Pages

Tuesday, June 02, 2015

12மாவட்ட முதன்மை கல்விஅதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில் 12 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை மாற்றம் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 36 மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தவிர அனைவருக்கும் கல்வி திட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 12 பேரை திடீர் மாற்றம் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் சென்னையில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விருதுநகர் ஜெயக்குமார் கன்னியாகுமரிக்கும், திருவண்ணாமலை பொன்குமார் விருதுநகருக்கும், கரூர் திருநிறைச்செல்வி தஞ்சாவூருக்கும், தஞ்சாவூர் தமிழரசு கிருஷ்ணகிரிக்கும், கிருஷ்ணகிரி ராமசாமி கரூருக்கும், தூத்துக்குடி முனுசாமி பெரம்பலூருக்கும், நாகப்பட்டினம் ராமகிருஷ்ணன் தூத்துக்குடிக்கும் மாற்றப்பட்டுள்ளனர். கோவை ஞானகவுரி சேலத்துக்கும், புதுக்கோட்டை அருள்முருகன் கோவைக்கும், காஞ்சிபுரம் பாண்டி புதுக்கோட்டைக்கும், சேலம் உஷா காஞ்சிபுரத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment