Pages

Thursday, November 07, 2013

குரூப்–1 மெயின் தேர்வு : 3 மாதத்தில் முடிவு வெளியிடப்படும் டி.என்.பி.எஸ்.சி தலைவர் நவநீதகிருஷ்ணன் பேட்டி -

தமிழ்நாட்டில் காலியாக உள்ள துணை கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் 25 இடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களைநிரப்ப அரசு முடிவு செய்து, 25 பேர்களை தேர்வு செய்வதற்கான பணியை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைத்து உள்ளது. இதையொட்டி 25 பேர்களை தேர்வு செய்ய குரூப்–1 முதல் நிலை தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 16–ந்தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 75 ஆயிரத்து 627 பேர் எழுதினார்கள். அவர்களில் 1372 பேர்களை அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்ந்து எடுத்தது

. அந்த தேர்வு கடந்த மாதம் 25–ந்தேதி நடைபெற்றது. 84 சதவீதம் பேர் தேர்வு எழுதினார்கள். 16 சதவீதத்தினர் வரவில்லை. விடைத்தாள்களை சம்பந்தபட்ட பாடங்களில் நிபுணத்துவம் கொண்ட பல்கலைக்கழக, கல்லூரி பேராசிரியர்கள் கொண்டு மதிப்பீடு செய்ய உள்ளனர். விடைத்தாள்கள் இரு முறை மதிப்பீடு செய்யப்படும்.  குரூப்–1 மெயின்தேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணனிடம் கேட்டதற்கு ‘எவ்வளவு விரைவாக குரூப்–1 மெயின்தேர்வு முடிவை வெளியிட முடியுமோ அவ்வளவு விரைவில் வெளியிடுவோம். எப்படியும் 3 மாதத்திற்குள் வெளியிடுவோம்‘ என்றார்.

No comments:

Post a Comment