இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, November 25, 2014

பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக் கூட்டம்.

..
மாவட்டக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் தொடக்க கல்வி அலுவலர்கள் பங்குபெற்ற ஆய்வுக் கூட்டம் 24/11/2014 அன்று அண்ணா பல்கலைகழக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.வீரமணி அவர்களின்
தலைமையில் நடைபெற்ற இவ்வாய்வுக் கூட்டத்தில், உயர்திரு பள்ளிக்கல்வி துறை செயலாளர் திருமதி.சபீதா அவர்கள், அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட இயக்குனர் உயர்திரு.பூஜா குல்கர்னி உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஆய்வு கூட்டத்தில் மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் முழுமையாக நடைபெற்றதா என்பதை ஆய்வு செய்தனர்.காலாண்டுத் தேர்வில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த ஆண்டு 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வில் 95% தேர்ச்சி இலக்கை அடையவேண்டும் அதற்கான முழு முயற்சிகளை கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

6,7,8 ஆகிய வகுப்புகளில் வாசித்தல், எழுதுதல் மற்றும் கணிதத் திறன்கள் மாணவர்களுக்கு அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

Monday, November 24, 2014

அகஇ - 2015-16ம் ஆண்டுக்கான புதிய தொடக்க / உயர் தொடக்கப் பள்ளிகள் தொடங்க கருத்துருக்கள் பெறுதல் சார்ந்து இயக்குனரின் செயல்முறைகள்

CLICK below

https://drive.google.com/file/d/0B69z3JTclPnxbVNKdjBMdTBVRTg/view?usp=sharing

குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 2015 ஆம் ஆண்டு வரை நீட்டிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 2015 ஆம் ஆண்டு வரை நீட்டிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக உணவுத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளை 2015 ஆம் ஆண்டிற்கு புதுப்பிக்கும் வகையில் உள்தாள்களை அச்சிட்டு, குடும்ப அட்டைகளில் இணைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை நீட்டிக்க அரசு உத்தரவிட்டுள்ளதாக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் குறிப்பிட்டுள்ளார். அடுத்த மாதம் நியாயவிலை கடைகளில், 2015 ஆம் ஆண்டுக்கான உள்தாளை குடும்ப அட்டையுடன் இணைத்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், எப்பொருளும் வேண்டா குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்கள் கணினி மூலம் புதுப்பித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, November 23, 2014

ஆசிரியர் தேர்வு விண்ணப்பத்தில் குழப்பம்


 

விண்ணப்பத்தில் ஆண்டை குறிக்கும் இடத்தில் இருகட்டங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதியானோர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இதற்கான விண்ணப்ப படிவங்கள் தற்போது விநியோகிக் கப்பட்டு வருகின்றன. விண்ணப்பம் பூர்த்தி செய்து அளிக்க வரும் 26-ம் தேதி கடைசி நாள்.

விண்ணப்பத்துடன் படிவத்தை நிரப்ப உதவும் வழிமுறை கையேடு ஒன்றும் கொடுக்கப்படுகிறது. அதில் வேலைவாய்ப்பக பதிவு மூப்பு என்ற இடத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த ஆண்டு மற்றும் மாதம் குறிக்க வேண்டும் என, சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

விண்ணப்ப படிவத்தில் வரிசை எண் 9-ல் வேலைவாய்ப்பக பதிவு மூப்பு காலத்தில் ஆண்டுக்கான வரிசையில் இரண்டு கட்டங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன. முதல் வரிசை கட்டங்களில் 0 முதல் 4 வரை வரையிலும், இரண்டாவது வரிசை கட்டங்களில் 0 முதல் 9 வரையிலும் குறிப்பிடப் பட்டுள்ளது.

இதில் மாதத்தை பொறுத்த வரை எந்த குழப்பமும் இல்லை. ஆனால், ஆண்டை குறிப்பிடும் கட்டத்தில் குழப்பம் இருப்பதாக தேர்வர்கள் கூறுகின்றனர். ஆண்டுக்கான வரிசையில் முதல் கட்டத்தில் 4 வரை மட்டும் எண் உள்ளதால் 2000-க்கு முன்பு பதிவு செய்தவர்கள் வருடத்தைக் குறிப்பதில் குழப்பம் அடைந் துள்ளனர்.

எனவே தேர்வு வாரியம் உடனடி யாக காலம் எண் ஒன்பதிற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என, தேர்வுக்கு தயாராகும் ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் மருத்துவ காப்பீடு : மத்திய அரசு புதிய திட்டம்


    அனைத்து தரப்பு மக்களுக்கும் காப்பீடு அளிக்க புதிய திட்டத்தை ஜனவரி மாதத்தில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் சுகாதார காப்பீடு அளிப்பதை மத்திய அரசு நோக்கமாக கொண்டுள்ளது. அதன்படி அனைவருக்குமான தேசிய சுகாதார உறுதி திட்டத்தை செயல்படுத்து வது குறித்து வரையறை செய்ய சுகாதார அமைச்சகத்தை பிரதமர் அலுவலகம் கடந்த வாரம் கேட்டுக்கொண்டது. தற்போது மத்திய அரசு ராஷ்டிரீய ஸ்வஸ்திய பீமா யோஜனாவை (ஆர்எஸ்பிஒய்) செயல்படுத்தி வருகிறது.

இதில் புதிய அம்சங்களை சேர்த்து அனைவருக்கும் காப்பீடு கிடைக்கும் வகையில் வரையறைகளை மாற்றம் செய்து புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பயன்பெறும் வகையில் ஆர்எஸ்பிஒய்ஐ தொழிலாளர் அமைச்சகம் நிர்வகித்து வருகிறது. முதற்கட்டமாக இந்த திட்டம் தேசிய சுகாதார உறுதி திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்பட உள்ளது. பின்பு இரண்டையும் இணைத்து ஒரே திட்டமாக செயல்படுத்தப்படும். இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்த பணிகள் முடிவுறும் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

அனைவருக்குமான காப்பீடு திட்டம் 50 அத்தியாவசிய மருந்துகள், முக்கிய பரிசோதனைகள், ஆயுர்வேதம், ஹோமியோபதி உட்பட 30 மாற்று மருந்துகளை சலுகை விலையில் பெற வழிவகுக்கும். இவை ஏழைகளுக்கு இலவசமாக கிடைக்கும். மற்றவர்கள் சிறு தொகையை செலுத்தி சலுகை கட்டணத்தில் சிகிச்சை பெறலாம். முக்கிய மருத்துவ கருவிகளை குறைந்த விலையில் பெறமுடியும். ஆர்எஸ்பிஒய்ஐ 2008ம் ஆண்டு ஏப்ரலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிமுகப்படுத்தியது.

ஓய்வுபெற்ற பின் பி.எப் கணக்கை முடிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பிஎப் கணக்கை முடித்து செட்டில்மென்ட் பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி அடுத்த மாதம் அமலாகிறது. இதன்மூலம் 3 நாட்களுக்குள் பணம் பெறலாம். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) திட்டத்தில் ஊழியர்களுக்கு பிடித்தம் செய்யப்படும் பணம் நிறுவன பங்களிப்புடன் சேர்த்து சேமிக்கப்படுகிறது. பணியில் இருக்கும்போதே இதில் குறிப்பிட்ட தொகையை வீட்டுக்கடன், திருமண செலவு போன்றவற்றுக்காக பெறும் வசதியும் உள்ளது.

பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு முழு பணமும் பெற ஊழியர்கள் நேரடியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்து வந்தனர். தற்போது ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை அமல்படுத்த பிஎப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவன வட்டாரங்கள் கூறியதாவது: பிஎப் கணக்கை முடித்து பணம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை அடுத்த மாதம் மத்தியில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். பிஎப் மற்றும் வங்கி கணக்கை ஆதார் எண் மூலம் இணைத்துள்ள சந்தாதாரர்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

பயோமெட்ரிக் முறையில் விரல் ரேகை, கருவிழி உட்பட அனைத்தும் பதிவு செய்யப்படுவதால் முறைகேடு நடப்பதற்கு வழியில்லை. மேலும், தற்போதுள்ள நடைமுறையின்படி, சந்தாதாரர் பணம் பெறுவதற்கு, விண்ணப்பத்தில் தவறுகள் உள்ளிட்ட பல காரணங்களால் 30 நாட்களுக்கு மேல்கூட ஆகிவிடுகிறது. ஆன்லைன் மூலம் அறிமுகப்படுத்தப்படும் புதிய முறையில் மூன்றே நாட்களில் பணம் கிடைக்க வழிவகுக்கிறது என்றனர். தொழிலாளர் ஒருவர் வேறு ஒரு நிறுவனம் மாறும்போது ஏற்படும் சிக்கலை தீர்க்க, பிஎப் நிறுவனம் நிரந்தர கணக்கு எண் அளித்துள்ளது. இந்நிலையில் புதிய திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. புதிய திட்டத்தின்படி 30 சதவீதம் வரையிலான பிஎப் கோரிக்கைகளை ஆன்லைன் மூலம் தீர்க்க பிஎப் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் புதிதாக இணைந்ததுள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களுக்கு CPS எண் வந்துள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

Click below

http://www.tn.gov.in/karuvoolam/cps_new/cps_index.html

M.Phil பகுதி நேரமாக படிக்க உதவித்தொடக்கக்கல்வி அலுவலரின் அனுமதியே போதுமானது - இயக்குநர்

Click below

https://app.box.com/s/592nenmvk34vy7ew6t2r

மாணவர்களின் வாசிப்புத்திறன் குறைந்ததற்கான காரணங்கள்: கல்வித்துறை ஆய்வு


குடும்பம், வாழ்விட சூழல், சினிமா, டிவி தாக்கம், கிரிக்கெட், ஆசிரியர்களின் கவனமின்மை உள்ளிட்ட காரணங்களால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வாசிப்பு திறன் குறைந்திருப்பது, கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் வாசிப்பு திறன் தொடர்பாக, மாவட்டம் வாரியாக ஆய்வு நடத்துமாறு, கல்வித்துறை அலுவலர்களுக்கு, தொடக்க கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டது. துவக்கப் பள்ளிகள், நடு நிலைப் பள்ளி மாணவர்களில் சிலர், படிப்பில் பின்தங்கியவர்களாக கண்டறியப்பட்ட நிலையில், அவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் திட்டமாக, இந்த ஆய்வு நடத்தப்பட்டது. எளிமையான கேள்விகள் கொண்ட வினாத்தாள் உருவாக்கப்பட்டு, குறிப்பிட்ட பள்ளிகளை தேர்வு செய்து, மாணவர்களுக்கு முன்சோதனை தேர்வு நடத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் 1,164 அரசு பள்ளிகள் மற்றும் 62 அரசு உதவிபெறும் பள்ளிகள் என 1,226 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், 14 ஒன்றியங்களில் குறிப்பிட்ட பள்ளிகளை மட்டும் தேர்வுசெய்து நடத்தப்பட்ட இத்தேர்வில், 60 முதல் 70 சதவீதம் வரை, வாசிப்பு திறன் குறைந்த மாணவர்கள் கண்டறியப்பட்டனர்.

அவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில், போதிய பயிற்சி அளிக்க, திருப்பூர், உடுமலை, காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில், ஆசிரியர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், கிராமப்புறங்களை காட்டிலும், நகரப்புற மாணவர்களிடம் வாசிப்பு திறன் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

பல குழந்தைகளின் பெற்றோர், வெளி மாவட்டங்களை சேர்ந்த கூலி தொழிலாளர்களாக இருப்பதால், அடிக்கடி வசிப்பிட மாற்றம் அவர்களின் கல்வியை பாதிக்கிறது. படிப்பில் கவனம் செலுத்தாத மாணவர்களுடன் நட்பு கொள்ளும்போது, படிப்பை விட்டு கவனம் சிதறுகிறது. நெருக்கடியும், போக்குவரத்தும் அதிகமாக உள்ள அமைதியற்ற வாழ்விட சூழலால், வீடுகளில் படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் கைவிடுகின்றனர்.

சினிமா நடிகர்கள் மீதான ஆர்வம், டிவி பார்க்கும் பழக்கம், கிரிக்கெட் போன்றவற்றில் இருக்கும் அபரிமிதமான ஆர்வம், படிப்பில் மாணவர்களின் கவனத்தை குறைத்து விடுகிறது. எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்பதால், மாணவர்களை கட்டாயப்படுத்தி படிக்கச் சொல்லும் மனநிலை, சில ஆசிரியர்களுக்கு இருப்பதில்லை என, ஆய்வில் தெரியவந்துள்ளது.

மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜாமணி கூறுகையில், "வாசிப்பு திறன் குறைந்த மாணவர்களுக்கு, பள்ளிகளில் மாலை நேர சிறப்பு வகுப்பு நடத்தி, கற்றல் திறனை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முழுமையான ஈடுபாட்டுடனும், மாணவர்களின் கல்வி நலனில் அக்கறையோடும் செயல்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

Saturday, November 22, 2014

BHARATHIYAR UNIVERSITY -B.Ed., Admission Notification 2015-2017

Click below

http://www.b-u.ac.in/advt/advt.pdf

INCOME TAX | மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி விலக்கு உச்சவரம்பு மேலும் உயரக்கூடும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சூசகமாக தெரிவித்தார்.


மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி விலக்கு உச்சவரம்பு மேலும் உயரக்கூடும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சூசகமாக தெரிவித்தார். டெல்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் நேற்று அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:

மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர மக்கள்
நேரடியாக அதிக வருமான வரி செலுத்தி வருகிறார்கள். அவர்களிடம் இருந்து வருமான வரி வசூலிப்பதை குறைத்தால், சம்பளப் பணம் அவர் களுக்கு முழுமையாகச் செல்லும். அவர்கள் அதிகம் செலவும் செய்வார்கள். இதன் மூலம் மறைமுகமாக வரியை பெற்றுக்கொள்ளலாம்.

அதே நேரம், வரி ஏய்ப்பு செய்பவர்களை தப்பவிடக்கூடாது. அரசுக்கு கிடைக்கும் வரி வருமானத்தில் பாதி அளவுக்கு மறைமுக வரிதான். அதாவது உற்பத்தி வரி, இறக்குமதி வரி, சேவை வரி என பல வரிகள் செலுத்தி வருகிறார்கள். என் உதவியாளர் எந்த அளவுக்கு மறைமுக வரி செலுத்துகிறாரோ, அதே அளவுக்கு நானும் மறைமுக வரி செலுத்துகிறேன். செலுத்தும் அளவுகளில் மாற்றம் இருக்குமே தவிர, நாம் அனைவரும் மறைமுக வரி செலுத்துகிறோம். கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு தொகை 2 லட்ச ரூபாயிலிருந்து 2.5 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டது. இப்போதைக்கு 2.5 லட்ச ரூபாய் வரை வரி செலுத்த தேவை இல்லை.

மற்ற இதர விலக்குகளை சேர்த்துக்கொண்டால் 3.5 லட்சம் முதல் 4 லட்ச ரூபாய் வரை வரி இல்லாமல் சமாளிக்கலாம். 35,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரை சம்பளம் வாங்கும் நபர், சரியான சேமிப்பை செய்தால் அவர் வரி கட்டத் தேவை இல்லை. ஆனால், வாடகை, குழந்தைகளின் செலவு ஆகிய காரணங்களால் இந்த எல்லைக்குள் இருப்பவர்கள் பலரால் சேமிக்க முடியவில்லை. மேலும் வரி மூலம் கிடைக்கும் வருமானத்தை அதிகரிக்க, தற்போது இருக்கும் வருமான வரிவிலக்கு உச்சவரம்பை குறைக்கும் திட்டம் இல்லை. அது சரியான வழியும் அல்ல. இந்த நிலையில், அரசுக்கு வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் இந்த விலக்கினை இன்னும் அதிகரிக்கலாம். நானும் அதைத்தான் விரும்புகிறேன். ஆனால் தற்போதைய அரசின் வருமான சூழ்நிலையில் இது சவாலான விஷயம். கடந்த முறை என்னுடைய எல்லைகளை தாண்டியும் பல சலுகைகளை வழங்கினேன்.

நேரடியாக வருமான வரியாக வசூல் செய்வதை விட, அவர்கள் செலவழிக்கும் பட்சத்தில் பொருளாதார பரிவர்த்தனைகள் அதிகரித்து, மறைமுக வரி வருவாய் உயரும். கிசான் விகாஸ் பத்திரம் கிசான் விகாஸ் பத்திரங்களை மீண்டும் அறிமுகம் செய்திருப்பது கருப்புப் பணத்தை ஊக்குவிப்பதுபோல் அமைந்துள்ளது என்று சில கட்சிகள் அச்சம் தெரிவித்திருப்பது தேவையற்றது. அந்தப் பத்திரத்தை வாங்கும் முதலீட்டாளர்கள் தங்களின் பெயர், விலாசம், பான் அட்டை எண்ணை கண்டிப்பாக அளிக்க வேண்டும். எனவே இந்தப் பத்திரத்தில் முறைகேடுகள் செய்ய முடியாது. தீவிரவாத அமைப்புகள் கிசான் விகாஸ் பத்திரங்களை வாங்கக்கூடும் என்று எழுப்பப்படும் அச்சங்களும் தேவையற்றது. அப்படி நடப்பதற்கு வாய்ப்பில்லை. இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. மகாராஷ்டிரம், ஹரியாணா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் சட்டப்பேரவை களத்தில் காங்கிரஸ் கடும் போராட்டங்களை சந்தித்து வருகிறது.

இதன் காரணமாக மத்திய அரசுக்கு எதிராக அந்தக் கட்சி அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. இவ்வாறு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியத்தை நிர்வாகத்திடம் வழங்க உத்தரவு


  அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை பள்ளி நிர்வாகத்திடமே வழங்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக, புரசைவாக்கத்தில் உள்ள சர்.சி.எம்.டி.முத்தையா செட்டியார் ஆண்கள் பள்ளியின் தாளாளர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

எங்கள் பள்ளிக்கு அரசு நிதி உதவி வழங்கப்படுகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான ஊதியம் அரசிடமிருந்து நேரடியாகவே அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அவ்வாறு வழங்காமல், பள்ளி நிர்வாகத்திடமே ஊதியத்தை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனுவை விசாரித்து நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் பிறப்பித்த உத்தரவு: கடந்த 2011-ஆம் ஆண்டு பள்ளி நிர்வாகத்துக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், இருவருக்கும் இடையே பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

எனவே, கடந்த 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான ஊதியம் அவர்களிடம் நேரடியாக வழங்கப்படும் என மாவட்டக் கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ், பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான ஊதியம் சம்பந்தப்பட்ட பள்ளிச் செயலாளரிடமே வழங்கப்பட வேண்டும். இதற்கு முழு அதிகாரம் படைத்தவர் மாவட்டக் கல்வி அதிகாரிதான். இதை நடைமுறைப்படுத்தாதது அவர் செய்த தவறாகும். தாங்கள் நினைப்பதைத்தான் நிர்வாகம் செய்ய வேண்டும் என ஆசிரியர்களும், ஊழியர்களும் நினைக்கக் கூடாது.

கல்வி அதிகாரிகளும் அதை அனுமதிக்கக் கூடாது. எனவே, மனுதாரர் பள்ளியின் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான ஊதியத்தை பள்ளி நிர்வாகத்திடமே வழங்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

அரசு ஊழியர், அதிகாரிகள் பாஸ்போர்ட் பெற புதிய கட்டுப்பாடுகள்: தமிழக அரசு உத்தரவு


   வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு பாஸ்போர்ட் பெற விரும்பும் தமிழக அரசு ஊழியர்கள் - அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்வோருக்கு மட்டுமே தடையின்மைச் சான்று வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கென சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு வகுத்துள்ளது. அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள் பாஸ்போர்ட் பெறுவதற்கு அரசிடம் இருந்து தடையின்மைச் சான்று, அடையாளச் சான்றினைப் பெறுவது அவசியமாகும்.

அவ்வாறு பெற்ற பிறகே அவர்கள் புதிதாக பாஸ்போர்ட் பெறவும், காலாவதியான பாஸ்போர்ட்டைப் புதுப்பிப்பதற்கு விண்ணப்பிக்கவும் முடியும். இந்தச் சான்றிதழ்களில் விண்ணப்பதாரரின் புகைப்படம் ஒட்டப்பட்டு சான்று அளிக்கும் அதிகாரி கையெழுத்திட வேண்டும். அதற்கு முன்பாக, அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை உறுதி செய்திட வேண்டும். அந்தக் கட்டுபாடுகளின் விவரம்: வெளிநாடுகளில் கல்வி பயிலவோ, பயிற்சிகளை மேற்கொள்ளவோ செல்ல விரும்பும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் உரிய அனுமதியை அரசிடம் இருந்து பெற வேண்டும். வெளிநாட்டுப் பயணத்தின் போது அதற்காகும் செலவினங்களை அரசுத் துறையோ அல்லது அரசோ ஏற்றுக் கொள்ளாது.

பயணத்துக்காக அரசு ஊழியரோ அல்லது அதிகாரியோ ராஜிநாமா கடிதங்களை அளித்திட முடியாது. அவ்வாறு செய்வது ஏற்றுக் கொள்ளப்படாது. வெளிநாட்டுப் பயணத்தின் போது எந்தவித வர்த்தகத்தையோ, வணிகத் தொடர்புகளையோ மேற்கொள்ளக் கூடாது. அவ்வாறு செய்வது ஏற்றுக் கொள்ளப்படாது. வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் போது, பயண விடுப்புக்கான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட அரசுத் துறையின் தலைவரிடம் அளிக்க வேண்டும். விடுப்புக்குத் தகுதி என்ற பட்சத்தில் உயர் அதிகாரியின் அனுமதி கிடைத்த பிறகே பயணத்தைத் தொடங்க வேண்டும். பாஸ்போர்ட்டுக்காக அரசால் வழங்கப்படும் அடையாளச் சான்றின் காலம் ஆறு மாதங்கள் மட்டுமே ஆகும்.

அதன்பிறகு அது காலாவதியாகி விடும். தமிழக அரசு வகுத்துள்ள இந்தக் கட்டுப்பாடுகளைப் பூர்த்தி செய்யும் அரசு அலுவலர், அதிகாரிகளுக்கே பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்குத் தேவையான அடையாளச் சான்றும், தடையின்மைச் சான்றும் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

மெதுவாக கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கையேடு: பள்ளிக்கல்வித்துறை


    பத்தாம் வகுப்பு, பிளஸ்2வில் மெதுவாக கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கையேடு வழங்கி பயிற்சியளிக்க தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அடுத்தாண்டு மார்ச், ஏப்ரலில் நடக்கும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக இவ்வகுப்புகளில் காலாண்டுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் (மெல்லக்கற்கும் மாணவர்கள்) கண்டறியப்பட்டு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் பாட வாரியாக கற்பிக்க, சிறப்பு கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.

விரைவில் மாணவர்களிடம் வழங்கி பயிற்சியளிக்கப்படும். மாவட்ட கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "இந்த சிறப்பு கையேட்டில் முக்கிய வினாக்கள், அதற்கான விடைகள் இடம் பெற்றுள்ளன. அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மூலம் மெல்லக்கற்கும் மாணவர்களிடம் இவை வழங்கப்படும். இதன்மூலம் அரையாண்டு, பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவும், அதிக மதிப்பெண் பெறலாம்,” என்றார்.

Thursday, November 20, 2014

Part time . teacher s exam .(Ms) No.185 Dt: November 17, 2014

Click below

https://app.box.com/s/yz2eqwpb0qh7d8a4f447

New Health Insurance Scheme 2012 for the employees of Government Departments and Organisations covered under this Scheme - List of additional Hospitals covered under the Scheme based on the recommendations of the Accreditation Committee for empanelment of Hospitals - Approved - Orders issued.

Click below

http://cms.tn.gov.in/sites/default/files/gos/fin_e_807_2014_Rt.pdf

அரசு விடுமுறை தினங்கள்

அடுத்த ஆண்டில் (2015) 24 தினங்கள், அரசு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக, ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையானது, அடுத்த ஆண்டில் ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மேலும், இஸ்லாமியர்களின் மிலாதுநபி பண்டிகை இரண்டு முறை வருகிறது.

2015-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை தினங்கள் தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

ஜனவரி 1 (வியாழன்)    ஆங்கிலப் புத்தாண்டு

ஜனவரி 4 (ஞாயிறு)    மீலாதுநபி

ஜனவரி 15 (வியாழன்)    பொங்கல்

ஜனவரி 16 (வெள்ளி)    திருவள்ளுவர் தினம்

ஜனவரி 17 (சனி)    உழவர் திருநாள்

ஜனவரி 26 (திங்கள்)    குடியரசு தினம்

மார்ச் 21 (சனி)    தெலுங்கு வருடப் பிறப்பு

ஏப்ரல் 1 (புதன்)    வங்கிகள் கணக்கு முடிவு

(வணிக-கூட்டுறவு வங்கிகள்)

ஏப்ரல் 2 (வியாழன்)    மகாவீரர் ஜெயந்தி

ஏப்ரல் 3 (வெள்ளி)    புனித வெள்ளி

ஏப்ரல் 14 (செவ்வாய்)    தமிழ்ப் புத்தாண்டு- அம்பேத்கர் பிறந்த நாள்

மே 1 (வெள்ளி)    மே தினம்

ஜூலை 18 (சனி)    ரம்ஜான்

ஆகஸ்ட் 15 (சனி)    சுதந்திர தினம்

செப்டம்பர் 5 (சனி)    கிருஷ்ண ஜெயந்தி

செப்டம்பர் 17 (வியாழன்)    விநாயகர் சதுர்த்தி

செப்டம்பர் 24 (வியாழன்)    பக்ரீத்

அக்டோபர் 2 (வெள்ளி)    காந்தி ஜெயந்தி

அக்டோபர் 21 (புதன்)    ஆயுத பூஜை

அக்டோபர் 22 (வியாழன்)    விஜயதசமி

அக்டோபர் 23 (வெள்ளி)    மொகரம்

நவம்பர் 10 (செவ்வாய்)    தீபாவளி

டிசம்பர் 23 (புதன்)    மிலாதுநபி

டிசம்பர் 25 (வெள்ளி)    கிறிஸ்துமஸ்