Pages

Friday, January 20, 2017

குரூப்–2 ஏ தேர்வு: போலி சான்றிதழ் சமர்ப்பித்தவர் 7 ஆண்டு தேர்வு எழுத தடை


தேர்வாணைய இணையதளத்தில் இருந்து எழுத்து தேர்வு முடிவுகளை தேர்வு எழுதிய சூ.பிரேம் என்பவர் தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அதை திருத்தி போலி மதிப்பெண் சான்றிதழை தயாரித்து அதை தேர்வாணையத்திற்கு அனுப்பி உள்ளார். இவ்வாறு சமர்ப்பித்த காரணத்தால் அவர் 7 ஆண்டுகள் தேர்வாணையம் நடத்தும் அனைத்து விதமான போட்டித்தேர்வுகளில் இருந்தும், தெரிவுகளில்இருந்தும் கலந்துகொள்வதற்கு தேர்வாணையத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் மேல் குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மாநகர போலீஸ் ஆணையரிடத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செயலாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment