Pages

Thursday, May 02, 2013

பள்ளி திறந்து முதல் வாரத்திலேயே இலவச பொருட்களை வழங்க கல்வித்துறை உத்தரவு

் அரசு மற்றும் அரசு உதவி சார்ந்த பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி திறந்து முதல் வாரத்திலேயே அரசின் இலவச பொருட்களை வழங்க வேண்டுமென்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள், சீருடை, காலணி, புத்தக பை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஒவ்வொரு வருடமும் அரசு வழங்கி வருகின்றன. அந்த வகையில் வரும் கல்வியாண்டில் அரசின் இலவச பொருட்களை பள்ளி திறந்து முதல் வாரத்திலேயே வழங்குமாறு அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. அரசு உத்தரவின் படி இந்தாண்டு முதல் மாணவர்களுக்கு உலக வரைபடம் வழங்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment