ஏழை, பணக்காரர் என்ற பேதமில்லாமல் எல்லோரும் விரும்பவது தங்கம். ஒவ்வொரு நாளும் இதன் விலை மாறிக் கொண்டேயிருக்கிறது. இந்த நடைமுறையைப் பற்றி இன்றைய தகவல் துளிகள் பகுதியில் பார்க்கலாம்.
தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுவது எப்படி?
காலை, மாலை என இரண்டு முறை தங்கத்துக்கு பண்டகச் சந்தையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் இருப்பு, சுரங்கத்தில் இருந்து கிடைப்பவை ஆகியவற்றின் அடிப்படையில் லண்டன் பண்டகச் சந்தையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
எனினும், அதை அடிப்படையாகக் கொண்டு உள்நாட்டு விஷயங்களைப் பொறுத்து இந்தியாவில் தங்கம் விலை இருக்கும். தங்கத்தின் விலை நிலவரத்துக்கு குறிப்பிட்ட அளவுகோல் என எதுவும் கிடையாது.
மற்ற பொருட்களைப் போல சந்தையில் தங்கத்தை உலோகமாக குவித்து விலை பேசுவதுமில்லை.
பிறகு எப்படி தினசரி விலை நிர்ணயம் நடக்கிறது? வங்கிகள் மூலமாகவே தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு டீலர்கள் வழியாக நகை வர்த்தகர்களை அடைகிறது. தங்கத்தின் இறக்குமதி வரி, வாட் வரி, உற்பத்தி வரி ஆகியவற்றுடன் தங்கள் லாப விகிதத்தையும் கணக்கிட்டு இந்திய நகை வணிகர்கள் சங்கம், மும்பையில் தங்கத்தின் விற்பனை விலையை நிர்ணயிக்கிறது.
தினசரி வர்த்தக தொடக்கம் மற்றும் நிறைவு நேரங்களில் விலை அறிவிக்கப்படுகிறது. பெரிய டீலர்கள் 10 பேர் தங்கத்தை வாங்கிய விலை, மாலை விற்பனை செய்த விலை ஆகியவற்றின் சராசரியே அன்றைய தங்கத்தின் விலையாகிறது.
மும்பையில் வெளியாகும் விலையுடன் மாநில வரிகளைக் கணக்கிட்டு தமிழகம் உட்பட மாநிலங்களில் தங்கத்தின் விலை அறிவிக்கப்படுகிறது.
சர்வதேச அளவில் தங்கத்துக்கு தினசரி விலை நிர்ணயிக்கும் முக்கிய பண்டகச் சந்தை லண்டனில் செயல்படுகிறது. இந்தியாவில் விலை நிர்ணயத்தில் இந்த சர்வதேச தங்கம் விலையும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது
No comments:
Post a Comment