இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, July 15, 2014

'அட்டஸ்டேஷன்' தேவையில்லை: மத்திய அரசு அதிரடி

: 'அரசு தொடர்பான அடிப்படை தேவைகளுக்கான விண்ணப்பங்களுடன், சான்றிதழ் நகல்களை சமர்ப்பிக்கும்போது, அதிகாரிகளின், 'அட்டஸ்டேஷன்' தேவையில்லை; சுய ஒப்புகை மட்டுமே போதுமானது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய, மாநில அரசுத் துறை சார்ந்த பணிகள், வேலைவாய்ப்பு, கல்வி, உள்ளிட்ட முக்கிய விண்ணப்பங்களுடன், நகல் சான்றிதழ்களை அனுப்பும் போது, அதில், 'நோட்டரி பப்ளிக்' அல்லது பச்சை மை உபயோகப்படுத்தும், தகுதியுள்ள அதிகாரிகளிடம், 'அட்டஸ்டேஷன்' கையெழுத்து பெற்று அனுப்ப வேண்டிய நிலை உள்ளது. இதற்கு, பண விரயம் மட்டுமின்றி, நேர விரயமும் ஆவதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். 'விண்ணப்பங்களுடன் பொதுமக்கள் அனுப்பும் நகல்களில், தாங்களே கையொப்பம் இட்டு அனுப்பினால் போதுமானது. சான்றிதழ் சரிபார்ப்பின் போது, அசல் சான்றிதழ் காண்பிக்க வேண்டும்' என, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பஸ் படிக்கட்டில் மாணவர் பயணித்தால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை'

்: 'மாணவர்கள், பஸ் படிக்கட்டில் தொடர்ந்து பயணம் செய்வது கண்டறியப்பட்டால், அந்த மாணவர் படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் தாளாளர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளி வாகன ஆய்வு கமிட்டி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ராமநாதபுரத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள

்: பள்ளி மாணவர்களில் சிலர், பஸ் படிக்கட்டில் தொடர்ந்து பயணிப்பது தெரிய வந்துள்ளது. இதுபோன்று பயணிப்பவர்களை, பள்ளி நிர்வாகம் கண்டிக்க வேண்டும். தவறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க, முதன்மை கல்வி அலுவலருக்கு பரிந்துரைக்கப்படும். இவ்வாறு, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வின் வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியலையும், காலியிடங்கள் விவரத்தையும் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது

. இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் (தாள்-1) 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இடைநிலை ஆசிரியர் காலியிடங்களை இறுதிசெய்யும் பணி முழுவீச்சில் நடந்துவருகிறது. அப்பணி முடிவடைந்ததும் அவர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியலையும், காலியிடங்கள் விவரத்தையும் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

Teachers detail form

Monday, July 14, 2014

ஆசிரியர் தகுதிதேர்வில் வெற்றி பெற்றோருக்கு புதிய வெயிட்டேஜ் முறை

பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரத்து 242 பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் விவரத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.

இவர்களிலிருந்து வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் 10 ஆயிரத்து 726 பேர் கொண்ட பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்த மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு மொத்தம் 72 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர்.

இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த ஜனவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்றது. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 4 ஆயிரம் பேர் பங்கேற்ற இந்தத் தேர்வில் 935 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கும் அண்மையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.

சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்த நிலையில் நீதிமன்ற வழக்குகள் காரணமாக வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் தேர்வுப் பட்டியல் வெளியிடுவது தாமதமானது. நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வந்ததையடுத்து இப்போது ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்குரிய ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்ற சுமார் 30 ஆயிரம் பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் விவரம் விரைவில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

தனியே விண்ணப்பிக்கத் தேவையில்லை: தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பின் போது அரசுப் பணியில் சேர விருப்பம் தெரிவித்திருந்ததையே, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவதற்கான விண்ணப்பமாக ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்றுக்கொள்கிறது.  எனவே, இந்தப் பணிகளுக்காக தனியே விண்ணப்பிக்க வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெயிட்டேஜ் மதிப்பெண் முறை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வெயிட்டேஜ் மதிப்பெண் முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 25 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக வழங்கப்படுகிறது.

இதில் மொத்தம் 100 வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்கு தேர்வர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.

அதேபோல், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 10 மதிப்பெண்ணும், பட்டப் படிப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், பி.எட். தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக வழங்கப்படும்.

இதில் மொத்தம் 100 வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்கு தேர்வர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம் இருக்கும்.

கூடுதலாகத் தேர்ச்சி பெற்றவர்களின் நிலை என்ன?... ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் மொத்தம் 42 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் 11 ஆயிரம் பேர் ஜூலை இறுதியில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மீதமுள்ள 31 ஆயிரம் பேரின் நிலை என்ன, அவர்களுக்கு அடுத்து வரும் பணி நியமனங்களில் முன்னுரிமை வழங்கப்படுமா என்பது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறியது:

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசுப் பள்ளிகளில் பணி நியமனம் கிடைக்கப் பெறாதவர்கள் தனியார் பள்ளிகளில் வேலைக்குச் செல்லலாம். அவர்களுக்கு அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தங்களது மதிப்பெண்ணை அதிகரித்துக்கொள்ளவும், ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கவும் வாய்ப்பு வழங்கப்படும்.

ஆனால், அவர்களுக்கு அடுத்து வரும் பணி நியமனங்களில் முன்னுரிமை எதுவும் வழங்கப்படாது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நவம்பரில் அடுத்த ஆசிரியர் தகுதி தேர்வு

அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டதால் ஆசிரியர் பணி நியமனத்தை முடித்து மீண்டும் தேர்வு நடத்த முடியாமல் இருந்தது.

இப்போது வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதையடுத்து, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் நிறைவடைந்ததும் அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதுகலை ஆசிரியர் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியீடு

முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல், ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும்' என, டி.ஆர்.பி., வட்டாரம் (ஆசிரியர் தேர்வு வாரியம்), நேற்று தெரிவித்தது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய, கடந்த ஆண்டு, ஜூலையில், போட்டி தேர்வு நடந்தது. தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நிலையில், விடைகளை எதிர்த்து, பல தேர்வர்கள், சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் அனைத்தும், சமீபத்தில் முடித்து வைக்கப்பட்டன. இதையடுத்து, ஒரு வாரத்திற்குள், முதுகலை ஆசிரியர், இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று மாலை தெரிவித்தது. மொத்தம் உள்ள, 17 பாடங்களில், 6 பாடங்களுக்கு, இறுதி முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழ் பாடத்திற்கு மட்டும், பணி நியமனம் நடந்துள்ளது. 11 பாடங்களுக்கு, இறுதி முடிவு வெளியாகவில்லை. இந்த முடிவு வெளியானதும், 16 பாடங்களுக்கு தேர்வு பெறுவோர், முதுகலை ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவர். பள்ளி கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், 'பதவி உயர்வு கலந்தாய்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு என, அனைத்தும் முடிந்து விட்டன. எனவே, தேர்வுப் பட்டியல் வந்ததும், உடனடியாக பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்தது.

ஆசிரியர் தகுதி தேர்வில் இதுவரை தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் இணையதளத்தில் வெளியீடு

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்ணில் சந்தேகம் இருந்தால் அவர்கள் 21-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை மாவட்டங்களில் நடத்தப்படும் சரிபார்ப்புக்கு செல்லலாம். ஆசிரியர் நியமன பட்டியல் 30-ந் தேதி வெளியிடப்படுகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வு

ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த 2012-ம் ஆண்டு 2 முறை நடத்தப்பட்டது. அந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் தவிர மீதம் உள்ள நபர்களும் தகுதி இருந்தால் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அதுபோல 2013-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் 2014-ம் ஆண்டு நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களும் பணிக்கு தகுதி இருந்தால் தேர்ச்சி பெற உள்ளனர்.

அதாவது 2012 முதல் இதுவரை நடத்தப்பட்ட பட்டதாரிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அவர்கள் பிளஸ்-2 தேர்வில் பெற்ற மதிப்பெண், பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண், பி.எட். படிப்பில் பெற்ற மதிப்பெண் ஆகியவற்றை கொண்டும் அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று எடுத்த மதிப்பெண்ணை கூட்டி அதை 100-க்கு கொண்டு வரப்படுகிறது. 100-க்கு எத்தனை மதிப்பெண் என்று கணக்கிட்டு அதை வெயிட்டேஜ் மதிப்பெண் என்று அழைக்கப்படுகிறது.

வெயிட்டேஜ்மதிப்பெண் வெளியீடு

அந்த வெயிட்டேஜ் மதிப்பெண் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வெயிட்டேஜ் மதிப்பெண்ணை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து பட்டதாரிகளும் பார்க்கலாம். பார்த்துவிட்டு மதிப்பெண் குறைவாக அல்லது கூடுதலாக இருந்தால் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள பள்ளிக்கு குறிப்பிட்டுள்ள தேதிகளில் சென்று சரிபார்க்க வேண்டும். அப்போது எஸ்.எஸ்.எல்.சி மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்று, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண் சான்றிதழ், பி.எட். மதிப்பெண் சான்றிதழ், தமிழ் வழி படித்திருந்தால் (தமிழ் இலக்கியம், ஆங்கிலம் இலக்கியம் படிக்காதவர்கள்) கல்வி நிறுவன தலைவரிடம் இருந்து பட்டப்படிப்பு தமிழ்வழியில் படித்ததற்கான சான்று, மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதற்கான மருத்துவ குழுவினரிடம் பெற்ற சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு செல்லவேண்டும். அப்படி வரும்போது ஒரிஜினல் சான்றிதழ்கள், இரு சான்றொப்பம் இட்ட நகல்கள் கொண்டுவர வேண்டும்.

கடைசி வாய்ப்பு

சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஏற்கனவே வராதவர்களுக்கு கடைசி வாய்ப்பு அளிக்கும் வகையில் சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறுகிறது. அந்த தேதியும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் மதிப்பெண் சரிபார்த்தல் 2 அல்லது 3 மாவட்டங்களுக்கு ஒரு பள்ளிக்கூடத்தில் நடைபெறுகிறது.

இதுவரை 11 லட்சத்து 78 ஆயிரத்து 495 பேர் தகுதி தேர்வு எழுதினார்கள். அதில் 52 ஆயிரத்து 631 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10 ஆயிரத்து 726 பேர் நியமனம்

தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து 10 ஆயிரத்து 726 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இதில் பாடவாரியாக தேர்ச்சி பெறுவோர் விவரம் வருமாறு:-

தமிழ் - 772

ஆங்கிலம் - 2,822

கணிதம் - 911

இயற்பியல் - 605

வேதியியல் - 605

தாவரவியல் - 260

விலங்கியல் - 260

வரலாறு - 3,592

புவியியல் - 899

இந்த வருடம் வரலாறு பாடம் படித்த பட்டதாரிகள் அதிகமாக ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். அதுபோல புவியியல் படித்தவர்கள் குறைவாகத்தான் எப்போதும் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். ஆனால் இந்த முறை 899 பேர் தேர்ந்து எடுக்கப்பட இருக்கிறார்கள்.

30-ந் தேதி பட்டியல் வெளியீடு

இந்த சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் சந்தேகம் நிவர்த்தி செய்யப்பட்ட உடன் வருகிற 30-ந் தேதி பி.எட். படித்த பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்த பட்டியல் வெளியிடப்படுகிறது.

இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படும் முன்பாக அவர்களுக்கும் இதே வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. அந்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குடும்ப அட்டை இல்லாதவர்கள் இருப்பிட முகவரிக்கு அருகிலுள்ள தபால் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்

Direct Recruitment of B.T. Assistant 2012 - 2013

10,726 பட்டதாரி ஆசிரியர்கள் நியமன அறிவிப்பு

10,726 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனையடுத்து, ஆசிரியர் தேர்வுவாரியம் காலிப்பணியிடம் தொடர்பான விபரங்கள் வெளியிட்டுள்ளது.

இதன்படி தமிழ்- 782 இடங்களும், ஆங்கிலம்-2822 இடங்களும், கணிதம்-911 இடங்களும், இயற்பியல்-605 இடங்களும் வேதியியல்- 605, தாவரவியல்- 260 இடங்களும், விலங்கியல்-260 இடங்களும், வரலாறு-2592 இடங்களும், புவியியல் -899 இடங்களும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, July 13, 2014

ஆசிரியர் டிப்ளமோ படிப்பு: தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 10 ஆயிரம் இடங்கள் காலி

் தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சுமார் 10 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளன. தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு ஜூலை 7 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற்றது. 29 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் 8 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 2,600 இடங்கள், 454 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டுக்கான 10 ஆயிரம் இடங்கள், 42 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 1,600 இடங்கள் என 14 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் கலந்தாய்வில் இருந்தன. ஆனால், இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க 4,520 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களில் 2,400 பேர் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்றனர். சுமார் 2,200 பேர் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். இந்தக் கலந்தாய்வில் பங்கேற்ற பெரும்பாலானோர் மாவட்ட மற்றும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களையே தேர்ந்தெடுத்தனர். அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 2,176 பேர் சேர்ந்துள்ளனர். 424 இடங்கள் மட்டுமே இதில் காலியாக உள்ளன. திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. வட மாவட்டங்களில் சில இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் கலந்தாய்வின் மூலம் 50 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் பெரும்பாலும் தங்களது ஊர்களுக்கு அருகில் உள்ள பிளஸ் 2 முடித்த மாணவர்களை நிர்வாக ஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. கடந்த ஆண்டு சுமார் 6 ஆயிரம் பேர் நிர்வாக ஒதுக்கீட்டுப் பிரிவுகளில் சேர்ந்தனர். இந்த ஆண்டு ஏறத்தாழ அதே எண்ணிக்கையிலான மாணவர்கள் இவற்றில் சேருவார்கள் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 50 சதவீத இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் என்ன?: தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ முடித்தவர்கள் இடைநிலை ஆசிரியர்களாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணி நியமனம் பெற முடியும். தமிழகம் முழுவதும் ஏற்கெனவே 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த டிப்ளமோ படிப்பை முடித்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் காலியிடங்கள் அதிகமாக இப்போது ஏற்படுவதில்லை. அரசு வேலைக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளதால், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே ஆசிரியர் டிப்ளமோ படிப்பில் சேர ஆர்வம் காட்டுவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு முடிவுக்கு வந்ததையடுத்து, இதுவரை மாநில அளவிலான பதிவு மூப்பின் அடிப்படையில் இருந்த இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் இனி வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் நடைபெற உள்ளது.

அனுமதி பெறாமல் படிப்பு:முதுகலை ஆசிரியர்களுக்கு சிக்கல்


     கல்வித் துறை அதிகாரிகளின் அனுமதி பெறாமல், எம்.பில்., படிக்கும், முதுகலை ஆசிரியர்கள் குறித்த, பெயர் பட்டியலை அனுப்பும்படி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள், கல்வித் துறை அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல், எம்.பில்., படித்து வருகின்றனர். இதை, இவர்களது பணி பதிவேட்டில் சேர்ப்பதிலும், அடிப்படை சம்பளத்தில், 3 சதவீதம் உயர்த்துவதிலும் சிக்கல் உள்ளது.புகாரை அடுத்து, இவர்களது பெயர் பட்டியலை தயாரித்து அனுப்பும்படி, தொழிற்கல்வி இயக்குனர் தர்ம ராஜேந்திரன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

உத்தரவில், 'முதுகலை ஆசிரியராக பணிபுரிபவர் எம்.பில்., படிக்க வேண்டுமானால், அவர் பணிபுரியும் பள்ளியின் தலைமை ஆசிரியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். முறையான அனுமதி பெறாமல், எம்.பில்., படிப்பவர்களின் பெயர் பட்டியலை தயாரித்து அனுப்ப வேண்டும். அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

To know your TET weightage mark Paper II

To know your TET weightage mark paper I

Saturday, July 12, 2014

ஜூலை 23-இல் ஏழாவது ஊதியக் குழுக் கூட்டம-dinamani


      மத்திய அரசு ஊழியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஏழாவது ஊதியக் குழுவின் முதலாவது கூட்டம் தில்லியில் வரும் ஜூலை 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. நீதிபதி அசோக் குமார் தலைமையில் இக் கூட்டம் நடைபெறவுள்ளது. குழுவின் உறுப்பினர்கள் விவேக் ரே, ரதின் ராய், மீனா அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம், படிகள், சலுகைகள் உள்ளிட்டவற்றை நிர்ணயிப்பது தொடர்பாக அரசுக்குப் பரிந்துரைக்க நீதிபதி அசோக் குமார் தலைமையிலான ஊதியக் குழுவை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நியமித்தது. இக்குழுவின் பரிந்துரை 2016-17 நிதியாண்டில் அமல்படுத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது

. கடந்த பிப்ரவரியில் குழுவின் நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பிறகும், இக்குழு எப்போது செயல்படத் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், இக் குழுவின் கூட்டத்தை வரும் 23ஆம் தேதி கூட்ட அசோக் குமார் நடவடிக்கை எடுத்துள்ளார். முதலாவது கூட்டம் என்பதால் அது சம்பிரதாய அளவில் இருக்கும் என்றும் குழுவின் செயல் திட்டம், பணிகள் தொடர்பாக அதில் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. மத்திய அரசு ஊழியர்கள், அகில இந்திய அரசுப் பணி, யூனியன் பிரதேசங்களில் பணியாற்றுவோர், இந்திய கணக்குத் தணிக்கைத் துறை, பாரத ரிசர்வ் வங்கி நீங்கலாக இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகளின் உறுப்பினர்கள், உச்ச நீதிமன்ற அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் தொடர்பான ஊதியம், படிகள் போன்றவை குறித்து ஏழாவது ஊதியக் குழு ஆய்வு செய்யவுள்ளது

. தற்போது அமலில் உள்ள சம்பள படிகள், சலுகைகள், பாதுகாப்புத் துறையில் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதிய காலப் பலன்கள், அரசுப் பணியில் திறமையை ஊக்குவித்தும் பொறுப்புணர்வை அதிகரிக்கச் செய்யும் வகையில், புதிய ஊதிய விகிதத்தை மாற்றியமைப்பது, சமூக-பொருளாதார-தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்றவாறு அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்தை நிர்ணயிப்பது, அவர்களின் ஊதியத்துக்கு ஏற்ப சலுகைத் திட்டங்களை அறிவிப்பது, 1.1.2004 பிறகு ஓய்வு பெறுவோருக்கு புதிய ஓய்வூதிய காலத் திட்டத்தின்படி எவ்வளவு ஓய்வூதியத்தை வழங்கலாம் என்பன உள்ளிட்டவற்றை ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரை அளிக்கும் பணி ஏழாவது ஊதியக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தனது ஆய்வின் தேவைக்காக பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற ஆலோசகர்கள், தொழிற்துறை, அரசுத் துறை பணியில் இருந்து ஓய்வு பெற்ற வல்லுநர்கள், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரை நியமித்துக் கொள்ள இக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக ஏழாவது ஊதியக் குழுவின் முதலாவது கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்குழு 18 மாதங்களுக்குள் தனது பரிந்துரைகளை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தனது பணியை 23-ஆம் தேதி தொடங்கும் ஊதியக் குழு பொதுமக்கள், தொழிற்சங்கத்தினர், அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை நேரில் விசாரணைக்கு அழைக்க வாய்ப்புள்ளதாக மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. பொதுமக்களின் கருத்துகளை அறியும் வகையில், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ஊடகங்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்த்ன. கருத்துகளை வரவேற்க மே 31ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதை ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊதியக் குழுவிடம் கருத்துகளைத் தெரிவிக்க விரும்புவோர் அணுக வேண்டிய முகவரி: செயலர், ஏழாவது ஊதியக் குழு, அஞ்சல் குறீயிட்டு எண் 4599, ஹோஸ் காஸ் அஞ்சலகம், புது தில்லி-110 016.