Pages

Tuesday, June 02, 2015

பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நாளை பதிவிறக்கம் செய்யலாம்

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுக்கு தேவைப்படும் தற்காலிக மதிப்பெண் பட்டியல்களை இணையத்தில் நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவு கடந்த மாதம் 21ம் தேதி வெளியானது. இதை தொடர்ந்து, தற்காலிக மதிப்பெண் பட்டியல் கடந்த 29ம் தேதி முதல் அந்தந்த பள்ளிகள் மூலம் வினியோகம் செய்யப்பட்டன.

இதுதவிர, தற்காலிக மதிப்பெண் தேவைப்படுவோருக்கு தாங்களே இணையத்தில் இருந்து தற்காலிக மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. பள்ளிகளில் படித்து தேர்வு எழுதியோர், தனித்தேர்வர்களாக தேர்வு எழுதியோர் நாளை முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியல்களை www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த இணைய தளத்தில் சென்றதும் ‘‘provisional Mark Sheet SSLC Result - March 2015’’ என்ற திரை தோன்றும். மாணவர்கள் தங்கள் மதிப்பெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை டைப் செய்ய வேண்டும்.

மேலும் அந்த திரையில் தோன்றும் குறியீட்டை அதில் உள்ளது போலவே டைப் செய்ய வேண்டும். அதற்கு பிறகு View Result என்பதை கிளிக் செய்ய வேண்டும். அப்போது மாணவர்களின் பதிவெண் பெயரில் ஒரு பிடிஎப் பைல் பதிவிறக்கம் ஆகும். அந்த பைலில் மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்று இருக்கும். அதை மாணவர்கள் அப்படியே பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment