Pages

Saturday, September 01, 2012

தபால் துறையில் பணிபுரிய விண்ணப்பம் வரவேற்ப

தமிழக தபால் வட்டத்தில், தபால் உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழக தபால் வட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழக தபால் வட்டத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளில் உதவியாளர் பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான அறிவிப்பு ஆக., 11 ல், வெளியிடப்பட்டது.

தகுதி உள்ள தேர்வர்கள் இதற்கான விண்ணப்பத்தை தலைமை தபால் நிலையத்தில், நேரடியாகவோ அல்லது," www.indiapost.gov.in, www.tamilnadupost.nic.in' ஆகிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணமாக, 50 ரூபாயும், தேர்வு கட்டணமாக, 200 ரூபாயும் செலுத்த வேண்டும். மேலும் எஸ்.சி., எஸ்.டி., மகளிர், ஊனமுற்றோர் பிரிவு தேர்வர்களுக்கு, தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதே போல், பணம் செலுத்தியதற்கான ரசீதை, பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள, ஏழு இலக்க எண்ணை, ரசீதின் பின்புறம் குறிப்பிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment