இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, December 13, 2013

சிபிஎஸ்இ: 2015ல் வாரத்தில் ஆறு நாட்களும் பள்ளி இயங்கும்

் சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, வாரத்தில் 6 நாட்களும் பள்ளி இயங்கும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறையின்றி வாரத்தில் தொடர்ந்து 6 நாட்களும் பள்ளி இயக்கப்படும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்காக, வாரத்திற்கு சுமார் 45 மணி நேரம் வகுப்புகள் நடத்தப்படும். 2015ம் கல்வியாண்டு முதல் இது நடைமுறைப்படுத்தப்படும

். இது குறித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஒரு வருட சார்பான வழக்கறிஞர் வாய்தா வாங்கியதால் மீண்டும் இரட்டைப்பட்டம் ஜனவரி 2 க்கு ஒத்திவைப்பு


இன்று (13.12.2013 ​)சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் 69வது வழக்காக பிற்பகல் 1.10 மணியளவில் விசாரணைக்கு வந்தது.மேலும் அரசு தரப்பில் AFFIDAVIT தாக்கல் செய்தனர்.அரசு தரப்பு AFFIDAVIT க்கு
தேவையான தகவல்கள் திரட்ட வேண்டி ஒரு வருட சார்பாக வாதாடிய வழக்கறிஞர் திரு.சங்கரன் அவர்கள் 'வாய்தா ' வாங்கியதால் வழக்கு விசாரணை ஜனவரி 2 க்கு ஒத்திவைத்து நீதியரசர் உத்தரவு  பிறபித்தார்.

இதனால் வழக்கு இன்றும் முடியாமல் போனது.பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் பெறமுடியாமல் உள்ளனர்.மேலும் பல ஆசிரியர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திற்கு செல்ல முடியாமல் மன நிம்மதியின்றி தவித்து வருகின்றனர்.

Thursday, December 12, 2013

சி.பி.எஸ்.இ. 9, 11-ஆம் வகுப்புத் தேர்வு: திறந்த புத்தக தேர்வு முறைக்கு கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கீடு

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் 9, 11-ஆம் வகுப்புகளில் இந்த ஆண்டு திறந்த புத்தகத் தேர்வு முறை என்ற பிரிவு புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறது. வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஆண்டுத் தேர்வில் இந்தப் பிரிவுக்காக கூடுதலாக 30 நிமிஷங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என சி.பி.எஸ்.இ. சென்னை மண்டல அலுவலர் டி.டி.சுதர்சன ராவ் கூறினார். வெறுமனே மனப்பாடம் செய்யும் கல்விமுறைக்கு மாற்றாக மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலைத் தூண்டும் வகையில் திறந்த புத்தகத் தேர்வு முறையை சி.பி.எஸ்.இ. இந்த ஆண்டு அறிமுகம் செய்கிறது. ஒன்பதாம் வகுப்பில் அனைத்துப் பாடங்களிலும், பிளஸ் 1 வகுப்பில் புவியியல், பொருளாதாரம், உயிரியல் ஆகியப் பாடங்களிலும் இது அறிமுகம் செய்யப்படுகிறது.

திறந்த புத்தக தேர்வு முறை பிரிவுக்கு 10 மதிப்பெண் வழங்கப்படுகிறது. தேர்வின்போது இந்தப் பிரிவுக்கான பல பதில்கள் மாணவர்களிடம் வழங்கப்பட்டுவிடும். கேள்விகளுக்குத் தகுந்தபடி சரியான பதில்களை அவர்கள் எழுத வேண்டும். கேள்விகள் மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் வகையில் இடம்பெறும் என சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது. சென்னை மண்டலத்தில் 9, 11 ஆம் வகுப்புகளில் திறந்த புத்தக தேர்வு முறையை சுமார் 4 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என டி.டி.சுதர்சன ராவ் கூறினார்.

வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம்: பிளஸ் 1 வினாத்தாள் மாற்றம் தொடர்பாக பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. அமைப்பு செவ்வாய்க்கிழமை (டிச.10) சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதன் விவரம்: பிளஸ் 1 வகுப்பில் திறந்த புத்தக தேர்வு முறை அறிமுகம் செய்யப்படும் பாடங்களுக்கான தேர்வுகள் வழக்கமான முறையிலேயே நடைபெறும். இந்தப் பாடங்களில் திறந்த புத்தக தேர்வு முறை என்ற பிரிவு மட்டும் கூடுதலாக இடம்பெறும். அந்தப் பிரிவுக்கு தலா 10 மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என்பதால், அதற்கு ஏற்றவாறு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். இந்தப் பகுதிக்குரிய விடைகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வினாக்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்படும் என அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிளஸ் 1 வகுப்புக்கான புதிய வினாத்தாள் வடிவமைப்பும் இந்தச் சுற்றறிக்கையோடு இணைக்கப்பட்டுள்ளது. ஒன்பதாம் வகுப்புக்கும் இதேபோன்ற வினாத்தாள் வடிவமைப்பு விரைவில் அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த முறைக்கு கிடைக்கும் வரவேற்பு, அதன் பயன்பாடு ஆகியவற்றைப் பொருத்து பிற வகுப்புகளுக்கும் இது விரிவுப்படுத்தப்பட வேண்டும் பள்ளி முதல்வர்கள் தெரிவித்தனர்.

தவறாக அச்சிடப்பட்ட வினா: ஒரு மதிப்பெண்ணில் வெற்றி வாய்ப்பை இழந்த தேர்வர் கண்ணீர்

ஆசிரியர் தகுதித் தேர்வில், ஒரே கேள்வி எண்ணில் உள்ள தமிழ் மற்றும் ஆங்கில வழி கேள்விகள் வேறுபட்டு இருப்பதுடன், இதற்கான பதில்களும் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது புதிய புகார் எழுந்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில், ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த ஆகஸ்ட் 17 மற்றும் 18ம் தேதி நடந்தது. இதில் 6.60 லட்சம் பேர் பங்கேற்றனர். டி.இ.டி., தேர்வு முடிவு நவ., 5 ம் தேதி வெளியிடப்பட்டது.

தேர்வில், 4.09 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். சரியான பல பதில்களுக்கு மதிப்பெண் தரவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியத்தில் புகார்கள் குவிந்தன. இந்நிலையில் தற்போது இரண்டாம் தாள் சமூக அறிவியல் தேர்வில்கேள்வித்தாளில் தமிழ் வழியில் ஒரு மாதிரியாகவும், ஆங்கில வழியில் ஒரு மாதிரியாகவும், கேள்வியே தவறாக கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட கோவை தேர்வர் விஜயலட்சுமி கூறுகையில், "" டி.இ.டி., இரண்டாம் தாள் சமூக அறிவியல் தேர்வில், " பி' வரிசை கேள்வித்தாளில் 113 வது கேள்வியில் "மனிதன் மண்வளத்தை பாதுகாக்க எடுக்கும் முயற்சி ' என்று கேட்கப்பட்டுள்ளது. அதே கேள்வி ஆங்கில வழியில், "மண் அரிமானத்தை தடுக்க மனிதன் மேற்கொள்ள வேண்டிய முயற்சி' என்று கேட்கப்பட்டுள்ளது. மண்வளபாதுகாப்பு என்பதை மண் அரிமானத்துடன் ஒப்பிட இயலாது, இரண்டும் வேறு அர்த்தங்களை கொண்டுள்ளது

. மேலும், இக்கேள்விக்கான பதில், "ஆப்சன் பி' "வேளாண்மை செய்தல்' என்பதற்கு பதிலாக "ஆப்சன் டி' "தாவரங்களை வளர்த்தல்' என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தவறாக வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சரியான பதில் நான்கு மற்றும் ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடபுத்தகத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்தும் தெளிவாக ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பினோம். மேலும் நேரடியாக சென்று அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பித்தோம். இருந்தும், ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. தற்போது, 89 மதிப்பெண் பெற்றுள்ளேன். ஒரு மதிப்பெண்ணில் என் வாழ்க்கை பாதித்துள்ளது. என்னை போன்று நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்,'' என்றார்.

தேர்வு பணியில் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களையும் சேர்க்க திட்டம்

   பொது தேர்வுப் பணியில், அரசு நடுநிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியரையும் சேர்க்க, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வுப் பணியில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும், பட்டதாரி, முதுகலை ஆசிரியர் மட்டும் ஈடுபடுத்தப்படுகின்றனர். அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும், பட்டதாரி ஆசிரியர் சேர்க்கப்படுவதில்லை. ஒரே தகுதி உடைய பட்டதாரி ஆசிரியரில், பள்ளி கல்வி துறையைச் சேர்ந்தவர்களை, தேர்வு பணியில் ஈடுபடுத்துவதும், தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த ஆசிரியரை, கண்டுகொள்ளாத நிலையும், இத்தனை ஆண்டுகளாக இருந்து வருகிறது.

"இந்த நிலையை மாற்றி, இரு துறைகளிலும் உள்ள பட்டதாரி ஆசிரியருக்கும், தேர்வுப்பணி வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு போன்ற அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், வரும் பொது தேர்வில், நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியரையும், தேர்வுப் பணியில் ஈடுபடுத்த, தேர்வுத் துறை முடிவு செய்திருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Wednesday, December 11, 2013

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்தான் மாணவர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம

கடந்த 1963ஆம் ஆண்டு 20 பள்ளிகளுடன் கேந்திரிய வித்யாலயா சங்கேதன் தொடங்கப்பட்டது. இப்போது இந்த அமைப்பின் கீழ் நாடு முழுவதும் 1,100-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். சென்னை மண்டலத்தில் உள்ள பள்ளிகளில் மட்டும் 51 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த அமைப்புக்கு எனது வாழ்த்துகள். மாணவர்களிடம் பெரிய தாக்கத்தை ஆசிரியர்கள், குறிப்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஏற்படுத்த முடியும். ராமேசுவரம் தொடக்கப்பள்ளியில் எனது அறிவியல் ஆசிரியர் சிவசுப்பிரமணிய ஐயர் பறவைகள் குறித்து பாடம் நடத்தினர்.

அப்போது பறவைகள் எவ்வாறு பறக்கின்றன என்பதை வகுப்பறையில் விளக்கியதோடு, கடற்கரைக்கு அழைத்துச்சென்று எங்களை நேரடியாகவும் பார்க்கச் செய்தார். சிறுவனாக இருந்த என் மனதில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எனக்கு விமானியாக வேண்டும் என்ற ஆசை வந்தது. அடுத்து அவரிடம், "விமானியாக என்ன படிக்க வேண்டும்?' என்றுதான் கேட்டேன். அவரது ஆலோசனைப்படியே, பட்டப்படிப்பில் இயற்பியல் படித்தேன். அதன்பிறகு ஏரோநாட்டிக்கல் பொறியியல் படிப்பும் படித்தேன். நான் ராக்கெட் என்ஜினியராக, விண்வெளி விஞ்ஞானியாக பணியாற்றியிருந்தாலும், விமானியாக வேண்டும் என்கிற கனவு அவரது வகுப்பில்தான் உருவானது.

அந்தக் கனவை விடாமுயற்சியோடு பின்தொடர்ந்தேன். ஒருதுறையில் சிறந்து விளங்குவது என்பது விபத்தல்ல. அது ஒரு தொடர் முயற்சி. அனைத்திலும் சிறந்துவிளங்க வேண்டும் என்பது ஒரு கலாசாரமாகவே மாற வேண்டும். இந்த கலாசாரத்தை ஆசிரியர்கள்தான் மாணவர்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும், என்றார் அவர்.

பள்ளிகளில் வெளி ஆட்கள் நடமாட்டம்: தடுத்து நிறுத்த கல்வித்துறை உத்தரவு

பள்ளி வளாகங்களில், வெளி ஆட்கள் நடமாட்டம் இருப்பதாக, தகவல்கள் வருகின்றன. இதை உடனடியாக தடுத்து நிறுத்த, தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டு உள்ளார். அவரது அறிக்கை: 'பள்ளி கல்வித் துறையின் கீழ் இயங்கும், அனைத்து வகை பள்ளிகளிலும், பள்ளி வளாகத்தில், மாணவர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' என, ஏற்கனவே, தலைமை ஆசிரியர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனினும், ஒரு சில இடங்களில், பள்ளி வளாகங்களில், வெளி ஆட்கள் நடமாட்டம் இருப்பதாகவும், பள்ளிகளில் இருந்து, பொருட்கள் காணாமல் போவதாகவும், பள்ளியில் உள்ள பொருட்கள், வெளி ஆட்களால், சேதப்படுத்தப்படுவதாகவும், இயக்குனரகத்திற்கு, தகவல்கள் வந்துள்ளன. இதுபோன்ற போக்கை, உடனடியாக தடுத்து நிறுத்த, தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர் பாதுகாப்பு மற்றும் பள்ளியில் உள்ள நலதிட்ட பொருட்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பள்ளி வளாகத்திற்குள், வெளி ஆட்கள் நடமாட்டத்தை, முற்றிலும் தடுக்க வேண்டும். பள்ளிகளில், போதிய பாதுகாப்பு இருப்பதை, முதன்மை கல்வி அலுவலர்கள், உறுதி செய்ய வேண்டும். ஏதாவது, குறைபாடு நடந்தால், அதற்கான முழு பொறுப்பையும், தலைமை ஆசிரியரே, ஏற்க நேரிடும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களுக்கு சம்பளம் தர மத்திய அரசு மறுப்பு தமிழக கல்வி துறை அவசர ஆலோசனை

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் (எஸ்.எஸ்.ஏ.,) பணியாற்றும், வட்டார வள மைய ஆசிரியர், 4,500 பேருக்கு, சம்பளமாக, 148 கோடி ரூபாய் வழங்க, மத்திய அரசு மறுத்துள்ளது. இதனால், இந்த ஆசிரியரை, மாநில அரசின் சம்பள கணக்கிற்கு மாற்றுவது குறித்து, கல்வித் துறை அவசரமாக ஆலோசித்து வருகிறது. அனைவருக்கும் கல்வி திட்டம், மத்திய இடைநிலை கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) உள்ளிட்ட சில திட்டங்களுக்கு, மத்திய அரசு நிதி உதவி அளித்து வருகிறது.

ஆசிரியர் சம்பளம் உள்ளிட்ட, பல திட்டங்களுக்கு, ஆண்டுதோறும் நிதி வழங்குகிறது. இதில், எஸ்.எஸ்.ஏ., கீழ், ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, பயிற்சி அளிக்கும் பணியில், வட்டார வள மைய ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வட்டார வாரியாக, 4,500 பேர், பணிபுரிந்து வருகின்றனர். பட்டதாரி ஆசிரியர் நிலையில் பணியாற்றி வரும் இவர்களுக்கு, மத்திய அரசு நிதியில் இருந்து தான், சம்பளம் வழங்கப்படுகிறது. 'இந்த வகையில், 148 கோடி ரூபாய் தர முடியாது' என, மத்திய அரசு கைவிரித்து விட்டதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால், 4,500 ஆசிரியருக்கும், இம்மாதம் சம்பளம் தர முடியாத நிலை உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், 148 கோடி ரூபாய் நிதியை, தமிழக அரசு விடுவிக்கக் கோரி, எஸ்.எஸ்.ஏ., அதிகாரிகள், கடிதம் எழுதி உள்ளதாகவும், துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரச்னையை சரி செய்யும் வகையில், மத்திய அரசு சம்பள பட்டியலில் உள்ள ஆசிரியர் அனைவரையும், மாநில சம்பள கணக்கிற்கு மாற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு - முடிவினை வெளியிட அனுமதி

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று  11.12.13    புதன்கிழமை     மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள் சுதாகர், வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்.விசாரணைக்கு வந்தது    நீதியரசர்கள் தேர்வு முடிவினை வெளியிட அனுமதி  அளித்தனர்.              

அதே சமயத்தில் வழக்கு தொடுத்த விஜயலட்சுமி மற்றும் ஆண்டனி கிளாரா ஆகியோருக்கு இரு பணியிடங்களை ஒதுக்கிவைக்கவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரிவான செய்தி பின்னர்  வெளியிடப்படும்

Ele dir pro 27979.இந்திய செஞ்சுலுவை சங்கம் அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் தொடங்குதல் சார்பு

Tuesday, December 10, 2013

அரசு ஊழியர் மகள் ஓய்வூதியம்: தமிழக அரசு விளக்கம்

அரசு ஊழியரின் மகளுக்கான குடும்ப ஓய்வூதியம் தொடர்பாக, தமிழக அரசு தெளிவுபடுத்தி உள்ளது. தமிழக அரசு ஊழியர்களின், திருமணமாகாத, விவாகரத்தான, விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதற்கும், குடும்ப ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக, 2011ல் அரசாணை வெளியிடப்பட்டது. அதில், யார் யார் தகுதியுடையவர் என்பதை தெளிவுபடுத்தும்படி, தமிழக அரசிற்கு, சென்னை மாநகராட்சி கமிஷனர் கடிதம் எழுதினார். இந்த கடிதத்தின் அடிப்படையில், அரசு ஊழியர்களின் திருமணமாகாத மகள், அரசாணை வெளியிடப்பட்ட நாளிற்கு முன், 25 வயது முடிவடைந்து, குடும்ப ஓய்வூதியம் நிறுத்தப்பட்ட நபர்களுக்கு, அரசாணை வெளியிடப்பட்ட நாள் முதல் வழங்கலாம் என, கூறப்பட்டுள்ளது

. மேலும், அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு, நிபந்தனைக்கு உட்பட்டு, வழங்க வேண்டும் என்பது உட்பட, ஏழு இனங்களுக்கு அரசு விளக்கம் அளித்து, அதற்கான அரசாணை நேற்று, நிதித்துறை சார்பில் வெளியிடப்பட்டு உள்ளது.

காலியிடம் நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை: விரைவில் முதுகலை ஆசிரியர் கவுன்சிலிங் ?

  2014-15ம் கல்வியாண்டின் துவக்கத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 5 ஆயிரம் முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப, அடுத்த வாரம் கவுன்சிலிங் அறிவிக்கப்படும், என கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். தமிழக அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அனைத்து பாடப்பிரிவிலும், 5 ஆயிரம் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 2013-14 கல்வியாண்டின் பொதுத்தேர்வுக்கு முன்பாகவே காலியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளத

ு. ஏற்கனவே, முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதியான (பட்டதாரி ஆசிரியர்) பட்டியல் தயாரித்த நிலையில், தற்போது, அப்பட்டியலில் திருத்தம் இருந்தால், அவற்றை உடனே சரி செய்து, அனுப்ப சி.இ.ஓ.,க்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இப்பட்டியல் இறுதி செய்த பின், அடுத்த வாரத்தில் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு "கவுன்சிலிங்' தேதி அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரி ஒருவர் கூறுகையில், ""மாநிலம் முழுவதும் உள்ள 5 ஆயிரம் காலியிடத்தில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை, பட்டதாரியில் இருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும்.

எஞ்சிய இடங்கள் டி.ஆர்.பி.,யில் தேர்வானவர்களை கொண்டு நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிகிறது. வழக்கு போன்ற பிரச்னையால் 2 ஆயிரம் காலியிடம் நிரப்புவதில் சிக்கல் இருந்தால், தள்ளிப்போக வாய்ப்புள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் ஆலோசனைப்படி, 2014-15 கல்வியாண்டின் துவக்கத்திலேயே அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பெரும்பாலும் முதுகலை ஆசிரியர் பணியிடம் காலியாக இருக்கக்கூடாது என்ற அடிப்படை யில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது,'' என்றார்.

15 லட்சம் மாணவர்களுக்கு தேர்வு கட்டண சலுகை அளிப்பு

   பொது தேர்வு எழுத உள்ள, 17 லட்சம் பேரில், 90 சதவீத மாணவ, மாணவியர், தமிழ் வழியில் படிப்பதால், அவர்கள் அனைவருக்கும், தேர்வு கட்டணத்தில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மார்ச், ஏப்ரலில், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடக்கிறது. பத்தாம் வகுப்பு தேர்வை, 9 லட்சம் பேரும், பிளஸ் 2 தேர்வை, 8 லட்சம் பேரும் எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த, சரியான புள்ளி விவரம், இம்மாத இறுதியிலோ அல்லது, ஜனவரி, முதல் வாரத்தில் தெரிந்துவிடும்.

எனினும், 17 லட்சம் பேர், கண்டிப்பாக எழுதுவர். இதில், 90 சதவீதம் பேர், தமிழ் வழியில் படித்து, தேர்வை எழுத உள்ளனர். அதன்படி, 15.3 லட்சம் மாணவர், தமிழ் வழியில் படிப்பவர்களாக இருப்பர் என்றும், இவர்கள் அனைவருக்கும், தேர்வு கட்டணத்தில் இருந்து, விலக்கு அளிக்கப்படுகிறது என்றும், தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கட்டணத்தை, தமிழக அரசு, தேர்வுத் துறைக்கு வழங்கி விடுகிறது. பிளஸ் 2 தேர்வர், 225 ரூபாயும், பத்தாம் வகுப்பு தேர்வர், 125 ரூபாயும், தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஆங்கில வழியில் படிக்கும் மாணவ, மாணவியர் மட்டும், இந்த கட்டணத்தை செலுத்தி உள்ளனர். மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், ஆங்கில வழியில் படிக்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை, 1.5 லட்சத்திற்குள் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

குரூப்–4 தேர்வு முடிவு ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

குரூப்–4 தேர்வு தமிழ்நாட்டில் காலியாக உள்ள 3 ஆயிரத்து 531 இளநிலை உதவியாளர் பணியிடங்கள், 1738 தட்டச்சர் பணியிடங்கள், 242 சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் உள்பட மொத்தம் 5 ஆயிரத்து 556 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக குரூப்–4 தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் 25–ந்தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 12 லட்சத்து 21 ஆயிரத்து 167 பேர் எழுதினார்கள். குரூப்– 4 தேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீத கிருஷ்ணனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–

முடிவு அடுத்த மாதம் வெளியாகும் குரூப்–4 தேர்வை நிறைய மாணவர்கள் எழுதியதால் அதை வெளியிடுவதில் சற்று தாமதம் ஏற்படுகிறது. அதில் பெரும்பாலான வேலைகள் முடிந்துவிட்டன. இருப்பினும் அனைத்தையும் மீண்டும் சரிபார்க்கும் பணி உள்ளது. எனவே இந்த மாத இறுதி அல்லது ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வெளியிட ஏற்பாடு நடந்து வருகிறது.

குரூப்–1 தேர்வு மேலும் காலியாக கிடக்கும் குரூப்– 1 அதிகாரிகளின் பணியிடங்களை நிரப்ப புதிதாக குரூப்–1 தேர்வு நடத்த உள்ளோம். அதற்கான விவரங்கள் துறைவாரியாக சேகரிப்பட்டு வருகிறது. பெரும்பாலான துறைகளில் இருந்து காலிப்பணியிடங்கள் விவரம் வந்துவிட்டது. சில துகைளில் இருந்து மட்டும் இன்னும் வரவில்லை. எப்படியும் குரூப்–1 தேர்வுக்கான விவரங்கள் அடங்கிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். குரூப்–2 தேர்வும் நடத்தப்பட்டு அதன் விடைத்தாள்களும் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.

“நெட்” தகுதித் தேர்வுக்கு ஆன்லைனில் ஹால் டிக்கெட்

கலை பட்டதாரிகளுக்கான நெட் தகுதித் தேர்வை பல்கலைக் கழக மானியக்குழு (யு.ஜி.சி.) நடத்துகிறது. இதே போல் அறிவியல், கணித பட்டதாரி களுக்கான நெட் தகுதித் தேர்வு சி.எஸ்.ஐ.ஆர். எனப்படும் மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலால் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு வருகிற 22-ம் தேதி சென்னை உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த வர்களுக்கு ஆன்லைனிலேயே ஹால்டிக்கெட் வழங்கப்படுகிறது.

ஆன்லைன் ஹால்டிக்கெட்டை www.csirhrdg.res.in என்ற இணைய தளத்தில் செவ்வாய்க்கிழமை (இன்று) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் ஹால்டிக்கெட்டில் விண்ணப்பதாரரின் புகைப்படம் தெளிவாக இல்லாவிட்டால். அத்தகைய விண்ணப்பதாரர்கள் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்ப டங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றை தேர்வு மையத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்று சி.எஸ்.ஐ.ஆர். அறிவித்துள்ளது.

TAMILNADU TEXT BOOKS - Android Apps on Google Play

சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வு

டீலர்களுக்கான கமிஷன் தொகை அதிகரித்துள்ளதால் சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.3.46 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. டீலர்களுக்கான கமிஷன் தொகையை 9 சதவீதமாக அதிகரித்துள்ளதால் இந்த விலை ஏற்றம் என மத்திய எண்ணெய் வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விலை ஏற்றம் இன்று முதலே நடைமுறைக்கு வருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

இதன்படி டில்லியில் தற்போது ரூ.410.50 விற்பனையாகும் 14.2 கிலோ சிலிண்டரின் விலை இனி ரூ.413.96-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 5கிலோ காஸ் சிலிண்டர் விலையும் ரூ.1.73 காசுகள் உயர்ந்துள்ளது.