Pages

Saturday, August 10, 2019

நுாலகங்களாக மாறும் 46 பள்ளிகள்


தமிழகத்தில், முதல் கட்டமாக, 46 பள்ளிகள், நுாலகங்களாக மாற்றப்படுகின்றன.

தமிழகத்தில், ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள, அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு, அவை, நுாலகங்களாக மாற்ற, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.முதல் கட்டமாக, நீலகிரி - ஆறு, சிவகங்கை, வேலுாரில், தலா - நான்கு, விருதுநகர், திருப்பூர், திருவண்ணாமலை, நாமக்கல், கிருஷ்ணகிரியில், தலா - மூன்று, விழுப்புரம், துாத்துக்குடி, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், தர்மபுரியில், தலா - இரண்டு, திருவள்ளூர், தேனி, நாகை, காஞ்சிபுரம், கோவையில், தலா, ஒரு பள்ளி என, 46 பள்ளிகள், நுாலகங்களாக மாற்றப்படுகின்றன.நுாலகங்களில், குறைந்தபட்சம், 1,000 புத்தகங்கள் இடம்பெற்றிருக்கும்.

No comments:

Post a Comment