Pages

Tuesday, July 25, 2017

ஜேக்டோ-ஜியோ முடிவுகள்

ஜேக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் ஜேக்டோ சார்பில் கூறப்பட்ட கருத்துக்கள்

1.ஆகஸ்ட் 5 அன்று CRC வைப்பதை ரத்து செய்ய வேண்டும் என 9கோரிக்கையை இயக்குனரிடம் அளிப்பது எனவும் நடத்தப்பட்டால் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது.

2. ஆகஸ்ட் 6 ம்தேதி நடைபெறும் TNPSC தேர்வு, ஆகஸ்ட் 5 நடைபெறும் பேரணிக்கு தடையாக இருக்கும் பட்சத்தில் TNPSC EXAM தேர்வு பணியினை புறக்கணிப்பது.

3. ஜேக்டோ ஜியோ போராட்டங்களில் ஜேக்டே ஜியோ பதாகைகள் (பேனர்) தவிர எந்த  ஒரு தனிப்பட்ட அமைப்பு தனது பதாகைகளை (பேனர்,கொடி) பயன்படுத்த கூடாது.

4. ஆகஸ்ட் 5 பேரணிக்கு மாநில ஜேக்டோ ஜியோ சார்பில் சுவரொட்டி, துண்டு பிரசுரம் வழங்கப்பட வேண்டும்.

5. ஆகஸ்ட் 5 பேரணியில் சென்னையில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு refresh பண்ணுவதற்கு உரிய வசதிகள் செய்து தர வேண்டும்.

6. ஜேக்டோ ஜியோ ஆயத்த கூட்டங்கள் நடைபெறும்போது ஒருங்கிணைப்பாளர் தவிர ஜேக்டோ சார்பில் இருவர்,  மற்றும் ஜியோ சார்பில் இருவர் தலைமையில் நடைபெற வேண்டும்.

7. தமிழக அரசு பேச்சு வார்த்தைக்கு அழைத்தால் அக்குழுவில் ஜேக்டோ 22 சங்க பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.

8. ஆகஸ்ட் 5 பேரணிக்கு மாவட்ட ஜேக்டோ அல்லது ஒன்றிய ஜேக்டோ அல்லது மாவட்ட ஜேக்டோ ஜியோ மூலம் மொத்தமாக கலந்து கொள்ள வேண்டும்.

9. ஜேக்டோ ஜியோ முத்தான மூன்று கோரிக்கைகள்

*cps ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

*8வது ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும், அதுவரையான காலகட்டத்திற்கு 20% இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்

*7வது ஊதியக்குழு ஊதிய முரண்பாடுகளை கலைந்து பிறகு 8 ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும்

10. நாளை மாலை (26.07.2017) அனைத்து மாவட்டங்களிலும் ஆகஸ்ட் 5 பேரணியில் கலந்து கொள்ள ஆயத்த கூட்டங்கள் நடைபெற வேண்டும்.

ஜேக்டோ-ஜியோ அதிரடி முடிவுகள்.

1. 05.08.2017 கோட்டை நோக்கி பேரணி.

2. 22.08.2017 ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்.

3. 26.08.2017 மற்றும் 27.08.2017 வேலை நிறுத்த ஆயத்த மாநாடு.

4. 07.09.2017 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்.

No comments:

Post a Comment