், அதன் புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு, 'ஸ்மார்ட்' கார்டு தயாரிக்க திட்டமிடப்பட்டது. ஆதார் பணி நிறைவு பெறாததால், மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு உள்தாள் இணைக்கப்பட்டுள்ளது.

தற்போது, வாக்காளர் பட்டியலில், ஆதார் எண், மொபைல் எண் மற்றும் இ-மெயில் முகவரி பதிவு செய்து வருகின்றனர். அடுத்தகட்டமாக, ரேஷன் கார்டுகளில் ஆதார் எண் விவரங்களை சேகரிக்க முடிவு செய்துள்ளனர். முன்னதாக, கார்டுதாரர் மொபைல் எண், வயது சேகரிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் கடை வாரியாக, குடும்ப தலைவரின் மொபைல் எண் பதிவு செய்ய வேண்டும். குடும்ப தலைவரிடம் மொபைல் போன் இல்லாத பட்சத்தில், உறுப்பினரின் மொபைல் எண்களை பதிவு செய்ய வேண்டும். கடந்த ஜன., 1 நிலவரப்படி, குடும்ப தலைவர் உட்பட அனைவரின் பெயரும், வயது விவரங்களை தெளிவாக பதிய வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

குழந்தைகளின் பெயரை சேர்க்க வேண்டியவர்கள், தகுந்த ஆதாரம் சமர்ப்பித்து, விரைந்து சேர்க்க வேண்டும். கார்டில் பெயர் இடம்பெற்றுள்ள அனைவரும், ஆதார் எண் பதிவு செய்ய வேண்டியுள்ளது. அதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியாகும். முதற்கட்டமாக, மொபைல் எண் பதிவு மற்றும் வயது சரிபார்ப்பு பணி நடக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

பள்ளிக் கல்வி துறை பணிகளை முடக்கியுள்ள 500 வழக்குகளை ஓரிரு மாதங்களில் முடிக்க நடவடிக்கை

பள்ளி கல்வித் துறை பணிகளை முடக்கியுள்ள, 500 வழக்குகளை, ஓரிரு மாதங்களில் முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு, கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறையின் கீழ், தொடக்கக் கல்வி, பள்ளி கல்வி, மெட்ரிக், மாநில சர்வ சிக் ஷ அபியான், ராஷ்டிரிய மத்யமிக் சிக் ஷ அபியான், தேர்வுத்துறை, தமிழ்நாடு பாடநூல் கழகம், பொது நூலகத்துறை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் மாநில ஆசிரியர் கல்வியியல் பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட இயக்குனரங்கள் உள்ளன.

பணிகள் முடக்கம்: இவற்றில், ஆசிரியர் நியமனம், ஆசிரியர் பணி மாறுதல், ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வின் குளறுபடிகள், பாடநூல் கழக, 'டெண்டர்' பிரச்னைகள், தேர்வுத்துறை மறுமதிப்பீடு பிரச்னைகள், டிப்ளமோ தேர்வுப் பிரச்னை, 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு பிரச்னைகள் என, பல வகை வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்றக் கிளை மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளால், கல்வித் துறையில் பல பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. பல பணி நியமனங்கள், புதிய இடங்கள் உருவாக்குதல், தேர்வு முடிவுகள் வெளியிடுதல், புத்தகங்கள் அச்சிடுதல், புதிய ஆட்களை நியமித்தல் போன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே, வரும் கல்வியாண்டிலாவது வழக்குகளை விரைந்து முடிக்க, கல்வித் துறைக்கு அரசு உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆலோசனை கூட்டம்: இதுதொடர்பாக, பள்ளி கல்விச் செயலர் சபிதா தலைமையில், பள்ளி கல்வித்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் உள்ளிட்ட அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில் துறை வாரியாக வழக்குகள் பட்டியலிடப்பட்டன. இதில், 500க்கும் மேற்பட்ட முக்கிய வழக்குகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறும், இதுதொடர்பாக துறை வழக்கறிஞர்களுடன் பேசி முடிவெடுக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

Friday, May 15, 2015

10th supplement exam time table

10ம் வகுப்பு துணை தேர்வு அட்டவணை

26-6-15-மொழிப்பாடம்1

27-6-15-மொழிப்பாடம்2

29-6-15-ஆங்கிலம் 1

30-6-15-ஆங்கிலம்2

1-7-15-கணக்கு
2-7-15-அறிவியல்
3-7-15-சமூக அறிவியல்

தேர்வு காலை 9மணி முதல் 12

*விண்ணப்பிப்பதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்

HSC special supplementary exam.time table

HSC -SPECIAL SUPPLEMENTARY EXAMINATION JUNE-2015

         TIME TABLE

22.06.2015- Language Paper – I 
(Tamil / Hindi / Kannada / Telugu / Malayalam / Urdu / Sanskrit / Arabic / French / German )

23.06.2015 - Language Paper – II 
(Tamil / Hindi / Kannada / Telugu / Malayalam / Urdu / Sanskrit / Arabic / French / German )

24.06.2015 -English Paper – I

25.06.2015 - English  Paper – II

26.06.2015 - Physics & Economics 

27.06.2015- Mathematics ,Zoology, Micro Biology, Nutrition & Dietetics 

29.06.2015 - Commerce, Home Science & Geography

30.06.2015- Chemistry & Accountancy

01.07.2015 -Biology, History, Botany & Business Maths

02.07.2015- Communicative English, Indian Culture, Computer Science ,Bio-Chemistry & Advanced Language (Tamil)

03.07.2015 -Political Science ,Nursing (General stream) , Statistics & THEORY OF VOCATIONAL SUBJECTS

தமிழ்நாட்டில் மருத்துவபடிப்பில் சேர 100 இடங்கள் அதிகரிப்பு

சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி கிடைத்துள்ளது. அந்த கல்லூரியில் 100 மாணவர்களை சேர்க்க முடியும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேர 100 இடங்கள் அதிகரித்து உள்ளது. எம்.பி.பி.எஸ். இடங்கள் பிளஸ்-2 தேர்வு முடிவு கடந்த 7-ந்தேதி வெளியிடப்பட்டது.

மருத்துவப்படிப்பில் சேர ஆர்வம் உள்ளவர்கள் மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பம் வாங்கி அதை நிரப்பி விண்ணப்பித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் சென்னை மருத்துவக்கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி உள்பட 19 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் மாணவ-மாணவிகளை சேர்க்க 2 ஆயிரத்து 555 இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீடு 383 இடங்கள் மீதம் 2,172 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் தமிழக மாணவர்கள் சேரலாம்.

ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி இந்த நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிதாக அரசு மருத்துவக்கல்லுரியை தமிழக அரசு கட்டியது. அந்த கல்லூரியில் 100 மாணவ-மாணவிகளை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ப்பதற்கு உரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியது. இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் இந்த கல்லூரியை ஆய்வு செய்து சென்றனர். எப்படியும் அனுமதி கிடைத்துவிடும் என்று தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளும், மருத்துவக்கல்லுரி அதிகாரிகளும் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் அந்த மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி கிடைத்துள்ளது.

100 இடங்கள் அதிகரிப்பு இதனால் தமிழ்நாட்டில் ஏற்கனவே இருந்த 2,555 இடங்கள், 2,655 இடங்களாக அதிகரித்துள்ளது. அகில இந்திய ஒதுக்கீடு போக மீதம் 2,257 இடங்கள் உள்ளன. மற்ற சுயநிதி மருத்துவக்கல்லூரிகளுக்கும் அனுமதி வழங்கப்படுமா என்பது விரைவில் தெரியும்.

அரசுப் பணிகளுக்கான அனைத்து தேர்வுகளின் பட்டியலை வெளியிட வேண்டும்-உயர்நீதிமன்றம்

அரசுப் பணிகளுக்கான அனைத்து எழுத்துத் தேர்வுகளின் மதிப்பெண் பட்டியலையும் வெளியிட வேண்டும் என்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (டி.என்.பி.எஸ்.சி.) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழ்நாடு தொழில் துறை சார்புப் பணிகளில் உதவிப் பொறியாளர் பணிகளுக்கான அறிவிப்பாணையை டி.என்.பி.எஸ்.சி. கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியிட்டு, ஜூன் மாதம் எழுத்துத் தேர்வு நடத்தியது.

நேர்காணலும் இந்தத் தேர்வு முறையில் உண்டு. இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருமாறு தேர்வாளர்கள் பெயர்களுடன் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு வெளியிட்டது. அதன் பிறகு, நேர்காணலுக்கு வருமாறு கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில், சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்ட தங்களை நேர்காணலுக்கு அழைக்கவில்லை எனவும், எழுத்துத் தேர்வின் மதிப்பெண்களை வெளியிடவில்லை எனவும் கூறி, எம்.விஜய் கீர்த்தி, பி.தமிழரசி ஆகிய இருவர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

மேலும், சம்பந்தப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும், தகுதியின் அடிப்படையில் தங்களுக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் தங்கள் மனுவில் கோரினர். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்பு நடைபெற்றது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டவர்கள், நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட 82 தேர்வர்களின் மதிப்பெண் பட்டியல், வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தவர்களை மட்டுமே அடுத்து நேர்காணலுக்கு அழைத்துள்ளனர். வழக்கு தொடுத்துள்ள மனுதாரர்கள் குறைந்த அளவே மதிப்பெண் பெற்றுள்ளனர்.

இருந்தாலும், டி.என்.பி.எஸ்.சி.யின் தேர்வு முறை திருப்தியளிக்கவில்லை. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்த பின்னர் நேர்காணல் நடத்தப்படுகிறது. நேர்காணலுக்கு முன் சான்றிதழ் சரிபார்ப்பு தேவையில்லாதது. மேலும், பல ஆயிரம் பேர் எழுதுகிற குரூப்-4 எழுத்துத் தேர்வின் மதிப்பெண்கள் வெளியிடப்படுகின்றன. குறைந்த அளவு தேர்வு எழுதிய உதவிப் பொறியாளர்களுக்கான மதிப்பெண்கள் வெளியிடப்படாதது சந்தேகத்தை எழுப்புகிறது. எனவே, அரசுப் பணிகளில் அதிக அளவு மதிப்பெண் பெற்ற தேர்வர்களை நேர்காணலுக்கு அழைக்கும் முன், எழுத்துத் தேர்வு எழுதிய அனைவரின் மதிப்பெண்களையும் வெளியிட வேண்டும். இதன்மூலம் தேர்வுகளில் வெளிப்படைத் தன்மை உறுதிப்படுத்தப்படும்.

எனவே, உதவிப் பொறியாளருக்கான தேர்வு எழுதிய அனைவரின் மதிப்பெண்களையும் டி.என்.பி.எஸ்.சி. உடனடியாக வெளியிட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

மகப்பேறு விடுப்பு.புதிய வழிகாட்டு நெறிமுறை

பெண் அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதம் மகப்பேறு விடுப்பு அளிப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை (பயிற்சி) முதன்மைச் செயலாளர் அனிதா ப்ரவீன் அனைத்துத் துறை செயலாளர்கள், நீதிமன்றங்கள் உள்ளிட்டவற்றுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசுப் பணியில் நிரந்தரமாக பணியாற்றும் இளம் தாய்மார்களுக்கு ஆறு மாத கால மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு இரண்டு குழந்தைகளுக்கு குறைவாக இருந்தால் இந்த விடுப்பினைப் பெற தகுதி படைத்தவர்கள். தாற்காலிகமாக பணியாற்றுவோருக்கும் நிபந்தனைகள் அடிப்படையில் விடுப்பு அளிக்கப்படுகிறது. மகப்பேறு காலத்தில் பாதிப்பு ஏற்பட்டு கரு கலைந்தால், அவர்களுக்கு சராசரியான ஊதியத்துடன் ஆறு வாரங்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும்.

இந்த விடுப்புக் காலம் என்பது குறைந்தபட்சம் 12 வாரங்களுக்கும் அதிகபட்சம் 20 வாரங்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். குழந்தைகள் பிறக்கும் போதே இறந்திருந்தால், அத்தகைய தாய்மார்களுக்கு 90 நாள்கள் வரை மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும். எனவே, இத்தகைய தன்மைகளில் மகப்பேறு விடுப்புகளை துறைத் தலைவர்கள் அளிக்கலாம். மகப்பேறு விடுப்பு தொடர்பாக பல்வேறு முரண்பாடான கருத்துகள் கேட்கப்பட்டுக் கொண்டே இருந்ததால் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுவதாக அனிதா ப்ரவீன் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில் சிறப்புச் சான்றிதழ் வழங்கும் புதுத் திட்டம்.ச்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தை உயர்த்தினால், ஆசிரியர் மற்றும் அதிகாரிகளுக்கு சிறப்பு பாராட்டுச் சான்றிதழ் வழங்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 2 தேர்வில் மோசமான தேர்ச்சியால், அரசு பள்ளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே, அரசு பள்ளிகளின் தேர்ச்சியை அதிகரிக்கும் நடவடிக்கை எடுக்குமாறு, கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் கல்வியாண்டு முதல், 100 சதவீத தேர்ச்சி மட்டுமின்றி, மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளி மாணவர்கள் மதிப்பெண் பெற்றால், அப்பள்ளி தலைமை ஆசிரியர், பாடம் எடுத்த ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கவும், பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

இதையொட்டி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம், சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் நடந்தது. இக்கூட்டம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: பிளஸ் 2 தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் பரிதாப நிலைக்கு என்ன காரணம்; குறிப்பாக ஆதிதிராவிட பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகளை விட மோசமான நிலைக்கு சென்றது ஏன்? சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவது எப்படி என்று ஆலோசிக்கப்பட்டது. இந்த இலக்கை எட்ட, வரும் கல்வியாண்டின் துவக்கத்தில் இருந்தே பாடுபட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.

சிறந்த தேர்ச்சி பெறும் மாவட்டங்கள் மற்றும் பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்; ஆசிரியர் காலியிடங்களை மேலிடத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என, முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

UPSC postpones civil service exam notifications

Thursday, May 14, 2015

முதன்மைக் கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப்பள்ளிக்கூடங்களும் எந்த வித புகாருக்கும் இடம் அளிக்காமல் சிறப்பாக நடத்தவேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அறிவுரை வழங்கினார்.

கல்வி அதிகாரிகள் கூட்டம்

வருகிற ஜூன் 1-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிக்கூடங்களும் திறக்கப்பட உள்ளன. பள்ளிக்கூடங்கள் திறக்கும் முன்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளையும், அனைத்து மாவட்ட மெட்ரிகுலேசன் ஆய்வாளர்களையும் அழைத்து சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆய்வு நடத்தவேண்டும்

2015-2016-ம் கல்வி ஆண்டு ஜூன் 1-ந்தேதி தொடங்க உள்ளது. அன்று அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள், விலை இல்லா நோட்டுபுத்தகங்கள், விலை இல்லா சீருடைகள் 2 செட், விலையில்லா அட்லஸ் ஆகியவை வழங்கப்பட உள்ளன. இவை வழங்கப்படும்போது சரியாக வழங்கவேண்டும். வழங்குவதில் எந்தவித குறையும் இருக்கக்கூடாது.

பள்ளிக்கூடங்களில் பாழடைந்த கிணறு, பழைய பள்ளிக்கட்டிடம், பழுதடைந்த கழிவறை ஆகியவை இருக்கக்கூடாது. அவை பழுதுபார்த்து பயன் உள்ள வகையில் இருக்க அனைத்து ஏற்பாடும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும் அவை சரியாக இருக்கின்றனவா என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கூடங்களை அவை திறக்கும் முன்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும். பெரும்பாலான பள்ளிகளில் அனைத்தும் சரி செய்யப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன். மேலும் மாணவர் சேர்க்கையும் சிறப்பாக இருக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

புகாருக்கு இடம் அளிக்காமல்...

கடந்த வருடத்தை விட பள்ளிக்கூடங்களில் பிளஸ்-2 தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும் தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகளில் ஏன், எப்படி குறைந்தது என்று ஆராய்ந்து அதற்கான காரணத்தை கண்டுபிடித்து வரும் கல்வி ஆண்டில் தேர்ச்சியை அதிகரிக்க முதன்மை கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்காக மாவட்ட அளவில் கூட்டம் நடத்தி பள்ளித்தலைமை ஆசிரியர்களை அழைத்து குறைகள் இருந்தால் அவற்றை போக்கவேண்டும். மொத்தத்தில் எந்தவித புகாருக்கும் இடம் அளிக்காமல் பள்ளிக்கூடங்களை தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக நடத்தவேண்டும்.

இவ்வாறு த.சபீதா கூறினார்.

ஆய்வக உதவியாளர் தேர்வு

முன்னதாக கூட்டத்தில் அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில் ‘பள்ளிக்கூட ஆய்வக உதவியாளர் தேர்வு மே 31-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. அந்த தேர்வை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் ஆலோசனையை பெற்று சிறப்பாக தேர்வை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுங்கள்’ என்றார்.

தொடக்ககல்வி பட்டயத்தேர்வு.அனுமதிச்சீட்டு பதிவிறக்கம் செய்யலாம்

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் வெள்ளிக்கிழமை (மே 15) முதல் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் இரண்டாமாண்டு தேர்வுகள் வரும் 18-ஆம் தேதி தொடங்கி ஜூன் 3-ஆம் தேதி வரையும், முதலாமாண்டு தேர்வுகள் வரும் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 4-ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை எழுதவுள்ள தனித் தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருக்கும் தனித் தேர்வர்கள் அனைவரும் ww.tndge.in என்ற இணையதளம் மூலம் தங்களின் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிந்து வெள்ளிக்கிழமை (மே 15) முதல் மே 22-ஆம் தேதி வரை தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 சான்றிதழ் பிழை திருத்த தலைமையாசிரியர்க்கு அதிகாரம்

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு, தற்காலிக மதிப்பெண் வழங்கும் போது, அதில் எழுத்துப் பிழை இருந்தால், தலைமையாசிரியரே திருத்தம் செய்ய அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. அதேநேரம், 'மதிப்பெண் சான்றில், மதிப்பெண் விவரத்தில், 'கை' வைக்கக் கூடாது' என, உத்தரவிடப்பட்டு உள்ளது. பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் மாணவர் பெயர், பள்ளி, முகவரி, மதிப்பெண், பிறந்த தேதி உள்ளிட்டவற்றில், எழுத்துப்பிழை, அச்சுப்பிழை வருவதால், இந்த ஆண்டு கல்வித் துறை மாற்றுத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

பள்ளிகளில் தலைமையாசிரியர், மாணவரின் தற்காலிக மதிப்பெண் பட்டியலை, ஆன் - லைனில், 'பிரின்ட் அவுட்' எடுத்து, சான்றொப்பம் இட்டு, தற்காலிகமாக நேற்று முதல் வழங்கி வருகின்றனர்.தற்காலிக மதிப்பெண் சான்றிதழில், எழுத்துப்பிழை, அச்சுப் பிழை இருந்தால், அந்தந்த தலைமையாசிரியரே, திருத்தம் செய்து கொள்ளலாம் என, கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. ஆனால், மார்க் விவரங்களில் திருத்தம் செய்ய, தலைமை ஆசிரியருக்கு அதிகாரமில்லை.

இதனால், அசல் மதிப்பெண் சான்று வரும் வரை, மாணவர்கள் காத்திருக்க வேண்டியதில்லை. தற்காலிக சான்றிதழை வைத்தே, உயர்கல்விக்கு விண்ணப்பிக்கலாம். திருத்தம் செய்யப்பட்ட விவரத்தை, தேர்வுத் துறைக்கு அனுப்பி, அங்கிருந்து திருத்திய மதிப்பெண் பட்டியல் வந்தபின், அசல் மதிப்பெண் சான்று வழங்கப்படும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

மறுமதிப்பீட்டில் மதிப்பெண் குறைந்தால் அதுவே இறுதியானது

'பிளஸ் 2 தேர்வில், மறு மதிப்பீட்டில் மதிப்பெண் குறைந்தால், அதுவே இறுதியானது' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.பிளஸ் 2 தேர்வில், இயற்பியலில் கடந்த ஆண்டை விட, 95 சதவீதம் குறைவானோர், 'சென்டம்' எடுத்தனர். வேதியியல், விலங்கியல், உயிரியல், கணினி அறிவியல், வணிகவியல், கணித பதிவியல் பாடங்களிலும், 'சென்டம்' எடுத்தோர் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது.இந்நிலையில், ஏராளமான மாணவர்கள் மறு கூட்டல், விடைத்தாள் நகல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய முடிவு செய்துள்ளனர்.

தேர்வுத் துறை வெளியிட்டுள்ள நிபந்தனைகள்: *மறு கூட்டல் செய்யக்கோரும் தேர்வரின் விடைத்தாளில், பக்க வாரியாகவும், வினா வாரியாகவும் வழங்கப்பட்ட மதிப்பெண் மறுகூட்டல் செய்யப்படும்.

*மதிப்பீடு செய்யாமல் விடுபட்ட விடைகள் மற்றும் முழு மதிப்பீடு செய்யாத விடைகளை பரிசீலித்து மதிப்பெண் வழங்கப்படும்.

*டைக்கு, ஏற்கனவே வழங்கப்பட்ட மதிப்பெண்ணை விட கூடுதலாக வழங்க முடியாது.

*மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டில் மாற்றம் இருந்தால், புதிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்

.*மறு கூட்டலுக்கு மட்டும் விண்ணப்பிப்பவருக்கு நகல் வழங்கப்படாது.

*விடைத்தாள் நகல் பெற்றவர்களுக்கு மட்டுமே மறு மதிப்பீடு செய்யப்படும்

.*தேர்வர்களின் விடைத்தாள்களில், சம்பந்தப்பட்ட பாடத்திற்கான பாட வல்லுனர் மூவர் குழு மூலம் மறு மதிப்பீடு செய்யப்படும்.

*மறு மதிப்பீட்டில் மதிப்பெண் உயர்வோ, குறைவோ ஏற்படலாம். குறைந்தால், முந்தைய அதிக மதிப்பெண் கிடைக்காது; மறு மதிப்பீடு மதிப்பெண்ணே இறுதியானது. எனவே, பாட வல்லுனர்களிடம் நன்றாக ஆய்வு செய்து, மதிப்பெண் உயரும் என்று தெளிவாகத் தெரிந்து, மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்.