ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஏப்ரல் 29, 30ம் தேதிகளில் நடந்தது. இந்த தேர்வை 6 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 30ம் தேதி வெளியானது. இதையடுத்து, ஜூலை 24ம் தேதி சான்று சரிபார்ப்பு நடக்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் சான்று சரிபார்ப்பு தொடங்கியது. இதில் 18 ஆயிரத்து 769 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இதற்காக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் 222 அறைகளில் சான்று சரிபார்ப்பு நடக்கும். ஒரு அறையில் 25 பேர் அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஒரு நாளும், சேலத்தில் 5 நாட்களும் சரிபார்ப்பு டக்கும். மற்ற இடங்களில் 2 அல்லது 3 நாட்கள் நடக்கும். சென்னையில் அசோக் நகர் பெண்கள் மேனிலைப் பள்ளியில் நடக்கிறது.
No comments:
Post a Comment