செல்போன் நிறுவனங்கள் அறிவிப்பு
அசாம் இனக்கலவரங்களை தொடர்ந்து, தென் மாநிலங்களில் வசித்து வரும் வடகிழக்கு மாநிலத்தவர்கள் தாக்கப்பட கூடும் என்று செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் ஒரே நேரத்தில் பல பேருக்கு மொத்தமாக அனுப்பப்பட்டன. இதனால் தென்மாநிலங்களில் வசித்து வந்த வடகிழக்கு மாநிலத்தவர் அச்சமடைந்து, கூட்டம் கூட்டமாக வெளியேறினார்கள். இதனால் மொத்தமாக எஸ்.எம்.எஸ். அனுப்புவதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று தொலை தொடர்பு துறையை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டு கொண்டது. இதனையடுத்து ஒரு நாளைக்கு 5 எஸ்.எம்.எஸ்.களுக்கு மேல் அனுப்ப தடை விதித்து செல்போன் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
No comments:
Post a Comment