இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, March 13, 2018

புதிய வடிவில் பாடபுத்தகம்

பக்கத்துக்கு பக்கம் வண்ண படங்கள், சித்திரங்கள் மற்றும், க்யூ.ஆர்., கோடு என, புதுவிதமாக, தமிழக பாடபுத்தகம் தயாராகியுள்ளது. புத்தகத்தில் பாடமாக மட்டுமின்றி, மொபைல் போனில், 'வீடியோ' வாயிலாகவும் படிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 13 ஆண்டு களுக்கு பின், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கும், ஏழு ஆண்டுகளுக்கு பின், ஒன்றாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலும், பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது.

இந்த ஆண்டு அமல்

புதிய பாடத்திட்டம், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கு சவால் விடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.ஆந்திரா, கேரளா, குஜராத், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களின் பாடத்திட்டத்தையும், லண்டன், 'கேம்பிரிட்ஜ்' பாடத்திட்டத்தையும் கலந்து தயாரிக்கப்பட்டு உள்ளது.

புதிய பாடத்திட்டத்துக்கான புத்தகங்கள், பல உயர்கல்வி நிறுவன பேராசிரியர்களின், நேரடி மேற்பார்வையில் உருவாகி வருகின்றன.முதற்கட்டமாக, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அமலுக்கு வரவுள்ளது.

அதேநேரம், இரண்டு, மூன்று, நான்கு வகுப்புகளுக்கான பாட புத்தகங்களும் தயாராகி உள்ளன. இந்த பாட புத்தகங்களில், வண்ண படங்கள், சித்திரங்கள், பார்கோடு என, பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு பக்கத்திலும், பாடங்கள் அருகே, அதற்கான படங்களை வீடியோவாக பார்க்க, டிஜிட்டல் குறியீடு மற்றும் க்யூ.ஆர்., கோடு குறிக்கப்பட்டுள்ளது. இந்த குறியீடுகளை, மொபைல் போன், 'ஆப்' பயன்படுத்தி, ஸ்கேன் செய்து வீடியோவாக பார்க்கலாம்.

செய்முறை

அதேபோல், பாட புத்த கத்தின் முடிவில், 'ஆக்டிவிட்டீஸ்' என்ற, செய்முறை இடம் பெற்றுள்ளது.இந்த செய்முறையை பயன்படுத்தி, வினாக்களை கேட்கும் முறை நடைமுறைக்கு வருகிறது. பாடங்களில் இடம் பெற்றுள்ள, பெரும்பாலான அம்சங்களில், வண்ண புகைப்படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ரோபாட்டிக், ரசாயன, வேதியியல், சோலார் பேமிலி என்ற சூரிய குடும்பம் குறித்து, மூன்றாம் வகுப்பில் இருந்தே, பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

மொத்தத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் பின்பற்றக்கூடிய, மத்திய அரசின், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,யின் புத்தகங்களுக்கு சவால் விடுக்கும் வகையில், தமிழகத்தின் புதிய பாடத்திட்ட புத்தகங்கள் அமைந்துள்ளன.

Sunday, March 11, 2018

அரசு பள்ளிகளில் திறந்த வெளி கிணறுகள்:பாதுகாப்பு உறுதிப்படுத்த அறிவுறுத்தல்


அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் திறந்த வெளிக்கிணறுகள் மற்றும் மின் இணைப்பு செல்லும் பகுதிகள் பாதுகாப்பான நிலையில் இருப்பதை, அதிகாரிகள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.அரசு, அரசு உதவிபெறும், அனைத்து தனியார் பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களுக்கு, பாதுகாப்பான சூழல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள, கல்வித்துறை அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

தொடக்கக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களைக் கொண்டு குழு அமைக்க வேண்டும்.இக்குழுவினர், அனைத்து பள்ளிகளிலும், திறந்த வெளிக் கிணறுகள், மின் இணைப்பு செல்லும் பகுதி, கழிவுநீர் கால்வாய் குழிகள், மூடிய நிலையிலும், குழந்தைகளுக்கு ஆபத்து விளைவிக்காத வகையில் அமைந்திருப்பதை உறுதிபடுத்திக்கொள்ள, ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிக்கு அருகில் உள்ள பகுதிகளையும் பார்வையிட்டு, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். ஆய்வின் போது, பாதுகாப்பில்லாத வகையில், கழிவுநீர் தொட்டிகள், மின் இணைப்புகள், கிணறுகள் பள்ளிகளில் காணப்பட்டால், முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது

Saturday, March 10, 2018

பூலுவபட்டி ஆண்டுவிழா செய்தி தி இந்து&தினமலர்


மூன்றாம் பருவ தேர்வு:அட்டவணை வெளியீடு


ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, மூன்றாம் பருவத்தேர்வு கால அட்டவணையை அரசு வெளியிட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளுக்கும், ஏப்., 9ம்தேதி தேர்வுகள் ஆரம்பமாகிறது. துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், தேர்வுகள், ஏப்., 9ம்தேதி துவங்கி, 17ம்தேதி வரையும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில், 19ம்தேதி வரையும் நடக்கிறது.துவக்க, நடுநிலையில், 1, 3, 5, 7ம் வகுப்புகளுக்கு, காலை, 10:00 மணி முதல் 12:30 மணி, 2, 4, 6, 8ம் வகுப்புகளுக்கு, மதியம், 2:00 மணி முதல் 4:30 மணி வரை, உயர்நிலை மற்றும் மேல்நிலையில், 6, 7, 8 மற்றும் 9ம் வகுப்புகளுக்கு, மதியம், 1:30 மணி முதல் 4:00 மணி வரை தேர்வு நடக்கிறது.

தென்னக ரயில்வே அறிவிப்பு

இனி முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை வேறு நபரின் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம்: ரயில்வே அறிவிப்பு

   தவிர்க்க முடியாத காரணத்திற்காக ரயிலில் பயணம் செய்ய முடியாமல் போனால், முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை வேறு நபரின் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. உலகிலேயே 4-வது மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்காக இந்திய ரயில்வே உள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் இந்திய ரயில்வேயின் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பிட்ட நாளில் பயணிப்பதற்காக முன்பதிவு செய்யக் கூடிய வசதியும் இந்திய ரயில்வேயில் உள்ளது. 

இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் முன்பதிவு செய்து இருக்கை உறுதியான பின்பும் நம்மால் பயணம் மேற்கொள்ள முடியவில்லை என்றால் அதனை வேறு ஒருவருக்கு மாற்றிக்கொடுக்கும் வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இந்திய ரயில்வேயால் அங்கீகரிக்கப்பட்டு முக்கிய ரயில் நிலையங்களில் பணியாற்றும் தலைமை முன்பதிவு மேற்பார்வையாளர்கள் மூலம், வேறு ஒருவருக்கு உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டை மாற்றிக்கொள்ளலாம்.

முன்பதிவு செய்தவர் பெயரை மாற்றுவதற்கான வழிமுறைகளும் நிபந்தனைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அரசு ஊழியராக இருந்தால் பணியின் காரணமாக செல்லும் போது, 24 மணி நேரம் முன்பாக எழுத்துப்பூர்வமாக விண்ணப்பித்து பெயரை மாற்றிக் கொள்ளலாம். இதே போல் பயணிகளும் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பாக தமது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தனது பெயரில் பதிவு செய்த ரயில் டிக்கெட்டை மாற்றிக் கொள்ள கோரிக்கை விடுக்கலாம்.

மாணவர்கள் பெயரில் பள்ளி, கல்லூரி நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட டிக்கெட்டுகளையும் வேறு மாணவர்கள் பெயரில் 48 மணி நேரம் முன்பாக மாற்றிக் கொள்ளலாம். தேசிய மாணவர் படையினருக்கும் இந்த வசதி அளிக்கப்படுகிறது. இதேபோல் திருமண நிகழ்ச்சிக்காக மொத்தமாக ரயில் பயணம் செய்பவர்கள், 24 மணி நேரத்துக்கு முன்பாக கடிதம் எழுதி கொடுத்து இந்த வாய்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Friday, March 09, 2018

அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் விரைவில் ஆசிரியர்கள் நியமனம்


அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை விரைவில் நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வின் மூலம் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன.

இப்போதைய நிலையில் சென்னை மாவட்டம் தவிர்த்து 31 மாவட்டங்களில் 3,170 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. அதேநேரத்தில் சில பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் 2 ஆயிரத்து 533 பணியிடங்கள் உபரியாக உள்ளதாக கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் தெரிய வந்தது. இதில் ஆயிரத்து 992 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 541 பேர் மட்டுமே பணிபுரிய வேண்டும்.

அந்த அடிப்படையில் உபரியாக உள்ள ஆயிரத்து 992 ஆசிரியர்கள், காலியாக உள்ள இடங்களில் விரைவில் பணியமர்த்தப்படுவர். அதன்படி 3 ஆயிரத்து 170 பணியிடங்களில் ஆயிரத்து 178 ஆக காலிப்பணியிடங்கள் குறையும். அதேபோல் சில பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் மூலம் 840 புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மொத்தம் 2 ஆயிரத்து 18 பணியிடங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். இத்தகவலை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளி கோடை விடுமுறை 44 நாட்களாக உயர்வு


தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ஏப்ரல், 20க்குள் தேர்வுகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், கோடை விடுமுறை, 44 நாட்களாக நீட்டிக்கப்படுகிறது.தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 1ல் துவங்கியது; ஏப்., 6ல் முடிகிறது. மார்ச், 7ல் துவங்கிய, பிளஸ் 1 தேர்வு, ஏப்., 16ல் முடிகிறது.

மார்ச், 16ல் துவங்கவுள்ள, 10ம் வகுப்பு தேர்வு, ஏப்., 20ல் முடிகிறது. பொது தேர்வு அல்லாத மற்ற, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஏப்., 20க்குள் தேர்வுகளை முடிக்க, உத்தரவிடப்பட்டுள்ளது. விடுப்பு நாட்கள்: இதையடுத்து, ஏப்., 21 முதல், பள்ளிக்கு விடுமுறை விடப்படுகிறது. அடுத்த கல்வி ஆண்டு, ஜூன், 1, வெள்ளிக்கிழமை துவங்குகிறது. அன்று வார இறுதி நாளாக இருப்பதால், சனி, ஞாயிறு சேர்த்து, கோடை விடுமுறையை, ஜூன், 3 வரை நீட்டிக்க, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி அளித்ததும், முறையான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

வழக்கமாக ஜூன், 1ம் தேதி, வார வேலைநாளாக இருந்தால், அன்றே பள்ளிகள் திறக்கப்படும். இந்த முறை வார இறுதி நாளாக இருப்பதால், சனி, ஞாயிறை சேர்த்து, ஜூன், 3 வரை விடுமுறையை நீட்டிக்கப்பட உள்ளது. வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு, 31 நாட்கள் தான் விடுமுறை கிடைக்கும். இந்தாண்டு, 44 நாட்கள் வரை விடுமுறை கிடைக்க உள்ளது.கடந்த ஆண்டு வரை, தொடக்க பள்ளிகள், ஏப்ரல், 30 வரை இயங்கின. நடப்பு கல்வி ஆண்டில், தொடக்க பள்ளி வேலை நாட்களை, 220 நாளில் இருந்து, 210 நாட்களாக, தமிழக அரசு குறைத்துள்ளது. இதனால், கூடுதலாக, 10 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

Tuesday, March 06, 2018

13ம் தேதி தேசிய செயற்குழு கூட்டம் தமிழக ஆசிரியர்கள் டெல்லி பயணம்


டெல்லியில் வரும் 13ம் தேதி நடக்கும் ஆசிரியர்களுக்கான தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்த 8 ஆசிரியர் சங்கங்கள் செல்கின்றன. இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசிய அளவிலான செயற்குழு கூட்டம் 13ம் தேதி டெல்லியில் நடக்கிறது.

அதில், 7வது தேசிய மாநாடு தயாரிப்புக் கூட்டம், தேசிய அளவிலான ஆசிரியர்களின் பிரச்னை, அவற்றை தீர்ப்பதற்கு வேண்டிய இயக்க செயல்பாடுகள், 2018-19ம் ஆண்டுக் கான திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதம் நடக்க உள்ளது. இந்திய பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பில் சேர்ந்துள்ள தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம், தமிழ்நாடு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தை சேர்ந்த முக்கியப் பிரதிநிதிகள் டெல்லியில் நடக்க உள்ள செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

பிளஸ் 1 தேர்வு மே 30ல், 'ரிசல்ட்'


பிளஸ் 1 தேர்வு முடிவுகள், மே, 30ல் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக பாடத்திட்டத்தில், இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கு பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல், ஒவ்வொரு பாடத்துக்கும், 100 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செய்முறை தேர்வு மற்றும் அகமதிப்பீட்டு விதிகளும் மாற்றப்பட்டுள்ளன.புதிய விதிகளின்படி, தமிழகம், புதுச்சேரியில், பிளஸ் 1 பொது தேர்வு, இன்று துவங்குகிறது. இதில், 8.61 லட்சம் மாணவர்களும், 1,753 தனித்தேர்வர்களும் பங்கேற்கின்றனர். இதற்காக, தமிழகம், புதுச்சேரியில், 2,795 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தேர்வு முடிவுகள், மே, 30ல் வெளியாகும் என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Saturday, March 03, 2018

TNPTF மாநில தேர்தல்

☀【T】【N】【P】【T】【F】☀

〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗

*நாளை புதுகையில் 12-வது மாநிலத் தேர்தல்*

https://tnptfvizhudhugal.blogspot.in/2018/03/12.html?m=1

*உரிமையது பறிபோனால் குரலெழுப்பத்  தயங்காதே!*

*உரியதை மீட்கும்வரை கரமுயர்த்த மறவாதே!*

என்று ஆசிரிய இயக்க வரலாற்றில் தனிப்பெரும் உரிமை மீட்புப் போராளிப் பாசறையாகத் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பது,

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி!*

*☀மாஸ்டர்.வா.ராமுண்ணி*யின் வழியில், சமரசமற்ற போராளிகளால் உதித்தபோதே போராட்டக் களத்தில் குதித்திட்ட பேரியக்கத்தின் இயக்கமானது,

☀அன்றிலிருந்து இன்று வரை ஆசிரியர் நலன் - மாணவர் நலன் - சமூக நலன் சார்ந்த உரிமைகளை மீட்டெடுக்கும் களத்தில் அதிகார மமதைகளை உடைத்தெறிந்து, ஆணவச் செருக்குகளைத் தகர்த்தெறிந்து, தேவையெனில் கூட்டியக்கங்களையும் கட்டமைத்து கோரிக்கைகளை வென்றெடுத்தே வந்துள்ளது.

*☀இயங்கும் இயக்கத்தின் தனிப்பெரும் இயக்குவிசை என்பது உறுப்பினர்களின் உணர்வு வேட்கையை அடிப்படையாகக் கொண்டதே.*

☀ஆம்! *வரலாறு என்றும் தனியொருவனுக்கு உரியதல்ல!*

☀தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வரலாறும் அத்தகைய சீர்மை மிகுந்ததே!

☀அச்சீர்மையைக் குலையவிடாது கொண்டு சென்றுகொண்டிருக்கும் தலையாயப் பொறுப்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் போர்ப்படைத் தளபதிகளாக பணியமர்த்தப்படும் பொறுப்பாளர்களுக்கு உண்டு.

☀பணிக்கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிக்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் போர்ப்படைத் தளபதிகளாவோர், பணியில் உள்ள வீர வேங்கைகளேயாம்!

☀'தானைத் தலைவன்!', 'அழியும் வரை அரசன்!', 'நானே ராஜா! நானே மந்திரி!' என்பன போன்ற ஏகாதிபத்திய ஏகத்தலைமைத்துவம் ஏதுமின்றியே, இங்கு தலைமைப் பொறுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

☀இத்தகைய இலக்கணங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டதால் தான் *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி* என்பது அன்றிலிருந்து இன்றுவரை தலைமையால் அடையாளப்படுத்தப்படாது *TNPTF* என்று தனக்குத் தான் மட்டுமே அடையாளமென இயங்கிக் கொண்டிருக்கிறது.

_⚡இடைநிலை ஆசிரியர் ஊதிய உரிமைப் பறிப்பு!_

_⚡ஓய்வூதிய உரிமைப் பறிப்பு!_

_⚡பொதுக் கல்விக்கான மாநிலப் பொறுப்புத் துறப்பு!_

_⚡கல்வியை வணிகமாக்கி காவி நிறமேற்றும் வஞ்சகக் கொதிப்பு!_

உள்ளிட்ட இன்னல்கள் சூழ்ந்துள்ள காலகட்டத்தில்,

☀இயக்க உறுப்பினர்களை வலுவூட்டி, இயக்கத்தின் இயக்கத்தை மெருகேற்றி, பறித்த உரிமைகளை மீட்டெடுக்கவும், இருக்கும் உரிமைகளைப் பறிக்கவிடாது காக்கவும் வல்ல அடுத்த கட்ட தொடர் இயக்கத்திற்கான தலைமைப் பொறுப்பாளர்களைத் தெரிவு செய்யும் தேர்தல்கள் வட்டார - நகர - மாவட்டக் கிளைகளைத் தொடர்ந்து உச்ச நிலையான மாநிலத் தேர்தலை எட்டியுள்ளது.

☀ஆம். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அடுத்த கட்ட நகர்வுகளுக்கான தலைமைப் பொறுப்புகளை உடனேற்று தன் இயக்கப் பயணத்தைத் தொடரவுள்ள போராளிகளின் உறுதியேற்பு முழக்கம் கேட்க நாளைய விடியலும் காத்துக்கிடக்கிறது.

*🔰02.08.84 : (சென்னை)*
ந.வீரையன் - ச.அப்துல்மஜீத் - பெ.முத்தையா

*🔰24.05.87 : (திருவாரூர்)*
ந.வீரையன் - ச.அப்துல்மஜீத் - பெ.முத்தையா

*🔰06.10.1990 : (மதுரை)*
கே.ஏ.தேவராசன் - செ.நடேசன் - மா.ச.முனுசாமி

*🔰28.05.1993 : (அவிநாசி)*
கே.ஏ.தேவராசன் - செ.நடேசன் - மா.ச.முனுசாமி

*🔰06.10.1996 : (திண்டுக்கல்)*
மா.ச.முனுசாமி - செ.நடேசன் - நா.நாகப்பன்

*🔰28.11.1999 : (மதுரை)*
மா.ச.முனுசாமி - செ.நடேசன் - ந.பர்வதராஜன்

*🔰12.10.2002 : (கன்னியாகுமரி)*
சா.தோ.அந்தோணிசாமி - ந.பர்வதராஜன் - கோ.முரளீதரன்

*🔰03.12.2005 : (திருப்பத்தூர்)*
கோ.முரளீதரன் - ந.பர்வதராஜன் - தி.கண்ணன்

*🔰25.01.2009 : (கரூர்)*
தி.கண்ணன் - செ.போத்திலிங்கம் - ச.மோசஸ்

*🔰11.03.2012 : (திண்டுக்கல்)*
தி.கண்ணன் - முருக.செல்வராஜன் - ச.மோசஸ்

*🔰18.01.2015 : (திருப்பூர்)*
ச.மோசஸ் - செ.பாலசந்தர் - ச.ஜீவானந்தம்

☀போன்ற தலைமைப் போர்த்தளபதிகளின் ஒப்பற்ற முதன்மைப் போராளிகளைத் தொடர்ந்து,

☀போராளிப் பாசறையின் அடுத்த கட்ட போர்த்தளபதிகள் & முதன்மைப் போராளிகள் யார் என்பதை மக்களாட்சி மாண்போடு தேர்வு செய்திட வருகைதரும் தோழர்கள் அனைவரையும்

☀ஒருங்கிணைந்த இந்தியத் துணைக்கண்டத்தின் தனிப்பெரும் சமஸ்தானங்களில் ஒன்றாகத் திகழ்ந்திட்ட,

☀நூற்றாண்டு கண்ட நகராட்சியாம்,

☀புதுக்கோட்டை மாநகருக்குத் தோழமையுடன் அழைக்கிறோம்.

🕙காலம் : 04.03.2018 முற்பகல் 10மணி

🏢களம் : கிரீன் பேலஸ், பேருந்து நிலையம் அருகில், புதுக்கோட்டை.

_அழைப்பின் மகிழ்வில்,_
*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*பொன்னமராவதி வட்டாரக்கிளை*

*_©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*

Friday, March 02, 2018

நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவி : தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு


'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, அரசு பள்ளி மாணவர்களின், 'ஆன்லைன்' பதிவுக்கு உதவி செய்ய, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கான, நீட் நுழைவு தேர்வு, மே, 6ல், நாடுமுழுவதும் நடக்கிறது.இந்த தேர்வில் பங்கேற்க, பிப்., 9ல், ஆன்லைன் பதிவுகள் துவங்கின.

தேர்வை நடத்தும், சி.பி.எஸ்.இ., அறிவிப்பின்படி, வரும், 9ம் தேதி, நள்ளிரவு, 11:30 மணியுடன், ஆன்லைனில் பதிவுக்கான வசதி நிறுத்தப்படும். தேர்வுக்கான கட்டணத்தை, வரும், 10ம் தேதி நள்ளிரவு, 11:30 மணிக்குள், ஆன்லைனில் செலுத்த வேண்டும். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள, தனியார் பள்ளி மாணவர்கள், அந்தந்த பள்ளிகள், பயிற்சி மையங்கள் மற்றும் தங்கள் பெற்றோர் உதவியுடன், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அரசு பள்ளிகளில், நீட் தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்ளும், மாணவர்களில், பெரும்பாலானோர் இன்னும் விண்ணப்பிக்கவில்லை.

அவர்கள் உரிய அவகாசத்திற்குள் விண்ணப்பிக்க, பயிற்சி அளிக்கும் மையமும், பள்ளி தலைமை ஆசிரியர்களும் உதவ வேண்டும் என, அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்

DEPARTMENT EXAM-MAY 2018


Thursday, March 01, 2018

ஆசிரியர் பணிக்கான 'டெட்' தேர்வு அறிவிப்பு


அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதி தேர்வு, வரும் அக்டோபரில் நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவி உள்பட, 3,030 காலியிடங்களை நிரப்ப, போட்டி தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியில், 1,058 இடங்களுக்கு, டி.ஆர்.பி., சார்பில், தேர்வு நடத்தப்பட்டது. இதில், முறைகேடு புகார்கள் எழுந்ததால், தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட பின், முடிவுகள் ரத்து செய்யப்பட்டன. இதுகுறித்து, டி.ஆர்.பி.,யின் புகாரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், கிரிமினல் வழக்கு பதிவு செய்து, எட்டு பேரை கைது செய்தனர். இதில், ஐந்து பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில், கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, தேர்வும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு நடத்தப்பட உள்ள தேர்வு பட்டியல் குறித்த, ஆண்டு அறிக்கையை, டி.ஆர்.பி., நேற்று அறிவித்தது. அதில், தேர்வுகள் குறித்த விபரங்கள் இடம் பெற்றுள்ளன. சர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, மே மாதம் அறிவிக்கப்பட்டு, ஆகஸ்டில் நடத்தப்படும்; தேர்வு முடிவுகள், செப்டம்பரில் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.பி.எட்., பட்டதாரிகள் பெரிதும் எதிர்பார்த்துள்ள, அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான, டெட் தேர்வு, ஜூலையில் அறிவிக்கப்பட்டு, அக்., 6, 7ம் தேதிகளில் நடக்க உள்ளது. தேர்வு முடிவுகள், நவம்பரில் வெளியாகும்.ஆசிரியர் பணிக்கு, 13 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான, டெட் தேர்வில், நான்கு லட்சம் பேர் பங்கேற்க வாய்ப்புள்ளது.

இதில், தேர்ச்சி பெறுவோருக்கு, அடுத்த ஆண்டில் நடத்தப்படும், புதிய பணி நியமனங்களில், ஆசிரியர் வேலை கிடைக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வுகள் எப்போதுபதவி காலியிடம் அறிவிக்கை தேர்வு நாள் 'ரிசல்ட்' நாள்வேளாண் பயிற்றுனர் 25 ஏப்., ஜூலை, 14 ஆக., பாலிடெக்னிக் விரிவுரையாளர் 1,065 மே ஆக.,4 செப்.,கலை கல்லுாரி உதவி பேராசிரியர் 1,883 மே ஜூன், 2ம் வாரம் சான்றிதழ் ஆய்வு ஜூலைஉதவி தொடக்க கல்வி அதிகாரி 57 ஜூன் செப்.,15 அக்.,'டெட்' என்ற ஆசிரியர் தகுதி தேர்வு ஜூலை அக்.,6, 7 நவ.,*அட்டவணையில் கூறப்பட்டுள்ள மாதங்களின் முதல் வாரத்தில், அறிவிக்கை வெளியாகும்.

TRB ANNUAL PLANNER-2018