இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, July 17, 2014

பி.எட்., படிப்பு ஓராண்டு தான் உயர்கல்வி அமைச்சர் தகவல்.  தமிழகத்தில், பி.எட்., படிப்பு காலம் ஓராண்டுதான்; மாற்றமில்லை,''

சட்டசபையில், பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறை மானிய கோரிக்கை விவாதம்:

ம.ம.க., ஜவாஹிருல்லா: பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில், தேர்வு செய்யப்படுபவர்கள் பட்டியல் வெளிப்படையாக, இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும்.

அமைச்சர் பழனியப்பன்: துணைவேந்தர் நியமனம் என்பது, உரிய குழுக்கள் அமைத்து தான் தேர்வு செய்யப்படுகிறது. பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) விதிமுறைப்படி தான், நியமிக்கப்படுகின்றனர். இதில் ஒளிவு மறைவு என்பது இல்லை.

பார்வர்டு பிளாக், கதிரவன்: தமிழகத்தில், பி.எட்., படிப்பு, இரண்டாண்டாக மாற்றப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, டி.இ.டி., தேர்வு எழுத வேண்டுமா?

பழனியப்பன்: மத்திய ஆசிரியர் கல்வி வாரியம், பி.எட்., படிப்பை, இரண்டு ஆண்டு படிப்பாக மாற்றுவது தொடர்பான ஆலோசனையை தெரிவித்துள்ளது. மத்திய அரசோ, மாநில அரசோ, இதை அமல்படுத்தவில்லை.தமிழகத்தில், பி.எட்., படிப்பு ஓராண்டு மட்டும் தான்.இவ்வாறு விவாதம் நடந்தது.

TNPTFன் பள்ளி மானியம் தொடர்பான இடைநிலை ஆசிரியர் தர ஊதியம், CPS, உட்பட பல கோரிக்கைகள

பட்ஜெட் கல்வி செய்திகள்

நடப்பாண்டில் 3,459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார். 75 ஆசிரியர் சார்ந்த பணியிடங்கள், 340 ஆசிரியர் சாராத பணியிடமும் நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ளார். பழங்குடியினர் அதிகம் உள்ள 5 மாவட்டத்தில் மாணவியருக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 482 அரசுப் பள்ளிகளில் 4,782 மாணவியருக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்டும் என்றும் வீரமணி தெரிவித்துள்ளார். 32 மாவட்டங்களிலும் நடப்பாண்டு அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்படும் என்றும் வீரமணி தெரிவித்துள்ளார்.

7 மாவட்டங்களில் நடப்பாண்டில் நடமாடும் நூலகங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். விருது பெற்ற தமிழாசிரியர்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயண அட்டை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பன்னாட்டு திருக்குறள் மாநாடு இந்த ஆண்டில் நடத்தப்படும் என்று அமைச்சர் கி.வீரமணி அறிவித்துள்ளார். 

Cut-off Seniority dates adopted for nomination in Employment Offices for June 2014

Wednesday, July 16, 2014

பாரதியார் தின, குடியரசு தின சதுரங்கப் போட்டிகள்- செயல்திட்டம் சார்ந்து-தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறைp

தரம் உயர்த்தப்படும் 200 பள்ளிகள்காலியிடம் நிரப்ப மீண்டும் 'கவுன்சிலிங்' சட்டசபையை எதிர்பார்க்கும் ஆசிரியர்கள

் தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்படும் அரசு உயர், மேல்நிலைப்பள்ளி காலியிடங்களை நிரப்புவதற்கு மீண்டும் கவுன்சிலிங் அறிவிப்பு, சட்டசபையில் வெளியாகுமா என, ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். தமிழகத்தில் 32 மாவட்டத்திலும் தரம் உயர்வுக்கு தகுதியான அரசு பள்ளிகள் குறித்த பட்டியலை சேகரித்த கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்கியுள்ளது

. உயர், மேல்நிலை கல்வியை பொறுத்தவரை இரு பிரிவிலும் தலா 100 பள்ளிகள் என, தரம் உயர்த்தப்படும் வாய்ப்பு இருப்பதாகவும், இதற்கான அறிவிப்பு இன்று (ஜூலை17) சட்டசபை கல்வித்துறை குறித்த மானியக் கோரிக்கையின்போது வெளியாகலாம் என, எதிர்பார்ப்பதாக கல்வித்துறை யினர், ஆசிரியர் சங்கத்தினர் நம்பிக்கை தெரிவித்தனர். இதன்படி, உயர்,மேல்நிலை கல்வியில் 200 பள்ளிகளை தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டால், உயர் நிலை வகுப்பில் 500 புதிய இடங்களும், மேல்நிலையில் 900 காலி பணியிடமும் உருவாகும். இவ்விடங்களை நிரப்ப மீண்டும் கவுன்சிலிங் நடத்தினால் உள், வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் கோரிய பலருக்கு வாய்ப்பு கிடைக்கும் என, ஆசிரியர் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், " ஏற்கனவே முடிந்த மாறுதல் கவுன்சிலிங்கில் சாதகமான சில இடங்களை மறைத்து, சிபாரிசுகளுக்கு மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. சட்ட சபை கல்வித்துறை மானியக் கோரிக்கையில் தரம் உயர்த்தி அறிவிக்கப்படும் பள்ளிகளுக்குமான காலியிடங்களை நிரப்ப மீண்டும் கவுன்சிலிங் நடத்தினால் அரசியல், பணம் பலமற்று, ஒரே பள்ளியில் பத்தாண்டுக்கு மேல் பணிபுரியும் வெளி மாவட்ட ஆசிரியர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்,” என்றார்.

பத்து மாணவர்களுக்கு குறைவான தொடக்க பள்ளிகள் : இழுத்து மூட அரசு யோசனை

  அரசு பள்ளிகளில், பத்து மாணவர்களுக்கு குறைவாக உள்ள ஆயிரத்து 268 பள்ளிகள், இழுத்து மூடப்படும் என்ற நிலை அரசின் பரிசீலனையில் உள்ளது. தமிழக அரசு, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச உணவு, புத்தகம், நோட்டு, சீருடை, சைக்கிள், 'லேப்-டாப்,' 'பஸ்பாஸ்' என 14 வகையான இலவச நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. கல்வித்துறைக்காக ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்கிறது. இருந்தும், அரசு துவக்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது, மிக சொற்பமாகவே உள்ளது.பெரும்பாலான பள்ளிகளில், ஒரு சில மாணவர்களே சேர்ந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியம் நாகுல்பட்டி துவக்க பள்ளியில், முதல் வகுப்பில் மாணவர்களே இல்லை. இரண்டாம் வகுப்பில் ஒருவரும், நான்காம் வகுப்பில் ஒருவரும், ஐந்தாம் வகுப்பில் இருவர் என மொத்தம் நான்கு மாணவர்கள் மட்டுமே உள்ளனர். இதற்கு, இரண்டு ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்கள் என அரசு பணம், ஆண்டுக்கு சில லட்சம் சம்பளமாக விரயமாகிறது. இதேபோல்தான், ஆர்.வெள்ளோடு ஊராட்சி அய்யம்பட்டி துவக்கப்பள்ளியில் மூன்று மாணவர்களும், உ.தாதனூரில் ஆறு பேரும், ஆர்.கே.தாதனூர் ஆறு பேரும் மட்டுமே மாணவர்கள் உள்ளனர். இதே போல்தான், மாவட்ட, மாநில அளவிலும் நீடிக்கிறது.இதற்கு காரணம், முறையான கல்வி முறை இல்லாததே காரணம் என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் எழுந்துள்ளது. இது மட்டுமின்றி, பெற்றோர்களின் ஆங்கில வழி கல்வி மோகமும் காரணமாகிறது. வரைமுறை இல்லாமல், போதிய உள் கட்டமைப்பு வசதி இல்லாத நிலையில், ஆங்கில நர்சரி பள்ளிகள் துவங்க அரசு அனுமதி அளிக்கிறது.

அரசு பள்ளிகள் குறைய இதுவும் ஒரு காரணமாககும்.இதனால், நடப்பு கல்வி ஆண்டில், தமிழக அளவில், இதே எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள, ஆயிரத்து 268 பள்ளிகள் மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பள்ளிகளில் உள்ள மாணவர்களை, அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். வரும் காலங்களிலாவது, முறையான பாட வகுப்புகளை நடைமுறைபடுத்தி, மாணவர் சேர்க்கையை கூடுதலாக்க அரசு நிர்வாகம் முன்வர வேண்டும். இல்லையேல். அடுத்தடுத்து இதேபோல் பள்ளிகள் மூடப்படும் நிலை தான் தமிழகத்தில் ஏற்படும்.

11 ஆயிரம் புதிய ஆசிரியர்கள்ஆகஸ்ட்டில் பணி நியமனம்

புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள, 11 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள், ஆகஸ்ட் மாதத்தில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.இதுவரை நடந்த டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வுகள் மூலம், மதிப்பெண் அடிப்படையில், 10,700 பட்டதாரி ஆசிரியர்களை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), தேர்வு செய்ய உள்ளது. இந்த தேர்வு பட்டியல், வரும், 30ம் தேதி வெளியாகிறது.பட்டியல் வெளியான, அடுத்த ஓரிரு நாட்களுக்குள், அதன் முழு விவரத்தையும், பள்ளிக்கல்வித் துறைக்கு, டி.ஆர்.பி., அனுப்பும். அதன்பின், 'ஆன் - லைன்' கலந்தாய்வு மூலம், ஆகஸ்ட் இறுதிக்குள், புதிய ஆசிரியர்கள் அனைவரும் பணி நியமனம் செய்யப்படுவர்.

அடுத்த நியமனம்: நியமிக்கப்பட உள்ள ஆசிரியர் பணியிடம், 2012ல் ஏற்பட்ட காலி பணியிடங்களுக்கானது. எனவே, 2013ல் ஏற்பட்ட காலி பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை, சட்டசபையில், இன்று, பள்ளிக்கல்வி துறை அமைச்சர், வீரமணி வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

CTET 2014

NMMS form

NMMS exam results 2013 student list

தொடக்கக் கல்வி-TPF கணக்குகளை தணிக்கை செய்தல் தொடர்பாக 18.7.2014 அலுவலர்களுக்கு ஆய்வு கூட்டம் நடத்த உத்தரவு

நிரப்பப்படவுள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எவ்வளவு? TRB அறிவிப்பின் சுருக்கம

 நிரப்பப்படவுள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்     ELEMENTARY EDUCATION  & SCHOOL EDUCATION 
                                 SCHOOL EDUCATION 
                                  
Subject / Vacancies TAMIL ENGLISH MATHS PHYSICS CHEMISTRY BOTANY ZOOLOGY HISTORY GEOGRAPHY
Backlog Vacancies 261 253 381 133 185 22 25 141 9
Current Vacancies 511 2569 530 454 402 229 226 3451 890
Total / By Subjects 772 2822 911 587 587 251 251 3592 899








Total Paper 2 Vacancies = 10672 

                                      
                                               ELEMENTARY EDUCATION

Subject / Vacancies PHYSICS CHEMISTRY BOTANY ZOOLOGY
Backlog Vacancies 7 2 1 0
Current Vacancies 11 16 8 9
Total / By Subjects 18 18 9 9



Total  – 54

Tuesday, July 15, 2014

13 சி.இ.ஓ., 40 டி.இ.ஓ. பணியிடங்கள் காலி

  தமிழகம் முழுவதும் 13 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், 40-க்கும் மேற்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தலைமையாசிரியர்கள் புகார் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் 66 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களும், 145-க்கும் மேற்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்களும் உள்ளன. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் (டி.இ.இ.ஓ.), மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் ஆகிய பணியிடங்கள் மாவட்டக் கல்வி அலுவலர் தகுதிக்கு இணையான பணியிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாவட்ட கல்வி அலுவலர் அளவிலான புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், மத்திய சென்னை உள்ளிட்ட 17 டி.இ.ஓ. பணியிடங்களும், திருநெல்வேலி, புதுக்கோட்டை உள்ளிட்ட 17 டி.இ.இ.ஓ. பணியிடங்களும் காலியாக உள்ளன. அதேபோல், 5-க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்களும் காலியாக உள்ளதாக தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர். இந்தப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். அதோடு, நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தும் அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சிறந்த பள்ளிகளுக்கு ரூ.80 லட்சம் பரிசு: அரசு நிதி ஒதுக்கீடு

: கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு, சிறந்த பள்ளிகளுக்கு பரிசாக, ரூ.80 லட்சம் வழங்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது. காமராஜர் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுவதை யொட்டி, சிறந்த அரசு பள்ளிகளை ஊக்குவிப்பதற்கான பரிசளிப்பு திட்டம் ஆண்டுதோறும், செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கலெக்டர் தலைமையில், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உள்ளிட்ட குழுவினர், ஒரு மாவட்டத்துக்கு 4 சிறந்த பள்ளிகளை தேர்வு செய்கின்றனர்.

இவ்வாறு தேர்வு செய்யப்படும், மேல்நிலை பள்ளிக்கு ரூ.1 லட்சமும், உயர்நிலை பள்ளிக்கு ரூ.75 ஆயிரமும், நடுநிலை பள்ளிக்கு ரூ.50 ஆயிரம், தொடக்க பள்ளிக்கு ரூ.25 ஆயிரமும் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. 201415 ம் கல்வியாண்டில், பரிசு வழங்குவதற்காக, பள்ளி கல்வித்துறைக்கு ரூ.56 லட்சமும், தொடக்க கல்வித் துறைக்கு ரூ.24 லட்சமும் அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதி மூலம், அந்த பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி கொள்ள உத்தரவிடப்பட்டுள்

'அட்டஸ்டேஷன்' தேவையில்லை: மத்திய அரசு அதிரடி

: 'அரசு தொடர்பான அடிப்படை தேவைகளுக்கான விண்ணப்பங்களுடன், சான்றிதழ் நகல்களை சமர்ப்பிக்கும்போது, அதிகாரிகளின், 'அட்டஸ்டேஷன்' தேவையில்லை; சுய ஒப்புகை மட்டுமே போதுமானது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய, மாநில அரசுத் துறை சார்ந்த பணிகள், வேலைவாய்ப்பு, கல்வி, உள்ளிட்ட முக்கிய விண்ணப்பங்களுடன், நகல் சான்றிதழ்களை அனுப்பும் போது, அதில், 'நோட்டரி பப்ளிக்' அல்லது பச்சை மை உபயோகப்படுத்தும், தகுதியுள்ள அதிகாரிகளிடம், 'அட்டஸ்டேஷன்' கையெழுத்து பெற்று அனுப்ப வேண்டிய நிலை உள்ளது. இதற்கு, பண விரயம் மட்டுமின்றி, நேர விரயமும் ஆவதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். 'விண்ணப்பங்களுடன் பொதுமக்கள் அனுப்பும் நகல்களில், தாங்களே கையொப்பம் இட்டு அனுப்பினால் போதுமானது. சான்றிதழ் சரிபார்ப்பின் போது, அசல் சான்றிதழ் காண்பிக்க வேண்டும்' என, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பஸ் படிக்கட்டில் மாணவர் பயணித்தால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை'

்: 'மாணவர்கள், பஸ் படிக்கட்டில் தொடர்ந்து பயணம் செய்வது கண்டறியப்பட்டால், அந்த மாணவர் படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் தாளாளர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளி வாகன ஆய்வு கமிட்டி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ராமநாதபுரத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள

்: பள்ளி மாணவர்களில் சிலர், பஸ் படிக்கட்டில் தொடர்ந்து பயணிப்பது தெரிய வந்துள்ளது. இதுபோன்று பயணிப்பவர்களை, பள்ளி நிர்வாகம் கண்டிக்க வேண்டும். தவறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க, முதன்மை கல்வி அலுவலருக்கு பரிந்துரைக்கப்படும். இவ்வாறு, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வின் வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியலையும், காலியிடங்கள் விவரத்தையும் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது

. இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் (தாள்-1) 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இடைநிலை ஆசிரியர் காலியிடங்களை இறுதிசெய்யும் பணி முழுவீச்சில் நடந்துவருகிறது. அப்பணி முடிவடைந்ததும் அவர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியலையும், காலியிடங்கள் விவரத்தையும் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

Teachers detail form

Monday, July 14, 2014

ஆசிரியர் தகுதிதேர்வில் வெற்றி பெற்றோருக்கு புதிய வெயிட்டேஜ் முறை

பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரத்து 242 பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் விவரத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.

இவர்களிலிருந்து வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் 10 ஆயிரத்து 726 பேர் கொண்ட பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்த மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு மொத்தம் 72 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர்.

இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த ஜனவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்றது. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 4 ஆயிரம் பேர் பங்கேற்ற இந்தத் தேர்வில் 935 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கும் அண்மையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.

சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்த நிலையில் நீதிமன்ற வழக்குகள் காரணமாக வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் தேர்வுப் பட்டியல் வெளியிடுவது தாமதமானது. நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வந்ததையடுத்து இப்போது ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்குரிய ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்ற சுமார் 30 ஆயிரம் பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் விவரம் விரைவில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

தனியே விண்ணப்பிக்கத் தேவையில்லை: தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பின் போது அரசுப் பணியில் சேர விருப்பம் தெரிவித்திருந்ததையே, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவதற்கான விண்ணப்பமாக ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்றுக்கொள்கிறது.  எனவே, இந்தப் பணிகளுக்காக தனியே விண்ணப்பிக்க வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெயிட்டேஜ் மதிப்பெண் முறை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வெயிட்டேஜ் மதிப்பெண் முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 25 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக வழங்கப்படுகிறது.

இதில் மொத்தம் 100 வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்கு தேர்வர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.

அதேபோல், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 10 மதிப்பெண்ணும், பட்டப் படிப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், பி.எட். தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக வழங்கப்படும்.

இதில் மொத்தம் 100 வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்கு தேர்வர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம் இருக்கும்.

கூடுதலாகத் தேர்ச்சி பெற்றவர்களின் நிலை என்ன?... ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் மொத்தம் 42 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் 11 ஆயிரம் பேர் ஜூலை இறுதியில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மீதமுள்ள 31 ஆயிரம் பேரின் நிலை என்ன, அவர்களுக்கு அடுத்து வரும் பணி நியமனங்களில் முன்னுரிமை வழங்கப்படுமா என்பது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறியது:

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசுப் பள்ளிகளில் பணி நியமனம் கிடைக்கப் பெறாதவர்கள் தனியார் பள்ளிகளில் வேலைக்குச் செல்லலாம். அவர்களுக்கு அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தங்களது மதிப்பெண்ணை அதிகரித்துக்கொள்ளவும், ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கவும் வாய்ப்பு வழங்கப்படும்.

ஆனால், அவர்களுக்கு அடுத்து வரும் பணி நியமனங்களில் முன்னுரிமை எதுவும் வழங்கப்படாது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நவம்பரில் அடுத்த ஆசிரியர் தகுதி தேர்வு

அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டதால் ஆசிரியர் பணி நியமனத்தை முடித்து மீண்டும் தேர்வு நடத்த முடியாமல் இருந்தது.

இப்போது வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதையடுத்து, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் நிறைவடைந்ததும் அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதுகலை ஆசிரியர் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியீடு

முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல், ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும்' என, டி.ஆர்.பி., வட்டாரம் (ஆசிரியர் தேர்வு வாரியம்), நேற்று தெரிவித்தது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய, கடந்த ஆண்டு, ஜூலையில், போட்டி தேர்வு நடந்தது. தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நிலையில், விடைகளை எதிர்த்து, பல தேர்வர்கள், சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் அனைத்தும், சமீபத்தில் முடித்து வைக்கப்பட்டன. இதையடுத்து, ஒரு வாரத்திற்குள், முதுகலை ஆசிரியர், இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று மாலை தெரிவித்தது. மொத்தம் உள்ள, 17 பாடங்களில், 6 பாடங்களுக்கு, இறுதி முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழ் பாடத்திற்கு மட்டும், பணி நியமனம் நடந்துள்ளது. 11 பாடங்களுக்கு, இறுதி முடிவு வெளியாகவில்லை. இந்த முடிவு வெளியானதும், 16 பாடங்களுக்கு தேர்வு பெறுவோர், முதுகலை ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவர். பள்ளி கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், 'பதவி உயர்வு கலந்தாய்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு என, அனைத்தும் முடிந்து விட்டன. எனவே, தேர்வுப் பட்டியல் வந்ததும், உடனடியாக பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்தது.

ஆசிரியர் தகுதி தேர்வில் இதுவரை தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் இணையதளத்தில் வெளியீடு

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்ணில் சந்தேகம் இருந்தால் அவர்கள் 21-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை மாவட்டங்களில் நடத்தப்படும் சரிபார்ப்புக்கு செல்லலாம். ஆசிரியர் நியமன பட்டியல் 30-ந் தேதி வெளியிடப்படுகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வு

ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த 2012-ம் ஆண்டு 2 முறை நடத்தப்பட்டது. அந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் தவிர மீதம் உள்ள நபர்களும் தகுதி இருந்தால் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அதுபோல 2013-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் 2014-ம் ஆண்டு நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களும் பணிக்கு தகுதி இருந்தால் தேர்ச்சி பெற உள்ளனர்.

அதாவது 2012 முதல் இதுவரை நடத்தப்பட்ட பட்டதாரிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அவர்கள் பிளஸ்-2 தேர்வில் பெற்ற மதிப்பெண், பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண், பி.எட். படிப்பில் பெற்ற மதிப்பெண் ஆகியவற்றை கொண்டும் அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று எடுத்த மதிப்பெண்ணை கூட்டி அதை 100-க்கு கொண்டு வரப்படுகிறது. 100-க்கு எத்தனை மதிப்பெண் என்று கணக்கிட்டு அதை வெயிட்டேஜ் மதிப்பெண் என்று அழைக்கப்படுகிறது.

வெயிட்டேஜ்மதிப்பெண் வெளியீடு

அந்த வெயிட்டேஜ் மதிப்பெண் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வெயிட்டேஜ் மதிப்பெண்ணை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து பட்டதாரிகளும் பார்க்கலாம். பார்த்துவிட்டு மதிப்பெண் குறைவாக அல்லது கூடுதலாக இருந்தால் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள பள்ளிக்கு குறிப்பிட்டுள்ள தேதிகளில் சென்று சரிபார்க்க வேண்டும். அப்போது எஸ்.எஸ்.எல்.சி மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்று, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண் சான்றிதழ், பி.எட். மதிப்பெண் சான்றிதழ், தமிழ் வழி படித்திருந்தால் (தமிழ் இலக்கியம், ஆங்கிலம் இலக்கியம் படிக்காதவர்கள்) கல்வி நிறுவன தலைவரிடம் இருந்து பட்டப்படிப்பு தமிழ்வழியில் படித்ததற்கான சான்று, மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதற்கான மருத்துவ குழுவினரிடம் பெற்ற சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு செல்லவேண்டும். அப்படி வரும்போது ஒரிஜினல் சான்றிதழ்கள், இரு சான்றொப்பம் இட்ட நகல்கள் கொண்டுவர வேண்டும்.

கடைசி வாய்ப்பு

சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஏற்கனவே வராதவர்களுக்கு கடைசி வாய்ப்பு அளிக்கும் வகையில் சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறுகிறது. அந்த தேதியும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் மதிப்பெண் சரிபார்த்தல் 2 அல்லது 3 மாவட்டங்களுக்கு ஒரு பள்ளிக்கூடத்தில் நடைபெறுகிறது.

இதுவரை 11 லட்சத்து 78 ஆயிரத்து 495 பேர் தகுதி தேர்வு எழுதினார்கள். அதில் 52 ஆயிரத்து 631 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10 ஆயிரத்து 726 பேர் நியமனம்

தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து 10 ஆயிரத்து 726 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இதில் பாடவாரியாக தேர்ச்சி பெறுவோர் விவரம் வருமாறு:-

தமிழ் - 772

ஆங்கிலம் - 2,822

கணிதம் - 911

இயற்பியல் - 605

வேதியியல் - 605

தாவரவியல் - 260

விலங்கியல் - 260

வரலாறு - 3,592

புவியியல் - 899

இந்த வருடம் வரலாறு பாடம் படித்த பட்டதாரிகள் அதிகமாக ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். அதுபோல புவியியல் படித்தவர்கள் குறைவாகத்தான் எப்போதும் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். ஆனால் இந்த முறை 899 பேர் தேர்ந்து எடுக்கப்பட இருக்கிறார்கள்.

30-ந் தேதி பட்டியல் வெளியீடு

இந்த சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் சந்தேகம் நிவர்த்தி செய்யப்பட்ட உடன் வருகிற 30-ந் தேதி பி.எட். படித்த பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்த பட்டியல் வெளியிடப்படுகிறது.

இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படும் முன்பாக அவர்களுக்கும் இதே வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. அந்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.