Pages

Friday, January 16, 2015

நாளை போலியோ முகாம்

தமிழகத்தில், நாளை 43 ஆயிரம் போலியோ சொட்டு மருந்து முகாம்களில், 70 லட்சம் குழந்தை களுக்கு, போலியோ சொட்டு மருந்து வழங்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. * தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம், நாளை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. * தமிழகத்தில், 43,051 சொட்டு மருந்து மையங் கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. * காலை 7:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை, மையங்கள் செயல்படும். * ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, முதல் தவணையாக, வரும் 18ம் தேதியும், இரண்டாம் தவணையாக, பிப்., 22ம் தேதியும், சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும். * தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி, ஓரிரு நாட்களுக்கு முன், சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், முகாம் நாட்களில், மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். * புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும், முகாம் நாட்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியம். * சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு, விரலில் மை வைக்கப்படும். இது விடுபடும் குழந்தை களை கண்டறிய உதவுகிறது. * முகாம் நாள் அன்று, சொட்டு மருந்து வழங்கும்படி, தனியார் மருத்துவர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். * இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும், முகாம் நாளன்று, போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். * பயணம் மேற்கொள்ளும் குழந்தைகளுக்காக, பஸ் நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், ஆகிய இடங்களில், 1,652 நடமாடும் மையங்கள் மூலம், சொட்டு மருந்து வழங்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. * மேலும், 1,000 நடமாடும் குழுக்கள் மூலமாக, தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு, சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. * நாளை, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட, சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள், சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.

No comments:

Post a Comment