Pages

Thursday, August 01, 2019

கரும்பலகையில் 3 செ.மீ., குறையாத அளவில் எழுதவேண்டும்:பள்ளிக்கல்வி அறிவுறுத்தல்


கரும்பலகையில், 3 செ.மீ.,க்கு குறையாத அளவில் எழுத வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. கண் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளைன் அறிவுரைப்படி, மாணவர்களின் கண் நலனை பாதுகாக்கும் பல்வேறு நெறிமுறைகளை, பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள, சுற்றறிக்கை:

ஆசிரியர்கள், வகுப்பறையில் உள்ள, கருப்பலகையில் எழுதும்போது, 3 செ.மீ., அல்லது அதற்கு மேல், எழுத்து அளவு இருப்பது அவசியம்.எழுத்து அளவு, எப்போதும், ஒரே அளவில் இருக்க, 'ஸ்டென்சில் மார்க்கிங்' என்ற, எழுத்து அளவு குறியீட்டை பயன்படுத்தலாம்.கண் சார்ந்த பிரச்னைகள் இருக்கும் குழந்தைகளை, வகுப்பில், முதல் வரிசையில் அமர வைப்பதுடன், வகுப்பறையில், சீரான வெளிச்சம் எப்போதும் இருக்கும்படி, பார்த்துக் கொள்வது அவசியம்.கண் கூசும் அளவுக்கு, கருப்பலகையில், வெளிச்சம் இருக்கக் கூடாது. குழந்தைகள், எந்த சிரமமும் இல்லாமல், கரும்பலகையை பார்க்க வழி செய்ய வேண்டும்.தலைமை ஆசிரியர்கள், தொடர்ந்து, இந்த நடைமுறையை கண்காணிக்க வேண்டும். இதனால், குழந்தைகளுக்கு, பார்வை சார்ந்த பிரச்னைகள் தவிர்க்கப்படும்.இவ்வாறு, அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment