இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, April 16, 2014

ஜூன் 16-ஆம் தேதி முதல் பிளஸ் 1 வகுப்பு தொடக்கம

     வரும் கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்புகள் ஜூன் 16-ஆம் தேதி தொடங்கப்படும்; மீதமுள்ள வகுப்புகளுக்கு ஜூன் 2-ஆம் தேதி பள்ளி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. 10-ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 26 முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது. தேர்வுகள் நிறைவடைந்தன: பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 6, 7, 8, 9 ஆகிய வகுப்புகளுக்கான தேர்வுகள் புதன்கிழமையோடு நிறைவடைந்தன. ஓரிரு மாவட்டங்களில் ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சித் தேதிகளும், தேர்வு தேதிகளும் குறுக்கிட்டுள்ளன

. இதனால், இந்த மாவட்டங்களில் மட்டும் வியாழக்கிழமையும் தேர்வு நடைபெறும். தேர்வுகள் முடிவடைந்தாலும், பள்ளிகள் ஏப்ரல் 22-ஆம் தேதி வரை செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து, வழக்கமாக ஏப்ரல் இறுதி வாரத்தில் நடைபெறும் பள்ளி ஆண்டுத் தேர்வுகள் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே முடிக்க பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் ஏப்ரல் 3-ஆம் தேதி முதல் ஏப்ரல் 16-ஆம் தேதி தேர்வுகள் நடைபெற்றன. இந்தப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 23 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. தொடக்கக் கல்வித் துறை:

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை செயல்பட உள்ளன. இந்தப் பள்ளிகளில் தேர்வுகள் அடுத்த வாரத்தில் தொடங்குகின்றன. வாக்குப்பதிவு தினத்தையடுத்து, ஏப்ரல் 23, 24, 25 ஆகிய தினங்கள் இந்தப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் 5 முதல் 8-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவத் தேர்வுகள் ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்குகின்றன. ஏப்ரல் 22, 26, 28, 29 ஆகிய தேதிகளில் இந்தத் தேர்வுகள் நடைபெறுகின்றன.

1 முதல் 4-ஆம் வகுப்பு வரை செயல்வழிக் கற்றல் முறை அமலில் உள்ளதால் அந்த மாணவர்கள் மூன்றாம் பருவத் தேர்வை எழுதுவது அவசியம் இல்லை. இந்தப் பள்ளிகளுக்கு மே 1 முதல் கோடைகால விடுமுறை விடப்படுகிறது.

அறிவியலில் தவறான கேள்வி : 3 மதிப்பெண் வழங்க உத்தரவு

    பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில், இரு கேள்விகள், தவறாக கேட்கப்பட்டதற்காக, அதற்குரிய மூன்று மதிப்பெண் வழங்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 7ல், பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு நடந்தது. இதில், ஒரு மதிப்பெண் பகுதி, கேள்வி எண் 14ல், "ஆடியில் உருவாகும் உருப்பெருக்கம், 1/3 எனில், அந்த ஆடியின் வகை என்ன...' என, கேட்கப்பட்டது. இதற்கு, "குவிலென்ஸ்' என்பது விடை. ஆனால், "குழிலென்ஸ்' என்ற வேறொரு விடையும் உள்ளது. இந்த கேள்விக்கு, எந்த பதிலை எழுதி இருந்தாலும், அதற்கு, ஒரு மதிப்பெண் வழங்க, விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு, தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது.

இரு மதிப்பெண் பகுதி, தமிழ் வழி கேள்வி எண் 29ல், "வாகனங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் யாவை...' என்ற கேள்விக்கு, ஆங்கில வழி கேள்வித்தாளில், "பயோ - பியூல்' என, கேட்டு, தமிழ்வழி கேள்வித்தாளில், "உயிரி எரிபொருள்' என, கேட்காமல் பொதுவாக கேட்டுவிட்டனர். இதனால், மாணவர்கள், "பெட்ரோல், டீசல்' என, விடை எழுதினர். இதனால், மதிப்பெண் கிடைப்பது கேள்விக்குறியானது. இந்நிலையில், இந்த கேள்விக்கு இரண்டு மதிப்பெண் வழங்க, தேர்வுத்துறை உத்தரவு விட்டுள்ளதாக, பாட ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

Monday, April 14, 2014

வி.ஏ.ஓ. தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்


தமிழகத்தில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 342 கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை (ஏப். 15) கடைசி நாளாகும். தமிழகத்தில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 342 வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த மாதம் வெளியிட்டது.வரும் ஜூன் 14-ம் தேதி இதற்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் என்றும், தேர்வு எழுத விரும்புவோர் ஏப்ரல் 15-ம் தேதி வரை www.tnpscexams.net என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேர்வுக்கு விண்ணப்பிக்க  நாளை (ஏப். 15) கடைசி நாளாகும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், வங்கி மற்றும் அஞ்சலகங்கள் மூலம் கட்டணம் செலுத்துவதற்க்கு ஏப்ரல் 17ம் தேதி கடைசி நாள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, April 13, 2014

இலவசக் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் உள்ள இடங்கள் குறித்து அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு

இந்த மனுவுக்கு மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த வி.ஈஸ்வரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்: கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009-ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டத்தின் நோக்கம் 6 வயது முதல் 14 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாய கல்வி வழங்க வேண்டும் என்பதாகும

். இந்தச் சட்டத்தின் படி, பயனடையாத மற்றும் ஏழைக் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் நுழைவு வகுப்புகளில் (எல்.கே.ஜி., முதல் வகுப்பு, ஆறாம் வகுப்பு) 25 சதவீத இடம் ஒதுக்க வேண்டும். ஆனால், இந்தச் சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படாத காரணத்தால் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் ஏழைக் குழந்தைகள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆந்திர மாநிலத்தில் 5 சதவீத இடம் பயனடையாதவர்களுக்கும், 10 சதவீதம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும், 4 சதவீதம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கும், 6 சதவீதம் ஏழைக் குழந்தைகளுக்கும் என தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் எத்தனை இடங்கள் உள்ளன என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு தனியார் பள்ளியிலும் உள்ள 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்கள் குறித்து வெளியிட அரசுக்கு உத்தரவிட வேண்டும். கலந்தாய்வு முறையில் மாவட்ட பள்ளிகளில் காலியாக இருக்கும் அந்த இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ்குமார் அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் என்.பொன்ராஜ் ஆஜரானார். மனுவுக்கு மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்

தமிழகத்தில் 24.4.2014- அன்று நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அரசு பொது விடுமுறை அளித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

துவக்க பள்ளி தேர்வு அட்டவணை மாற்றம்

தொடக்கக் கல்வித்துறை, தேர்வுக்கான கால அட்டவனையை கடந்த சில மாதங்களுக்கு முன்வெளியிட்டது. அதில், நாடாளுமன்ற தேர்தல் நாளான ஏப்ரல் 24ம் தேதியும் தேர்வு நாளாக வெளியிடப்பட்டது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் ஆண்டு தேர்வுக்கான புதிய கால அட்டவணையை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஏப்ரல் 21ம் தேதி தமிழ், 22ம் தேதி ஆங்கிலம், 26ம் தேதி கணிதம், 28ம் தேதி அறிவியல், 29ம் தேதி சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது.கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், துவக்கப்பள்ளிக்கு தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. தற்போது, தேர்தல் தேதி, அட்டவணை நாளுக்குள் வருவதால் அதில் மாற்றம் செய்யப்பட்டு புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல், 21 முதல், 29ம் தேதியுடன் தேர்வு முடிந்து, 30ம் தேதி பள்ளி வழக்கம்போல் செயல் பட்டு, மே 1ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என்றார்.

மதுரை காமராஜ் பல்கலைகழகத்தில் 2014-2016 ஆம் கல்வியாண்டுக்கான B.Ed விண்ணப்பபடிவங்கள் வரவேற்கின்றன

Saturday, April 12, 2014

மே முதல் வாரத்தில் பொறியியல் விண்ணப்பம் : அறிவித்தது அண்ணா பல்கலை

"பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பம், மே முதல் வாரத்தில் இருந்து வழங்கப்படும்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. மாணவர் சேர்க்கைக்கான விதிமுறைகள், தகுதிகள் குறித்து, பல்வேறு அறிவிப்புகளை, அண்ணா பல்கலை வெளியிட்டு உள்ளது. "மே, 9ம் தேதி, பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்படும்' என, ஏற்கனவே, தேர்வுத்துறை அறிவித்துவிட்டது. இதையடுத்து, பொறியியல் சேர்க்கை பணிகளை, அண்ணா பல்கலை துவக்கி உள்ளது

. www.annauniv.edu என்ற, பல்கலை இணையதளத்தில், "டிஎன்இஏ - 2014' என, தனி பகுதியை, பல்கலை துவக்கி உள்ளது. அதில், பொறியியல் விண்ணப்பம், மே முதல் வாரத்தில் வெளியிடப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், பொறியியல் படிப்பில் சேர உள்ள மாணவர்கள், எப்படி தயாராக வேண்டும் என்பதையும் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில், எட்டாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்காத மாணவர்கள், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான, இருப்பிட சான்றிதழ், முதல் பட்டதாரி மாணவராக இருந்தால், அரசிடம் இருந்து, அதற்கான கட்டண சலுகையை பெற, தாசில்தாரிடம் இருந்து சான்றிதழ் ஆகியவற்றை பெற வேண்டும். இதற்கான படிவங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

விண்ணப்பம் வழங்கப்படும் இடங்கள், தகுதிகள் உள்ளிட்ட மேலும் பல விவரங்கள், விரைவில் வெளியிடப்படும் என, அண்ணா பல்கலை அறிவித்து உள்ளது.

Friday, April 11, 2014

அரசின் எச்சரிக்கையை மீறி பள்ளி மாணவர்களை கொண்டு வகுப்பறை மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வி செயலர் உத்தரவு

பி.இ. கலந்தாய்வு: படிவங்கள் இணையதளத்தில் வெளியீடு

  பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்களுக்கான படிவங்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஏற்படும் கடைசி நேர திண்டாட்டத்தைப் போக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் இந்த சிறப்பு ஏற்பாட்டைச் செய்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள பொறியியல் இடங்கள் மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலான இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இம்முறை தமிழகம் முழுவதும் 570 கல்லூரிகளில் உள்ள 1.75 லட்சம் இடங்களுக்கு இந்த கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் சில சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்தச் சான்றிதழ்களுக்கான படிவங்கள் அண்ணா பல்கலைக்கழத்தின் www.annauniv.edu/tnea இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து தமிழ்நாடு மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது: பி.இ. கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், விண்ணப்பத்துடன் சில சான்றிதழ்களை இணைத்து அனுப்ப வேண்டும். அதாவது 8-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை வெளி மாநிலத்தில் படித்த தமிழக மாணவர்கள், இருப்பிடச் சான்றிதழ் அளிக்க வேண்டும். முதல் தலைமுறை மாணவர்களாக இருந்தால், அதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும்

. இதுபோல் முன்னாள் ராணுவ வீரர் அல்லது சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குழந்தைகளாக இருந்தால் அதற்கான சான்றிதழ், மாற்றுத் திறனாளி மாணவராக இருந்தால் அதற்கான சான்றிதழ்களை இணைக்க வேண்டும். இந்தச் சான்றிதழ்களை முன்கூட்டியே பெற்று வைத்துக் கொள்ளாமல், கடைசி நேரத்தில் அவற்றை பெற முயற்சிப்பதால் பல்வேறு சிக்கல்களை மாணவர்கள் சந்தித்து வருகின்றனர். மாணவர்களுக்கு ஏற்படும் இந்தச் சிக்கலைப் போக்கும் வகையில், இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்களுக்கான படிவங்கள் இப்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து, உரிய அதிகாரியிடம் சான்றிதழை பெற்று வைத்துக் கொண்டால் கடைசி நேர திண்டாட்டத்தைப் போக்கிக்கொள்ள முடியும் என்றார்.

1,200 வாக்காளர்கள் கூடுதல் அலுவலர் நியமனம

தமிழகத்தில் லோக்சபா தேர்தலன்று, ஒரு பூத்தில் ஓட்டுப்பதிவு அலுவலர், நிலை அலுவலர் 1, 2 உட்பட 5 பேர் பணியாற்றவுள்ளனர். ஒரு மின்னணு ஓட்டு பதிவு இயந்திரத்தில் ஏற்படும் பழுதுகளை சரி செய்ய, தலா ஒரு பூத் டெக்னிக்கல் உதவியாளர் பணியில் அமர்த்தப்படுவார். ஒரு பூத்தில் 1,200 ஓட்டுகளுக்கு மேல் இருந்தால், அங்கு நிலை அலுவலர் 1 ஏ, 2 பி என இருவர் கூடுதலாக பணியமர்த்தப்படுவர். 10 அல்லது 12 ஓட்டுச்சாவடிகளை ஒருங்கிணைத்து, மின்னணு ஓட்டுப்பதிவு பழுதுகளை சரி செய்ய, மண்டல அளவிலான தொழில்நுட்பக் குழு, தயார் நிலையில் இருக்கும்.

  LIST OF POLLING STATIONS AND BROWSING CENTERS

Thursday, April 10, 2014

"பூத் சிலிப்' வழங்கும் பணி இன்று துவக்கம்

""வீடு தோறும் வாக்காளர்களுக்கு, "பூத் சிலிப்' வழங்கும் பணி, இன்று (11ம் தேதி) துவங்குகிறது,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன்குமார் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: அனைத்து தொகுதிகளிலும், துணை வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தொகுதிகளில், துணை வாக்காளர் பட்டியல் அச்சிடும் பணி முடிந்துள்ளது. "ஓட்டுக்கு பணம் வாங்காதீர்' : சில தொகுதிகளில் மட்டும், பணி நடந்து வருகிறது. அதேபோல், வாக்காளர்களுக்கு வழங்க வேண்டிய, "பூத் சிலிப்' அச்சிடப்பட்டுள்ளது. இதை, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு வழங்கும் பணியை, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், இன்று துவக்கி, 19ம் தேதிக்குள் முடிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது

. "பூத் சிலிப்' வெள்ளை நிற காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இதில், வாக்காளர் பெயர், முகவரி, பாகம் எண், புகைப்படம் இடம் பெற்றிருக்கும். பின்புறம், "ஓட்டுக்கு பணம் வாங்காதீர்' என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும். "பூத் சிலிப்' கிடைக்கப் பெறாதவர்கள், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக் கொள்ளலாம். தேர்தல் அன்று, ஓட்டுச் சாவடியிலும் வழங்கப்படும். ஓட்டுச்சாவடிக்குள் யாரும், மொபைல் போன் எடுத்து செல்லக் கூடாது. பதற்றமான ஓட்டுச்சாவடிகள் குறித்து, வேட்பாளர்களிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் கூடுதல் பாதுகாப்பு கேட்டால், நடவடிக்கை எடுக்கப்படும். ஆய்வு செய்யப்படும் : ஓட்டுச்சாவடியை கைப்பற்றும் சம்பவம் நடந்தால், அந்த ஓட்டுச்சாவடியில், மறு ஓட்டுப்பதிவு நடத்தப்படும். அத்துடன், ஓட்டுச்சாவடி அலுவலர், "டைரி' மற்றும் அங்கு பதிவு செய்யப்படும் வீடியோ காட்சிகள், மறுநாள் ஆய்வு செய்யப்படும்.

அப்போது, தவறு ஏதும் நடந்திருப்பதாக தெரிய வந்தாலும், சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடியில், மறு ஓட்டுப்பதிவு நடத்தப்படும். இவ்வாறு, பிரவீன்குமார் தெரிவித்தார். 11 ஆவணங்கள் செல்லும் : புகைப்படத்துடன் கூடிய, வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கியுள்ள, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, வங்கி மற்றும் தபால் நிலையங்கள், புகைப்படத்துடன் வழங்கியுள்ள கணக்கு புத்தகம், பான் கார்டு, ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு அடையாள அட்டை, பென்ஷன் ஆவணம், தேர்தல் கமிஷன் வழங்கும், "பூத் சிலிப்' ஆகியவற்றை கொண்டு, ஓட்டு போடலாம். இதில் எதுவும் இல்லையென்றால், ஓட்டு போட முடியாது.

Wednesday, April 09, 2014

இன்று முதல் 10-ஆம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு


   பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை (ஏப்ரம் 10) தொடங்க உள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வு சமூக அறிவியல் பாடத் தேர்வுடன் புதன்கிழமை (ஏப்ரல் 9) நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் 66 விடைத்தாள் திருத்தும் மையங்களில் விடைத்தாள் மதிப்பீடு வியாழக்கிழமை தொடங்குகிறது. வரும் 19-ஆம் தேதிக்குள் விடைத்தாள்களை திருத்தி முடிக்க தேர்வுகள் துறை திட்டமிட்டுள்ளது. தேர்வு எளிது: சமூக அறிவியல் தேர்வு மிகவும் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்தப் பாடத்தில் இந்த ஆண்டு ஏராளமான மாணவர்கள் சதமடிக்க வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 26-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இந்தத் தேர்வை 3 ஆயிரத்துக்கும் அதிகமான மையங்களில் 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர். இந்த ஆண்டு பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பார்கோடு எண், புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்கள் போன்ற மாற்றங்களை ஆசிரியர்கள் வரவேற்றுள்ளதாக தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி அவர் தெரிவித்தார்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 23-ஆம் தேதியும் வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதி பெறாத பாட புத்தகங்கள

் பொது கல்வி வாரியத்தின் அனுமதி பெறாத பாட புத்தகங்களை, சில தனியார் பள்ளிகள் பயன்படுத்துவதாக, புகார் வந்துள்ளது. ஒப்புதல் இல்லாத புத்தகங்களை, எந்த பள்ளிகளும் பயன்படுத்தக் கூடாது,'' என, பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், எச்சரித்து உள்ளார். சமீபத்தில், எல்.கே.ஜி., பாட புத்தகத்தில், 'எஸ்' என்ற வார்த்தையை குறிக்க, 'சன்' (சூரியன்) படம் வரையப்பட்டிருப்பது குறித்த விவகாரம், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சென்றது. இந்நிலையில், பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கை:

பொதுக்கல்வி வாரியத்திடம் ஒப்புதல் பெறாத பாட புத்தகங்களை, சில பள்ளிகள், வகுப்பறையில் பயன்படுத்துவது குறித்து, கல்வித்துறையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை, அம்பத்தூரை சேர்ந்த, 'உட்பெக்கர்' பதிப்பகத்தின், எல்.கே.ஜி., இரண்டாம் பாகம் புத்தகத்தில், ஆட்சேபனைக்குரிய பகுதிகள் இருப்பதாக, புகார் வந்துள்ளது. இந்த புத்தகம், தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொதுக்கல்வி வாரியத்தின் அனுமதி பெறாதவை. எனவே, தனியார் பள்ளிகளில், சம்பந்தப்பட்ட பாட பகுதிகளை, உடனடியாக புத்தகத்தில் இருந்து நீக்குவதற்கு, முதன்மை கல்வி அலுவலர்களும், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களும், நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 'பொதுக்கல்வி வாரியத்தின் ஒப்புதல் பெறாத பாட புத்தகங்களை பயன்படுத்தக் கூடாது' என, தனியார் பள்ளிகளுக்கு, எச்சரிக்கை விடுக்க வேண்டும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

தேர்தல் பணி மாணவர்களுக்கு ரூ.900 சம்பளம்

   லோக்சபா தேர்தல் நாளில் பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், 'லேப்--டாப்' கையாளும் பணியில், அரசு கல்லூரி மாணவர்கள் ஈடுபடுகின்றனர். இந்த பணிக்காக மாணவர்களுக்கு, 900 ரூபாய் ஊதியம் வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. 'வெப் -- கேமரா': தமிழகத்தில், வரும், 24ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும், பதற்றமான ஓட்டுச் சாவடிகளை தேர்தல் கமிஷன் கணக்கெடுத்துள்ளது. அங்கு, 'வெப் - -கேமரா' பொருத்தி, ஓட்டுச்சாவடியில் வைக்கப்படும் லேப்--டாப் கம்யூட்டரில் இணைக்கப்பட உள்ளது. இவை அனைத்தும், இணையம் வழியாக, சென்னை தேர்தல் கமிஷன் அலுவலக பிரதான சர்வருடன் இணைக்கப்படுகின்றன.

இதனால், தேர்தல் நாளில், பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் நடக்கும் சம்பவங்களை, சென்னையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், தேர்தல் அலுவலர்கள் நேரடியாக கண்காணிக்க முடியும். ஆனால், மாநிலம் முழுவதும் குறிப்பிட்ட ஓட்டுச்சாவடிகளில் பி.எஸ்.என்.எல்., இன்டர்நெட் சேவை கிடைக்கவில்லை. 'மைக்ரோ அப்சர்வர்': பி.எஸ்.என்.எல்., இன்டர்நெட் சேவை கிடைக்கும் ஓட்டுச்சாவடிகளில் வெப்--கேமரா பொருத்தவும், மற்ற இடங்களில், 'மைக்ரோ அப்சர்வர்' நியமிக்கவும் தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. வெப்--கேமரா பொருத்தப்படும் இடங்களில் நடக்கும் சம்பவங்களை, லேப்--டாப்பில் பதிவு செய்யவும், இன்டர்நெட் இணைப்பு மூலம் தேர்தல் கமிஷன் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பும் பணிக்காக, அந்தந்த பகுதி அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை, தேர்தல் கமிஷன் நியமனம் செய்துள்ளது.

தேர்தெடுத்த மாணவர்களுக்கு, ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடித்தவர்கள், தேர்தல் நாளில், பதற்றமான ஓட்டுச்சாவடி கம்யூட்டரில் பணி செய்வர். இந்த பணிக்காக, 900 ரூபாய் ஊதியம் வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

பள்ளி திறக்கும் நாளில் இலவச பஸ் பாஸ்

  தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 2014-15 ல் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் நாளான ஜூன் 2ல் இலவச பஸ் பாஸ் பெற்று தர பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்திருப்பதாவது: பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் பெற்று தருவதில் கால தாமதம் ஏற்படக்கூடாது. அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும், தங்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் விண்ணப்பங்களை விடுமுறை தினங்களிலேயே பூர்த்தி செய்து, அந்தந்த மாவட்ட அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் வழங்க வேண்டும். இலவச பஸ் பாசை போக்குவரத்து அதிகாரிகளிடமிருந்து பெற்று, பள்ளி திறக்கும் நாளான ஜூன் 2 ல் அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும், என தெரிவித்துள்ளது.