இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, June 21, 2014

ஜூன் 26க்குள் 2,000 புதிய ஆசிரியர் பணியிடங்கள்

தமிழகம் முழுவதும், இம்மாதம் 26க்குள் புதிதாக, 2,000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க, கல்வித் துறை பரிசீலனை செய்து வருகிறது. மாநிலத்தில் தொடக்க மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல், 'கவுன்சிலிங்' துவங்கியுள்ளது. இதில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 'பணி நிரவல்' மாறுதல், 'கவுன்சிலிங்' இம்மாதம் 26ல் நடக்கிறது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை விகிதம் குறைந்ததால், தற்போதுள்ள மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில், மாநிலம் முழுவதும், 3,000 பட்டதாரி ஆசிரியர்கள் உபரியாக கணக்கிட்டு, 'பணிநிரவல்' அடிப்படையில் அவர்களை பணியிட மாறுதல் செய்ய, கல்வித்துறை முடிவு செய்தது.

இதற்கு ஆசிரியர்களிடம் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், பணி மாறுதல் செய்யப்பட்டால், அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதா என்ற தகவலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக, உபரி ஆசிரியர் எண்ணிக்கையை கணக்கிட்டு, ஒவ்வொரு மாவட்டங்களிலும் கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க, கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இப்புதிய பணியிடங்களை, ஆங்கில வழி வகுப்புகளுக்கு பாடவாரியாக ஒதுக்கீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய பணியிடங்களை, இம்மாதம் 26ல், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாநிலம் முழுவதும் நடக்கும், பணிநிரவல், 'கவுன்சிலிங்' முன் ஒதுக்கீடு செய்யவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: அனுமதிச் சீட்டு பதிவிறக்கம் செய்யலாம்

் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வில் பங்கேற்கும் தனித் தேர்வர்கள் மற்றும் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து இயக்ககம் வெளியிட்ட செய்தி: தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் (2014 ஜூன்) இரண்டாம் ஆண்டு தேர்வுகள் ஜூன் 26 முதல் ஜூலை 3-ஆம் தேதி வரையும், முதலாமாண்டு தேர்வுகள் ஜூலை 7-ஆம் தேதி முதல் ஜூலை 14-ஆம் தேதி வரையிலும் நடத்தப்பட உள்ளன. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் மற்ற்றும் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் www.tndge.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஜூன் 22-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Friday, June 20, 2014

மாவட்ட மறுதல் -ஓர் விளக்கம


1. மாவட்ட மாறுதல் ஆன்-லைன் மூலம் நடத்தப்படும்
2. 32 மாவட்டங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது
3.ஒரு மண்டல்தை மட்டுமே தேர்வு செய்து மாறுதல் கோர முடியும்
4. ஒரு விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்
5. முன்னுரிமை சம்பந்தமான கடிதத்தினை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

6. தாங்கள் பணியாற்றும் மாவட்டத்திலேயே மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
7. ஒன்றிற்கு மேற்பட்ட விண்ணபங்கள் சமர்ப்பித்தால் தங்கள் பெயர் தானாகவே நிராகரிக்கப்படும்.
8. காலிப் பணியிடங்கள் விரைவில் இணையத்தில் வெளியிடப்படும்
9. விண்ணபத்தின் விபரங்கள் அந்தந்த வட்டாரங்களிலே ஆன் லைனில் ஏற்றப்படும்
11. இடைநிலையாசிரிர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு மாவட்ட மாறுதல் ஆன்லைனில் மட்டுமே நடக்கும்
11. மேலும் விபரங்களுக்கு தாங்கள் சார்ந்த அமைப்பின் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.

Wednesday, June 18, 2014

எஸ்.எஸ்.எல்.சி உடனடித் தேர்வு ஜீன் 2014 - HALL TICKET

ஜூன் 26க்குள் 2 ஆயிரம் புதிய ஆசிரியர் பணியிடங்கள்: கல்வித்துறை பரிசீலனை

தமிழகம் முழுவதும் ஜூன் 26க்குள் புதிதாக 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க கல்வித் துறை பரிசீலனை செய்து வருகிறது. மாநிலத்தில் தொடக்க மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் 'கவுன்சிலிங்' ஜூன் 16 முதல் துவங்கியுள்ளது. இதில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 'பணிநிரவல்' மாறுதல் 'கவுன்சிலிங்' ஜூன் 26ல் நடக்கிறது.

இதில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை விகிதம் குறைந்ததால், தற்போதுள்ள மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில், மாநிலம் முழுவதும் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் 'சர்பிளஸ்' ஆக கணக்கிட்டு, 'பணிநிரவல்' அடிப்படையில் அவர்களை பணியிட மாறுதல் செய்ய கல்வித்துறை முடிவு செய்தது. இதற்கு ஆசிரியர்களிடம் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், பணி மாறுதல் செய்யப்பட்டால், அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதா என்ற தகவலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக, 'சர்பிளஸ்' ஆசிரியர் எண்ணிக்கையை கணக்கிட்டு, ஒவ்வொரு மாவட்டங்களிலும் கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இப்புதிய பணியிடங்களை, ஆங்கில வழி வகுப்புகளுக்கு பாடவாரியாக ஒதுக்கீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய பணியிடங்களை ஜூன் 26 ல், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாநிலம் முழுவதும் நடக்கும் பணிநிரவல் 'கவுன்சிலிங்' முன் ஒதுக்கீடு செய்யவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சர்பிளஸ்' பட்டதாரி ஆசிரியர்கள் எண்ணிக்கையுடன், கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளுக்கு ஒதுக்கீடு செய்ய பரிசீலனை நடக்கிறது. மாவட்டம் தோறும் ஒதுக்கப்பட்ட புதிய பணியிடங்கள் குறித்து, முதன்மை கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 26 சர்பிளஸ் ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களை சேர்ந்து, கூடுதலாக 220 புதிய பணியிடங்கள் உருவாக வாய்ப்புள்ளது," என்றார்.

ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றம

  தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான, மாவட்ட மாறுதல் கலந்தாய்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடக்க கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு: தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான, பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு, இம்மாதம், 16ம் தேதி துவங்கி, 28ம் தேதி வரை நடக்கிறது. மாவட்ட மாறுதல் கோரும் ஆசிரியர்களின் நலன் கருதி, மாவட்ட மாறுதல் கலந்தாய்வு இணைய வழி மூலம் நடக்க உள்ளதால், மாவட்ட மாறுதல் கலந்தாய்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன

. இடை நிலை ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு, ஜூன் 28க்கு பதிலாக, ஜூன் 30, ஜூலை 1 என, இரண்டு நாட்கள் நடக்கும். பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு, ஜூன் 21க்கு பதிலாக, ஜூலை 2ம் தேதி நடக்கும். இந்த இரு கலந்தாய்வுகளும், ஆசிரியர்களின் நேரம், பயண நேரத்தை குறைக்கும் வகையில், தற்போது பணிபுரியும் மாவட்டத்தில் இருந்தே, தங்களுக்கு விருப்பமான மாவட்டத்தை தேர்வு செய்யும் வகையில், இணைய தளம் மூலம் நடக்கும். மற்ற கலந்தாய்வுகள் அட்டவணையில் குறிப்பிட்டபடி, வழக்கம்போல் நடைபெறும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Interactive Learning Sites for Education -

DEE - 2014-15 CONDUCT OF ONLINE COUNSELING FOR SG / BT DISTRICT TRANSFER REG PROCidings

DEE - 2014-15 CONDUCT OF ONLINE COUNSELING FOR SG / BT DISTRICT TRANSFER REG PROCidings

District Transfer new Application form

Tuesday, June 17, 2014

சிக்கலில் இடைநிலை ஆசிரியர்கள

்  அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பதவி உயர்வுக்கு முன்பே மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவதால், இடைநிலை ஆசிரியர்கள் இடம்மாறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், 6 முதல் 8 ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். அரசு உத்தரவுப்படி, 2003க்கு பின், இடைநிலை ஆசிரியர் ஓய்வு பெற்ற பணியிடங்களில், பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதனால், இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக மாற்றப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஜூன் 27 ல் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு, மாவட்டத்திற்குள் மாறுதலும்; ஜூன் 28 ல் வெளிமாவட்டத்திற்கான மாறுதலும் நடக்க உள்ளது.

இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் ஆவதற்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஜூன் 28ல் நடக்கிறது. பதவி உயர்வுக்கு முன், இடமாறுதல் கலந்தாய்வு நடப்பதால், இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் ஏற்படாது. ஆசிரியர்கள் கூறுகை யில், 'பட்டதாரி பதவி உயர்வுக்கு பின்பே காலிப்பணியிடங்கள் ஏற்படும். பதவி உயர்வுக்கு முன் இடமாறுதல் கலந்தாய்வு நடப்பதால், காலிப்பணியிடங்கள் ஏற்படாது' என்றனர்.

ஆசிரியர் பயிற்சி படிப்பு: ஜூலை 15ல் கலந்தாய்வு

ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர, 4,535 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு, ஜூலை, 15ம் தேதி முதல் நடக்கிறது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், சுயநிதி தனியார் பள்ளிகள் என, 538 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், அரசு பள்ளிகளில், 4,860 இடங்களும், தனியார் பள்ளிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கு, 10 ஆயிரம் இடங்களும் உள்ளன. இவ்வளவு இடங்கள் இருந்தும், 4,535 மாணவர்கள் மட்டுமே, ஆசிரியர் பயிற்சியில் சேர விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு, ஆன்லைன் முறையில், வரும் ஜூலை, 15ம் தேதி முதல் நடக்கிறது. விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவ, மாணவியரும், அரசு பள்ளிகளிலேயே சேர வாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு, கலந்தாய்வு மற்றும் தனியார் பள்ளிகளில் நேரடி சேர்க்கை என, 9,971 பேர் சேர்ந்தனர். இந்த ஆண்டும், இதே அளவிற்கு, மாணவர் சேர்க்கை இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Achivement test

Monday, June 16, 2014

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் 156 பேருக்கு பணியிட மாறுதல்


பணியிட மாறுதல் கலந்தாய்வில் 156 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் திங்கள்கிழமை (ஜூன் 16) பணியிட மாறுதல் பெற்றதாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. சென்னையில் உள்ள தொடக்கக் கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வில் 344 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.

இந்த நேரடி கலந்தாய்வில் 156 பேர் முன்னுரிமை அடிப்படையில் தங்களுக்கான பணி மாறுதல் இடங்களைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களுக்கு உடனடியாக மாறுதல் ஆணைகளும் வழங்கப்பட்டன. நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவியிலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணிமாறுதல் வழங்கும் கலந்தாய்வில் கலந்துகொண்டவர்களில் 7 பேருக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது. இவர்களுக்கான ஆணைகளும் உடனடியாக வழங்கப்பட்டதாக ஆர்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

15 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் எப்போது?


பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேருக்கான தேர்வுப் பட்டியல் ஒரு சில நாள்களில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் மொத்தம் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளனர். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த நியமனத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. 

அதனடிப்படையில் 12 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப்பட்டியல் தயாராக உள்ளதாகத் தெரிகிறது. விரைவில் இந்தப் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல் தயாரிப்பதில் சட்ட சிக்கல் எழுந்துள்ளதாகத் தெரிகிறது. இந்தப் பிரச்னை குறித்து இப்போது ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

ஒரே நாளில் 4 போட்டித் தேர்வு

டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2  உள்ளிட்ட 4 போட்டி தேர்வுகள் ஜூன் 29–ந் தேதி ஒரே நாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

குரூப்–2 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வருகிற 29–ந் தேதி குரூப்–2 தேர்வினை தமிழகம் முழுவதும் நடத்துவதாக அறிவித்துள்ளது. இந்த தேர்வில் சுமார் 8 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குரூப்–2 தேர்வை கடந்த 2011–ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. நடத்தியது. அதன்பின்னர் 3 ஆண்டு இடைவெளி விட்டு தற்போது வருகிற 29–ந் தேதி நடத்துவதால், இந்த தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெறவேண்டும் என்று பட்டதாரிகள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், குரூப்–2 தேர்வு நடைபெறவுள்ள அதே நாளில் (ஜூன் 29–ந் தேதி) மேலும் 3 போட்டி தேர்வுகள் நடைபெற உள்ளது.

ஒரேநாளில் 4 போட்டி தேர்வு

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய உளவுத்துறையின் (ஐ.பி) இளநிலை உளவு அதிகாரி பதவிக்கு நாடு முழுவதும் ஜூன் 29–ந் தேதி தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி பதவிக்கான தேர்வும், தேசிய ஆசிரியர் தகுதி தேர்வும் இதே நாளில் நாடு முழுவதும் நடைபெறுகிறது.

இதனால் இந்த 4 தேர்வுகளுக்கும் விண்ணப்பம் செய்தவர்கள் ஏதாவது ஒரு தேர்வினை மட்டுமே எழுதக்கூடிய நிலையில் உள்ளனர். இந்த 4 போட்டி தேர்வுகளில் எதில் பங்கேற்பது என்ற மிகப்பெரிய குழப்பம் பட்டதாரிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனால், குரூப்–2 தேர்வு தேதியை தள்ளி வைக்கவேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்துக்கு பலர் கோரிக்கை கடிதத்தை அனுப்பி வருகின்றனர். சிலர் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்துக்கு நேரில் சென்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தள்ளிவைக்க வேண்டும்

வங்கி அதிகாரி பணி, மத்திய உளவு துறை அதிகாரி பணி மற்றும் குரூப்–2 ஆகிய தேர்வுகளுக்கு விண்ணப்பம் செய்துள்ள சிலர் நிருபரிடம் கூறும்போது, ‘இந்த 3 தேர்வுகளுமே எங்களுக்கு முக்கியமானது. ஆனால், இந்த தேர்வுகள் அனைத்தும் ஒரே நாளில் வருவதால், எங்களால் எந்த தேர்வில் பங்கேற்பது என்று தெரியவில்லை. எனவே குரூப்–2 தேர்வினை தள்ளிவைக்க வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்துக்கு பல முறை கடிதம் மூலமாகவும், நேரிலும் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த பதிலும் வரவில்லை. நாங்கள் என்ன செய்வது என்றே தெரியவில்லை’ என்று வேதனையை தெரிவித்தனர்.

TNPTF திருப்பூர் வட்டார மாநகர செயற்குழு கூட்டம்



பணி நிரவலை பொறுத்த மட்டில் அந்தந்த ஒன்றியங்களிலேயே நிரவல் செய்யப்படும். மாற்று ஒன்றியத்திற்கு மாற்றும் திட்டம் எதுவும் தொடக்கக்கல்வித்துறையிடம் இல்லை-TNPTF


பணி நிரவலை பொறுத்த மட்டில் அந்தந்த ஒன்றியங்களிலேயே நிரவல் செய்யப்படும். மாற்று ஒன்றியத்திற்கு மாற்றும் திட்டம் எதுவும் தொடக்கக்கல்வித்துறையிடம் இல்லை. ஆசிரியர்கள் பாதிக்காதவாறு நிரவல் மேற்கொள்ளப்படும் என் இயக்குநர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகளிடம் உறுதியளித்துள்ளார். எனவே
ஆசிரியர்கள் அச்சமடையத் தேவையில்லை.

பதவி உயர்வு ஏற்கனவே நாம் வெளியிட்ட கருத்தின்படி 1.1.2013 முன்னுரிமையும் அதற்கு பின்பு 1.1.2014 முன்னுரிமையும் பின்பற்றப்படும். எனவே வதந்திகளை நம்ப வேண்டாம்-tnptf

Sunday, June 15, 2014

VAO tentative answer key

தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சை -2014-2015 பி.எட் சேர்க்கைகான விண்ணப்படிவம்

பொறியியல் தரவரிசை நாளை வெளியீடு

பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1 லட்சத்து 73 ஆயிரத்து 687 பேரின் தரவரிசைப் பட்டியல் நாளை(ஜூன் 16) வெளியிடப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் தர வரிசைப் பட்டியலை வெளியிட உள்ளார்.உடனடியாக அனைத்து விவரங்களும் www.annauniv.edutnea2014 இணைய தளத்தில் மாணவர்களின் பார்வைக்காக பதிவேற்றம் செய்யப்படும்.

Friday, June 13, 2014

ஏ.இ.ஓ.,க்களின் சம்பளத்தை மறுநிர்ணயம் செய்ய உத்தரவு

:உதவி துவக்கக் கல்வி அலுவலர்களின் (ஏ.இ.ஓ.,) சம்பளத்தை மறுநிர்ணயம் செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.துாத்துக்குடியைச் சேர்ந்த ஜேம்ஸ், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:ஏ.இ.ஓ.,வாக பணியாற்றிய நான், 2010 ஜனவரியில் ஓய்வு பெற்றேன். அலுவலகத்தில் மேற்பாற்வையாளர், என்னைவிட கூடுதல் சம்பளம் பெற்றார். அவருக்கு இணையாக சம்பளம் கேட்டு அரசுக்கு பலமுறை மனு அனுப்பினேன். 2011 ஜனவரியில் ஒருநபர் குழு பரிந்துரைப்படி, ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஊதியம் மறுநிர்ணயம் செய்தபோது, எங்களுக்கு செய்யப்படவில்லை

. ஏ.இ.ஓ., பதவி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையானது என்பது உண்மை இல்லை. எங்களுக்கு மேல் பணியிடம் கிடையாது. எனவே ஏ.இ.ஓ.,க்களுக்கு தனி சம்பள விகிதம் நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.நீதிபதி மகாதேவன் முன்னிலையில் மனு விசாரணைக்கு வந்தது. அவரது உத்தரவு:மேற்பார்வையாளர் சம்பளம் ஐகோர்ட் உத்தரவுப்படி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 'நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையான ஏ.இ.ஓ.,க்களுக்கு கூடுதல் சம்பளம் நிர்ணயிப்பதால், கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்' என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது ஒரு சிறப்பு நிலைப் பணி. இதற்கு பதவி உயர்வு கிடையாது. தமிழக அரசு 2011 அக்டோபரில் பிறப்பித்த உத்தரவில், 'ஏ.இ.ஓ., பணி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையானது இல்லை' என தெரிவித்துள்ளது. எனவே அவர்களுக்கு தனியாக சம்பளம் நிர்ணயம் செய்து இருக்க வேண்டும்.

தேர்வு நிலை பணிக்கான நோக்கத்தை தொழில்நுட்ப காரணம் கூறி மறுக்கக் கூடாது. எனவே அரசு உத்தரவு சட்ட விரோதமானது. நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் சம்பள நிர்ணயம் தொடர்பான உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஏ.இ.ஓ.,க்களுக்கு தனி சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

TET Special Result 2013-2014